7.5 விழுக்காடுகள் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டுக்கு ட்வீட் போட்டதைத் தவிர்த்து என்ன செய்தார் சூர்யா ? - ரவிசங்கர்

இப்போதும் சரி அப்போதும் சரி ட்வீட் போட்டதைத் தவிர ஒன்றும் செய்யவில்லை. ஸ்டாலின் ஆதரிக்கும் முன்பு வரை சூர்யா செய்தது தவறாக இருந்தது. இப்போது சூர்யா என்ன செய்துவிட்டார் என்று கேள்வி வருகிறது. உங்க தவறை ஒப்புக்கொள்ளாமல் அடுத்தவன் அருகதையைக் கேள்வி கேட்டால் என்ன செய்வது ?

நடிகர் சூர்யா 8 கோடி பேருடன் கோட்டைக்கு ஊர்வலம் சென்று முதலமைச்சருக்கு நன்றி சொல்லவில்லை. அவர் போட்ட ஒரே ட்வீட்டை வைத்துத்தான் என்னவோ தமிழ்நாட்டுக்கே துரோகம் செய்ததாக சித்தரித்தனர் சில திமுகவினர்.  தமிழ்நாடே சூர்யாவின் ட்வீட்டைப் பார்த்துத்தான் அதிமுகவை ஆதரிப்பது போன்றும் இல்லையென்றால் அப்போதே புரட்சி வெடித்து அதிமுக அரசு கலங்கியிருக்கும் என்பது போல பேசினார்கள். ஜோதிகா பேசியதை வைத்து காவிகள் கூத்தடித்ததைப் போலவே இவர்களும் செய்தனர்.

யாரை எதிர்க்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்று தெரியாமல் இருக்கிறார்கள் என்று சொன்னவர், ஏதாவது ஒரு கட்சியை ஆதரித்துத் தொலையுங்கள் என்றால் பாஜகவையும் அதிமுகவையும் ஆதரிக்கலாமா ? உங்கள் கட்சியை ஆதரிக்காமல் இருப்பதற்குக் காரணம் என்ன உங்கள் கட்சியின் குறைகள்தானேயன்றி நாங்கள் அல்லவே. 

NEET எதிர்ப்பாளர் என்றாலே அது திமுக சார்பாகத்தான் பார்க்கப்படும். எப்படி திமுக சாராத மற்றவர்களின் தவறுகளும், அவதூறுகளும் திமுகவின் மீது திருப்பப்படுகிறதோ அது போலவே NEET உட்பட தமிழ்நாட்டின் நலன் சார்ந்த எந்த ஒரு அரசியலுமே திமுக சாராதவர்கள் பேசினாலும் போராடினாலும் அது திமுகவின் ஆதரவாக மாறும், திமுகவின் மீதான பொதுபுத்தி வெறுப்பின் ஒரே நன்மை இதுதான்.

அதிமுகவை நேரடியாகக் கண்டிக்காவிட்டால் அதை ஏற்கமாட்டோம் என்று தூய்மைவாதம் பேசினால் எப்படி ? திமுகவை ஆதரித்து விட்டோ, திமுகவில் இருந்து கொண்டோ திமுக கொள்கைக்கு நேர் எதிரான அரசியலை/செயல்களைச் செய்தால் அது ஒரு பொருட்டே இல்லாதது போலவும், கட்சிசாராதவன் திமுக ஆதரவு கொள்கையைப் பேசினால் அவனை எதிரியிடம் தள்ளி விடுவது ஏன் ?

ஒரு முறை திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததையே தவறென்று ஒத்துக்கொள்ளாமல் அவர்களின் ஆதரவை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு என்று சொல்லியிருந்தார் ரவிசங்கர். ஆனால் யாருடைய ஆதரவை யார் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் ? அதன் விளைவுகள் என்ன என்பதையும் நாம் இன்று பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம் ? 

எப்படி தேர்தல் அரசியலில் ஈடுபடும் உங்கள் கட்சிக்குக் குறிப்பிட்ட எல்லைகள் உள்ளனவோ அது போலத்தான் அரசியலிலும் பொதுவாகக் கருத்து சொல்லும் கட்சி சாராத நபர்களுக்கும் சில எல்லைகளும் தொல்லைகளும் உள்ளன, அவர்களால் ஒரு கட்சியை வெளிப்படையாக ஆதரித்தோ எதிர்த்தோ பேச முடியாது. இது உங்களைப் போன்றவர்கள் அறியாததன்று என்றாலும் நீங்கள் இப்படி குற்றம் சொல்லிப் பேசுவது எதற்காக என்பதும் எங்களுக்குத் தெரியாமலில்லை. 

நாளை NEET ஆதரவு நிலைப்பாடு எடுத்து, NEET பயிற்சி நிலையங்களால் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது, தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்கிறது என்றும் சொல்வார் போலிருக்கிறது.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

ஆரிய உதடும் திராவிட உதடும் பேசுவது என்ன ?

                                              

திராவிடத் திருமகனின் திருவாய்மொழிகளும், மோடியையே கலாய்க்கும் பார்பன சதிகாரியும். பார்ப்பனியத்தை எதிர்க்கிறோம் என்று பார்ப்பனியத்தையே வெட்கப்படுமளவுக்கு மாற்றி விட்ட நமது திமுக திராவிடப் புரட்சியாளர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். 

காவி பயங்கரவாதி இராமகோபாலன் இறந்ததற்கு வருத்தமும் இரங்கலும் தெரிவிக்கும் வைரமுத்து. 

பாலியல் வன்முறையைக் கண்டிக்க பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தையே பகிர்ந்து கிண்டல்/விமர்சனம் செய்யும் பாடகர் சின்மயி. 

அவருக்கு இருந்தது எல்லாம் கொள்கை அதில் குன்றாது கண்ணியம் காத்தாராம். அவர் செத்ததால் வருத்தப்படுகிறவர்களுக்கு இவர் இரங்கல் தெரிவிக்கிறாராம். இதன் மூலம் யாரை செருப்பால் அடித்தார் என்று யாருக்கும் தெரியாத மாதிரி இருப்போம் திராவிடப் புரட்சியாளர்களே !

இதில் யார் திராவிடம் பேசுகிறார்கள், யார் பார்ப்பனியம் பேசுகிறார்கள் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு பரிசும் இல்லை.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment