சீதையின் நிலை

சீதையைக் கவர்ந்து சென்றதற்காக 

இராவணனைத் திட்டுகிறவர்கள்

சீதையைத் தீயில் இறக்கியதற்காக

இராமனைத் திட்டுவதில்லை

Download As PDF
Bookmark and Share

Post Comment

பாலியல் வன்முறைக்குக் காரணம் பெண்களின் உடை என்பது தவறு

பெண்கள் கவர்ச்சியாக உடலைக் காட்டியவாறு உடை அணிவதால்தான் பாலியல் வன்முறைக் நடக்கிறது என்ரு 101 விழுக்காடுகள் உறுதியான கொள்கையை உடையவர்களுக்கு ஒர் சவால்.


பெண்கள் எந்த வகையில் உடை அணிந்தாலும் குறிப்பிட்ட அளவுக்கு ஆண்களுக்கு காமம் தோன்றுவது இயல்பே. அதற்காக பாலியல் ரீதியான தாக்குதல், சீண்டலை ஏற்றுக் கொள்ள முடியாது. உணர்வுகளுக்கு அடிமையாகாமல் அதை இயல்பாகக் கடந்து செல்வதற்கு ஆண்கள் கற்றுக் கொள்ள வேண்டும். 

ஆண்கள் எவ்வளவு கவர்ச்சியாக இருந்தாலும் பெண்கள் எந்த வித வன்முறையிலும் ஈடுபடுவதில்லை என்பதைப் போலவே ஆண்களும் மாற வேண்டும் என்பதே அறம். கட்டுப்படுத்த முடியாதளவுக்கு காம உணர்வு உந்தித் தள்ளினால் வீட்டுக்குச் சென்று கை மைதுனம் செய்து கொள்ளவும். இதைக் கிண்டலுக்குச் சொல்லவில்லை.  உண்மையாகவே பரிந்துரைக்கிறேன்.

ஒரு பெண் தன்னை செக்ஸியாகக் காட்டிக் கொள்வதாலும் உடை அணிவதாலும் அவள் விருப்பமோ அனுமதியோ இல்லாமல் அவளைத் தொடக்கூடாது அத்து மீறக்கூடாது. விருப்பம் இல்லாத நிலையில் விலகி நிற்கக் கற்றுக் கொள்ளுங்கள். விருப்பம் இருந்து இருவர் ஒன்றாக இருக்கும்போது மற்றவர்கள் அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதே கண்ணியம்


Download As PDF
Bookmark and Share

Post Comment

காவிகளின் போலி அங்கலாப்பு

 சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தேசபக்தர்களால் வெவ்வேறு சொற்களில் கூறப்படும் கருத்து இது. இவர்கள் எதிர்கட்சியாக இருக்கும்போது விமர்சனமே செய்யாத உத்தமர்களைப் போல உதார் விடுவார்கள்.

"இந்தியாவில் மட்டுமே மாண்புமிகு பாரதப் பிரதமரை தேச விரோதிகள் எதிர்க்க முடியும், இழிவு படுத்த முடியும். சௌதியிலோ, சீனாவிலோ, பர்மாவிலோ, ருஷ்யாவிலோ, வட கொரியாவிலோ, க்யூபாவிலோ எதாவது வாயைத் திறந்தால் சிறையில் தள்ளுவார்கள் இல்லையென்றால் போட்டுத் தள்ளுவார்கள்"

இந்தியாவில் இருக்கும் அரைகுறை ஜனநாயகத்தை இவனுக என்னவோ போராடி நம்மளுக்குக் குடுத்த மாதிரியும் அதை நாம வாங்கித் தின்னுட்டு இவனுக்கு எதிராகப் பேசற மாதிரியும் அதையெல்லாம் அவனுக சகிச்சிட்டு இருக்கற மாதிரியும் கூவிட்டு இருக்கும் காவிகள், இந்த ஃபாசிச பாஜக அரசும், மாநில அரசுகளும் எத்தனை போராளிகளையும் சமூக ஆர்வலர்கள், மனித உரிமைப் போராளிகள், மாஓ வியர்கள், சுற்றுச் சூழல் போராளிகளைக் கைது செய்திருக்கிறார்கள் ? டிவிட்டரில் கருத்து சொன்னதற்குக் கைது, இரங்கல் கூட்டத்தில் முழக்கம் இட்டதற்குக் கைது இப்படியெல்லாம் ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கி விட்டு ஜனநாயகத்தின் மீது பழி போடுவார்கள்.

கொலையும் செய்து விட்டு கொலை கொலை என்று கத்திக் கொண்டே ஓடுவார்கள்

Download As PDF
Bookmark and Share

Post Comment

குக்கூ குக்கூ

குக்கூ குக்கூ…
தாத்தா தாத்தா களவெட்டி…
குக்கூ குக்கூ…
பொந்துல யாரு மீன்கொத்தி…

குக்கூ குக்கூ…
தண்ணியில் ஓடும் தவளக்கி…
குக்கூ குக்கூ…
கம்பளி பூச்சி தங்கச்சி…

(Cuckoo! Cuckoo! Grandpa weeding out the fields.
Cuckoo! Cuckoo! Who’s in the trunk hole? It’s the kingfisher.
Cuckoo! Cuckoo! Swimming frog in the water.
Cuckoo, Cuckoo! Is the sister of the caterpillar)

அல்லி மலர்க்கொடி அங்கதமே…
ஒட்டரே ஒட்டரே சந்தனமே…
முல்லை மலர்க்கொடி முத்தாரமே…
எங்கூரு எங்கூரு குத்தாலமே…

(Lilly is making fun of me. My adamant sweet sandalwood.
My Jasmine-decked necklace with pearls. Oh, my native Kutralam)

சுருக்கு பையம்மா…
வெத்தலை மட்டையம்மா…
சொமந்த கையம்மா…
மத்தளம் கோட்டுயம்மா…

தாயம்மா தாயம்மா…
என்ன பண்ண மாயம்மா…
வள்ளியம்மா பேராண்டி…
சங்கதியை கூறேண்டி…
கண்ணாடியே காணோடி…
இந்தர்ரா பேராண்டி…

(My grandma’s shrink bag with betel and nuts.
The hands that carry them play the Parai drum.
Grandma, grandma, what magic did you do.
Valliyamal’s grandson tells me the story.
Where are my glasses? Take it, my grandson)

அன்னைக்கிளி அன்னைக்கிளி…
அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி…
நல்லபடி வாழச்சொல்லி…
இந்த மண்ணை கொடுத்தானே பூர்வகுடி…

கம்மங்கரை காணியெல்லாம்…
பாடி திரிஞ்சானே ஆதிக்குடி
நாய் நரி பூனைக்கெல்லாம்…
இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி…

(Annakilli! Annakilli! Parrot sitting in the banyan tree.
Blessing to lead a good life, our ancestors have bequeathed us this soil.
Across the river banks and on the fertile fields, Our forefathers have sung through their life (Indigenous Tribes)
The lakes and ponds belong To the dogs, foxes, and cats too)

எஞ்சாய் எஞ்சாமி…
வாங்கோ வாங்கோ ஒன்னாகி…
அம்மா ஏ அம்பாரி…
இந்தா இந்தா மும்மாரி…

எஞ்சாய் எஞ்சாமி…
வாங்கோ வாங்கோ ஒன்னாகி…
அம்மா ஏ அம்பாரி…
இந்தா இந்தா மும்மாரி…

(Enjoy, my dear. Come together as one
Ride on the elephants-shower in the rains)

குக்கூ குக்கூ…
முட்டைய போடும் கோழிக்கு…
குக்கூ குக்கூ…
ஒப்பனை யாரு மயிலுக்கு…

குக்கூ குக்கூ…
பச்சையை பூசும் பாசிக்கு…
குக்கூ குக்கூ…
குச்சிய அடுக்குன கூட்டுக்கு…

(Cuckoo! Cuckoo! The hen is laying the egg.
Cuckoo! Cuckoo! Who dolled up the peacock.
Cuckoo! Cuckoo! Algae spreading its green.
Cuckoo! Cuckoo! Nest arranged by tiny twigs)

பாடுபட்ட மக்கா…
வரப்பு மேட்டுக்காரா…
வேர்வத்தண்ணி சொக்கா…
மினுக்கும் நாட்டுக்காரா…

ஆக்காட்டி கருப்பட்டி…
ஊதங்கொழு மண்ணுச்சட்டி…
ஆத்தோரம் கூடுகட்டி…
ஆரம்பிச்ச நாகரீகம்…

(The toiling farmer with his fertile fields.
His sweat-drenched shirt, the glittering countryman,
the fire-kindling flute and the earthen pot.
Settling in the river banks is the beginning of civilization)

ஜன் ஜனே ஜனக்கு ஜனே மக்களே…
உப்புக்கு சப்பு கொட்டி…
முட்டைக்குள்ள சத்துக்கொட்டு…
அடக்கி ரத்தங்கொட்டு…
கிட்டிப்புள்ளு வெட்டு வெட்டு…

(Jan Jana Janaku Jana, Oh my people.
Tasting the salt Yolk, the source of all energy.
Drip blood from leech bite. 
Strike away the Gilli-Danda)

நான் அஞ்சு மரம் வளர்த்தேன்…
அழகான தோட்டம் வச்சேன்…
தோட்டம் செழிச்சாலும்…
என் தொண்டை நனையலேயே…

என் கடலே கரையே…
வனமே சனமே…
நிலமே குளமே…
இடமே தடமே…

(I planted five trees. Nurtured a beautiful garden.
My garden is flourishing. Yet my throat remains dry
My sea, bank, forest, people,
lands, clan, place, and track)

எஞ்சாய் எஞ்சாமி…
வாங்கோ வாங்கோ ஒன்னாகி…
அம்மா ஏ அம்பாரி…
இந்தா இந்தா மும்மாரி…

எஞ்சாய் எஞ்சாமி…
வாங்கோ வாங்கோ ஒன்னாகி…
அம்மா ஏ அம்பாரி…
இந்தா இந்தா மும்மாரி…

(Enjoy, my dear. Come together as one
Ride on the elephants-shower in the rains)

பாட்டன் பூட்டன் காத்த பூமி…
ஆட்டம் போட்டு காட்டும் சாமி…
ராட்டினந்தா சுத்தி வந்தா…
சேவ கூவுச்சு…

அது போட்டு வச்ச எச்சம்தானே…
காடா மாறுச்சு…
நம்ம நாடா மாறுச்சு…
இந்த வீடா மாறுச்சு…

(My ancestors guarded the land.The devotee that dances;
As the earth rotates around the rooster crows.
Its excretions fertilized the forests.
It turned into our country, then our home too)

என்ன கொரை என்ன கொரை…
என் சீனி கரும்புக்கு என்ன கொறை
என்ன கொறை என்ன கொறை
என் செல்ல பேராண்டிக்கு என்ன கொறை…

(What’s the matter, what’s the matter, my dear?
What’s the matter, my sugarcane?
What’s the matter, what’s the matter, my dear?
My darling grandson, what’s the matter?)

பந்தலுல பாவக்கா…
பந்தலுல பாவக்கா…
வெதகல்லு விட்டுருக்கு…
அது வெதகல்லு விட்டுருக்கு…
அப்பன் ஆத்தா விட்டதுங்க…
அப்பன் ஆத்தா விட்டதுங்க…

(Bitter Gourd in my canopy. Bitter Gourd in my canopy.
It has given us seeds. Given us seeds.
Left by our mom and dad. Left by our mom and dad.
Enjoy, my dear. Come together as one.
Ride on the elephants-shower in the rains)

எஞ்சாய் எஞ்சாமி…
வாங்கோ வாங்கோ ஒன்னாகி…
அம்மா ஏ அம்பாரி…
இந்தா இந்தா மும்மாரி…

எஞ்சாய் எஞ்சாமி…
வாங்கோ வாங்கோ ஒன்னாகி…
அம்மா ஏ அம்பாரி…
இந்தா இந்தா மும்மாரி…

எஞ்சாய் எஞ்சாமி…
வாங்கோ வாங்கோ ஒன்னாகி…
அம்மா ஏ அம்பாரி…
இந்தா இந்தா மும்மாரி…

எஞ்சாய் எஞ்சாமி…
வாங்கோ வாங்கோ ஒன்னாகி…
அம்மா ஏ அம்பாரி…
இந்தா இந்தா மும்மாரி…

என் கடலே கரையே…
வனமே சனமே…
நிலமே குளமே…
இடமே தடமே…

குக்கூ குக்கூ…


Download As PDF
Bookmark and Share

Post Comment