பில்கிஸ் பானு

இப்படியும் ஒருவரால் இருக்க முடியுமா என்று வியக்க வைத்துவிட்டார். இவரைப் போன்றவர்கள் இருப்பதால்தான் நாட்டில் இன்றும் மழை பொழிகிறது போலும். 
தன்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியவர்களை, தனது குடும்பத்தினரைக் கண் முன்னர் கொன்று குவித்தவர்களைத் தண்டிக்க பல ஆண்டுகளாகப் போராடியவர். ஆனாலும் அவர்களுக்குத் தூக்கு தண்டனையை வேண்டாமென்பவர். டெல்லி பாலியல் வன்முறைக் குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை வேண்டாமென்றவர். நீதியின் மீது நம்பிக்கை வைத்தவர். குஜராத்தின் கொலைகாரப் பயங்கரவாதிகள் எப்படிப்பட்ட மனிதர்களைக் கொன்றிருக்கிறார்கள் என்று ஒரு நிமிடம் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.



Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

அச்சமற்றவளின் சாவுக்கு நீதி கிடைக்கவில்லை


நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவையே தலைகுனிய வைத்த டெல்லி பேருந்து பாலியல் வன்முறை வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை தீர்ப்பாக வந்திருக்கிறது. இதுவே சரியான நீதியாகும். ஆனால் ஒரு அநீதி இந்தக் கொடுங்குற்றத்தில் பங்கெடுத்த ஒரு அயோக்கியப் பிறவி 3 மாதங்கள் சிறியவன் என்பதால் சிறுவனாக பாவிக்கப்பட்டு 3 வருடத்தில் வெளிவந்து விட்டான். இதைத்தான் சகிக்க முடியவில்லை. அவனுக்கு சராசரி மனிதர்களுக்குக் கிடைக்கும் சுதந்திரமான வாழ்வு சமூகத்தில் அனுமதிக்கப்படவே கூடாது அவனையும் சேர்த்துத் தூக்கில் போட்டிருக்க வேண்டும். இப்பேர்ப்பட்ட ஒருவன் வெளியில் சுதந்திர மனிதனாக உலாவுவதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

                                                 

நிர்பயாவின் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் நான்கு பேரின் மீதான தூக்கு தண்டனை தீர்ப்பு. இந்த வழக்கில் மொத்தம் ஆறு பேர் தொடர்புடையவர்கள். அதில் ஏற்கெனவே குற்றவாளிகளில் ஒருவனான ராம் சிங் சிறையிலேயே ஒரிரு வருடங்களுக்கு முன்னர் தூக்கு மாட்டி இறந்து விட்டான். இன்னொருவன் சிறுவன் என்று ஒரு வருடத்துக்கு முன்னர் விடுவிக்கப்பட்டு விட்டான். இது சகிக்கவே முடியாத அவமானம். இதைக் கேட்டாலே பற்றிக் கொண்டு வருகிறது. இந்தக் குற்றத்தைச் செய்த போது அவனுக்கு 17 வயது முடிய 3 மாதங்கள் இருந்தன. எனவே அவனை ஒரு குற்றவாளியாகக் கருத முடியாது என்று 3 வருடங்கள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு விட்டான். இந்தக் கேவலைத்தை எங்கே போய் சொல்வது. அவனுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும். சிறுவனாக இருப்பவன் எப்படி பெரியவர்கள் செய்யும் பாலியல் வன்முறையைச் செய்திருக்க முடியும். பாலியல் வன்கொடுமை செய்தவர்களிலேயே அதிகமாக செய்தவன் அந்தக் கொடியவன்தான். 
                                                
                                                    இந்தியாவின் மகனான உத்தமச் சிறுவன்

நடந்த கொடுமையைப் பாருங்கள். ஜோதிசிங் பாண்டே தனது நண்பனுன் படம் பார்த்துவிட்டு 9 மணி இரவில் இந்தப் பேருந்தில் ஏறியிருக்கிறாள். அந்தப் பேருந்திலிருந்த 5 பேர் (ஓட்டுநருடன் 6 பேர்) தனியாக ஒரு பெண் ஆடவனுடன் இருப்பதைப் பற்றி கிண்டலடிக்க, அந்தப் பெண் அதை எதிர்த்துப் பேச அதனால ஆத்திரமுற்ற இந்தக் கயவர்கள் அந்தப் பெண்ணையும் ஆணையும் தாக்கியுள்ளனர். அந்தப் பெண்ணை பாலியல் வன்முறை செய்திருக்கின்றனர். ஒரு 24 வயதுடைய பெண் ஒரு ஆணுடன் தனியாக இரவில் வருவது தவறாம் அதை எதிர்த்துக் கேட்டால் அந்தப் பெண்ணுக்கு பாலியல் வன்முறைதான் பதிலாம். அதிலும் அந்த உத்தமச் சிறுவன் 17 வயது நிரம்பாத ஒரு --------------- தன்னை விட 6 வயது மூத்த பெண்ணை வன்முறைக்கு உள்ளாக்கி, அவள் பெண்ணுறுப்புக்கள் இரும்புக் கம்பியை விட்டு கொடுமை செய்து நிர்வாணமாக வெளியில் எறிந்து விட்டுப் போயிருக்கிறான். இந்த ஜென்மம் சிறுவன் என்று 3 வருடத்தில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறான் கூடவே அவனது பிழைப்புக்கு தையல் எந்திரத்தையும் வழங்கியிருக்கிறது அரசாங்கம். இந்தக் கேவலைத்தை எங்கே போய் சொல்லி அழ !?. அச்சமற்றவளின் சாவுக்கு நீதி கிடைக்கவில்லை அவளின் ஆசையும் நிறைவேறவில்லை. அவள் அந்தக் குற்றவாளிகளை உயிருடன் எரிக்கவேண்டும் என்று கூறியிருந்தாள்.
                                    
அவனுக்கு தண்டனை கிடைக்காதது மட்டுமன்றி, ஒரு பெண் தனியாக ஆணுடன் செல்லக்கூடாது என்ற சமூகக் கட்டுப்பாட்டை எப்பேர்ப்பட்ட பொறுக்கிகளும் கூட கையிலெடுக்கலாம், பெண் ஆணுடன் செல்வதைக் காட்டிலும் கொடிய குற்றமான பாலியல் வன்முறையை ஏவலாம் என்ற துணிவை சமூகம் ஆண்களுக்கு அளித்திருக்கும் பண்பாட்டை, மனநிலையை மக்கள் மாற்றிக் கொண்டதாகத் தெரியவில்லை. ஒரு ஆணும் பெண்ணும் இணைந்திருப்பதை, செல்வதை சமூகம் கண்டு கொள்ளாமல் எளிதாகக் கடக்கும் நாளே பண்பாட்டில் சிறந்த நாள். 

அந்தக் கயவனுக்கு தண்டனை கிடைக்காதது மட்டுமல்ல. நிர்பயாவுக்கு நடந்தது போலவே கொடுமைகள் இந்தியாவெங்கும் அதற்குப் பிறகும் நடந்தேறின. நிர்பயாவுக்குக்கிடைத்த ஊடக வெளிச்சம் மற்ற பெண்களுக்குக் கிடைக்கவில்லை நீதியும் கிடைக்கவில்லை.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

ஜாதி

ஜாதி என்பது இந்து மதத்திற்குச் சொந்தம் என்பதெல்Ýgr¨?லாம் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. அது ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் சொந்தமானது. இந்தியாவைத் தாண்டியும் வெவ்வேறு வடிவங்களில் இருக்கிறது. இன்னும் மனுதர்மத்திலிருந்துதான் பார்ப்பனர்களிடமிருந்துதான் ஜாதியை அனைவரும் கற்றுக் கொள்கிறார்கள் என்பதெல்லாம் நம்பும்படியா இருக்கிறது ?   
ஜாதி வெறியற்ற மிகச்சில இந்துக்களையும் மதவெறியர்களாக்கி, இந்துத்துவாவாதிகளிடம் தள்ளிவிட்டதுதான் தமிழ்நாட்டு முற்போக்குவாதிகள் சாதனை. பெரும்பான்மை இந்துக்களால் நிராகரிக்கப்படும் பாரதிய ஜனதாக் கட்சியை வளர்த்துவிடுவதற்கு இந்தப் போக்கும் ஒரு காரணம். 
இதை அவர்கள் உணர்ந்ததாகவும் தெரியவில்லை. ஆனால் இவர்கள் ஜாதி உணர்வில்லாத மத நம்பிக்கை அதிகமாக உள்ள முஸ்லிம்களை எந்தவொரு நெருடலுமில்லாமல் இவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இஸ்லாமியர்களைத் தோழர் என்றே அழைக்கிறார்கள். அவர்களின் மதப்பரப்புரைகளையும் மதப்பெருமிதங்களையும் மௌனமாகக் கடந்து செல்கிறார்கள். அதே வழிமுறையை இந்துக்களிடம் அவர்கள் செய்வதில்லை. 
இஸ்லாமிய மதவாதத்தை ஒரு விமர்சித்தாலே அவரைக் "காவிகள்" என்னுமளவிற்கு அவர்கள் இஸ்லாமியர்களை வளர்த்து விட்டுள்ளனர். சமீபத்தில் இஸ்லாமிய மதத்திலிருந்து வெளியேறிய, விமர்சித்த பெரியார் இயக்கத்தைச் சார்ந்த ஒருவரை அம்மதத்தைச் சேர்ந்த ஐந்தாறு காட்டுமிராண்டிகள் படுகொலை செய்தனர். அதைக் கூட கண்டிக்காத முற்போக்கு பெரியாரியவாதிகள் இருக்கின்றனர். கொல்லப்பட்டவன் பெரியாரிய இயக்கத்தில் இருந்தால் கூட அம்மதத்தை விமர்சிப்பது தீட்டுப் பட்டுவிடும் போலும். 
மற்றபடிக்கு, அவர்கள் இண்டு இடுக்கெல்லாம் இந்துத்துவ அடையாளங்களை நோண்டியெடுத்து அடையாளங்காட்டுகிறவர்கள். இதெல்லாம் எங்கு போய் முடியும் ? 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

இந்த வார குமுதத்தின் பாஜக-இந்தி ஜால்ரா


வாரமானால் ஏதோ ஒரு பாஜக தலைவரைப் பற்றி ஒரு ஜால்ரா கட்டுரை எழுதாவிட்டால் குமுத்திற்கு அடங்காது. இல்லையென்றால் பாஜக பட்டையைக் கிளப்பும் ஒரு திட்டத்தைப் பற்றி உச்சி முகர்ந்து பாராட்டி எழுதாவிட்டால் குமுதத்தின் ஊடக நேர்மை தாங்காது. சமூக வலைத்தளங்களில் வரும் மீம்ஸில் இருந்து தேர்வு செய்து போடப்படும் படங்களில் கூட பாஜக வராது. மற்ற கட்சித் தலைவர்கள்தான் வருவார்கள்.

ஜால்ரா 1

அன்னையர் தின சிறப்பிதழான இந்த வார குமுதத்தில் அன்னையர் தினத்தைப் பற்றி அதாவது மறைந்த தனாது தாயாரைப் பற்றி பேட்டி கொடுத்திருப்பவர் உத்தமர் பொன்னார். காவிரி மேலாண்மை வாரியம் அமைவதைத் தடுத்தும், கர்நாடகாவை விட வறட்சி அதிகமான தமிழகத்தை விட்டு கர்நாடகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்த மோடியை புகழ்ந்த பொன்.ராதாகிருஷ்ணன். தமிழகத்தின் சாலைகளெங்கும் இத்துப் போன இந்தியைத் திணித்து வரும் நெடுஞ்சாலைத்துறையின் சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் உத்தமசிகாமணி பொன். ராதகிருஷ்ணன். அன்னையர் தினத்தின் புகழ்பாட வேறு யாரும் கிடைக்கவில்லை போலிருக்கிறது.



ஜால்ரா 2

அடுத்து ஒரு பக்கம் முழுவதும் மோடியின் படம். அதன் கீழே இந்தியத் தமிழன் என்று கொட்டை எழுத்துக்களில். கட்டுரையின் தலைப்பு மோடியின் ஏக் இந்தியா. என்ன கருமமோ ? என்ன எழவோ ?? இப்போது இந்தியா 500 துண்டுகளாகவா இருக்கிறது ? இனிமேல் ஏக் இந்தியா என்று உருவாக்க வேண்டுமோ ? தமிழ் தொன்மையான மொழி. இந்தியாவின் மொழி வளமைக்குச் சான்றாக பெருமையுடன் அதைக் குறிப்பிடலாம். என்று மோடி ராஷ்ட்ரபதிபவனில் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர் உயரதிகாரிகளின் மத்தியில் பேசினாராம். ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்பட வைக்கப் போகும் மோடியின் கனவுத் திட்டத்தின் வெளிப்பாடே இந்தப் பேச்சாம்.
                                     
                                        
மோடியின் படத்தை ஏக் இந்தியா கட்டுரைக்குப் போட்டு அவரை நாயகனாக்கியுள்ளது
                           
தமிழ்நாட்டில் பாஜக இந்தியைத் திணிப்பதாக அரசியல் செய்கிறார்களாம். இவர்கள் இந்தியைத் திணிக்கவே இல்லையாம். தார் சட்டியுடன் இந்தியை அழிப்பவர்கள் தமிழுக்கு ஒன்றுமே செய்யவில்லையாம். இவர்கள்தான் கிழிக்கப் போகிறார்களாம். சொல்பவர்கள் பாஜகவின் கலை கலாசார அணியினர்.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு மொழி கலாச்சாரம் இருக்கிறதாம் அதைத் தாண்டி இந்தியா என்று ஒற்றுமையாக நிற்கவேண்டுமாம். இதெல்லாம் இப்போது மட்டும் இந்தியா ஒற்றுமையாக இல்லையா என்று யாராவது  இவர்களிடம் சொல்லவேண்டும். அதாவது மாநிலங்களுக்கு இடையே குறுகிய கால புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவது, மாநிலங்களுக்கு இடையே கல்வி, கலாச்சாரச் சுற்றுலா, விளையாட்டுப் போட்டிகள், திரைப்பட விழாக்கள் நடத்துவது இதெல்லாம் மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் இதை நடத்தலாமாம். பிரதமர் தான் பதவியேற்ற வருடமான 2014 லேயே இதைத் தொடங்கி விட்டாராம் இப்போது ஹரியானா, மேற்குவங்கம், தெலுங்கானா, சட்டீஸ்கர், குஜராத் போன்ற மாநிலங்களில் செயல்படுத்தத் தொடங்கியாயிற்றாம். 


இதற்கு மேல் ஜால்ராவின் சத்தம் வேண்டுமென்பதால் தமிழருவி மணியனின் ஜால்ராவின் சத்தத்தையும் சேர்த்து ஒலிக்க விட்டிருக்கிறது குமுதம். ஏக் இந்தியா திட்டத்தில் தமிழகமும் இணையவேண்டும். தமிழக்த்தில் இருக்கும் அனைவரும் இந்தியத் தமிழர்கள்தான். பழைய மும்மொழித் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவரவேண்டுமாம். அதென்ன மும்மொழித்திட்டம் ? வட இந்தியா இந்தி ஆங்கிலம் அல்லாது வேறொரு தென்னிந்திய மொழியைக் கற்க வேண்டும். அப்போது இங்கே இந்தியை விருப்பப் பாடமாக ஏற்கலாமாம். கேட்கவே புல்லரிக்கிறது. என்ன அழகான எதிர்கால சிந்தனை. என்ன ஒரு நாய்த்தனம் தமிழருவி மணியனுக்கு ? அய்யா இந்திக்காரர்கள் ஆங்கிலம் படிக்காததால்தானே மற்ற மாநிலங்களிலும் இந்தியைத் திணித்து வருகிறார்கள். இந்திக்காரர்கள் இந்தி ஆங்கிலம் தவிர ஒரு தென்னிந்திய மொழியைப் படிப்பார்களாம் நாமும் இந்தியைப் படிக்க வேண்டுமாம். இது நடந்தால் மழை கீழிருந்து மேலே பொழியும். அடி செருப்பால !

இம்மாதிரி வெவ்வேறு மொழிகளைப் படித்து விடுவதால் மாநிலங்களுக்கிடையேயான பிணக்குகள், தண்ணீர் பிரச்சனை தீர்ந்து, சக இனங்களின் சகிப்புத் தன்மை பெருகி மாநிலங்களின் பொருளாதாரம உயரும் அதன் மூலம் தேசமும் உயருமாம். இதெல்லாம் தமிழருவி மணியன் உதிர்த்தவை. இவர் மோடியை பிரதமர் வேட்பாளராக ஆதரித்தவர். ஆட்சிக்கு வந்த பின்னர் மோடி அரசுக்கு ஆதரவில்லை என்று தாவியவர். இந்த உத்தமர் இப்போது கறிக்குதவாத மும்மொழிக்கொள்கைக்கு வால்பிடிக்கிறார்.

ஏன் மோடி அரசு இந்தித் திணிப்பை கைவிட்டு இதுமாதிரியான நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களைப் போட்டால் யார் எதிர்க்கப் போகிறார்கள். இந்தியையும் திணித்து விட்டு இது மாதிரி மொக்கைத் திட்டங்களைப் போட்டதைக் கணக்குக் காட்டி இவர்கள் தேசத்திற்காகத்தான் அனைத்தையும் செய்கிறார்கள் என்று தூக்கிப்பிடிக்கிறது குமுதம்.
 

இதே குமுதத்தில் தமிழக மாணவர்களுக்கு பெருங்கேடு விளைவிக்கும் நீட் தேர்வை ஓரளவுக்கு மிதமாக விமர்சித்து கட்டுரை தீட்டியிருக்கிறது குமுதம். ஆனால் அதில் நீட் தேர்வைக் கொண்டு வந்து இந்திய ஒற்றுமையை நிலைநாட்டிய மாவீரன் என்று மோடியின் படம் அச்சிடப்படவில்லை. மாறாக அழகிய கல்லூரி மாணவிகளின் படத்தை அந்தக் கட்டுரைக்கு அச்சிட்டுள்ளது. ஏன் நீட் தேர்வுக்கு வழிவகுத்து தமிழக மாணவர்களை புதைகுழிக்கு அனுப்பியது பாஜக மோடிதான் என்பது பார்த்தவுடனே விளங்கி விடும். கட்டுரை படிப்பவர்களுக்கு அப்படித் தெரியக்கூடாது, அவர்கள் கோபம் பாஜகவின் மீது போகக்கூடாது என்பதற்காகத்தான் தேர்வு குறித்த கட்டுரை என்ற போர்வையில் மாணவிகளின் புகைப்படம். 


ஆனால் மோடியின் அழகிய படத்தை ஏக் இந்தியா கட்டுரைக்குப் போட்டு அவரை நாயகனாக்கியுள்ளது. பிள்ளையைக் கிள்ளி விட்ட மாதிரியும் ஆச்சு, தொட்டிலை ஆட்டி விட்டமாதிரியும் ஆச்சு. இந்தியை எதிர்ப்பவர்களை விமர்சித்த மாதிரியும் ஆச்சு மத்திய அரசு இந்தியைத் திணிக்கவில்லை என்று சொன்ன மாதிரியும் ஆச்சு, மத்திய அரசு ஒன்றுபட்ட இந்தியாவுக்கு உழைக்கிறது என்று சொன்னமாதிரியும் ஆச்சு.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

நானானவள் - ஆம் ! அவள் நான் என்று ஆனவள்


நம் வாழ்க்கையின் ஏதோ ஒரு நாளில்
உன் வாழ்க்கையில் ஒரு நாளில்
என் வாழ்க்கையில் ஒரு நாளில்
அந்த சில நிமிடங்கள் நீயும் நானும் மட்டும்
நமது மொழிகள் மட்டும்
நமது குரல்கள் மட்டும்

நமது செவிகள் மட்டும்
நமது இதயங்கள் மட்டும்

நம்மைப் பற்றியவை மட்டும்
நம்மைச் சேர்ந்தவர்கள் குறித்தவை மட்டும்
நம்முடைய நிகழ்கால நிகழ்வுகள் மட்டும்
நம்முடைய உள்ளங்கள் மட்டும் பேசின
பொன்னான நிமிடங்கள் அவை மட்டும்
நீ எனக்கு மிகவும் உறவாகவிருந்தாய்
நான் உனக்கு மிகவும் வேண்டியவனாயிருந்தேன்

என்னுடைய குரல் உன்னுடைய செவிப்பறையில் மட்டும் மோதித் திரும்பியது
உன்னுடைய குரலோ எனது இதயத்தில் சென்று மஞ்சத்தில் அமர்ந்து கொண்டது
காலம் நம்மைப் பிரித்துவிட்டது எனினும்
பட்டும் படாமல் நீ பதில் பேசியதும்
விட்டு விடாமல் நான் கேட்டுத் தொடர்ந்ததும்
என் சொற்கள் ஒட்டிவிடாமல் நீ தட்டி விட்டதும்
நீ தட்டி விட்டதை நான் சேமித்து வைத்ததும்
அவ்வப்போது அதை தூசுதட்டி நான் அசைபோடுவதும்
வாழ்வு உன் மீதான ஈர்ப்பைக் குறைத்து விட்டாலும்
அந்நினைவுகள் எனக்கு சுவையூட்டும் இன்றும் என்றென்றும்
உன்னில் நான் மறந்தும் போயிருக்கலாம்
உன்னில் நீ மாறியிருந்தாலும் 
என்னில் நீ இன்னும் மாறாமலிருக்கிறாய்

ஏனெனில் நீ, நான் என்று ஆனவள்
ஆம் அவள் நான் என்று ஆகினாள்
அவள் என்னவள்

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment