பெரியாரியம் பேசுவோரின் சிறியாரியம்

 


பெரியார் சொன்னது என்ன ?

நான் யாருக்குப்பிறந்தாலும் எப்படிப் பிறந்தாலும் அது என் கவலையில்லை. தேவையுமில்லை. நான் தன்மானத்துடன் இருக்கின்றேனா என்பதுதான் தேவை. என்னுடைய பிறப்பின் காரணம் பற்றிப் பேசுகிறவர்கள் முட்டாளும் அயோக்கியனுமே.

இதே பெரியார்தான் இந்து மதம் சுமத்திய சூத்திரப் பட்டம் ஒழியப் போராடினார். சூத்திரன் என்பவன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன், அதாவது தேவடியாப் பையன் என்று மனுதர்மத்தின் கூற்றுக்கு எதிராகப் போராடினார். அவரேதான் பிறப்பிற்கான மூலத்தைப் பற்றியும் மேற்கண்டவாறு சொல்லியுள்ளார்.

நமது கருத்தென்ன,

இங்கே பெரியாரியம் பேசுவதாகச் சொல்லிக் கொள்பவர்கள் தனக்கு எதிர்க்கருத்து, எதிர் அரசியல் பேசுவோரை எதிர்க்கவும் திட்டவும் தேவடியாப் பையன் என்று சரளமாகச் சொல்கிறார்கள். இந்து மதம் சுமத்திய சூத்திர இழிவுக்கு எதிராகப் போராடுவதாகச் சொல்பவர்கள் எப்படி அதையே சொல்லித் தனது எதிரிகளைத் திட்ட முடியும் ? இல்லை முதலில் அப்படிச் சொல்வது எப்படி அவர்களைத் திட்டுவதாகும் அல்லது இழிவு செய்வதாகும் என்று கூற முடியுமா ?

அதிலும் பிறப்பால் பார்ப்பனரான பெண்கள் பெரியாருக்கு எதிரான கருத்துக்களைக் கூறினால் அவர்களையும் ஐட்டம், தேவிடியா என்றெல்லாம் அனைவரும் சொல்கின்றனர். இதற்கெல்லாம் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

ஒருவேளை பெரியார் தான் சொல்வதை அப்படியே பின்பற்ற வேண்டாம். உன் புத்திக்குச் சரி என்று பட்டதை மட்டும் ஏற்றுக் கொள் என்று சொன்னதைத்தான் பின்பற்றி அடுத்தவனை தேவிடியா பையன், தேவிடியா என்றெல்லாம் சொல்வது சரி என்று கருதிச் செய்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. 


Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment