பெரியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெரியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பெரியாரியம் பேசுவோரின் சிறியாரியம்

 


பெரியார் சொன்னது என்ன ?

நான் யாருக்குப்பிறந்தாலும் எப்படிப் பிறந்தாலும் அது என் கவலையில்லை. தேவையுமில்லை. நான் தன்மானத்துடன் இருக்கின்றேனா என்பதுதான் தேவை. என்னுடைய பிறப்பின் காரணம் பற்றிப் பேசுகிறவர்கள் முட்டாளும் அயோக்கியனுமே.

இதே பெரியார்தான் இந்து மதம் சுமத்திய சூத்திரப் பட்டம் ஒழியப் போராடினார். சூத்திரன் என்பவன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன், அதாவது தேவடியாப் பையன் என்று மனுதர்மத்தின் கூற்றுக்கு எதிராகப் போராடினார். அவரேதான் பிறப்பிற்கான மூலத்தைப் பற்றியும் மேற்கண்டவாறு சொல்லியுள்ளார்.

நமது கருத்தென்ன,

இங்கே பெரியாரியம் பேசுவதாகச் சொல்லிக் கொள்பவர்கள் தனக்கு எதிர்க்கருத்து, எதிர் அரசியல் பேசுவோரை எதிர்க்கவும் திட்டவும் தேவடியாப் பையன் என்று சரளமாகச் சொல்கிறார்கள். இந்து மதம் சுமத்திய சூத்திர இழிவுக்கு எதிராகப் போராடுவதாகச் சொல்பவர்கள் எப்படி அதையே சொல்லித் தனது எதிரிகளைத் திட்ட முடியும் ? இல்லை முதலில் அப்படிச் சொல்வது எப்படி அவர்களைத் திட்டுவதாகும் அல்லது இழிவு செய்வதாகும் என்று கூற முடியுமா ?

அதிலும் பிறப்பால் பார்ப்பனரான பெண்கள் பெரியாருக்கு எதிரான கருத்துக்களைக் கூறினால் அவர்களையும் ஐட்டம், தேவிடியா என்றெல்லாம் அனைவரும் சொல்கின்றனர். இதற்கெல்லாம் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

ஒருவேளை பெரியார் தான் சொல்வதை அப்படியே பின்பற்ற வேண்டாம். உன் புத்திக்குச் சரி என்று பட்டதை மட்டும் ஏற்றுக் கொள் என்று சொன்னதைத்தான் பின்பற்றி அடுத்தவனை தேவிடியா பையன், தேவிடியா என்றெல்லாம் சொல்வது சரி என்று கருதிச் செய்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. 


Download As PDF
Bookmark and Share

Post Comment

தமிழ்த்தேசியத்திடமிருந்து பிரிக்க முடியாத இந்திய இறையாண்மை !!

திராவிட எதிர்ப்புக்கு மறுப்பு வரும்போதெல்லாம் தமிழ்நாட்டில் தமிழர் என்றாலே பலருக்குப் பிடிப்பதில்லை என்கிற பாணியில் புலம்பலும், காழ்ப்பும் நிரம்பிய வகையில் பதிலடி வருகிறது. தமிழுணர்வை திராவிட வெறியர்கள் எதிர்த்து நிற்பதைப் போல காட்டுகிறார்கள். பெரியாரியத்தை பார்ப்பனர்கள் எதிர்க்கிறார்கள், ஜாதிவெறியர்கள் எதிர்க்கிறார்கள், மதவாதிகள் எதிர்க்கிறார்கள் அந்தோ மறத்தமிழர்களும் எதிர்க்கிறார்கள்.

தற்போது நாம் தமிழர் இயக்கத்தினரால் வெளியிடப்பட்ட கட்சி செயல்திட்டத்தில் இந்திய இறையாண்மையை காக்க வேண்டும் என்ற உறுதிமொழி வெளியிடப்பட்டத்தைத் தொடர்ந்து அக்கட்சியின் மீது பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். வழக்கம் போலவே நாம் தமிழர் கட்சியும் திமுக எதிர்ப்பு, கருணாநிதி எதிர்ப்பு, பின்பு திராவிட எதிர்ப்பு இறுதியாக வேறு வழியின்றி பெரியார் எதிர்ப்புடன் முடித்து பெரியார் தமிழினத் துரோகி என்ற முழக்கத்தின்படியே தமது திட்டத்தை வெளியிட்டுள்ளனர். இதில் பார்ப்பனியம் என்ற சொல் கவனமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. பார்ப்பனர் என்ற சொல்லுக்கு ஆய்வாளர் என்று புதிய அருஞ்சொற்பொருளும் தரப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக ஆரியம், பார்ப்பனீயம் என்ற வடமொழிச் சொற்களுக்கு மாறாக மனுவியம் என்பதைப் பயன்படுத்தியதாகக் கூறுகிறது நாம் தமிழர் இயக்கம். செய்திகளை வெளியிட்ட பின்பு முன்னுக்குப் பின் முரணாகத் தற்போது சீமான் தமிழக அரசியல் இதழுக்கு பேட்டி வழங்கவேயில்லை என்று மறுத்திருக்கிறார்.

தமிழர் விடுதலைக்காக போராடக் கிளம்பிய கட்சியினர் ஏன் இந்திய இறையாண்மையக் காப்பதாக உறுதி மொழி எடுத்துக்கொள்ளவேண்டும். இந்திய இறையாண்மையைக் காப்பதற்குத்தான் எத்தனையோ பேர் இருக்கின்றனர். பொதுவாக ஈழத்தமிழர் விடுதலை தனித் தமிழ்நாடு என்றாலே இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினார்கள் என்று போட்டுக் கொடுக்க தினமலர், பேராயக் கட்சி என்று பலர் இருக்கின்றனர். இதுவரை தமிழ்நாட்டிலிருக்கும் எந்தத் தமிழ்தேசியக் கட்சியும் இந்திய இறையாண்மையைக்காப்பதாகக் கூறவில்லையே என்று எதிர்ப்பவர்கள் கூறுகிறார்கள். நாம் தமிழர் இயக்கத் தமிழர் சீமானை மேடையேற்றி அவரை அறிமுகப்படுத்திய பெரியார் திகவினர். ஈழப்போரின் போது தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது நாம் தமிழர் இயக்கம் தொடங்கப்பட்டது. இவர்கள் நாம் தமிழர் இயக்கத்தின் தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வந்தனர். இப்போது பெரியார் ஈழத்தந்தை செல்வாவுக்ககு ஒரு அடிமை மற்றொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும் என்று கைவிரித்ததை வைத்து திராவிடத்தால் ஏதும் முடியாது ஏய்த்துவிட்டதாக என்று சொல்கின்றனர். சுவாரசியமாக இவர்கள் சிங்களத்தையும் திராவிடப்பட்டியலில் சேர்த்திருக்கின்றனர். பேசாமல் பார்ப்பனியத்தையும் திராவிடப்பட்டியலில் சேர்த்திருக்கலாம், ஏனென்றால் சிங்கள இனவாதிகள் தம்மை ஆரியர்களாகக் கருதிக் கொள்கிறவர்கள்.

கேட்டுக் கேட்டு சலித்துபோன பழைய வாதங்களே மீண்டும் கேரளாவிலோ ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ எவனும் திராவிடன் என்று சொல்வதில்லை என்று, இதற்கென்ன சொல்வது, பெரியார் அன்றே சொல்லி விட்டார் இவர்களுக்கு எந்த சுயமரியாதையும் இல்லை என்று, இவர்களெல்லாம் பார்ப்பனியத்திற்கு அடிமையானவர்கள் என்று. அவர்கள் திராவிடன் என ஒத்துக் கொள்ள வேண்டுமென்றால் தமிழ்தான் திராவிட மொழிகளின் தாய் என்று ஒத்துக் கொள்ள வேண்டும். இதற்கு பார்ப்பனியத்திற்கு அடிமையான அவர்கள் தயாரில்லை. ஏன் 60 வருடங்களாக போராடியே தமிழ்நாட்டில் எத்தனை பேர் ஒத்துக் கொண்டார்கள், அங்கே விழிப்புணர்ச்சி ஊட்ட யாரும் பெரியார்போலப் பிறக்க வில்லை. கன்னடராக இருந்தாலும் தமிழர்களுக்குப் போராடியதால்தான் பெரியார் இன்னும் பெரியாராகிறார்.

தற்போதுள்ள தமிழ்தேசிய வாதிகள் வைக்கும் எந்த வாதமும் மராட்டிய இனவெறியன், இந்துத்துவாவாதி பால் தாக்கரே, ராஜ் தாக்கரே ஆகியோரின் இனவாத வன்முறை அரசியலுக்கும் எந்தளவும் மாறியதில்லை, கூடவே வாட்டாள் நாகராஜ் என்ற தலைவரும்தான். தமிழ்நாட்டிலுள்ள பிற மொழியினர் மீதான் வெறுப்புணர்வை வளர்ப்பது, வந்தேறிகள் வாழ்கிறார்கள் தமிழர்கள் வீழ்கிறார்கள் என்பது, இவர்களின் அரசியலுக்கு அவ்வப்போது ஈழத்தமிழர்களை இழுத்து பச்சாதாபம் தேடிக்கொள்வது என்று தொடர்கிறார்கள். தமிழ்தேசியவாதிகளில் பல வகையினர்  இருக்கிறார்கள். சமனியவாதிகள்(சோஷலிஷ்டுகள்) தொடங்கி இனவாதிகள், மத அடிப்படைவாதிகள் வரை. இவர்களுக்குள் பல வேறுபாடுகள், இவர்களுக்குள் எந்த கருத்து மோதல்களும் காணோம். உதாரணத்துக்கு ஒன்று. பொதுவில் (தமிழக) தமிழ்தேசியம் இந்தியாவை ஒத்துக் கொள்ளாது. அதன் கொள்கை தனித் தமிழ்நாடு, தனி ஈழம். அதே ஈழத் தமிழ்தேசியம் இத்தனை பட்ட பின்பும் இந்தியாவை தந்தை நாடு என்கிறது, தமிழீழம் அமைவது ஈழத்தமிழர்களுக்குப் பாதுகாப்பு என்பதை விட இந்தியாவுக்கு பாதுகாப்பு என்று இந்தியாவின் காலைச் சுற்றி வருகிறது. இதெல்லாம் ஏன் பேசப்படுபொருளாகவில்லை ? பெரியாரியமல்லாத தமிழ்தேசியம் என்ன கொள்கையை வைத்திருக்கும் என்பதற்கு ஈழத்தமிழ்த்தேசியமே உதாரணம். இலைங்கையிலிருந்தாலும் தமிழ்தேசியம் கடல் தாண்டி பார்ப்பன இந்தியாவின் காலில் விழும்.

சீமான்

சீமான் வெறும் உணர்ச்சிவயப்படும் மனிதராகத்தான் இருந்தார். தமிழுணர்வாளர்கள் அனைவராலும் கருணாநிதி வெறுக்கப்படக் காரணமாக இருந்தது, ஈழபோர்தான். ஆனால் ஈழப்போரின்போது நடந்த தேர்தலில் திமுக விற்கு எதிராகவும், அதிமுகவிற்கு ஆதரவாகவும் இருந்த சீமான், தேர்தல் முடிந்தவுடன் ஏதோ ஒரு வார இதழுக்கு வழங்கிய பேட்டியில் இப்படிக் கூறியிருந்தார். நம்மை எதிரி சுற்றி வளைத்துவிட்டால் கையில் கிடைப்பதை நாம் ஆயுதமாகப் பயன்படுத்துவதுபோலத்தான் நாங்கள் அதிமுகவை ஆதரித்தோம், ஆனால் கலைஞர்தான் தலைவர் என்பதில் மாற்றமில்லை, இப்போதும் என் அலுவலகத்தில் திமுக கொடியைக் காணலாம் என்றார். பின்பு ஜெயா தொலைக்காட்சியில் பேசினார். அப்படியே அம்மா ஆதரவாளராக மாறிவிட்டார்.

10 வருடங்கள் இருக்கலாம் நானும் என்னுடைய நண்பனும் ஈரோட்டில் பெரியார் வாழ்க்கையைப் பற்றி ஒரு படம் திரையிட இருந்தார்கள். அந்தத் திரைப்படம் ஞாநி இயக்கியதாகும். அந்தத் திரைப்படம் தொடங்கும் முன் சீமானின் உரையைக் காண நேர்ந்தது. அதில் பார்ப்பனிய, தீண்டாமை எதிர்ப்பு, பகுத்தறிவு தன்மான சீமான்தான் உணர்ச்சிகரமாகப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சொன்ன வாசகம் இன்னும் நினைவிலிருக்கிறது. நண்பர்களே !! ஒரு சினிமாக்காரன் வந்து இங்கு பகுத்தறிவு பேசுகிறேன் என்று எண்ண வேண்டாம். சினிமா என்பது எனது தொழில். இங்கே நான் உங்களில் ஒருவனாக உணர்வுடன் வந்திருக்கிறேன். எனக்கு சினிமாத் தொழில் இல்லையென்றால் கள்ளச் சாராயம் காய்ச்சுவேன். (தொழில் கொண்டு பார்க்க வேண்டாம் உணர்வு கொண்டு பார்க்கவும்) என்று சொன்னார். கூட்டத்தில் கைதட்டல் அதிகமாக இருந்தது. இதற்கும் அவர் இப்போது நடந்து கொள்வதற்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா ?

இதே போலத்தான் ஒருமுறை தமிழீழத்தை கோட்சே ஆதரித்தால் அவரை ஆதரிப்போம் ஆனால் காந்தி எதிர்த்தால் அவரையும் எதிர்ப்போம் என்றார். பிரபாகரன் படம்போட்ட சட்டையுடன் போய் பசும்பொன்தேவரின் விழாவில் கலந்து கொண்டு ஏன் தேவரைப் போராளியாக பார்க்க மறுக்கிறீர்கள் என்றார். பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ன செய்தார் என்றார். மற்ற திராவிட எதிர்ப்பாளர்களின் கேட்டுக் கேட்டுக் சலித்துப் போனதையே இவரும் பேசுகிறார்.

திராவிட எதிர்ப்பு

திராவிட எதிர்ப்பு என்றாலே கருணாநிதியை விமர்சிக்க வேண்டியது கருணாந்தி, திமுகவின் தவறையெல்லாம் திராவிடத்தின் தவறாகவும் பெரியாரே மூலகாரணம் என்பதைப் போல பேச வேண்டியது இறுதியில் பெரியார் எதிர்ப்பில் முடிக்க வேண்டியது. திராவிடத்தால்தான் தமிழன் வீழ்ந்தான் என பிதற்ற வேண்டியது.

ஃபேஸ்புக்கில் கருணாநிதியின் பெயர் தட்சிணாமூர்த்தி, அவர் ஒரு தெலுங்கு வந்தேறி தமிழின் வெறுப்பாளர் என்ற ரீதியிலெல்லாம் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. பகுத்தறிவு கருணாநிதி மஞ்சத் துண்டு அணிவது இந்து மதப் பண்டிகைகளுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவது பற்றியெல்லாம் எல்லோரும் கருணாநிதியைக் குதறி எடுப்பவர்கள், ஒரு கன்னடப் பார்ப்பனர் எப்படி திராவிடக் கட்சியில் தலைவராக இருக்கலாம் என்று ஒருவரும்  கேட்பதேயில்லை. அதுதான் தமிழக நாளிதழ்கள் தமிழர்களின் மண்டையில் திணித்திருக்கும் கருத்தின் தன்மை. முன்னாள் இன்னாள் பேராயக் கட்சியினர் என அனைவரும் தினமணியில் எழுதுவார்கள் என்ன பிரச்சனையென்றாலும் அதிலே நாலுவரியாவது கருணாநிதிதான் இதற்கெல்லாம் காரணம் என்ற பெயரில் எழுதுவார்கள், அப்படியே சந்தடி சாக்கில் திராவிடக் கட்சிகள் என்று பன்மையில் எழுதிவிட்டு திராவிடக்கட்சிகள் என்றாலே கருணாநிதி என்ற பெயர் வரும்படி பார்த்துக் கொள்வார்கள். இதில் கருணாநிதியை மட்டுமே கொள்கை ரீதியில் விமர்சிப்பார்கள், ஜெயலலிதாவை அப்படி விமர்சிக்க மாட்டார்கள் வெறும் நிர்வாகக் குளறுபடிகள், ஊழல் என பொதுவில் மட்டுமே விமர்சிப்பார்கள்.

தினமணி, தினமலர் ஞாநி என அனைவரும் இவ்வகையினரே. இம்மாதிரியானவர்கள் திராவிடக் கட்சிகளை அதிகம் திறனாய்வு (விமர்சனம்) செய்வார்கள், அதே நேரம் அதிமுகவின் பழ.கருப்பையா தினமணியில் எழுதுவார், அவர் இதுவரையில் எழுதியது கருணாநிதி எதிர்ப்புதான் அதேபோல் கருணாநிதியை வைத்து கொள்கையையும் நடத்தையையும் ஒப்பிட்டு எழுதுவார். ஆனால் தான் சார்ந்திருக்கும் திராவிடக் கட்சியைப் பற்றி நெல்லை கண்ணன், பழ. நெடுமாறன் இன்னும் பலர் எழுதுவதை கண்டுகொள்ள மாட்டார். இங்கு கருணாநிதியை நல்லவராக்கும் என்று சொல்லவில்லை. கருணாநிதியின் பெயரால் திராவிட வெறுப்பை ஊட்டும் விதத்தைச் சொன்னேன். அதற்கேற்றார்போல் கருணாநிதியும் அவரது பாதந்தாங்கி வீரமணியும் நோபால்களாக வீசுகிறார்கள். அதை அரசியலே தெரியாத பச்சைப் பிள்ளைகள் கூட சிக்ஸராக்குகிறார்கள். இதற்கெல்லாம் கருணாநிதியே காரணம்.

பார்ப்பன எதிர்ப்பு என்றால் அதிகம் போராட வேண்டும் கொள்கைப் பிடிப்பு வேண்டும். காசு பார்க்க முடியாது. இருப்பதிலேயே எளிதானது, கருணாநிதி எதிர்ப்பு, திமுக எதிர்ப்பு, திராவிட எதிர்ப்பு, இந்திய இறையாண்மை, ஈழத்தமிழர் என்பது இன்னும் இலாபம் தரும், அரசியல் செல்வாக்கை உயர்த்தும் என்பது நிலவரமாக இருக்கிறது. திராவிடம் மட்டுமல்ல, மார்க்சியம், தமிழ்த்தேசியம், தலித்தியம் என என்ன கொள்கையானாலும் மக்கள் அமைப்புகளிலிருந்து தேர்தல் அரசியலுக்குச் சென்றாலே அது யாருக்குப் பயனளிக்கும் என்பது வெள்ளிடை மலை.
Download As PDF
Bookmark and Share

Post Comment

திமுகவில் முளைத்த சுயமரியாதைச் சிங்கங்கள் !

இந்த அதிசயம் தமிழ்நாட்டின் அதிசயமான கூடங்குளத்தில் நடந்துள்ளது. இந்த சுயமரியாதை எனும் சொல் ஒரு காலத்தில் தமிழ்நாட்டைப்பிடித்து உலுக்கியது. இன்று வரை அது வீரியம் மிக்க சொல்லாக உள்ளது. தற்போது திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாடிய இத்தருணத்திலோ அந்தக் கட்சியும் அதன் தலைவருக்கும் உள்ள மதிப்பு எந்தளவுக்கானது என்பது தெரியும். திராவிடம் என்றாலென்னவென்ற தலைமுறையும் உருவாகியிருக்கிறது இதற்குப் பெரியார் காரணமல்ல. திராவிட இயக்கம் சிறு சிறு மாற்றங்கள் முதல் பெரிய மாற்றங்கள் வரை அனைத்து வகையிலும் ஓரளவு வெற்றியீட்டியுள்ளது என்பதையும் மறுக்க இயலாது.

எடுத்துக்காட்டாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு கல்வி, அரசுப் பணி மற்றும் ஆட்சிப் பொறுப்புகளில் உரிய பிரதிநிதித்துவம், பிராமணரல்லாத மற்ற சமுதாய மக்களுக்கும் இவ்விஷயங்களில் சட்ட ரீதியிலான அங்கீகாரத்தையும் உரிமையையும், மாநில மற்றும் மத்திய அரசு இரண்டிலும் பெற்றுத் தந்ததில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்கு அளப்பறியது. அதிலும் மத்திய அரசுப் பணிகளில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை சட்ட ரீதியாக பெற்றுத் தந்ததில் டாக்டர் கலைஞர் அவர்களுடைய உழைப்பும், பங்களிப்பும் வேறு எவரையும் விட முன்னிலை வகிப்பதாகும். (நன்றி
). இதெல்லாம் அண்ணா பெரியாருடன் முரண்பட்டு திராவிடர்கழகத்திலிருந்து பிரிந்து திமுகவைக் உருவாக்கி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றாமல் சாத்தியமாகியிருக்காது. சமச்சீர் கல்விக்கான தொடக்கப்புள்ளியாக கொண்டுவரப்பட்ட பாடத்திட்டம், இப்படி இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம்.

அதே நேரம் திராவிட இயக்கம் பெரியாரால் எந்த நோக்கத்துடன் துவங்கப்பட்டதோ அதற்கு நேரெதிரான விளைவுகளுக்கும் காரணமாக இருந்தது திமுக தான் என்பதையும் மறுக்கவியலாது. எடுத்துக்காட்டாக ஜாதிக்கட்சிகளை வளர்த்து விட்டதைச் சொல்லலாம். இன்னும் எத்தனையோ உண்டு. இருப்பினும் எத்தனை வகையில் பித்தலாட்டம் செய்தும், மற்ற எந்த மாநிலத்தைச் சேர்ந்த சராசரிக் கட்சிகள் செய்யும் அத்தனை அயோக்கியத்தனங்களையும் செய்தாலும் அதற்கென்று ஒரு தனித்துவமிருந்தது. பெரியாரின் வழிவந்த கட்சி என்பதுதான் அது. ஓரளவிற்கு பார்ப்பன எதிர்ப்புடன் இருந்தே வந்தாலும் 30 வருடங்களுக்கு முன்பிருந்தளவுக்கு வீரியமில்லாமல் பல்லில்லாப் பாம்பாகவே இருக்கிறது. அதுவும் கருணாநிதி, பாஜகவுடன் கூட்டணி வைக்குமளவுக்கு ஆனபின்பு எல்லாவற்றுக்கும் கொள்கையை உரிமையை விட்டுக் கொடுத்து தனது அரசியல் அதிகாரத்தை, ஆதாயத்தைத் தேடிக்கொள்ளத் தவறியதேயில்லை.

இப்படியான சமரசப்போக்கிலான அரசியல்தான், எல்லா தீமைகளுக்கும் காரணமாக இருந்து, திமுகவின் நிறுவனராகிய அண்ணாவின் பெயரிலேயே அதற்கு எதிரான அரசியல் கட்சி உருவாகி, பார்ப்பனர் ஒருவரே அதன் தலைமையைக் கைப்பற்றியிருப்பது பெரியாரிய அரசியலுக்கே ஒரு நெத்தியடிதான். அடுத்து பெரியாரின் கொள்கைக்கு நேரெதிர் கொள்கைகளைப் ஊடகங்களின் வழியாகப் பரப்பி கல்லா கட்டுன் கருணாநிதி உறவினரின் சன் குழுமம், அழகிரியின் தாதா ராச்சியம், காங்கிரசுடன் கூட்டணி வைத்ததுக் கொண்டு, ஊழல்கள் உட்பட எந்த ஒரு தேர்தல் அரசியலில் ஈடுபடும் கட்சிகளின் கீழ்த்தரமான செய்கையில் ஈடுபடுவது. உலகெங்குமில்லாதவகையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முறையை அறிமுகப்படுத்தியது, இலவசத்தின் பெயரால் மக்களை ஏமாளியாக்குவது என இன்னும் நீள்கிறது. இது பெரியாரின் தோல்வியல்ல. சமரசப்போக்கில்லாமல் தேர்தல் அரசியலில் தாக்குப் பிடிக்க முடியாது என்று சமாதானம் பேசும் கருணாநிதி ஆதரவுக் குரல்கள், இதற்குப் பதில் சொல்ல முடியாது. எதை வைத்துக் கொண்டு கருணாநிதியை ஆதரிப்பது என்றால் அதிமுக ஜெயலலிதாவின் செயல்களோடு ஒப்பிட்டு இந்தளவுக்கு திமுக மோசமில்லை என்றளவில்தான் இருக்கிறது. அடுத்து ஓரளவு பார்ப்பன எதிர்ப்பாளர்களாக இருப்பது போல் காட்டிக் கொள்வது.

இபடியாக இருக்கும்போத, இதற்கெல்லாம் மகுடம் சூட்டியது போல் 3 வருடங்களுக்கு முன்பு ஈழப்போர் நடந்த போது காங்கிரசுடன் சேர்ந்து நடத்திய நாடகங்கள் உச்சகட்ட வெறுப்பை திமுகவை சம்பாதிக்க வைத்தன. ஈழப்போர் உச்சத்திலிருந்த போதுதான் கலைஞர் தொலைக்காட்சியின் நகைச்சுவைப் பதிப்பான சிர்ப்பொலி அலைவரிசை தொடங்கப்பட்டது. போரை நிறுத்துவதற்காக 6 மணிநேரம் உண்ணாநிலை இருந்த கருணாநிதி போர் நிறுத்தப்பட்டதாக அறிவித்து உண்ணாநிலையை முடித்தார் பின்பு போர் நிற்கவில்லையே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு மழை நின்ற பின்பு நீடிக்கும் தூறலைப் போன்றே இதையும்(போர் நிறுத்தப்படாததை) கருத வேண்டுமென்றார். இது போன்ற செய்கைகள் மிகவும் எரிச்சலூட்டியதாகும். தனது வாய் சாமர்த்தியத்தை இராமன் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தான் என்று இந்துத்துவாக்களைக் கேட்ட போது ரசித்து சிலிர்த்தேன் ஆனால் அதையே ஈழப்போரின் போது தனது நக்கலைக் காட்டிய போது எரிச்சல்தான் வந்தது. இப்படித் தனது பித்தலாட்டங்களுக்கெல்லாம் சாமர்த்தியமாகப் பதிலளித்து சமாளிப்பவர்தான் கலைஞர். இவர் என்ன செய்தாலும் ஆதரிப்பார்கள் திமுகவினர். இத்தனைக்கும் அவர்கள் சாமானியர்கள் அல்ல. வரலாறு, பெரியாரியம் அறிந்த சுயமரியாதைக்காரர்கள், இப்படி சுயமரியாதைக்கெதிராக எந்த செயலைச் செய்தாலும், அதை ஆதரிப்பார்கள் தனது திறமையான வாதத்தைக் கொண்டு, இதை ஜெயலலிதா என்ன செய்தாலும் அதை நியாயப்படுத்தும் சோ வைப் போன்றவர்கள்தான். மக்களின் சராசரியான நாளும் சந்திக்கும் பிரச்சனைகளுக்காக போராடாதா ஒரு கட்சியாகவே திமுக சராசரி மக்களிடமிருந்தே தனிமைப்பட்டுப் போய்விட்டது.

தற்போது தலைப்புக்கு வருவோம். இப்படியாக சுயமரியாதையையும் கொள்கையையும் தமது ஆட்சிக்காகவும், பதவிகளுக்காகவும் துறந்த திமுகவினரில் சில பேர்கள் தமது சுயமரியாதையை மீண்டும் காட்டியுள்ளனர்கள், முத்தாய்ப்பாக திமுக தலைவருக்கெதிராகவே. காரணம் தமது பிரச்சனைக்கு ஆதரவு தராத தலைவர் எதிர்களுக்கு ஆதரவாகப் பேசியதால்தான் கட்சியைத் துறந்து கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்கள் கூடங்குளம் சுற்று வட்டாரப்பகுதியைச் சேர்ந்த போராட்டக் குழுவில் இடம்பெற்றிருந்த திமுகவினர். பொதுவாக வாக்குக் கட்சிகளின் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாகக் கட்சியிலிருந்து விலகுவதும், மற்றொரு கட்சியில் சேர்வதும் இயல்பானதுதான். ஆனால் இங்கோ தமது வாழ்வாதாரப் பிரச்ச்னைக்கு எதிராக தலைவர் குரல் கொடுத்ததால் கட்சி கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டார்களாம், கரை வேட்டியை எரித்தார்களாம்,. தமது ஆரம்பகால சுயமரியாதையை மீட்ட சிங்கங்களுக்கு வாழ்த்துக்கள். 

நன்றி கீற்று

தமது ஆரம்பகால சுயமரியாதையை மீட்ட சிங்கங்களுக்கு வாழ்த்துக்கள். இது குறித்த கட்டுரையைக் கீற்று இணையத்தில் வாசிக்கலாம்.

Download As PDF
Bookmark and Share

Post Comment

தந்தை பெரியார் - 132



இன்று தந்தை பெரியார் ஈ. வெ. இராமசாமியின் 132 - வது பிறந்த நாள். தற்போது நடக்கும் நிகழ்வுகளைக் காணும்போது அவர் இன்னும் நூறு ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும் என்றுதான் பேராசைப்படுகிறேன். எங்கெங்கு காணினும் சாதியின் அவலமும், மூடநம்பிக்கைகளும். படித்தவர்கள் நிரம்பிய இக்காலத்திலேயே நாம் சொல்லத்தயங்கும் பல முற்போக்குக் கருத்துக்களை பாமரர்கள், அறிவிலிகள், தற்குறிகள் நிரம்பிய அக்காலத்திலேயே சொன்னதோடல்லாமல் அத களத்தில் போராடி நிறைவேற்றிக் 
காட்டியவர் பெரியார்.

சாதி ஒழிப்பு, கடவுள், மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண் விடுதலை, விதவை மறுமணம், இன உணர்வு, பகுத்தறிவு, சுயமரியாதை என பனமுகம் காட்டிய மிகப்பெரும் ஆளுமை மிக்க தலைவராக ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரே தகுதி படைத்த மனிதர் பெரியார். இன்று தமிழர்க்குத் தலைவராகத் தமது தொண்டர்களால் புகழப்படும் பத்துக்கணக்கான் தலைவர்கள் இருந்தும் பெரியாருக்கு முன் அவர்களுக்கு நிற்கும் தகுதி கூட இருக்கவில்லை. நானறிந்த வரையில் மனசாட்சிப்படி பேசியும், எழுதியும் அவ்வாறு வாழ்ந்தும் காட்டிய ஒரு மாமனிதன் பெரியார். 

அவர் ஒருமுறை கூறினார். இன்னும் பல வருடங்களுக்குப் பின் வரும் தலைமுறையைச் சார்ந்த மக்கள் என்னைப் பற்றிக் கூறும்போது பெரியார் என்ற மூடநம்பிக்கையாளர் இருந்தார் அவர் இருக்காத கடவுளை ஒழிக்கப் பாடுபட்டார்". அதாவது இன்னும் சில காலத்தில் கடவுள் என்ற மூட நம்பிக்கை அழிந்துவிடும், அந்நாளில் மக்கள் கடவுளை மூடநம்பிக்கையாகவே கருதுவார்கள் எனும் பேராசை உடையவராக் இருநதிருக்கிறார். ஆனால் நடக்கும் மதக்கலவரங்களையும், பிள்ளையார் ஊரவலங்களையும், வாஸ்து, சோதிடம், தீமிதித்தல் , நரபலி போன்றவற்றைக் காண்கையில் அவர் இன்னும் வாழ்ந்திருந்தால் கூட இவைகளை ஒழித்திருக்க முடியாது போலும். 

பெரியாரின் வாழ்க்கையே ஒரு முரண்நகையாக உள்ளது. அவருக்கு இருந்த செல்வத்தின் அளவுக்கு அவர் தெருவில் நடக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆனால் அவர் ஏறக்குறைய 60 ஆண்டுகள் மக்களுக்காக ஊர் ஊராக பயணம் மேற்கொண்டார். மக்களுக்காகப் பேசினார். எழுதினார், போராடினார், சிறை சென்றார். கடைசிவரை எளிய மனிதனாகவே வாழ்ந்தார். கடவுள் இல்லை என்று சொன்னாலே பெரியாரின் பெயர் வரும். ஆனால் அவர் தமது இளமைககாலத்தில் அதாவது திருமணம் முடிந்த பிறகு துறவியாக வட இந்தியாவுக்குச் சென்றார். புராண, வேத, இதிகாசங்கள் பற்றி கற்றதாலும், அங்கு அவர் கண்ட போலித்தனங்கள் ஆன்மிகம், கடவுள் போன்றவற்றின் பெயரால் நடக்கும் சமூகப்பகைமையையும் உணர்ந்தார். மேலும் மக்கள் படும் துயரங்களுக்குக் காரணம் கடவுளல்ல மனிதர்களே என்றறியாமல் மக்கள் மூடநம்பிக்கை களில் சிக்கியிருப்பதைக் கண்டு வெதும்புகிறார்.  

ஆரம்பத்தில் இந்து மதத்தை சீர்திருத்தத்தான் எண்ணினார் பெரியார். ஆரம்பத்தில் கடவுள் மறுப்பையும் வலியுறுத்தவில்லை. ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு விளையும் அனைத்து வகையான் துனபங்களுக்கும் சாதி அமைப்பே காரணமாக உள்ளதாகவும் அதைத் தாங்கும் அமைப்பாக உள்ள இந்து மதத்தை ஒழிப்பதைத்தவிர வேறு வழியில்லை என்பதாலும், சாதிகளைத தாங்கிப்பிடிக்கும் கடவுளையும் எதிர்க்கிறார். கோயிலைப் பீரங்கியால் தகர்த்து சாலை அமைக்கச் சொன்ன இந்துமத எதிர்ப்பாளர்,  இறைமறுப்பாளரான பெரியார்தான் தாழ்ததப்பட்ட இந்துக்கள் கோயிலுக்குள் நுழையும் உரிமைக்காகப் போராடினார். ஆண்கள் இரண்டு வைப்பாட்டிகள் வைத்துக்கொண்டால் பெண்கள் நான்கு வைப்பாட்டன்கள் வைத்துக் கொள்ள வேண்டு என்ற "ஆம்பளைச் சிங்கம்" பெரியார்.

அவர் கன்னடர் என்பதால் தமிழ் மொழியை இகழ்ந்தார் என்பதும் பொய்யாகும். அவருக்கு தனது தாய்மொழியான கன்னடத்தைக் காட்டிலும் தெலுங்கு அதிகம் பழக்கமானதாக இருந்தது. திராவிடம் என்ற சொல்லைப் பார்ப்பன எதிர்ப்பாகவே கையாண்டார். தமிழின் பெயரால் தமிழரின் பெயரால் மதவாதிகள், உயர்சாதியினரின் ஆதிக்கம் நிலவியதாலேயே தமிழர் என்பதற்குப் பதிலாக திராவிடம் என்ற ஆற்றல்மிகு சொல்லைப் பயன்படுத்தினார்.இதனாலேயே திராவிடர் என்ற சொல் கசந்தது. மேலும் அவர் தமிழல்லாத மற்ற திராவிட மொழிகளைத் தனி மொழியாகவே காணவில்லை, தமிழின் சிதைந்த வடிவமாகவே காணுகிறார். இதற்கு சான்று அவர் மொழி குறித்துப் பேசியபோது, பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"தமிழ்மொழியும், அதன் சிதைவுகள் என்று சொல்லப்படும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளும், மக்களும், நாடுகளும்கூட தமிழைச் சேர்ந்ததே என்றும்; அந்தக் கருத்தைக்கொண்டே “திராவிடம்’ என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது என்றும் அகராதிகளும், ஆராய்ச்சி உரைகளும் கூறுகின்றன. நாட்டிலும் இதை வெகுகாலமாகவே ஒப்புக்கொண்டு வழக்கத்திலும் கொண்டு வந்திருக்கிறோம்.

வடமொழி ஆதாரங்களான இலக்கியம், இதிகாசம், புராணம் ஆகியவற்றிலும் திராவிடர், திராவிடம் என்ற சொற்கள் தமிழ் மொழியையும், நாட்டையும், மக்களையும் குறிக்கப் பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். தேசம் சரித்திரங்களிலும் திராவிடர், திராவிடம் என்ற சொற்கள் தமிழர், தமிழ்நாடு என்பவற்றிற்குப் பதிலாக உபயோகப் படுத்தப்பட்டு வந்திருக்கிறதையும் காண்கிறோம். ஆனால், தெலுங்கு நாட்டாராகிய ஆந்திரர்களும், கன்னட நாட்டாராகிய கன்னடியர்களும், மலையாள நாட்டாராகிய மலையாளிகளும் இதை ஒப்புக்கொள்ளத் தயங்குகிறார்கள். தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பதுபோல் – தமிழும் ஒரு மொழி என்றுதான் சொல்லுகிறார்களே ஒழிய, இவையாவும் தமிழ்தான் என்பதை ஒப்புக் கொள்ள வெட்கப்படுகிறார்கள்; சிலர் மறுக்கவும் செய்கிறார்கள்.

காரணம், அவர்களது மொழிகளில் ஆரியச் சொற்கள் பெரும்பான்மையாகக் கலந்துவிட்டன. ஆதியில் ஒரே கூட்டமாக வாழ்ந்த திராவிட மக்கள், இடநெருக்கத்தால் பல பிரிவுகளாகப் பிரிந்து சென்று ஆங்காங்கு கூடி வாழவும், அந்தந்த இடத்தின் சீதோஷ்ண நிலைக்கேற்ப அவர்களது மொழியில் சில நீட்டலும், குறுக்கலும் ஏற்படவும், அக்காலத்திய போக்குவரத்து வசதிக்குறைவு காரணமாக ஒரு பகுதிக்கும் மற்றோர் பகுதிக்கும் தொடர்பில்லாமல் போனதால், நாளடைவில் அந்தந்த இடத்தில் வடநாட்டிலிருந்து வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்கள், தமது மொழிக்குக் கடவுள் பேரால் பல மதத் தத்துவங்களை எடுத்துக் கூறி, அந்தந்தப் பிரதேச மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வடமொழியை அதிகமாக உபயோகப்படுத்தும்படிச் செய்து, அதன்மூலம் தமது கலை, ஆச்சார அனுஷ்டானம் ஆகியவைகளைப் புகுத்திவிட்டனர். அந்த வடமொழிக் கலப்புக் காரணமாகவும், அந்தக் கலாச்சாரப் பண்புகளினால் ஏற்பட்ட பற்றுதல் காரணமாகவும், அந்தந்த மக்களுக்குத் தமது மொழி, தமிழ் அல்லாத வேறு மொழியாகும் என்ற கருத்தும் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், என் சிற்றறிவிற்கு, என் அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் தனித்தனி மொழிகளென்றோ அல்லது தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழிலிருந்து பிரிந்த மொழிகளென்றோ தோன்றவில்லை. ஒரே மொழி அதாவது தமிழ்தான் நான்கு இடங்களில் நான்கு விதமாகப் பேசப்பட்டு வருகிறது என்றே நான் அபிப்பிராயப்படுகிறேன். உதாரணமாக, இங்கு (சென்னையில்) “தோட்டத்திற்குப் போகிறேன் என்றால், வயலுக்கு, விளைநிலத்துக்குப் போகிறேன் என்று அர்த்தம், “கொல்லைக்குப் போகிறேன்’ என்றால், “கக்கூசுக்குப் போகிறேன்’ என்று அர்த்தம். சோழநாட்டில் தோட்டத்துக்குப் போவதென்றால், கச்கூசுக்குப் போவதாகவும், கொல்லைக்குப் போவதென்றால் வயலுக்குப் போவதாகவும் அர்த்தம் செய்து கொள்ளுவார்கள். ஒரே தமிழ்ச் சொல் இரண்டு இடங்களில் வெவ்வேறு பொருளில் வழங்குகிறது. ஒரு பொருளுக்குப் பல சொற்கள் இருந்தால், ஒவ்வொரு சொல்லும் ஒரு மொழியாகிவிடுமா?

முன்பு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, நான் மலையாளத்துக்கு வியாபார விஷயமாய் சென்றபோதெல்லாம் நான் சிறிது அழுத்தியும், குறுக்கியும், மடித்தும் பேசிய தமிழை அங்குள்ளவர்கள் புரிந்து கொண்டுதான் இருந்தார்கள். நான்கு மொழிகளிலும் தேர்ச்சிப் பெற்ற பண்டிதர்களைக் கொண்டு, அந்தந்த மொழியிலுள்ள வடமொழி வார்த்தைகள் அத்தனையும் நீக்கிவிட்டுப் பார்த்தால், எஞ்சி நிற்கும் வார்த்தைகள் அத்தனையும் அநேகமாகத் தமிழ்ச் சொற்களாகவே இருக்குமென்று என்னால் அறுதியிட்டுக் கூறமுடியும்; அகராதி கொண்டு மெய்ப்பிக்கவும் முடியும். சமீபகாலம் வரையிலும் கூட அவைகளுக்கு எழுத்தோ, இலக்கியமோ இருந்ததில்லை."


             தமிழைக் காட்டுமிராண்டி மொழியெனக் கூறிய பெரியார் எழுத்துச் சீர்திருத்தமும் செய்தார். கட்டாய இந்தித் திணிப்புப் போராட்டத்திலும் முன்னோடியாக இருந்தார்.   வாழ்நாள் முழுவதும் பார்ப்பணியத்தைக் கடுமையாக எதிர்த்த பெரியார் தனிப்பட்ட முறையில் பகையின்றி அவர்களுடன் நட்பு பாராட்டினார் உதாரணம் இராஜாஜி. 

இவ்வாறு பல சாதனைகளைச் செய்த பெரியாரின் கலகங்களுக்கு எதிராக விளைந்தது எதிரிகளைக் காட்டிலும் அவருடன் இருந்து பிரிந்து சென்ற அவரது வாரிசுகளே என்பது மிகையாகாது. "கடவுள் இல்லை, இல்லவே இல்லை" என்று முழக்கமிருந்த போதே தம்பிமார்கள் "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்று சமரசம் செய்து கொண்டார்கள். அவர் ஒழிக்க விரும்பிய பேராயக் கட்சியின் ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பதே பெரியாரின் வாரிசு என்று தம்மை அறிவித்துக் கொள்ளும் கலைஞரின் தி.மு.க. காலமெல்லாம் அவர ஒழிக்கப் போராடிய பாரப்பனர்களின் அபிமானத்திற்குரிய ஒருவர், தம்மை சட்டமன்றத்திலேயே பாப்பாத்திதான் என்ற ஒருவர் அண்ணா, திராவிடம் என்ற சொற்களைக் கட்சிப் பெயராகக்  கொண்ட கட்சியின் தலைவராக உள்ளார். ஈழப்பிரச்சனையின் போது பெரியார் தி.க. - உடனான மோதலில் பெரியாரின் சிலையை உடைத்தனர் தி.மு.க.வினர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தொடங்கிய தி.மு.க. வைச் சேர்ந்த ஒருவரின் மகனே இந்தித் திணிப்பின் அடையாளமான இந்திய ரூபாயின் சின்னத்தை வடிவமைத்திருப்பது காலத்தின் அலங்கோலம். 


பெரியாரின் கருத்துக்கள் இன்றும் தேவையாக உள்ளன. அவரின் எழுத்துக்களைப் படித்தால் ஏதோ இன்று நடப்பதப் பார்த்துவிட்டு எழுதியதைப் போன்று உள்ளது. எடுத்துக்காட்டுகள்

(வாக்கு அரசியல் குறித்து ) இறுதிப் பேருரையிலிருந்து

அரசியல் ஓட்டுப் பொறுக்கிகள் !

ஓட்டு என்றால் எதைக் கொடுக்கிறான் ? பெண்டாட்டி தவிர, எல்லாவற்றையும் கொடுக்கிறானே ! முன்னேற்றக் கழகத்துக்குக் கூட கோயில் கட்டும் வேலை தான் முக்கியம் !
இன்னும் கொஞச நாள் போனால் பெண்டாட்டியயும் கொடுத்துவிட்டு ஒட்டு வாங்கும் நிலை வந்துவிடும். எனென்றால் அவர்களுக்கு உத்தியோகம், பதவிதான் பெரிது!

பேராயக்கட்சி குறித்து

அடுத்தாற்போல் ஒழிய வேண்டியது காங்கிரசு; அது ஒழிந்து விட்டது. இனிமேல் தேறாது! இப்பவே இரண்டு பேரும் தொங்குகிறார்களே! இரண்டாகப் பிரிந்தது; ஒன்றுக்கொன்று மானங்கெட்டுத் திரியுது; இப்ப மீண்டும் சேர்ந்தால் என்ன ஆகப்போகுது? காங்கிரசிலே என்ன இருக்கிறது ? எவன் ஆதரிப்பான் காங்கிரசை ? மானங்கெட்டவனைத் தவிர!





Download As PDF
Bookmark and Share

Post Comment