காவிகளின் போலி அங்கலாப்பு

 சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தேசபக்தர்களால் வெவ்வேறு சொற்களில் கூறப்படும் கருத்து இது. இவர்கள் எதிர்கட்சியாக இருக்கும்போது விமர்சனமே செய்யாத உத்தமர்களைப் போல உதார் விடுவார்கள்.

"இந்தியாவில் மட்டுமே மாண்புமிகு பாரதப் பிரதமரை தேச விரோதிகள் எதிர்க்க முடியும், இழிவு படுத்த முடியும். சௌதியிலோ, சீனாவிலோ, பர்மாவிலோ, ருஷ்யாவிலோ, வட கொரியாவிலோ, க்யூபாவிலோ எதாவது வாயைத் திறந்தால் சிறையில் தள்ளுவார்கள் இல்லையென்றால் போட்டுத் தள்ளுவார்கள்"

இந்தியாவில் இருக்கும் அரைகுறை ஜனநாயகத்தை இவனுக என்னவோ போராடி நம்மளுக்குக் குடுத்த மாதிரியும் அதை நாம வாங்கித் தின்னுட்டு இவனுக்கு எதிராகப் பேசற மாதிரியும் அதையெல்லாம் அவனுக சகிச்சிட்டு இருக்கற மாதிரியும் கூவிட்டு இருக்கும் காவிகள், இந்த ஃபாசிச பாஜக அரசும், மாநில அரசுகளும் எத்தனை போராளிகளையும் சமூக ஆர்வலர்கள், மனித உரிமைப் போராளிகள், மாஓ வியர்கள், சுற்றுச் சூழல் போராளிகளைக் கைது செய்திருக்கிறார்கள் ? டிவிட்டரில் கருத்து சொன்னதற்குக் கைது, இரங்கல் கூட்டத்தில் முழக்கம் இட்டதற்குக் கைது இப்படியெல்லாம் ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கி விட்டு ஜனநாயகத்தின் மீது பழி போடுவார்கள்.

கொலையும் செய்து விட்டு கொலை கொலை என்று கத்திக் கொண்டே ஓடுவார்கள்

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்