கருப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம்

கருப்பர் கூட்டம் யூட்யூப் இன் சுரேந்தர் மீது குண்டர் சட்டம் போடப்போகிறார்களாம். கடவுளின் அவற்றின் கதைகளைப் பற்றிய உண்மையைச் சொன்னதற்கு இச்சட்டமெனில், இந்தக் கதையைப் பரப்பி மனிதர்களை முட்டாளாக்கும் கூட்டத்திற்கு இந்த ஜனநாயக அரசு பாதுகாப்புக் கொடுக்கிறது. உண்மையைச் சொன்னவனுக்கு தண்டனை எனில் இது மதச்சார்பற்ற நாடா இல்லையா என்று கேட்கத் தோன்றுகிறது. 


எப்படி கடவுள் இருக்கிறது என்று சொல்ல உரிமையிருக்கிறதோ அது போன்றே கடவுள் இல்லை என்று சொல்லவும் இருக்கிறது. எப்படிக் கடவுள் கதைகளை கண்டபடிக்கு எழுதி அதை வெளியிட்டு கோடிக்கணக்கானோரை நம்ப வைத்து பணம் கறக்கவும் இன்ன பிறவும் செய்ய உரிமை இருக்கிறதோ அது போன்றே அக்கதைகளைக் கட்டுக் கதை என்று விளம்பவும் உரிமை இருக்கிறது. 

கொலை மருட்டல் விடுப்பவன், , கலவரத்தைத் தூண்டுகிறவன், அமைதியைக் குலைக்க போலிச் செய்தியைப் பரப்புகிறவன், சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்களைக் குறிவைத்து வெறுப்பை விதைப்பவன், பெண்களை பாலியல் வல்லுறவுக்கு நிகரான செய்கையை செய்யச் சொன்னவன், தமிழ்நாட்டைக் கேவலமாகப் பேசுகிறவன், தமிழ்நாட்டின்/இந்தியாவின் பெரிய தலைவர்கள் சிலைகளை உடைத்து இழிவு செய்தவன், அவற்றைத் தூண்டி விடுகிறவன், ஜனநாயக நாட்டை மதவாத நாடாக மாற்ற வேண்டும் என்று செயல்படுகிறவன், ஆணவக் கொலையைத் தூண்டுகிறவன், கலவரம் செய்து உடமைகளை அழித்தவன்கள், உயிரோடு எரித்தவன்கள், காவல்நிலையத்தில் கொட்டடிக் கொலை செய்தவன்கள், தன் வீட்டில் தானே குண்டு வீசிக் கொண்டு நாடகமாடுகிறவன்கள், தன் வாகனத்திற்குத் தானே தீ வைத்துக் கொண்டு புரளியைக் கிளப்புகிறவன்கள் இன்னும் பல கொடிய பிறவிகள். 

இவனுங்க எல்லாம் வெளிய இருக்கும்போது சுரேந்தரன் மேல் குண்டர் சட்டம்தானே பாய வேண்டும் ?  
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்