இந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வணிக நிறுவனங்களுக்குப் பெயர் சூட்டுவதில் முஸ்லிம்களின் மதச்சார்பின்மை

முகமதியர்களின் மதச்சார்பின்மை பற்றிய இந்துத்துவவாதிகளின் ஒப்புதல் கருத்துக்கள்.

முஸ்லிம்கள் மதச்சார்பற்றவர்கள், அடுத்தவர் பண்பாட்டை மதிக்க மாட்டார்கள் என்று குற்றம் சொல்வோரின் வாயிலிருந்தே முஸ்லிம்களின் மதச்சார்பின்மையும், அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு நேர் எதிரான கொள்கைகளின் படியும் பெயர் வைத்தும் வாழ்கின்றனர் என்று தெரிய வந்தது. 

இந்துக்கள் செறிவாக இருக்கும் பகுதியில் கடை வைக்கும் முஸ்லிம்கள், தங்களது பெயரையோ முஸ்லிம் மதம் சார்ந்த அரபுப் பெயர்களையோ வைப்பதில்லை. மாறாக பொதுவான பெயர்களையே வைக்கிறார்கள். காவிகளுக்குப் பிடிக்காத தமிழில் கூட வைக்காமல் ஆங்கிலத்தில் வைக்கிறார்கள். இதன் மூலம் இந்துக்களின் மனம் புண்படாமல் தான் முஸ்லிம் கடைகளில் வாங்குகிறோம் என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்காமல் இருக்கிறார்கள்.

மதச்சார்பற்ற ஆங்கிலப் பொதுச் சொற்களில் பெயர் வைக்கிறார்கள்.
எ. கா :
நியூ சிட்டி லெதர், ராயல் ட்ரேடர்ஸ், சூப்பர் மெடிக்கல்ஸ், ரிலீப் மெடிக்கல்ஸ், ஸ்டார் தியேட்டர், சூப்பர் வாக், நியூ மைனா ஹோட்டல், ஆரஞ்சு டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ஸ்டார் ஜெனரல் ஸ்டோர்

தூய தமிழிலும் வைக்கிறார்கள்
எடுத்துக்காட்டு - சங்கம், சீமாட்டி சில்க்ஸ், பாரி மளிகை, வசந்தம் டிபார்ட்மென்டல் ஸ்டோர், நலம் மெடிக்கல்ஸ், காவேரி மெடிக்கல்ஸ், ஹோட்டல் செல்லப்பா

செங்கிருதத்திலும் இந்தியிலும் வைக்கிறார்கள்.
எடுத்துக்காட்டு -  மகாராஜா டெக்ஸ்டைல்ஸ், சர்க்கார் மளிகை, ராஜ்கமல் பட்டாசு கடை, மஜா மஜா உணவகம் (ஜம் ஜம் தண்ணீர் ஐத்தான் மஜா மஜா என்று திருப்பி எழுதியிருப்பார்கள் என்று ஒரு தேசபக்தருக்காவது தோன்றும்), பவித்ரா ஹோட்டல்

இந்தியா, தமிழ்நாடு,  ஆகிய பெயர்களையும் சேர்த்து வைக்கிறார்கள்.
எடுத்துக்காட்டு - தமிழ்நாடு துணிக்கடை, இந்தியன், ஜெய்ஹிந்த் சீமாட்டி புட்வேர், நேஷனல் ஸ்டோர், இந்தியா ஸ்டோர், இந்தியன் பேக்கரி 

ஊர்ப்பெயர்களிலும் வைக்கிறார்கள். 
கொடைக்கானல் ஹோட்டல்

முஸ்லிம் பெரும்பான்மை இல்லாத வேறு நாட்டுப் பெயர்களையும் வைக்கிறார்கள்.
லண்டன் ஹார்டுவேர், சிங்கப்பூர் ஹார்டுவேர், பர்மா ஹார்டுவேர்

அதற்கும் மேலாக இந்துப் புராணத்தில் வரும் பெயர்கள், இந்துக் கடவுள்களின் பெயர்களையும் தமது வணிக நிறுவனங்களுக்கு வைக்கிறார்கள். 
எடுத்துக்காட்டு - கிஷ்கிந்தா ட்ரெஸ்ஸஸ், லட்சுமி ஸ்டோர்ஸ், கணபதி ஸ்டோர்ஸ்

இன்னும் சில  
பாவா மெடிக்கல்ஸ், ரெங்கா டிபார்ட்மென்டல் ஸ்டோர்,  ரோஜா டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ராயல்

இதெல்லாம் போதாதென்று தங்களது பெயர் கண்டு சிறுமை கொள்ளும் பெரும்பான்மையினரை மதித்து சுமையா பானு, சபியா பானு, கதிஜா பானு என்ற பெயர்களில் வைக்காமல் முஸ்லிம் என்று உறைக்காத பானு ட்ரென்ட்ஸ் என்று வைக்கிறார்கள்.

முகமது அமித்சா என்று முழுப்பெயர் இடாமல் M.A. ட்ரேடர்ஸ் என்றும், வானதி பீவி மகளிர் தையலகம் என்பதற்குப் பதிலாக V.B. தையலகம் என்றும் பெரும்பான்மை உணர்வுக்கு மதிப்பளித்து பெயர் வைக்கிறார்கள். 

எல்லாவற்றுக்கும் மேலாக இந்துக்களின் பூஜைகளுக்குப் பயன்படும் விளக்குகள், திரி, எண்ணெய்கள், இன்ன பிற பொருட்களையும் விற்கிறார்கள். தீபாவளிப் பட்டாசுகளையும் விற்கிறார்கள். 

என்ன செய்வது பாய் கடை பிரியாணி மாதிரி வருமா என்று எல்லா இந்துக்களும் பிரியாணிக்கு அடிமையாகி விட்டதால் அதை மட்டும் ஐய்யங்கார் பிரியாணிக் கடை என்று போடுவதற்கு முஸ்லிம்கள் விரும்புவதில்லை.

திரையடிகளின் ஆதாரம் இந்த இணைப்பில் உள்ள இடுகையில் வந்த கருத்துக்கள் 












அன்பு இருக்கையில் வெறுப்பைத் தேர்ந்தெடுத்த இந்துத்துவா அன்பர்கள் இதை 1600 தடவை பகிர்ந்துள்ளார்கள். இதை எப்படித் தடுக்க முடியும் ?


Download As PDF
Bookmark and Share

Post Comment

இந்துக்கள் மதம் மாற்றுவதில்லையா ?

விவேகானந்தரிலிருந்து பார்த்தால் இந்து மதம் கூவிக் கூவி விற்கத் தொடங்கியது 125 வருடங்களுக்கு முன்னால்,

                                                  

என்னென்னவோ கடவுளை வணங்கிய மக்களையெல்லாம் அவர்களின் அனுமதியின்றி அவர்களுக்கே தெரியாமல் இந்து மதத்தின் கீழ் இணைத்து விட்டனர். உலகிலேயே இப்படி ஒரேயடியில் அதிகமான மக்களை மதம் மாற்றிய பெருமை இந்து மதத்திற்கே உண்டு. இந்துக்களுக்கு நாங்கள் மதம் மாற்ற மாட்டோம் என்று பெருமையும் பேச வேண்டும். இந்து மதம் வெளிநாட்டில் பரவுகிறது என்ற பெருமையும் வேண்டும். 

மற்ற மதங்கள் ஏழைகளைக் குறிவைத்து அவர்களின் ஏழ்மையை வேதனையைப் போக்குவதாகச் சொல்லி அவர்களை தமது கொள்கைக்கு மாற்றின.

ஆனால் இந்து மதமோ நேரடியாக பணம் படைத்த மேலை நாட்டு மேன்மக்களைக் குறிவைத்து இயங்கி அவர்களிடமே பணத்தை கறந்து அதனூடேயே வளர்ந்து வருகிறது.

கொஞ்சமாவது வெட்கப்பட வேண்டாமா ?

இது திணிக்கப்படாமல், எப்படிப் பரவியது ?

இந்தப் பெண் தானாக ஏழு கடல்களையும், மலைகளையும் தாண்டி வந்து கிளியின் வயிற்றுக்குள் இருந்த சாவியை எடுத்து, புதையலறையில் 100 டன் தங்கத்தின் அடியில் ஒளித்து வைத்திருந்த இந்த பகவத் கீதை என்ற நூலை எடுத்துக் கொண்டாரா ? இல்லை ஒரு மதம் பரப்பியின் நச்சுத் தாங்காமல் வாங்கி புகைப்படத்திற்குக் காட்சி தந்திருப்பாரா ?

Download As PDF
Bookmark and Share

Post Comment

வரவேற்கப்படவேண்டிய சபரிமலை தீர்ப்பு ஏன் எதிர்க்கப்படுகிறது ?


மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்யும் நிலையில் கேரளாவில் உள்ள சபரிமலையில் நுழைய இந்துப் பெண்களுக்கு உரிமை உண்டு என்ற நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை இந்துக்களின் எதிரிகள், துரோகிகள் என்று சொல்லப்படுகின்றவர்கள் வரவேற்கின்றனர். 

இந்துப் பெண்கள் இந்துக் கோயிலுக்குள் செல்ல ஒரு நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை நியாயமாகப் பார்த்தால் கொண்டாட வேண்டியதுதானே ? மசூதிக்குள் பெண்கள் செல்ல முடியுமா ஆனால் கோயிலுக்குள் இந்துப் பெண்கள் செல்ல முடியும் என்று மார்தட்டுவதை விட்டு விட்டு ஏன் இப்படி எதிர்க்கிறார்கள் என்று புரியலையே ?

முதன் முதலில் உடன்கட்டை ஏற்றும் பழக்கம், விதவைகள் மறுமணம், தேவதாசி முறை ஒழிப்பு தடை செய்யப்படும்போதும் மதம் பண்பாடு கலாச்சாரம் ஆகியவற்றுக்கு எதிரானது என்று கூறி எதிர்க்கப்பட்டவைதான். 

நன்கு குறித்து வைத்துக் கொள்ளுங்கள் இப்போது இதை எதிர்ப்பவர்கள் இன்னும் சில வருடங்கள் கழித்து சபரிமலை போன்ற கோயில்களில் இந்துப் பெண்கள் வழிபாடு செய்ய முடியும். ஆனால் மசூதிகளில் முஸ்லிம் பெண்கள் தொழுகை நடத்த முடியுமா ? இந்து மதத்தில் இருக்கும் ஜனநாயகம் மற்ற மதத்தில் இல்லை என்று பெருமை பேசுவார்கள். இப்படித்தான் எல்லாக் காலத்திலும் சீர்த்திருத்தவாதிகள், இந்து மத எதிர்ப்பாளர்கள், மனித்நேயர்கள், ஜனநாயகவாதிகள், முற்போக்கு வாதிகளால் போராடிக் கொண்டு வந்த மாற்றங்களையெல்லாம் இந்துமதம் தன்னகத்தே கொண்டுள்ள பெருமையைப் போல் பார்த்தாயா எங்க மதத்தின் ஜனநாயகத்தை என்று சொல்லி நம் முதுகிலேயே குத்துவார்கள். 

மோடியின் ஆட்சி படுதோல்வியடைந்து விட்டது. மோடியின் ஆதரவாளர்களே என்ன சொல்லி ஆதரிப்பது என்று தெரியாமல் சக மோடி ஆதரவாளர்களிடம் கூட மோடியின் மகிமையை விளக்கிச் சொல்லி அதாவது தற்போதைய மொழியில் சொன்னால் முட்டுக் குடுக்க வேண்டிய நிலையில் அதை அவர்களும் நம்பினாலும் நம்ப முடியாத நிலையிலும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் விருப்பக் குறியைச் சொடுக்கும் நிலையிலும் வாட்ஸப்பில் பகிரவும் வேண்டிய நிலையிலும் உள்ளனர். 

எனவே இது போன்ற எந்த ஒரு சிறு பிடி கிடைத்தாலும் அதைப் பிடித்து ஒரு ஆட்டு ஆட்டி விட்டுத்தான் வேறு வேலையைப் பார்க்க முடிகிறது. ஏனென்றால் அதைத் தவிர அவர்களுக்கு வேறு அரசியல் தெரியாது. தெரிந்தாலும் உண்மையான இந்துக்களின் பிரச்சனைகளுக்காகப் போராட அவர்களும் விரும்புவதில்லை. 

சில செய்திகளைத் தொடர்ந்து சொல்வதன் மூலம் அதை உண்மையென நம்ப வைக்கிறார்கள். 

* இந்து மதம் ஆபத்தில் உள்ளது. (எனவே இந்து மத்தைக் காப்பாற்ற பாஜகவை ஆதரிக்க வேண்டும்)

* தீராவிடர்கள், நாசகார கம்யூனிஸ்டுகள், மதமாற்றும் கிறித்தவ மிஷனரிகள், முஸ்லிம் ஜிகாதிகள் ஆகியோர் இந்து மதத்தை அழிக்கிறார்கள். 

* நாட்டின் வளர்ச்சிக்காக போடும் திட்டங்களை சீனாவிடம் பாகிஸ்தானிடம் பணம் வாங்கிக் கொண்டு எதிர்க்கிறார்கள், போராட்டத்தைத் தூண்டுகிறார்கள்.

மதமாற்றம் என்பதினை என்னவோ இந்திய இறையாண்மைக்கே எதிரானது போல் ஏற்றி விடுகிறார்கள். 
ஊடகங்கள் எல்லாம் மோடிக்கு எதிரானவை, கிறித்தவர்கள் வசம் இருக்கின்றன. எல்லாமே இந்துக்களுக்கு எதிராக நடக்கிறது. 

இந்துக்கள் இளிச்சவாயர்களாக இருக்கிறார்கள். முஸ்லிம்களும் கிறித்தவர்களும் எல்லா உரிமைகளையும் சிறுபான்மை என்ற பெயரில் இந்துக்களை அவர்களின் கலாச்சாரத்தை அழிக்கிறார்கள் இந்த நாட்டுக்கே எதிரான செயல்களைச் செய்கின்றனர்.

இவை பற்றிய கருத்துக்களைச் சுற்றித்தான் சாமானியர்களிடம் அவர்களின் அரசியல் கட்டுரைகளைப் பரப்புகிறார்கள். இப்படி இருப்பவர்கள் சபரிமலை தீர்ப்பைக் கண்டால் விடுவார்களா பிடித்துக் கொண்டார்கள். மதவெறியைத் தூண்டுவதைத் தவிர இவர்களுக்கு கவனத்தைப் பெறும் அறிவோ அறமோ இல்லை.

எனவே இந்துக்களின் பாரம்பரிய வழக்கங்களில் நீதிமன்றம் தலையிடலாமா ? முஸ்லிம்களின் மசூதிகளில் பெண்களை அனுமதிக்க நீதி மன்றம் தீர்ப்பு வழங்குமா என்று எதுகை மோனையாக கேட்டு அனத்துகிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர்தான் முத்தலாக் தீர்ப்பு கூட வந்தது நீதிமன்றம்தான் வழங்கியது. முஸ்லிம்கள் ஒன்றும் இப்படிக் குதிக்கவில்லையே. இதெல்லாம் மக்களுக்கு நினைவிருக்காது என்ற துணிச்சலில்தான் இவர்கள் இப்படி முஸ்லிம்களுக்கு தீர்ப்பு சொல்ல முடியுமா கிறித்தவர்களுக்குச் சொல்ல முடியுமா என்று கத்துகிறார்கள். 

தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்கள் பங்கெடுத்த ஜல்லிக் கட்டு ஆதரவுப் போராட்டத்தைக் கூட இவர்களால் நேர்மையாக ஆதரிக்க முடியவில்லை. எல்லாப் போராட்டத்தையும் கொச்சைப் படுத்துவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் திமுக அதிமுக கட்சியை வெறுப்பவர்களைக் கூட இவர்களால் ஆதரவாளர்களாக வெல்ல முடியாமல் மக்களிடமிருந்து அவர்களது கொள்கைகளைப் போலவே அந்நியப் பட்டு நிற்கின்றனர் 

Download As PDF
Bookmark and Share

Post Comment

புதுமனை புகுவிழா மந்திரம் ஓதுவது ஜாதித் தீட்டைக் கழிக்கவே

இந்து மதம் யாரையும் கட்டுப்படுத்துவதில்லை வழிபாடு விடயத்தில், ஆனால் சடங்குகளை பெரும்பான்மையினர் விடாபபிடியாகக் கடைப்பிடிக்கின்றனர். இது போன்ற சடங்குகளில் ஜாதியைக் காப்பாற்றும், குறிப்பிட்ட ஜாதியினரை இழிவு செய்யும் மனிதத்திற்கே ஊறு செய்யும் விதிகள் அடங்கியிருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு இன்றியமையாத சடங்கு புதுமனை புகுவிழா அல்லது புண்ணியாச்சினை. 

பெரும்பாலும் வீடு கட்டுமானப் பணியாளர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கைப்பட்ட கால்பட்ட இடம் என்பதால் அவர்களின் உழைப்பினால் விளைந்த வீடே ஆயினும் அவர்களைக் கேவலப்படுத்தும் சடங்கினை நடத்தியே புது வீட்டுக்குள் குடியேறுகிறார்கள் வீட்டின் சொந்தக்காரர்கள். இதில் இந்த ஜாதிதான் என்றில்லாம் எல்லா ஜாதியினரும் செய்யும் சடங்காகும். இந்தச் சடங்கு சக மனிதனைக் கேவலப்படுத்துவதோடல்லாமல் உழைப்பையும் இழிவு செய்கின்றது. 

மனுதர்மம் அத்தியாயம் 5 சுலோகம் 124 :

"வீடு முதலானவற்றிற்கு சண்டாளாதிகளால் அசுத்தம் நேரிட்டபோது விளக்குதல் மெழுகுதல் கோமூத்திரம் தெளித்தல் கொஞ்சம் மேல் மண்ணை எடுத்துப்போடுதல் பசுமாட்டை ஒரு நாள் வசிக்கும்படிச் செய்தல் இவ்வைந்தினால் அப்பூமி பரிசுத்தப் படுத்தப்படுகிறது."

(சண்டாளாதிகள் - கீழ்சாதிக்காரர்கள்)

இதைத் தெரிந்தேதான் மேல்ஜாதிக்காரர்கள் பார்ப்பனரை அழைத்து ஹோமம் வளர்த்தி புகுமனை புதுவிழா நடத்தி ஜாதித் தீட்டைக் கழிக்கிறார்கள். இது என் வீட்டிலும் நடந்தது. எனக்கு நேரிடையாகவே அனுபவமும் இருக்கிறது. சடங்குகளின் மீதுள்ள வெறுப்பினால் எதைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாத நான், இது கூடத் தெரியாமல் இருந்திருக்கிறேன் என்று வருந்தினேன். 

எனது உறவினர்கள் இது போன்றதொரு புண்ணியாச்சினைக்குச் சென்று விட்டு வந்தார்கள்.

"எங்கு சென்றீர்கள்" என்றேன்.

குறிப்பிட்ட உறவினரின் பெயரைச் சொல்லி அவரது வீட்டுக்கு என்று குறிப்பிட்டார்கள்.

"அவர்கள் புது வீடு கட்டியிருக்கிறார்களா ?"  என்று கேட்டேன்.

"இல்லை பழைய ஊட்டைத்தான் கொஞ்சம் இடித்து கட்டியிருக்கியிருக்கிறார்கள்"

"அப்பறமேன் ? பழைய வீட்டுக்கு எதுக்கு புண்ணியாச்சினை ?" என்று கேட்டேன்.

"ஆமா சக்கிலியன் பறையனெல்லாம் வீட்டுக்குள்ள வந்து வேலை பாத்திருக்கான் அதான் புண்ணியாச்சினை பண்ணாங்க" என்று பதில் சொன்னார். பதில் சொன்ன உறவினர் ஒரு பெண். 
x
Download As PDF
Bookmark and Share

Post Comment

இரு கொலைகள் ஒரு காரணம்


இரு வேறு நாடுகளில் இரண்டு வேறு பேர் கொல்லபட்டனர். இரண்டிற்கும் ஒரே காரணம் மதவெறி அல்லது மதநம்பிக்கை. இரண்டு பேரும் அந்த மதவெறிக்குக் காரணமான மதத்தைப் புண்படுத்தியதாகவோ, அல்லது இழிவு படுத்தியதாகவோ ஆதாரம் இல்லை. இருப்பினும் அவர்கள் செய்யாத செயலை, செய்தார்கள் என்ற நம்பிக் கொண்டு அல்லது நம்பியதாக நடித்துக் கொண்டு ஒரு பெருங்கூட்டம் அல்லது சிறு கூட்டம் அவர்கள் தனிமனிதனாக இருந்த போது அடித்துக் கொன்றுள்ளது. இந்த மதவாதம் மத நம்பிக்கை என்ற கூறு கெட்ட மூடத்தனம் ஒரு கூறு கெட்ட கூட்டத்தின் மொத்த வடிவமாக மாறும்போது பொய்யும் உண்மையாகிறது. கொலைவெறியே இவர்கள் மூச்சாகிறது. மனிதம் மண்ணோடு மண்ணாகி விடுகிறது.

முதல் கொலை இந்தியாவில் நடந்தது. இந்தியா மதச்சார்பற்ற ஜனநாயக நாடு. ஆனாலும் இந்தக் கொலை மதத்தின் பெயரால், மத நம்பிக்கையை இழிவுபடுத்துவதாகச் சொல்லி ஒரு கொடுமையான மனிதர்கள் வெட்கித் தலைகுனியும் வகையில் நிகழ்த்தியுள்ளது இந்து மதவெறிக்கூட்டம். ஜனநாயக நாடு என்று சட்டத்தில் இருந்த போதும் பெரும்பான்மை என்ற காரணத்தைக் கொண்டு போலியான ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு அதை ஒட்டு மொத்தமான மக்களுக்குமான ஒரு நம்பிக்கையாகக் காட்டி பத்து தெருப்பொறுக்கிகளை வைத்து பட்டப்பகலில் பகிங்கரமாக பொது இடத்தில் வைத்து ஒருவரை அடித்துக் கொல்ல முடியும். ஆனாலு அந்த இயக்கம் தடை செய்யப்படாது. அந்தக் கொள்கையும் கண்டிக்கப்படாது. அவர்களுக்குத் தண்டனையும் கிடைக்காது. இந்தியாவில் பெரும்பான்மை மதத்தினர் மாட்டிறைச்சி உண்டாலும் தாழ்த்தப்பட்டவர்கள், முஸ்லிம்கள் மீது அதே காரணத்தை வைத்து தாக்குதல் நடத்திக் கொல்லவும் முடியும். இதெல்லாம் ஒரு ஜனநாயகமா ? ஆம்.

ராஜஸ்தானில் ஆல்வார் மாவட்டத்தில் பசு காவலர்கள் என்று ஒரு கூட்டம் பால் பண்ணை முதலாளி ஒருவர் மாடுகளை கொண்டுவந்த போது வழிமறித்துத் தாக்கியுள்ளது. காரணம் அவர்கள் பசுக்களைக் கடத்தி வதை செய்பவர்கள் என்று ஐயமாம். அவர்கள் தாங்கள் பால்பண்ணை நடத்துகிறவர்கள் என்று ஆதாரங்களைக் காட்டிய பிறகும் அதை நம்பாமல் அவர்களைத் தாக்கியுள்ளது அவர்களிடமிருந்து 35000 ரூபாயையும் பறித்துக் கொண்டது. 50 வயதான அந்த பால் பண்ணை முதலாளியைக் கிழவா ஓடு என்று விரட்டி விட்டு பின்னர் துரத்தித் தாக்கியுள்ளது. இதனால் படுகாயமுற்ற அந்த நான்கு பேர்களில் அந்த 50 வயது நபர் உரிய சிகிச்சையின்றியும் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தார். இந்த கும்பல் தாக்கிய ஐவரில் ஒருவர் இந்து மதத்தைச் சார்ந்தவர். அவரை தப்ப அனுமதித்த கும்பல், முஸ்லிம்கள் நான்கு பேரை மட்டும் கொடூரமாகத் தாக்கியுள்ளது. தாத்ரியில் இது போல்தான் ஒரு வருடத்திற்கு முன்னர், மாட்டுக்கறி வைத்திருந்த குற்றத்திற்காக ஆட்டுக்கறி வைத்திருந்த அக்லக் என்றவரைக் கொன்றார்கள்.



இரண்டாவது கொலை பாகிஸ்தானில் நடந்துள்ளது. பாகிஸ்தான் ஒரு மதவெறி நாடு, மத விமர்சனம் செய்தாலே தேசதுரோகம், மதநிந்தனை என்று வாழ்நாள் சிறை அல்லது சாவு தண்டனைதான் கிடைக்கும் இதற்கு மேல் பெரிய விளக்கம் வேண்டியதில்லை. பெரிய காரணம் வேண்டியதில்லை. அவர் இறைவனை நிந்தித்தார். இஸ்லாத்தை இழிவுபடுத்தினார் என்ற வகையிலான வதந்தி மட்டும் போதும் நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் காட்டுமிராண்டிகள் கூடி விடுவார்கள் அல்லாஹு அக்பர் என்ற முழக்கத்துடன் ஒரு உயிர் துடிக்கத் துடிக்கக் கொல்லப்படும். இது அரசாங்கம் நடத்தாது, மக்களே நடத்துவர்.


பாகிஸ்தானின் மர்தானில் உள்ள வாஹிகான் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இதழியல் மாணவர் முஹம்மத் மாஷால் கான் இறைவனை இழிவுபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டுள்ளார், அதுவும் அந்தப் பல்கலைக்கழக்த்தைச் சார்ந்த மாணவர்களாலேயே. இந்தக் கேடுகெட்ட மதவெறி என்று ஒழியும் ? இது இருக்கும் வரை மனிதம் தழைக்கவே தழைக்காது.  மாணவர் மஷால் கான் தாக்கப்படும் கொடூரக் காணொலி. மனவலிமை இல்லாதவர்கள் தயவு செய்து காணவேண்டாம்.

                   

Download As PDF
Bookmark and Share

Post Comment

இப்படியும் இருக் 'கலாம்' அப்படியும் இருக் 'கலாம்'


அப்துல் கலாம் கொலை தண்டனைக்கு எதிரானவர். அது கிடக்கட்டும் நான் சொல்ல வந்தது வேறு.  அப்துல் கலாம் விரும்பிகள் சைவ உணவுக்கு மாறுவார்களா ? இல்லை நான் இதையும் சொல்ல வரவில்லை.

எங்கள் ஊரில் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு பதாகை வைத்திருந்தார்கள் பேராயக்(Congress) கட்சிக்காரர்கள். அதில் இப்படி எழுதியிருந்தார்கள். ராஜீவ் காந்திக்குப் பிறகு இந்தியாவில் வல்லரசுக் கனவை விதைத்துச் சென்றவர் கலாம். அடக் கண்றாவியே என்று தோன்றியது. அடுத்தவன் சாவுக்கு அஞ்சலி செலுத்தும் போது கூட தன் தலைவரை முன்னிலைப்படுத்தும் ஈன ஜென்மங்களாக இருப்பதால் தான் இவர்களின் கட்சியும் இந்த இலட்சணத்தில் இருக்கிறது.

தொலைக்காட்சியில் பார்த்தேன். இறுதி அஞ்சலி நடந்து கொண்டிருந்தது. ஒரு கூட்டம் பாரத் மாதாகி ஜே என்று ஊளையிட்டுக் கொண்டிருந்தது. அப்போது எனக்குத் தோன்றியது. இந்தக்  கூட்டம்தானே இவரை அதிகாரமில்லாத பொம்மைப் பதவியான குடியரசுத் தலைவராக நிறுத்தியது. இவ்வளவு பெரிய அறிவாளியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியதற்குப் பதில் ஏன் பிரதமர் வேட்பாளராகவோ அல்லது அதிகாரம் மிகுந்த பதவிக்கோ பரிந்துரைத்திருக்கக் கூடாது ?இல்லை இவரை விடவும் அறிவாளிகள் அதிகமாக அந்தக் கட்சியில் இருக்கிறார்களா ? யாருக்காவது பதில் தெரியுமா இந்த அறிவிலியின் கேள்விக்குப் பதில் ? 

மூன்று வருடங்களுக்கு முன்னர் கலாமுடன் இருக்கும் மோடியின் புகைப்படத்திலிருந்துதான் மோடியை பிரதமர் வேட்பாளர் விளம்பரப்படலம் ஆரம்பமாகியது. 2 வருடங்களாக முக்கி முக்கி ஊடகங்களின் தொடர்ந்த பரப்புரைகளின் காரணமாகத்தான் ஃபோட்டோஷாப் புகழ் பிரதமராகவும் முடிந்தது. அதற்குப் பதிலாக அப்துல் கலாமையே நிறுத்த வைத்திருந்தால் இன்னும் எளிமையாக வென்றிருக்கலாமே பாஜக ? அவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தாதற்கு வேறு உன்னதமான காரணம் ஏதேனும் இருக்குமா ?

பாபர் மஸ்ஜீத் இடிப்பு, மும்பை கலவரம், தொடர்ந்த வட இந்தியக் கலவரங்கள் குறித்து அப்துல் கலாம் வாய் திறந்திருந்தால் பாரத மாதாவின் காவல் காவிகள் இவரை இப்படிப் புகழ்வார்களா ?

இவர் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவது அரசல் புரசலாக வரும் முன்னரே இவர் ஹிந்தி கற்றுக் கொள்ளுமாறு வட இந்தியாவின் ஹிந்தி வெறியர்களால் நிர்பந்தப்படுத்தப்பட்டாராம். இப்படி இருக்கும் போது ஒரு முஸ்லிம்+தமிழன் பிரதமராவது என்பது சாத்தியமா என்று புரியவில்லை. 

அதே நேரம் இந்தி வெறியர்களுக்கும், இந்தி கத்துக்காமல் விட்டேன் என்று புலம்பும் பத்தாம் பசலிகளுக்கும் செருப்பாலடித்த மாதிரி ஹிந்தி தெரியாமலேயே விஞ்ஞானியும் ஆகி, இந்தியர்களின் அன்புக்கும் பாத்திரமாகி விட்டார். அதை நினைத்துப் பெருமையாக இருக்கிறது.

சரி. யார் யார்தான் இவருக்கு அஞ்சலி செலுத்துவது என்றில்லாமல், ஜாதி வெறியர்கள், மதவெறியர்கள் எல்லாரும் போட்டி போட்டுக் கொண்டு உருகி ஒழுகுவதைப் பார்த்தால் எரிச்சலோ எரிச்சலாக இருக்கிறது.

ஆனால் பெரும்பான்மை இந்து மதவெறி பிடித்தவர்களுக்கு ஒரு வயித்தெரிச்சல் வராமல் இருக்காது. அதென்ன ? ஒரு இந்துவுக்கு இப்படி இந்தியா முழுதும் அனைத்து மக்களும் வணக்கம் செலுத்த முடியாது. முஸ்லிமான அப்துல் கலாமுக்குத்தான் அது நடந்தது. வட இந்திய ஹிந்தி வெறியர்கள் இன்னும் பாவம். ஒரு மட்ராஸிக்கு இவ்வளவு மரியாதையா என்று புழுங்குவார்கள். இதை நினைத்து எனக்கு ரொம்பவும் இனிமையாக இருக்கிறது. :)

இது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை. அத்தனை அயோக்கியர்களும் தேசபக்தி பொங்க இவருக்கு அஞ்சலி அட்டென்டன்ஸ் போடுகிறார்கள். இன்னும் இரண்டு நாட்கள் கழித்து இவர்களின் வழக்கமான வேலைகளுக்குத் திரும்புவார்கள். இந்தியா முழுவதும் இந்த இரண்டு நாட்கள் தேசபக்தி கரை புரண்டு ஓடுகிறது.

ஒரு முஸ்லிமை நாடே ஏற்றிப் போற்றுகிறது. இன்னொரு முஸ்லிமை நாடே தூற்றுகிறது. இதற்கு மேலும் நான் ஒரு டெம்ப்ளேட் செக்குலர் பதிவை எழுதுவதாக இல்லை. ஏனென்றால் அதை எழுதி என்னவாகப் போகிறது. அது இந்துக்களுக்கு எதிரானது, இந்தியாவுக்கு எதிரானது, தேசபக்திக்கு எதிரானது என்றெல்லாம் தோன்றும். கலாம் ஆதரவாளர்களை விமர்சித்து ஒரு கவிதையும் எழுதினேன். அதை வெளியிடாமல் சேமித்து வைத்து விட்டேன். அதைப் படித்தால் புரிந்து கொள்வதற்குப் பதில் புண்பட்டுக் கொள்வார்கள். என் மீதும் வெறுப்பே மிஞ்சும். எனவே அதை விட்டு வேறொரு பதிவை எழுத வேண்டிய நிலை.

யாகூப் மேமன்
அஜ்மல் கஸாப்
அஃப்சல் குரு

இப்பெயர்களைக் கேட்டவுடன் அனைவருக்கு ஏற்படும் உணர்ச்சிகள் என்ன ?

தீவிரவாதி. பயங்கரவாதி. தேசவிரோதிகள். பலர் கொல்லப்படக் காரணமாக இருந்தவர்கள். இன்னும் இத்யாதி உணர்ச்சிகள். கூடவே முஸ்லிம் என்பது வரும் என்று சொல்லத் தேவையில்லை. 

லஷ்கர்-இ-தொய்பா
இந்தியன் முஜாஹிதீன்
ஜிஹாதி

இப்போது என்ன நினைவுக்கு வந்தது. சரி அந்த உணர்ச்சியைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்

பாபு பஜ்ரங்கி
அஸீமானந்தா
மாயா கோட்னானி

இப்போது என்ன உணர்ச்சி வந்திருக்கும். யாரு இவங்கெல்லாம் என்றா ? சரி. 

ஆர்எஸ்எஸ்
பஜ்ரங் தள்
சிவசேனா

இப்போது என்ன நினைவுக்கு வருகிறது. என்னது மறந்து போச்சா ? சரி. இதற்கு மேல் நான் என்ன சொல்வது. இவர்கள் இரண்டு தரப்பு தனிநபர்களையும், இயக்கங்களையும் சமமாக யாரும் வெறுக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அதுதான் பிரச்சனையே. 

படம் - நன்றி ஃபேஸ்புக்

தேசபக்திக்கு இன்னொரு காரணமாக, யாகூப் மேமனின் தூக்கு தண்டனையும் வலு சேர்த்திருக்கிறது. ஒரு குற்றவாளியைத் தண்டிப்பது, தூக்கில் போடுவது, அல்லது சுட்டுக் கொல்வது இவற்றை வெறித்தனமாக ஆதரிப்பது தேசபக்தியாகிவிடுகிறது. இதில் என்ன கூத்து என்றால் தூக்கிலிடப்பட்டவர்கள் தீவிரவாதிகள் - இவர்களால் சில நூறு பேர்கள் கொடூரமாக இறந்தார்கள் (என்று சொல்கிறார்கள்). ஆனால் இவர்கள் தூக்கிலிடப்படும் போது இருக்கும் ஆட்சியாளர்கள் இவர்களை விடப் பன்மடங்கு கொடியவர்களாக, அதிக உயிர்களைப் பலியெடுத்த இனப்படுகொலையாளர்களாகவும் இருக்கின்றனர். ஆட்சியாளர்களாக இல்லாமல் வெறும் கட்சிகளையும் இயக்கங்களையும் நடத்தும் தலைவர்களும் சிறைக்குச் செல்லாமல் தங்களின் வன்முறை அரசியலைத் தொடர்ந்து கொண்டும் இருக்கின்றனர். 

இந்த இனப்படுகொலைத் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டாலோ, அல்லது ஆயுள் தண்டனை கிடைத்தாலோ இப்போது வெறி கொண்டு ஆதரிப்பவர்கள் அப்போதும் ஆனந்தக் கூத்தாடுவார்களா ? இல்லை எந்த சலனமும் இல்லாமல் ஒதுங்கிக் கொள்வார்கள். எனென்றால் அவர்களுக்கு இருப்பது அறவுணர்ச்சியே அன்று. அது வெறும் மதவெறியால் விளைந்த வெறுப்பே ஆகும். அந்த இனப்படுகொலைத் தலைவர்கள் நெஞ்சு வலி வந்தோ வயித்து வலி வந்தோ இயற்கையாகத்தான் செத்துப் போவார்கள். மகிந்தவைப் போல கோயிலுக்குச் செல்லலாம், சாமி கும்பிடலாம். அதிபரும் ஆகலாம், பிரதமரும் ஆகலாம். கைது கூட ஆகத் தேவையில்லை. நான் எப்போதும் இந்தப் போலிக் கொண்டாட்டத்தில் இணைந்து கொள்வதே இல்லை. தனித்தீவாக நின்று விடுவதுதான் பாவியாகாமல்  இருக்க ஒரே வழி. சில நேரம் போலி எழவுகளுக்கும் போகாமல் இருப்பதே சிறந்தது போலும். 



Download As PDF
Bookmark and Share

Post Comment

பெரும்பான்மை மனநோய் தவிர்ப்போம்


பெரும்பான்மை மனநோய் எப்படி இருக்கிறது. இறைவனைப் போன்று பலவித வடிவங்களில் பலவித நிறங்களிலும், பண்புகளிலும் இருக்கிறது. நம் நாட்டிலும் அண்டை நாடுகளிலும் குருதியாறு ஓட வைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

இலங்கையில் பெரும்பான்மை மனநோய் சிங்களப் பேரினவாதமாக இருக்கிறது.

அது சிறுபான்மையினரை வந்தேறிகள் என்கிறது அவர்களது மதம் வந்தேறி மதம் என்கிறது. அவர்கள் மற்ற நாடுகளில் பெரும்பான்மை என்கிறது, நம்மிடம் இருப்பது இந்த ஒரு நாடுதான் என்கிறது. அவர்கள் முன்னோர்கள் நம் நாட்டின் மீது படயெடுத்தவர்கள் என்கிறது. அவர்கள் தேசதுரோகிகள் என்கிறது. அவர்கள் வழிபாட்டிடங்களை அழிக்கிறது தமது மத வழிபாட்டிடங்களாக மாற்றுகிறது. அவர்களின் பண்பாட்டுச் சின்னங்களை அழிக்கிறது. தமது பண்பாட்டுச் சின்னங்களைத் திணிக்கிறது. மொழியைத் திணிக்கிறது. வரலாற்றை மாற்றி எழுதுகிறது. மொத்த நாடும் தன்னுடையது என்று உரிமை கோருகிறது. பெரும்பான்மை ஆதிக்க வெறியை சமூக இயல்பாக மாற்றுகிறது. அவர்கள் மீது வன்முறை செலுத்துகிறது. அவர்களை இனப்படுகொலை செய்கிறது. அவர்களின் சொத்துக்களைக் கொள்ளையடிக்கிறது. அவர்களை வாழிடங்களை விட்டு துரத்துகிறது. அவர்களை ஆயுதம் ஏந்த வைத்து இன்னும் உயிர் சேதங்களை ஏற்படுத்துகிறது. பயங்கரவாதிகளாக்கி மொத்த சமூகத்தையும் மீள முடியாத துயரத்தில் ஆழ்த்துகிறது.

இந்தியாவில் பெரும்பான்மை மனநோய் இந்து மதவாதமாக இருக்கிறது.

அது சிறுபான்மையினரை வந்தேறிகள் என்கிறது. அவர்கள் மதம் வந்தேறி மதம் என்கிறது. அவர்கள் மற்ற நாடுகளில் பெரும்பான்மை என்கிறது, நம்மிடம் இருப்பது இந்த ஒரு நாடுதான் என்கிறது. அவர்கள் முன்னோர்கள் நம் நாட்டின் மீது படயெடுத்தவர்கள் என்கிறது. அவர்கள் வழிபாட்டிடங்களை அழிக்கிறது தமது மத வழிபாட்டிடங்களாக மாற்றுகிறது. அவர்களின் பண்பாட்டுச் சின்னங்களை அழிக்கிறது. தமது பண்பாட்டுச் சின்னங்களைத் திணிக்கிறது. வரலாற்றை மாற்றி எழுதுகிறது. மொத்த நாடும் தன்னுடையது என்று உரிமை கோருகிறது. அவர்கள் தேசதுரோகிகள் என்கிறது. முன்பு நாம் வாழ்வாங்கு வாழ்ந்தோம் இவர்கள் வந்ததால் நாம் நாசமானோம் என்கிறது

பாகிஸ்தானில் உருது திணிக்கப்பட்டதால் வங்க மொழி சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டு கலகம் மூண்டு தனிநாடாயினர். தனிநாடாக முடியாதோர் அகதிகளாய் அவதியுறுகின்றனர். அரச பயங்கர வாதத்தினால் அல்லல் படுகின்றனர்.

ஈராக்கிலும், பாகிஸ்தானிலும், சிரியாவிலும் பெரும்பான்மை (சன்னி) மனநோயால் குர்துகள், யஸ்திகள், ஷியாக்கள் அல்லல் படுகின்றனர். இனப்படுகொலைக்கு ஆளாகின்றனர். துருக்கி நாட்டிலும் பெரும்பான்மை மனநோய் சிறுபான்மை குர்து இனம் தனிமைப்பட்டுள்ளது.

ஒரு நாட்டில் வாழும் சிறுபான்மை இனமானது அவர்கள் முன்னோர் செய்த தவறுகளுக்கு பொறுப்பாகாது. ஒரு நாட்டில் சிறுபான்மையாக வாழும் பிரிவு பின்பற்றும் மதம் மொழி இன்னோர் நாட்டில் வாழும் பெரும்பான்மை பிரிவினர் பின்பற்றுவதாகவும் இருக்கக் கூடும். ஒரு நாட்டிலோ மாநிலத்திலோ பெரும்பான்மை செய்யும் தவறுக்கு மற்றொரு நாட்டில் வாழும் சிறுபான்மையினர் தாக்கப்படுவதும் இந்த பெரும்பான்மை மனநோய்தான் காரணம்.  அதற்கு அந்த சமூகத்தையே ஒட்டு மொத்தப் பழியும் சுமக்க வேண்டும் என்று நினைப்பது அறியாமை.

இந்தப் பெரும்பான்மை மனநோய்க்கு எந்த வித அடையாளங்களும் இருக்கலாம். மதம், இனம், மொழி அல்லது மூன்றுமாகவும் இருக்கலாம். ஜாதியாகவும் இருக்கலாம். இதில் ஈடுபடுவோர் மிகச்சிலராக இருந்தாலும் பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்தவரே இருப்பர். பண்பாடு, பிறப்பு, பின்பற்றும் நம்பிக்கைகள் காரணமாக பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் பெயரால் இயக்கம் நடத்துவோர் சிறுபான்மையினருக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்காமலும், மனசாட்சியை மறைத்துக் கொண்டும் வாழ்கின்றனர். அவர்கள் சிறுபான்மையினருக்கு எதிராக வெறி கொள்வதற்கேற்ற பொய்க் காரணங்கள், வரலாறுகள் எங்கும் நிறைந்து காணப்படுகின்றன. இந்தப் பெரும்பான்மை மனநோயால் பொதுமக்களே அதிகம் பாதிக்கப் படுகின்றனர். எனவே மக்களாகிய நாம், நாம் பின்பற்றும், நம்பிக்கை கொள்ளும், நேசிக்கும் இன, மத, மொழி காரணமாக அதன் பெயரால் மற்ற சமூகத்தின் மீது செலுத்தப்படும் எந்தவொரு வன்முறைக்கும் ஆதரவளிக்காமல் இருக்க வேண்டும்.

அந்த வன்முறையா நம்மால் தடுக்க முடியாவிட்டாலும் அந்த வன்முறையை, வன்முறையை நடத்துகிறவர்களை ஆதரிக்கவே கூடாது. ஏனெனில் பெருங்கொடுமை செய்வோர் தாம்தான் அந்த சமூகத்தையே காக்க வந்தவர் உய்விக்க வந்தவர் போன்ற தோற்றத்தை உருவாக்குவர். சமூகத்தில் மத நல்லிணக்கம் இருப்பதை வெறுத்து வெறுப்பை விதைப்பவர். அதன் மூலம் அரசியல் செய்து தமது நோக்கங்களை நிறைவேற்றுவர்.

இன்று #டிசம்பர் 6

#பாபர் மஸ்ஜித்  பள்ளி வாசல் இடிக்கப்பட்ட நாள். இதை ஜனநாயகம் இந்நாட்டில் தொடர விரும்புவோர் அனைவரும் வெறுக்கப்பட வேண்டிய செயல். நினைவு கூரத்தக்க நாள்.

இதை கொஞ்சம் விருப்பு வெறுப்பின்றி புரிந்து கொள்ள வேண்டும். மதவெறியால், பெரும்பான்மை வெறியால் பீடிக்கப்பட்டவர்களுக்கு இது எள்ளலாகத் தெரியும். ஆனால் நம்பிக்கை காரணமாக ஊசலாடும் மனங்கள்தான் இங்கே அதிகம் என்பதாலும், இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. இங்கே வாழும் பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப் பயன்படுத்தி சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தளம் இடிக்கப்பட்டதாகக் கொள்ள வேண்டும். இல்லை முஸ்லிம்கள் எப்போதும் தம் மதத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் இந்துக்கள் மட்டும் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களுக்குக் கொஞ்சம் வரலாறு சொன்னால் போதும்.

எத்தனையோ மன்னர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்தான் எதிர்களும் இந்து மதம்தான் அவர்கள் படையெடுத்து வென்ற மன்னர்களும் இந்து மதமாக இருந்தாலும் அவர்கள் கட்டிய கோவிலை இடிப்பார்கள், இடித்திருக்கிறார்கள். ஏன் ராஜ ராஜ சோழன் எத்தனை இடங்களை வென்றான் ? அவன் கங்கை கொண்டான் கடாரம் கொண்டான் என்றால் என்ன அங்கே போரும் இனப்படுகொலையும் நடந்திருக்கிறது என்றுதானே பொருள். 800 வருடங்கள் முஸ்லிம் மன்னர்கள் படையெடுத்த போதும், ஆண்ட போது இந்தியாவிலே இந்து மதம்தானே பெரும்பான்மையாக இருக்கிறது.

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் 1000 வருடங்களுக்கு மேலாக ஆண்ட போதும் இந்தியாவில் இந்து மதம்தான் பெரிய மதமாக இருக்கிறது. இப்படியிருக்க அவர்களால்தான் இந்து மதத்துக்கு ஆபத்து, இந்துக்களுக்கு ஆபத்து என்பது என்ன வகை தந்திரம்.

இஸ்லாமிய ஆட்சி நடக்கும் மலேசியாவில் இந்துக் கோயில்கள் இருக்கின்றன. இஸ்லாமிய ஜனநாயகக் குடியரசான பாகிஸ்தானிலும் இந்துக் கோயில்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் ஆயிரக்கணக்கில் தாடிக்காரர்கள் ஒன்று சேர்ந்து இந்துக் கோயிலை இடித்திருக்கிறார்களா ? இல்லை அந்நாட்டின் முதன்மையான எதிர்கட்சி ஒன்று அப்படி செய்தால் எப்படி இருக்கும்.

அவ்வளவு எதற்கு இலங்கையில் இருக்கும் இந்துக் கோயில்களை இடித்து புத்த விகாரைகளை கட்டும் சிங்களப் பேரினவாத அரசும், புத்தர் சிலைகளை வைத்து வன்முறை ஊர்வலங்களை நடத்தும் பொதுபல சேனாவை வழிநடத்துவதும் சிறுபான்மைக்கெதிரான பெரும்பான்மை வெறிதான்.

கொஞ்சம் அடையாளம் கடந்து சிந்தித்தால் விளங்கும். தவறு செய்யும் ஒரு சிறு கும்பலே பெரும்பான்மை அடையாளத்தை தனது முகமூடியாக அணிந்து வரும்.
 
Download As PDF
Bookmark and Share

Post Comment