கடவுள் நம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடவுள் நம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தடுப்பு ஊசி போடும் கடவுள் நம்பிக்கையாளர்கள்

கொரோனாவைப் படைத்தது அல்லது உருவாக்கியது யார் கடவுளா ? கடவுள் நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைப்படி கொள்கைப்படி கொரோனா என்ற தீநுண்மியைப் படைத்தது கடவுள்தான். 

கடவுள் எதற்காக இதைப் படைக்க வேண்டும் ? மனிதனுக்குப் பயனில்லாத உயிர்கள் பூமியில் பல உள்ளன. அது போல் இதையும் கொள்ளலாமா ? முடியாதே இது மனிதனின் இருப்புக்கே கேடு விளைவிக்கும் அளவிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

கொரோனாவைப் படைத்தது கடவுள் எனில் அதற்கான தடுப்பூசியை உருவாக்குவதும் கடவுளின் விருப்பத்திற்கு மாறானதுதானே ? இது முரண்பாட்டை கடவுள் நம்பிக்கையாளர்கள் எப்படி எளிதில் கடந்து போகிறார்கள் என்பது மிகப்பெரிய ஆச்சரியம். 

இந்திய மக்கள் கட்சியின் (அதாஙக் பாரதிய ஜனதா கட்சி) ஹ. ராஜா அவர்கள் தடுப்பூசி போடும் படத்தைப் பார்த்ததும் இப்படி எழுதத் தோன்றியது  மனம் முழுதும் பல்வேறு கடவுள்கள், வலது கையில் ஏதோ சாமி கயிறுகள், கழுத்தில் ஏதோ மாலை, நெற்றியில் பொட்டு இவையிருந்தும் கடவுள்களை நம்பாமல்,

முக்கவசமும் தடுப்பூசியும் போட்டுக் கொள்ளும் பக்தர். கடவுளும் மதமும் கலவரம் செய்யவும் அரசியல் அதிகாரத்தைப் பெற்று தனது இனத்தவரை ஆதிக்கம் செய்யும் அளவுக்கு முன்னேற்றவும் செய்யும் கருவிகள் என்று தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார்.
கடவுள் நம்பிக்கை உடையவர்கள் உலகில் தாம் வாழ்வதற்காகச் செய்யும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும், பகுத்தறிவு நடவடிக்கைகளும், அறிவியல் செயல்களும் அவர்களின் கடவுள் நம்பிக்கையை சற்றும் இடறுவதில்லை.
Download As PDF
Bookmark and Share

Post Comment

கருப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம்

கருப்பர் கூட்டம் யூட்யூப் இன் சுரேந்தர் மீது குண்டர் சட்டம் போடப்போகிறார்களாம். கடவுளின் அவற்றின் கதைகளைப் பற்றிய உண்மையைச் சொன்னதற்கு இச்சட்டமெனில், இந்தக் கதையைப் பரப்பி மனிதர்களை முட்டாளாக்கும் கூட்டத்திற்கு இந்த ஜனநாயக அரசு பாதுகாப்புக் கொடுக்கிறது. உண்மையைச் சொன்னவனுக்கு தண்டனை எனில் இது மதச்சார்பற்ற நாடா இல்லையா என்று கேட்கத் தோன்றுகிறது. 


எப்படி கடவுள் இருக்கிறது என்று சொல்ல உரிமையிருக்கிறதோ அது போன்றே கடவுள் இல்லை என்று சொல்லவும் இருக்கிறது. எப்படிக் கடவுள் கதைகளை கண்டபடிக்கு எழுதி அதை வெளியிட்டு கோடிக்கணக்கானோரை நம்ப வைத்து பணம் கறக்கவும் இன்ன பிறவும் செய்ய உரிமை இருக்கிறதோ அது போன்றே அக்கதைகளைக் கட்டுக் கதை என்று விளம்பவும் உரிமை இருக்கிறது. 

கொலை மருட்டல் விடுப்பவன், , கலவரத்தைத் தூண்டுகிறவன், அமைதியைக் குலைக்க போலிச் செய்தியைப் பரப்புகிறவன், சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்களைக் குறிவைத்து வெறுப்பை விதைப்பவன், பெண்களை பாலியல் வல்லுறவுக்கு நிகரான செய்கையை செய்யச் சொன்னவன், தமிழ்நாட்டைக் கேவலமாகப் பேசுகிறவன், தமிழ்நாட்டின்/இந்தியாவின் பெரிய தலைவர்கள் சிலைகளை உடைத்து இழிவு செய்தவன், அவற்றைத் தூண்டி விடுகிறவன், ஜனநாயக நாட்டை மதவாத நாடாக மாற்ற வேண்டும் என்று செயல்படுகிறவன், ஆணவக் கொலையைத் தூண்டுகிறவன், கலவரம் செய்து உடமைகளை அழித்தவன்கள், உயிரோடு எரித்தவன்கள், காவல்நிலையத்தில் கொட்டடிக் கொலை செய்தவன்கள், தன் வீட்டில் தானே குண்டு வீசிக் கொண்டு நாடகமாடுகிறவன்கள், தன் வாகனத்திற்குத் தானே தீ வைத்துக் கொண்டு புரளியைக் கிளப்புகிறவன்கள் இன்னும் பல கொடிய பிறவிகள். 

இவனுங்க எல்லாம் வெளிய இருக்கும்போது சுரேந்தரன் மேல் குண்டர் சட்டம்தானே பாய வேண்டும் ?  
Download As PDF
Bookmark and Share

Post Comment