ஆர்.எஸ்.எஸ் - இன் கொலைவெறியை மறைக்கும் தினமணி நாளிதழ்

செய்தி விமர்சனத்துக்குப் போகும் முன் ஒரு சிறிய தகவல். 100% கல்விக்குப் பேர் பெற்ற கேரளா மாநிலம் தற்போது மதவெறி இயக்கங்களின் கட்சிகளின் வளர்ச்சிக்கும் அற்புதமான இடமாக இருக்கிறது. கடந்த மாதம் வீட்டிலேயே வெடிகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த RSS  தொண்டர் ஒருவர் அப்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமுற்று மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இது பரவலாக வெளியாகாத செய்தி.  இதே ஒரு முஸ்லிம் இயக்கத்தைச் சேர்ந்தவரோ அல்லது இயக்கம் சாராத முஸ்லிமோ செய்திருந்தால் என்னாவாகியிருக்கும். இந்தியா முழுவதும் ஊடகங்களுக்கு ஒரு வாரத்திற்கான பரபரப்புத் தீனி கிடைத்திருக்குமல்லவா ?

இதை வைத்து கேரளாவில் இந்துத் தீவிரவாதம் பயங்கரமாக வளர்ந்து விட்டது என்று சொல்ல வரவில்லை. அங்கே குண்டு வைத்துக் கொல்வது சாதாரணம் என்றும் சிலர் ஃபேஸ்புக்கில் பேசிக் கொள்வதையும் கேட்டேன். சிபிஎம் காரர்களும், பாஜகவினரும் வெட்டிக் கொண்டு சாவதும் அவ்வப்போது நடக்கிறது. ((

காந்திக்குப் பதிலாக நேருவைக் கொன்றிருக்க வேண்டும். இது ஆர்.எஸ்.எஸ் என்ற அகில இந்திய பயங்கரவாத இயக்கத்தின் கேரளப் பிரிவின் சார்பில் மலையாள மொழியில் வெளியாகும் "கேசரி" என்ற இதழில் வெளியான கருத்து ஆகும். இது பல்வேறு தரப்பிலும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் தோற்றுவித்துள்ளது. இதை ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ் பெருந்தலைகள் சொதப்பியும், மழுப்பியும் பதில் சொல்லி வருகின்றனர். அப்படி மழுப்பியதில் ஒன்று அதற்கும் ஆர்.எஸ்.எஸ் -க்கும் தொடர்பு இல்லை என்பது. இன்னொன்று காந்தி கொல்லப்பட்டதற்கான காரணமே நேருதானாம். என்ன ? காந்தி ஒரு கோழை. இந்துக்கள் முஸ்லிம்களால் கொல்லப்படக் காரணமானவர். ஆனால் இந்துக்கள் கலவரத்தில் ஈடுபடும்போது மட்டும் தடுத்தார். முஸ்லிம்கள் கலவரத்தைத் தொடங்கிய போது எதுவும் செய்யவில்லை என்பனவையே வழக்கமாக இவர்கள் பாடும் பல்லவி. அதானே. நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ் காரன் இல்லை என்று கூட அடித்து விடுபவர்கள்தானே இவர்கள்.
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மீதான தடையை நீக்கிய நேருவுக்கு இது தேவைதான்.
 

சரி அது கிடக்கட்டும். நமது தினமணி செய்திருக்கும் ஊழியத்தைப் பாருங்கள். தினமணியை மட்டும் வாசிப்பவர்கள் என்ன நினைப்பார்கள். அந்த கேசரி இதழில் வெளியான கருத்து என்னவென்றே தெரியாதளவுக்கு மறைத்து ஆர்.எஸ்.எஸ் இயக்கத் தலைவர்களின் மறுப்பை மட்டுமே முதன்மைப் படுத்தியுள்ளது. இதைப் படிப்பவர்கள் என்ன நினைப்பார்கள். ஆஹா இந்த மதச்சார்பின்மை மண்டூகங்கள் மீண்டும் சின்ன விசயத்தைப் பெரிதுபடுத்தி ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தையும், பாஜகவையும், மோடியையும் இழிவு படுத்தத் தொடங்கி விட்டார்கள் என்று மனக்குரலைக் கேட்டு புலம்புவார்கள்.

இதில் கடைசிப் பத்தியில் சிந்தனையிலோ செயலிலோ எவ்வித வன்முறையையும் ஆர்.எஸ்.எஸ் கண்டித்தே வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இதை ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் கண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வோம். ஏனெனில் அது அவர்களை இழிவு படுத்தும் செய்தியன்றோ !

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

ஜால்ரா மணி கலாச்சிட்டாராம்

தினமணிக்கு அம்மாவின் புகழ் பாட முடியவில்லை. அதனால் இந்தத் தீர்ப்பு தவறானது என்று ஜாடை மாடையாகச் சொல்லும் கட்டுரைகள் நடுப்பக்கத்தில் வருகின்றன. அம்மா சிறையில் வாடுகிறார். அதனால் துன்பத்தில் வாடும் தினமணி ஆசிரியர், இரண்டாம் பக்கத்தில் அதிமுக காரர்கள் மொட்டயடிப்பது, காவடி எடுப்பது, காது குத்துவது, சிறப்பு யாகம் நடத்துவது, பட்டினிப் போராட்டம் நடத்துவது, நடைப் பயணம் போவது, வேலை நிறுத்தம் செய்வது என்று பலவாரியானா போராட்டங்கள் மூலம் தமிழகத்தையே ஒரு புரட்சிகரமான சூழலில் வைத்திருக்கிறார்.

அவருக்கு இருக்கும் மிகப்பெரிய பலம், நிம்மதி என்னவெனில் நடுவணரசாக வீற்றிருக்கும் பாஜகதான். அதனால் பிரதமர் என்ன செய்தாலும் அதை ஏற்றிப் போற்றுவார்.

இன்றைக்கு தினமணியில் வந்த அடடே மதி கேலிச்சித்திரத்தைப் பாருங்கள். முன்னாள் அரசை கலாச்சிட்டாராம். கலாய்ப்பதற்கு ஒரு தகுதி வேண்டாமா தினமணி ? தற்போதைய சூழலில் கருணாநிதியை நொட்டுவதற்கு ஒன்றும் கிடைக்க வில்லை போலும் அதனால் மன்மோகனைக் கலாய்க்கிறது தினமும் ஜால்ரா அடிக்கும் மணி.


தினமணி ஆசிரியர் வைத்திய நாதன் அகில உலக புரட்சியான "தூய்மை இந்தியா" திட்டத்தைப் போற்றியும் ஏற்றியும் கடந்த வாரத்தில் ஒரு தலையங்கம் எழுதியுனார். கடைசியில் அவரது விதியின்படி (காந்தி அல்லது பாரதியார் பற்றி) ஒரு செய்தியைச் சொல்லி) உச் கொட்டியிருக்கிறார். விளம்பர மன்னனான பாரதப் பிரதமர் என்னவொரு திட்டமோ, செய்தியோ , அறிவிப்போ சொன்னால் அதை ஆமோதித்து நைசாக மிகப்பெரும் சிந்தனை போல் சித்தரித்து அதை ஏற்றி விடுவதை செவ்வனே செய்வார்.

ஒன்று தலையங்கத்தில் மிகப்பெரும் சிந்தனை செயல் வடிவம் பெற்றது எதிர்காலத்தில் பட்டையக் கிளப்பப் போகும் திட்டம் என்று அடக்கமான மொழியில் எழுதுவார். இல்லையெனில் "அடடே மதி" யை விட்டு கேலிச்சித்திரத்தின் மூலம் மறைமுகமாகப் புகழ்வார்.

எடுத்துக்காட்டாக, சமஸ்கிருத, ஹிந்தித் திணிப்பு வெறி பிடித்த பாஜக அரசு ஆசிரியர் தினத்தை "குரு உத்சவ்" என்று சம்ஸ்கிருதப் பெயரில்தான் கொண்டாட வேண்டும் என அறிவித்தது. அதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தது. ஏற்கெனவே இளைஞர்களின் முதன்மை ஆளுமையாக பிம்பமேற்றப்பட்டிருக்கும் பிரதமருக்கு அப்துல் கலாம் (குழந்தைகளின் நாயகன்) பிம்பத்தை உருவாக்கும் முகமாக பள்ளிக் குழந்தைகள் விடுமுறை நாளன்று மாலை வரை இருத்தி வைக்கப்பட்டு பாரதப் பிரதமர் ஹிந்தியில் அறுத்துத் தள்ளியதை செவியில் சீழ் வடியக் கேட்டு வாடினர். ஆங்கிலத்தில் கேள்வி கேட்டாலும் ஹிந்தியிலேயே "பாத் கர்த்தே ஹோ" செய்தார் பிரதமர்.

அப்பேர்ப்பட்ட நன்னாளன்று அடடே மதி வெளியிட்டிருந்த சித்திரம் - ஒரு மாணவன் ஆசிரியரிடம் சொல்கிறான். "ஆசிரியர் தினம், டீச்சர்ஸ் டே, குரு உத்சவ் வாழ்த்துக்கள் சார்." இதில் என்ன பிரச்சனையிருக்கிறது என்று நினைத்தால் உங்களுக்குப் புரியவில்லை என்று பொருள். தினமணி ஜால்ரா அடிக்கும் அரசு ஒரு சர்ச்சைக்குரிய அறிவிப்பை விடுகிறது. அதைக் கண்டிக்காமல் எதிர்க்காமல், குரு உத்சவ் என்பதையும் சேர்த்து ஒரு மாணவன் சொல்வதாக இருந்தது அந்தச் சித்திரம். அரசு ஹிந்தி, சமஸ்கிருதத்தைத் திணித்தால், அதை எதிர்க்காமல் அதைப் பரப்பி சேவை செய்கிறது தினமணி. பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக "ஆசிரியர் நாள்"  என்று தமிழில் முதலில் சொல்லி, கடைசியில் குரு உத்சவ் - ஐ வாலை ஒட்டி விடுகிறது. இனி அடுத்த வருடத்திலிருந்து குரு உத்சவ் இந்தியாவில் மூவாயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்படும் கலாச்சாரம் என்றெல்லாம் கட்டுக் கதைகள் அவிழ்த்து விடப்படும் பாருங்கள்.

போன வாரமே எழுத நினைத்து முடியாமல் போனது இது.

இந்தியா ஏன் சுத்தமில்லாமல் இருக்கிறது என்றால் மாலையில் வீட்டைப் பெருக்கி கோலமிட்டு விளக்கேற்றும் பண்பாடு மறைந்து விட்டது, மேல் நாடுகளைப் போல் இந்தியாவில் குப்பை அது சேர வேண்டிய இடத்தில் சரியாகச் சேர்வதில்லை. வீடுகளில் கூட கழிவறைகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. எல்லாவற்றுக்கும் மனிதர்களே காரணம், நவீன வாழ்வில் பெருகிவிட்ட ஞெகிழி உட்பட பல குப்பைகள். எல்லாம் சரிதான் பாராட்டக் கூடியதுதான்.

புறத்தூய்மை நீரான் அமையும் என்கிறது வள்ளுவம். அதாவது புறத்தூய்மைக்கு நீங்கள்தான் அடிப்படை என்று தலையங்கம் முடிகிறது. நாமனைவரும் பொறுப்புதான் என்கிறார். எனவே நாமனைவரும் பொறுப்பு எனில் அதில் அன்னார் வைத்தியநாதரும் அடக்கம்தானன்றோ !

ஆகவே இவருக்கு மனசாட்சியிருந்தால், விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில், மக்களின் கடவுள் நம்பிக்கைக்குள் புகுந்து மதவெறியாட்டம் போடும் பயங்கரவாத இயக்கங்களுக்கு இலவச விளம்பரம் தருவதை நிறுத்துவாரா ?

கண்ட இடங்களிலெல்லாம் சிலைகளை வைத்து சுற்றுச் சூழல் மாசுக்களை அதிகப்படுத்தும் விநாயகன் சிலைகளை நீர் நிலைகளில் கரைத்து நீரை நாசப்படுத்துவதை எதிர்ப்பாரா ?

இல்லை காட்டுக்கூச்சல் போட்டுக் கொண்டு போவதை, வன்முறையைத் தூண்டுவதை, தெருவெங்கும் குப்பை போடுவதை எதிர்ப்பாரா ?

உத்தமரின் "தூய்மை இந்தியா" திட்டத்தில் முதலில் இணைக்க வேண்டியது இந்தத் திட்டத்தை அல்லவா !

இல்லை இந்தியாவையே குப்பை மேடாக்கும் கூறு கெட்ட தீபாவளி என்ற பண்டிகையின் பேரில் பட்டாசு வெடிப்பதை எதிர்ப்பாரா ?

செய்யவே மாட்டார்.  இந்து முண்ணனியும், இந்து மக்கள் கட்சியும், பாரதிய ஜனதாக் கட்சியும் தெருவுக்குத் தெரு, ஊருக்கு ஊர் விநாயகர் சிலை பிரதிஷ்டை என்று விளம்பரம் கொடுப்பார்.

இன உணர்வு என்றால் சும்மாவா ??

தீபாவளி விளம்பரங்கள், பட்டாசு கடைகள், எதையும் எதிர்க்க மாட்டார். ஆனால் இந்த தீபாவளியின் புது வரவான சீனப் பட்டாசு தீமைகள் பற்றி, இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று கட்டுரை வெளியிடுவார். அதனால் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்துவிட்டதால் மட்டும் தினமணி இனிமேல் தனது குப்பைக் கட்டுரைகள் வெளியிடாது என்று நம்ப இடமில்லை.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

வாசிப்பு - அசுவ சாஸ்திரம் (குதிரைகளில் வருணாசிரமம்)


சமீபத்தில் அந்தியூரில் நடந்து முடிந்த குதிரைச் சந்தைக்குச் சென்ற ஒருவர் மூலம் எனக்கு ஒரு சிறிய நூல் கிடைக்கப் பெற்றது. குதிரைச் சந்தையில் விற்கப்பட்ட அந்நூல் வேறு எதைப் பற்றியகுறிப்புகளுடன் இருக்கப் போகிறது குதிரையைத் தவிர. வேடிக்கை என்னவென்றால், அந்நூலின் முதல் பக்கத்தில் இந்நூல் விற்பனைக்கன்று சங்க உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கு மட்டும் என்று அச்சடிக்கப்பட்டுள்ளது. என்ன சங்கம் விவசாயிகள் மற்றும் குதிரை வளர்ப்போர் சங்கம் திருப்பூர் மாவட்டம்(FARMERS & HORSE BREEDERS ASSOCIATION TIRUPUR DISTRICT). விற்பனைக்கு இல்லை என்று விதித்திருந்தும் எப்படி விற்பனைக்கு வருகிறது ? விலையைக் காட்டிலும் கொஞ்சம் சேர்த்துக் கொடுத்தால் விதிமுறை தளர்ந்து விடுகிறது. 

அப்படியென்ன ரகசியம் இதில் இருக்கிறது எனில் குதிரை வளர்க்க விரும்புவோர், வாங்க விரும்புவோர், குதிரை வைத்திருப்போர்களுக்கான குறிப்புகள் அடங்கிய நூல்தானிது. சந்தைக்கு வருகிறவரெல்லாம் குதிரை வாங்கவா முடியும், ஒருபாடு பேர்கள் வேடிக்கை பார்க்கத்தான் வருகிறார்கள். வருகிறவர்கள் குதிரை வாங்காமல் சந்தைக்குப் போனதற்கான அடையாளமாய், போனால் போகிறதென்று ஒரு சாட்டையையோ அல்லது இது போன்ற ஒரு நூலையோ வாங்கிச் செல்வர் போலிருக்கிறது. 


நூலின் மொழிநடை நூறு வருடங்களுக்கு முந்தியதாகத் இருக்கிறது. குதிரையில் இத்தனை சமாச்சாரங்கள் இருக்கிறதா என்று தோன்றியது. மேலும் வருணாசிரம தருமம் என்ற ஒரு சமாச்சாரத்தைக் கேட்டிருப்போம். அது மனிதர்களுக்கு மட்டும்தானென்றிருந்தேன், ஆனால் மனிதப் பிறவிகள் குதிரைகளின் பிறப்புக்கும் அப்படியொரு விதியை வகுத்து இருக்கிறார்கள் என்று இந்நூலின் மூலம் அறிந்தேன். இதில் வருண பேதம் என்பது குதிரைகளின் நிறத்தை வைத்து கூடும், கூடாது என்று சில விதிகள் கணித்து வைத்திருக்கிறார்கள். பெண் பார்ப்பதற்கு தேவையான தகுதிகளை விட குதிரை வாங்கும் போது இன்னும் அதிகமானவற்றைப்பார்த்து ஆய்ந்து வாங்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது அந்நூல்.

குதிரை பிறந்த (குட்டி போட்ட) கணத்திலிருந்து அந்த கணிப்புத் தொடங்குகிறது. இன்னின்ன நாட்டில் அல்லது ஊரில் பிறந்த குதிரைகள் இப்படியெல்லாம் இருக்கும், இதனால் அதன் முதலாளிக்கு இலாபமுண்டாகுமா அல்லது கெடுதல் உண்டாகுமா என்றெல்லாம் கணிக்கப்பட்டுள்ளது.

குதிரை எந்த ஊரைச் சார்ந்தது அல்லது நாட்டைச் சார்ந்தது என்பதைப் பொறுத்து அதன் வேகம், திறமை, வலிமை குறித்துச் சொல்கிறது இந்நூல். எந்த நேரத்தில் பிறந்தது என்பதைப் பொறுத்து அதை வாங்குகிறவருக்கு, அல்லது வைத்திருப்பவருக்கு ஏற்படும் மாற்றங்கள் - நன்மைகள், தீமைகள் என்று வரையறுக்கிறது. உதாரணத்திற்கு ஒன்று - குறிப்பாக சித்திரை மாதத்தில் குதிரை பிறந்தால் அல்லது பிறந்த குதிரையை வைத்திருந்தால், வாங்கினால் அல்லது வளர்ந்த்தால் அந்தக் குதிரைக் காரன் நட்டமடைவான். எனவே பரிகாரமாய அக்குதிரையை பரதேசிகளுக்கு தானமளித்திட வேண்டும் இல்லையெனில் குதிரையின் காதுகளை அறுத்து விட வேண்டுமாம் (:.
                                        
குதிரைகளின் வயதை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்றால், அதன் பற்களின் நிறத்தை வைத்து முடியுமாம். பற்களின் நிறம் மாறும், ஒவ்வொரு நிறமும் மூன்று வருடங்கள் நிலைக்கும் இவ்வாறு ஒன்பது விதமான நிறங்களிருக்கின்றனவாம். காலிகா, அறளிகா, குளிகா, காஜா, மாக்கா, சிங்கா, ஊலிகா, லங்குனி, மற்றும் பெஸ்தி  ஆகியன குதிரைகளின் பற்களின் நிறங்கள். ஒவ்வொரு நிறத்திற்கு குறிப்பிட்ட வயதாக கணிக்கிறார்கள்.

குதிரை வாங்கும் நபரின் முன்பாக அக்குதிரை லத்தி போட்டால் அது நன்மை தரும் குதிரை, எனவே வாங்கலாமாம், சிறுநீர் கழித்தால் அக்குதிரையை வாங்கக்கூடாதாம்.

அடுத்து குதிரையின் ஜாதியறிவது எப்படி என்று விளக்குகிறார்கள்.

குதிரையை நீரின் (நீர் நிலை) முன் விட்டு அதன் மறுவினையைக் கொண்டு ஜாதி பிரிக்கிறார்கள். பிரம்ம க்ஷத்ரிய வைசிய சூத்திர ஜாதியறிதல் இவ்வாறு ;


பிரம்ம ஜாதி -

நீரைக் கண்டவுடன் கண்வரையில் நீரில் தலையை மூழ்க விட்டு நீரைப் பருகும்.
இந்திரியக் கட்டுப்பாடு, நல்ல குணம், புத்திசாலி, குற்றமற்ற நடை
போரில் முன்செல்லாமல் பின்வாங்கும்

க்ஷத்திரிய ஜாதி -

மூக்கு வெளியே தெரியும் படிக்குத் தண்ணீர் குடிக்கும். கோபமும், பராக்கிரமமும் வாய்ந்தது. பெரிய உருவமுடையது. போரில் தனது எஜமானனைக் காக்கும், எதிரிகளைக் குதறி துவம்சம் செய்யும். போருக்குத் தகுதியானவை

வைசிய ஜாதி -

வாய் பட்டும் படாமலும் நீர் பருகும், நீரைக் கண்டு அஞ்சியே நடக்கும். இயற்கைச் சீற்றம் தாங்கும். ஓய்வில்லாது உழைக்கும் முரட்டு வேலைக்கு ஆனது.. சவாரிக்கும், கீழ்ப்படியவும் ஆகாதது.

சூத்திர ஜாதி -

சவுக்காலடித்தாலொழிய நீரில் கால் வைக்காது. அச்சமும் அயோக்கியத்தனமும் உடையது. எஜமானனைக் கீழே தள்ளி கடித்துக் கொன்று விடும்

இதில் சூத்திர ஜாதிக் குதிரையை மட்டும் வாங்கக் கூடாது. வாங்குவோர் நட்டமடைவர். இன்ன பிற மூன்று ஜாதிக் குதிரைகளையும் வாங்கலாம் அதிலும் வைசிய ஜாதிக்குதிரை கடின வேலைக்கும் மட்டும் உதவும். முதலிரண்டு ஜாதிகளுமே வாங்கத் தக்கவை.. பெருமைக்குரியவை.

குதிரைகளின் சுழியை வைத்தும் சில பண்புகளைக் கணிக்கலாமாம்.

குதிரைகளின் ராசி வகைகள் -  காத்திராசி, பத்தவிராசி, கீரிராசி

என்றெல்லாம் அந்நூல் விவரித்துச் செல்கிறது. வருண பேதமும் இருக்கிறது, இதில் குதிரையின் வண்ணங்களின் கலவையைக் கொண்டு பிரிக்கிறார்கள். வால் மட்டும் வெள்ளை மற்ற இடங்கள் கருப்பு, ஒரு கால் மட்டும் கருப்பு மற்ற பாகங்கள் வெண்மை, அல்லது பிடரி கண் முடிகள் மட்டும் கருப்பு இன்ன பிற இடங்கள் வேறு நிறம் என்று ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு பெயராக வைத்திருக்கிறார்கள். குதிரைகள் இப்படியாக பிரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு கொண்டேன். இதிலிருந்து என்ன புரிகிறதோ அதைப் புரிந்து கொள்ளுங்கள் நான் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை. 
                                                                                                           
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment