இனவெறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இனவெறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழன் என்றாலும் இனவெறி இனவெறியே !!

கடைசியாக நடந்த ஐபிஎல் போட்டிகளில் இலங்கையின் நுவன் குலசேகரா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். அதை ஒரு பிரச்சனையாக்காத போது தமிழ்நாட்டில் இது போன்ற குறுகிய இன உணர்வு இனவெறி சார்ந்த அரசியல் நடைபெறாது என நிம்மதியாக இருந்தது.

சிங்கள அரசின் இனவெறி பேசும் அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ, ராணுவத்தினரோ இந்தியா வருவதை பயிற்சி பெறுவதை எதிர்ப்பதே அரசியல் நடவடிக்கையாகும். அதை விட்டு விட்டு விளையாட வருகிறவர்கள், சாமி கும்பிட வருபவர்களை, பிழைக்க வருகிறவரைத்  துரத்துவது என்ன எழவோ தெரியவில்லை.

ஈழத்தமிழர்களுக்கு ஒரு சிறிய வடிவில் விடிவு வருவதையும் தடுப்பார்கள் தமிழ்நாட்டுப் புலி ஆதரவாளர்கள். இந்தக் கும்பல் மீது இருந்த மதிப்பெல்லாம் போய்விட்டது. பகுத்தறிவு பேசும் பெரியார் திக இயக்கத்தவரே இனவாதிகளைப் போல சில மாதங்களுக்கு முன்பு பைக் பந்தையத்திற்காக கோவை வந்திருந்த சிங்களர்களை ஆர்ப்பாட்டம் நடத்தி வெளியேற்றினர்.

தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய கேவலத்தை ஏற்படுத்தி விட்டார்கள். வந்தாரை வாழ வைக்கும் சென்னை, விருந்தோம்பலில் சிறந்தவர்கள், பண்பாட்டில் சிறந்தவர்கள் என்றெல்லாம் புகழப்படும் தமிழ்ப் பண்பாட்டினைக் கேவலப்படுத்தி விட்டார்கள் இந்தத் தமிழினப் போராளிகள். இந்தத் தமிழினப் போராளிகள் பேட்டி கொடுக்கும்போது அடிக்கடி சொல்வது ஈழப்போரில் 2 இலட்சம் தமிழர்கள் கொல்ல்பட்டார்களாம். தமிழர்களை அதிகமாக சாகடிப்பது இவர்கள்தான்.

முதலாவதாக தமிழகத்தைப் படாத பாடு படுத்தி வரும் தமிழக முதல்வர், தமிழர்களின் உணர்வுகளை மதித்து, கொழும்பிலிருந்து வந்திருந்த கால்பந்து வீரர்களையும், பயிற்சியாளர்களையும் திருப்பி அனுப்பி, அவர்களை அனுமதித்த ஒருவரை பணிநீக்கம் செய்து தமிழினத்தின் மானம் காத்தார்.

அடுத்து ஈழத் தமிழர்களுக்காக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டே போராடும் திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, மற்றும் தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த செயல் வீரர்கள் உட்பட தமிழ் உணர்வாளர்கள் ஆகியோர் சாமி கும்பிட வந்த சிங்களர்களுக்கெதிராகப் போராடி தமது கட்சிக்கும் தமிழ்நாட்டுக்கும் நற்பெயரைப் பெற்றுத் தந்துள்ளனர். இவர்கள் போன்ற சிங்கள பக்தர்கள் வழக்கமாக பல வருடங்களாக வருகின்றனர். இப்போது மட்டும் என்ன வந்தது ?

தமிழ்நாட்டிலிருக்கும் ஈழ அகதிகளுக்கே இங்கு சிறையில் இருப்பதைப் போலத்தான் சிரமப்பட்டு வாழ்கிறார்கள். அதனால்தான் அவர்களே தப்பி ஆஸ்திரேலியாப் பக்கம் ஓடுகிறார்கள். அவர்கள் வாழ்வில் ஏதாவது முன்னேற்றம் காண விழையாமல் இந்த அறிவாளிகள் சாமி கும்பிட வருகிறவன் கால்பந்து விளையாட வருகிறவனையெல்லாம் துரத்தி புறநானூற்று வீரத்தைக் காட்டியுள்ளனர்.

இன்னும் ஒரு கும்பல், பேருந்தில் சென்ற சிங்களர்கள் மீது கற்கள் செருப்புக்களை வீசித் தாக்கியுள்ளனர். 184 பேர்களில் 65 ஆண்கள், 36 குழந்தைகள், 83 பெண்கள். இதில் பெரும்பான்மையினராக இருந்தவர்கள் பெண்களும் குழ்ந்தைகளும்.  இவர்களைத் தாக்கியதன் மூலம் தமிழர்களின் வீரம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை இந்தக் கயவர்கள் வீசிய கல்லொன்று குழந்தைகள் மீது பட்டுத் தொலைத்து ஒன்று கிடக்க ஒன்று ஆகியிருந்தால் அவ்வளவுதான்
தமிழ்நாட்டின் மானத்தை கிழித்துத் தொங்கவிட்டு இருப்பார்கள். இலங்கையில் இதை வைத்தே தமிழர்களை இன்னும் நொறுக்கியிருப்பார்கள். சிங்களர்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்த காவல்துறையினருக்குப் பாராட்டுக்கள்.



கேவலத்திலெல்லாம் கேவலம் அந்த சிங்களர்கள் தமிழில் கதறி அழுததாகும். இதற்கெல்லாம் என்ன சொல்லப்போகிறார்கள் இந்தக் கயவர்கள். ஆக நடப்பவைகளிலிருந்து தெரியவருவது என்னவென்றால் ஈழத்தமிழர்களுக்காகப் போராடுகிறவன் என்பவன் இனவெறியனாகவே இருக்க வேண்டும் என்ற நெருக்கடியை ஏற்படுத்துகிறாரகள்.  இலங்கையில் போர் முடிந்து வெவ்வேறு அரசியல் மாற்றங்கள் வந்து விட்டன. போர்க்குற்றவாளிகளில் ஒருவரான பொன்சேகா பங்காளிச் சண்டையில் சிறையில் அடைக்கப்பட்டு விட்டார். இனவெறியர்களே பல பிரிவாக இருக்கின்றனர். பல சிங்கள இனவாத இயக்கங்கள், இனவெறிக்கு எதிரான இயக்கங்கள் அரசுக்கு எதிராகவும் இருக்கின்றன. 

அரசுக்கு எதிராக சிங்கள மாணவர்கள்
தற்போது இந்தியாவின் கொள்கைகள், ஒப்பந்தங்கள் உட்பட தம் வசதிக்காக ஆட்சி நடத்தும் மஹிந்த அரசின் நடவடிக்கைக்கு எதிராக, கல்வித்துறையை பொதுத்துறையிலிருந்து விலக்கி தனியார்மயமாக்கும் முயற்சிக்கு எதிராக சிங்கள மாணவர்கள் மிகப்பெரிய ஊர்வலத்தை நடத்தினார்கள். அப்படி இலங்கை அரசின் முயற்சியால் கல்வி தனியார்மயமான பின்னர்தான் தமிழ்நாட்டுக் கல்வி வள்ளல் பச்சை முத்து, இலங்கையில் கடை வைக்க முடிந்தது. துணிச்சலிருந்தால் எஸ் ஆர் எம் நிறுவனரைத் தாக்குங்கள். இப்படியான நிலைகள் அதிகமாகும்போது அதாவது இலங்கை அரசும் இந்தியாவின் பெரிய நிறுவனங்களும் ஒப்பந்தங்கள் போடும்போது, குறிப்பாகத் தமிழ்நாட்டைச்சேர்ந்த தொழில் அதிபர்கள் சிங்களரின் பணம் எனக்கு வேண்டாமென்று நின்று விடுவார்களா என்ன ? . சன் குழுமம் சிங்கள மொழியில் ஒரு அலைவரிசை தொடங்கும் காலம் வராமலா போய்விடும் ?

இலங்கையில் கல்விக் கடை விரித்திருக்கும்  இந்தியாவின் முதல்தரப் பல்கலைக் கழகம்
 ஆனால் இதை சிங்களர்கள் நினைத்திருந்தால், இலங்கையைத் துண்டாட நினைக்கும் தமிழ்நாட்டிலிருந்து வரும் தமிழனின் பல்கலைக்கழகத்தை இலங்கை மண்ணில் அனுமதிப்பதா என்று இனவெறியைக் கிளப்பியிருக்க முடியாதா ? இதெல்லாம் இந்தத் தமிழ் இனவெறியர்களின் தலையில் ஏறுமா ?

புலம்பெயர்ந்த புலிகள் ஆதரவாளர்கள், புலிகள் இயக்கத்திற்கு நிதி வசூலித்து பல கோடிகளை வைத்திருப்பவர்களே சிங்கள அரசுடன் நெருக்கமான தொடர்பு இருப்பதாக அங்கங்கே செய்திகள் வருகின்றன. அதே நேரம் தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்படுவதும், தமிழர்களின் நிலங்கள் இராணுவத்தால் ஆக்ரமிப்பு செய்யப்படுவதும் நடக்கிறது. தற்போது சிறுபான்மை முஸ்லிமக்ளுக்கு எதிராகவும் இனவெறி தூண்டப்பட்டு வருகின்றது.

என்னவோ எல்லா சிங்களர்களும் தமிழர்களைக் கொல்லும் வெறியோடு இருப்பது போலவும்தான் இவர்கள் நடந்து கொள்கிறார்கள். அரசும், இனவெறியர்களும், அரசியல்வாதிகளும் செய்வதற்கு பொது மக்கள் என்ன செய்வார்கள். சில மாதங்கள் முன்பு வங்கியைக் கொள்ளையடித்து விட்டதாகக் கூறி அம்மா அவர்களின் காவல்துறை 5 பிஹாரிகளைக் சுட்டுக் கொன்று தள்ளியது. இதனால் பிகார் மாநிலம் அதிர்ச்சியில் உறைந்தது. அதை அவர்கள் தமிழ்நாட்டுக்காரன் என்றால் கொலைகாரன் என்று மொத்தத் தமிழர்களையும் வெறுத்து ஒதுக்கினால் அதை நாம் ஏற்றுக் கொள்வோமா ?

28 வருடங்கள் முன்பு சிங்களப் பேரினவாதிகளால கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்ட போதும் சரி, 4 வருடங்களுக்கு முன்பு போர் உச்சத்திலிருந்த போதும் சரி இனவெறி இல்லாத சிங்களர்கள் தமிழர்களுடன் இணைந்து வாழ்ந்தார்கள், உயிருக்குப் பாதுகாப்பும் அளித்தார்கள். அதிகமான தமிழர்கள் சிங்களர்ளுடன் கலவர அச்சம் இன்றியே இன்னும் வாழ்ந்து வருகின்றனர். அதே நேரம் அரசியலில் இல்லாத அப்பாவி சிங்களர்கள் தமிழ் விடுதலை இயக்கங்களால் கொல்ல்பட்ட நிகழ்வுகளும் உண்டு. 50 ஆயிரம் தமிழர்களைக் கொன்றொழித்த இலங்கை அரசுதான் 30 வருடங்களுக்கும் முன்பும் ஜேவிபி போராட்டத்தை அழிப்பதற்காக 60 ஆயிரம் சிங்களர்களைக் கொன்றது.

தமிழ்நாட்டில் ஈழ அகதிகள் தமிழக அரசுக்கு எதிராக உண்ணாநிலைப் போராட்டம் நடத்து நிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு சாதாராண உரிமைகள் கூட மறுக்கப்படுகின்றன. இந்த லட்சணத்தில் தமிழீழம், தனித் தமிழ்நாடு என்று காலத்திற்கொவ்வாத கருத்துக்களெல்லாம் விவாதிக்கப்படுகின்றன.

ஒரிரு வருடங்களுக்கு முன்பு தெலுங்கானப் போராட்டம் வெடிந்திருந்தது. அதன் காரணமாக ராகுல் காந்தி தெலுங்கானா தனி மாநிலமாக்குவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். உள்துறை அமைச்சர் சிதம்பரமும் இது குறித்து கருத்துக்கள் பகிர்ந்திருந்தார். இதைக் கண்டித்து ஆந்திராவிலிருந்த தெலுங்கானாவுக்கு எதிரான கட்சியைச் சேர்ந்த அமைச்சரொருவர் குறிப்பிட்டார். சிதம்பரம் என்ற தமிழர் ஆந்திராவைத் துண்டாட முயற்சிக்கிறார், அவர் வேண்டுமென்றால் தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கட்டும் என்றார். இனவாத அரசியல் என்பது
இதுதான். மக்களிடம் ஏற்கெனவே ஒற்றுமை இருக்கிறது இது போன்ற இனவாதிகள் இனவெறியர்கள்தான் திட்டமிட்டு அதை பிரிக்கிறார்கள்.

மதவெறி, தேசியவெறி, இனவெறி, ஜாதிவெறி என எல்லாமே அது சார்ந்த பொது மக்கள் அனைவரையும் எதிரியாகக் கருத வைக்கிறது. இது போன்ற இன்வெறியை நாம் வெறுத்து ஒதுக்க வேண்டும். உண்மையான மக்கள் சாரந்த போராட்டங்களை ஆதரிப்போம். தமிழின வெறிக்கு எதிர்ப்பு தெரிவிப்போம். இனத்தை விட மனிதம் பெரியது. இதே இலங்கையில் தமிழர்கள் இடத்தில் சிறுபான்மையினராக சிங்களரும், பெரும்பான்மையினராக தமிழர்களும் இருந்திருந்தால் நான் சிங்களர்களைத்தான் ஆதரித்திருப்பேன். அதுதான் நேர்மையாக இருக்க முடியும். 

இது மாதிரியான செயல்கள் சிங்கள இனவெறி அரசுக்கு நன்கு பயன்படுமே ஒழிய இலங்கைத் தமிழர்களுக்குப் பயன்படாது.
Download As PDF
Bookmark and Share

Post Comment

சிங்களப் பௌத்த பேரினவாதிகளால் தகர்க்கப்படும் இசுலாமிய வழிபாட்டிடங்கள் !

1915 - இல் முதன்முதலில் சிங்களப்பேரினவாதிகளால் இழப்பைச் சந்தித்தவர்கள் இசுலாமியர். தற்போது இனவாத அரசியலின் இலட்சக் கணக்கானோர் கொலை செய்யப்பட்ட பின்பும் சிங்களப் பேரினவாதமானது பல வடிவங்களிலும் தம்மைப் புதுப்பித்துக் கொண்டு வருகிறது. அவ்வகையில் இசுலாமியப் பள்ளிவாசல்கள் புத்தமதப் பிக்குகளால் தகர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சிங்களப் பௌத்தப்பேரினவாதம் அரசின் மறைமுக ஆதரவு மற்றும் தூண்டுதலினால் மீண்டும் தனது கொடுங்கரங்களை நீட்டத் தொடங்கியுள்ளது. இப்படி பெரும்பான்மை மதவாதம் சிறுபான்மை இசுலாமியரின் மீது தனது தாக்குதலைத் தொடுக்கும் அதே வேளையில் தமிழ் முசுலிம்களை இன்னொரு சிறுபான்மையினரான தமிழரிடமிருந்து பிரிக்கும் அரசியலையும் செய்து வருகிறது. சிங்களப் பேரினவாத அரசியலின் ஒரு பகுதியாக முஸ்லிம் தமிழர் பிரிவினையைத் தூண்டும் வேலையைச் செய்கிறது.

போர் முடிந்து 3 ஆண்டுகளான பின்பும் போர்க்காலத்திருந்த அடக்குமுறைகள் தொடர்ந்து நடக்கின்றன. இன்னும் வெள்ளை வேன்களில் அரசுக்கு எதிரானவர்கள் கடத்தப்படுகின்றனர். அரசின் கைப்பாவைகளாக இருக்கும் ஆட்சியாளர்கள் மக்களைத் திசை திருப்பும் நோக்கத்துடன் செயல்படுகின்றனர். புலிகள் அழிக்கப்பட்ட பின்பு தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்திருந்தது இருப்பினும் எதிர்பார்த்தபடியே எந்தத் தீர்வையும் இதுவரை வழங்கவில்லை. போதாக்குறைக்கு உலக நாடுகளிலிருந்து அழுத்தம் போர்க்குற்ற விசாரணை என பல வகையிலும் அச்சுறுத்தல். முன்பு விடுதலைப் புலிகள் இருந்த பொதோ அவர்களைக் காரணம் காட்டியே எல்ல செயலையும் நியாயப்படுத்தி வந்த சிங்கள அரசு தற்போது தனது பித்தலாட்டங்களுக்கு காரணம் காட்ட ஒரு எதிரி இல்லாமல் தவிக்கிறது. புலிகளின் முடிவின் பின்னரே மகிந்தவின் குடும்ப அரசு தமிழர்கள் மட்டுமல்லாமல் சிங்களர், முஸ்லிம் என அனைத்துத் தரப்பு மக்கள் மீதும் தனது ஒடுக்குமுறையைத் தொடங்கிவிட்டது. அதன் விளைவாகத்தான் போர்க்காலத்தில் இருந்தது போலவே பத்திரிக்கையாளர், அரச எதிர்ப்பாளர்கள் காணாமல் போதல் என்ற செயல்கள் தொடர்ந்து நடக்கின்றன. மகிந்தவுக்கு எதிரான மனப்பான்மை வலுத்து வருகிறது.

இத்தனை பிரச்சனைகளையும் சமாளிக்க ஒரே வழி மக்களை ஒன்று படாமல் பிரித்து வைத்திருப்பதுதான். இதற்காக சிங்களப் பேரின பௌத்தமதவாத வழியில் செயல்பட்டு வருகிறது. புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பு அவர்களின் பண்பாட்டுச் சின்னங்களான மாவீரர் கல்லறைகளை அழித்தது போன்ற செயல்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சிறுபான்மையினர் வாழிடங்கள் வழிபாட்டிடங்கள் மீதான கலாச்சார அழிப்பு மற்றும் பேரினவாத விரிவாக்கம் போன்றவற்றைச் செய்கிறது. இதன் விளைவாகத்தான் புதிது புதிதாக புத்தர் சிலைகளை நிறுவி வருகிறது. புத்தர் சிலைகளை நிறுவும் இராணுவம் !! என்ன ஒரு முரண் நகை. இன ஒற்றுமை நிலவும் இடங்களில் அதாவது சிறுபானமை தமிழர்கள் முஸ்லிம்களின் இடங்களில் இதை செய்கிறது. இதன் ஒரு பகுதியாகத்தான் முஸ்லிம்களின் வழிபாட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதற்கு புத்த மதப் பிக்குகளே தலைமை தாங்கியுள்ளனர். இத்தனைக்கும் முஸ்லிம்களின் சார்பாக அவர்களை பிரதிநிதிப்படுத்த மகிந்தவின் ஆதரவாளராக சில முஸ்லிம் தலைவர்களும் உள்ளனர். அவர்கள் இப்போது மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய இக்கட்டில் மாட்டிக் கொண்டுள்ளனர். புலிகள் மீதான போர்களின் போது கடந்த கால் நூற்றாண்டுகளாக ஆயிரக் கணக்கான தேவாலயங்களும், கோவில்களும் இடிக்கப்பட்டன. தற்போது அரசே பல்வேறு வகையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை, தர்காக்களை இடிக்கிறது. 


அரசின் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளாக தம்புல்லவில் பள்ளி வாசல் புத்த பிக்குகளால் தாக்கப்பட்டது, பின்பு அரசு அதை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த செப்டம்பர் மாதம் அனுராதபுரத்தில் வெடிவைத்துத் தகர்க்கப்பட்ட செயலில் அரசுதான் காரணம் என்ற வதந்தியும் இருக்கிறது, காத்தான்குடியிலும் ஒரு மசூதி கொளுத்தப்பட்டுள்ளது.



தம்புள்ள பள்ளிவாசல் தகர்க்கப்படும்போது அங்கிருந்த காவலர்கள் அதைத் தடுக்கவில்லை, 2000 பேர்கள் வரையிலான கும்பல் புத்த பிக்குகளின் தலைமையில் வந்து இதை அரங்கேற்றியுள்ளது. பட்டப்பகலில் தொழுகை நடக்கும்போதே இது நடந்துள்ளது,
Download As PDF
Bookmark and Share

Post Comment

முல்லை பெரியாறு பிரச்சனையில் என்னதான் செய்யப்போகிறது இந்திய அரசு ?

தற்போது  முல்லை  பெரியாறு  பிரச்சனை  எதில்  போய்  முடியுமென்றே  தெரியவில்லை.  தற்போது  எனக்கும்  ஒருவேளை  அணை  வலுவின்றி  இருக்கிறதோ  என்ற  ஐயம்  ஏற்பட்டுவிட்டது.  அந்தளவுக்கு  இருக்கிறது  கேரளா  அரசின்  பரப்புரைகள்.  அங்கே  அணையை  உடைத்தே  ஆகவேண்டுமென்ற  கருத்து  அனைவருக்கும்  போய்  சேர்ந்திருக்கிறது.  இல்லையென்றால்  இவ்வளவு  ஆதரவு  இருக்குமா  ?  நான்கு  மாவட்டங்கள்  மூழ்கி  விடுமேன்றால்  யார்தான்  அஞ்ச  மாட்டார்கள்  ?
 
தமிழ்  நாட்டவர்கள்  சிலர்  என்ன  சொல்கிறார்கள்  என்றால்  ஒருவேளை  முல்லைப்  பெரியாறு  அணை  உடைந்து  போனாலும்  இடுக்கி  அணை  அதை  தாங்கிக்  கொள்ளும்  என்று.  ஆனால்  கேரளத்தவர்கள்  அஞ்சுவது  முல்லைப்  பெரியாறு  அணை  உடைந்து  விடுமென்று  மட்டுமல்ல  மாறாக  தொடர்ச்சியாக  உள்ள  மற்ற  அணைகளும்  உடைந்து  இறுதியாக  இடுக்கி  அணையும்  உடைவதால்  ஏற்படும்  அழிவைக்  குறித்தே  அஞ்சுகின்றனர்.  

இருபக்கத்து  அரசியல்வாதிகளும்  இந்தப்  பிரச்சனையை  சூடாக  வைத்து  ஆதாயம்  தேடுகிறார்கள்.  குறிப்பாக  கேரள  அரசியல்  கட்சிகள்  வெளியே  அன்பொழுகப்  பேசிவிட்டு  அங்கே  இனவெறியைத்  தூண்டிவிடும்  வேலையைச்  செய்து  கொண்டிருக்கிறார்கள்.  படிப்படியாகக்  காய்  நகர்த்தியே  அணையத்  தன்  கட்டுப்பாட்டில்  கொண்டுவருகின்ற  வேலையைத்தான்  கேரளா  கடந்த  30  வருடங்களாகச்  செய்து  வருகிறது. 
 
முல்லைப்  பெரியாறு  அணையை  தம்  வாழ்வாதாரமாகக்  கொண்டிருப்பவர்கள்  காவல்  துறையின்  லத்திக்  கம்புகளுக்கு  எதிராகப்  போராடி  வருகிறார்கள்.  மற்றவர்களோ  தமது  சொந்த  விருப்பு  வெறுப்பின்  காரணமாகவும்,  ஒரு  சில  இனவெறியர்களின்  செயலுக்காகவும்  ஏதுமறியாத  மலையாள  இனத்தவரையே  வசைபாடி  வருகின்றனர்.  அதே  போல்தான்  அங்குள்ளவர்களும்  செய்கின்றனர்.  இணைய  உலகில்  அதிகமாக  இது  நடக்கிறது.  தமிழர்கள்  மிக  மோசமான  இனவாதிகள்  என்பதையே  இணையதளமெங்கும்  விரவிக்  கிடக்கும்  வெறுப்புணர்வு  காட்டுகிறது.  இது  இரு  மாநிலங்களிலும்  இனரீதியான  தாக்குதல்களுக்கு  வழிவகுத்துள்ளது.  இது  போன்று  செய்பவர்கள்  உண்மையில்  விவசாயம்  பாதிக்கப்படுமென்ற  ரீதியில்தான்  கோபப்படுகிறார்களா  என்றால்  இல்லை.  அதே  போல்  மலையாள  இனவெறியர்களும்  இந்தப்  பிரச்சனைகளுக்கிடையே  தமது  நோக்கங்களை  நிறைவேற்றிக்  கொள்ள  எத்தனிக்கின்றனர்.  இந்திய  அளவில்  தமக்கான  ஆதரவை  திரட்டியுள்ளனர்.  அணை  உடைக்கப்  பட  வேண்டியதே  என்ற  கருத்தை  நிலை  நாட்டியுள்ளனர்.  

முத்தாய்ப்பாக  சி  பி  ரோய்  என்ற  முல்லை  பெரியாறு  அணையின்  பாதுகாப்புக்  குறித்துப்  போராடி  வந்த  குழுவின்  தலைவரையே  விலக்கியுள்ளனர்.  காரணம்  அவர்  சொன்ன  எளிய  மாற்று  வழியானது  இரு  மாநிலத்தவர்க்கும்  உகந்ததாக  இருந்த  போதிலும்  அணையை  உடைக்க  வேண்டுமென்ற  கருத்தில்  உடன்பாடில்லாததால்தான்.  இது  குறித்து  விரிவாக  அறிந்துகொள்ள  இங்கே  செல்லவும்.


இந்தத்  திட்டத்தை  செயல்படுத்துவதற்கு  அங்குள்ள  சில  நல்ல  உள்ளங்களுக்கு  பிடிக்காததைத்  தொடர்ந்து  அவர்  விலக்கப்பட்டுள்ளார்.   அவர்களும்  மக்களிடையே  அச்சத்தைத்  தூண்ட  தமிழ்நாட்டில்  பேசப்படும்  கருத்துக்களையே  தெரிவிக்கிறார்கள்.  மத்திய  அரசு  தமிழகத்திற்கு  ஆதரவாக  இருக்கிறதென்று.  இந்திய  அரசு  உண்மையில்  எந்த  மாநிலத்துக்குத்தான்  ஆதரவாக  இருந்திருக்கிறது.  இது  போன்ற  விவகாரங்களைத்  தீராத  பிரச்சனையாக்கி  வைத்திருக்கிறது.  அது  எப்போதும்  இவைகளைத்  தீர்த்து  அமைதிகாண  வழிதேடியதேயில்லை. 
 
அங்கு  அவர்களுக்கு  இந்திய  அளவில்  அறிவாளர்கள்  இதழ்கள்,  மற்ற  ஊடகங்களின்  ஆதரவு  இருக்கிறது.  இந்திய  அரசின்  ஆதரவு  உட்பட.  தமிழக  அளவில்  பார்த்தால்  இது  அனைத்துத்  தரப்பினரையும்  சென்று  சேரவில்லை.  கூடங்குளம்  அணு  உலை  அதற்கும்  குறைவு.  தற்போது  நடக்கும்  அத்தனை  பிரச்சனைக்கும்  காரணமாக  யோக்கிய  சிகாமணி  போல்  வேடிக்கை  பார்க்கும்  நடுவண்  அரசை  மட்டுமே  குற்றம்  சொல்ல  முடியும்.  கூடங்குளம்  எதிர்ப்பு  உச்சத்தில்  இருந்த  நிலையில்  இதைக்  கிளறி  விட்டு  திசை  திருப்பி  உச்ச  நீதி  மன்றத்தின்  தீர்ப்பையே  மதிக்காத  கேரளா  அரசை  ஒன்றுமே  செய்யாமல்  சும்மாவாச்சும்    கூட  அதட்டாமல்  விட்டிருக்கிறதென்றால்  அதற்கென்ன  பொருள்  ?  ஆனால்  ஓரிரு  வருடங்களுக்கு  முன்பு  சேதுக்  கால்வாய்  பிரச்சனையோ  அல்லாதோ  வேறெதுவோ  சரியாக  நினைவில்லை  அதற்கு  தமிழக  அரசு  அடையாள  வேலை  நிறுத்தம்  செய்தது.  அதற்கு  உச்ச  நீதி  மன்றம்  விடுமுறை  நாளிலேயே  நீதி  மன்றத்தைத்  திறந்து  வைத்து  தமிழக  அரசுக்கு  எதிராக  தீர்ப்பளித்தது.  

ஆனால்  காவேரி  பிரச்சனையில்  கர்நாடகத்தையும்  முல்லை  பெரியாறு  பிரச்சனையில்  கேரளவையும்  கண்டிக்கவேயில்லையே  ஏன்  ?  எதற்கெடுத்தாலும்  இந்திய  இறையாண்மையைப்  பற்றி  வகுப்பெடுக்கும்  அமைச்சர்கள்  அதை  தமிழ்  நாட்டுக்கு  மட்டுமே  வைத்திருக்கிறார்கள்  போலும்.  இதே  அணு  உலை  மேற்கு  வங்கம்  கேரளம்  ஆகிய  மாநிலங்களால்  நிராகரிக்கப்பட்டு  தமிழகத்தின்  தலையில்  கட்டப்பட்டது.  இப்போது  மட்டுமே  போராட்டம்  நடப்பதாக  காட்டிக்  கொண்டாலும்  25  வருடங்களாக  நடந்து  வருகிறது.  இதன்  மூலம்  நாட்டின்  வளர்ச்சிக்குத்  தடையாக  இருப்பதாகவும்  ஒரு  கருத்தை  உருவாக்குகிறார்கள்.  இதற்காக  சில  ஆயிரம்  கோடிகள்  செலவு  செய்ததாகவும்  அத்தனையும்  விரயமாகிவிடுமென்றும்  கூறுகிறார்கள். 
அணு  உலை  நிறுவத்  தேவையான  ஆய்வுகள்,  அதன்  முடிவுகள்  எதுவும்  உவப்பானதாகவும்  இல்லை,  அனைத்து  மக்களின்  எதிர்ப்புக்கு  ஆளாகி  நிற்கிறது.  அதை  விரைவில்  செயல்படுத்தவுள்ளதாகவும்  பிரதமர்  அறிவித்து  விட்டார்.  அதைத்  திறக்கும்வரையில்  முல்லைப்  பெரியாறு  விவகாரத்தை  ஆறப்போடாமல்  வைத்திருப்பதுதான்  திட்டம்  போலிருக்கிறது. 

Download As PDF
Bookmark and Share

Post Comment