சீதையைக் கவர்ந்து சென்றதற்காக
இராவணனைத் திட்டுகிறவர்கள்
சீதையைத் தீயில் இறக்கியதற்காக
இராமனைத் திட்டுவதில்லை
Download As PDFயாதும் ஊரே யாவரும் கேளிர்
சீதையைக் கவர்ந்து சென்றதற்காக
இராவணனைத் திட்டுகிறவர்கள்
சீதையைத் தீயில் இறக்கியதற்காக
இராமனைத் திட்டுவதில்லை
Download As PDF
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தேசபக்தர்களால் வெவ்வேறு சொற்களில் கூறப்படும் கருத்து இது. இவர்கள் எதிர்கட்சியாக இருக்கும்போது விமர்சனமே செய்யாத உத்தமர்களைப் போல உதார் விடுவார்கள்.
"இந்தியாவில் மட்டுமே மாண்புமிகு பாரதப் பிரதமரை தேச விரோதிகள் எதிர்க்க முடியும், இழிவு படுத்த முடியும். சௌதியிலோ, சீனாவிலோ, பர்மாவிலோ, ருஷ்யாவிலோ, வட கொரியாவிலோ, க்யூபாவிலோ எதாவது வாயைத் திறந்தால் சிறையில் தள்ளுவார்கள் இல்லையென்றால் போட்டுத் தள்ளுவார்கள்"
இந்தியாவில் இருக்கும் அரைகுறை ஜனநாயகத்தை இவனுக என்னவோ போராடி நம்மளுக்குக் குடுத்த மாதிரியும் அதை நாம வாங்கித் தின்னுட்டு இவனுக்கு எதிராகப் பேசற மாதிரியும் அதையெல்லாம் அவனுக சகிச்சிட்டு இருக்கற மாதிரியும் கூவிட்டு இருக்கும் காவிகள், இந்த ஃபாசிச பாஜக அரசும், மாநில அரசுகளும் எத்தனை போராளிகளையும் சமூக ஆர்வலர்கள், மனித உரிமைப் போராளிகள், மாஓ வியர்கள், சுற்றுச் சூழல் போராளிகளைக் கைது செய்திருக்கிறார்கள் ? டிவிட்டரில் கருத்து சொன்னதற்குக் கைது, இரங்கல் கூட்டத்தில் முழக்கம் இட்டதற்குக் கைது இப்படியெல்லாம் ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கி விட்டு ஜனநாயகத்தின் மீது பழி போடுவார்கள்.
கொலையும் செய்து விட்டு கொலை கொலை என்று கத்திக் கொண்டே ஓடுவார்கள்
Download As PDFகொரோனாவைப் படைத்தது அல்லது உருவாக்கியது யார் கடவுளா ? கடவுள் நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைப்படி கொள்கைப்படி கொரோனா என்ற தீநுண்மியைப் படைத்தது கடவுள்தான்.
கடவுள் எதற்காக இதைப் படைக்க வேண்டும் ? மனிதனுக்குப் பயனில்லாத உயிர்கள் பூமியில் பல உள்ளன. அது போல் இதையும் கொள்ளலாமா ? முடியாதே இது மனிதனின் இருப்புக்கே கேடு விளைவிக்கும் அளவிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
கொரோனாவைப் படைத்தது கடவுள் எனில் அதற்கான தடுப்பூசியை உருவாக்குவதும் கடவுளின் விருப்பத்திற்கு மாறானதுதானே ? இது முரண்பாட்டை கடவுள் நம்பிக்கையாளர்கள் எப்படி எளிதில் கடந்து போகிறார்கள் என்பது மிகப்பெரிய ஆச்சரியம்.
இந்திய மக்கள் கட்சியின் (அதாஙக் பாரதிய ஜனதா கட்சி) ஹ. ராஜா அவர்கள் தடுப்பூசி போடும் படத்தைப் பார்த்ததும் இப்படி எழுதத் தோன்றியது மனம் முழுதும் பல்வேறு கடவுள்கள், வலது கையில் ஏதோ சாமி கயிறுகள், கழுத்தில் ஏதோ மாலை, நெற்றியில் பொட்டு இவையிருந்தும் கடவுள்களை நம்பாமல், முதலில் குண்டர் சட்டம் மக்களாட்சிக்கு எதிரானது.
இப்போதும் சரி அப்போதும் சரி ட்வீட் போட்டதைத் தவிர ஒன்றும் செய்யவில்லை. ஸ்டாலின் ஆதரிக்கும் முன்பு வரை சூர்யா செய்தது தவறாக இருந்தது. இப்போது சூர்யா என்ன செய்துவிட்டார் என்று கேள்வி வருகிறது. உங்க தவறை ஒப்புக்கொள்ளாமல் அடுத்தவன் அருகதையைக் கேள்வி கேட்டால் என்ன செய்வது ?
நடிகர் சூர்யா 8 கோடி பேருடன் கோட்டைக்கு ஊர்வலம் சென்று முதலமைச்சருக்கு நன்றி சொல்லவில்லை. அவர் போட்ட ஒரே ட்வீட்டை வைத்துத்தான் என்னவோ தமிழ்நாட்டுக்கே துரோகம் செய்ததாக சித்தரித்தனர் சில திமுகவினர். தமிழ்நாடே சூர்யாவின் ட்வீட்டைப் பார்த்துத்தான் அதிமுகவை ஆதரிப்பது போன்றும் இல்லையென்றால் அப்போதே புரட்சி வெடித்து அதிமுக அரசு கலங்கியிருக்கும் என்பது போல பேசினார்கள். ஜோதிகா பேசியதை வைத்து காவிகள் கூத்தடித்ததைப் போலவே இவர்களும் செய்தனர்.
யாரை எதிர்க்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்று தெரியாமல் இருக்கிறார்கள் என்று சொன்னவர், ஏதாவது ஒரு கட்சியை ஆதரித்துத் தொலையுங்கள் என்றால் பாஜகவையும் அதிமுகவையும் ஆதரிக்கலாமா ? உங்கள் கட்சியை ஆதரிக்காமல் இருப்பதற்குக் காரணம் என்ன உங்கள் கட்சியின் குறைகள்தானேயன்றி நாங்கள் அல்லவே.
NEET எதிர்ப்பாளர் என்றாலே அது திமுக சார்பாகத்தான் பார்க்கப்படும். எப்படி திமுக சாராத மற்றவர்களின் தவறுகளும், அவதூறுகளும் திமுகவின் மீது திருப்பப்படுகிறதோ அது போலவே NEET உட்பட தமிழ்நாட்டின் நலன் சார்ந்த எந்த ஒரு அரசியலுமே திமுக சாராதவர்கள் பேசினாலும் போராடினாலும் அது திமுகவின் ஆதரவாக மாறும், திமுகவின் மீதான பொதுபுத்தி வெறுப்பின் ஒரே நன்மை இதுதான்.
அதிமுகவை நேரடியாகக் கண்டிக்காவிட்டால் அதை ஏற்கமாட்டோம் என்று தூய்மைவாதம் பேசினால் எப்படி ? திமுகவை ஆதரித்து விட்டோ, திமுகவில் இருந்து கொண்டோ திமுக கொள்கைக்கு நேர் எதிரான அரசியலை/செயல்களைச் செய்தால் அது ஒரு பொருட்டே இல்லாதது போலவும், கட்சிசாராதவன் திமுக ஆதரவு கொள்கையைப் பேசினால் அவனை எதிரியிடம் தள்ளி விடுவது ஏன் ?
ஒரு முறை திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததையே தவறென்று ஒத்துக்கொள்ளாமல் அவர்களின் ஆதரவை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு என்று சொல்லியிருந்தார் ரவிசங்கர். ஆனால் யாருடைய ஆதரவை யார் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் ? அதன் விளைவுகள் என்ன என்பதையும் நாம் இன்று பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம் ?
எப்படி தேர்தல் அரசியலில் ஈடுபடும் உங்கள் கட்சிக்குக் குறிப்பிட்ட எல்லைகள் உள்ளனவோ அது போலத்தான் அரசியலிலும் பொதுவாகக் கருத்து சொல்லும் கட்சி சாராத நபர்களுக்கும் சில எல்லைகளும் தொல்லைகளும் உள்ளன, அவர்களால் ஒரு கட்சியை வெளிப்படையாக ஆதரித்தோ எதிர்த்தோ பேச முடியாது. இது உங்களைப் போன்றவர்கள் அறியாததன்று என்றாலும் நீங்கள் இப்படி குற்றம் சொல்லிப் பேசுவது எதற்காக என்பதும் எங்களுக்குத் தெரியாமலில்லை.
நாளை NEET ஆதரவு நிலைப்பாடு எடுத்து, NEET பயிற்சி நிலையங்களால் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது, தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்கிறது என்றும் சொல்வார் போலிருக்கிறது.
Download As PDFமோதி திருக்குறளைச் சொல்லி நமது நெஞ்சை நக்குவது போல் இதை, காவிகளின் நெருக்குதல் காரணமாக சடங்குக்கு வரும் அறிக்கையாகக் கொள்ளலாம்.
எதிர்கட்சியாக இருக்கும்போது விலைவாசி உயர்வை எதிர்க்கும். ஆளும் கட்சியாக இருக்கும்போது விலைவாசியை உயர்த்தும்.
இஸ்லாமோபோபியாவை எதிர்ப்பது வேறு. இஸ்லாமிய மதத்தை விமர்சிப்பதை எதிர்ப்பது வேறு. அதைக் காரணம் காட்டி இதை ஆதரிக்க முடியாது.
பகுத்தறிவுவாதிகள் என்பவர்கள் இஸ்லாமிய மதவாதத்தை விமர்சிக்காததால்தான் இப்பிரச்சனை வருகிறது. விமர்சிக்காவிட்டாலும் தாழ்வில்லை ஆனால் மதவாதத்தை ஆதரிப்பதுதான் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
ஒரு இந்துத்துவர் என்பதாலே அவர் சொல்வதெல்லாம் தவறானது ஆகாது. சில நியாயமான விசயங்களை வைத்துத்தான் அவர்கள் தனது தவறுகளையும் நியாயப்படுத்த முடிகிறது.
இந்த பாடகர் சோனு நிகம் காவியா ?
காவியாக இருந்தாலும் ஒரு தவறுக்கு இன்னொரு தவறு சரியாகாது.
இவர் ட்விட்டரில் கேட்ட இரு கேள்விகள் என்ன ?
பள்ளிவாசல் ஒலிப்பெருக்கிகளைக் குறிக்கும்விதமாக,
"முகமது காலத்தில் மின்சாரம் இல்லை. எடிசனுக்குப் பின்னர் ஏன் இந்த இரைச்சல் ? "
"நான் முஸ்லிம் இல்லை. நான் ஏன் பாங்கு ஒலித்து காலையில் எழ வேண்டும். இந்தியாவில் எப்போது இந்த மதத்தன்மை திணிக்கப்படுவது ஒழியும் ?"
இக்கேள்விகளில்என்ன தவறு இருக்கிறது. இரண்டுமே நியாயமான கேள்விகளே. இதற்கு நியாயமான பதில்கள் இருக்கலாம்.
ஆனால் இந்த இரு கேள்விகளை ஒரு பெரிய இஸ்லாமோபோபியா ஆதாரமாக திரையடி (screenshot) களை எடுத்துக் கொண்டு திரிவது நீ எப்படி எங்களைப் பற்றிப் பேசலாம் என்ற இஸ்லாமிய மதவெறி.
இதை எப்படி பகுத்தறிவுவாதிகளோ, மத எதிர்ப்பாளர்களோ ஆதரிக்கிறார்கள். ? மிகவும் தவறு.
நாம் இஸ்லாமோஃபோபியாவைத்தான் எதிர்க்க வேண்டுமே தவிர முஸ்லிம் மதத்தை, முஸ்லிம்களை மத நம்பிக்கைகளை ஒருவர் விமர்சிப்பதை எப்படி எதிர்க்க முடியும் ? இதையெல்லாம் எதிர்த்தால் அவர் இஸ்லாமோபோபியாதான் சரி என்று முடிவெடுப்பார்.
முஸ்லிம்கள் மீது வெறுப்பைத் தூண்டுவதைத்தான் கண்டிக்க வேண்டுமே தவிர முஸ்லிம் மதத்தைப் பற்றிப் பேசியதால் ஒருவர் தனது ட்விட்டரை முடக்கினால் அது அவருக்கு சிறுமையாகாது, மாறாக மதத்தைப் பற்றிப் பேசுவதற்கு தண்டனை கொடுக்கும் முஸ்லிம் மதவாதத்துக்குத்தான் இழுக்கு.
இஸ்லாமோஃபோபியா உருவாவது முஸ்லிம்களின் மதத்தைப் பற்றிப்பிறர் பேச முடியாது பேசுவதும் இல்லை என்ற காரணத்தை முக்கியமாகக் காட்டித்தான். முஸ்லிம் மதநாடுகள் தங்கள் நாடுகளில் முஸ்லிம்கள் மதம் மாறுவதை கடும் தண்டனைக்குரிய குற்றமாக்கி சட்டங்கள் வைத்துக் கொண்டு மதத் தேர்வு சுதந்திரமுள்ள மற்ற நாடுகளில் இஸ்லாமைப் பரப்ப பணத்தை வாரியிறைக்கின்றனர்.
முகமது நபியைப் பற்றிப் பேசுவதோ, முஸ்லிம் மதத்தைப் பற்றிப் பேசுவதையோ முஸ்லிம் நாடுகளில் சாத்தியமில்லை. ஆனால் ஜனநாயக நாடுகளில் முஸ்லிம்கள் மதப்பரப்புரை நிகழ்த்தும் சுதந்திரம் உண்டு.
அதுவும் எப்படி ?
நீங்கள் வணங்குவது கடவுள் (சிலைகள் - முஸ்லிம்கள் தவிர மற்ற மதத்தவர் யாவரும் சிலைகளை வணங்குகிறவர்களே) இல்லை, நாங்கள் சொல்வதுதான் கடவுள் என்று மற்ற நாடுகளின் பெரும்பான்மை நம்பிக்கையைப் புண்படுத்தித்தான் மதத்தையே பரப்ப முடியும் என்பதுதான் வாடிக்கை.
அப்படியிருக்க முஸ்லிம் மதவாதம்தான் கடுமையான கேள்விகளுக்குள்ளாக்கப்பட வேண்டியது.
எப்படி இந்துமத நம்பிக்கையுடன் இருந்து கொண்டே பாஜகவை எதிர்க்கும் இந்துக்களைப் போல, முஸ்லிம் மத நம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டே முஸ்லிம் மதவாதத்தை எதிர்க்கும் முஸ்லிம்கள் உண்டு தானே ? ஒரு பகுத்தறிவுவாதியோ ஜனநாயகத்துக்காகப் போராடுகிறவரோ யாராக இருந்தாலும் இஸ்லாமோபோபியாவை எதிர்ப்பது போல இஸ்லாமிய மதவாதத்தையும் எதிர்க்க வேண்டும்.
Download As PDFவிவேகானந்தரிலிருந்து பார்த்தால் இந்து மதம் கூவிக் கூவி விற்கத் தொடங்கியது 125 வருடங்களுக்கு முன்னால்,
என்னென்னவோ கடவுளை வணங்கிய மக்களையெல்லாம் அவர்களின் அனுமதியின்றி அவர்களுக்கே தெரியாமல் இந்து மதத்தின் கீழ் இணைத்து விட்டனர். உலகிலேயே இப்படி ஒரேயடியில் அதிகமான மக்களை மதம் மாற்றிய பெருமை இந்து மதத்திற்கே உண்டு. இந்துக்களுக்கு நாங்கள் மதம் மாற்ற மாட்டோம் என்று பெருமையும் பேச வேண்டும். இந்து மதம் வெளிநாட்டில் பரவுகிறது என்ற பெருமையும் வேண்டும்.
மற்ற மதங்கள் ஏழைகளைக் குறிவைத்து அவர்களின் ஏழ்மையை வேதனையைப் போக்குவதாகச் சொல்லி அவர்களை தமது கொள்கைக்கு மாற்றின.
ஆனால் இந்து மதமோ நேரடியாக பணம் படைத்த மேலை நாட்டு மேன்மக்களைக் குறிவைத்து இயங்கி அவர்களிடமே பணத்தை கறந்து அதனூடேயே வளர்ந்து வருகிறது.
கொஞ்சமாவது வெட்கப்பட வேண்டாமா ?
இது திணிக்கப்படாமல், எப்படிப் பரவியது ?
இந்தப் பெண் தானாக ஏழு கடல்களையும், மலைகளையும் தாண்டி வந்து கிளியின் வயிற்றுக்குள் இருந்த சாவியை எடுத்து, புதையலறையில் 100 டன் தங்கத்தின் அடியில் ஒளித்து வைத்திருந்த இந்த பகவத் கீதை என்ற நூலை எடுத்துக் கொண்டாரா ? இல்லை ஒரு மதம் பரப்பியின் நச்சுத் தாங்காமல் வாங்கி புகைப்படத்திற்குக் காட்சி தந்திருப்பாரா ?
Download As PDF