தடுப்பு ஊசி போடும் கடவுள் நம்பிக்கையாளர்கள்

கொரோனாவைப் படைத்தது அல்லது உருவாக்கியது யார் கடவுளா ? கடவுள் நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைப்படி கொள்கைப்படி கொரோனா என்ற தீநுண்மியைப் படைத்தது கடவுள்தான். 

கடவுள் எதற்காக இதைப் படைக்க வேண்டும் ? மனிதனுக்குப் பயனில்லாத உயிர்கள் பூமியில் பல உள்ளன. அது போல் இதையும் கொள்ளலாமா ? முடியாதே இது மனிதனின் இருப்புக்கே கேடு விளைவிக்கும் அளவிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

கொரோனாவைப் படைத்தது கடவுள் எனில் அதற்கான தடுப்பூசியை உருவாக்குவதும் கடவுளின் விருப்பத்திற்கு மாறானதுதானே ? இது முரண்பாட்டை கடவுள் நம்பிக்கையாளர்கள் எப்படி எளிதில் கடந்து போகிறார்கள் என்பது மிகப்பெரிய ஆச்சரியம். 

இந்திய மக்கள் கட்சியின் (அதாஙக் பாரதிய ஜனதா கட்சி) ஹ. ராஜா அவர்கள் தடுப்பூசி போடும் படத்தைப் பார்த்ததும் இப்படி எழுதத் தோன்றியது  மனம் முழுதும் பல்வேறு கடவுள்கள், வலது கையில் ஏதோ சாமி கயிறுகள், கழுத்தில் ஏதோ மாலை, நெற்றியில் பொட்டு இவையிருந்தும் கடவுள்களை நம்பாமல்,

முக்கவசமும் தடுப்பூசியும் போட்டுக் கொள்ளும் பக்தர். கடவுளும் மதமும் கலவரம் செய்யவும் அரசியல் அதிகாரத்தைப் பெற்று தனது இனத்தவரை ஆதிக்கம் செய்யும் அளவுக்கு முன்னேற்றவும் செய்யும் கருவிகள் என்று தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார்.
கடவுள் நம்பிக்கை உடையவர்கள் உலகில் தாம் வாழ்வதற்காகச் செய்யும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும், பகுத்தறிவு நடவடிக்கைகளும், அறிவியல் செயல்களும் அவர்களின் கடவுள் நம்பிக்கையை சற்றும் இடறுவதில்லை.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்