பாஜகவின் கல்யாணராமன் மேல் குண்டர் சட்டம் தொடுக்கப்படுவது தவறு

 முதலில் குண்டர் சட்டம் மக்களாட்சிக்கு எதிரானது.

நபிகள் நாயகத்தை அவதூறாகப் பேசியதற்கு குண்டர் சட்டத்தில் கைது என்பது மிகவும் தவறானது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மதத்தை விமர்சனம் செய்வதையே எதிர்க்கும் மதவாதிகளின் ஆயுதம்தான் புண்படுத்துவது, இழிவுபடுத்துவது, அவதூறு செய்வது போன்ற சொற்கள்.

முஸ்லிம்களின் மத உணர்வுக்கு காவல்துறை அஞ்சுகிறது என்ற குற்றச்சாட்டு உண்மையாகும்.

இவர் முஸ்லிம்கள் மீதான குஜராத் படுகொலைகளை ஆதரித்துப் பெருமையாகப் பேசியதற்கும் அவர்கள் மீது வெறுப்பைத் தூண்டியதற்கும்தான் குற்றவாளியாகக் கருதப்பட வேண்டும்.

இல்லையென்றால் அவதூறு வழக்கில் குண்டர் சட்டம் எனில் மார்க்சிய, அண்ணலிய, பெரியாரிய போராளிகள் மீது இதைப் பயன்படுத்த பல வழிகள் உள்ளன.


Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்