இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இஸ்லாமோஃபோபியா வேறு இஸ்லாமிய மதவாத எதிர்ப்பு வேறு

இஸ்லாமோபோபியாவை எதிர்ப்பது வேறு. இஸ்லாமிய மதத்தை விமர்சிப்பதை எதிர்ப்பது வேறு. அதைக் காரணம் காட்டி இதை ஆதரிக்க முடியாது.

                                         

பகுத்தறிவுவாதிகள் என்பவர்கள் இஸ்லாமிய மதவாதத்தை விமர்சிக்காததால்தான் இப்பிரச்சனை வருகிறது. விமர்சிக்காவிட்டாலும் தாழ்வில்லை ஆனால் மதவாதத்தை ஆதரிப்பதுதான் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

ஒரு இந்துத்துவர் என்பதாலே அவர் சொல்வதெல்லாம் தவறானது ஆகாது. சில நியாயமான விசயங்களை வைத்துத்தான் அவர்கள் தனது தவறுகளையும் நியாயப்படுத்த முடிகிறது.

இந்த பாடகர் சோனு நிகம் காவியா ?

காவியாக இருந்தாலும் ஒரு தவறுக்கு இன்னொரு தவறு சரியாகாது.

இவர் ட்விட்டரில் கேட்ட இரு கேள்விகள் என்ன ?

பள்ளிவாசல் ஒலிப்பெருக்கிகளைக் குறிக்கும்விதமாக,

"முகமது காலத்தில் மின்சாரம் இல்லை. எடிசனுக்குப் பின்னர் ஏன் இந்த இரைச்சல் ? "

"நான் முஸ்லிம் இல்லை. நான் ஏன் பாங்கு ஒலித்து காலையில் எழ வேண்டும். இந்தியாவில் எப்போது இந்த மதத்தன்மை திணிக்கப்படுவது ஒழியும் ?"

இக்கேள்விகளில்என்ன தவறு இருக்கிறது. இரண்டுமே நியாயமான கேள்விகளே. இதற்கு நியாயமான பதில்கள் இருக்கலாம்.

ஆனால் இந்த இரு கேள்விகளை ஒரு பெரிய இஸ்லாமோபோபியா ஆதாரமாக திரையடி (screenshot) களை எடுத்துக் கொண்டு திரிவது நீ எப்படி எங்களைப் பற்றிப் பேசலாம் என்ற இஸ்லாமிய மதவெறி.

இதை எப்படி பகுத்தறிவுவாதிகளோ, மத எதிர்ப்பாளர்களோ ஆதரிக்கிறார்கள். ? மிகவும் தவறு.

நாம் இஸ்லாமோஃபோபியாவைத்தான் எதிர்க்க வேண்டுமே தவிர முஸ்லிம் மதத்தை, முஸ்லிம்களை மத நம்பிக்கைகளை ஒருவர் விமர்சிப்பதை எப்படி எதிர்க்க முடியும் ? இதையெல்லாம் எதிர்த்தால் அவர் இஸ்லாமோபோபியாதான் சரி என்று முடிவெடுப்பார்.

முஸ்லிம்கள் மீது வெறுப்பைத் தூண்டுவதைத்தான் கண்டிக்க வேண்டுமே தவிர முஸ்லிம் மதத்தைப் பற்றிப் பேசியதால் ஒருவர் தனது ட்விட்டரை முடக்கினால் அது அவருக்கு சிறுமையாகாது, மாறாக மதத்தைப் பற்றிப் பேசுவதற்கு தண்டனை கொடுக்கும் முஸ்லிம் மதவாதத்துக்குத்தான் இழுக்கு.

இஸ்லாமோஃபோபியா உருவாவது முஸ்லிம்களின் மதத்தைப் பற்றிப்பிறர் பேச முடியாது பேசுவதும் இல்லை என்ற காரணத்தை முக்கியமாகக் காட்டித்தான். முஸ்லிம் மதநாடுகள் தங்கள் நாடுகளில் முஸ்லிம்கள் மதம் மாறுவதை கடும் தண்டனைக்குரிய குற்றமாக்கி சட்டங்கள் வைத்துக் கொண்டு மதத் தேர்வு சுதந்திரமுள்ள மற்ற நாடுகளில் இஸ்லாமைப் பரப்ப பணத்தை வாரியிறைக்கின்றனர்.

முகமது நபியைப் பற்றிப் பேசுவதோ, முஸ்லிம் மதத்தைப் பற்றிப் பேசுவதையோ முஸ்லிம் நாடுகளில் சாத்தியமில்லை. ஆனால் ஜனநாயக நாடுகளில் முஸ்லிம்கள் மதப்பரப்புரை நிகழ்த்தும் சுதந்திரம் உண்டு.

அதுவும் எப்படி ?

நீங்கள் வணங்குவது கடவுள் (சிலைகள் - முஸ்லிம்கள் தவிர மற்ற மதத்தவர் யாவரும் சிலைகளை வணங்குகிறவர்களே) இல்லை, நாங்கள் சொல்வதுதான் கடவுள் என்று மற்ற நாடுகளின் பெரும்பான்மை நம்பிக்கையைப் புண்படுத்தித்தான் மதத்தையே பரப்ப முடியும் என்பதுதான் வாடிக்கை.

அப்படியிருக்க முஸ்லிம் மதவாதம்தான் கடுமையான கேள்விகளுக்குள்ளாக்கப்பட வேண்டியது.

எப்படி இந்துமத நம்பிக்கையுடன் இருந்து கொண்டே பாஜகவை எதிர்க்கும் இந்துக்களைப் போல, முஸ்லிம் மத நம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டே முஸ்லிம் மதவாதத்தை எதிர்க்கும் முஸ்லிம்கள் உண்டு தானே ? ஒரு பகுத்தறிவுவாதியோ ஜனநாயகத்துக்காகப் போராடுகிறவரோ யாராக இருந்தாலும் இஸ்லாமோபோபியாவை எதிர்ப்பது போல இஸ்லாமிய மதவாதத்தையும் எதிர்க்க வேண்டும்.

Download As PDF
Bookmark and Share

Post Comment

இஸ்லாமிய மதவாத ஆதரவை வெளிப்படுத்த வெட்காத திராவிடப் பகுத்தறிவு

இஸ்லாமை விமர்சிக்காத மதிமாறனின் எதுகை மோனை வசனம் ஒன்று ஃபேஸ்புக்கில் பகுத்தறிவுவாதிகளால் பகிரப்பட்டுவருகிறது. 


யாராவது எதுகை மோனையாகப் பேசினால் அதைப் பகுத்தறிந்து விளக்குவது மதிமாறனின் இயல்பு. ஆனால் இம்முறை, தன்னுடையை வழமையான இஸ்லாமிய மதவெறியை விமர்சிக்காமல் தவிர்க்கும் பொருட்டு அவரே எதுகை மோனையாக பேசி நழுவியுள்ளார்.

நேர்மையாகச் சொல்ல வேண்டுமெனில், 
எனக்கு விமர்சிக்க விருப்பம் இல்லை நேர்மையும் இல்லை. 
எனது நோக்கம் இந்து மதம் விமர்சனம் மட்டுமே என்று விட்டுப் போக வேண்டும். 

ஆனால் இஸ்லாம் மதவாதத்தை மதவெறியை ஒன்றுமே இல்லாதது போல் பேசுவதுதான் சகிக்க முடியவில்லை. 

மதிமாறன் இந்துத்துவாவை எதிர்த்துப் பேசுவது எல்லாம் இஸ்லாமியர் நடத்தும் பொதுக் கூட்டங்களில்  பிறகெப்படி இஸ்லாம் மதத்தை விமர்சிப்பது ?

இஸ்லாமியர்களை விமர்சித்தால்/திட்டினால் வன்முறை நிகழ வாய்ப்பு மிகவும் குறைவு. இஸ்லாம் என்ற மதத்தையும் முகமது நபியையும் தன்னுடைய நேர்மையான பகுத்தறிவுப்படி திட்டக்கூட வேண்டாம், விமர்சனம் செய்தால் கூட போதும், மதிமாறனுக்கும் தலையோ கையோ இரண்டுமோ இருக்காது
Download As PDF
Bookmark and Share

Post Comment

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்பது மடத்தனம் - பிஜெ

ஆண்டாள் விடயத்தில் காவிக் கூட்டம் அயோக்கியத்தனம் பண்னாமலிருந்தால் சங்கராச்சாரியார் மீது இத்தனை எதிர்ப்பு வந்திருக்காது. அது ஒரு வகை பதிலடிதான். சங்கரர் மரியாதை செலுத்தாமலிருப்பதே தமிழுக்கு அவர் செய்த மரியாதை. அதுதான் தமிழுக்கும் மரியாதை. அந்த வகையில் பிஜே அவர்களும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கத் தேவையில்லை என்று சொல்லித் தமிழுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். 

வாழும் நாட்களில் 24 மணிநேரமும் இஸ்லாமியக் கொள்கையின் அடிப்படையில் வாழவேண்டும் என்று கோருகிறவர் பிஜே. அது சாத்தியமா ? இல்லை. எல்லாருக்குமே நல்லாத் தெரியும். ஆனாலும் முடிந்த வரை அமல் படுத்துகிறார்கள். இதை நம்பிக்கை என்று சொன்னால் கூட விட்டு விடலாம். இதை எல்லாருக்கும் பொதுவான கொள்கையாக, கருத்து போலச் சொல்வதால்தான் சகிக்க முடியாத்தாக இருக்கிறது

தமிழ்த்தாயை கடவுள்னு யாரு சொன்னா ? பலகடவுள்ன்னு வர்றதுன்னு இவரே சொல்லிக்கறார். தமிழ்த்தாய்தான் தமிழ்நாட்டைக் காப்பாத்தறான்னு யாருப்பா இவருகிட்ட சொன்னது ? இவர்கள் முகம்மது நபியை ஆகா ஓகோன்னு புகழ்றாங்க. அதை நாம் முகம்மது நபி ஏன் கடவுள் மாதிரி புகழ்றீங்கன்னு கேட்ட என்ன சொல்வாங்க. நாங்க முகம்மது நபியை வணங்க மாட்டோம். ஆனா புகழ்வோம். அது மாதிரிதான் தமிழ் மொழியை புகழ்றோம் வாழ்த்தறோம்.

அல்லா அல்லான்னு நீ யாரைக் கூப்டற ? எந்த வருசம் பொறந்தான் அவன் ? எப்ப செத்தான் ? இல்ல இன்னும் இருக்கானா ? அல்லா அல்லான்னு இல்லாதவனை வணங்கச் சொல்ற அத மத்தவனையும் ஏத்துக்கச் சொல்ற ?


பிஜே அவர்கள். யாராலும் இவருகிட்ட விவாதமே பண்ண முடியாது. ஏதாவது ஒரு சொல்லைப் பிடித்துக் கொண்டு அதற்கு நூறு விளக்கம் சொல்லி திணறடிப்பதே இவர்களின் விவாதத் திறமை. மத அடிப்படைவாதம் என்று சொன்னால் அது எல்லா முஸ்லிம்களையும் குறிக்குது என்று வாயையும் அடைப்பது, பர்தா விமர்சனம் பண்ணா அது வன்மம், சமூகத்தின் மீது காழ்ப்பு என்று அடிப்பதும் தொடர்கிறது.

அந்த வகையில் இப்போ தமிழ்த்தாயை விமர்சனம் பண்றாப்ல. இதை நான் தமிழ் மீது இருக்கும் வெறுப்பு/காழ்ப்பு என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஏன்னா நம்ம வேற அவங்க வேற.

எதையெடுத்தாலும் கடவுள் நம்பிக்கையுடன் தொடர்பு படுத்தி, அல்லா வுக்கு வணங்குதல் - மற்றவைக்கு வணங்குதல் என்று ஒப்பீடு செய்தே அனைத்தையும் விமர்சனம் செய்வது அன்னாரின் வாடிக்கை. வெற்று மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வதையும், தலைவர்கள் சிலைகளுக்கு மாலை போடுவதையும் கூட தமது பகுத்தறிவினால் கட்டுடைப்பார்.

பெண்கள் மேற்கத்திய உடையணிந்தால் அதை ஏற்றுக் கொள்ளாத ஆணாதிக்க சமூகம் இந்தியாவுடையது. அதை தன்னுடைய பர்தா ஆதரவுக்குப் பயன்படுத்துவதற்காக இந்தியக் கலாச்சாரமும் பெண்கள் மூடி வைக்க வேண்டும் என்று கூறுகிறது, என்று தமக்குத் தோதாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். அதே நேரம் சிலையை வணங்குவதை மட்டும் கலாச்சாரமாக ஏற்றுக் கொள்ளாமல் எதிர்ப்பார்கள்.

இவர்களின் கொள்கைப்படி, சக மனிதனுக்கும் மரியாதையாக வணக்கம் சொல்வது இறைவனுக்கு மாற்று வைப்பதாகி விடுகிறது. இறைவனை வணங்குவதும் ஒன்னு மனிதனுக்கு வணக்கம் சொல்வதும் ஒன்னு. வணக்கம் சொல்வது ஒரு வகை ஏற்றத் தாழ்வு என்று சொல்ல முடியும். ஆனால் வழிபாடு ஆகுமா ?

இப்ப முஸ்லிம்கள் பயன்படுத்தற நவீன வசதிகள் குறித்த அனுமதி வசனம் எதுவும் இஸ்லாமில் இல்ல என்றாலும் அதை சாதகமாப் பயன்படுத்தி எல்லா வசதிகளையும் அனுபவிக்கிறார்கள். ஆனா இந்த மாதிரி விசயத்துக்கு மட்டும் மத அளவுகோலைக் கொண்டு வந்திடுவார்.

என்னவோ ஒரு கடவுளாம் அவனுக்கு எந்தத் தேவையுமே இல்லையாம். ஆனா அவனை வணங்கறதுக்காகவே மனிதனைப் படைச்சானாம். அதுக்கு அஞ்சு தடவை மண்டி போடணுமாம். இது ஒரு லாஜிக்கா ? இதுக்கு ஒரு மார்க்கமா ? சபை நாகரிகம் என்பதை மட்டும் இவர் எப்படி ஏத்துக்கிறார். பாட்டு முடிய வரைக்கும் இருந்துட்டுப் போனா அது மரியாதையாம். அதை எப்படி இஸ்லாமியப் பகுத்தறிவு ஏத்துக்குது ?

தமிழ்த்தாயை கடவுள்னு யாரு சொன்னா ? பலகடவுள்ன்னு வர்றதுன்னு இவரே சொல்லிக்கறார். தமிழ்த்தாய்தான் தமிழ்நாட்டைக் காப்பாத்தறான்னு யாருப்பா இவருகிட்ட சொன்னது ? இவர்கள் முகம்மது நபியை ஆகா ஓகோன்னு புகழ்றாங்க. அதை நாம் முகம்மது நபி ஏன் கடவுள் மாதிரி புகழ்றீங்கன்னு கேட்ட என்ன சொல்வாங்க. நாங்க முகம்மது நபியை வணங்க மாட்டோம். ஆனா புகழ்வோம். அது மாதிரிதான் தமிழ் மொழியை புகழ்றோம் வாழ்த்தறோம்.

அல்லா அல்லான்னு நீ யாரைக் கூப்டற ? எந்த வருசம் பொறந்தான் அவன் ? எப்ப செத்தான் ? இல்ல இன்னும் இருக்கானா ? அல்லா அல்லான்னு இல்லாதவனை வணங்கச் சொல்ற அத மத்தவனையும் ஏத்துக்கச் சொல்ற ? அதை எப்படி எல்லா உலக மக்களுக்குமான நன்னெறின்னு சொல்ற ?

நாட்டுப் பண்ணுக்கு எழுந்து நிற்பது என்ன வகையில் சேர்த்தின்னு சொல்வாரா ? அதுவும் மடத்தனம்தானே ? அதை எந்த நாட்டிலும் சொல்ல முடியாது. ஆனால் எல்லா நாட்டிலும் எழுந்து நிற்பது கட்டாயமாகத்தானே இருக்கும். எப்படி எல்லா நாட்டிலும் இவர் சொன்ன கொள்கைப்படி வாழ்வது ?


        

இசைக்கு இஸ்லாமில் இடைமில்லதானே. நாட்டைப் புகழ்வது/ போற்றுவதற்குத்தானே நாட்டுப் பண். சௌதி அரேபியாவுக்கு எதற்கு நாட்டுப் பண் ?

சௌதியின் இராணுவ அணிவகுப்பின் போது ராணுவத் தளபதிகளும் சௌதி மன்னருக்கு சல்யூட் அடிக்கிறார்கள். சௌதி  மன்னரும் அவருக்கு பதில் சல்யூட் வைக்கிறார். இராணுவ சல்யூட் குறித்த இஸ்லாமின் நிலை என்ன ? வணக்கம் சொல்வதே தவறு, எழுந்து நிற்பதே மடத்தனம் என்பதெல்லாம் சரியென்றால் இது என்ன வகையில் வரும் ? ஏன் எதற்கெடுத்தாலும் இஸ்லாம்/ சௌதி என்கிறேன் என்றால் இவர்கள் இஸ்லாம் எங்கள் நம்பிக்கை/மதம் என்று கூறுவதில்லை. கொள்கை/மார்க்கம் என்று கூறுவதால்தான். நம்பிக்கையை விட கொள்கையைத்தான் அதிகம் விமர்சிக்க வேண்டும். இதில் எந்தக் காழ்ப்பும் இல்லை வெறுப்பும் இல்லை. வெறும் கேள்விகள்தான். 
Download As PDF
Bookmark and Share

Post Comment

தஸ்லிமா நஸ்ரின் விரட்டியடிப்பு, அப்ப ஜனநாயகம் ? அதுவும்தான் !

கடந்த மாதம் வியாழக்கிழமை வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா அஜந்தா, எல்லோரா பகுதிக்கு சுற்றுலாவுக்கு வந்தார். அதை அறிந்த ஆல் இன்டியா மஜ்லிஸ் - இ - இட்டேஹதுல் முஸ்லிமீன் என்ற அமைப்பைச் சார்ந்த சயித் இம்தியாஸ் அலி என்ற முன்னாள் என்டிடிவி இன் நிருபர்/சட்டப் பேரவை உறுப்பினர் தலைமையில் ஔரங்காபாத் விமான நிலையத்தின் வெளியே நின்று ஏறக்குறை 500 பேர்களுடன் வந்து முழக்கங்களை எழுப்பியது. இதனால் பாதுகாப்புக் காரணங்கள் கருதி அவர் விமான நிலையத்திலேயே இருந்து அடுத்த விமானத்தில் மும்பை நோக்கித் திரும்ப வேண்டியதாயிற்று. இதைப் பற்றி வருந்திய தஸ்லிமா ஒரு பெரும் ஜனநாயக நாட்டில் இங்கனம் நடந்திருப்பது வருத்தத்திற்குரியது என்று கூறினார். 

அவர் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத காரணத்தால், ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டிலும் அவர் தனது கருத்து காரணமாக உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் இருக்கிறார். இதனால் அவரால் எங்கும் தனித்துச் செல்ல இயலாது. பாதுகாவலர்களுடன்தான் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இதை தனிப்பட்ட முறையில் தம் மகிழ்ச்சிக்காக எங்கும் தனித்துச் செல்ல முடியாத துயரநிலையாகக் கருதுகிறார். 

நான் பல வருடங்களாக கனவும் கண்டேன் அது பலிக்க வேண்டுமென்றும் விரும்பினேன். அஜந்தாவின் சிறப்புகளையும், எல்லோராவின் மாயாஜாலங்களையும் பார்க்கபோகிறேன் என்று நினைத்தேன். நான் இந்தியா கொண்டிருக்கின்ற பல வரலாற்று அற்புதங்களை கண்டிருக்கிறேன். அதில் சிலவற்றைக் காணும் சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும் என் மீதான கட்டுப்பாடுகள் காரணமாக இழந்திருக்கிறேன். இங்கே இந்தியாவில் ஆயுதமேந்திய பாதுகாவலர்களைக் கொண்டிருக்கிறேன். தனிச்சிறப்பான அரசின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறேன். பாதுகாப்பு சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டே நான் முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. 2007 இல் என் மீதான தாக்குதல் தொடங்கியதிலிருந்து இது தொடர்கதையானது. நான் நிகழ்ச்சிகளில் எங்காவது கலந்து கொள்ளப் போகிறேன் என்றால் அது செய்தியாகிவிடும். விளம்பரமாகி விடும். நான் தாக்குதல் அச்சமின்றி கலந்து கொண்டிருப்பேன். ஆனால் தாக்குதல் முதன் முறை நடந்த பின்னர் அது தொடர்கிறது. ஒரு தொற்று நோயைப் போலப் பரவி விட்டது. நான் எனது மகிழ்ச்சிக்காகப் பயணம் செய்ய முடிவதில்லை. விடுமுறையைக் கொண்டாட முடியவில்லை. என்னுடைய பாதுகாவலர்களிடம் எல்லாவற்றையும் தெரிவித்தாக வேண்டியிருக்கிறது. எங்கே, எதற்கு, எப்போது என்றெல்லாம்.  பின்பு அவர்கள் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வர். 

நான் அஜந்தா செல்வதை யாருக்கும் அறிவிக்க வில்லை. விமானப் பயணம் தொடர்பாக நான் கொடுக்க வேண்டிய அனைத்து உண்மையான ஆவணங்களையும் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து விட்டேன். அவர்களும் அதை மகாராஷ்ட்ராவிற்கு அனுப்ப வேண்டிய இடத்திற்கு அனுப்பி எனது பாதுகாப்பை உறுத் செய்தனர். நான் மகாராஷ்ட்ராவில் பாதுகாவலர்களைப் பெற்று விட்டேன். தங்குவதற்கு விடுதியிலும் பதிந்து விட்டேன் என்னுடன் வருபவரது பெயரில். துணையாக எனது பெயரை சேர்த்துக் கொண்டேன். என்னுடன் துணையாக வந்த இளம்பெண் எனது மகள் போன்றவர். ஜூலை 29 ஆம் நாள் நான் டெல்லியிலிருந்து ஔரங்காபாத் சென்றேன். அங்கே விமான நிலையத்திலிருந்து வெளியே செல்லும்போதே ஒரு அதிகாரி என்னைத் தடுத்தார். 

"இங்கே நிலைமை சரியில்லை. உங்களுக்கு எதிராக 500 பேர் நீங்கள் தங்கப் போகிற விடுதியின் முன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்" என்றார். 

என்னால் அதை நம்ப முடியவில்லை. என்னுடைய வரவு மிகவும் இரகசியமாக டெல்லி காவல்துறையால் மராட்டிய காவல்துறைக்கு அனுப்பப்பட்ட செய்தி கடும்போக்குவாதிகளுக்கு எப்படித் தெரிந்தது ?. அந்த அதிகாரிக்கும் எப்படி இந்த செய்தி கசிந்தது என்று தெரியவில்லை. தாங்க முடியாத வேதனையுடனும், உதவியற்றவளாகவும் உணர்ந்த நான் அவரிடம் நான் 

"இப்போது என்ன செய்ய வேண்டுமெனக் கேட்டேன். "நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும்" என்றார். 

எப்போது ? எப்படி ? என்றேன். 

நாளை காலையில் டெல்லிக்கு ஒரு ஏர் இன்டியா விமானம் இருக்கிறது.

நாளைக் காலை வரை என்ன செய்வது ? நான் எங்கே தங்குவது ?"

விமான நிலையத்தில்.

பின்பு நான் ஏர் இன்டியா பயணச்சீட்டு வழங்குமிடத்திற்குச் சென்று மும்பைக்கு இரண்டு சீட்டுகள் வாங்க வேண்டியிருந்தது. அதற்குள் போராட்டக்காரர்கள் விமானநிலையத்திற்குள்ளும் வந்து விட்டார்கள். என்னுடைய பாதுகாப்பு அதிகாரி எனக்கு எதுவும் ஆகாது என்று ஆறுதல் கூறினார். நான் அங்கிருந்து செல்லும் போது 200 பேர் காது கிழியும் அளவுக்கு "தஸ்லிமா திரும்பிப் போ" "தஸ்லிமா ஒழிக" "இறைவன் மிகப் பெரியவன்" என்ற முழக்கங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர். மும்பைக்குச் சென்ற பிறகு எங்காவது கலவரம் நடந்திருக்கிறதா என்று இணையத்தில் பார்த்து விட்டு இல்லையென்று நிம்மதியடைந்தேன். இது அவர் எழுதிய அஜந்தா எல்லோர அனுபவக் கட்டுரையின் ஒரு பகுதி. முழுவதும் படிக்க விரும்புகிறவர்கள் இங்கே செல்லவும்

ஒரு தனி நபர் அதுவும் இந்தியாவின் ஜனநாயகத்துக்காக இங்கே அடைக்கலம் தேடி வந்தவர் உயிருக்கு உத்தரவாதமில்லாமல் ஒடி ஒளிய வேண்டிய நிலையில் இருக்கிறார். இங்கே கருத்துரிமைக்கான பாதுகாப்பு என்பது அந்த அளவில் இருக்கிறது . சில நாட்களுக்கு முன்பு நடந்த இந்நிகழ்வு வட மாநிலங்களில் தலைப்புச் செய்தி அளவுக்கு தெரிந்திருக்கிறது. இங்கே பெரிதாக எதுவும் கண்டு கொள்ளப்படவில்லை. கண்டிக்கப்படவுமில்லை. 

இந்தியாவில் உண்மையில் ஜனநாயகம் இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவுக்கு மதவாதிகள்/மதவெறியர்கள் கொட்டம் அடிக்கிறார்கள். ஜனநாயகத்தின் முழு சுதந்திரத்தையும் திகட்டத் திகட்ட அனுபவிப்பவர்கள் மதவாதிகள். ஆனால் இறைமறுப்பாளர்களை மட்டும் நிம்மதியாக வாழ விடமாட்டார்கள். மதத்தை விமர்சிப்பவர்கள், மதவாதத்தை எதிப்பவர்களுக்கு படுகொலையைத்தான் பரிசளிக்கிறார்கள். 


ஜாகிர் நாயக் என்ற இஸ்லாமிய மதவாதிக்கு யாராவது எதிர்ப்புத் தெரிவிக்கிறார்களா ? உலகத்தின் எல்லா இஸ்லாமல்லாத நாடுகளுக்கும் செல்கிறார். அங்கே யாரும் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. அதே போல் ஒரு இஸ்லாமிய எதிர்ப்பாளர் இஸ்லாமல்லாத ஜனநாயக நாட்டில் கூட சுதந்திரமாக தனது கருத்தை வெளியிட முடியவில்லை. நிம்மதியாக நடமாட முடிவதில்லை.

இஸ்லாமிய மதவாதிகள், விவாதத்துக்கு வா நேரடி விவாதத்துக்கு வா என்று அழைக்கிறார்கள். அதே விவாதத்தை இணையத்தில் நடத்துவது வீண் என்கிறார்கள். இணைய விவாதம் வீண் என்று சொல்கிறவர்கள் இணையத்திலிருந்து வெளியேறி களத்தில் மட்டும் இயங்குவதில்லை, தொடர்ந்து இணையத்திலேயேயும் இயங்குகிறார்கள், ஏன்?. இஸ்லாமிலிருந்து வெளியேறி இஸ்லாமிய மதத்தை விமர்சிப்பவர்களுக்கு உயிர் பாதுகாப்பு இந்தியா போன்ற ஜனநாயக நாட்டிலேயே இல்லை. பகுத்தறிவு பேசும் தமிழ்நாட்டிலும் இல்லை. இஸ்லாமிய மார்க்க அறிஞர்களால் பதில் சொல்ல முடியாத அளவுக்கு யார் விமர்சனம் செய்கிறார்களோ அவர்களை இஸ்லாமிய எதிரிகள் என்று வகைப்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் எல்லா முஸ்லிம்களுக்கும் எதிரானவராக அவரை நிறுத்தி விடுகிறார்கள். கருத்தை விமர்சனம் செய்ய முடியாத பட்சத்தில் அவர் எதிரி ஆக்கப்படுகிறார்.

ஏன் இஸ்லாமை விமர்சனம் செய்ய வேண்டும் என்ற கேள்வி வருகிறது. ஏன் எங்கள் மீது வன்மம் என்றும் கூட நினைக்கக்கூடும். இஸ்லாமியர்கள் தாங்கள் உண்டு தங்கள் மதம் உண்டு என்று வாழ்வதில்லை, அதைப் பரப்புரை செய்கிறார்கள் மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள். அவர்கள் வெறும் மார்க்கமாக மட்டுமல்லாமல் அறிவியல் கண்டுபிடிப்புகள் இருப்பதாகவும் சொல்கின்றனர். இப்படி அறிவியல் ரீதியாக விவாதிக்கும் துணிச்சல் தங்கள் மதத்தில் இருப்பதாகக் கருதினால் எல்லாவகை எதிர்க்கருத்துக்களையும் எதிர்கொள்ளவேண்டும். கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டுமே ஒழிய போராட்டங்களால் அல்ல. வன்முறைகளால் அல்ல. ஆனால் என்ன செய்கிறார்கள் ? எங்கே அவர்கள் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியவில்லையோ அங்கே விமர்சனம் செய்பவரை அவதூறு செய்கிறார், வெறுக்கிறார், விதண்டாவாதம் செய்கிறார், இஸ்லாமிய எதிரி, துரோகி என்கின்றனர். மற்றவர் மீதான வெறுப்பை விதைக்காத வரை விமர்சனம் என்பது எந்த ஒரு எல்லையும் அற்றது. 

இவர்கள் மதத்தை மட்டும் பரப்புரை செய்வதில்லை, அது சார்ந்த சட்டத்தையும் (ஷரியத்) உலகத்திற்கே பொதுவானதாகக் காட்டுகின்றனர். படைப்புக் கொள்கையை மறுக்கும் பரிணாமக் கொள்கையையும் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். இப்படி அறிவியல் அறிஞர்கள் போல் விவாதம் செய்பவர்கள், அதே போல் இஸ்லாமை அறிவியல் பூர்வமாக வரலாற்றுத் தரவுகளுடன் விமர்சனம் செய்பவர்களுடன் எதிர் விவாதம் செய்யும் போது அதை எப்படி எதிர்கொள்கின்றனர். அவரை இஸ்லாமிய சமூகத்தின் எதிரியாகப் பிரகடனம் செய்து விடுகின்றனர். இறை மறுப்பாளர்களின் கருத்துக்கள் நம்பிக்கையைப் புண்படுத்துகின்றது, மனதைப் புண்படுத்துகிறது, மத நிந்தனை செய்கிறது என்ற அயோக்கியத்தனமான கருத்துக்களைக் கொண்டு வந்து பாமர மக்களைத் துணைக்கு அழைத்து இறைமறுப்பாளர்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக இஸ்லாமியராகப் பிறந்து இறைமறுப்பாளராக மாறியவர்கள், மதவாதத்தை எதிர்த்து நிற்பவர்களுக்கு இந்த நிலைதான்.

யூத விஞ்ஞானி இஸ்லாத்தை ஏற்றார்
ரஷ்ய கன்னிகாஸ்த்ரி இஸ்லாத்தைத் தழுவினார்
அமெரிக்க ராணுவ வீரர் இஸ்லாத்தை ஏற்றார்
பாபர் மசூதியை இடித்தவர் இஸ்லாத்தை ஏற்றார்
பெரியாரியவாதி ஏகத்துவத்தை ஏற்றார்
ஐரோப்பாவில் இஸ்லாம் வளர்கிறது
அமெரிக்காவில் இஸ்லாம் பரவுகிறது
ஆஸ்திரேலியாவில் இஸ்லாம் பரவுகிறது
இஸ்லாமை நோக்கி படையெடுக்கும் பிரிட்டன் பெண்கள்

என்றெல்லாம் பெருமை பேசுகின்றனர். இதெல்லாம் எப்படி நடக்கிறது ? அந்தக் குறிப்பிட்ட நபர் இஸ்லாமை ஏற்பதை அந்த நாட்டின் அரசோ அல்லது சமூகமோ தடை செய்வதில்லை. யாரும் இஸ்லாத்தைப் பரப்பக்கூடாது என்று போராடவில்லை. பிறகு ஏன் இஸ்லாமிய மதவாதிகள் இஸ்லாமிய மதத்தை விமர்சிப்பவர்களுக்கு எதிராக போராட வேண்டும். அவர்கள் மதத்தைப் பரப்புவதற்கு ஜனநாயகம் தரும் சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொள்வார்கள். அதே போல் சுதந்திரத்தை இறைமறுப்பாளர்கள் பயன்படுத்தி மதத்தை விமர்சித்தால் அதற்கெதிராக போராடுவார்கள். தமக்கு அதிகாரம் உள்ள நாடுகளில், பகுதிகளில் சட்டத்தின் மூலமாகவே மத எதிர்ப்பைத் தடுத்து வைப்பார்கள். 

மதவாதம் அற்ற நாடுகளில், அதாவது சட்டத்தில் மதம் என்பது தனிமனித உரிமையாக உள்ள நாடுகளில், மதம் என்பது தனி நபர் சார்ந்தது. அரசாங்கம் அதைத் தடை செய்வதில்லை. பெரும்பான்மை கிறித்தவர்கள் வாழும் மேற்கத்திய நாடுகளில் கிறித்தவ மதத்தை விமர்சனம் செய்ய உரிமை, பாதுகாப்பு எல்லாம் உண்டு. இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவிலும் விமர்சனம் செய்ய உரிமை, பாதுகாப்பு இருக்கின்றன. ஆனால் இஸ்லாமிய நாடுகளில் இருக்கிறதா ? இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் இஸ்லாமிய மதச் சட்டம் நடைபெறும் நாடுகளில் எந்தளவுக்கு இறைமறுப்பாளர்களுக்கு இருக்கிறது. நான் கேட்பது இஸ்லாமிலிருந்து விலகி இறைமறுப்பாளராக வாழ்பவர்க்கு. இறைமறுப்பை பரப்புரை செய்பவர்க்கு. இல்லையென்றால் அதற்கு இஸ்லாமைத்தானே விமர்சிக்க வேண்டும் ? 


நான் ஃபேஸ்புக்கில் விவாதமொன்றில் ஒருவரிடம் இந்தக் கேள்வியை சற்று வேறு மாதிரி கேட்டிருந்தேன். நீங்கள் இஸ்லாமைப் பரப்புவதைப் போல் இஸ்லாமிய நாடுகளில் வேறு கொள்கையைப் பரப்பு முடியுமா என்று கேட்டேன். அதற்கு அவர் இஸ்லாமை அவர்கள் சட்டமாக வைத்திருக்கிறார்கள். நீங்கள் பிழைக்கபோன இடத்தில் உங்கள் சித்தாந்தத்தைச் சொன்னால் யார் சம்மதிப்பார்கள் என்றார். இஸ்லாமியர்களும் அமெரிக்க, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய நாடுகளுக்கு பிழைக்கத்தான் சென்றார்கள். படியளக்கச் செல்லவில்லை. அங்கே அவர்கள் தமது சித்தாந்தத்தைப் பரப்பவில்லையா ? நான் கேட்பது மதவாத நாடுகளில் இருக்கும் இஸ்லாமிய மதத்திலிருந்து விரும்பாமல் வெளிவருகிறவர்களுக்கு என்ன உரிமை உள்ளது என்பதை ?

இஸ்லாமியப் பரப்புரை எப்படித் தொடங்குகிறது. சிலைகள் யாவும் கடவுளல்ல. இணை வைத்தல் கூடாது. படைப்பினங்களை வணங்கக் கூடாது. இஸ்லாமைத் தவிர அனைத்து மதங்களும் சிலையை வைத்து வணங்குகின்றன. அதைத்தான் முதலில் மறுக்கிறது இஸ்லாம். இஸ்லாம் பரப்புரையே மற்றவர்களின் முதல் நம்பிக்கையான (மாற்று மதங்களின்) "அவர்களின் கடவுள்" உண்மையான கடவுள் இல்லை நாங்கள் சொல்வதுதான் உண்மையான கடவுள். ஆக இவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் நடுவில் நின்று உங்கள் நம்பிக்கை பொய் நாங்கள் சொல்வதுதான் மெய் என்கிறார்கள். உங்கள் கடவுள் வெறும் சிலை அது கடவுள் இல்லை" என்கிறார்கள். பிழைக்க வந்த நாட்டில் அங்கே இருக்கும் மக்களின் நம்பிக்கையைப் புண்படுத்துகிறோம் எந்தவித தயக்கமும் அச்சமும் இல்லாமல் இஸ்லாமிய மதவாதிகள் எல்லா நாடுகளிலும் செய்கிறார்கள்.  அது எப்படி சாத்தியமாக இருக்கிறது, மிக இயல்பாக இருக்கிறது ? அந்த நாட்டின் ஜனநாயகமும் அதனால் பண்பட்ட அந்நாட்டினரின், அச்சமயத்தவரின் சகிப்புத்தன்மையின் காரணமாகத்தானே. 

அதே நேரம் இவர்களை சுதந்திரமாக மதம் பரப்பச் செய்ய அனுமதிக்கும் ஜனநாயகத்தை, அதைப் பின்பற்றும் மேற்கத்தியப் பண்பாட்டை விமர்சனமும் செய்கிறார்கள். விபச்சாரம், அவிழ்த்துப் போட்டு அலையும் கலாச்சாரம் என்பார்கள். அவிழ்த்துப் போடும் சுதந்திரம் இருப்பதால்தானே அவர்கள் வேறுமதத்தையும் தழுவும் சுதந்திரமும் இருக்கிறது. 

இவர்கள் தமது மதக்கருத்துக்களைத்தான் எல்லா நிகழ்வுகளின் மீதும் கருத்துக்களாக வைக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒன்று. உணர்வு (இஸ்லாமிய) என்ற வார இதழைப் பார்க்க நேர்ந்தது. அதில் ஒரு கல்லூரியில் விரிவுளையாளரும், கல்லூரி மாணவியும் திருமணம் செய்திருந்த செய்தியைப் போட்டு அதில் விமர்சனமும் இருந்தது. ஆண்களும் பெண்களும் சேர்ந்து கல்வி கற்பது இதுமாதிரியான செயல்களைத் தூண்டும். எனவே இருபாலருக்கும் தனித்தனியான கல்வி நிலையங்களைக் குறித்து அரசு சிந்திக்க வேண்டும் என்று முடித்திருந்தார்கள். இது மாதிரிதான் சமூகத்தில் நிகழும் பலவகையான நிகழ்வுகளில் தமது மதம் சொல்லும் கருத்துக்களைச் சொல்லி அதைத் தீர்வாக முன்வைக்கிறார்கள். 

காதல் தவறானது, கலப்புத் திருமணம் தவறானது போன்ற தனி மனித உரிமைகளுக்கு எதிரான மதக் கருத்துக்களை சொல்கிறார்கள்  காதலர் தினம் விபச்சாரம், கற்புக்கொள்ளை என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆணும் பெண்ணும் சேர்ந்து பயிலக் கூடாது என்கிறார்கள். ஆக இவர்கள் இப்படியெல்லாம் விமர்சனம் செய்வது தான் சாராத சமூகத்தையும் சேர்த்துத்தான். இதே போல் இஸ்லாமிய எதிர்ப்பாளர் தரப்பு பர்தாவை விமர்சனம் செய்யும் போது மொத்த சமூகத்தையும் சமூகப்பெண்களையும் வன்மம் கொண்டும் வெறுப்பு கொண்டும்வி மர்சனம் செய்கிறீர்கள் என்கிறார்கள். இது எப்படி நியாயம் ?

இதே போல் இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியர்கள் மத்தியில் ஒருவன் நின்று கடவுள் இல்லை, முகமது தூதர் இல்லை என்று சொல்லிவிட்டு தனது விளக்கத்தைத் தொடர முடியுமா ?. அவ்வளவு தூரம் போகவேண்டியதில்லை. ஒருவன் மத நிந்தனை செய்துவிட்டான் என்ற புரளியைக் கிளப்பி விட்டாலே போதும். வங்க தேசம், பாகிஸ்தான் என்று பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். அவன் உயிருடன் இருக்க மாட்டான். ஏன் இந்த பாகுபாடு ? ஏன் இஸ்லாமிய மதத்துக்கு மட்டும் இந்த சலுகை ?. உங்களை எப்படி புண்படுத்தாமல் விமர்சிக்க முடியும். நாங்கள் அறிவியல் பூர்வமானவர்கள், புரட்சிகரமானவர்கள் என்று சொல்பவர்கள் ஏன் "மதத்தைப் புண்படுத்தும்" என்ற நேர்மையான விவாதத்திற்கு எதிரான கருத்தைப் பயன்படுத்த வேண்டும் ?

இஸ்லாமிய மதவாதம் நிறைந்த நாடுகளில் மட்டும் இருக்கும் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களுக்கான பாதுகாப்பின்மை இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளிலும் வந்து விட்டதுதான் நம் ஜனநாயகத்தின் சாதனை. ஏனென்றால் மதவாதிகளுக்காக தஸ்லிமாவை மேற்கு வங்கத்திலிருந்து வெளியேற்றியதே இடதுசாரிகள் என்றிருக்கையில் அதற்கு மேல் நாம் என்ன சொல்ல முடியும். கருத்தை எதிர்கொள்ளும் பொறுமையோ பக்குவமோ மதவாதிகளுக்கு இருந்ததே இல்லை. இங்கே மதச்சார்பின்மை என்பதே போலி மதச்சார்பின்மை என்றும், மதச்சார்பின்மைவியாதிகள் என்றும், சிக்குலரிஸ்டுகள், சூடோ செக்குலரிஸ்டுகள் என்றும் நல்ல பெயர் வாங்கியவர்கள்தான் மதச்சார்பின்மை பேசுகிறவர்கள். அப்படி இருக்க மதவாதிகள் மட்டும் எப்படி இருப்பார்கள். மத உணர்வைத் தூண்டி அரசியல் செய்கிறவர்களாகத்தானே இருப்பார்கள். அதனால்தான் தமிழ்நாட்டில் இது பெரிய செய்தியாகவில்லை.
Download As PDF
Bookmark and Share

Post Comment

இரு கொலைகள் ஒரு காரணம்


இரு வேறு நாடுகளில் இரண்டு வேறு பேர் கொல்லபட்டனர். இரண்டிற்கும் ஒரே காரணம் மதவெறி அல்லது மதநம்பிக்கை. இரண்டு பேரும் அந்த மதவெறிக்குக் காரணமான மதத்தைப் புண்படுத்தியதாகவோ, அல்லது இழிவு படுத்தியதாகவோ ஆதாரம் இல்லை. இருப்பினும் அவர்கள் செய்யாத செயலை, செய்தார்கள் என்ற நம்பிக் கொண்டு அல்லது நம்பியதாக நடித்துக் கொண்டு ஒரு பெருங்கூட்டம் அல்லது சிறு கூட்டம் அவர்கள் தனிமனிதனாக இருந்த போது அடித்துக் கொன்றுள்ளது. இந்த மதவாதம் மத நம்பிக்கை என்ற கூறு கெட்ட மூடத்தனம் ஒரு கூறு கெட்ட கூட்டத்தின் மொத்த வடிவமாக மாறும்போது பொய்யும் உண்மையாகிறது. கொலைவெறியே இவர்கள் மூச்சாகிறது. மனிதம் மண்ணோடு மண்ணாகி விடுகிறது.

முதல் கொலை இந்தியாவில் நடந்தது. இந்தியா மதச்சார்பற்ற ஜனநாயக நாடு. ஆனாலும் இந்தக் கொலை மதத்தின் பெயரால், மத நம்பிக்கையை இழிவுபடுத்துவதாகச் சொல்லி ஒரு கொடுமையான மனிதர்கள் வெட்கித் தலைகுனியும் வகையில் நிகழ்த்தியுள்ளது இந்து மதவெறிக்கூட்டம். ஜனநாயக நாடு என்று சட்டத்தில் இருந்த போதும் பெரும்பான்மை என்ற காரணத்தைக் கொண்டு போலியான ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு அதை ஒட்டு மொத்தமான மக்களுக்குமான ஒரு நம்பிக்கையாகக் காட்டி பத்து தெருப்பொறுக்கிகளை வைத்து பட்டப்பகலில் பகிங்கரமாக பொது இடத்தில் வைத்து ஒருவரை அடித்துக் கொல்ல முடியும். ஆனாலு அந்த இயக்கம் தடை செய்யப்படாது. அந்தக் கொள்கையும் கண்டிக்கப்படாது. அவர்களுக்குத் தண்டனையும் கிடைக்காது. இந்தியாவில் பெரும்பான்மை மதத்தினர் மாட்டிறைச்சி உண்டாலும் தாழ்த்தப்பட்டவர்கள், முஸ்லிம்கள் மீது அதே காரணத்தை வைத்து தாக்குதல் நடத்திக் கொல்லவும் முடியும். இதெல்லாம் ஒரு ஜனநாயகமா ? ஆம்.

ராஜஸ்தானில் ஆல்வார் மாவட்டத்தில் பசு காவலர்கள் என்று ஒரு கூட்டம் பால் பண்ணை முதலாளி ஒருவர் மாடுகளை கொண்டுவந்த போது வழிமறித்துத் தாக்கியுள்ளது. காரணம் அவர்கள் பசுக்களைக் கடத்தி வதை செய்பவர்கள் என்று ஐயமாம். அவர்கள் தாங்கள் பால்பண்ணை நடத்துகிறவர்கள் என்று ஆதாரங்களைக் காட்டிய பிறகும் அதை நம்பாமல் அவர்களைத் தாக்கியுள்ளது அவர்களிடமிருந்து 35000 ரூபாயையும் பறித்துக் கொண்டது. 50 வயதான அந்த பால் பண்ணை முதலாளியைக் கிழவா ஓடு என்று விரட்டி விட்டு பின்னர் துரத்தித் தாக்கியுள்ளது. இதனால் படுகாயமுற்ற அந்த நான்கு பேர்களில் அந்த 50 வயது நபர் உரிய சிகிச்சையின்றியும் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தார். இந்த கும்பல் தாக்கிய ஐவரில் ஒருவர் இந்து மதத்தைச் சார்ந்தவர். அவரை தப்ப அனுமதித்த கும்பல், முஸ்லிம்கள் நான்கு பேரை மட்டும் கொடூரமாகத் தாக்கியுள்ளது. தாத்ரியில் இது போல்தான் ஒரு வருடத்திற்கு முன்னர், மாட்டுக்கறி வைத்திருந்த குற்றத்திற்காக ஆட்டுக்கறி வைத்திருந்த அக்லக் என்றவரைக் கொன்றார்கள்.



இரண்டாவது கொலை பாகிஸ்தானில் நடந்துள்ளது. பாகிஸ்தான் ஒரு மதவெறி நாடு, மத விமர்சனம் செய்தாலே தேசதுரோகம், மதநிந்தனை என்று வாழ்நாள் சிறை அல்லது சாவு தண்டனைதான் கிடைக்கும் இதற்கு மேல் பெரிய விளக்கம் வேண்டியதில்லை. பெரிய காரணம் வேண்டியதில்லை. அவர் இறைவனை நிந்தித்தார். இஸ்லாத்தை இழிவுபடுத்தினார் என்ற வகையிலான வதந்தி மட்டும் போதும் நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் காட்டுமிராண்டிகள் கூடி விடுவார்கள் அல்லாஹு அக்பர் என்ற முழக்கத்துடன் ஒரு உயிர் துடிக்கத் துடிக்கக் கொல்லப்படும். இது அரசாங்கம் நடத்தாது, மக்களே நடத்துவர்.


பாகிஸ்தானின் மர்தானில் உள்ள வாஹிகான் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இதழியல் மாணவர் முஹம்மத் மாஷால் கான் இறைவனை இழிவுபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டுள்ளார், அதுவும் அந்தப் பல்கலைக்கழக்த்தைச் சார்ந்த மாணவர்களாலேயே. இந்தக் கேடுகெட்ட மதவெறி என்று ஒழியும் ? இது இருக்கும் வரை மனிதம் தழைக்கவே தழைக்காது.  மாணவர் மஷால் கான் தாக்கப்படும் கொடூரக் காணொலி. மனவலிமை இல்லாதவர்கள் தயவு செய்து காணவேண்டாம்.

                   

Download As PDF
Bookmark and Share

Post Comment

ஃபரூக் படுகொலை - முகமதிய மதவெறியின் கோரத்தாண்டவம்


திராவிடர் விடுதலை கழகத்தில் செயல்பட்ட இறை மறுப்பாளர் ஃபரூக் கொலை செய்யப்பட்டுள்ளார். மதக் கலவரம் குண்டு வெடிப்புக்குப் பெயர் போன கோவை தற்போது மதவெறிக் கொலைக்கும் பெயர் வாங்கியுள்ளது. இதன் மூலம் இஸ்லாமை எதிர்த்து இறைமறுப்புப் பரப்புரை செய்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பது தெளிவாகியுள்ளது

அவரது இறைமறுப்புக் கொள்கையைக் கேட்டு வெறுப்புற்ற அவரது நண்பனும் இன்னும் சிலரும் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்துள்ளனர். பொய் சொல்லி ஃபரூக்கை வரவைத்து வெட்டியும் குத்தியும் கொலைவெறியாட்டம் போட்டுள்ளனர். பிறப்பால் இஸ்லாமியரான அவரைக் கொலை செய்தவர்கள் இஸ்லாமியர்களே. இதிலொருவன் மீது வழிப்பறிக் கொள்ளைக்கான வழக்கும் இருக்கிறதாம். இருந்தும் அவனை மதவிலக்கம் செய்யாமல்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் இறைமறுப்பு பேசினால் ஒருவனை உயிர்விலக்கம் செய்வதற்கு அந்த அயோக்கியனுக்கும் யோக்கியதை இருந்திருக்கிறது. 


மார்ச் 15 வியாழன் அன்று தனது வாட்ஸப் குழுமமான கடவுள் இல்லை-இல் பதிவிட்டிருக்கிறார் ஃபரூக். தனது குழந்தையின் கையில் கடவுள் இல்லை என்று மூன்று முறை எழுதிய பதாகையை ஏந்திய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதைக்கண்டு வெறியான மதவெறியர்கள் அதற்கு அடுத்த நாள் கொலையை நிகழ்த்தியுள்ளனர். இதே ஒரு குழந்தை குல்லா போட்டுக் கொண்டோ பர்தாவைப் போட்டுக் கொண்டோ புகைப்படம் போட்டால் ஒரு இறைமறுப்பாளன் போய் நம்பிக்கையாளனை வெட்டத் துணிவானா ? மதி கெட்ட மதவெறி !

மதவெறியில் பித்தேறி வெறிகொண்ட 5 இஸ்லாமிய மதவெறி அடிப்படைவாதிகளால் கொடூரமான முறையில் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டார் ஃபரூக்.

                                             

தனது குழந்தைகளுடன் 

பிணமாக 


ஃபரூக் பிணமாக வெட்டுக்காயமும் குத்துக்காயங்களுடனும் - அளவற்ற அருளாளனின் வழிபாட்டுக்காரர்களின் அன்பு

                                          

இவரது சாவை விடவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய இரண்டு விடயங்கள்

1. இவரை இவரது நண்பன் ஒருவனே தனது வாகனத்தில் எரிநெய் (பெட்ரோல்) தீர்ந்து விட்டதாகக்கூறி அழைத்திருக்கிறான். அதை நம்பிச் சென்றவரைத்தான் வெட்டிக் கொன்றுள்ளனர் அந்த மதவெறிக் கொலைகாரர்கள். (ஃபரூக்கின் தந்தை ஹமீது அளித்த பேட்டியில் கூறினார்)

2. துக்கம் விசாரிக்க வந்த இஸ்லாமியப் பெண்கள் ஃபரூக்கின் மனைவியிடம் கேட்ட கேள்வி. ஃபரூக் நபிகளையே எதிர்த்து வந்துள்ளார். இறைத்தூதர் பற்றி நூல் வெளியிடலாம் என்று இருந்தாராம். இஸ்லாமியராக இருந்து கொண்டு இதையெல்லாம் செய்யலாமா ? 

(எழவு கேட்க வந்த வீட்டில் இவ்வளவு வக்கிரமாகப் பேச முடியுமா முடியும் மதவெறி தலைக்கேறி இருந்தால்.)

ஃபரூக்கின் படுகொலையைக் கண்டித்து கேரள யுக்திவாதிகள் ஆர்ப்பாட்டம்

முதலில் கொலை நடந்த செய்தி வெளியானதும் இதை முஸ்லிம்கள் செய்திருக்க மாட்டார்கள், RSS - காரர்களில் செயலாக இருக்கலாம் என்றே பெரும்பான்மையினர் கருதினர், குறிப்பாக திராவிடர் கழகத் தலைமை. ஆனால் கொலை நடந்த இடம் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பகுதி, மேலும் ஃபரூக்கிற்கு வேறு வகையில் எதிரிகள் இல்லை என்ற அனுமானத்தில் இது இஸ்லாமிய மதவெறியால் நிகழ்ந்திருக்கும் என்றும் பேசினர். பின்பு கொலை வழக்கில் இருவர் சரணடைந்த பின்னர்தான் இது அப்பட்டமான இஸ்லாமிய மதவெறியால் நிகழ்ந்த கொலை என்று உறுதியானது.

இஸ்லாமோஃபோபியா வேறு இஸ்லாமிய மதவாதம் வேறு

இஸ்லாமோஃபோபியா என்றால் என்ன ? இஸ்லாமியனை வெறுப்பது. அவன் இஸ்லாமியன் என்ற காரணத்திற்காக வெறுப்பது. அவன் மதவெறியன், மதத்திற்காக குண்டு வைப்பான், பயங்கரவாதம் செய்வான், மற்ற மதங்களை மதிக்க மாட்டான். தீவிரவாதம் என்றாலே அது முஸ்லிம்கள்தான். இதுமாதிரியான கருத்துக்களை ஒருவர் கொண்டிருந்தாலே அவர் இஸ்லாமோஃபோபியா கருத்துக்குப் பலியானவர் என்று பொருள்.


ஒரு சூழ்நிலையில் இஸ்லாமியன் செய்யும் செயலுக்கு அவர் மதத்தையோ சமூகம் மொத்தத்தையுமே குற்றம் சாட்டி விடும் மனப்பான்மையே இஸ்லாமோஃபோபியா. ஆனால் அதே செயலை மற்ற மதத்தவனோ, சமூகத்தவனோ செய்தால் அதை அவன் மதத்துடன் தொடர்புபடுத்தாமல் அவனைத் தனியான ஒரு குற்றவாளியாக சித்தரித்துக் கொள்வார்கள் இஸ்லாமோஃபோபியாவால் பாதிக்கப்பட்டவர்கள். உலகம் முழுவதிலும் இந்த மனநோய் ஊடகங்களால் பரப்பப்பட்டது. இன்றும் வேறு வகையில் பரப்பப்படுகிறது. இந்தியாவில் இந்தியன் முஜாகிதீன் என்ற இல்லாத இயக்கம் தொடர்ந்து பத்து வருடங்களாக செய்திகளில் அடிபடுகிறது. அதை ஒட்டி முஸ்லிம்கள் மீது மறைமுகமான உளவியல் போர் நடைபெறுகிறது. இதுவே இஸ்லாமோஃபோபியா தீவிரவாதி என்றாலே முஸ்லிம் என்ற மனநிலைக்கு ஏறக்குறையமுஸ்லிம் அல்லாதவர்கள் அனைவருமே ஆட்பட்டுள்ளனர். இது முற்றிலும் தவறானது.  

இஸ்லாமோஃபோபியா மனநிலையை எதிர்த்து, இஸ்லாமியருக்கு எதிரான ஃபாசிசத்தை, வெறுப்பு மனநிலையை எதிர்த்து ஜனநாயகத்தை நேசிப்பவர்கள் போராடுகிறார்கள் தங்களால் இயன்ற வழிகளில் இஸ்லாமியருக்கு ஆதரவளிக்கிறார்கள். ஏனென்றால் இந்தியாவில் இஸ்லாமியருக்கு எதிரான மனப்பான்மை அதிகமாக இருக்கிறது. இஸ்லாமியர்கள் இந்தியாவில் சிறுபான்மையாக இருக்கிறார்கள் இவர்கள் மீதான வன்மத்தை வளர்த்தே வெறுப்பை விதைத்தே ஒரு கட்சி இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களிலும் நடுவணரசிலும் தனது வெற்றியைப் பெற்றிருக்கிறது. அந்தக் கட்சியின் கொள்கையே இஸ்லாமிய வெறுப்பாக இருக்கிறது. வழிபாட்டுத்தலங்கள் இடிப்பு, அபகரிப்பு, சிறு பெரும் கலவரங்கள், தனிநபர் படுகொலை தொடங்கி இனப்படுகொலை வரை இஸ்லாமிய சமூகம் சீரழவுக்கு ஆளாக்கியுள்ளது. சிறுபான்மை இஸ்லாமியர்களால்தான் பெரும்பான்மை இந்துக்களுக்குப் பிரச்சனை என்ற ரீதியில் அது மக்களை மதவெறியூட்டி வருகிறது. இந்த நிலையில்தான் அனைத்து ஜனநாயக சக்திகளின் முதன்மை எதிரியாக அந்தக் கட்சி இருக்கிறது. நம்மைப் போன்ற மக்களாட்சிக்கு ஆதரவானவர்கள், பிற்போக்கு மதவாத ஆட்சிக்கு எதிரானவர்கள் அனைவரும் இது போன்ற சிறுபான்மையினர் மீதான வெறுப்பை விதைக்கும் கருத்துக்களையும், அரசியலையும், ஊடகங்களையும் எதிர்க்கின்றனர். கண்டிக்கின்றனர். சிறுபான்மையினரை அரவணைக்கின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இஸ்லாமியர்களுக்கு ஜனநாயக முற்போக்குவாதிகளின் முழு ஆதரவு இருக்கிறது. 

பொதுவாகவே ஜனநாயகவாதிகள் என்றாலே இறைமறுப்புச் சித்தாந்தவாதிகளே இருப்பர். தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட்டுகள் இல்லாமல் மிகப்பெரும் இரு கட்சிகள், சிறு சிறு அமைப்புகள் யாவும் இறைமறுப்பு இயக்கத்தின்(திராவிடர் கழகம்) வழிவந்தவர்களாக இருக்கின்றனர். இந்த ஜனநாயகவாதிகள் யாரும் இஸ்லாமியரின் மதவாதத்தை எதிர்ப்பவர்கள் இல்லை. ஒரு படி மேலே போய் இஸ்லாமியப் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்கிறவர்களாகத்தான் இருக்கின்றனர். ஆனால் இந்து மதத்தின் பண்டிகைகளை ஏற்காமல் வாழ்த்து சொல்லாமல் எதிர்த்துப் பேசுகின்றவராக இருக்கின்றனர். இந்த வகையில் இந்த வகையிலும் பெரும்பான்மை சமூக்த்தின் வெறுப்புக்கும் ஆளாகி நிற்கின்றனர் தமிழ்நாட்டு முற்போக்குவாதிகள். 

இஸ்லாமியரைக் குறிப்பிடும்போதே இஸ்லாமியத் தோழர்கள் என்றுதான் குறிப்பிடுவார்கள். அதே நேரம் வேற்று சித்தாந்தத்தைக் கடைப்பிடிக்கும் சக முற்போக்குவாதியக் கூட அப்படி விளிப்பதில் தயக்கம் காட்டுவார்கள். சில நேரம் சகோதரர்கள் என்றும் அழைப்பார்கள். அவ்வப்போது இவர்களின் பேசுவதும் முஸ்லிம்கள் கூடிய பொதுக்கூட்டத்தில்தான். பிரியாணி விருந்திலும் நோன்புக் கஞ்சி விருந்திலும் கலந்து கொண்டு பெரும்பான்மையினரின் கிண்டலுக்கும் எதிர்ப்புக்கும் ஆளாவார்கள். 

இப்படி இருக்கிறது முற்போக்குவாதிகள் முஸ்லிம்கள் இடையேயான உறவு. இந்த முற்போக்குவாதிகளில் அதிகமானோர் இஸ்லாமிய மதவாதத்தை விமர்சனம் செய்ததில்லை. காரணம் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களை விமர்சனம் செய்தால் எதிரிக்கு வேலை எளிதாகிவிடும். அதாவது இஸ்லாமிய மதவாத்தை விமர்சனம் செய்தால் அது இஸ்லாமோஃபோபியா ஆகிவிடும். எனவே பெரும்பான்மை இந்து மதவாதத்தை எதிர்ப்பதே ஜனநாயகத்தைக் காக்கும் வழி. இதுதான் தமிழ்நாட்டு முற்போக்குவாதிகளின் அடையாளம். இந்த அளவீடுகளின் அடிப்படையில்தான் பெரியாரிய இயக்கங்கள் இயங்குகின்றனர். இந்த வகை இயக்கமான திராவிட விடுதலை கழக்த்தைச் சேர்ந்தவர்தான் படுகொலை செய்யப்பட்ட ஃபரூக். இஸ்லாமிய ஆதரவாளர்களுக்கு இஸ்லாமிய மதவாதத்தின் நன்றி உணர்வு !

இந்த இஸ்லாமோஃபோபியாவை தனக்கு லாவகமாக பயன்படுத்திக் கொண்டவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள். இஸ்லாமிய மதவாதிகள். மதப்பரப்புரை செய்பவர்கள். இந்த அடிப்படைவாதம், மதவாதம், மத அடிப்படைவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்ற சொற்கள் வரும்போதெல்லாம் முஸ்லிம்கள் அதைக் குறிப்பிடுகிறவர்கள் சொல்லவரும் பொருளுக்கு மாற்றாக ஒரு பொருளைச் சொல்கின்றனர். மத அடிப்படை வாதம் என்றால் நாங்கள் இஸ்லாமின்படி நடக்கிறோம், இஸ்லாம் காட்டிய நேர் வழியில் செல்கிறோம், ஒரு முஸ்லிம் தவறு செய்தால் அது இஸ்லாமின் தவறாகாது, அது மாதிரி இஸ்லாம் சொல்லவில்லை இப்படித்தான் எங்களை நடக்கச் சொல்கிறது இஸ்லாம். நீங்கள் இஸ்லாமை அவதூறு செய்கிறீர்கள். ஒரு முஸ்லிம் தவறு செய்தால் அது இஸ்லாமாகாது, இந்தத் தவறு செய்தவர் இஸ்லாமை சரியாக விளங்க வில்லை. அந்தக் குற்றவாளி முஸ்லிம் பெயர்தாங்கி. இஸ்லாமியமதவாதமே இல்லை மார்க்கம்தான் உள்ளது... இப்படிச் சொல்கிறார்கள். இந்த பதில்கள் அனைத்தும் இஸ்லாமோஃபோபியா மனநோயாளிகளுக்கானவை. இஸ்லாமோஃபோபியாவை எதிர்ப்பவர்களிடம் இந்த பதில்கள் சொல்லத்தேவையில்லை ஏனென்றால் நீங்கள் சொல்கின்றவற்றை ஏற்கெனவே அறிந்திருக்கிறார்கள். ஆனால் மத அடிப்படைவாதம் என்று சொன்னால் எல்லா முஸ்லிம்களையும் குறிக்கிறதே என்று அங்கலாய்க்கிறார்கள்.

முற்போக்குவாதிகள் விமர்சனம் செய்யும் இஸ்லாமிய அடிப்படைவாதம் அல்லது மதவெறி என்ற கருத்தாக்கத்தை முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவில்லை. இஸ்லாமியர் சொல்லும் பதில் அவர்களுக்குப்புரியவில்லை. எனவேதான் இந்தத் தேவையில்லாத சச்சரவு.

மத அடிப்படைவாதம் என்பதை இஸ்லாமிய மதவாதிகள் கற்பித்திருக்கும் பொருளில் எடுத்துக்கொள்வதால்தான் இந்த கருத்துவேறுபாடு வருகிறது. தலைவன் என்ற சொல் தற்போது என்ன பொருள் தருகிறது ? ஒரு இயக்கத்தின் தலைவர், மதத் தலைவர், கட்சியின் தலைவர், அணியின் தலைவர் என்றெல்லாம் இருக்கின்றது இல்லையா ? அதே தலைவன் என்ற பொருள் சங்க இலக்கியத்தில் என்ன பொருள் தருகிறது. கணவன் அல்லது காதலன் இல்லையா ? இது இரண்டையும் வெவ்வேறு இடங்களில் வேறு பொருளைத் தருகின்றதைப் போலத்தான் மத அடிப்படைவாதம் என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.

மத அடிப்படைவாதி என்றால் மதத்தின் அடிப்படைகளைப் புரிந்து அதன்படி நடப்பவன் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். ஆனால் என்னைப் போன்றவர்கள் எப்படிப் பயன்படுத்துகிறோம் ? மத உணர்வை முன்னிறுத்தி செயலாற்றுகிறவன். மதத்தை முன்னிறுத்தி செயல் புரிகின்றவர். மதத்தைச் சார்ந்த மக்கள், மதநலன் ஆகியவற்றைக் கொண்டு அரசியல் செய்கிறவர் என்றே புரிந்து கொள்ளவேண்டும். இந்து மதவாதிகள் பாபர் மசூதியை இடித்தனர் என்பதில் இந்து மதத்தில் பாபர் மசூதியை இடிக்கவேண்டும் என்று புனித வாசகத்தைப் புரிந்து கொண்டுதான் இடித்தார்கள் என்றாகுமா ? இந்து மதவெறியர்கள் குஜராத் படுகொலையை நடத்தினர் என்றால் இந்துக்கள் அனைவரும் மதவெறியர்கள் என்றாகுமா ? இந்துமத அடிப்படைவாதிகள் முஸ்லிம்களை வெறுத்து ஒதுக்குகின்றனர் என்றால் அது எல்லா இந்துக்களையும் குறிக்குமா ? இவையெல்லாம் கிடக்கின்றன விடுங்கள்.


இஸ்லாமியர்கள் பொதுக்கூட்டங்களில் இஸ்லாமியர் பேசும்போது என்னென்ன சொற்களைப் பயன்படுத்துகின்றனர். இந்து பயங்கரவாதிகள், காவி பயங்கரவாதிகள், இந்துத்துவவாதிகள் இன்னும் பிற இவையெல்லாம் எல்லா இந்துக்களையும் குறிக்கின்றனவா ? இல்லையென்றால் இஸ்லாமிய அடிப்படைவாதம், மதவெறி என்பது எல்லா முஸ்லிம்களையும் குறிக்காது.

பாபர் மசூதியை இடிக்க வேண்டும் என்று எந்த இந்து வேதத்திலும் சொல்லப்படவில்லை. குஜராத் இனப்படுகொலை நடத்தப்பட வேண்டும் என்று எந்த புனித நூல்களிலும் இல்லை. மாட்டைக் கொன்றவனைக் கொல்ல வேண்டும் என்று எந்த நூலும் குறிப்பிட வில்லை. அதற்காக மேற்ச்சொன்ன நிகழ்வுகளெல்லாம் இந்து மதவெறி இல்லை, இந்து மதவெறியால் நிகழவில்லை. இந்து அடிப்படைவாதத்தால் நிகழவில்லை என்று சொன்னால் ஒத்துக் கொள்வார்களா இஸ்லாமியர்கள் ?. அதைச் செய்தவர்களெல்லாம் அவர்கள் இஸ்லாமியர்கள் நாம் இந்துக்கள் என்ற உணர்விலிருந்துதானே செய்தார்கள். அப்படித்தானே ஃபரூக் ஒரு இறை மறுப்பாளன் நான் நம்பிக்கையாளன் என்ற நிலையிலிருந்துதானே கொலை செய்தார்கள். மத நூலில் குறிப்பிட்டிருந்தால்தான் அது மத அடிப்படை வாதம் என்று சொன்னால் நீங்கள் உலகின் குற்றத்தில் பாதிசெயல்கள் மாற்று மத "பெயர் தாங்கிகளால்" செய்யப்பட்டவை என்றுதான் சொல்ல வேண்டி வரும்

ப்ரோட்டோகால்ஸ் - என்ற யூத மேலாதிக்கத் திட்டத்தை அறிவிக்கும் நூல் நூறாண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. அதை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் ஒரு முஸ்லிம் அவர் பெயர் ஆருர் சலீம். அந்நூலின் தலைப்பு "யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை" இங்கே யூத பயங்கரவாதிகள் என்பது அனைத்து யூதர்களையும் குறிப்பதில்லை என்றும் அவரே அந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார். இதிலிருந்து என்ன புரிகிறது.

 மேலும்

முஸ்லிம்கள் கூறுகின்ற இஸ்லாமியர்கள் மீதான வன்முறையைக் கண்டிக்கும்போது,

ரோகிங்கியா முஸ்லிம்களை விரட்டும் பர்மாவின் பௌத்த வெறியர்கள்
ஈழ முஸ்லிம்களைத் தாக்கும் புத்த தேரவாதிகள்
இந்திய முஸ்லிம்களைத் தாக்கும் காவி பயங்கரவாதிகள்
ஈராக்கைத்தாக்கும், ஆப்கானைத்தாக்கும் அமெரிக்க மேற்கத்திய பயங்கரவாதிகள்
பாலஸ்தீனத்தைத் தாக்கும் யூதபயங்கரவாத இஸ்ரேல்
வீகர் அல்லது உய்குர் முஸ்லிம்களைத் தாக்கும் ஹாங் சீனப்பேரினவாதம்

இவையெல்லாம் அந்தக் குறிப்பிட்ட பிரிவினரைச் சார்ந்த எல்லா மக்களையும் குறிக்காதுதானே. அது போலத்தான் இந்த இஸ்லாமியமதவாதி, அடிப்படைவாதி போன்ற சொற்களும் கையாளப்படுகின்றன. அந்த வகையில் பார்த்தால் முற்றும் அறிந்த ஒரு மார்க்க அறிஞராகட்டும், புதிதாக இஸ்லாமைத் தழுவிய ஒருவராகட்டும் தான் ஒரு இஸ்லாமியன் என்ற "மத உணர்விலிருந்து" செய்யும் செயல் இஸ்லாமிய அடிப்படைவாதமே. இறைமறுப்பாளனான ஃபரூக்கைக் கொன்றதன் காரணம், கொலைகாரர்களின் தான் ஒரு இஸ்லாமியன் என்ற உணர்விலிருந்தே வந்தது. அதற்காக இஸ்லாம் கொல்லச் சொல்கிறது என்று பொருள் இல்லை. ஃபரூக் இஸ்லாமின் எதிரி நமது எதிரி, தனது நம்பிக்கைக்கு எதிரி என்றெல்லாம் எண்ணித்தான் அந்தக் கொலைகாரர்கள் அவரைக் கொன்றிருக்கிறார்கள்.


 அதற்குக் காரணம் மதவெறிதான். அவர்கள் மதவெறியர்கள்தான். மதத்திற்காகச் செய்ததால் இது மத அடிப்படைவாதக் கொலைதான்.  மத அடிப்படைவாதம் தவறுதான். இதை வைத்து மொத்த முஸ்லிம் சமூகத்தையும் அவமதிப்பதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல, இது மொத்த சமூகத்தைக் குறிக்கிறது என்று திசைதிருப்புவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

சுருக்கமாகச் சொன்னால் ஒரு தனி முஸ்லிம், தனிப்பட்ட காரணங்களுக்காக செய்த தவறை வைத்து எல்லா இஸ்லாமியர்களைக் குறிக்கும்படி செயல்படுவது பேசுவது அரசியல் செய்வது இஸ்லாமோஃபோபியா மனநிலை என்றால், மதவெறியர்கள் மத அடிப்படையில் செய்த தவறை விமர்சனம் செய்யும்போது அது ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் குறிக்கிறது என்று மொத்த முஸ்லிம்களையும் இழுத்து வருவது திசை திருப்புவது இஸ்லாமிய மதவாதம். எனவே வெறும் நம்பிக்கைக்காக இஸ்லாமியர்களாக வாழ்கிறவர்கள் நாங்களும் மத அடிப்படைவாதிகளே என்று நம்பவேண்டாம், நீங்களாக வந்து பெயரைக் கெடுத்துக்கொள்ளவேண்டாம். இதைப் புரிந்துகொள்ளாவிட்டால் நட்டம் உங்களுக்குத்தான்.

இஸ்லாமிய மதவாதிகள் நாத்திகர்களை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் ? ஏனென்றால் இறைமறுப்பாளர்கள் பெரும்பான்மையானவர்கள் இந்து மதத்திலிருந்து வந்தவர்கள். இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பவர்கள். இஸ்லாமியர்களின் துணையாக இருப்பவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்லாமிய மதத்தை விமர்சனமே செய்ய மாட்டார்கள். இஸ்லாமிய மதவாதிகளின் கருத்துப்படி ஒரு மாற்று மத இறைமறுப்பாளன் என்பவன் இஸ்லாமிற்கு ஒரு படி முன்னோக்கி இருக்கிறான். அதாவது அவன் இஸ்லாத்தை நோக்கி இருக்கிறான். அவன் தன்னுடைய சொந்த மதத்தை தூக்கியெறிந்து விட்டான், அந்த மதம் சொல்லும் கடவுளை கருத்துக்களை உதறி விட்டான் என்றால் அவனை இஸ்லாமியனாக மாறும் வாய்ப்புள்ளது. எனவே பிறமத நாத்திகர்கள் மீது அவர்கள் அச்சமோ வெறுப்போ கொள்வதில்லை. பெரியார்தாசனைப் போல பல இறைமறுப்பாளர்களும் இஸ்லாமில் இணையலாம் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் இஸ்லாம் மதத்திலிருந்து வெளியேறியவனை இஸ்லாமை விமர்சிப்பவனை அச்சத்துடனும் ஆத்திரத்துடனும் வெறுப்புடனுமே எதிர்கொள்கிறார்கள். ஏனென்றால் அவன் இஸ்லாமை அறிந்து விலகியவனிடம் இஸ்லாமிய மதவாதிகள் பதில் சொல்லமுடியாத கேள்விகள் இருக்கின்றன. இறைவனையே அவன் கேள்விக்குள்ளாக்குகிறான். அவனிடம் இவர்களின் மதம் தோற்று விட்டது. இவர்களின் நம்பிக்கை தோற்று விட்டது. எனவே இவர்கள் தோற்று விட்டார்கள். எனவே அந்த இறைமறுப்பாளனை வெறுக்கிறார்கள். சாதாரண நம்பிக்கையாளர்கள் அவனைச் சகித்துக் கொண்டு தங்களது நம்பிக்கைகளுடன் தொடர்கிறார்கள். ஆனால் மத அடிப்படைவாதிகள், மதவெறியர்கள் அவனைக் கொல்கிறார்கள். ஏனென்றால் அவர்களால் கருத்தால் வெல்ல முடியாது. அந்தத் தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. அப்படிக் கொலை செய்து சமூகத்திடம் ஒரு அச்சம் உண்டாக்கினால்தான் மற்றவர்கள் அவ்வழியில் செல்லாமல் தடுக்க முடியும்.

இது போன்ற மதவெறிக் கொலைகளைத் தடுக்க ஜனநாயக நாடுகள்தான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இருப்பதிலேயே சிறுபான்மையினரான இறைமறுப்பாளர்கள் தங்கள் கருத்துக்காகவும், கொள்கைக்காகவும் தனிமனிதனாலோ மதவெறி இயக்கத்தினாலோ படுகொலை செய்யப்பட்டால் கொலைவெறி கொண்ட கொடுங்கோலர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை விதிக்கப்படவேண்டும். 

Download As PDF
Bookmark and Share

Post Comment