சின்மயி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சின்மயி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆரிய உதடும் திராவிட உதடும் பேசுவது என்ன ?

                                              

திராவிடத் திருமகனின் திருவாய்மொழிகளும், மோடியையே கலாய்க்கும் பார்பன சதிகாரியும். பார்ப்பனியத்தை எதிர்க்கிறோம் என்று பார்ப்பனியத்தையே வெட்கப்படுமளவுக்கு மாற்றி விட்ட நமது திமுக திராவிடப் புரட்சியாளர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். 

காவி பயங்கரவாதி இராமகோபாலன் இறந்ததற்கு வருத்தமும் இரங்கலும் தெரிவிக்கும் வைரமுத்து. 

பாலியல் வன்முறையைக் கண்டிக்க பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தையே பகிர்ந்து கிண்டல்/விமர்சனம் செய்யும் பாடகர் சின்மயி. 

அவருக்கு இருந்தது எல்லாம் கொள்கை அதில் குன்றாது கண்ணியம் காத்தாராம். அவர் செத்ததால் வருத்தப்படுகிறவர்களுக்கு இவர் இரங்கல் தெரிவிக்கிறாராம். இதன் மூலம் யாரை செருப்பால் அடித்தார் என்று யாருக்கும் தெரியாத மாதிரி இருப்போம் திராவிடப் புரட்சியாளர்களே !

இதில் யார் திராவிடம் பேசுகிறார்கள், யார் பார்ப்பனியம் பேசுகிறார்கள் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு பரிசும் இல்லை.
Download As PDF
Bookmark and Share

Post Comment

#Metoo எதிர்ப்புப் புரட்சியாளர்கள்

ஒருவர் தனக்கு நடந்த கொடுமையை வெளியே சொன்னால் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் அதற்கு என்ன எதிர்வினை ஆற்றுகிறார்கள் என்று பாருங்கள். 

இப்படிப்பட்ட நகைப்படங்களை உருவாக்கியவர்கள்தான் சமூக வலைத்தளங்களில் அரசியல்வாதிகளுக்கு எதிராக கருத்து சொல்கிறவர்கள்.

மனநோய் முற்றிய அறிவாளிகள்








Download As PDF
Bookmark and Share

Post Comment

#எனக்கும் என்ற #Metoo இயக்கம் - முற்போக்குவாதிகளின் முரட்டுப் பிடிவாதம்


இந்த #Metoo இயக்கம் அதன் ஹாஸ்டாக் மூலம் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் ஆகிய நண்பர்களின் மனப்போக்கு குறித்து ஒரு தெளிவு கிடைத்தது. இன்னும் 500 ஆண்டுகளுக்கு தமிழ் நாட்டில் ஜாதி ஒழிய வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள். 500 ஆண்டுகளுக்குப் பின் ஜாதி ஒழிந்து சமத்துவம் கிடைத்தாலும் பெண்களின் நிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை போல் தெரிகிறது. இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் பெண்களின் பாலியல் வன்முறைக்கான புரிதலை ஆண்களுக்கு ஏற்படுத்த முடியாது என்பது தெரிகிறது. 

சமூக வலைத்தளங்களிலும் சரி, சமூகத்திலும் சரி ஏதாவது ஒரு விவகாரமோ விவாதமோ பொதுத்தளத்தில் வருகிறது என்றால் மிக மோசமான வகையில் கிண்டலடிக்கப்படுகிறது. இது ஜனநாயகத்தில் அடக்கம் என்றாலும் கூட அதன் விளைவுகளை நோக்குகையில் அது தவிர்க்கப்பட வேண்டியதே என்று தோன்றுகிறது. ஏனெனில் விதவிதமான கருத்துக்கள் மோதும்போதுதான் நியாய அநியாயங்கள் அறியப்பட்டு உண்மை புலப்படும். ஆனால் வெறுமனே போன்மிகள்(Memes) உருவாக்குகிறேன் பேர்வழி என்று வடிவேலு, கவுண்டமணியின் படங்களைப் போட்டு எதுகை மோனையாக ஒரு பிரச்சனையை நக்கலடிப்பதால் என்ன விளைகிறது. பொழுதுபோக்குக்காக சமூக வலைத்தளங்களில் இருப்பவர்கள் உண்மையான சமூகப் பிரச்சனையை உணராமல் அதை நக்கலடித்து அதன் அடிப்படையையே மாற்றுகின்றனர். அதை ஒரு பிரச்சனையாகவே அவர்கள் பார்க்க மறுக்கின்றனர். 

பாலியல் வன்முறைக்கு எதிரான #Metoo ஏன் இந்தளவுக்கு கிண்டலடிக்கப்படுகிறது. சில சமாச்சாரங்கள் உணர்வுப்பூர்வமாகவே அணுகப்பட வேண்டும். ஆனால் இந்தளவுக்குக் கிண்டலும் நக்கலும்?.  ஒருவர் ஏன் இறைமறுப்பாளராகிறார் ? மதம் மனிதன் மீதான கொடுமையைச் செய்வதால்தானே ? முற்போக்குவாதம், இறைமறுப்பு போன்ற பிறப்பினால் அல்லாமல், தானாக விரும்பி ஏற்றுப் பின்பற்றும் கொள்கைகளைக் கொண்டவர்கள் முதலில் மனிதநேயராக இருக்க வேண்டும். ஆனால் முற்போக்குவாதியாக இருந்து கொண்டே ஜாதிவெறியர்களும் மதவெறியர்களும் முற்போக்குவாதம் பேசும் பெண்களை கேவலப்படுத்துவது போல் செய்கின்றனர். பாலின அடிப்படையில் அடக்கு முறையை அனுபவிப்பவர்கள் ஆண்களை விடவும் பெண்களே. பெண்கள் ஒரு நிலைக்குச் செல்ல வேண்டுமானால் ஆண்களை விட அதிகமான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதில் பாலியல் ரீதியிலான சுரண்டல்கள், கேலிகள், புறக்கணிப்புகள் மிகவும் சாதாரணம். இதெல்லாம் அறிந்தும் கூட முற்போக்குவாதிகள் #நானும்கூட (#Metoo) என்ற பாலியல் வன்முறைக்கு எதிரான பெண்களின் போராட்டத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். 

பெண்கள் பாலியல் வன்முறைக்கு எதிராக #Metoo சொன்னால் அதை ஆதரிக்க மாட்டேன் என்கின்றனர். ஆனால் பெண்கள் சபரி மலைக்குப்போவதை நான் ஆதரிப்பேன் என்கிறார்கள். ஏன்  அவர்கள் சமத்துவ, சமூக நீதி ஆதரவாளர்கள். ஆக பெண்கள் முட்டாள்தனத்திற்கு வேண்டுமானால் சமத்துவம் என்று ஆதரவு தரலாம். ஆனால் பெண்கள் பாலியல் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வுக்காக ஒரு போராட்டம் நடத்தினால் அதை நக்கல் செய்யலாம். நல்லவேளை பழக்க தோஷத்தில் இத்தனை வருடங்களாக ஐயப்பன் கோயிலுக்குப் போகாத பெண்கள் இப்போது மட்டும் ஏன் போக வேண்டும் என்கிறார்கள் என்று யாரும் கேட்கவில்லை.

சபரி மலையில் பெண்கள் நுழைவுக்கு வழக்கு நடத்தி வென்ற காவிகள் பெண்களை வைத்தே பெண்கள் சபரிமலைக்குச் செல்வதை எதிர்த்து விளம்பரப் போராட்டம் நடத்துவதைப் போல் நான் பெண்களுக்கு ஆதரவானவன், பாலியல் வன்முறைக்கு எதிரானவன் என்று சொல்லிவிட்டு #Metoo க்கு எதிராக பெண்களே எழுதியவற்றை பகிர்ந்து தனது பாலியல் வன்முறைக்கு எதிராக பெண்களின் சிறிய முன்னெடுப்பைக் கூட எட்டி உதைத்து தனது வெறுப்பைக் காட்டுகின்றனர். பாப்பாத்திக்கு நடந்தது பாலியல் வன்முறை என்றால் கூட அதை ஏற்கமாட்டேன். குற்றச்சாட்டு சொன்னவரையே தேவடியா தேவடியா என்று திட்டுவது எல்லாம் என்ன வகை மனிதம் என்பது தெரியவில்லை. 

இப்படித் திட்டுகிறவர்கள் சிலர் ஃபேஸ்புக்கில், ட்விட்டரில் தனது அடையாளப்படமாக, சே குவேராவையும், அண்ணலையும், பெரியாரையும், கலைஞரையும், ஸ்டாலினையும், பிரபாகரனையும் வைத்துக் கொண்டிருந்தார்கள். எப்படி கொஞ்சமும் மனசாட்சியே இல்லாமல்? நீங்கள் திட்டுவதால் உங்கள் தலைவர்களுக்கல்லவா கெட்ட பெயர் ? முற்போக்குவாதிகள் மீதான மரியாதையே குறைந்து விட்டது. அண்ணல் பெண்களுக்கு செய்ததென்ன ? ஆ பெரியார் பேசாத பெண்ணியமா ? பெண்களுக்கு 33% என்று கலைஞர் கொண்டு வராத திட்டமா ? என்றெல்லாம் பெண்ணியத்தைப் புகழ்ந்து கொண்டு பெண்களே தங்களுக்காகப் பேசும்போது அதை ஆதரிக்காமல் பெண்களை இழிவு செய்வதில் ஜாதிவெறியர்களுக்கும் சங்கிகளுக்கும் சற்றும் இளைத்தவர்களல்ல இவர்களில் சிலர். 

பரியேறும் பெருமாள் படம் பார்த்தவர்களுக்குத் தெரியும், பரியனின் அப்பா பெண் வேடமிட்டு கரகாட்டம் ஆடும் கலைஞர். அவரை பரியனின் கல்லூரியில் வேட்டியை அவிழ்த்து ஓட விடுவார்கள். எல்லோரையும் கலங்கச் செய்யும் காட்சி இது. கரகாட்டத்தில் பெண்களுடன் ஆபாசமாக ஆடினாலும் அவரை அவமானப்படுத்தும் நோக்கில் வேட்டியை உருவினால் அதை அவமானமாகவே கருதுவோம். ஆபாசமாக ஆடுகிறவனுக்கு என்ன மான அவமானம் என்று யாருக்கும் தோன்றவில்லை. ஆனால் இதே இடத்தில் ஒரு பெண்ணை வைத்துப் பார்த்தால் எத்தனை பேர் அதை அவமானம் என்று ஏற்றுக் கொள்வர் ? 

#Metoo எதிர்ப்பாளர்களின் எதிர்ப்புக்கள்:

சின்மயி குற்றம் சாட்டுவது பார்ப்பன சதி. அவர் ஒரு பாப்பாத்தி. வைரமுத்து மீது அபாண்டமாக புகார் சொல்கிறார். ஆண்டாள் விவகாரத்தை வைத்து அவரைப் பழி வாங்குகின்றனர். அவர் ஏற்கெனவே பொய் குற்றச்சாட்டு கூறியவர். வைரமுத்துவை திருமணத்திற்கு அழைத்து அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது ஏன் ?

அவர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கருத்து சொன்னது, Highyengar என்று ஜாதிப் பெருமை பேசியது, மீனவர்களைப் பற்றிக் கூறியது பற்றி ஏற்கெனவே சில வருடங்களுக்கு முன்னர் எழுதியிருக்கிறேன்.  2004 - இல் ஜெயலலிதா ஆட்சி. ஒரு வேளை அப்போது குற்றம் சுமத்தியிருந்தால் மட்டும் ஆதரித்திருக்கப்போகிறார்களா பார்ப்பன எதிர்ப்பாளர்கள். இதே வைரமுத்து அல்லாமல் எஸ்.வி. சேகர், எச். ராசா மீது குற்றம் சுமத்தியிருந்தால் கதை வேறாக இருந்திருக்கும். எனவே இதை எப்பாடு பட்டாவது பாஜகவுடன் முடிச்சுப் போட்டுவிடப் பார்க்கிறார்கள். அதைக் கொண்டே பார்ப்பன எதிர்ப்பு மூலம் #Metoo வை எதிர்த்துக் கொண்டே சமாளித்து விடலாம். 

நடிகை ஸ்ரீரெட்டி #Metoo சொன்னபோது சிரித்தவர்கள் சின்மயிக்கு மட்டும் பொங்குகிறார்கள்

அதைச்செய்தவர்கள் இதைச்செய்கிறார்கள், அதைச் செய்யாதவர்கள் இதைச் செய்கிறார்கள் என்ற எதுகை மோனை தனக்குப் பிடிக்காத எல்லோரையும் ஒரே கோட்டில் நிறுத்தப் பயனபடும் வசனம். ஸ்ரீரெட்டிக்கு சிரித்தவர்கள் இப்போதும் சின்மயி சொன்ன #Metoo வுக்கு சிரிக்கிறார்கள். ஸ்ரீரெட்டிக்கு ஆதரித்தவர்கள்தான் சின்மயிக்கும் ஆதரிப்பார்கள். ஸ்ரீரெட்டி ஆந்திரா என்பதால் இங்கே பெரிதாகத் தெரியவில்லை. வைரமுத்து, சின்மயி நம்ம ஊர் பிரபலம் என்பதால் இங்கே பரபரப்பானது. ஸ்ரீரெட்டி மட்டுமல்ல தனுஸ்ரீ தத்தா சொன்ன போதும் யாரும் இங்கே கண்டுகொள்ளவில்லை.


இது பார்ப்பன சதி. மேலும் படுக்கையைப் பகிர்ந்து விட்டு காரியம் சாதித்துக் கொண்டு இப்போது புகார் சொல்வது தேவிடியாத்தனம். வைரமுத்து மீது வன்மம் கொண்ட பார்ப்பன சதி.

RSS ஆதரவாளராக மட்டுமன்று, அவர் ஒரு RSS பயங்கரவாதியாகவோ, ISIS பயங்கரவாதியாகவோ இருந்தால் கூட ஒரு பெண்ணாக அவர் மீது பாலியல் வன்முறையை ஏற்க/ஏவ முடியாது. அவர் பார்ப்பனப் பெண்ணாக இருப்பதால் பாலியல் சீண்டல்களை எதிர் கொண்டிருக்க முடியுமா ? அவர்களுக்கு மட்டும் என்ன கொம்பா இருக்கிறது ? இவ பாப்பாத்தி இவளை நாம சீண்டக்கூடாது என்றுதான் ஆண்கள் நினைக்கிறார்களா ? மேலும் சின்மயி வைரமுத்து மட்டுமன்றி பிற 5 பார்ப்பனக் கலைஞர்கள் மீதும் குற்றம் சாட்டியிருக்கிறார். அதே போல் சின்மயி அல்லாது வேறு சில பெண்களும் வைரமுத்து மீது குற்றம் சாட்டியுள்ளனர். இது பார்ப்பன சதி என்பது சொல்பவர்களின் தனிப்பட்ட வன்மத்துக்கான சாதகமான பொய்.  வைரமுத்து ஒன்றும் திராவிட சித்தாந்தவாதியல்ல. கலைஞருக்கு நெருக்கமாக இருந்தார். ஆனால் திராவிடப் பகைவர்களான பாஜக வின் தருண் விஜய், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் மேடையைப் பகிர்ந்து பாராட்டித் தள்ளியவர். இவருக்கு முதன் முதலாக ஆதரவு தெரிவிக்கிறேன் என்று தேவையில்லாமல் சின்மயிக்கு எதிராக கருத்து சொல்லி இதை ஆரிய திராவிட பிரச்சனையாக மாற்றியவர் சுப. வீரபாண்டியன். எனவே இப்பிரச்சனையில் முதலிலேயே சின்மயிக்கு எதிராக பார்ப்பன/மேட்டுக்குடி/வேசி என்ற கருத்துக்களை நம்பியவர்கள் அதை நிரூபிக்கவே முனைகின்றனர். 


#Metoo என்பது படுத்து காரியம் சாதித்துவிட்டு பின்னர் கூவும் தேவிடியாத்தனமல்ல. மிகவும் நெருங்கியவர்களால் ஏற்படுவது, காதலர்கள், நண்பர்கள், அயலவர்கள், அண்டை வீட்டினர், பொது இடங்கள், பணியிடங்கள், கல்வியகங்கள், அரசுதனியார் அலுவலகங்களில், இணையர்களால் அவர்களது அண்ணன், தம்பி, அப்பா, சிற்றப்பா, மாமா, தாத்தாக்களால் ஏற்பட்ட சிறிய பாலியல் சீண்டல்கள், தொல்லைகள், வற்புறுத்தல்கள், மருட்டல்கள், ஏமாற்றி துய்ப்பது, ஆசை வார்த்தை காட்டித் துய்ப்பது, போர்ன் படங்கள், வீடியோக்கள் அனுப்புவது, அனுப்பச் சொல்வது இப்படிப் பல வகையும் அடங்கும். சிறு குழந்தையாக இருந்த போது ஏற்பபட்ட மோசமான அனுபவம், பெண்களால் ஆண் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல் என்று பலவும் இதில் அடங்கும். 

இது ஆண்களுக்கு எதிரான "பெண்ணியம்" இல்லை. பாலியல் வன்முறைக்கு ஆளானவர்கள் + பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியவர்கள் என்ற பிரச்சனை மட்டுமே. பாலினம் குறித்ததல்ல. இதைச் செய்தவர்கள் கண்டந் துண்டமாக வெட்டிக் கொல்லப்பட வேண்டியவர்களும் அல்ல. ஆளானவர்கள் நம் பரிதாபத்துக்கு உரியவர்களும் அல்ல. எல்லா இடத்திலும் நீக்கமற நடக்கும் ஒரு இழிசெயலுக்கு எதிரான விழிப்புணர்வு, செய்பவர்களுக்கு ஒரு அச்சத்தையும், செய்யப்படுகிறவர்களுக்கு ஒரு ஆறுதலையும் தரக்கூடிய கருத்தாக்கத்தின் பரவல். செய்தவர்கள் சிறைக்குச் செல்வது மட்டுமல்லாமல், வருத்தம் தெரிவித்தல், மன்னிப்பு கோருதல், சமரசம் போன்ற தீர்வுகளும் வருகின்றன.

அப்பவே சொல்லாமல்  இத்தனை வருடங்கள் கழித்து சொல்வதால் இது பொய் ?

கூடங்குளம் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தியவர்கள் கேட்ட கேள்விதான் இது. ஏன் அப்போதே எதிர்க்காமல் இப்போது எதிர்க்கிறீர்கள் என்றார்கள். எதையும் எதிர்ப்பதற்கு உகந்த காலமும் வேண்டுமே. அதற்கான உளவியல் பலம் வேண்டுமே. இப்போது புகார் சொல்பவர்களுக்கு நடந்ததெல்லாம் நேற்று நடந்தததில்லை. பல வருடங்களுக்கு முன்னர் நடந்ததே. 

14 வருடக்கணக்கில் ஒத்துக்கொண்டு ஒரு நாள் எதிர்த்தால் அது தவறா ? விருப்பமில்லாமல் நம் மீது நடக்கும் எல்லாவற்றையும் உடனே எதிர்த்து விடும் வலிமையும் சூழலும் எல்லாருக்கும் வாய்க்கிறதா ? கணவனாக இருந்தால் கூட அது விருப்பமில்லாமல் தொடர்ந்து செய்தால் பெண் சட்டத்தை நாடலாம் அல்லவா ? ஒரு முறை விருப்பமில்லாமல் நடந்த உடனே ஒரு பெண் போய் சட்டத்தில் முறையிடுவாரா ? பல நாட்கள் பார்த்து சலித்த பின்னர் வேறு வழியின்றி பொறுக்க முடியாமல்தானே வழக்கு போட முடியும் ?. அவர்களால் உடனே சொல்ல முடியவில்லை, அதற்கான இடமும் பக்குவமும் சமூகத்திடம் இருப்பதாக அவர்களும் நம்பவில்லை என்பதற்கு இந்த சமூகம்தான் வெட்கப்பட வேண்டும்.

2000 வருடங்கள் பார்ப்பன அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடாமல் பார்ப்பனியத்தை அனுபவித்துக் கொண்டு இருந்த திராவிடர்கள் ஏன் கடந்த 150 வருடங்களாக மட்டும் போராடுகின்றனர் ?. இலங்கை சுதந்திரமடையும் முன்பே சிங்கள இனவெறிக்கு ஆளான ஈழத்தமிழர்கள் ஏன் 1970 க்கும் மேல்தான் ஆயுத இயக்கங்களைத் தொடங்கினார்கள் ?. இந்து மதத்துக்குள்ளையே இருந்து இந்து மத விடுமுறை நாட்களில் விடுமுறையையும் அனுபவித்துக் கொண்டு/ ஜாதி சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு ஜாதியை/இந்து மதத்தை எதிர்ப்பது எப்படி நேர்மையோ அப்படியே காலம் கடந்து வெளிப்படும் பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டும் சரியானதே. ஊதியம் கொடுக்கும் முதலாளிக்கு எதிராக தொழிலாளிகள் சங்கம் அமைத்துப் பல வருடங்களுங்களுக்குப் பின்னர் போராடுவதில்லையா ?

உண்மையான நேர்மையான பெண்ணாக இருந்தால் அப்போதே அறைந்திருக்க வேண்டும்.

அதாவது பொண்ணுன்னா நெருப்பு மாதிரி இருக்கோணும். சுருக்கமா நம்மூர்ல கற்புக்கரசி, கண்ணகி, உத்தமி என்ற பெயர்படி எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கக் கூடத் தேவையில்லாமல் கொடூரமாகக் கொல்லப்பட்ட பெண்கள் எத்தனையோ இருக்க எப்படி இவர்களால் மனசாட்சி இல்லாமல் கேட்க முடிகிறதோ. அது நேரும் போது உடனே எதிர்வினை ஆற்றுமளவிற்கா எல்லா பெண்களும் இருக்கிறார்கள். அந்த அதிர்ச்சியிலிருந்தும், அவமானத்திலிருந்தும் மன அளவில் மீள்வதற்கே காலம் எடுக்கும். உயிர், உடல், உடைமை, பணி, மானம் என்ன எல்லாவற்றிற்கும் ஆபத்து நேரும். அச்சுறுத்தல் வரும். ஒவ்வொருவரும் சூழ்நிலைக் கைதிகளே. 

சில வருடங்களுக்கு முன்னர் டெல்லியில் ஓடும் பேருந்தில் தன்னை கிண்டலடித்ததை ஒரு பெண்(இந்தியாவின் மகள்) துணிச்சலுடன் எதிர்த்தாள். அவளை விட 7 குறைந்த ஒரு வெறிநாய் உட்பட 4 பேர் அவளை கொடூரமாக வன்கலவி செய்து அம்மணமாக வீதியில் வீசிச்சென்றனர். அவள் உயிருக்குப் போராடி இறந்தாள். குற்றம் செய்த போது அவனுக்கு 17 வயது நிரம்பவில்லை என்று 3 வருடங்கள் அவனைச் சிறையில் வைத்து சிறுவன் என்று அவனை விடுவித்து தையல் இயந்திரம் ஒன்றையும் பிழைப்புக்குக் கொடுத்து அனுப்பியது இந்திய நீதி. அவன் இந்நேரம் எத்தனை பேரின் முலைகளை ரவிக்கைக்கு அளவெடுக்கிறேன் என்று பிடித்தானோ தெரியவில்லை. இந்தக் கேவலத்தில் சமூக இருக்கும் போது நல்ல பெண்ணாக இருந்தால் உடனே எதிர்த்திருக்க வேண்டுமாம்.

ஆளுநர் மீதான பாலியல் புகார், எழுவர் விடுதலை, ரஃபேல் ஊழல், தூத்துக்குடி படுகொலை, குத்கா ஊழல், எடப்பாடி ஊழல் ஊடகங்கள் திசை திருப்புகின்றன.

தான் பொங்கும்போது அனைவரும் பொங்க வேண்டும். தான் கலாய்த்து நக்கலடிக்கும்போது எல்லோரும் சிரிக்க வேண்டும் என்று எல்லா இணையப் போராளிகளும் சொல்வதுதான். தனக்குப் பிடிக்காத விடயம் ஒன்று பொதுவான விவாதமாகும்போது இது ஊடகங்களின் விபச்சாரம், பணக்காரர்களுக்கு நடந்தால் மட்டுமே ஊடக வெளிச்சம் கிடைக்கிறது என்று பினாத்துவது இந்துத்துவர், திராவிடர், தமிழ்தேசியர், நடுநிலையர்கள், அரசியல் சார்பற்றவர்கள், நடிகர்களின் ரசிகர்கள் என்று எல்லாத் தரப்பினர்க்கும் கைவந்த கலை. ஊடகங்கள் எப்போதும் எதையுமே பரபரப்பாக்குவது தெரிந்ததுதான். எல்லா நாளிலும் ஊடக செய்திகளின் மூலமாகத்தானே நமது அரசியலைப் பேசுகிறோம். நாட்டின் பிரச்சனைகள் மக்களின் பிரச்சனைகள் எப்போதும் இருக்கின்றன. அவைகளை ஊடகங்களின் மூலமாகத்தான் அறியப்பெறுகிறோம். 

ஆனால் தனக்குப் பிடிக்காத ஒரு தலைப்பையோ, நபரையோ குறித்து ஒரு செய்தியோ விவாதமோ ஒரு வாரத்துக்கு செய்தி ஊடகங்களிலோ சமூக வலைத்தளங்களிலோ முன்னிலையில் இருந்தால், இந்த விபச்சார ஊடகங்களுக்கு வேறு வேலையே இல்லை என்று சலித்துக் கொள்வார்கள். ஆனால் இவர்கள் எப்போதுமே புரட்சிகரமாக மக்கள் பிரச்சனைகளை மட்டும் பேசிக் கொண்டிருப்பதில்லை. அதே விபச்சார ஊடகங்கள் தரும் பொழுது போக்குத்தனமான செய்திகளை தனது நகைச்சுவைக்கும் பயன்படுத்திக் கொள்வார்கள். அப்போது மட்டும் நாட்டின் இன்ன பிற பிரச்சனைகளை மறந்து ஹா ஹா என்று எமோஜிகள் போட்டுக் கொண்டு வடிவேலு படம் போட்டு கருத்து சொல்வார்கள். 

உதாரணத்துக்கு நடிகர் சிவகுமார் தற்படம் எடுக்க முயன்ற ஒரு இளைஞனின் அலைபேசியைத் தட்டி விட்டது, அமைச்சர் ஜெயகுமாருக்கு குழந்தை பிறந்தது, சபரிமலையில் பெண்கள் மறுக்கப்பட்டது, எச். ராசா எகத்தாளம் பேசுவது, தமிழிசையைக் கலாய்ப்பது, ரஜினி, கமல், உளறல்களையெல்லாம் பொருட்படுத்தி விமர்சிப்பது, அஜித், விஜயைய்க் கலாய்ப்பது, டீசர்களுக்கும், முன்னோட்டக் காட்சிகளுக்கும், பாடல் வெளியீட்டிற்கும், கருத்து சொல்வது, ஷகிலா, சன்னி லியோன் ஆகிய ஓய்வு பெற்ற போர்ன்ஸ்டார்களைப் பற்றிப் பேசி நான் ரசனையான ஆளாக்கும் என்று காட்டிக் கொள்வது இந்த மாதிரி அலப்பரைகளெல்லாம் எதில் வரும் ? செய்தியை முழுவதும் கூட படிக்காமல் எதுகை மோனையாக நிலைத்தகவல்/ட்விட் இடுவது, பொய்களைப் பரப்புவது, அரசியல் தலைவர்கள், பிரபலங்களை ஒருமையில் பேசுவது, த்தா, ஓத்தா, ங்கொம்மா, ங்கோத்தா, தேவிடியா என்றெல்லாம் கூச்சப்படாமல் எழுதுவது, இப்படியெல்லாம் செய்யும் சமூக வலைத்தள புரட்சியாளர்கள் எப்படி ஊடகங்களை மட்டும் நேர்மையாக இருக்க வேண்டுகிறார்கள்? 

இவர்கள் ஏன் எழுவர் விடுதலை, ரஃபேல் ஊழல், தூத்துக்குடி படுகொலை, குத்கா ஊழல், எடப்பாடி ஊழல் பற்றிப் பேசாமல் ஏன் இதைப் பேசுகிறார்கள் ? எழுவர் விடுதலை, ரஃபேல் ஊழல், தூத்துக்குடி படுகொலை, குத்கா ஊழல், எடப்பாடி ஊழல் போன்ற செய்திகள் மக்களிடமிருந்து திசை மாற்றப்படவில்லையா ? எல்லோரும் ஆயுத பூஜையைக் கிண்டலடித்துக் கொண்டும்,  பட்டேல் சிலையை, அய்யப்பனைக் கிண்டலடித்துக் கொண்டும் இருக்கவில்லையா ?

திரைப்படத்துறையில் இதெல்லாம் சாதாரணம். திரைப்படத்துறையில் இருக்கும் பெண்கள் படுக்கையில் விழுந்தால் மட்டுமே முன்னேற முடியும். எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டு இப்போது விளம்பரத்துக்காக கூவுகிறாள்கள்.

திரைப்படத்துறையில் பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்டால் அதை எதிர்க்க வேண்டுமா இல்லை ஆதரிக்க வேண்டுமா ? அதனால் பாதிக்கப் பட்டவர்கள்தானே அதை எதிர்த்துப் போராட குரல் கொடுக்கவோ முடியும் ? பாலியல் மட்டுல்ல வேறு எந்த புகார் சொன்னாலே சொல்லும் பெண்களுக்கு முதலில் கிடைப்பது வேசிப் பட்டமே. அதிலும் திரைப்படத் துறையைப் பற்றி சொல்லவே தேவையில்லை. அதில் ஈடுபடும் எல்லாப் பெண்களையுமே வேசிகள் என்றுதான் பெரும்பான்மையினர் நினைக்கின்றனர். எனவே ஒருவர் வேசிப்பட்டம் கிடைக்கும் என்று தெரிந்தும் விளம்பரத்தை விரும்புவாரா ? இல்லை நான் விபச்சாரத்தை எதிர்ப்பதை உயிர் மூச்சாகக் கொண்டவன் என்றால் விபச்சாரிகள் பங்குபெறும் திரைப்படங்களைப் பார்க்காதீர்கள். அதை வைத்து பகிரப்படும் கருத்துக்கள், பாடல்கள், மீம்களை புறக்கணியுங்கள். விபச்சாரம் செய்தால்தான் திரையுலகம் அதில்தானே கவுண்டமணி, வடிவேலு எல்லாம் வந்தார்கள். வடிவேலுவை வைத்துத்தானே நாம் மோடியைப் பொளந்து கட்டுகிறோம். 

#Metoo இயக்கம் மேலை நாடுகளில் நடிகைகளால்தான் அறியப்பட்டது. மேலை நாட்டு நடிகைகள் எப்படிப் பட்ட பண்பாடு கொண்டவர்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. ஹாலிவுட் நடிகைகள் மட்டுமல்ல, போர்ன்ஸ்டார்கள் கூட கூறியிருக்கிறார்கள். இங்க இன்னமும் சினிமாக்காரின்னா தேவிடியாளுங்க என்ற கதையைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆதாரம் இல்லாமல்தான் சொல்கிறார்கள். இதில் பொய் புகார்களில் ஆண்கள் பழிவாங்கப்படலாம்.

பாலியல் சீண்டல்களை எல்லாம் ஆதாரத்துடன் நிறுவ முடியாது என்பதால்தான் இந்த #Metoo இயக்கமே வருகிறது. எத்தனையோ ஆதாரங்கள் இருந்தும் கொடுங்குற்றவாளிகள் அதிகாரம் மிக்க பதவிகளில் தலைவர்களாக வலம் வரவில்லையா ? ஆம். விரும்பி இசைந்து விட்டு ஆண்களை மாட்டி விடும் வாய்ப்பும் இருக்கிறது. இதில் அப்பாவி ஆண்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உண்டு. இதில் மட்டுமல்ல தீண்டாமை வன்கொடுமைச் சட்டம், வரதட்சணை கொடுமை, பாலியல் கொடுமை புகார் என அனைத்திலும் பொய்க் குற்றச்சாட்டுக்கள் உண்டு. அதற்காக அச்சட்டங்கள், குற்றங்கள் இல்லை, கூடாது என்று சொல்லலாமா? சிலர் பொய் சொல்லிப் பழி வாங்குவதால் எல்லாரும் அப்படி என்றாகுமா ?

அதிகமாக பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் விளிம்பு நிலைப் பெண்களை விட்டு மேட்டுக்குடி பெண்களுக்குத்தான் #Metoo கைகொடுக்கிறது.

நாங்கள் #Metoo சொல்கின்ற பெண்களை ஆதரிக்க மாட்டோம். #Metoo சொல்லாத பெண்களை ஆதரிப்போம். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சிலர் பீட்டா என்றால் என்னவென்றே தெரியாமல், அடிமாடுகளை வாகனங்களில் ஏற்றிக் கொண்டு போகும் படத்தை வைத்துக் கொண்டு இதையெல்லாம் பீட்டா எதிர்க்காமல் ஜல்லிக்கட்டை எதிர்க்கிறது என்று கூத்தடித்தனர். பீட்டா ஜல்லிக்கட்டை மட்டுமா எதிர்த்தது ? மாடு மட்டுமல்ல எவ்வித அசைவ உணவுகளையும் எதிர்ப்பவர்கள்தான் பீட்டா இயக்கத்தினர். அதைப்போலவே #Metoo வெறுப்பாளர்களும் வசை பாடுகின்றனர். இது பார்ப்பன மேட்டுக் குடியினரின் பொழுதுபோக்கு. உழைக்கும் பெண்களுக்கு இது ஒத்து வராது என்று தள்ளி விடுகின்றனர். 

ஜாதிவெறியாலோ, மதவெறியாலோ பாலியல் வன்கொடுமைக்கு ஆட்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாலோ, வெட்டிக் கொல்லப்பட்டாலோ இல்லை தற்கொலை செய்து கொண்டாலோதான் அதை ஒரு குற்றமாகக் கருதி இந்த முற்போக்குவாதிகள் ஆதரிப்பார்கள். நாளும் நடக்கும் சிறிய அளவிலான நிகழ்வுகளை ஒரு பொருட்டாக ஏற்க மாட்டார்கள். இவர்களின் ஆதரவைப் பெற நீங்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்க வேண்டும் போலும். #Metoo வை ஆதரித்தால் விளிம்பு நிலைப் பெண்கள் பாலியல் கொடுமை செய்யப்பட்டால் வரவேற்கிறோம் என்று பொருளா ? பிரபல/மேட்டுக்குடி பணக்காரப் பெண்களே தங்கள் கொடுமைகளை வெளியே சொல்லும் நிலையே இப்போதுதான் வந்திருக்கிறது. அதற்கே விலைமகள் பட்டம்தான் கிடைக்கிறது. அந்த லட்சணத்தில் இருக்கிறது பாலியல் சமத்துவம். தயாரிப்பாளருடன் படுத்தால்தான் பட வாய்ப்பு என்பதும், மேஸ்திரியுடன் படுத்தால்தான் செங்கல் சுமக்கும் சித்தாளாக வாய்ப்பு என்பது ஒன்றுதான். அதை விட்டு விட்டு #Metoo சொல்பவர் உத்தமியா ? தமிழச்சியா ? தலித் பெண்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்தாரா ? தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்தாரா ? ஜப்பானில் அணுகுண்டு வீசியதைக் கண்டித்தாரா என்று அவரது கற்பைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்க வேண்டாம். #Metoo சொல்பவர் பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்டவர் என்ற "தகுதி"யை மட்டும் கொண்டிருந்தால் போதும்.

Download As PDF
Bookmark and Share

Post Comment

சின்மயி - ராஜன் வழக்கு ஆதரவு எதிர்ப்பு மற்றும் சில குழப்பங்கள்


சென்ற பதிவின் நீட்சியாகவே இதை எழுதுகிறேன். முந்தைய நிலையில் எந்த மாற்றமுமில்லை. ராஜன் விடுவிக்கப்பட வேண்டுமென்பதில் எந்த நிபந்தனையும், ஐயமுமில்லை. இன்னும் வினவு கட்டுரை ஏன் வெளியிடவில்லை என்பது தெரியவில்லை. ராஜன் அதிகப்படியான தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். நிரூபிக்கப் படாத குற்றத்திற்காக. அதனால் அவர் விடுதலையாக வேண்டுமென்பது குறித்து எந்தத் தயக்கமுமில்லாமல் நாம் கோர முடியும். குழலி, விமாலாதித்த மாமல்லன், சவுக்கு ஆகியோரின் கட்டுரைகள் நேர்மையாகத் தெரிகிறது நான் படித்தவைகளில். 


இதில் பல தவறான கருத்துக்கள், தகவல்கள் இடம்பெறவும் வாய்ப்புண்டு, அதற்கு என் அறியாமைதான் காரணம் விருப்பு வெறுப்பு எதுவுமிருக்காது. 


மற்றபடி ஃபேஸ்புக் விவாதத்தில் லீனா மணிமேகலை, ஷோபா சக்தி, ஜெயமோகன், சாருநிவேதிதா ஆகியோர் சின்மயிக்கு ஆதரவாகக் கருத்துக் கூறியதிலிருந்து இது இன்னும் வேறு வழியில் போய் அவர்கள் அணி எதிரணியும் கருத்து மோதலில் இறங்கியுள்ளன. லீனா மணிமேகலை-ஷோபா சக்தி கூட்டணி அவர்கள் எதிர்ப்பவர்கள் அரசியல் கருத்து வேறுபாடுகள் குறித்து என் சிற்றறிவுக்கு எட்ட வில்லை. ஜெயமோகன் பற்றியும் எனக்குத் தெரியவில்லை. அவர் இந்துத்துவாவை தத்துவ ஞானம் என்று எழுதுகிறார். அதற்கு பதிவர்கள் சிலர் கடுமையான எதிர் வினையை வைப்பார்கள் என்பது மட்டுமே எனது புரிதல். சின்மயி பார்ப்பனப் பெண் என்பதால் அவர் ஆதரவு தெரிவித்திருக்கலாம். நியாயமாக எழுதிய சில கருத்துக்களோடும் தொடர்பில்லாமல் 15 இலட்ச ரூபாய் கைதானவர்களைக் காக்க வசூலித்திருக்கிறார் என்று அவதூறு செய்திருக்கிறார். அடுத்து சாருநிவேதிதா ஏன் இக்கைதை ஆதரித்தார் என்றால், ராஜன் எப்போது
ம் அவரது பதிவை எடுத்து வரிக்கு வரி கீழ்த்தரமாக நக்கலடித்து வெளியிடுவார் எப்போது அந்தக் கடுப்பில் எதிர்வினையை வைத்திருக்கிறார். இதை சின்மயி ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். தமிழச்சி எழுதிய சாரு ஆன்லைன் - பெண்கள் ஜாக்கிரதை என்ற கட்டுரை சின்மயி அறிந்திருக்க வில்லை போல.

சின்மயி பல பொய்களைச் சொல்லியிருக்கிறார். அவர் பூர்விகம் உட்பட. அவர் மொத்தம் மூன்று வகையான வழக்குகளைப்போட்டிருக்கிறார். மந்திர மூர்த்தி என்பவர் திருமணம் செய்ய மறுத்ததால் ஆபாசப் படங்களை இணையத்தில் வெளியிட்டது, ட்விட்டரில் ஆபாசமாகப் பேசிய ஆறு பேர்கள் மீது, வேறொரு தயாரிப்பாளர் பணம் கொடுக்காதது குறித்து என. இதில் ட்விட்டரில் ஆபாசமாகப் பேசிய இரண்டு பேரை மட்டும் கைது செய்திருக்கிறார்கள்.

இது இப்போதைய நிலவரம். ராஜன் சில பதிவுகளைப் படித்திருக்கிறேன். தமிழ் வளம் மிக்க கவிதைகள் பார்ப்பன எதிர்ப்பு, ஜாதி எதிர்ப்பு, மத எதிர்ப்பு, சாமியார்கள் எதிர்ப்பு, அன்னா ஹஸாரே போராட்டத்தில் பங்கெடுத்தது, மேலும் தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சனையாக இருந்த மீனவர் படுகொலை எதிர்ப்பு, மே 18 போராட்டம் இது குறித்தெல்லாம் எழுதியுள்ளார். இது அனைத்து பொதுநலம் சார்ந்து எழுதப்பட்டது. மற்றபடி திரைப்பட விமர்சனம், கிண்டல் பதிவுகள், சாருநிவேதிதாவைத் தழுவி எழுதப்பட்ட நக்கல்கள். அவ்வளவே அவர் பின்னூட்டங்களில் நக்கல் இருக்கும், சில அபத்தமாகவும் அருவருப்பாகவும் இருக்கும். குறிப்பாக இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் கீழ்த்தரமானவை. விமர்சனம் செய்யலாம் இந்த மொழி வெறுப்பை வளர்க்கும். சிபி செந்தில் குமார் மனைவியிடம் பேட்டி எடுப்பது போல ஒரு பதிவு ஒரு சிலருக்கு அது ஆபாசமாகத் தெரியும். ஆனால் அது அவரது மனைவியைக் கிண்டல் செய்வது போல எழுதப்பட்டதல்ல அவர் மனைவி சிபி செந்தில் குமாரை திட்டும் பாணியில் எழுதப்பட்ட நக்கல். ஆனாலும் சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். நண்டு நொரண்டு, ருத்ரன் போன்றவர்களின் தளத்தில் மரியாதையாகவும், பின்னூட்டமிட்டிருக்கிறார். பல பேரை மரியாதையின்றி நக்கலடித்திருக்கிறார். உதாரணமாக ஏதோ ஒரு பார்ப்பன எதிர்ப்பு பின்னூட்டத்திற்கு பெரியார் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்பதை இப்படிச் சொன்னார். பெருசு சரியாத்தாஞ் சொல்லிருக்கு. என்று. இப்படி. சுருக்கமாக மிகுந்த பண்புடனும், மொழியாளுமையுடனும் பேசுவார், எடுத்தெறிந்தும் பேசுவார் கோயம்புத்தூர் குறும்பு எனும் பொருள்பட.

முக்கியமாக பதிவுலகில் அதிகமாக விவாதிக்கப்பட்ட, சந்தனமுல்லை விவகாரத்திலும், சாருநிவேதிதா விவகாரத்திலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகப் பதிவெழுதியவர் ராஜன். அதனால் அவரை செக்ஸிஸ்ட் என்றோ ஆணாதிக்க வாதி என்றோ சொல்ல முடியாது. பொது வாழ்க்கையில் இருப்பவர்களை வரம்பு மீறி வசவியதன் மூலமாக ராஜனின் மேற்கண்ட இயல்புகளை ஏற்றுக் கொள்ள, அந்த ட்வீட்களைப் பார்ப்பவர்கள் நம்ப மாட்டார்கள்.

இதனால் ராஜன் சின்மயி என்ற ஒரு பெண் மீது பாலியல் ரீதியில் பேசியிருக்க மாட்டார் என்று 99% நம்பலாம். அந்த 1 % ஜெயலலிதா உட்பட மற்ற பெண்கள் மீதான கருத்துக்களுக்காக. சின்மயி மீது ராஜனின் பாலியல் வசை தொடர்பான ட்வீட் ஒன்றும் இதுவரை இல்லை. இருக்கவும் முடியாது.

மேலும் பெண்கள் மீது சென்டிமென்ட் அதிகமென்பதால், ரேவதி, ஆதிரை (ராஜனின் மனைவி, குழந்தை) என்ற இரு பெண்களுக்காக ராஜன் விடுவிக்கப்பட வேண்டுமென்பது சின்மயி என்ற பெண்மணியின் மனசாட்சிக்கு விட்டு விடுவோம்.

மேலும் குழந்தையைக் குதறிக் கொன்ற கொலைகாரன் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதையே எதிர்த்த நாம் இந்த அபத்தமான குற்றச்சாட்டிற்காக தனிப்பட்ட உத்தரவின் பேரில் சென்று கடமையைச் செய்ததைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும்.

சின்மயி தரப்புப் பொய்கள்:

சின்மயி சொல்வது போலி ஐடிகள் மூலம் இழிவு செய்கிறார்கள் அதை எனக்கு டாக் செய்து ராஜனுடைய ட்விட்டருக்கும் அனுப்பி வைத்தார்கள் என்று கூறுகிறார். இதை ராஜன் என்று எப்படி முடிவு செய்தார் இதைத்தான் ராஜனும் தனது பதிவில் கேட்டிருந்தார். அவர்கள் செய்த அவதூறுக்காக ராஜனை ஏன் குறிக்க வேண்டும் என்பது புரியவில்லை.

இதற்கு சின்மயி பதிலெதிவும் சொன்னதாகத் தெரியவில்லை.

ராஜனின் பணி பறிபோகுமளவிற்கு அவர் என்னவகை மன ரீதியான உளைச்சலுக்கு சின்மயியை உண்டாக்கினார் என்பது கேள்விக்குறி.

அதிகாரம் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டு அரை நாளில் கைது செய்யப்பட்டது குறித்து சொல்லத் தேவையில்லை. செய்யாத குற்றத்துக்கு பணி பறிப்பு, மன உளைச்சல் உட்பட சமூகத்தில் அவர் எதிர்காலம் உட்பட சின்மயி உலை வைத்திருக்கிறார். என்ன ஒரு கொடிய மனப்பான்மை.

ராஜனது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாவிடில் வரதட்சணை வழக்கு, பாலியல் வன்கொடுமை வழக்குக்களைப் பயன்படுத்தி அப்பாவி ஆண்களைப் பழிவாங்கும் பெண்களில் ஒருவராகப் போகிறார் சின்மயி.

முதலில் நடந்த ட்விட்டர் உரையாடலில் சோகால்ட் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொன்ன சின்மயிக்கு மீனா கந்தசாமி, தியாகு, ஏழர ஆகியோர் எடுத்துச் சொல்கின்றனர். மீனா தாழ்ந்தவர்களல்ல தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லிக் கொடுக்கிறார். ஏழர அமெரிக்காவிலும், ஸ்ரீலங்காவிலும் போய் சோகால்ட் ரேஸிசம் என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறார். இதன் மூலம் சின்மயி  புரிந்து கொண்டிருக்க முடியும்.

ஆனாலும் தொடர்ந்து இட ஒதுக்கீடு எதிர்ப்பு டிவீட்டுகிறார். இது உணர்ச்சி வசப்பட்டதாக வைத்துக் கொள்வோம். ராஜ்மௌலியின் தாழ்த்தப்பட்ட ஜாதித் தலைவர்கள் குறித்து டிவீட்டுகிறார்.. இதற்காக எதிர்ப்பு வருகிறது என்று முன்பே அறிந்திருந்தும் தொடர்ந்து இட ஒதுக்கீடு எதிர்ப்புக்காக பல டிவீட்டுகளை பகிர்ந்திருக்கிறார். இதைப் பார்ப்பன வெறியாகவே கருத முடியும் சின்மயி.

பல ட்வீட்களை சின்மயி அழித்து விட்டதாகக் கூறுகிறார்கள். அதையெல்லாம் சைபர் கிரைம் காரர்கள் நேர்மையுடன் தேடி எடுத்து விசாரித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். இதில்தான் சின்மயியின் நேர்மையை நம்மால் அறவிட முடியும்.

மேலும் வேறொரு பத்திரிக்கையாளர் ராம் இவர் மீது வழக்குத் தொடரப்போவதாக அறிவித்திருக்கிறார்.

ஜனவரியிலிருந்து தமிழில் தன்னைத் தாக்கி தமிழில் பல ட்வீட்கள் வந்ததாகச் சொல்லும் சின்மயி ஏன் வந்தது என்று சொல்ல வில்லை. ஒரு வேளை தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான கருத்துக்களால் வந்திருக்கலாம்

ஹையங்கார் என்பது நீங்கள் நகைச்சுவைக்குப் போட்டதாக உங்கள் மற்ற டிவீட்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏற்க முடியவில்லை.

மேலே நான் எனக்குத் தெரிந்த வரையிலெல்லாம் ராஜன் மீதான் நியாயத்தைச் சொல்லிவிட்டேன். உடனடியாக ராஜன் விடுவிக்கப்பட வேண்டுமென்பதில், அவர் பணியும் திரும்ப வழங்கப்பட வேண்டுமென்பதில் (வேலையில்லாமையின் சுமையை நன்கு அறிந்தவன் நான்) எனக்கு எந்த மாற்றுக் கருத்துமில்லை.

ராஜன் தரப்புப் பொய்கள்:

தன்மீது வந்த அவதூறு ட்விட்டர்களை ப்ளாக் செய்திருக்கிறார். வெவேறு ஐடிக்களில் வந்து தொல்லை கொடுப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

சின்மயி #TNFisherman இல் சேராததற்குக் காரணத்தை சொல்லியிருக்கிறார். அதில் அவரால் ப்ளாக் செய்யப்பட்டவர்கள் இருப்பது மட்டுமல்லாமல், பல தலைவர்கள் கேவலமான முறையில்  விமர்சிக்கப்பட்டிருந்ததால் அதில் தன் பெயரும் இணைக்க விருப்பமில்லை எனவும் தனிப்பட்ட முறையில் ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாகவும் சொல்லியிருக்கிறார். இதற்கு தமிழர்களுக்கு எதிரானவள் சின்மயி என்று தன்னை இழிவு செய்தார்கள் என்கிறார். சின்மயி.

#அசிங்கப்பட்டாள்சின்மயி

வந்த காரணம்: சின்மயி ராஜன் மீது வன்மம் கொண்டதற்காக ராஜனும் மற்றவர்களும் சொல்லும் ஒரு காரணம் மஹேஸ்மூர்த்தி என்ற ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் நிருபர் பிரபலங்கள் குறித்து ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அதில் மக்களைக் கவர்ந்த பொழுதுபோக்காளர்கள் என்ற பட்டியலில் நான்காவாதாக சின்மயியும், ஐந்தாவதாக ராஜன் லீக்ஸ் - ஐயும் குறிப்பிட்டிருந்தார். இதனால் சின்மயி ராஜனின் பெயரை நீக்கச் சொல்லி மகேஸிடம் சண்டை போட்டார் என்கிறார்கள். இது முழுவதும் உண்மையல்ல.

சின்மயி அவருடன் சண்டையிடக் காரணம் வேறு. அதில் ஷ்ரேயா கோஷல், சின்மயி ஆகியோரை (ப்ளாக், ட்விட்டர் முகவரிகளை) ப்ளாக்கர்கள், ட்விட்டர்கள் வகையில் வரிசைப்படுத்தியிருந்தார் மகேஸ்மூர்த்தி. ஷ்ரேயா கோஷல் தனது பெயரில் இருந்த இணையத்தளம் தன்னுடைய சொந்தத்தளமல்ல தனது ரசிகர்களால் நடத்தப்படுகிறது என்று மகேஸ் மூர்த்திக்கு மென்கடிதம் எழுதினார். பின்பு ஷ்ரேயாவின் ப்ளாக்கை அந்தக்கட்டுரையிலிருந்து மகேஸ் நீக்கிவிட்டார். சின்மயிக்குக் கொடுத்திருந்த வரையரறையில் சின்மயி பாடகர் எனற முறையில் பிரபலமானவர் என்பதை விட ட்விட்டரில் எழுதி பிரபலமானவர் என்று எழுதியிருந்தார். இதைத்தான் சின்மயி எதிர்த்தார். அதே போல் ராஜனை விட 10 மடங்கு அதிகம் வாசிக்கப்படும் மதன் கார்க்கி, வைரமுத்து ஆகியோரின் தளத்தை ஏன் குறிப்பிடவில்லை என்று கேட்டிருக்கிறார். மகேஸ் அது என்னுடைய சொந்தக் கட்டுரை அதனால் நீக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார். (ராஜனை நீக்கும்படி தன்னிடம் கேட்டதாகவும், பல ட்வீட்களை சின்மயி அழித்து விட்டதாகவும் மகேஸ் சொல்கிறா. சின்மயி அழிக்க வில்லை என்கிறார்.) அந்தக் கட்டுரையின் கருத்துரைகளைப்படித்தால் தெரியும் அது ஒரு தவறாக எழுதப்பட்ட கட்டுரை, ராஜனே சொல்லியிருக்கிறார் 7 படங்களுக்கு மட்டுமே விமர்சனம் எழுதியிருக்கும் தன்னை எப்படி சேர்த்தார் என்று தெரியவில்லை என.

தன்னைப் பற்றி பாடகராக இல்லாமல் ப்ளாக்கில் பிரபலமானவர் என்பதை சின்மயி ஏன் எதிர்க்கக் கூடாது ? இதில் சின்மயியின் வன்மம், பிரபலம் என்ற திமிர் இருக்கிறதா ? இதில் சின்மயியின் பேச்சைக் கேட்டு அதை நீக்காததால் #அசிங்கப்பட்டாள்சின்மயி என்று அவரைக் கிண்டலடித்திருக்கிறார்கள் இங்கே ராஜன் சின்மயி தன் மீது வெறுப்புடன் இருப்பதால்தான் அதை எதிர்த்ததாகத் தவறாகப்புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதற்கு அசிங்கப்பட்டாள்சின்மயி# என்று டாக் தொடங்கி கிண்டலடித்திருக்க வேண்டும். அந்த டாக் உடன் ராஜனுட மற்றவர்களின் சின்மயி மீது தொடுத்த ஆபாச ட்வீட்களுக்கும் சேர்த்து ராஜன் மீது சின்மயிக்கு ஐயம் வந்திருக்க வேண்டும். இது என் கணிப்பு. ராஜன் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்திருந்தாலும் இது பெண் மீதான தாக்குதல்தான்.

இன்னொன்று சின்மயி மீனவர்கள் மீனைக் கொல்வதால், சிங்கள ராணுவம் மீனவர்களைக் கொல்லலாம் என்று சொன்னார் என்பது மிகப்பெரிய பொய். வேறொரு சந்தர்ப்பத்தில் சின்மயி மீன்களைக் கொல்றது மட்டும் பாவமில்லையா என்று கேட்டதை ராஜன் சும்மா கிண்டலுக்கு டிவிட்டியதே "மீனவர்கள் மீன்வர்களைக் கொல்கிறார்கள். அதனால் சிங்கள ராணுவம் மீனவர்களைக் கொல்கிறது" என்ற அந்த டிவிட். அது உண்மையல்ல. ஆனால் அதை ஃபோட்டோ ஷாப் செய்து உண்மை என்று பரப்பி விட்டார்கள். அதை இங்கே விமலாதித்த மாமல்லன் பதிவில் காணலாம். என்ன வக்கிரமான எண்ணம் இது ? இதை இன்னும் பலர் நம்புகின்றனர். பரப்புகின்றனர்.

கார்ட்டூனிஸ்ட் பாலா அது உண்மையா இல்லையா என்று கேட்காமலேயே தமிழர்கள் முகத்தில் காறித்துப்பிய சின்மயியை கண்டிக்கிறேன் என்று போட்டு விட்டார். இப்படி சின்மயி தமிழர்களுக்கு எதிரானவர் என்று கருத்து பரப்பப்பட்டது.

இன்னொன்று அதை உண்மையா என்பதை தமிழ் மான் என்பவர் கேட்க, (இல்லை என்பதை ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா பதில் சொல்லணுமா என்ற பொருள்பட) உங்களுக்கு தனியா டாக் பண்ணி சொல்லணுமா என்று கேட்டிருக்கிறார். தன் மீது தவறான கருத்து பரப்பப்படுகிறது என்று ஒரு  சின்மயி போட்டிருந்த போஸ்ட்டின் கீழே இதை அவர் கேட்டார். இல்லை என்பதைத்தான் சின்மயி அப்படிச் சொல்லியிருக்கிறார். அவர் பல இடங்களில் இதைக் கேட்டதாகவும் சொல்லியிருக்கிறார். இதைத் தவறாகப்புரிந்து கொண்டு சின்மயி ஆமாம் என்று சொன்னாதாக ஒரு ஸ்க்ரீன்ஷாட் எடுத்து பல பேருக்கு டாக் பண்ணி விட்டார் அவர். அவர் புகாரளித்ததே தான் மீனவர்கள், தமிழர்கள், ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று சிலர் சித்தரிக்கிறார்கள் என்றுதான். அதைத்தானே இன்னும் செய்கிறார்கள்.

தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து இவர் சொன்னது உண்மை, ஆனால் மீனவர்கள் குறித்து சொல்லப்பட்டது முழுப்பொய். ஒரு கொலை செய்தவன் மீது 3 கொலை செய்ததாகச் சொல்வது போல.. ராஜன் மீது சொல்லப்பட்ட அவதூறு போன்றதே இதுவும். இருப்பினும் இருவரும் சமமல்ல என்பதும் சரிதான்.  எப்படி ராஜனின் சில ட்வீட்களை மட்டும் வைத்து அவரது இயல்பைத் தீர்மானிக்க முடியாதோ அது போலத்தான் சின்மயிக்கும். இணைய ஊடகங்களும், தினத்தந்தி போலத்தான் இது போன்ற பொய்ப்பரப்புரைகள் சின்மயி மனிதநேயமற்றவர் என்ற பிம்பத்தை காலத்திற்கும் ஊன்றி விடும். அதனால் இந்தப் பொய்யை நம்பக்கூடாது

பெண்கள் மீதான வன்மம்

அதே நேரம் இன்னொன்றையும் நான் முக்கியமாகப் சொல்ல வேண்டியுள்ளது. ராஜனுக்கு ஆதரவு பெருகி இருப்பதால், அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் மட்டுமல்லாமல், பெண்களை இழிவு செய்கிறவர்கள், பெண்ணியம் பேசுகிறவர்களைக் கிண்டல் செய்கிறவர்கள், கற்பு வேண்டும் இல்லையென்றால் நீதி கிடைக்காது, பெண்கள் கிண்டல் செய்வது என்னுரிமை, அவள் மட்டும் யோக்கியமா என்ற கருத்துக் கொண்டவர்களெல்லாம் கிடைத்த சந்தில் சின்மயி மீது வன்மத்துடன்  ராஜனை ஆதரிக்கிறேன் என்று கூட்டத்தில் சேர்ந்திருக்கிறார்கள். இவர்களின் கருத்துக்கள் சின்மயியின் பின்புலம், அவரது பழிவாங்கும் வெறி, பொய் ஆகியவைகளைத் தவிர்த்து, சின்மயி ஒரு பெண் என்ற ரீதியில் மட்டும் இழிவு செய்கிறார்கள். இது சின்மயி அல்லாத வேறு எந்தப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக காவல்துறையை நாடி இருந்தாலும் எதிர்கொள்ள வேண்டியவையாகும். சின்மயி ஓவரா சீன்போடறா என்பது போலவும், கற்பில்லாதவள் நீதி கேட்கக்கூடாது என்ற கருத்துக்களை இவர்கள் சொல்கிறார்கள்.

ஆண்களால் பாலியல் ரீதியாகப் பெண்களைக் கொச்சைப்படுத்துவதற்கு பெண்களின் தவறான கருத்தே காரணம் என்ற ஆபத்தான கருத்து முன் வைக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற கருத்துள்ள பேர்வழிகளை ராஜனே எதிர்த்திருப்பார். என் அம்மா, சகோதரிகள், உறவினர் பெண்கள் அனைவருமே இது போன்ற கருத்துக்களை வெளியிடக்கூடியவர்கள். கிராமத்திலிருக்கும் உயர்த்தப்பட்ட ஜாதிப் பெண்கள் அனைவரின் இயல்பும் இது. இது தவறுதான் என்றாலும் பாலியல் தாக்குதலுக்கு இது ஒரு நியாயமான காரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது. எனது நண்பனொருவனின் தந்தையார் திகவில் இருந்தவர் அவன் வீட்டிலும் இதே நிலைதான்.

மீனா பார்ப்பனீய எதிர்ப்பு பேசியதால் பாலியல் ரீதியான மொழியில் தாக்கப்பட்டார், சின்மயி பார்ப்பனியம் பேசியதால் தாக்கப்பட்டார். இதே போல் ஃபேஸ்புக்கில் நிலவுமொழி செந்தாமரை என்ற பெண்ணும் ஜாதி எதிர்ப்புக்காகத் தாக்க்ப்பட்டார். இப்படிப் பல பேர் காரணங்கள் வேறு வேறாக இருந்தாலும் அவர்கள் பெண் என்பதால் மட்டுமே இதை எதிர்கொள்ள நேர்ந்தது. மேலும் இங்கே சின்மயியை இழித்தவர்கள் கோபத்தில் கொந்தளித்ததாகத் தெரியவில்லை, அவரைக் கிண்டல் செய்ய ஒரு டாக் ஆரம்பித்து அதில் கண்டபடி செய்திருக்கிறார்கள். இதில் தாழ்த்தப்பட்ட, அறியாதோரின் அடித்தட்டு மக்களின் வசவு மொழியன்று நான் கண்டது, முற்போக்குவாதிகளின் ஆணாதிக்க வன்மம் மட்டுமே.

அப்படிப்பார்த்தால், சிங்கள மாணவர்களைத் திருப்பி அனுப்பிய ஜெவைக் கண்டித்து வரைந்த கார்ட்டூன் சரி. கனிமொழி ஊழல் செய்ததால் அவர் மீதான கருத்துக்கள் சரி என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போகலாம். போர் நடந்தால் மக்கள் சாவது இயற்கைதான் என்று சொன்ன ஜெயலலிதா ஈழ்த்தாயாக மாற்றப்பட்டார்.
எல்லோரிடமிருந்து பெரிய பாலியல் ரீதியான தாக்குதல் வரவில்லை. அது போல ஆபாசமாக சின்மயியை ஏசாமல் இருந்திருந்தால் அவருக்கு எதிராக கேட்டிருக்கலாம். ஆபாசமாகப் பேசிவிட்டு அதை நியாயப்படுத்த தலித், தமிழ் என உணர்ச்சி அரசியலின் பின்னர் ஒளியக்கூடாது.

ராஜன் மட்டுமே சின்மயி மீது பாலியல் மொழியில் தாக்குதல் செய்யவில்லை தவிர மற்றவர்கள் செய்திருக்கிறார்கள். ராஜனின் நண்பர்களாக இருந்தவர்கள் இது போலப்பேசியதற்கான ட்விட்டுகள் இருக்கின்றன. இதற்காக ராஜனைக் குற்றவாளியாக்கியது மன்னிக்க முடியாதுதான்.

அவரது பதிவிலும் இது போல் சிலர் பின்னூட்டமிடுவார்கள். அதுபோலவே ட்விட்டரிலும் சிலர் இருப்பார்கள் போலத் தெரிகிறது. இவைகளெல்லாம் கோபத்தில் வெளிப்பட்ட உணர்ச்சியில் தெரியாமல் வெளிவந்த கெட்ட வார்த்தைகள் அல்ல. பெண்கள் மீது ஆண்களுக்கு இருக்கும் மதிப்பீட்டில் வருகின்றவை. அதனால்தானே அம்மாவை கடலைக்கு யூஸ் பண்ணிக்கலாம் என்று பேச வைக்கிறது. திரைப்படங்களில் பார்த்தால், நாயகனின் அம்மாவைப் பற்றித் தவறாகப் பேசினால் அவன் கொந்தளித்து சண்டை போடுவது போலவும், நாயகியின் தங்கையையோ, அம்மாவையோ பற்றிப் பேசுவது நகைச்சுவையாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. (எ.கா ஃபிகரோட சேர்ந்து அவ அம்மாவையும் உசார் பண்ணிருப்பேன் வகையில்)

இது போன்றவர்களைச் சிரிக்க வைப்பதற்காக ராஜன் எழுதியிருக்கிறார் என்பது என்ன முரண் நகை. ஜெயலலிதாவின் கார்ட்டூனைக் கண்டித்த கையோடு அதை நையாண்டி செய்தது மட்டுமே உலகிற்குத் தெரிந்திருக்கிறது என்பது வேதனை.

இந்த வழக்கு மிகவும் சிக்கலாக எந்தப்பக்கம் சாய்வது என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதில் பெண்ணின் மீதான பாலியல் தாக்குதல் என்பதற்காக பெண்ணை ஆதரிப்பதா இல்லை அதிகார வர்க்கத்தினால், பழிவாங்கப்பட்ட பாமரனா என்றால் அப்பாவியின் பக்கம்தான் நிற்கத் தோன்றுகிறது. I support Rajan (with conditions apply). ராஜனின் விடுதலையை மட்டும் தீவிரமாக ஆதரிக்கிறேன். அவர் ஆதரவாளரின் கருத்துக்களை எதிர்க்கிறேன்.

இருப்பினும் சின்மயி ஒரு பாதிக்கப்பட்ட பெண் என்ற நிலையில் அவர் மீதும் கரிசனம் உண்டு.
Download As PDF
Bookmark and Share

Post Comment

சின்மயி வேறு என்னதான் செய்ய வேண்டும் ?


பெண்கள் மீதான வசைச் சொற்களைக் கண்டு வெம்பியதால் இது குறித்து அழுத்தமாக எழுதத் தோன்றுகிறது. அடிக்கடி இது குறித்து எழுதுகிறேன். அதனால்தான் சின்மயியின் பிரச்சனை குறித்தும் எழுதுகிறேன். எல்லாக் கோணங்களிலும் ஆராய விருப்பமும் இல்லை. பெண்களை இழிவுபடுத்துவதை எதிர்ப்பதற்கு மட்டுமே ஒரு சந்தர்ப்பமாகக் கருதி இதைச் சொல்கிறேன். மாட்டிக்கொண்டவர்களை கும்முவதும் மகிழ்வதும் எனக்குப் பிடிக்காது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களின் மீதான ஆதாரம் சரவணக்குமார் என்பவர் மீது மட்டும் இருக்கிறது. ராஜன் முன்பு டிவிட்டரில் சின்மயியிடம் விவாதத்தில் ஈடுபட்டு, அவரை அதிகம் கேலி பேசியதால் எரிச்சலடைந்த சின்மயி அவரை ப்ளாக் செய்துவிட்டார். பின்பு எதுவும் சொல்லவில்லை என்கிறார். ஆனால் சின்மயி தொடர்ந்து வெவ்வேறு முகவரிகளில் வருகிறார்கள் தொல்லை தருகிறார்கள் என்று இதற்கு முன்பே ஒரிரு முறை சொல்லி வந்தார். ராஜன் தனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்றும் சொல்லியிருக்கிறார். மேலும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையாளர் சின்மயியுடன் பிரபலமானவர்களில் ஒருவராக ராஜனையும்  சேர்த்து எழுதியதால் சின்மயி அப்பத்திரிக்கையாளருடன் சண்டயிட்டார். பின்பு தொடர்ந்து ராஜனால் தொல்லை ஏற்படுவதாகவும் கூறியிருக்கிறார். இதற்கு ஆதாரமெல்லாம் இல்லை. ராஜன் தனது ஃபாலோயர்களை சிரிக்க வைக்க வேண்டும் எனபதற்காக மிகவும் கீழ்த்தரமான கீச்சுக்களை, பதிவுகளை எழுதியுள்ளார். பல அரசியல் தலைவர்களை நடிகர்களை இழிவு செய்துள்ளார்.

ஆனால் சின்மயியை தனிப்பட்ட முறையில் தாக்கி இவ்வாறு எழுதவில்லை சும்மா கிண்டல் மட்டுமே செய்துள்ளார். என்பதில் உறுதியாகத் தெரிகிறது. அதுவும் சின்மயி ப்ளாக் செய்த பிறகு எதுவும் எழுதவில்லை எனவும் சொல்லியிருக்கிறார். எழுதியவர்கள் மற்றவர்களாக இருக்கிறார்கள். இதனால் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட முடியுமா ? ராஜனை மட்டும் முன்னிலைப்படுத்துவதன் காரணம் புரியவில்லை.  

ஆதாரமும் இல்லைஇது பாரபட்சமான தனிப்பட்ட வெறுப்பாகத் தெரிகிறது. 

3 வருடங்களாக பதிவுலகில் இருப்பதால் அவர் தனிப்பட்ட பெண்கள் மீது பாலியல் அவதூறு செய்ய மாட்டார். சந்தனமுல்லை, சாரு நிவேதிதா விவகாரங்களில் அவர் எழுதிய பதிவுகள் அதற்குச் சான்று. ஆனால் அவரே இவ்வளவு கீழ்த்தரமான ட்வீட்டுகளும், பதிவுகளும் எழுதியது முரண்.

தினத்தந்தி வழக்கம் போல ஈனத்தனமாக செக்ஸ் டார்ச்சர் கொடுத்தவர்கள் கைது என்று படமெல்லாம் போட்டிருக்கிறார்கள். கூகிளிலும் ராஜன் படம் வருகிறது. இதெல்ல்லாம் அதிகபட்சமானது. உலகமகாக் கொலைகாரன்களுக்கே தூக்கு தண்டனை வேண்டாம் என்கிறோம். இது போன்ற வசைபாடல் ஆபாசமாக வர்ணிப்பது என்பதற்கெல்லாம் இவ்வளவு தண்டனை வேண்டாம். சராசரிப் பெண்களையெல்லாம் வன்கலவி செய்தவன்களெல்லாம் நடமாடுகிறார்கள். அதே நேரத்தில் இது போன்ற இணையத்தில் தொடர்ந்து தொல்லை கொடுப்பது பெண்களின் தற்கொலை வரை கொண்டு செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைது செய்த கண்ணியமான காவல்துறை கூடங்குளத்தில் என்ன செய்தது ? .

தன் குழந்தையைத் தேடிச் சென்ற லவீனாவிடம் அங்கிருந்த காவலர் ஒருவர் லவீனாவின் உடலைத் தீண்டி தவறாக நடக்க முயன்றுள்ளார். ஓட முடியாத லவீனா அதிர்ந்துபோய், 'நான் குழந்தையைத் தேடித்தான் வந்தேன். என்னை ஒன்றும் செய்துவிடாதீர்கள்!’ என்று கெஞ்ச, அதற்கு அந்தக் காவலர் கேட்ட குரூரத்தின் உச்சம், ''உதயகுமார் கூப்பிட்டாத்தான் போவியா? நாங்க கூப்பிட்டா வர மாட்டியா?''

இது மாதிரி பலரிடம் உதயகுமாருடன் தொடர்புபடுத்தி, பாலியல் ரீதியாக கேள்வி கேட்டிருக்கின்றனர். இது குறித்துப் பல புகார்கள், மனித உரிமை மீறல் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன காவல்துறையினர் மீது. இவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படாது.

சைபர் கிரைம் குறித்து 18 பெண்கள் புகாரளித்தும் சின்மயியின் புகார் மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அவர் தனிப்பட்ட செல்வாக்கப் பயன்படுத்தியிருக்கிறார்.

அவ்வப்போது ஜாதிப் பெருமிதத்துடனும் திமிருடனும் பேசியிருக்கிறார்.

இட ஒதுக்கீடு, மீனவர்கள் மீனைக் கொல்வது, சோகால்ட் தாழ்த்தப்பட்டவர்கள் என வன்மமாகக் கருத்து வைத்திருக்கிறார்.

புகழ்விரும்பி எக்செட்ரா......

இதெல்லாம் சரியென்று ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் மற்ற குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சின்மயியின் தவறுகளைக் கண்டிக்கும் அதே நேரம் மற்றொன்றையும் கண்டிக்க வேண்டும்.

அவர் பார்ப்பனத் திமிருடன் நடந்து கொண்டார் என்கிறார்கள். இட ஒதுக்கீடு குறித்துப் பலருக்கு மாற்றுக் கருத்து உண்டு, தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்கள் உட்பட.

ஃபேஸ்புக்கில் பலரும் இந்துத்துவாவாதிகளின் இட ஒதுக்கீடு எதிர்ப்பு, பசுவதை எதிர்ப்பு போன்ற பகிர்வுகளை பகிர்ந்து வருகிறார்கள். அவர்கள் யாரும் இந்துத்துவாவாதிகளோ பார்ப்பனர்களோ அல்ல. பார்ப்பனப் பெண் மட்டுமல்ல இட ஒதுக்கீடு பற்றி அறியாத எந்தவொரு பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஆண், பெண்களின் கருத்தும் சின்மயி கருத்தும் ஒன்றாகத்தான் இருக்கும். அவர்கள் படித்ததே இட ஒதுக்கீட்டின் காரணமாகத்தான் என்பதை அறியாமல் இருப்பதால்தான் அப்படிப் பேசுகிறார்கள். சின்மயி பார்ப்பனராக இருப்பதால் அதை வைத்தே அவரை தாக்க முடிகிறதே. இதே வேறு ஜாதியாக இருந்திருந்தால் ?

அதே போல் உதயகுமாரைப்பற்றி இழிவு செய்பவர்கள் எல்லோரும் பார்ப்பன இந்துத்த்வாக்களா ?

அதே போல் மீனைக் கொல்வது பாவமில்லையா என்று கேட்டதை, மீனவர்கள் மீனைக் கொல்லும்போது, சிங்களப்படை மீனவர்களைக் கொல்லலாம் என்று சொல்லிவிட்டார் என்பதை ஏற்கமுடியவில்லை. இதற்கு ஒரு ஸ்க்ரின் ஷாட்டை வைத்திருக்கிறார்கள். அதில் அவர் ஆமாம் என்று சொல்லவில்லை. இல்லை என்றும் சொல்லவில்லை. அதை யாரும் எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம்.

எல்லோரையும் பெண்களையும் தலைவர்களையும் இழிவு படுத்தி இருப்பதை அவர் எதிர்க்கிறார், கண்டிக்கிறார் இதில் என்ன தவறு கண்டீர்.

திட்டம் போட்டு சிக்க வைத்தார் என்கிறார்கள். அவர் அம்மாவைப்பத்தித் தவறாகப் பேசினால் அவர் கோபப்படக்கூடாதா என்ன ?

அவர் தமிழச்சி என்று சொல்வதை எதிர்க்கிறார்கள். அவர் தெலுங்குப்பெண் என்று சொல்லியிருந்தால் என்ன செய்திருப்பார்கள் தமிழ்நாட்டில்தான் இப்படித் துணிச்சலாகத் தெலுங்கு என்று சொல்லியிருக்க முடியும். அதே  நான் பிராமணப் பெண் என்று சொல்லியிருந்தால் கிழித்துத் தொங்க விட்டிருப்பார்கள்.

தமிழ்ப் பெண் என்று சொன்னால் அதையும் நக்கலடிக்கிறார்கள்.

இவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி காவல்துறையை நாடினார், அதே போல்தானே அவரை ஆபாசமாகப்பேசியவர்களும் தலித் ஆதரவு, மீனவர் ஆதரவு என்று உணர்ச்சி அரசியலை தனக்குப் பின்னால் சேர்த்துக் கொண்டு நியாயம் தேடுகிறார்கள். இது மட்டும் தவறில்லையா ?

ஒரு பெண் எதிர்க்கருத்து வைத்தார் என்பதற்காக அதை பாலியல் ரீதியில் வசைபாடுவதை ஆண்கள் மிகச் சாதாரணமாக எடுத்து கொள்வதையும் அதைக் கடந்து சென்று விடுவதையும் தவறே இல்லையெனப்பார்ப்பதும்தான் எனக்கு வலிக்கிறது. அவர் பார்ப்பனப் பெண்ணாகவே இருக்கட்டும் அதற்காக தமிழ்ப்போர்வையைப் போர்த்திக் கொண்டு அவர்களை பாலியல் ரீதியாகக் கொச்சைப்படுத்துவது சரியாகுமா ?

படித்தவர்கள் பண்பாளர்கள் நிரம்பிய இணைய, டிவிட்டர், பதிவுலகில் பல அன்பர்களின், அறிவாளர்களின், முற்போக்குவாதிகளின் வன்மத்தையும், வக்கிரத்தையும் கண்டு அதிர்ச்சியாக இருக்கிறது. மலையாளியோ, சிங்களனோ தமிழ்ப் பெண்களுக்கு எதிராக வன்முறை செய்தால் ஒருநிலையும் , தமிழன் செய்தால் ஒரு நிலையும் எடுக்கிறார்கள்.

பெண்கள் மட்டுமல்லா பிற அரசியல் தலைவர்களையும் கண்டமேனிக்கு காய்ச்சுகிறார்கள். சில வருடங்களாக வலைப்பூக்களைப் படித்ததிலிருந்தே இது தெரிகிறது.

சரி சின்மயிக்குப் பதிலாக ஜெயலலிதா குறித்த ட்வீட்டுகள் வேறொரு உளவுத்துறையின் மூலம் ஜெயலலிதாவின் கவனத்துக்குப் போயிருந்தால் என்ன செய்வார் ?

களத்தில் போராடும் உதயகுமார் போன்ற தலைவர்கள் அபத்தமாக வாய் விடுவதில்லை. ஆனால் இணையத்தில் அனைவரும் மனம் போன போக்கில் போட்டுத் தாக்குகிறோம் இல்லையா

3 வருடங்கள் முன்பு ஈழப்போர் நடந்த போதுதான் பதிவுலக அறிமுகத்தில் படிக்கத் தொடங்கினேன். ஒரு பதிவர் எல்லாளன் என்று பெயர், புலிகளின் செய்திகள் அருமையான மொழிநடையில் உடனுக்குடன் கிடைப்பதால் அதில் படிப்பது வழக்கம். ஜெயலலிதா புலிகளின் மீது வெறுப்பான அறிக்கைகள் வெளியிட்ட காலத்தில் அவர் வெளியிட்ட ஒரு பதிவில் ஜெயலலிதாவின் பழைய புகைப்படம் ஒன்று மினிட்ரௌசருடன் இருப்பது போல் வெளியிட்டு, சீலை தூக்கிய சிங்காரி என்பதை அதன் தலைப்பாக வத்திருந்தார்.

கருணாநிதி ஃபேஸ்புக்கில் வந்த போது வசவுகளாகப் போட்டு ஒரே நாளில் அவரை வெளியேற்றினார்கள்.

கனிமொழி ராசாவைப் பற்றி வந்த செய்திகள்

மன்மோகன் சோனியாவை இணைத்து வெளிவரும் கேலிப்படங்கள்

நடிகர் விஜய் குறித்து வருகின்றவை

இதெல்லாம் இணையத் தமிழர்கள் செய்கின்றவைதான். இதுதான் எரிச்சலாக இருக்கிறது. மேலே இருக்கின்ற ஒரு செயலை நாகரீகமாக எதிர்ப்பவர்கள், இன்னொன்றை உறுத்தலின்றிச் செய்கின்றனர்.

என்ன பிரச்சனையாக இருந்தாலும் அதை வைத்து அரட்டைக் கும்மியடிக்கின்றனர். மற்றவர்களை சொம்படிப்பவன், இணையப் பொரச்சி, அல்லக்கை பட்டங்களை அள்ளி  வீசுகின்றனர்.

இப்படி இவர்கள் செய்தது சரியென்றால் கவிஞர் மீனா கந்தசாமி மாட்டுக்கறித் திருவிழாவை ஆதரித்ததாக சந்தித்த வசைகளும் சரிதான். அவர் தலித் அல்லது தமிழர் என்பதால் அதை மட்டும் எதிர்க்கக் கூடாது சரிதானே. ஏனென்றால் இந்துத்துவாக்களுக்கும் ஒரு நியாயம் இருக்கும். அவரை ஒருவன் Bitch I want to fuck you  என்று ட்வீட்டியிருந்தான். 

நன்றி சவுக்கு
 நீங்கள் என்ன மகத்தான கொள்கைக்காகப் போராடினாலும் பெண்களை பாலியல் ரீதியில் தாக்கும் போது அதன் வீரியம் போய்விடுகிறது. பொது வாழ்க்கையில் இருக்கும் பெண்கள் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற எண்ணமே தெரிகிறது.

பெண்களை அவதூறு செய்வதை நிறுத்துங்கள் எனபதே இப்பதிவின் நோக்கம்.

இதைப் போன்ற சிறிய நிகழ்வுகளைப் பெரியதாக்கி இணைய சுதந்திர வெளிக்குப் பூட்டுப் போடவும், கருத்துரிமைக்கு ஆப்பு வைக்கவுமே வழிவகுக்கும். ஏற்கெனவே பல தளங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனவாம்.

இது போன்ற தனிநபர் தாக்குதல் மட்டுமன்றி "கண்ணியமான" எதிர்க்கருத்தாளர்களும் அரசால் நசுக்கப்படும் போலத் தெரிகிறது.

2 வாரங்களுக்கு முன்புதான் இதே மாதிரி ஒன்றை எழுதினேன்.

http://thamizvinai.blogspot.com/2012/10/blog-post_4.html
Download As PDF
Bookmark and Share

Post Comment