முஸ்லிம்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முஸ்லிம்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வணிக நிறுவனங்களுக்குப் பெயர் சூட்டுவதில் முஸ்லிம்களின் மதச்சார்பின்மை

முகமதியர்களின் மதச்சார்பின்மை பற்றிய இந்துத்துவவாதிகளின் ஒப்புதல் கருத்துக்கள்.

முஸ்லிம்கள் மதச்சார்பற்றவர்கள், அடுத்தவர் பண்பாட்டை மதிக்க மாட்டார்கள் என்று குற்றம் சொல்வோரின் வாயிலிருந்தே முஸ்லிம்களின் மதச்சார்பின்மையும், அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு நேர் எதிரான கொள்கைகளின் படியும் பெயர் வைத்தும் வாழ்கின்றனர் என்று தெரிய வந்தது. 

இந்துக்கள் செறிவாக இருக்கும் பகுதியில் கடை வைக்கும் முஸ்லிம்கள், தங்களது பெயரையோ முஸ்லிம் மதம் சார்ந்த அரபுப் பெயர்களையோ வைப்பதில்லை. மாறாக பொதுவான பெயர்களையே வைக்கிறார்கள். காவிகளுக்குப் பிடிக்காத தமிழில் கூட வைக்காமல் ஆங்கிலத்தில் வைக்கிறார்கள். இதன் மூலம் இந்துக்களின் மனம் புண்படாமல் தான் முஸ்லிம் கடைகளில் வாங்குகிறோம் என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்காமல் இருக்கிறார்கள்.

மதச்சார்பற்ற ஆங்கிலப் பொதுச் சொற்களில் பெயர் வைக்கிறார்கள்.
எ. கா :
நியூ சிட்டி லெதர், ராயல் ட்ரேடர்ஸ், சூப்பர் மெடிக்கல்ஸ், ரிலீப் மெடிக்கல்ஸ், ஸ்டார் தியேட்டர், சூப்பர் வாக், நியூ மைனா ஹோட்டல், ஆரஞ்சு டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ஸ்டார் ஜெனரல் ஸ்டோர்

தூய தமிழிலும் வைக்கிறார்கள்
எடுத்துக்காட்டு - சங்கம், சீமாட்டி சில்க்ஸ், பாரி மளிகை, வசந்தம் டிபார்ட்மென்டல் ஸ்டோர், நலம் மெடிக்கல்ஸ், காவேரி மெடிக்கல்ஸ், ஹோட்டல் செல்லப்பா

செங்கிருதத்திலும் இந்தியிலும் வைக்கிறார்கள்.
எடுத்துக்காட்டு -  மகாராஜா டெக்ஸ்டைல்ஸ், சர்க்கார் மளிகை, ராஜ்கமல் பட்டாசு கடை, மஜா மஜா உணவகம் (ஜம் ஜம் தண்ணீர் ஐத்தான் மஜா மஜா என்று திருப்பி எழுதியிருப்பார்கள் என்று ஒரு தேசபக்தருக்காவது தோன்றும்), பவித்ரா ஹோட்டல்

இந்தியா, தமிழ்நாடு,  ஆகிய பெயர்களையும் சேர்த்து வைக்கிறார்கள்.
எடுத்துக்காட்டு - தமிழ்நாடு துணிக்கடை, இந்தியன், ஜெய்ஹிந்த் சீமாட்டி புட்வேர், நேஷனல் ஸ்டோர், இந்தியா ஸ்டோர், இந்தியன் பேக்கரி 

ஊர்ப்பெயர்களிலும் வைக்கிறார்கள். 
கொடைக்கானல் ஹோட்டல்

முஸ்லிம் பெரும்பான்மை இல்லாத வேறு நாட்டுப் பெயர்களையும் வைக்கிறார்கள்.
லண்டன் ஹார்டுவேர், சிங்கப்பூர் ஹார்டுவேர், பர்மா ஹார்டுவேர்

அதற்கும் மேலாக இந்துப் புராணத்தில் வரும் பெயர்கள், இந்துக் கடவுள்களின் பெயர்களையும் தமது வணிக நிறுவனங்களுக்கு வைக்கிறார்கள். 
எடுத்துக்காட்டு - கிஷ்கிந்தா ட்ரெஸ்ஸஸ், லட்சுமி ஸ்டோர்ஸ், கணபதி ஸ்டோர்ஸ்

இன்னும் சில  
பாவா மெடிக்கல்ஸ், ரெங்கா டிபார்ட்மென்டல் ஸ்டோர்,  ரோஜா டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ராயல்

இதெல்லாம் போதாதென்று தங்களது பெயர் கண்டு சிறுமை கொள்ளும் பெரும்பான்மையினரை மதித்து சுமையா பானு, சபியா பானு, கதிஜா பானு என்ற பெயர்களில் வைக்காமல் முஸ்லிம் என்று உறைக்காத பானு ட்ரென்ட்ஸ் என்று வைக்கிறார்கள்.

முகமது அமித்சா என்று முழுப்பெயர் இடாமல் M.A. ட்ரேடர்ஸ் என்றும், வானதி பீவி மகளிர் தையலகம் என்பதற்குப் பதிலாக V.B. தையலகம் என்றும் பெரும்பான்மை உணர்வுக்கு மதிப்பளித்து பெயர் வைக்கிறார்கள். 

எல்லாவற்றுக்கும் மேலாக இந்துக்களின் பூஜைகளுக்குப் பயன்படும் விளக்குகள், திரி, எண்ணெய்கள், இன்ன பிற பொருட்களையும் விற்கிறார்கள். தீபாவளிப் பட்டாசுகளையும் விற்கிறார்கள். 

என்ன செய்வது பாய் கடை பிரியாணி மாதிரி வருமா என்று எல்லா இந்துக்களும் பிரியாணிக்கு அடிமையாகி விட்டதால் அதை மட்டும் ஐய்யங்கார் பிரியாணிக் கடை என்று போடுவதற்கு முஸ்லிம்கள் விரும்புவதில்லை.

திரையடிகளின் ஆதாரம் இந்த இணைப்பில் உள்ள இடுகையில் வந்த கருத்துக்கள் 












அன்பு இருக்கையில் வெறுப்பைத் தேர்ந்தெடுத்த இந்துத்துவா அன்பர்கள் இதை 1600 தடவை பகிர்ந்துள்ளார்கள். இதை எப்படித் தடுக்க முடியும் ?


Download As PDF
Bookmark and Share

Post Comment

பாஜகவின் கல்யாணராமன் மேல் குண்டர் சட்டம் தொடுக்கப்படுவது தவறு

 முதலில் குண்டர் சட்டம் மக்களாட்சிக்கு எதிரானது.

நபிகள் நாயகத்தை அவதூறாகப் பேசியதற்கு குண்டர் சட்டத்தில் கைது என்பது மிகவும் தவறானது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மதத்தை விமர்சனம் செய்வதையே எதிர்க்கும் மதவாதிகளின் ஆயுதம்தான் புண்படுத்துவது, இழிவுபடுத்துவது, அவதூறு செய்வது போன்ற சொற்கள்.

முஸ்லிம்களின் மத உணர்வுக்கு காவல்துறை அஞ்சுகிறது என்ற குற்றச்சாட்டு உண்மையாகும்.

இவர் முஸ்லிம்கள் மீதான குஜராத் படுகொலைகளை ஆதரித்துப் பெருமையாகப் பேசியதற்கும் அவர்கள் மீது வெறுப்பைத் தூண்டியதற்கும்தான் குற்றவாளியாகக் கருதப்பட வேண்டும்.

இல்லையென்றால் அவதூறு வழக்கில் குண்டர் சட்டம் எனில் மார்க்சிய, அண்ணலிய, பெரியாரிய போராளிகள் மீது இதைப் பயன்படுத்த பல வழிகள் உள்ளன.


Download As PDF
Bookmark and Share

Post Comment

முஸ்லிமாக இருந்தால் போதும் கொலை செய்யப்படலாம்

கடந்த வியாழக்கிழமை (22-06-2017) ஒரு கொலை நடந்திருக்கிறது. மோடியின் இந்தியாவில் இது மிகவும் சாதாரணமாக நடக்கும் கொலைதான். ஏனென்றால் ஆட்சி செய்பவர்கள் அத்தகையவர்களாக இருக்கின்றனர். இதுவும் நாம் சாதாரணமாகக் கடந்து விடுகிற மாதிரியான நிகழ்வுதான். 

1. செப் 2015 : முஹம்மது அஹ்லக் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக அடித்தே கொல்லப்பட்டார். ஆனால் அவர் வைத்திருந்தது ஆட்டுக்கறி. கொன்றவனின் தந்தை ஒரு மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனம் வைத்திருப்பவர்.

2. அக் 2015 : உத்தம்பூரில் ஜாஹித் ரசூல் பட் என்னும் 16 வயது சிறுவன் மாடுகள் ஏற்றிய வண்டியில் இருந்த குற்றத்திற்காக அடித்து கொல்லபட்டான்.

3. மார்ச் 2016 : லத்திஹரில், முஹம்மது மஜ்லும், ஆசாத் கான் இருவரும் மாடுகளை விற்பனை செய்த காரணத்திற்காக தூக்கிலிடபட்டு கொலை செய்யபட்டனர்.

4. ஏப்ரல் 2017 : அஸாம் மாவட்டம் அபூ ஹனீஃபா, ரியாஸூதீன் அலி இருவரும் மாடு விற்பனை செய்பவர்கள் என சந்தேகபட்டு அடித்தே கொலை செய்யபட்டனர்.

5. ஏப்ரல் 2017 : பெஹ்லு கான் பசு காவலர்கள்!? என்னும் பயங்கரவாதிகளால் அடித்து துன்புறுத்தபட்டு கொல்லபட்டார்.

6. மே 2017 : மாலீகன், மஹாராஸ்ட்ராவில் இரண்டு இஸ்லாமிய வியாபாரிகள் மாட்டிறைச்சி விற்பனை செய்ததற்காக வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தில் ஒருவர் பால் பண்ணைக்கு மாடுகளைக் கொண்டு சென்றபோது இந்துவெறி மாட்டுவெறி பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு இறந்தார்.  

(தகவல்கள் ஃபேஸ்புக்கில் சித்திக் என்பவரின் பதிவிலிருந்து)

ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் கொல்லப்பட்டவன் ஒரு முஸ்லிம். கொல்லப்பட்ட காரணமும் நமக்கு ஆர்வமூட்டுவதாக இல்லை. ஏனென்றால் அவன் "தேசப்பகைவன்" அல்லது "மாட்டிறைச்சி உண்பவன்" அல்லது "முல்லா" அல்லது அம்மூன்றுமே எனக் கொள்ளலாம். அதனால் அவனைக் கொல்லலாம். இத்தனைக்கும் அவன் 16 வயதுச் சிறுவன். ரம்ஸானைக் கொண்டாடுவதற்காக பொருட்களை வாங்கி வரக் கடைக்குச் சென்றிருக்கிறான், ஹரியாணாவிலிருந்து டெல்லிக்கு. திரும்பி வருகையில் பயணியர் ரயிலில் வந்திருக்கிறான். அவனுடன் அவனது சகோதரர்கள் மூவரும் வந்திருக்கின்றனர். 

அப்போது ஒரு கும்பலும் ரயிலில் ஒரு நிறுத்தத்தில் ஏறியிருக்கிறது. இவர்களுடன் இருக்கையில் அமர்வது தொடர்பாக சண்டை வந்திருக்கிறது. இவர்களின் முஸ்லிம் அடையாளமான தாடியும் குல்லாவும் சேர்ந்து இவர்களை பலியாக்கியிருக்கிறது. தவிரவும் ஜுனைத் மாட்டுக்கறி வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இவர்களுடன் சண்டையிட்ட அக்கும்ப்பல் இவர்களை, இவர்களின் மதத்தை அவமானப்படுத்தி ஏசியிருக்கிறது, குல்லாவைப் பிடுங்கி வீசியது, தாடியைப் பிடித்து இழுத்திருக்கிறது. "தேசப்பகைவன்", "மாட்டிறைச்சி உண்பவன்", "முல்லா" என்றெல்லாம் அவர்களை வசைபாடிய கும்பல் அவர்களைத் தாக்கியுள்ளது. இச்சண்டையில் இச்சிறுவனை நான்கு பேர் பிடித்துக் கொள்ள, கத்தியால் குத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளான். இந்தக் கொடிய நிகழ்வு நடக்கும் போது சுற்றியிருந்தவர்கள் இவர்களை "தொலைத்துக் கட்டச்" சொல்லி ஆரவாரம் செய்துள்ளனர். இது ஆர் எஸ் எஸ் இயக்க பயங்கரவாதிகள் செய்ததா அல்லது அந்த கொடிய பயங்கரவாதக் கொலைக் கொள்கைகாளால் சைக்கோவான கும்பலால் செய்யப்பட்ட கொலையா என்று தெரியவில்லை. இது ஒரு வெறுப்புணர்ச்சியால் விளைந்த கொடூரக் கொலையாகும். 

இந்துக்கள் பசுக்களை வணங்குகிறார்கள், அதைக் கொல்வது பாவம் என்பது எல்லா இந்துக்களுக்கும் பொதுவான நம்பிக்கையல்ல. இங்கே பசுவை வணங்கும் ஜாதியைச் சேர்ந்தவர்களே அதுவும் மாமிச உணவு உண்ணாதவர்களே மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனங்கள் நடத்தி, மாட்டிறைச்சி, தோல் ஏற்றுமதி மூலமாக பணக்காரர்களாக விளங்குகிறவர்கள். ஆனாலும் பசு இந்துக்களின் தெய்வம் என்ற போலிக் கருத்தை உற்பத்தி செய்து அதை சமூகம் முழுவது பரவச் செய்ய முடியும், அதைக் கொல்பவர்களை, உண்பவர்களை, விற்பவர்களை, வாங்குபவர்களை கொலை செய்ய பசுக் காவலர்களால் முடியும். இதெல்லாம் ஒரு நாடா ! உண்மையில் அவர்கள் பசுக் கறியை வைத்திருக்கக் கூடத் தேவையில்லை, அப்படி ஒரு வதந்தியையும் அவர்களே உண்டாக்குவார்கள், அவர்களை அடித்தே கொல்லவும் செய்வார்கள். அப்பேர்ப்பட்ட யோக்கியர்கள் இந்த நாட்டை அப்பேர்ப்பட்ட கொள்கையுடன் ஆள்கிறார்கள். கேவலம் ! என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மிகப்பெரும் அவநம்பிக்கையாக உணர்கிறேன் இந்த நாட்டைப் பற்றி !

ஒரு முஸ்லிமைக் கொல்ல இனிக் காரணம் எதுவும் பெரியதாக வேண்டியதில்லை. அவன் மாட்டுக்கறி வைத்திருந்தான் என்று சொன்னால் போதும். இன்னும் பத்தாயிரம் முஸ்லிம்கள் கோரமாகக் கொல்லப்பட்டாலும் இந்து சமூகம் எந்தக் குற்ற உணர்ச்சியும் கொள்ளப்போவதில்லை. இந்துக்களின் மௌனம் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகளுக்குக் கொடுக்கப்படும் ஆதரவே அன்றி வேறில்லை. அந்தளவுக்கு சமூகமே வக்கற்று தந்நலமேறி, அலட்சியமயமாக உள்ளது. இந்து பயங்கரவாதமோ இந்துக்கள் பெயராலேயே அனைத்து வன்முறைகளையும் முஸ்லிம்களின் மீது செலுத்திக் கொண்டு வருகிறது. நாமெல்லாம் 2017 ஆம் ஆண்டில் இதை மௌனசாட்சிகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மோடி துலுக்கனுக்கு பாடம் புகட்டினார் என்றுதானே பாஜகவை ஆதரிக்கும் மனநிலை பலருக்கு, அவர்களுக்கு மத்தியில் வாழும் நாம் என்ன செய்ய முடியும் ?

ஜுனைத்

ஜுனைத் பிணமாக
ஜுனைத்தின் இல்லத்தில்

நன்றி - http://www.newsjs.com/url.php?p=http://www.hindustantimes.com/delhi-news/how-could-they-hate-us-so-much-family-in-shock-after-16-year-old-muslim-boy-stabbed-to-death-on-train/story-TEzAfE9atfWv0EHaXJm6JJ.html
Download As PDF
Bookmark and Share

Post Comment

ஃபரூக் படுகொலை - முகமதிய மதவெறியின் கோரத்தாண்டவம்


திராவிடர் விடுதலை கழகத்தில் செயல்பட்ட இறை மறுப்பாளர் ஃபரூக் கொலை செய்யப்பட்டுள்ளார். மதக் கலவரம் குண்டு வெடிப்புக்குப் பெயர் போன கோவை தற்போது மதவெறிக் கொலைக்கும் பெயர் வாங்கியுள்ளது. இதன் மூலம் இஸ்லாமை எதிர்த்து இறைமறுப்புப் பரப்புரை செய்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பது தெளிவாகியுள்ளது

அவரது இறைமறுப்புக் கொள்கையைக் கேட்டு வெறுப்புற்ற அவரது நண்பனும் இன்னும் சிலரும் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்துள்ளனர். பொய் சொல்லி ஃபரூக்கை வரவைத்து வெட்டியும் குத்தியும் கொலைவெறியாட்டம் போட்டுள்ளனர். பிறப்பால் இஸ்லாமியரான அவரைக் கொலை செய்தவர்கள் இஸ்லாமியர்களே. இதிலொருவன் மீது வழிப்பறிக் கொள்ளைக்கான வழக்கும் இருக்கிறதாம். இருந்தும் அவனை மதவிலக்கம் செய்யாமல்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் இறைமறுப்பு பேசினால் ஒருவனை உயிர்விலக்கம் செய்வதற்கு அந்த அயோக்கியனுக்கும் யோக்கியதை இருந்திருக்கிறது. 


மார்ச் 15 வியாழன் அன்று தனது வாட்ஸப் குழுமமான கடவுள் இல்லை-இல் பதிவிட்டிருக்கிறார் ஃபரூக். தனது குழந்தையின் கையில் கடவுள் இல்லை என்று மூன்று முறை எழுதிய பதாகையை ஏந்திய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதைக்கண்டு வெறியான மதவெறியர்கள் அதற்கு அடுத்த நாள் கொலையை நிகழ்த்தியுள்ளனர். இதே ஒரு குழந்தை குல்லா போட்டுக் கொண்டோ பர்தாவைப் போட்டுக் கொண்டோ புகைப்படம் போட்டால் ஒரு இறைமறுப்பாளன் போய் நம்பிக்கையாளனை வெட்டத் துணிவானா ? மதி கெட்ட மதவெறி !

மதவெறியில் பித்தேறி வெறிகொண்ட 5 இஸ்லாமிய மதவெறி அடிப்படைவாதிகளால் கொடூரமான முறையில் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டார் ஃபரூக்.

                                             

தனது குழந்தைகளுடன் 

பிணமாக 


ஃபரூக் பிணமாக வெட்டுக்காயமும் குத்துக்காயங்களுடனும் - அளவற்ற அருளாளனின் வழிபாட்டுக்காரர்களின் அன்பு

                                          

இவரது சாவை விடவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய இரண்டு விடயங்கள்

1. இவரை இவரது நண்பன் ஒருவனே தனது வாகனத்தில் எரிநெய் (பெட்ரோல்) தீர்ந்து விட்டதாகக்கூறி அழைத்திருக்கிறான். அதை நம்பிச் சென்றவரைத்தான் வெட்டிக் கொன்றுள்ளனர் அந்த மதவெறிக் கொலைகாரர்கள். (ஃபரூக்கின் தந்தை ஹமீது அளித்த பேட்டியில் கூறினார்)

2. துக்கம் விசாரிக்க வந்த இஸ்லாமியப் பெண்கள் ஃபரூக்கின் மனைவியிடம் கேட்ட கேள்வி. ஃபரூக் நபிகளையே எதிர்த்து வந்துள்ளார். இறைத்தூதர் பற்றி நூல் வெளியிடலாம் என்று இருந்தாராம். இஸ்லாமியராக இருந்து கொண்டு இதையெல்லாம் செய்யலாமா ? 

(எழவு கேட்க வந்த வீட்டில் இவ்வளவு வக்கிரமாகப் பேச முடியுமா முடியும் மதவெறி தலைக்கேறி இருந்தால்.)

ஃபரூக்கின் படுகொலையைக் கண்டித்து கேரள யுக்திவாதிகள் ஆர்ப்பாட்டம்

முதலில் கொலை நடந்த செய்தி வெளியானதும் இதை முஸ்லிம்கள் செய்திருக்க மாட்டார்கள், RSS - காரர்களில் செயலாக இருக்கலாம் என்றே பெரும்பான்மையினர் கருதினர், குறிப்பாக திராவிடர் கழகத் தலைமை. ஆனால் கொலை நடந்த இடம் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பகுதி, மேலும் ஃபரூக்கிற்கு வேறு வகையில் எதிரிகள் இல்லை என்ற அனுமானத்தில் இது இஸ்லாமிய மதவெறியால் நிகழ்ந்திருக்கும் என்றும் பேசினர். பின்பு கொலை வழக்கில் இருவர் சரணடைந்த பின்னர்தான் இது அப்பட்டமான இஸ்லாமிய மதவெறியால் நிகழ்ந்த கொலை என்று உறுதியானது.

இஸ்லாமோஃபோபியா வேறு இஸ்லாமிய மதவாதம் வேறு

இஸ்லாமோஃபோபியா என்றால் என்ன ? இஸ்லாமியனை வெறுப்பது. அவன் இஸ்லாமியன் என்ற காரணத்திற்காக வெறுப்பது. அவன் மதவெறியன், மதத்திற்காக குண்டு வைப்பான், பயங்கரவாதம் செய்வான், மற்ற மதங்களை மதிக்க மாட்டான். தீவிரவாதம் என்றாலே அது முஸ்லிம்கள்தான். இதுமாதிரியான கருத்துக்களை ஒருவர் கொண்டிருந்தாலே அவர் இஸ்லாமோஃபோபியா கருத்துக்குப் பலியானவர் என்று பொருள்.


ஒரு சூழ்நிலையில் இஸ்லாமியன் செய்யும் செயலுக்கு அவர் மதத்தையோ சமூகம் மொத்தத்தையுமே குற்றம் சாட்டி விடும் மனப்பான்மையே இஸ்லாமோஃபோபியா. ஆனால் அதே செயலை மற்ற மதத்தவனோ, சமூகத்தவனோ செய்தால் அதை அவன் மதத்துடன் தொடர்புபடுத்தாமல் அவனைத் தனியான ஒரு குற்றவாளியாக சித்தரித்துக் கொள்வார்கள் இஸ்லாமோஃபோபியாவால் பாதிக்கப்பட்டவர்கள். உலகம் முழுவதிலும் இந்த மனநோய் ஊடகங்களால் பரப்பப்பட்டது. இன்றும் வேறு வகையில் பரப்பப்படுகிறது. இந்தியாவில் இந்தியன் முஜாகிதீன் என்ற இல்லாத இயக்கம் தொடர்ந்து பத்து வருடங்களாக செய்திகளில் அடிபடுகிறது. அதை ஒட்டி முஸ்லிம்கள் மீது மறைமுகமான உளவியல் போர் நடைபெறுகிறது. இதுவே இஸ்லாமோஃபோபியா தீவிரவாதி என்றாலே முஸ்லிம் என்ற மனநிலைக்கு ஏறக்குறையமுஸ்லிம் அல்லாதவர்கள் அனைவருமே ஆட்பட்டுள்ளனர். இது முற்றிலும் தவறானது.  

இஸ்லாமோஃபோபியா மனநிலையை எதிர்த்து, இஸ்லாமியருக்கு எதிரான ஃபாசிசத்தை, வெறுப்பு மனநிலையை எதிர்த்து ஜனநாயகத்தை நேசிப்பவர்கள் போராடுகிறார்கள் தங்களால் இயன்ற வழிகளில் இஸ்லாமியருக்கு ஆதரவளிக்கிறார்கள். ஏனென்றால் இந்தியாவில் இஸ்லாமியருக்கு எதிரான மனப்பான்மை அதிகமாக இருக்கிறது. இஸ்லாமியர்கள் இந்தியாவில் சிறுபான்மையாக இருக்கிறார்கள் இவர்கள் மீதான வன்மத்தை வளர்த்தே வெறுப்பை விதைத்தே ஒரு கட்சி இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களிலும் நடுவணரசிலும் தனது வெற்றியைப் பெற்றிருக்கிறது. அந்தக் கட்சியின் கொள்கையே இஸ்லாமிய வெறுப்பாக இருக்கிறது. வழிபாட்டுத்தலங்கள் இடிப்பு, அபகரிப்பு, சிறு பெரும் கலவரங்கள், தனிநபர் படுகொலை தொடங்கி இனப்படுகொலை வரை இஸ்லாமிய சமூகம் சீரழவுக்கு ஆளாக்கியுள்ளது. சிறுபான்மை இஸ்லாமியர்களால்தான் பெரும்பான்மை இந்துக்களுக்குப் பிரச்சனை என்ற ரீதியில் அது மக்களை மதவெறியூட்டி வருகிறது. இந்த நிலையில்தான் அனைத்து ஜனநாயக சக்திகளின் முதன்மை எதிரியாக அந்தக் கட்சி இருக்கிறது. நம்மைப் போன்ற மக்களாட்சிக்கு ஆதரவானவர்கள், பிற்போக்கு மதவாத ஆட்சிக்கு எதிரானவர்கள் அனைவரும் இது போன்ற சிறுபான்மையினர் மீதான வெறுப்பை விதைக்கும் கருத்துக்களையும், அரசியலையும், ஊடகங்களையும் எதிர்க்கின்றனர். கண்டிக்கின்றனர். சிறுபான்மையினரை அரவணைக்கின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இஸ்லாமியர்களுக்கு ஜனநாயக முற்போக்குவாதிகளின் முழு ஆதரவு இருக்கிறது. 

பொதுவாகவே ஜனநாயகவாதிகள் என்றாலே இறைமறுப்புச் சித்தாந்தவாதிகளே இருப்பர். தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட்டுகள் இல்லாமல் மிகப்பெரும் இரு கட்சிகள், சிறு சிறு அமைப்புகள் யாவும் இறைமறுப்பு இயக்கத்தின்(திராவிடர் கழகம்) வழிவந்தவர்களாக இருக்கின்றனர். இந்த ஜனநாயகவாதிகள் யாரும் இஸ்லாமியரின் மதவாதத்தை எதிர்ப்பவர்கள் இல்லை. ஒரு படி மேலே போய் இஸ்லாமியப் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்கிறவர்களாகத்தான் இருக்கின்றனர். ஆனால் இந்து மதத்தின் பண்டிகைகளை ஏற்காமல் வாழ்த்து சொல்லாமல் எதிர்த்துப் பேசுகின்றவராக இருக்கின்றனர். இந்த வகையில் இந்த வகையிலும் பெரும்பான்மை சமூக்த்தின் வெறுப்புக்கும் ஆளாகி நிற்கின்றனர் தமிழ்நாட்டு முற்போக்குவாதிகள். 

இஸ்லாமியரைக் குறிப்பிடும்போதே இஸ்லாமியத் தோழர்கள் என்றுதான் குறிப்பிடுவார்கள். அதே நேரம் வேற்று சித்தாந்தத்தைக் கடைப்பிடிக்கும் சக முற்போக்குவாதியக் கூட அப்படி விளிப்பதில் தயக்கம் காட்டுவார்கள். சில நேரம் சகோதரர்கள் என்றும் அழைப்பார்கள். அவ்வப்போது இவர்களின் பேசுவதும் முஸ்லிம்கள் கூடிய பொதுக்கூட்டத்தில்தான். பிரியாணி விருந்திலும் நோன்புக் கஞ்சி விருந்திலும் கலந்து கொண்டு பெரும்பான்மையினரின் கிண்டலுக்கும் எதிர்ப்புக்கும் ஆளாவார்கள். 

இப்படி இருக்கிறது முற்போக்குவாதிகள் முஸ்லிம்கள் இடையேயான உறவு. இந்த முற்போக்குவாதிகளில் அதிகமானோர் இஸ்லாமிய மதவாதத்தை விமர்சனம் செய்ததில்லை. காரணம் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களை விமர்சனம் செய்தால் எதிரிக்கு வேலை எளிதாகிவிடும். அதாவது இஸ்லாமிய மதவாத்தை விமர்சனம் செய்தால் அது இஸ்லாமோஃபோபியா ஆகிவிடும். எனவே பெரும்பான்மை இந்து மதவாதத்தை எதிர்ப்பதே ஜனநாயகத்தைக் காக்கும் வழி. இதுதான் தமிழ்நாட்டு முற்போக்குவாதிகளின் அடையாளம். இந்த அளவீடுகளின் அடிப்படையில்தான் பெரியாரிய இயக்கங்கள் இயங்குகின்றனர். இந்த வகை இயக்கமான திராவிட விடுதலை கழக்த்தைச் சேர்ந்தவர்தான் படுகொலை செய்யப்பட்ட ஃபரூக். இஸ்லாமிய ஆதரவாளர்களுக்கு இஸ்லாமிய மதவாதத்தின் நன்றி உணர்வு !

இந்த இஸ்லாமோஃபோபியாவை தனக்கு லாவகமாக பயன்படுத்திக் கொண்டவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள். இஸ்லாமிய மதவாதிகள். மதப்பரப்புரை செய்பவர்கள். இந்த அடிப்படைவாதம், மதவாதம், மத அடிப்படைவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்ற சொற்கள் வரும்போதெல்லாம் முஸ்லிம்கள் அதைக் குறிப்பிடுகிறவர்கள் சொல்லவரும் பொருளுக்கு மாற்றாக ஒரு பொருளைச் சொல்கின்றனர். மத அடிப்படை வாதம் என்றால் நாங்கள் இஸ்லாமின்படி நடக்கிறோம், இஸ்லாம் காட்டிய நேர் வழியில் செல்கிறோம், ஒரு முஸ்லிம் தவறு செய்தால் அது இஸ்லாமின் தவறாகாது, அது மாதிரி இஸ்லாம் சொல்லவில்லை இப்படித்தான் எங்களை நடக்கச் சொல்கிறது இஸ்லாம். நீங்கள் இஸ்லாமை அவதூறு செய்கிறீர்கள். ஒரு முஸ்லிம் தவறு செய்தால் அது இஸ்லாமாகாது, இந்தத் தவறு செய்தவர் இஸ்லாமை சரியாக விளங்க வில்லை. அந்தக் குற்றவாளி முஸ்லிம் பெயர்தாங்கி. இஸ்லாமியமதவாதமே இல்லை மார்க்கம்தான் உள்ளது... இப்படிச் சொல்கிறார்கள். இந்த பதில்கள் அனைத்தும் இஸ்லாமோஃபோபியா மனநோயாளிகளுக்கானவை. இஸ்லாமோஃபோபியாவை எதிர்ப்பவர்களிடம் இந்த பதில்கள் சொல்லத்தேவையில்லை ஏனென்றால் நீங்கள் சொல்கின்றவற்றை ஏற்கெனவே அறிந்திருக்கிறார்கள். ஆனால் மத அடிப்படைவாதம் என்று சொன்னால் எல்லா முஸ்லிம்களையும் குறிக்கிறதே என்று அங்கலாய்க்கிறார்கள்.

முற்போக்குவாதிகள் விமர்சனம் செய்யும் இஸ்லாமிய அடிப்படைவாதம் அல்லது மதவெறி என்ற கருத்தாக்கத்தை முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவில்லை. இஸ்லாமியர் சொல்லும் பதில் அவர்களுக்குப்புரியவில்லை. எனவேதான் இந்தத் தேவையில்லாத சச்சரவு.

மத அடிப்படைவாதம் என்பதை இஸ்லாமிய மதவாதிகள் கற்பித்திருக்கும் பொருளில் எடுத்துக்கொள்வதால்தான் இந்த கருத்துவேறுபாடு வருகிறது. தலைவன் என்ற சொல் தற்போது என்ன பொருள் தருகிறது ? ஒரு இயக்கத்தின் தலைவர், மதத் தலைவர், கட்சியின் தலைவர், அணியின் தலைவர் என்றெல்லாம் இருக்கின்றது இல்லையா ? அதே தலைவன் என்ற பொருள் சங்க இலக்கியத்தில் என்ன பொருள் தருகிறது. கணவன் அல்லது காதலன் இல்லையா ? இது இரண்டையும் வெவ்வேறு இடங்களில் வேறு பொருளைத் தருகின்றதைப் போலத்தான் மத அடிப்படைவாதம் என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.

மத அடிப்படைவாதி என்றால் மதத்தின் அடிப்படைகளைப் புரிந்து அதன்படி நடப்பவன் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். ஆனால் என்னைப் போன்றவர்கள் எப்படிப் பயன்படுத்துகிறோம் ? மத உணர்வை முன்னிறுத்தி செயலாற்றுகிறவன். மதத்தை முன்னிறுத்தி செயல் புரிகின்றவர். மதத்தைச் சார்ந்த மக்கள், மதநலன் ஆகியவற்றைக் கொண்டு அரசியல் செய்கிறவர் என்றே புரிந்து கொள்ளவேண்டும். இந்து மதவாதிகள் பாபர் மசூதியை இடித்தனர் என்பதில் இந்து மதத்தில் பாபர் மசூதியை இடிக்கவேண்டும் என்று புனித வாசகத்தைப் புரிந்து கொண்டுதான் இடித்தார்கள் என்றாகுமா ? இந்து மதவெறியர்கள் குஜராத் படுகொலையை நடத்தினர் என்றால் இந்துக்கள் அனைவரும் மதவெறியர்கள் என்றாகுமா ? இந்துமத அடிப்படைவாதிகள் முஸ்லிம்களை வெறுத்து ஒதுக்குகின்றனர் என்றால் அது எல்லா இந்துக்களையும் குறிக்குமா ? இவையெல்லாம் கிடக்கின்றன விடுங்கள்.


இஸ்லாமியர்கள் பொதுக்கூட்டங்களில் இஸ்லாமியர் பேசும்போது என்னென்ன சொற்களைப் பயன்படுத்துகின்றனர். இந்து பயங்கரவாதிகள், காவி பயங்கரவாதிகள், இந்துத்துவவாதிகள் இன்னும் பிற இவையெல்லாம் எல்லா இந்துக்களையும் குறிக்கின்றனவா ? இல்லையென்றால் இஸ்லாமிய அடிப்படைவாதம், மதவெறி என்பது எல்லா முஸ்லிம்களையும் குறிக்காது.

பாபர் மசூதியை இடிக்க வேண்டும் என்று எந்த இந்து வேதத்திலும் சொல்லப்படவில்லை. குஜராத் இனப்படுகொலை நடத்தப்பட வேண்டும் என்று எந்த புனித நூல்களிலும் இல்லை. மாட்டைக் கொன்றவனைக் கொல்ல வேண்டும் என்று எந்த நூலும் குறிப்பிட வில்லை. அதற்காக மேற்ச்சொன்ன நிகழ்வுகளெல்லாம் இந்து மதவெறி இல்லை, இந்து மதவெறியால் நிகழவில்லை. இந்து அடிப்படைவாதத்தால் நிகழவில்லை என்று சொன்னால் ஒத்துக் கொள்வார்களா இஸ்லாமியர்கள் ?. அதைச் செய்தவர்களெல்லாம் அவர்கள் இஸ்லாமியர்கள் நாம் இந்துக்கள் என்ற உணர்விலிருந்துதானே செய்தார்கள். அப்படித்தானே ஃபரூக் ஒரு இறை மறுப்பாளன் நான் நம்பிக்கையாளன் என்ற நிலையிலிருந்துதானே கொலை செய்தார்கள். மத நூலில் குறிப்பிட்டிருந்தால்தான் அது மத அடிப்படை வாதம் என்று சொன்னால் நீங்கள் உலகின் குற்றத்தில் பாதிசெயல்கள் மாற்று மத "பெயர் தாங்கிகளால்" செய்யப்பட்டவை என்றுதான் சொல்ல வேண்டி வரும்

ப்ரோட்டோகால்ஸ் - என்ற யூத மேலாதிக்கத் திட்டத்தை அறிவிக்கும் நூல் நூறாண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. அதை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் ஒரு முஸ்லிம் அவர் பெயர் ஆருர் சலீம். அந்நூலின் தலைப்பு "யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை" இங்கே யூத பயங்கரவாதிகள் என்பது அனைத்து யூதர்களையும் குறிப்பதில்லை என்றும் அவரே அந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார். இதிலிருந்து என்ன புரிகிறது.

 மேலும்

முஸ்லிம்கள் கூறுகின்ற இஸ்லாமியர்கள் மீதான வன்முறையைக் கண்டிக்கும்போது,

ரோகிங்கியா முஸ்லிம்களை விரட்டும் பர்மாவின் பௌத்த வெறியர்கள்
ஈழ முஸ்லிம்களைத் தாக்கும் புத்த தேரவாதிகள்
இந்திய முஸ்லிம்களைத் தாக்கும் காவி பயங்கரவாதிகள்
ஈராக்கைத்தாக்கும், ஆப்கானைத்தாக்கும் அமெரிக்க மேற்கத்திய பயங்கரவாதிகள்
பாலஸ்தீனத்தைத் தாக்கும் யூதபயங்கரவாத இஸ்ரேல்
வீகர் அல்லது உய்குர் முஸ்லிம்களைத் தாக்கும் ஹாங் சீனப்பேரினவாதம்

இவையெல்லாம் அந்தக் குறிப்பிட்ட பிரிவினரைச் சார்ந்த எல்லா மக்களையும் குறிக்காதுதானே. அது போலத்தான் இந்த இஸ்லாமியமதவாதி, அடிப்படைவாதி போன்ற சொற்களும் கையாளப்படுகின்றன. அந்த வகையில் பார்த்தால் முற்றும் அறிந்த ஒரு மார்க்க அறிஞராகட்டும், புதிதாக இஸ்லாமைத் தழுவிய ஒருவராகட்டும் தான் ஒரு இஸ்லாமியன் என்ற "மத உணர்விலிருந்து" செய்யும் செயல் இஸ்லாமிய அடிப்படைவாதமே. இறைமறுப்பாளனான ஃபரூக்கைக் கொன்றதன் காரணம், கொலைகாரர்களின் தான் ஒரு இஸ்லாமியன் என்ற உணர்விலிருந்தே வந்தது. அதற்காக இஸ்லாம் கொல்லச் சொல்கிறது என்று பொருள் இல்லை. ஃபரூக் இஸ்லாமின் எதிரி நமது எதிரி, தனது நம்பிக்கைக்கு எதிரி என்றெல்லாம் எண்ணித்தான் அந்தக் கொலைகாரர்கள் அவரைக் கொன்றிருக்கிறார்கள்.


 அதற்குக் காரணம் மதவெறிதான். அவர்கள் மதவெறியர்கள்தான். மதத்திற்காகச் செய்ததால் இது மத அடிப்படைவாதக் கொலைதான்.  மத அடிப்படைவாதம் தவறுதான். இதை வைத்து மொத்த முஸ்லிம் சமூகத்தையும் அவமதிப்பதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல, இது மொத்த சமூகத்தைக் குறிக்கிறது என்று திசைதிருப்புவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

சுருக்கமாகச் சொன்னால் ஒரு தனி முஸ்லிம், தனிப்பட்ட காரணங்களுக்காக செய்த தவறை வைத்து எல்லா இஸ்லாமியர்களைக் குறிக்கும்படி செயல்படுவது பேசுவது அரசியல் செய்வது இஸ்லாமோஃபோபியா மனநிலை என்றால், மதவெறியர்கள் மத அடிப்படையில் செய்த தவறை விமர்சனம் செய்யும்போது அது ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் குறிக்கிறது என்று மொத்த முஸ்லிம்களையும் இழுத்து வருவது திசை திருப்புவது இஸ்லாமிய மதவாதம். எனவே வெறும் நம்பிக்கைக்காக இஸ்லாமியர்களாக வாழ்கிறவர்கள் நாங்களும் மத அடிப்படைவாதிகளே என்று நம்பவேண்டாம், நீங்களாக வந்து பெயரைக் கெடுத்துக்கொள்ளவேண்டாம். இதைப் புரிந்துகொள்ளாவிட்டால் நட்டம் உங்களுக்குத்தான்.

இஸ்லாமிய மதவாதிகள் நாத்திகர்களை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் ? ஏனென்றால் இறைமறுப்பாளர்கள் பெரும்பான்மையானவர்கள் இந்து மதத்திலிருந்து வந்தவர்கள். இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பவர்கள். இஸ்லாமியர்களின் துணையாக இருப்பவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்லாமிய மதத்தை விமர்சனமே செய்ய மாட்டார்கள். இஸ்லாமிய மதவாதிகளின் கருத்துப்படி ஒரு மாற்று மத இறைமறுப்பாளன் என்பவன் இஸ்லாமிற்கு ஒரு படி முன்னோக்கி இருக்கிறான். அதாவது அவன் இஸ்லாத்தை நோக்கி இருக்கிறான். அவன் தன்னுடைய சொந்த மதத்தை தூக்கியெறிந்து விட்டான், அந்த மதம் சொல்லும் கடவுளை கருத்துக்களை உதறி விட்டான் என்றால் அவனை இஸ்லாமியனாக மாறும் வாய்ப்புள்ளது. எனவே பிறமத நாத்திகர்கள் மீது அவர்கள் அச்சமோ வெறுப்போ கொள்வதில்லை. பெரியார்தாசனைப் போல பல இறைமறுப்பாளர்களும் இஸ்லாமில் இணையலாம் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் இஸ்லாம் மதத்திலிருந்து வெளியேறியவனை இஸ்லாமை விமர்சிப்பவனை அச்சத்துடனும் ஆத்திரத்துடனும் வெறுப்புடனுமே எதிர்கொள்கிறார்கள். ஏனென்றால் அவன் இஸ்லாமை அறிந்து விலகியவனிடம் இஸ்லாமிய மதவாதிகள் பதில் சொல்லமுடியாத கேள்விகள் இருக்கின்றன. இறைவனையே அவன் கேள்விக்குள்ளாக்குகிறான். அவனிடம் இவர்களின் மதம் தோற்று விட்டது. இவர்களின் நம்பிக்கை தோற்று விட்டது. எனவே இவர்கள் தோற்று விட்டார்கள். எனவே அந்த இறைமறுப்பாளனை வெறுக்கிறார்கள். சாதாரண நம்பிக்கையாளர்கள் அவனைச் சகித்துக் கொண்டு தங்களது நம்பிக்கைகளுடன் தொடர்கிறார்கள். ஆனால் மத அடிப்படைவாதிகள், மதவெறியர்கள் அவனைக் கொல்கிறார்கள். ஏனென்றால் அவர்களால் கருத்தால் வெல்ல முடியாது. அந்தத் தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. அப்படிக் கொலை செய்து சமூகத்திடம் ஒரு அச்சம் உண்டாக்கினால்தான் மற்றவர்கள் அவ்வழியில் செல்லாமல் தடுக்க முடியும்.

இது போன்ற மதவெறிக் கொலைகளைத் தடுக்க ஜனநாயக நாடுகள்தான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இருப்பதிலேயே சிறுபான்மையினரான இறைமறுப்பாளர்கள் தங்கள் கருத்துக்காகவும், கொள்கைக்காகவும் தனிமனிதனாலோ மதவெறி இயக்கத்தினாலோ படுகொலை செய்யப்பட்டால் கொலைவெறி கொண்ட கொடுங்கோலர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை விதிக்கப்படவேண்டும். 

Download As PDF
Bookmark and Share

Post Comment

இப்படியும் இருக் 'கலாம்' அப்படியும் இருக் 'கலாம்'


அப்துல் கலாம் கொலை தண்டனைக்கு எதிரானவர். அது கிடக்கட்டும் நான் சொல்ல வந்தது வேறு.  அப்துல் கலாம் விரும்பிகள் சைவ உணவுக்கு மாறுவார்களா ? இல்லை நான் இதையும் சொல்ல வரவில்லை.

எங்கள் ஊரில் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு பதாகை வைத்திருந்தார்கள் பேராயக்(Congress) கட்சிக்காரர்கள். அதில் இப்படி எழுதியிருந்தார்கள். ராஜீவ் காந்திக்குப் பிறகு இந்தியாவில் வல்லரசுக் கனவை விதைத்துச் சென்றவர் கலாம். அடக் கண்றாவியே என்று தோன்றியது. அடுத்தவன் சாவுக்கு அஞ்சலி செலுத்தும் போது கூட தன் தலைவரை முன்னிலைப்படுத்தும் ஈன ஜென்மங்களாக இருப்பதால் தான் இவர்களின் கட்சியும் இந்த இலட்சணத்தில் இருக்கிறது.

தொலைக்காட்சியில் பார்த்தேன். இறுதி அஞ்சலி நடந்து கொண்டிருந்தது. ஒரு கூட்டம் பாரத் மாதாகி ஜே என்று ஊளையிட்டுக் கொண்டிருந்தது. அப்போது எனக்குத் தோன்றியது. இந்தக்  கூட்டம்தானே இவரை அதிகாரமில்லாத பொம்மைப் பதவியான குடியரசுத் தலைவராக நிறுத்தியது. இவ்வளவு பெரிய அறிவாளியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியதற்குப் பதில் ஏன் பிரதமர் வேட்பாளராகவோ அல்லது அதிகாரம் மிகுந்த பதவிக்கோ பரிந்துரைத்திருக்கக் கூடாது ?இல்லை இவரை விடவும் அறிவாளிகள் அதிகமாக அந்தக் கட்சியில் இருக்கிறார்களா ? யாருக்காவது பதில் தெரியுமா இந்த அறிவிலியின் கேள்விக்குப் பதில் ? 

மூன்று வருடங்களுக்கு முன்னர் கலாமுடன் இருக்கும் மோடியின் புகைப்படத்திலிருந்துதான் மோடியை பிரதமர் வேட்பாளர் விளம்பரப்படலம் ஆரம்பமாகியது. 2 வருடங்களாக முக்கி முக்கி ஊடகங்களின் தொடர்ந்த பரப்புரைகளின் காரணமாகத்தான் ஃபோட்டோஷாப் புகழ் பிரதமராகவும் முடிந்தது. அதற்குப் பதிலாக அப்துல் கலாமையே நிறுத்த வைத்திருந்தால் இன்னும் எளிமையாக வென்றிருக்கலாமே பாஜக ? அவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தாதற்கு வேறு உன்னதமான காரணம் ஏதேனும் இருக்குமா ?

பாபர் மஸ்ஜீத் இடிப்பு, மும்பை கலவரம், தொடர்ந்த வட இந்தியக் கலவரங்கள் குறித்து அப்துல் கலாம் வாய் திறந்திருந்தால் பாரத மாதாவின் காவல் காவிகள் இவரை இப்படிப் புகழ்வார்களா ?

இவர் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவது அரசல் புரசலாக வரும் முன்னரே இவர் ஹிந்தி கற்றுக் கொள்ளுமாறு வட இந்தியாவின் ஹிந்தி வெறியர்களால் நிர்பந்தப்படுத்தப்பட்டாராம். இப்படி இருக்கும் போது ஒரு முஸ்லிம்+தமிழன் பிரதமராவது என்பது சாத்தியமா என்று புரியவில்லை. 

அதே நேரம் இந்தி வெறியர்களுக்கும், இந்தி கத்துக்காமல் விட்டேன் என்று புலம்பும் பத்தாம் பசலிகளுக்கும் செருப்பாலடித்த மாதிரி ஹிந்தி தெரியாமலேயே விஞ்ஞானியும் ஆகி, இந்தியர்களின் அன்புக்கும் பாத்திரமாகி விட்டார். அதை நினைத்துப் பெருமையாக இருக்கிறது.

சரி. யார் யார்தான் இவருக்கு அஞ்சலி செலுத்துவது என்றில்லாமல், ஜாதி வெறியர்கள், மதவெறியர்கள் எல்லாரும் போட்டி போட்டுக் கொண்டு உருகி ஒழுகுவதைப் பார்த்தால் எரிச்சலோ எரிச்சலாக இருக்கிறது.

ஆனால் பெரும்பான்மை இந்து மதவெறி பிடித்தவர்களுக்கு ஒரு வயித்தெரிச்சல் வராமல் இருக்காது. அதென்ன ? ஒரு இந்துவுக்கு இப்படி இந்தியா முழுதும் அனைத்து மக்களும் வணக்கம் செலுத்த முடியாது. முஸ்லிமான அப்துல் கலாமுக்குத்தான் அது நடந்தது. வட இந்திய ஹிந்தி வெறியர்கள் இன்னும் பாவம். ஒரு மட்ராஸிக்கு இவ்வளவு மரியாதையா என்று புழுங்குவார்கள். இதை நினைத்து எனக்கு ரொம்பவும் இனிமையாக இருக்கிறது. :)

இது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை. அத்தனை அயோக்கியர்களும் தேசபக்தி பொங்க இவருக்கு அஞ்சலி அட்டென்டன்ஸ் போடுகிறார்கள். இன்னும் இரண்டு நாட்கள் கழித்து இவர்களின் வழக்கமான வேலைகளுக்குத் திரும்புவார்கள். இந்தியா முழுவதும் இந்த இரண்டு நாட்கள் தேசபக்தி கரை புரண்டு ஓடுகிறது.

ஒரு முஸ்லிமை நாடே ஏற்றிப் போற்றுகிறது. இன்னொரு முஸ்லிமை நாடே தூற்றுகிறது. இதற்கு மேலும் நான் ஒரு டெம்ப்ளேட் செக்குலர் பதிவை எழுதுவதாக இல்லை. ஏனென்றால் அதை எழுதி என்னவாகப் போகிறது. அது இந்துக்களுக்கு எதிரானது, இந்தியாவுக்கு எதிரானது, தேசபக்திக்கு எதிரானது என்றெல்லாம் தோன்றும். கலாம் ஆதரவாளர்களை விமர்சித்து ஒரு கவிதையும் எழுதினேன். அதை வெளியிடாமல் சேமித்து வைத்து விட்டேன். அதைப் படித்தால் புரிந்து கொள்வதற்குப் பதில் புண்பட்டுக் கொள்வார்கள். என் மீதும் வெறுப்பே மிஞ்சும். எனவே அதை விட்டு வேறொரு பதிவை எழுத வேண்டிய நிலை.

யாகூப் மேமன்
அஜ்மல் கஸாப்
அஃப்சல் குரு

இப்பெயர்களைக் கேட்டவுடன் அனைவருக்கு ஏற்படும் உணர்ச்சிகள் என்ன ?

தீவிரவாதி. பயங்கரவாதி. தேசவிரோதிகள். பலர் கொல்லப்படக் காரணமாக இருந்தவர்கள். இன்னும் இத்யாதி உணர்ச்சிகள். கூடவே முஸ்லிம் என்பது வரும் என்று சொல்லத் தேவையில்லை. 

லஷ்கர்-இ-தொய்பா
இந்தியன் முஜாஹிதீன்
ஜிஹாதி

இப்போது என்ன நினைவுக்கு வந்தது. சரி அந்த உணர்ச்சியைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்

பாபு பஜ்ரங்கி
அஸீமானந்தா
மாயா கோட்னானி

இப்போது என்ன உணர்ச்சி வந்திருக்கும். யாரு இவங்கெல்லாம் என்றா ? சரி. 

ஆர்எஸ்எஸ்
பஜ்ரங் தள்
சிவசேனா

இப்போது என்ன நினைவுக்கு வருகிறது. என்னது மறந்து போச்சா ? சரி. இதற்கு மேல் நான் என்ன சொல்வது. இவர்கள் இரண்டு தரப்பு தனிநபர்களையும், இயக்கங்களையும் சமமாக யாரும் வெறுக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அதுதான் பிரச்சனையே. 

படம் - நன்றி ஃபேஸ்புக்

தேசபக்திக்கு இன்னொரு காரணமாக, யாகூப் மேமனின் தூக்கு தண்டனையும் வலு சேர்த்திருக்கிறது. ஒரு குற்றவாளியைத் தண்டிப்பது, தூக்கில் போடுவது, அல்லது சுட்டுக் கொல்வது இவற்றை வெறித்தனமாக ஆதரிப்பது தேசபக்தியாகிவிடுகிறது. இதில் என்ன கூத்து என்றால் தூக்கிலிடப்பட்டவர்கள் தீவிரவாதிகள் - இவர்களால் சில நூறு பேர்கள் கொடூரமாக இறந்தார்கள் (என்று சொல்கிறார்கள்). ஆனால் இவர்கள் தூக்கிலிடப்படும் போது இருக்கும் ஆட்சியாளர்கள் இவர்களை விடப் பன்மடங்கு கொடியவர்களாக, அதிக உயிர்களைப் பலியெடுத்த இனப்படுகொலையாளர்களாகவும் இருக்கின்றனர். ஆட்சியாளர்களாக இல்லாமல் வெறும் கட்சிகளையும் இயக்கங்களையும் நடத்தும் தலைவர்களும் சிறைக்குச் செல்லாமல் தங்களின் வன்முறை அரசியலைத் தொடர்ந்து கொண்டும் இருக்கின்றனர். 

இந்த இனப்படுகொலைத் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டாலோ, அல்லது ஆயுள் தண்டனை கிடைத்தாலோ இப்போது வெறி கொண்டு ஆதரிப்பவர்கள் அப்போதும் ஆனந்தக் கூத்தாடுவார்களா ? இல்லை எந்த சலனமும் இல்லாமல் ஒதுங்கிக் கொள்வார்கள். எனென்றால் அவர்களுக்கு இருப்பது அறவுணர்ச்சியே அன்று. அது வெறும் மதவெறியால் விளைந்த வெறுப்பே ஆகும். அந்த இனப்படுகொலைத் தலைவர்கள் நெஞ்சு வலி வந்தோ வயித்து வலி வந்தோ இயற்கையாகத்தான் செத்துப் போவார்கள். மகிந்தவைப் போல கோயிலுக்குச் செல்லலாம், சாமி கும்பிடலாம். அதிபரும் ஆகலாம், பிரதமரும் ஆகலாம். கைது கூட ஆகத் தேவையில்லை. நான் எப்போதும் இந்தப் போலிக் கொண்டாட்டத்தில் இணைந்து கொள்வதே இல்லை. தனித்தீவாக நின்று விடுவதுதான் பாவியாகாமல்  இருக்க ஒரே வழி. சில நேரம் போலி எழவுகளுக்கும் போகாமல் இருப்பதே சிறந்தது போலும். 



Download As PDF
Bookmark and Share

Post Comment

ஃபேஸ்புக்கில் பகிரப்படும் போலியான புகைப்படங்கள்


ஃபேஸ்புக்கில் தமிழ் உணர்வுக் குழுக்களும், இஸ்லாமியக் குழுக்களும் அறிந்தோ அறியாமலோ சில புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றன. அவை போலியானவை என்பதைச் சொல்லவே இதை எழுதுகிறேன். அது ஒரிரு வருடங்களுக்கு முன்பே தெரிந்ததுதான் என்றாலும் அது இன்னும் புதிதான புகைப்படம் போல பல நூறு பேர்களால் பகிரப்படுகிறது

ஒரிரு புகைப்படம் ஈழ ஆதரவு குழுக்கள் மூலம் தமிழர்களிடையே பரப்பப் படுகிறது இதில் பல பிணங்கள் எரிந்து கரிக்கட்டையாகக் கிடக்கின்றன. இது ஈழப்போரில் நடந்த இனஅழிப்புப் போரின் தடயமல்ல. காங்கோவில் நடைபெற்ற ஒரு எரிவாயு வாகன விபத்தில் இறந்தவர்களுடையது இந்தப் புகைப்படத்தில் நின்று கொண்டிருப்பவர்களை உற்று நோக்கினால் அவர்கள் ஆப்ரிக்கர்கள் என்று புரியும்.

வெளிநாட்டுக் கிறித்தவ அமைப்புகள் சில முஸ்லிம் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட கிறித்தவர்கள் என்றும் தகவலைப் பரப்பி வந்திருக்கின்றனர்.



இன்னொரு புகைப்படம் இறந்து கிடக்கும் ஒரு பெண்ணின் மார்பகத்திலிருந்து பாலருந்தும் குழந்தை. இதுவும் ஈழத்திலிருந்து எடுக்கப்பட்டதில்லை என்பது அந்தப் பெண்ணின் மங்கோலிய முகமே காட்டி விடுகிறது. இது நேபாளத்தைச் சேர்ந்த ஒரு திரைப்படத்தின் புகைப்படம்.

இந்தப் புகைப்படங்களைப் பகிர்பவர்கள் புகைப்படத்தின் மீதோ அல்லது அதற்கு மேலே ஏதாவது உணர்ச்சியூட்டும் கவிதைகளையோ அல்லது கருத்துக்களையோ எழுதி பகிர பார்ப்பவரும் உணர்ச்சி வயப்பட்டு உண்மையினை அறியாமலேயே பரப்பி விடுகின்றனர். இது போன்ற போலிகளை நம்பாதீர்கள்.

இந்தப் புகைப்படம்  பர்மா (அ) மியான்மர் புத்த பிக்குகளால் கொல்லப்பட்ட முஸ்லிம்கள் பிணங்கள் என்று பகிரப்படுகிறது. ஆனால் இது உண்மையில் 2010 இல் சைனாவில் நடந்த புவி அதிர்ச்சியின் மாண்டவர்களில் உடல்களை திபெத்திய புத்தத் துறவிகள் அடக்கம் செய்யும் போது எடுக்கப்பட்டது. இது போன்று முழுக்கை சட்டை அணிந்திருப்பவர்கள் திபெத்தியர்களே. பர்மியத் துறவிகள் இலங்கைத் துறவிகளைப் போல துணியை உடல் முழுக்கச் சுற்றி அணிந்திருப்பார்கள். .மேலும் பர்மிய முஸ்லிம்கள் வெள்ளை நிறத்தவர்களும் அல்ல.


இந்தப் புகைப்படம், 2006 இல் ஈழத்தில் சிங்கள ராணுவம் நடத்திய படுகொலைகளில் ஒன்று. இது தமிழ்நெட்டில் வெளியானது. இது பர்மிய முஸ்லிம்கள் படுகொலை என்று பரப்பப்படுகிறது. அந்தப் புகைப்படத்தின் மேல் வலது மூலையில் பாருங்கள். Like My Page  "Love Islam" - என்று தனது குழுவை இஸ்லாமியரிடம் ஃபேஸ்புக்கில்  பரப்புவதற்கு இஸ்லாமிய உணர்வை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர். இது ஈழத்து பிணத்தை விற்கும் நக்கீரனுக்கு ஒப்பானது.




இது போன்ற தவறான தகவல்களைப் பரப்புகிறவர்களின் நோக்கம் இறந்தவர்களையும் போராடுகிறவர்களையும் கேவலப்படுத்துவதாகும். தற்போது போராடி வரும் மாணவர்கள் கையில் வைத்திருந்த பதாகைகளில் சில படங்களை வைத்து வட இந்திய ஊடகங்களும், இலஙகை அரசின் ஊடகங்களும் மாணவர் போராட்டத்தின் நேர்மையையே கேள்விக் குறியாக்கி விட்டன. மாணவர்கள் போராட்டத்தின் போது வைத்திருந்த பதாகைகளில் இறந்த மக்களின் புகைப்படங்களை அச்சடிக்க்கப்பட்டிருந்தன. அதில் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட சிங்கள மக்களின் உடல்களும் இடம் பெற்றிருந்திருக்கின்றன. புலிகளால் கொல்லப்பட்ட சிங்கள மக்களை, புலி ஆதர்வாளர்கள் தவ்றாக சித்தரிக்கின்றனர் என்று கிழித்து விட்டார்கள்.இது மாணவர்களின் போராட்டத்தை எந்தளவுக்கு கேள்விக்குட்படுத்தும் என்பது புரிகிறதா ? உண்மையிலேயே இந்தப் போலிகளது நோக்கம் படுகொலைகளை விற்று உணர்ச்சியைத் தூண்டி வெறுப்பை வளர்ப்பதன்றி வேறில்லை.
 
Download As PDF
Bookmark and Share

Post Comment

கலவரம் பயங்கரவாதம் மற்றும் தூக்கு தண்டனை !!!


80 மேற்பட்டோரைக் கொலை செய்த மெர்விக்கிற்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்ற செய்தியுடன் தொடங்குகிறேன். அஜ்மல் கசாப்பிற்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்ப்பதா வேண்டாமா எனக் கேட்டால் என்னிடம் பதில் சொல்லத் துணிவில்லை. பொதுவில் நான் கொலைத் தண்டனையை எதிர்க்கிறேன். ஏனென்றால் ஏற்கெனவே சொல்லிச் சொல்லி அலுத்துபோன அதே காரணங்களுக்காகத்தான். ராஜீவ் கொலைவழக்கில் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களின் போது பொது முழக்காமாக இருந்தது மூவரை விடுவிக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், தூக்கு தண்டனையை முற்றிலும் விலக்க வேண்டும் என்பதே. இந்தியா இன்னும் குடிநாயகமாக மாற வேண்டுமேயன்றி, இந்தியாவை விட ஜனநாயகத் தன்மை குறைந்த பாகிஸ்தான், ஈரான் அல்லது இஸ்லாமிய நாடுகள், சீனா போன்று மாறுவதை நான் விரும்ப வில்லை. குறைந்த பட்ச உதாரணமாக நான் காட்டுவது சில ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக ஸ்காண்டிநேவியன் நாடுகள்.

தற்போது கசாப் தூக்கு தண்டனையை 99% பேர் ஆதரிக்கிறார்கள். 0.5% பேர்கள் எதிர்க்கிறார்கள். மீதி 0.5% பேர்கள் மௌனம் காக்கிறார்கள். நான் மூன்றாவது வகை. தூக்கு தண்டனை சரியா என்பது குறித்துப் பல விவாதங்கள் நடந்தாலும் கடைசியில் வேண்டாம் என்ற கட்சியின் பக்கமே சாயத் தோன்றுகிறது. ஏனெனில் கசாப்பிற்காக நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், கசாப்பை விட கொடியவர்களையெல்லாம் சுதந்திரமாக உலவ விட்டிருக்கிறது. அவர்களே கசாப்பை தூக்கில் போடச் சொல்லும் கொடிய நகைச்சுவையையெல்லாம் கேட்க வேண்டியிருக்கிறது. கசாப்பை தூக்கில் போட வேண்டும் என்ற வேட்கை அல்லது அறச்சீற்றம் உண்மையாக இருக்கலாம். அதே பல ஆயிரம் பேர்கள் கொல்லப்படக் காரண்மானவர்கள் மீது சிறிய சீற்றம் கூட இருக்கவில்லை இருப்பதில்லை அல்லது விரும்பவில்லை என்பதாலேயே கசாப்பின் தண்டனை அதிகப்படியாகத் தோன்றுகிறது.

கசாப் கொல்லப்படுவதற்கு ஏன் இத்தனை ஆதரவு எனில், அவன் 200 வரை கொல்லப்படக் காரணமானவர்களில் ஒருவன், பாகிஸ்தானியன், பயங்கரவாதி, ஒரு முஸ்லிம். எல்லாவற்றுக்கும் மேலாக பயங்கரவாதத் தாக்குதல் என்பது தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அதனால் எல்லோருக்கும் அதன் மீதான வெறுப்பு ஊட்டப்பட்டது. அவனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டு விட்டது. சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் சென்னை சட்டக் கல்லூரியில் நடைபெற்ற மோதல் தொலைக்காட்சியில் காட்டப்பட்டபோது ஏற்பட்ட மனநிலையைக் கணக்கில் கொண்டால் தெரியும். அவ்வப்போது மேல்ஜாதி வெறியர்களால் வன்கொடுமை கொலைகள் பெரிய அளவில் அதிர்ச்சி ஏற்படுத்துவதில்லை. ஆனால் அதே ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரன் திருப்பி அடித்தது பெரிய அதிர்ச்சியை அவர்கள் மீதான வெறுப்பை உருவாக்கியது. அதற்குக் காரணம் அது திரும்பத் திரும்பக் காட்டப்பட்டதுதான்.
அதே போல்தான் கசாப் மீதான கருத்தும், நரேந்திர மோடியின் மீதான கருத்தும் வேறுவிதங்களில் எடுத்துக்காட்டப்படுகின்றன.

பயங்கரவாதமும் கலவரமும்

200 பேர்கள் கொல்லப்பட்ட இத்தாக்குதல் பயங்கரவாதம் என்று சித்த்தரிக்கப்படுகிறது. அதே 2000 பேர்கள் கொல்லப்பட்ட குஜராத் படுகொலையானது குஜ்ராத் கலவரம் என்றே அழைக்கப்படுகிறது. அதுவும் கர சேவகர்கள் எரித்துக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரம் என்றே செய்திகளில் வாசிக்க நேர்கிறது. அதாவது முஸ்லிம்கள் 50 கரசேவகர்களை எரித்துக் கொன்றனர். அதன் பின்னர் கலவரம் மூண்டது.
இங்கு 50 இந்துக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர் என்பது அழுத்தமாகக் கூறப்படுகிறது. பின்பு 2000 முஸ்லிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டது கலவரம் என்ற சொல்லில் பூசி மெழுகப்பட்டு, அதன் உண்மைத்தன்மை மழுங்கடிக்கப்படுகிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களைக் கொலைகாரர்களாகவும் சித்தரித்து, அவர்களின் பாதிப்பை கலவரம் என்ற சொல்லின் மூலம் எந்த அதிர்ச்சியும், அவமானமும் இந்து மனங்களில் ஏற்காதவாறு பார்த்துக் கொள்ளப்படுகிறது. 

குஜராத் கலவரக்காரர்களிடம் தன்னைக் கொல்ல வேண்டாமென்று கெஞ்சும் குத்புதீன் அன்சாரியின் கண்ணீரும், நரோடா பாட்டியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் கண்ணீரும் - இதில் இரண்டாவது படத்திற்குப் பதில் தூக்கு தண்டனைக் கைதி கசாப் கண்ணீர் விட்டு அழுவதைப் போடலாமா ? அதுதானே நியாயம் ?

உண்மை என்பது கரசேவகர்கள் இறந்தது விபத்தினால்தான். ஆனால் குஜராத் படுகொலையை ஆதரிப்பவர்கள் இதைக் முஸ்லிம்கள் நிகழ்த்திய படுகொலை என்று கூறுகிறார்கள். முஸ்லிம்கள் கொல்லப்பட்டத்தை எதிர்வினை என்று கூறுகிறாரகள். சரி அப்படியே பார்த்தாலும் 40 பேரைக் கொன்றவர்களுக்கு என்ன தண்டனை தரவேண்டுமோ அதைவிட 2 மடங்கு அதிக தண்டனைதான் 2000 முஸ்லிம்களைக் கொன்றவர்களுக்குத் தரவேண்டும்.

இதேபோல பாபர் மசூதி இடிப்பின்போது கொல்லப்பட்டவர்களுக்கான நீதியும் எத்தனை கிலோ கிடைத்தது எனத் தெரியவில்லை. ஆனால் குண்டு வெடிப்புகளுக்கு மட்டும் நீதி கிடைத்தது. 3000 சீக்கியர்களை டெல்லியின் தெருக்களில் கொலை செய்து வீசியதால் அவர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடைக்கவில்லை. அதை முன்னின்று நடத்தியவர்கள் எல்லாரும் இயற்கையாகவே இறந்து போனார்கள். மீதமிருப்பவரும் இயற்கையாகவே இறப்பார்கள் யாருக்கும் தூக்கு இல்லை. சிறையும் இல்லை. ராஜீவ் மட்டும் வேறு அரசியல் காரணங்களால் படுகொலை செய்யப்பட்டார்.

இப்படி ஆயிரக்கணக்கான பேர் கொல்லப்படுவது கலவரம் என்று பூசி மெழுகப்படுகிறது, அதே நேரம் குண்டு வெடிப்புகள் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி அது மிகப்பெரிய எதிர்வினையை உண்டாக்குகிறது. குண்டு வெடிப்புக்களைக் காட்டிலும் மிகப்பெரியா பாதிப்புக்களை ஏற்படுத்தும் கும்பல் கலவரங்கள் மிகச் சாதாரணமாக மறந்து போய்விடுகிறது.

ராஜீவ், அத்வானி, பால்தாக்கரே, மோடி இவர்களின் கட்சிக்காரர்கள், இயக்கத்தவர், அடியாள்கள் மிகப்பெரிய அளவில் கலவரங்களை நடத்தினார்கள். சீக்கியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக இதில் அவர்கள் உடமைகள் சூறையாடப்பட்டன, பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டார்கள். ஆனால் இத்தலைவர்கள் மீதான வெறுப்புணர்வு என்பது பொதுமக்களிடம் இல்லை.

இதுதான் பாரபட்சமாக இருக்கிறது. இதனால்தான் கசாப்பின் தூக்கு தண்டனையை ஏதோ பெரிய நீதியை நிலை நாட்டி விட்டதாகக் கூறப்படுவதை சகிக்க முடியவில்லை. கசாபின் தூக்குத் தண்டனையை எதிர் நோக்கியிருக்கும் சூழலிதான் குஜராத் படுகொலை, சீக்கியர் படுகொலை, மும்பை, உத்தரப் பிரதேசத்தில் நடந்த கலவரங்களை நினைவூட்டிக் கொண்டு, அக்குற்றவாளிகளை சுதந்திரமாக அரசியல் நடத்துவதன் மூலம் பாரபட்சமான நீதி வழங்கப்படுகிறதைக் காணலாம்.

Download As PDF
Bookmark and Share

Post Comment

சிங்களப் பௌத்த பேரினவாதிகளால் தகர்க்கப்படும் இசுலாமிய வழிபாட்டிடங்கள் !

1915 - இல் முதன்முதலில் சிங்களப்பேரினவாதிகளால் இழப்பைச் சந்தித்தவர்கள் இசுலாமியர். தற்போது இனவாத அரசியலின் இலட்சக் கணக்கானோர் கொலை செய்யப்பட்ட பின்பும் சிங்களப் பேரினவாதமானது பல வடிவங்களிலும் தம்மைப் புதுப்பித்துக் கொண்டு வருகிறது. அவ்வகையில் இசுலாமியப் பள்ளிவாசல்கள் புத்தமதப் பிக்குகளால் தகர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சிங்களப் பௌத்தப்பேரினவாதம் அரசின் மறைமுக ஆதரவு மற்றும் தூண்டுதலினால் மீண்டும் தனது கொடுங்கரங்களை நீட்டத் தொடங்கியுள்ளது. இப்படி பெரும்பான்மை மதவாதம் சிறுபான்மை இசுலாமியரின் மீது தனது தாக்குதலைத் தொடுக்கும் அதே வேளையில் தமிழ் முசுலிம்களை இன்னொரு சிறுபான்மையினரான தமிழரிடமிருந்து பிரிக்கும் அரசியலையும் செய்து வருகிறது. சிங்களப் பேரினவாத அரசியலின் ஒரு பகுதியாக முஸ்லிம் தமிழர் பிரிவினையைத் தூண்டும் வேலையைச் செய்கிறது.

போர் முடிந்து 3 ஆண்டுகளான பின்பும் போர்க்காலத்திருந்த அடக்குமுறைகள் தொடர்ந்து நடக்கின்றன. இன்னும் வெள்ளை வேன்களில் அரசுக்கு எதிரானவர்கள் கடத்தப்படுகின்றனர். அரசின் கைப்பாவைகளாக இருக்கும் ஆட்சியாளர்கள் மக்களைத் திசை திருப்பும் நோக்கத்துடன் செயல்படுகின்றனர். புலிகள் அழிக்கப்பட்ட பின்பு தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்திருந்தது இருப்பினும் எதிர்பார்த்தபடியே எந்தத் தீர்வையும் இதுவரை வழங்கவில்லை. போதாக்குறைக்கு உலக நாடுகளிலிருந்து அழுத்தம் போர்க்குற்ற விசாரணை என பல வகையிலும் அச்சுறுத்தல். முன்பு விடுதலைப் புலிகள் இருந்த பொதோ அவர்களைக் காரணம் காட்டியே எல்ல செயலையும் நியாயப்படுத்தி வந்த சிங்கள அரசு தற்போது தனது பித்தலாட்டங்களுக்கு காரணம் காட்ட ஒரு எதிரி இல்லாமல் தவிக்கிறது. புலிகளின் முடிவின் பின்னரே மகிந்தவின் குடும்ப அரசு தமிழர்கள் மட்டுமல்லாமல் சிங்களர், முஸ்லிம் என அனைத்துத் தரப்பு மக்கள் மீதும் தனது ஒடுக்குமுறையைத் தொடங்கிவிட்டது. அதன் விளைவாகத்தான் போர்க்காலத்தில் இருந்தது போலவே பத்திரிக்கையாளர், அரச எதிர்ப்பாளர்கள் காணாமல் போதல் என்ற செயல்கள் தொடர்ந்து நடக்கின்றன. மகிந்தவுக்கு எதிரான மனப்பான்மை வலுத்து வருகிறது.

இத்தனை பிரச்சனைகளையும் சமாளிக்க ஒரே வழி மக்களை ஒன்று படாமல் பிரித்து வைத்திருப்பதுதான். இதற்காக சிங்களப் பேரின பௌத்தமதவாத வழியில் செயல்பட்டு வருகிறது. புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பு அவர்களின் பண்பாட்டுச் சின்னங்களான மாவீரர் கல்லறைகளை அழித்தது போன்ற செயல்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சிறுபான்மையினர் வாழிடங்கள் வழிபாட்டிடங்கள் மீதான கலாச்சார அழிப்பு மற்றும் பேரினவாத விரிவாக்கம் போன்றவற்றைச் செய்கிறது. இதன் விளைவாகத்தான் புதிது புதிதாக புத்தர் சிலைகளை நிறுவி வருகிறது. புத்தர் சிலைகளை நிறுவும் இராணுவம் !! என்ன ஒரு முரண் நகை. இன ஒற்றுமை நிலவும் இடங்களில் அதாவது சிறுபானமை தமிழர்கள் முஸ்லிம்களின் இடங்களில் இதை செய்கிறது. இதன் ஒரு பகுதியாகத்தான் முஸ்லிம்களின் வழிபாட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதற்கு புத்த மதப் பிக்குகளே தலைமை தாங்கியுள்ளனர். இத்தனைக்கும் முஸ்லிம்களின் சார்பாக அவர்களை பிரதிநிதிப்படுத்த மகிந்தவின் ஆதரவாளராக சில முஸ்லிம் தலைவர்களும் உள்ளனர். அவர்கள் இப்போது மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய இக்கட்டில் மாட்டிக் கொண்டுள்ளனர். புலிகள் மீதான போர்களின் போது கடந்த கால் நூற்றாண்டுகளாக ஆயிரக் கணக்கான தேவாலயங்களும், கோவில்களும் இடிக்கப்பட்டன. தற்போது அரசே பல்வேறு வகையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை, தர்காக்களை இடிக்கிறது. 


அரசின் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளாக தம்புல்லவில் பள்ளி வாசல் புத்த பிக்குகளால் தாக்கப்பட்டது, பின்பு அரசு அதை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த செப்டம்பர் மாதம் அனுராதபுரத்தில் வெடிவைத்துத் தகர்க்கப்பட்ட செயலில் அரசுதான் காரணம் என்ற வதந்தியும் இருக்கிறது, காத்தான்குடியிலும் ஒரு மசூதி கொளுத்தப்பட்டுள்ளது.



தம்புள்ள பள்ளிவாசல் தகர்க்கப்படும்போது அங்கிருந்த காவலர்கள் அதைத் தடுக்கவில்லை, 2000 பேர்கள் வரையிலான கும்பல் புத்த பிக்குகளின் தலைமையில் வந்து இதை அரங்கேற்றியுள்ளது. பட்டப்பகலில் தொழுகை நடக்கும்போதே இது நடந்துள்ளது,
Download As PDF
Bookmark and Share

Post Comment