சின்னப் பெருமை

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
ஏப்ரல் 29 ஆம் நாள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள். அந்த நாளே எனது பிறந்தநாளும் என்பதில் அற்பத்தனமான ஒரு மகிழ்ச்சி என்னுள் எழுகிறது. அவரை தமிழ் தேசியக் கவி என்றும் கூறலாம். தமிழுணர்ச்சி ததும்பும் பாடல்களை எழுதியவர். அவரைப் பற்றி இன்னும் முழுவதும் அறியாமல் இருப்பது வெட்கமாக இருக்கிறது.  அவரைப் பற்றி சில செய்திகள். 


-அவர் பிறந்த நாள் - 29-04-1891

-இவரது மிகச் சிறந்த வரியாகக் குறிப்பிட வேண்டிய பாடல்களில் எனக்குப் பிடித்தவை

தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்
இன்னொன்று,

கொலைவாளினை எடடா
கொடியோர் செயல் அறவே 

பெரியார் ஏற்றுக் கொண்ட கவிஞர் - பெரியாரை ஏற்றுக் கொண்ட கவிஞர்

பாவேந்தரின் படத்தைத் திறந்து வைக்கும் பெரியார்

டெல்லி இந்தி ஏகாதிபத்தியம் இந்தியா முழுவதும் இந்திமயமாக்கும் வெறியில் இருக்கும் இவ்வேளையில் இந்தப் பாடல் இன்றும் பொருந்துகிறது.

தில்லி ஒழிக!

செந்தமிழ் நாட்டைத் தில்லி ஒழிக்குமுன்
தில்லிதன்னை ஒழிக்க வேண்டும் நாம்.

குந்திச் சிறிய கதைபேசித் திரியும்
குள்ளத் தலைவர் குற்றம் செய்தனர்

இந்திச் செய்தியில் நடந்த தெப்படி?
இன்பத் தமிழை மாய்ப்பதும் கண்டோம்!
பைந்தமிழ் நாட்டுக் குள்ள அதிகாரம்
பத்தில் ஒன்றும் பலித்ததா நமக்கு?

நாட்டினை ஆண்ட தமிழா அடிமைகள்?
காட்டு மிராண்டிக் கழுதையா ஆள்வது?
நாட்டையும் மொழியையும் நசுக்குதல்
கண்டும்;
நாய்வாழ்க் கையைநாம் நாடுதல் நல்லதா?

புலவர் உள்ளனந் எதற்குத்தாம்
உள்ளனர்?
பொன்னுளார் உள்ளனர் எப்பயன்
கண்டோம்?
கலைஞர் வாழ்கின்றார்; எதற்காக
வாழ்கின்றார்?
கைவிலங் குக்கு மெருகு போடவா?

சோறுண்ணுகின்றோம்;
நாயுண்ண வில்லையா?
துன்பமற்ற தலைமுறை செய்வோம்
ஆறு பாய்ந்தெனத் தமிழர்கள்
பாய்க!
அழிக்கும் பகையை
அழிப்பதற்கே!
 

ஆங்கிலத்தைக் கற்க வற்புறுத்திய பெரியாருக்கு எதிராகவும், அவரது எழுத்துச் சீர்திருத்தத்திற்கு எதிராகவும் தனது எழுதுகோலைச் சீறியிருக்கிறார் புரட்சிக்கவிஞர். பெரியார் ஏற்றுக் கொண்ட ஒரே கவிஞர் பாரதிதாசன் மட்டுமே என்பது இங்கே தனிச்சிறப்பு. பெரியாரின் கொள்கைகளையும் தனது பாட்டில் வடித்தவர் புரட்சிக்கவிஞர்.

தமிழால் தமிழர் ஆயினர் அன்னவர்
தமிழை ஒழிக்கவும் தளரா துழைத்தனர்.

தமிழால் தமிழர்க்குத் தலைவர் ஆயினர்;
தமிழால் தலைமை அடைந்த #அவர்கள்
'தமிழில் ஏதுளது' என்று சாற்றுவர்.

தமிழைப் பேசித் #தலைவர் ஆயினர்
தமிழை எழுதித் தலைவர் ஆயினர்
'தமிழால் பயன் ஏது?" என்று சொன்னார்.

தமிழர் வாழத் தக்கவை ஆன
எல்லாக் கருத்தையும் இயம்பி வந்தனர்;
எல்லா உண்மையும் எடுத்துக் காட்டினர்
அரைநூற் றாண்டாய் அறிவு புகட்டினர்

அந்த அருமைத் தலைவரே இந்நாள்
ஆங்கிலம் தாயாய் அமைக என்றும்
தமிழால் உருப்படோம் என்றும் சாற்றினர்
தமிழர் தலைவர் தமிழாற் பேசியும்
தமிழால் எழுதியும் தந்த கருத்தினைத்
தமிழர் தங்கு தடையின்றி உணர்ந்தனர்
உணர்ந்துதாம் நன்னிலை உற்றனர் என்க.

இதனைத் தலைவரும் ஏற்றுக் கொள்வர்!
அன்றியும் அருமைத் தமிழே அன்றி
வேறுமொழி எமக்கு வராதென விளம்புவர்.
தமிழே தலைவ ராக்கியது, மற்றும்

தமிழே புகழ்பெறச் செய்த தென்பதை
எவரும் மறுக்க இயலா தன்றோ?
இப்படிப் பட்ட தலைவர் என்பவர்
தமிழில் இலக்கியம் இல்லை என்றனர்!

தலைவரைச் செய்தது தமிழ்இலக் கியமே
தமிழினம் படைத்தது தமிழ்இலக் கியமே
தமிழைத் திறம்படப் பேசவும் எழுதவும்
வைத்தது யாது? வண்டமிழ் இலக்கியம்!

தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணத்தை
உண்டு பண்ண உதவ வில்லை
என்று தமிழர் தலைவர் சாற்றுவர்;
அதே நேரத்தில் அந்தத் தலைவர்
முப்ப தாண்டாய் முளைத்த இலக்கியம்
எத்தனை ஆயிரம் என்பதை அறியார்!
 

தமிழ் இலக்கியங்கள் ஒரு குப்பை என்று சொன்ன பெரியாருக்கு எதிராக எழுதியதுதான்.

நூலைப்படி-சங்கத்தமிழ் நூலைப்படி! -முறைப்படி நூலைப் படி! -சங்கத்தமிழ் நூலைப்படி!
காலையில் படி, கடும்பகலில் படி,
மாலை இரவு, பொருள்படும்படி

என்ற கவிதை.  அவரின் அடுத்த பிறந்த நாளுக்கு இன்னும் சிறப்பான முறையில் எழுத வேண்டும்

செய்திகள். படங்கள் ஃபேஸ்புக்கிலிருந்து எடுத்தவை.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

சத்யராஜ் டக்கால்டி


நடிகர் சத்யராஜ் பாகுபலி படத்திற்காக, கன்னட இனவெறி கிறுக்குகளிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். 9 வருடங்களுக்கு முன்னர் தான் பேசியதற்காக வருத்தம் தெரிவித்த சத்யராஜ் தான் கர்நாடக மக்களுக்கு எதிரானவன் இல்லையென்றும் கூறியுள்ளார். 9 வருடங்களுக்கு முன்னர் பேசிய பேச்சுக்காக இப்போது திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க மறுத்து போராட்டத்தில் இறங்குகிறவர்கள் எந்த இலட்சணத்தில் இருப்பார்கள் அவர்கள் என்னென்ன பிரச்சனைகளில் போராடியிருப்பார்கள் என்று நினைத்தால் பாவமாக இருக்கிறது.

இப்போது சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததற்காக அவரை எல்லாரும் பாராட்டுகிறார்கள். அவர் தமிழனை விட்டுக் கொடுக்கவில்லை. படத்தில் பணியாற்றிய ஆயிரம் குடும்பங்களுக்காகத்தான் வருத்தம் தெரிவித்திருக்கிறார். அவர் இனமுரசு, பெரியாரியர், பகுத்தறிவுவாதி, தமிழ் உணர்வாளர் என்கின்றனர். ஏன் வருத்தம் தெரிவித்து விட்டு தமிழனாக இருப்பதே இறப்பதே பெருமை என்று சொல்லி விட்டார். என்னென்ன அட்டூழியம் செய்தாலும் செய்து முடித்து விட்டு பாரத் மாத்தா கீ ஜே என்று சொல்கிறவர்கள் தேசபக்தனாவதைப் போலத்தான் இதுவும் இருக்கிறது. தமிழனாக இருப்பதே தமிழன் என்பதே அவருடைய நிலையை நிர்ணயித்து விடுகிறது தமிழ்நாட்டில்.


இதே போல் நடிகர் ரஜினியின் படத்திற்கு பிரச்சனை வந்த போது ரஜினி வருத்தம் தெரிவித்தார். தான் கன்னட மக்களைக் குறிப்பிடவில்லை என்றும், வன்முறை செய்தவர்களைத்தான் உதைக்க வேண்டும் என்று கூறினேன் என்று கூறினார். ஏன் சத்யராஜ் நடித்த பாகுபலி படத்தில் மட்டுமா ஆயிரம் குடும்பங்கள் இருக்கிறது. ரஜினியின் படத்திலும்தானே இருந்தார்கள். இத்தனைக்கும் சத்யராஜ் பக்க கதாபாத்திரம் மட்டுமே. ரஜினியின் படம் என்றால் சொல்ல வேண்டியதில்லை. பாகுபலி சத்யராஜின் படம் என்றில்லாத போதும் சத்யராஜ் நடித்த காரணத்திற்காக அதை தடை செய்யச் சொன்னார்கள். அப்படியிருக்க கன்னடர்களை எதிர்த்த ரஜினி படத்தின் மீதான எதிர்ப்பு எப்படி இருந்திருக்கும் ? எனவே சத்யராஜின் பிரச்சனையை விட ரஜினிக்குத்தான் அழுத்தம் அதிகம். அவர் கேட்க விரும்பாவிட்டாலும், திரையரங்க அதிபர்கள், சங்கத் தலைவர்கள், விநியோகிப்பாளர்கள், படத் தயாரிப்பாளர், துணை நடிகர்கள் மற்றும் திரைப்படத்திற்குப் பின்னால் வேலை செய்த அனைவரின் வாழ்க்கைக்கும் சேர்த்துத்தானே ரஜினியும் மன்னிப்புக் கேட்டார். என்ன ரஜினி கன்னடனாகப் போனதால் அவரைத் திட்டுவதற்கு அருமையான காரணம் கிடைத்து விட்டது.   தன் படத்தில் பணியாற்றிய தமிழ்த் தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் சேர்த்துத்தான் ரஜினி மன்னிப்புக் கேட்டிருப்பார் என்பது உண்மையிலேயே யாருக்கும் புரிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஒரு கன்னடன் கன்னடர்களிடம் தமிழர்களைக் காட்டிக் கொடுத்துவிட்டான் என்ற உணர்ச்சிதான் மேலோங்கியிருந்திருக்கிறது.

அவரை எதிர்த்தவர்கள் கன்னட அமைப்பினர் என்றபோதும் அவரது படத்தை வாங்கி ஓட்டும் திரையரங்கு முதலாளிகள் கன்னடர்கள்தானே, அவர்களுக்கு மட்டும் கன்னட உணர்வு இல்லையா ?

ரஜினி படத்தை வெளியிடுகிறவர்கள், படத்தில் பணியாற்றியவர்கள் எனப் பெரும்பான்மைத் தமிழர்களின் குடும்ப வாழ்வும்தானே ரஜினியின் படத்தில் இருக்கிறது. அதற்குத்தானே ரஜினியும் மன்னிப்புக் கேட்டார் என்றால் ஒத்துக் கொள்வார்களா ? இப்போது சத்யராஜ் மற்றவர்களுக்காகத்தான் மன்னிப்புக் கேட்டார் என்பவர்கள்.

நான் தொடர்ந்து தமிழர்களின் பிரச்சனைக்குக் குரல் கொடுப்பேன், என்னால் பிரச்சனை வரும் என்று நினைப்பவர்கள் என்னை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று சத்யராஜ் சொன்னது வீரம்தான் நேர்மைதான் என்று ஒத்துக் கொள்கிறேன். அதை மதிக்கிறேன்.

ஆனால் ரஜினி வருத்தம் தெரிவித்த போது இந்த சத்யராஜ் என்ன சொன்னார் ? நானாக இருந்தால் மன்னிப்புக் கேட்டிருக்க மாட்டேன், எனது சம்பளத்தை விட்டுக் கொடுத்திருப்பேன் என்றார். இப்போது இவரும் மன்னிப்புதானே கேட்டிருக்கிறார் ? என்னவோ ரஜினி மன்னிப்புக் கேட்டதை வைத்து தமிழ்நாட்டின் தன்மானமே அடகுவைக்கப்பட்டதைப் போலல்லவா பேசினார். ரஜினிக்கு இதுமாதிரியெல்லாம் வாயடிக்கத் தெரியாது. உளறி மாட்டிக் கொள்வதால் ரஜினியைப் போட்டு கும்மிவிட முடிகிறது.

உண்மை என்ன. சத்யராஜ்-க்கு ரஜினியைப் பிடிக்காது, அதனால்தான் அன்று கன்னட இனவெறியைக் கண்டிப்பது போல் இவரைத் திட்டினார். பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொள்ளும் சத்யராஜ் தன்னை நடிகன் எம்ஜிஆரின் ரசிகன் என்பதில் பெருமைப்படுவார். அதெப்படி ஒரு பகுத்தறிவுவாதி ஒரு நடிகனுக்கு ரசிகன் என்பதைப் பெருமையாகச் சொல்வார் ? மேடையில் ஏறினாலும் சரி அவரது படங்களிலும் சரி அவ்வப்போது எம்ஜிஆரைப் போல பாடியோ நடித்தோ பேசியோ சலிப்பேற்றுவார். அதிலும் எம்ஜிஆரைக் குறிப்பிடும்போது புரட்சித் தலைவர் என்றுதான் குறிப்பிடுவார்.  தன்னையும் சில படங்களில் புரட்சித் தமிழன் என்று போட்டுக் கொண்டார். எம்ஜிஆர் என்ன புரட்சிக்குத் தலைமை வகித்தார் என்று யாராவது சொல்லுங்களேன்.

சரி அதாவது போகட்டும். சத்யராஜ் தனது படங்களில் மக்கள் நடிகனுக்கு கொடி பிடிப்பதையும், தலைவனாக்குவதையும் விமர்சனம் செய்வார். கிண்டலடிப்பார். நடிகர் விஜய் அரசியலுக்கு நுழைவதற்காக விஜய் மக்கள் இயக்கம் என்று ஒரு விழா நடத்தினார். தனது கட்சி அல்லது இயக்கக் கொடியை அறிமுகம் செய்தார். அந்த நிகழ்ச்சியில் பதினாறு பல்லையும் காட்டிக் கொண்டு அந்த விழாவை சிறப்பிக்கக் கலந்து கொண்டார். தனது படத்தில் மக்களைக் கிண்டலடித்து நடிகனைத் தலைவனாக்காதே, நடிகனைக் கொண்டாடாதே உன் வேலையைப் பார் என்றெல்லாம் உபதேசித்து விட்டு ஒரு நடிகனைத் தலைவனாக சித்தரித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் எப்படி இன முரசு ஆக முடியும் ?

எனக்கு எம்ஜிஆருக்கு அப்பறம் விஜய்தாங்க என்பார். இவருக்கு பிடித்த நடிகர் எம்ஜிஆர் பிறகு விஜய் ஆம். அதாவது மறைமுகமாக எம் ஜிஆருக்குப் பின்னர் விஜய்தான். முன்னாள் சூப்பர் ஸ்டார் எம்ஜிஆர் நாளைய சூப்பர் ஸ்டார் விஜய். நடுவில் இருக்கும் ரஜினி ஒர் ஆளே இல்லையாம். ரஜியின் பஞ்ச் வசனங்களை தனது படங்களில் கிண்டலடிப்பார் சத்யராஜ்.  (பேரக் கேட்டாலே அதிருமா நீ என்ன பூகம்பமா ?)

பெரியார் பெண்கள் என்ன நகை மாட்டும் ஸ்டேண்டா என்று கேட்டார். பெரியாரியவாதி சத்யராஜ் தங்கநகை விளம்பரத்தில் நடிக்கிறார். சின்ன வேறுபாடுதான்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

விவசாயிகளை இழிவு செய்த விஜய பாரதம்

டெல்லியில் கடந்த ஒரு மாதமாக தமிழக விவசாயிகளின் போராட்டம் நடந்து வருகிறது. அவர்கள் தங்களை எந்தளவு தாழ்த்திக் கொள்ள முடியுமோ அதைவிடக் கீழான நிலைக்கும் சென்று போராடுகிறார்கள். அவர்கள் செய்யும் போராட்டங்களையெல்லாம் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடிவதில்லை.ஆயினும் அவர்கள் கோரிக்கைகள் செவிமடுக்கப் பட்டு விடவில்லை. இந்த நிலையில் அவர்களைக் கேவலப்படுத்தி நடிகர்கள் என்று கிண்டலடித்து கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளது, R.S.S. - இன் இதழான விஜயபாரதம். இவர்களின் மனநிலையை எதனுடன் ஒப்பிடுவது என்று யாராவது சொல்ல முடியுமா ?

 படம் உதவி - ஃபேஸ்புக்

.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

இரு கொலைகள் ஒரு காரணம்


இரு வேறு நாடுகளில் இரண்டு வேறு பேர் கொல்லபட்டனர். இரண்டிற்கும் ஒரே காரணம் மதவெறி அல்லது மதநம்பிக்கை. இரண்டு பேரும் அந்த மதவெறிக்குக் காரணமான மதத்தைப் புண்படுத்தியதாகவோ, அல்லது இழிவு படுத்தியதாகவோ ஆதாரம் இல்லை. இருப்பினும் அவர்கள் செய்யாத செயலை, செய்தார்கள் என்ற நம்பிக் கொண்டு அல்லது நம்பியதாக நடித்துக் கொண்டு ஒரு பெருங்கூட்டம் அல்லது சிறு கூட்டம் அவர்கள் தனிமனிதனாக இருந்த போது அடித்துக் கொன்றுள்ளது. இந்த மதவாதம் மத நம்பிக்கை என்ற கூறு கெட்ட மூடத்தனம் ஒரு கூறு கெட்ட கூட்டத்தின் மொத்த வடிவமாக மாறும்போது பொய்யும் உண்மையாகிறது. கொலைவெறியே இவர்கள் மூச்சாகிறது. மனிதம் மண்ணோடு மண்ணாகி விடுகிறது.

முதல் கொலை இந்தியாவில் நடந்தது. இந்தியா மதச்சார்பற்ற ஜனநாயக நாடு. ஆனாலும் இந்தக் கொலை மதத்தின் பெயரால், மத நம்பிக்கையை இழிவுபடுத்துவதாகச் சொல்லி ஒரு கொடுமையான மனிதர்கள் வெட்கித் தலைகுனியும் வகையில் நிகழ்த்தியுள்ளது இந்து மதவெறிக்கூட்டம். ஜனநாயக நாடு என்று சட்டத்தில் இருந்த போதும் பெரும்பான்மை என்ற காரணத்தைக் கொண்டு போலியான ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு அதை ஒட்டு மொத்தமான மக்களுக்குமான ஒரு நம்பிக்கையாகக் காட்டி பத்து தெருப்பொறுக்கிகளை வைத்து பட்டப்பகலில் பகிங்கரமாக பொது இடத்தில் வைத்து ஒருவரை அடித்துக் கொல்ல முடியும். ஆனாலு அந்த இயக்கம் தடை செய்யப்படாது. அந்தக் கொள்கையும் கண்டிக்கப்படாது. அவர்களுக்குத் தண்டனையும் கிடைக்காது. இந்தியாவில் பெரும்பான்மை மதத்தினர் மாட்டிறைச்சி உண்டாலும் தாழ்த்தப்பட்டவர்கள், முஸ்லிம்கள் மீது அதே காரணத்தை வைத்து தாக்குதல் நடத்திக் கொல்லவும் முடியும். இதெல்லாம் ஒரு ஜனநாயகமா ? ஆம்.

ராஜஸ்தானில் ஆல்வார் மாவட்டத்தில் பசு காவலர்கள் என்று ஒரு கூட்டம் பால் பண்ணை முதலாளி ஒருவர் மாடுகளை கொண்டுவந்த போது வழிமறித்துத் தாக்கியுள்ளது. காரணம் அவர்கள் பசுக்களைக் கடத்தி வதை செய்பவர்கள் என்று ஐயமாம். அவர்கள் தாங்கள் பால்பண்ணை நடத்துகிறவர்கள் என்று ஆதாரங்களைக் காட்டிய பிறகும் அதை நம்பாமல் அவர்களைத் தாக்கியுள்ளது அவர்களிடமிருந்து 35000 ரூபாயையும் பறித்துக் கொண்டது. 50 வயதான அந்த பால் பண்ணை முதலாளியைக் கிழவா ஓடு என்று விரட்டி விட்டு பின்னர் துரத்தித் தாக்கியுள்ளது. இதனால் படுகாயமுற்ற அந்த நான்கு பேர்களில் அந்த 50 வயது நபர் உரிய சிகிச்சையின்றியும் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தார். இந்த கும்பல் தாக்கிய ஐவரில் ஒருவர் இந்து மதத்தைச் சார்ந்தவர். அவரை தப்ப அனுமதித்த கும்பல், முஸ்லிம்கள் நான்கு பேரை மட்டும் கொடூரமாகத் தாக்கியுள்ளது. தாத்ரியில் இது போல்தான் ஒரு வருடத்திற்கு முன்னர், மாட்டுக்கறி வைத்திருந்த குற்றத்திற்காக ஆட்டுக்கறி வைத்திருந்த அக்லக் என்றவரைக் கொன்றார்கள்.



இரண்டாவது கொலை பாகிஸ்தானில் நடந்துள்ளது. பாகிஸ்தான் ஒரு மதவெறி நாடு, மத விமர்சனம் செய்தாலே தேசதுரோகம், மதநிந்தனை என்று வாழ்நாள் சிறை அல்லது சாவு தண்டனைதான் கிடைக்கும் இதற்கு மேல் பெரிய விளக்கம் வேண்டியதில்லை. பெரிய காரணம் வேண்டியதில்லை. அவர் இறைவனை நிந்தித்தார். இஸ்லாத்தை இழிவுபடுத்தினார் என்ற வகையிலான வதந்தி மட்டும் போதும் நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் காட்டுமிராண்டிகள் கூடி விடுவார்கள் அல்லாஹு அக்பர் என்ற முழக்கத்துடன் ஒரு உயிர் துடிக்கத் துடிக்கக் கொல்லப்படும். இது அரசாங்கம் நடத்தாது, மக்களே நடத்துவர்.


பாகிஸ்தானின் மர்தானில் உள்ள வாஹிகான் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இதழியல் மாணவர் முஹம்மத் மாஷால் கான் இறைவனை இழிவுபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டுள்ளார், அதுவும் அந்தப் பல்கலைக்கழக்த்தைச் சார்ந்த மாணவர்களாலேயே. இந்தக் கேடுகெட்ட மதவெறி என்று ஒழியும் ? இது இருக்கும் வரை மனிதம் தழைக்கவே தழைக்காது.  மாணவர் மஷால் கான் தாக்கப்படும் கொடூரக் காணொலி. மனவலிமை இல்லாதவர்கள் தயவு செய்து காணவேண்டாம்.

                   

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

உன் அண்மையில் உன் இன்மை


ஒற்றைச்  சொல்லேனும்  உதிர்த்து  விடாமல்
கடக்கும்  கல்மனம்  உனது
புற்றைப்  போல  வளரும்  பெருந்துயரில்
உழலும்  உள்மனம்  எனது
எனக்கென்று  ஏற்கெனவே  வரிசையில்
நிற்கின்றன  கவலைகள்
அவற்றைத்  தோற்கடித்து  முதலிடம்
பிடிக்கின்றன  உன்  நினைவுகள்
என்  துன்பங்களை  மறக்கடிக்கும்  இன்பமும்  நீ
என்  நிம்மதியைக்  கவரும்  துன்பமும்  நீ
உன்  நினைவுக்கும்  உன்  நினைவுக்கும்
இடையேயான  இடைவெளிகளையெல்லாம்
வந்து  நிரப்புகின்றவை  உன்  நினைவுகளே
என்  அன்பின்  மீதான  உன்  புறக்கணிப்பு
உன்  அலட்சியத்தின்  கொக்கரிப்பு
விடாதே  என்கிறது  என்னுள்ளத்தின்  நச்சரிப்பு
உனதன்பைப்  பெறாமல்  நான்  ஏழையைப்  போல
இரந்து  நிற்கிறேன்  இறைஞ்சிக்  கேட்கிறேன்
உன்னிடம்தான்  எனக்குள்ளேயேதான்
உன்னுடனேயே  பேசிக்  கொண்டிருக்கிறேன்
நீ  என்ன  பதில்  சொல்லக்கூடும்  என்று
அனுமானிக்க  முடியாதவனாய்
கொஞ்சம்  பேசிப்  போனால்தான்  என்ன
குறைந்தா  போய்விடுவாய்  ?
இன்னும்  கொஞ்சம்  சிரித்தால்தான்  என்ன
இறங்கியா  போய்விடுவாய்  ?
என்  நேசத்தைப்  பொருள்  கொள்ளாமல்
என்னை  பொருட்படுத்தாமல்  இயங்கும்
உன்  இருப்பு  எனக்கு  ஏற்படுத்தும்  வெறுப்பு
நீ  எனது  அண்மையில்  இருந்த  போதும்
உனது  இன்மையையே  உணர்கிறேன்
உனது  அண்மையை  இழந்து  தவிக்கிறேன்
உனது  தன்மையை  வெறுக்கிறேன்  அன்பே  !
உன்றன்  மீதான  அன்பே  உன்றன்  மேல்
வெறுப்பையும்  ஆக்குகிறது  அன்பே  !
வேறு  கோணத்தில்  உனைக்  கண்டு  நீ  
ஒரு  அழகி  இல்லை என்று  உறுதிபடுத்திக்  கொள்கிறேன்
நான்  கொண்ட  நேசத்திற்கு  உனதழகு  
ஒரு  காரணமாகாது  என்று  ஆறுதல்பட்டுக்  கொள்கிறேன்
உனை  மறந்து  விட்டு  இயல்பாக  இருக்கலாமென்ற  
உன்னுடனான  போட்டியைத்  தொடங்கினேன்
உனது  கொலுசொலி  நீ  வரும்  முன்னே
நீதான்  வருகிறாய்  என்று  என்னை
நினைவூட்டியே  தோற்கடித்தது  எனக்குள்
தூங்கியது  போல்  நடிக்கும்  உன்னைத்
தட்டி  எழுப்பியது  எள்ளி  நகையாடியது
எனது  தோல்வியைத்  துள்ளிக்  கொண்டாடியது
நீ  எனக்குள்  இருப்பதை  நானோ  நீயோ  நினைத்தால்
மாற்ற  முடியாது  என்று  பறைசாற்றியது
இதயத்துடிப்பின்  இடையிடையே  வந்து
என்னைத்  துடிக்க  வைக்கும்  உன்னையெப்படி
என்  இதயத்திலிருந்து  நீக்குவது
துடித்து  விடாதோ  இதயம்  இல்லை
துடிக்க  மறந்து  விடாதோ  இதயம்
பறிபோகிறது  எனது  தூக்கம்
பறித்தது  உன்மேலானாதென்றன்  ஏக்கம்
நீ  கடந்து  போகும்  அத்தருணமா
எப்போதாவது  நீ  பேசும்  நிமிடங்களா
எனக்குள்ளே  நாம்  பேசுகிறோமே  அந்த
இனிய  நினைவுகளா  இவற்றில்  எது  இனிமை  ?
நீ  எனது  வாழ்க்கைநூலின்  இனிய  பக்கங்கள்
நான்  மட்டுமே  அறிந்த  கதையில்..

உன் பார்வை பட்டால் ஊனெங்கும் உதறல் எடுக்க
உன்னுடன் பேசும் போது எப்பாடு பட்டேனும்
உன்னை சிரித்து விட வைக்கவேண்டும் எத்தனிக்க
இதிலுமே எனக்கு தோல்வியா வாய்க்க வேண்டும் ?
உனைச் சுற்றிப் பலபத்துப்பேர்களிருந்தாலும் உனை 
நோக்கியே  என் ஓர்மை குவிய தனியனாய்  
நான் இருந்தாலும் எனை பொருட்படுத்தாத நீ
இப்படி ஓர் கொடுமையை யாரிடம் சொல்ல
காலம் ஆற்றிடும் இக்காயத்தினை மெல்ல

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

ஃபரூக் படுகொலை - முகமதிய மதவெறியின் கோரத்தாண்டவம்


திராவிடர் விடுதலை கழகத்தில் செயல்பட்ட இறை மறுப்பாளர் ஃபரூக் கொலை செய்யப்பட்டுள்ளார். மதக் கலவரம் குண்டு வெடிப்புக்குப் பெயர் போன கோவை தற்போது மதவெறிக் கொலைக்கும் பெயர் வாங்கியுள்ளது. இதன் மூலம் இஸ்லாமை எதிர்த்து இறைமறுப்புப் பரப்புரை செய்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பது தெளிவாகியுள்ளது

அவரது இறைமறுப்புக் கொள்கையைக் கேட்டு வெறுப்புற்ற அவரது நண்பனும் இன்னும் சிலரும் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்துள்ளனர். பொய் சொல்லி ஃபரூக்கை வரவைத்து வெட்டியும் குத்தியும் கொலைவெறியாட்டம் போட்டுள்ளனர். பிறப்பால் இஸ்லாமியரான அவரைக் கொலை செய்தவர்கள் இஸ்லாமியர்களே. இதிலொருவன் மீது வழிப்பறிக் கொள்ளைக்கான வழக்கும் இருக்கிறதாம். இருந்தும் அவனை மதவிலக்கம் செய்யாமல்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் இறைமறுப்பு பேசினால் ஒருவனை உயிர்விலக்கம் செய்வதற்கு அந்த அயோக்கியனுக்கும் யோக்கியதை இருந்திருக்கிறது. 


மார்ச் 15 வியாழன் அன்று தனது வாட்ஸப் குழுமமான கடவுள் இல்லை-இல் பதிவிட்டிருக்கிறார் ஃபரூக். தனது குழந்தையின் கையில் கடவுள் இல்லை என்று மூன்று முறை எழுதிய பதாகையை ஏந்திய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதைக்கண்டு வெறியான மதவெறியர்கள் அதற்கு அடுத்த நாள் கொலையை நிகழ்த்தியுள்ளனர். இதே ஒரு குழந்தை குல்லா போட்டுக் கொண்டோ பர்தாவைப் போட்டுக் கொண்டோ புகைப்படம் போட்டால் ஒரு இறைமறுப்பாளன் போய் நம்பிக்கையாளனை வெட்டத் துணிவானா ? மதி கெட்ட மதவெறி !

மதவெறியில் பித்தேறி வெறிகொண்ட 5 இஸ்லாமிய மதவெறி அடிப்படைவாதிகளால் கொடூரமான முறையில் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டார் ஃபரூக்.

                                             

தனது குழந்தைகளுடன் 

பிணமாக 


ஃபரூக் பிணமாக வெட்டுக்காயமும் குத்துக்காயங்களுடனும் - அளவற்ற அருளாளனின் வழிபாட்டுக்காரர்களின் அன்பு

                                          

இவரது சாவை விடவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய இரண்டு விடயங்கள்

1. இவரை இவரது நண்பன் ஒருவனே தனது வாகனத்தில் எரிநெய் (பெட்ரோல்) தீர்ந்து விட்டதாகக்கூறி அழைத்திருக்கிறான். அதை நம்பிச் சென்றவரைத்தான் வெட்டிக் கொன்றுள்ளனர் அந்த மதவெறிக் கொலைகாரர்கள். (ஃபரூக்கின் தந்தை ஹமீது அளித்த பேட்டியில் கூறினார்)

2. துக்கம் விசாரிக்க வந்த இஸ்லாமியப் பெண்கள் ஃபரூக்கின் மனைவியிடம் கேட்ட கேள்வி. ஃபரூக் நபிகளையே எதிர்த்து வந்துள்ளார். இறைத்தூதர் பற்றி நூல் வெளியிடலாம் என்று இருந்தாராம். இஸ்லாமியராக இருந்து கொண்டு இதையெல்லாம் செய்யலாமா ? 

(எழவு கேட்க வந்த வீட்டில் இவ்வளவு வக்கிரமாகப் பேச முடியுமா முடியும் மதவெறி தலைக்கேறி இருந்தால்.)

ஃபரூக்கின் படுகொலையைக் கண்டித்து கேரள யுக்திவாதிகள் ஆர்ப்பாட்டம்

முதலில் கொலை நடந்த செய்தி வெளியானதும் இதை முஸ்லிம்கள் செய்திருக்க மாட்டார்கள், RSS - காரர்களில் செயலாக இருக்கலாம் என்றே பெரும்பான்மையினர் கருதினர், குறிப்பாக திராவிடர் கழகத் தலைமை. ஆனால் கொலை நடந்த இடம் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பகுதி, மேலும் ஃபரூக்கிற்கு வேறு வகையில் எதிரிகள் இல்லை என்ற அனுமானத்தில் இது இஸ்லாமிய மதவெறியால் நிகழ்ந்திருக்கும் என்றும் பேசினர். பின்பு கொலை வழக்கில் இருவர் சரணடைந்த பின்னர்தான் இது அப்பட்டமான இஸ்லாமிய மதவெறியால் நிகழ்ந்த கொலை என்று உறுதியானது.

இஸ்லாமோஃபோபியா வேறு இஸ்லாமிய மதவாதம் வேறு

இஸ்லாமோஃபோபியா என்றால் என்ன ? இஸ்லாமியனை வெறுப்பது. அவன் இஸ்லாமியன் என்ற காரணத்திற்காக வெறுப்பது. அவன் மதவெறியன், மதத்திற்காக குண்டு வைப்பான், பயங்கரவாதம் செய்வான், மற்ற மதங்களை மதிக்க மாட்டான். தீவிரவாதம் என்றாலே அது முஸ்லிம்கள்தான். இதுமாதிரியான கருத்துக்களை ஒருவர் கொண்டிருந்தாலே அவர் இஸ்லாமோஃபோபியா கருத்துக்குப் பலியானவர் என்று பொருள்.


ஒரு சூழ்நிலையில் இஸ்லாமியன் செய்யும் செயலுக்கு அவர் மதத்தையோ சமூகம் மொத்தத்தையுமே குற்றம் சாட்டி விடும் மனப்பான்மையே இஸ்லாமோஃபோபியா. ஆனால் அதே செயலை மற்ற மதத்தவனோ, சமூகத்தவனோ செய்தால் அதை அவன் மதத்துடன் தொடர்புபடுத்தாமல் அவனைத் தனியான ஒரு குற்றவாளியாக சித்தரித்துக் கொள்வார்கள் இஸ்லாமோஃபோபியாவால் பாதிக்கப்பட்டவர்கள். உலகம் முழுவதிலும் இந்த மனநோய் ஊடகங்களால் பரப்பப்பட்டது. இன்றும் வேறு வகையில் பரப்பப்படுகிறது. இந்தியாவில் இந்தியன் முஜாகிதீன் என்ற இல்லாத இயக்கம் தொடர்ந்து பத்து வருடங்களாக செய்திகளில் அடிபடுகிறது. அதை ஒட்டி முஸ்லிம்கள் மீது மறைமுகமான உளவியல் போர் நடைபெறுகிறது. இதுவே இஸ்லாமோஃபோபியா தீவிரவாதி என்றாலே முஸ்லிம் என்ற மனநிலைக்கு ஏறக்குறையமுஸ்லிம் அல்லாதவர்கள் அனைவருமே ஆட்பட்டுள்ளனர். இது முற்றிலும் தவறானது.  

இஸ்லாமோஃபோபியா மனநிலையை எதிர்த்து, இஸ்லாமியருக்கு எதிரான ஃபாசிசத்தை, வெறுப்பு மனநிலையை எதிர்த்து ஜனநாயகத்தை நேசிப்பவர்கள் போராடுகிறார்கள் தங்களால் இயன்ற வழிகளில் இஸ்லாமியருக்கு ஆதரவளிக்கிறார்கள். ஏனென்றால் இந்தியாவில் இஸ்லாமியருக்கு எதிரான மனப்பான்மை அதிகமாக இருக்கிறது. இஸ்லாமியர்கள் இந்தியாவில் சிறுபான்மையாக இருக்கிறார்கள் இவர்கள் மீதான வன்மத்தை வளர்த்தே வெறுப்பை விதைத்தே ஒரு கட்சி இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களிலும் நடுவணரசிலும் தனது வெற்றியைப் பெற்றிருக்கிறது. அந்தக் கட்சியின் கொள்கையே இஸ்லாமிய வெறுப்பாக இருக்கிறது. வழிபாட்டுத்தலங்கள் இடிப்பு, அபகரிப்பு, சிறு பெரும் கலவரங்கள், தனிநபர் படுகொலை தொடங்கி இனப்படுகொலை வரை இஸ்லாமிய சமூகம் சீரழவுக்கு ஆளாக்கியுள்ளது. சிறுபான்மை இஸ்லாமியர்களால்தான் பெரும்பான்மை இந்துக்களுக்குப் பிரச்சனை என்ற ரீதியில் அது மக்களை மதவெறியூட்டி வருகிறது. இந்த நிலையில்தான் அனைத்து ஜனநாயக சக்திகளின் முதன்மை எதிரியாக அந்தக் கட்சி இருக்கிறது. நம்மைப் போன்ற மக்களாட்சிக்கு ஆதரவானவர்கள், பிற்போக்கு மதவாத ஆட்சிக்கு எதிரானவர்கள் அனைவரும் இது போன்ற சிறுபான்மையினர் மீதான வெறுப்பை விதைக்கும் கருத்துக்களையும், அரசியலையும், ஊடகங்களையும் எதிர்க்கின்றனர். கண்டிக்கின்றனர். சிறுபான்மையினரை அரவணைக்கின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இஸ்லாமியர்களுக்கு ஜனநாயக முற்போக்குவாதிகளின் முழு ஆதரவு இருக்கிறது. 

பொதுவாகவே ஜனநாயகவாதிகள் என்றாலே இறைமறுப்புச் சித்தாந்தவாதிகளே இருப்பர். தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட்டுகள் இல்லாமல் மிகப்பெரும் இரு கட்சிகள், சிறு சிறு அமைப்புகள் யாவும் இறைமறுப்பு இயக்கத்தின்(திராவிடர் கழகம்) வழிவந்தவர்களாக இருக்கின்றனர். இந்த ஜனநாயகவாதிகள் யாரும் இஸ்லாமியரின் மதவாதத்தை எதிர்ப்பவர்கள் இல்லை. ஒரு படி மேலே போய் இஸ்லாமியப் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்கிறவர்களாகத்தான் இருக்கின்றனர். ஆனால் இந்து மதத்தின் பண்டிகைகளை ஏற்காமல் வாழ்த்து சொல்லாமல் எதிர்த்துப் பேசுகின்றவராக இருக்கின்றனர். இந்த வகையில் இந்த வகையிலும் பெரும்பான்மை சமூக்த்தின் வெறுப்புக்கும் ஆளாகி நிற்கின்றனர் தமிழ்நாட்டு முற்போக்குவாதிகள். 

இஸ்லாமியரைக் குறிப்பிடும்போதே இஸ்லாமியத் தோழர்கள் என்றுதான் குறிப்பிடுவார்கள். அதே நேரம் வேற்று சித்தாந்தத்தைக் கடைப்பிடிக்கும் சக முற்போக்குவாதியக் கூட அப்படி விளிப்பதில் தயக்கம் காட்டுவார்கள். சில நேரம் சகோதரர்கள் என்றும் அழைப்பார்கள். அவ்வப்போது இவர்களின் பேசுவதும் முஸ்லிம்கள் கூடிய பொதுக்கூட்டத்தில்தான். பிரியாணி விருந்திலும் நோன்புக் கஞ்சி விருந்திலும் கலந்து கொண்டு பெரும்பான்மையினரின் கிண்டலுக்கும் எதிர்ப்புக்கும் ஆளாவார்கள். 

இப்படி இருக்கிறது முற்போக்குவாதிகள் முஸ்லிம்கள் இடையேயான உறவு. இந்த முற்போக்குவாதிகளில் அதிகமானோர் இஸ்லாமிய மதவாதத்தை விமர்சனம் செய்ததில்லை. காரணம் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களை விமர்சனம் செய்தால் எதிரிக்கு வேலை எளிதாகிவிடும். அதாவது இஸ்லாமிய மதவாத்தை விமர்சனம் செய்தால் அது இஸ்லாமோஃபோபியா ஆகிவிடும். எனவே பெரும்பான்மை இந்து மதவாதத்தை எதிர்ப்பதே ஜனநாயகத்தைக் காக்கும் வழி. இதுதான் தமிழ்நாட்டு முற்போக்குவாதிகளின் அடையாளம். இந்த அளவீடுகளின் அடிப்படையில்தான் பெரியாரிய இயக்கங்கள் இயங்குகின்றனர். இந்த வகை இயக்கமான திராவிட விடுதலை கழக்த்தைச் சேர்ந்தவர்தான் படுகொலை செய்யப்பட்ட ஃபரூக். இஸ்லாமிய ஆதரவாளர்களுக்கு இஸ்லாமிய மதவாதத்தின் நன்றி உணர்வு !

இந்த இஸ்லாமோஃபோபியாவை தனக்கு லாவகமாக பயன்படுத்திக் கொண்டவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள். இஸ்லாமிய மதவாதிகள். மதப்பரப்புரை செய்பவர்கள். இந்த அடிப்படைவாதம், மதவாதம், மத அடிப்படைவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்ற சொற்கள் வரும்போதெல்லாம் முஸ்லிம்கள் அதைக் குறிப்பிடுகிறவர்கள் சொல்லவரும் பொருளுக்கு மாற்றாக ஒரு பொருளைச் சொல்கின்றனர். மத அடிப்படை வாதம் என்றால் நாங்கள் இஸ்லாமின்படி நடக்கிறோம், இஸ்லாம் காட்டிய நேர் வழியில் செல்கிறோம், ஒரு முஸ்லிம் தவறு செய்தால் அது இஸ்லாமின் தவறாகாது, அது மாதிரி இஸ்லாம் சொல்லவில்லை இப்படித்தான் எங்களை நடக்கச் சொல்கிறது இஸ்லாம். நீங்கள் இஸ்லாமை அவதூறு செய்கிறீர்கள். ஒரு முஸ்லிம் தவறு செய்தால் அது இஸ்லாமாகாது, இந்தத் தவறு செய்தவர் இஸ்லாமை சரியாக விளங்க வில்லை. அந்தக் குற்றவாளி முஸ்லிம் பெயர்தாங்கி. இஸ்லாமியமதவாதமே இல்லை மார்க்கம்தான் உள்ளது... இப்படிச் சொல்கிறார்கள். இந்த பதில்கள் அனைத்தும் இஸ்லாமோஃபோபியா மனநோயாளிகளுக்கானவை. இஸ்லாமோஃபோபியாவை எதிர்ப்பவர்களிடம் இந்த பதில்கள் சொல்லத்தேவையில்லை ஏனென்றால் நீங்கள் சொல்கின்றவற்றை ஏற்கெனவே அறிந்திருக்கிறார்கள். ஆனால் மத அடிப்படைவாதம் என்று சொன்னால் எல்லா முஸ்லிம்களையும் குறிக்கிறதே என்று அங்கலாய்க்கிறார்கள்.

முற்போக்குவாதிகள் விமர்சனம் செய்யும் இஸ்லாமிய அடிப்படைவாதம் அல்லது மதவெறி என்ற கருத்தாக்கத்தை முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவில்லை. இஸ்லாமியர் சொல்லும் பதில் அவர்களுக்குப்புரியவில்லை. எனவேதான் இந்தத் தேவையில்லாத சச்சரவு.

மத அடிப்படைவாதம் என்பதை இஸ்லாமிய மதவாதிகள் கற்பித்திருக்கும் பொருளில் எடுத்துக்கொள்வதால்தான் இந்த கருத்துவேறுபாடு வருகிறது. தலைவன் என்ற சொல் தற்போது என்ன பொருள் தருகிறது ? ஒரு இயக்கத்தின் தலைவர், மதத் தலைவர், கட்சியின் தலைவர், அணியின் தலைவர் என்றெல்லாம் இருக்கின்றது இல்லையா ? அதே தலைவன் என்ற பொருள் சங்க இலக்கியத்தில் என்ன பொருள் தருகிறது. கணவன் அல்லது காதலன் இல்லையா ? இது இரண்டையும் வெவ்வேறு இடங்களில் வேறு பொருளைத் தருகின்றதைப் போலத்தான் மத அடிப்படைவாதம் என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.

மத அடிப்படைவாதி என்றால் மதத்தின் அடிப்படைகளைப் புரிந்து அதன்படி நடப்பவன் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். ஆனால் என்னைப் போன்றவர்கள் எப்படிப் பயன்படுத்துகிறோம் ? மத உணர்வை முன்னிறுத்தி செயலாற்றுகிறவன். மதத்தை முன்னிறுத்தி செயல் புரிகின்றவர். மதத்தைச் சார்ந்த மக்கள், மதநலன் ஆகியவற்றைக் கொண்டு அரசியல் செய்கிறவர் என்றே புரிந்து கொள்ளவேண்டும். இந்து மதவாதிகள் பாபர் மசூதியை இடித்தனர் என்பதில் இந்து மதத்தில் பாபர் மசூதியை இடிக்கவேண்டும் என்று புனித வாசகத்தைப் புரிந்து கொண்டுதான் இடித்தார்கள் என்றாகுமா ? இந்து மதவெறியர்கள் குஜராத் படுகொலையை நடத்தினர் என்றால் இந்துக்கள் அனைவரும் மதவெறியர்கள் என்றாகுமா ? இந்துமத அடிப்படைவாதிகள் முஸ்லிம்களை வெறுத்து ஒதுக்குகின்றனர் என்றால் அது எல்லா இந்துக்களையும் குறிக்குமா ? இவையெல்லாம் கிடக்கின்றன விடுங்கள்.


இஸ்லாமியர்கள் பொதுக்கூட்டங்களில் இஸ்லாமியர் பேசும்போது என்னென்ன சொற்களைப் பயன்படுத்துகின்றனர். இந்து பயங்கரவாதிகள், காவி பயங்கரவாதிகள், இந்துத்துவவாதிகள் இன்னும் பிற இவையெல்லாம் எல்லா இந்துக்களையும் குறிக்கின்றனவா ? இல்லையென்றால் இஸ்லாமிய அடிப்படைவாதம், மதவெறி என்பது எல்லா முஸ்லிம்களையும் குறிக்காது.

பாபர் மசூதியை இடிக்க வேண்டும் என்று எந்த இந்து வேதத்திலும் சொல்லப்படவில்லை. குஜராத் இனப்படுகொலை நடத்தப்பட வேண்டும் என்று எந்த புனித நூல்களிலும் இல்லை. மாட்டைக் கொன்றவனைக் கொல்ல வேண்டும் என்று எந்த நூலும் குறிப்பிட வில்லை. அதற்காக மேற்ச்சொன்ன நிகழ்வுகளெல்லாம் இந்து மதவெறி இல்லை, இந்து மதவெறியால் நிகழவில்லை. இந்து அடிப்படைவாதத்தால் நிகழவில்லை என்று சொன்னால் ஒத்துக் கொள்வார்களா இஸ்லாமியர்கள் ?. அதைச் செய்தவர்களெல்லாம் அவர்கள் இஸ்லாமியர்கள் நாம் இந்துக்கள் என்ற உணர்விலிருந்துதானே செய்தார்கள். அப்படித்தானே ஃபரூக் ஒரு இறை மறுப்பாளன் நான் நம்பிக்கையாளன் என்ற நிலையிலிருந்துதானே கொலை செய்தார்கள். மத நூலில் குறிப்பிட்டிருந்தால்தான் அது மத அடிப்படை வாதம் என்று சொன்னால் நீங்கள் உலகின் குற்றத்தில் பாதிசெயல்கள் மாற்று மத "பெயர் தாங்கிகளால்" செய்யப்பட்டவை என்றுதான் சொல்ல வேண்டி வரும்

ப்ரோட்டோகால்ஸ் - என்ற யூத மேலாதிக்கத் திட்டத்தை அறிவிக்கும் நூல் நூறாண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. அதை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் ஒரு முஸ்லிம் அவர் பெயர் ஆருர் சலீம். அந்நூலின் தலைப்பு "யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை" இங்கே யூத பயங்கரவாதிகள் என்பது அனைத்து யூதர்களையும் குறிப்பதில்லை என்றும் அவரே அந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார். இதிலிருந்து என்ன புரிகிறது.

 மேலும்

முஸ்லிம்கள் கூறுகின்ற இஸ்லாமியர்கள் மீதான வன்முறையைக் கண்டிக்கும்போது,

ரோகிங்கியா முஸ்லிம்களை விரட்டும் பர்மாவின் பௌத்த வெறியர்கள்
ஈழ முஸ்லிம்களைத் தாக்கும் புத்த தேரவாதிகள்
இந்திய முஸ்லிம்களைத் தாக்கும் காவி பயங்கரவாதிகள்
ஈராக்கைத்தாக்கும், ஆப்கானைத்தாக்கும் அமெரிக்க மேற்கத்திய பயங்கரவாதிகள்
பாலஸ்தீனத்தைத் தாக்கும் யூதபயங்கரவாத இஸ்ரேல்
வீகர் அல்லது உய்குர் முஸ்லிம்களைத் தாக்கும் ஹாங் சீனப்பேரினவாதம்

இவையெல்லாம் அந்தக் குறிப்பிட்ட பிரிவினரைச் சார்ந்த எல்லா மக்களையும் குறிக்காதுதானே. அது போலத்தான் இந்த இஸ்லாமியமதவாதி, அடிப்படைவாதி போன்ற சொற்களும் கையாளப்படுகின்றன. அந்த வகையில் பார்த்தால் முற்றும் அறிந்த ஒரு மார்க்க அறிஞராகட்டும், புதிதாக இஸ்லாமைத் தழுவிய ஒருவராகட்டும் தான் ஒரு இஸ்லாமியன் என்ற "மத உணர்விலிருந்து" செய்யும் செயல் இஸ்லாமிய அடிப்படைவாதமே. இறைமறுப்பாளனான ஃபரூக்கைக் கொன்றதன் காரணம், கொலைகாரர்களின் தான் ஒரு இஸ்லாமியன் என்ற உணர்விலிருந்தே வந்தது. அதற்காக இஸ்லாம் கொல்லச் சொல்கிறது என்று பொருள் இல்லை. ஃபரூக் இஸ்லாமின் எதிரி நமது எதிரி, தனது நம்பிக்கைக்கு எதிரி என்றெல்லாம் எண்ணித்தான் அந்தக் கொலைகாரர்கள் அவரைக் கொன்றிருக்கிறார்கள்.


 அதற்குக் காரணம் மதவெறிதான். அவர்கள் மதவெறியர்கள்தான். மதத்திற்காகச் செய்ததால் இது மத அடிப்படைவாதக் கொலைதான்.  மத அடிப்படைவாதம் தவறுதான். இதை வைத்து மொத்த முஸ்லிம் சமூகத்தையும் அவமதிப்பதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல, இது மொத்த சமூகத்தைக் குறிக்கிறது என்று திசைதிருப்புவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

சுருக்கமாகச் சொன்னால் ஒரு தனி முஸ்லிம், தனிப்பட்ட காரணங்களுக்காக செய்த தவறை வைத்து எல்லா இஸ்லாமியர்களைக் குறிக்கும்படி செயல்படுவது பேசுவது அரசியல் செய்வது இஸ்லாமோஃபோபியா மனநிலை என்றால், மதவெறியர்கள் மத அடிப்படையில் செய்த தவறை விமர்சனம் செய்யும்போது அது ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் குறிக்கிறது என்று மொத்த முஸ்லிம்களையும் இழுத்து வருவது திசை திருப்புவது இஸ்லாமிய மதவாதம். எனவே வெறும் நம்பிக்கைக்காக இஸ்லாமியர்களாக வாழ்கிறவர்கள் நாங்களும் மத அடிப்படைவாதிகளே என்று நம்பவேண்டாம், நீங்களாக வந்து பெயரைக் கெடுத்துக்கொள்ளவேண்டாம். இதைப் புரிந்துகொள்ளாவிட்டால் நட்டம் உங்களுக்குத்தான்.

இஸ்லாமிய மதவாதிகள் நாத்திகர்களை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் ? ஏனென்றால் இறைமறுப்பாளர்கள் பெரும்பான்மையானவர்கள் இந்து மதத்திலிருந்து வந்தவர்கள். இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பவர்கள். இஸ்லாமியர்களின் துணையாக இருப்பவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்லாமிய மதத்தை விமர்சனமே செய்ய மாட்டார்கள். இஸ்லாமிய மதவாதிகளின் கருத்துப்படி ஒரு மாற்று மத இறைமறுப்பாளன் என்பவன் இஸ்லாமிற்கு ஒரு படி முன்னோக்கி இருக்கிறான். அதாவது அவன் இஸ்லாத்தை நோக்கி இருக்கிறான். அவன் தன்னுடைய சொந்த மதத்தை தூக்கியெறிந்து விட்டான், அந்த மதம் சொல்லும் கடவுளை கருத்துக்களை உதறி விட்டான் என்றால் அவனை இஸ்லாமியனாக மாறும் வாய்ப்புள்ளது. எனவே பிறமத நாத்திகர்கள் மீது அவர்கள் அச்சமோ வெறுப்போ கொள்வதில்லை. பெரியார்தாசனைப் போல பல இறைமறுப்பாளர்களும் இஸ்லாமில் இணையலாம் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் இஸ்லாம் மதத்திலிருந்து வெளியேறியவனை இஸ்லாமை விமர்சிப்பவனை அச்சத்துடனும் ஆத்திரத்துடனும் வெறுப்புடனுமே எதிர்கொள்கிறார்கள். ஏனென்றால் அவன் இஸ்லாமை அறிந்து விலகியவனிடம் இஸ்லாமிய மதவாதிகள் பதில் சொல்லமுடியாத கேள்விகள் இருக்கின்றன. இறைவனையே அவன் கேள்விக்குள்ளாக்குகிறான். அவனிடம் இவர்களின் மதம் தோற்று விட்டது. இவர்களின் நம்பிக்கை தோற்று விட்டது. எனவே இவர்கள் தோற்று விட்டார்கள். எனவே அந்த இறைமறுப்பாளனை வெறுக்கிறார்கள். சாதாரண நம்பிக்கையாளர்கள் அவனைச் சகித்துக் கொண்டு தங்களது நம்பிக்கைகளுடன் தொடர்கிறார்கள். ஆனால் மத அடிப்படைவாதிகள், மதவெறியர்கள் அவனைக் கொல்கிறார்கள். ஏனென்றால் அவர்களால் கருத்தால் வெல்ல முடியாது. அந்தத் தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. அப்படிக் கொலை செய்து சமூகத்திடம் ஒரு அச்சம் உண்டாக்கினால்தான் மற்றவர்கள் அவ்வழியில் செல்லாமல் தடுக்க முடியும்.

இது போன்ற மதவெறிக் கொலைகளைத் தடுக்க ஜனநாயக நாடுகள்தான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இருப்பதிலேயே சிறுபான்மையினரான இறைமறுப்பாளர்கள் தங்கள் கருத்துக்காகவும், கொள்கைக்காகவும் தனிமனிதனாலோ மதவெறி இயக்கத்தினாலோ படுகொலை செய்யப்பட்டால் கொலைவெறி கொண்ட கொடுங்கோலர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை விதிக்கப்படவேண்டும். 

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment