தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆண்டாளை இழிவு செய்த எச்.ராசா, விஜயேந்திர சங்கராச்சாரி !

 எச்.ராசா அவர்களின் தந்தையாரின் உழைப்பில் வெளியான செங்கிருதம்-தமிழ் அகராதி ஒன்றை வெளியிடுவதற்காக எச்.ராசா விழாவை ஏற்பாடு செய்திருந்தார். அதில் கிறிஸ்தவரான சாலமன் பாப்பையாவையும் மதச்சார்பின்மை போற்றியான ராசா அவர்கள் வரவேற்றிருந்தார். இந்த விழாவை சிறப்பிப்பதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களும் வந்திருந்தார். ஏனென்றால் சமஸ்கிருதத்தைப் புகழ வேண்டுமே. இந்த விழா நடந்த போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பாரதமாதாவின் புத்திரர்களாக அனைவரும் எழுந்து நின்றனர். உயர்வான மேடையில் அமர்ந்திருந்த சங்கராச்சாரியும் எழுந்து நின்றார். பின்பு தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதற்கு அந்த மேன்மகனார் எழுந்து நிற்கவில்லை.  

தமிழை தனது ஆன்மாவிலிருந்து வெறுக்கும் ஒருவரை இம்மேடையில் ஏற்றியதன் மூலமாக அவருக்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தி விட்டார் எச். ராசா. தமிழினத் தலைவர் எச். ராசா அவர்களும் இதைக் கண்டுகொள்ளவோ கண்டிக்கவோ இல்லை. அப்படிச் செய்திருந்தாலும் அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. தமிழைத் தனது பெயரில் தாங்கிக் கொண்டிருக்கும் தமிழிசை அவர்கள் இதை எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறார். தமிழை வளர்த்த ஆண்டாளுக்கு இப்படி ஓர் இன்னல் நேருமென்பதை அவர் எப்படி எதிர்கொள்வார் ?

இதற்கு முன்பும் கூட ராசா ஆண்டாளை வேசி என்று கூறினார். நம்ப மாட்டீர்கள் என்று தெரியும். அது எப்படி?  வைரமுத்து ஆண்டாளை தனது தாயாகக் கருதுவதாகக் கூறினார். ராசாவோ வைரமுத்துவை வேசிமகன் என்று திட்டினார். என்ன ஒரு சின்ன சிக்கல் எச். ராசா முதலில் வைரமுத்துவை வேசிமகன் என்று கூறிய பின்னர்தான் வைரமுத்து ஆண்டாள் எனது தாய் என்று கூறினார். முன்ன பின்ன இருந்தாலும் அன்னை ஸ்ரீ ஆண்டாளை இழிவு படுத்திய எச். ராசாவை மன்னிக்கலாமா பக்தர்களே ! இப்பக் கணக்கு நேராயிட்டுது பார்த்தேளா ? 


பிரச்சனை என்ன என்பது இங்கு முக்கியமில்லை. ஆண்டாளை அவமானப்படுத்திய எச். ராசா அவர்களும், விஜயேந்திர சங்கராச்சாரி அவர்களும் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால் அது எங்கள் உணர்வைப் புண்படுத்தியதாகும். என்ன ஏது என்று விளக்கம் கேட்காதீர்கள். அது எங்கள் உணர்வு சார்ந்தது. ஆம் ஆண்டாளை இழிவு படுத்தி விட்டார் எச்.ராசா. மார்கழிப்புரட்சியின் தலைவரான அழகுத் தமிழ் திருவாய் மொழியாளரான ராசா அவர்கள் ஆண்டாளை அவமானப்படுத்தியிருக்கிறார். ஆண்டாள் அளவுக்கு தனக்கு தமிழ் வரவில்லை என்பதால் அவமானப்படுத்தியிருக்கலாம் என்று ஒரு வாரம் முன்பிருந்து ஆண்டாளைத் தாயாக வரித்துக் கொண்ட தமிழர்கள் கருதுகிறோம். 


ஆண்டாளை எங்கே இழிவு படுத்தினார் என்று கேட்கக் கூடாது. ஆண்டாள் கோடிக்கணக்கான தமிழர்களின் தாய். எனவே தமிழர்களின் தாய்=தமிழ்த்தாய் என்று கொள்வோம். ஆக தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்த்தாய்க்கு மட்டுமல்ல, தமிழ்த்தாயாகிய ஆண்டாளுக்கும் சேர்த்துத்தான் பாடப்படுகிறது. இது எங்களது நம்பிக்கை. அதில் தலையிட எவனுக்கும் உரிமையோ அருகதையோ இல்லை.  இந்த விளக்கத்தைல் சமாதானமாகதவர்களுக்காக இன்னொரு விளக்கத்தையும் கொடுக்கிறேன். சார்ந்தோர்கள் ஏற்றுக் கொள்ள முயற்சி செய்யவும். ஆண்டாள் வளர்த்ததால்தான் தமிழ் வளர்ந்தது. அதனால்தான் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பெற்றது.  எனவே தமிழ்த்தாய் வாழ்த்தை மதிக்காதது ஆண்டாளை அவமதிப்பது போலாகும்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது எழுந்து நிற்காத சங்கராச்சாரி 100 கோடி இந்துக்களையும் இழிவு செய்துவிட்டார். எப்படி என்று கேட்பவர்களுக்கு, ஆண்டாள் தமிழர்களின் தாய், தமிழர்கள் இந்துக்கள், எனவே உலகில் உள்ள இந்துக்கள் அனைவரும் புண்பட்டுவிட்டனர். இங்கே இந்துக்களுக்காக கேள்வி கேட்க இந்துக்களே உள்ளனர், புலுத்தறிவுப் பன்னாடைகள், கம்மனாட்டிக் கம்மூனிசிட்டுகள் உட்பட எச்சக்களைகள் அந்நிய மதத்துக்கு மட்டுமே சொம்பு தூக்குவர். 

இந்த நம்பிக்கையைக் கேள்வி கேட்கும் பஹூத்தறிவுப் பன்னாடைகள் மற்ற மொழிக்காரர்களிடம் கேட்க முடியுமா ? கேட்டால் வாயிலியே வெட்டுவார்கள் என்பதால்தானே இந்துத் தமிழர்களிடம் மட்டும் இந்த வீரம் ?. இப்போதெல்லாம் அது நடக்காது தமிழ் இந்துக்கள் விழித்துக் கொண்டனர்.  நாம் இந்துக்களாப் போராடினால் மதவெறி என்று கூவுவார்கள் திருட்டு திராவிடக் கும்பல். எனவே நாம் தமிழ் + ஆண்டாள் என்று போராடினோம். தற்போது அதையே தொடர்வோம். இப்போது பாருங்கள் தமிழ் இனவெறி என்று அவதூறு செய்வார்கள் கம்மினாட்டி கம்யூனிஸ்ட்டுகள். அதெல்லாம் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. 

எனவே தமிழன்னை ஆண்டாளைப் போற்றும் பாடலுக்கு நிற்காமல் இழிவு செய்ய விஜயேந்திரனுக்கு எப்படித் துணிவு வந்தது, இந்த விழாவை ஏற்பாடு செய்யக் காரணமான எச்.ராசா கொடுத்த உற்சாகமாகத்தான் இருக்கும். எச்.ராசாவின் தமிழ்ப்பற்றும், தமிழகப்பற்றும், இனவுணர்வும், தமிழ்மொழியுணர்வும் எங்களுக்குத் தெரியும், இருந்தாலும் அவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும்.  

புரட்சி நடக்கும்போது புரட்சியில் ஈடுபட்டவர்களே புரட்சிக்குத் துரோகமிழைத்த நிகழ்வுகள் வரலாற்றில் நிறைய உண்டு. அவ்வகையில் மார்கழிப் புரட்சி நாயகனான எச். ராசா அவர்களே அப்புரட்சியைக் காட்டிக் கொடுத்துள்ளார். எனவே மார்கழிப் புரட்சியாளர்கள் தங்களது களத்தை மாற்றிக் கொண்டு புரட்சியைத் தொடருமாரு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  ஆண்டாளை இழிவு படுத்தியவர்களைக் கண்டிக்கப் போன அவர், தானும் தமிழ்த்தாயை அவமதித்த செயலுக்கு மூல காரணாமாகிவிட்டார். என்னே ஆண்டாளின் திருவிளையாடல் ! தெய்வம் நின்று கொல்லும் என்பது உண்மைதானன்றோ !

 மன்னிப்புக் கேட்கும் முறை: 

நாம் எதிரிகளை மதிப்பவர்கள். எனவே எதிரிகளின் மொழிகளிலேயே மன்னிப்புக் கேட்க வைப்போம். தங்களின் பெருமதிப்புக்குரிய சொறியான் ஈவே ராம்சாமி நாயக்கனின் சிலை முன்பு நின்று கருப்புச் சட்டை அணிந்து கொள்ள வேண்டும். பின்னர் வாயைத் திறக்காமல் 5 முறை, 

 கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லை 
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்;  
கடவுளை பரப்பியவன் அயோக்கியன் 
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி 

 என்று சொல்லிக் கொண்டே மன்னிப்புக் கேட்க வேண்டும். செய்வீர்களா ? செய்வீர்களா ?. மன்னிப்புக் கேட்க வேண்டிய கடைசித் தேதி மன்னிப்பு கேட்ட பின்னர் அறிவிக்கப்படும். 

இப்போது தர்மப்போராளிகளுக்கு ஒரு வித கலக்கமும், ஐயமும் நேரலாம். நம்ம மதம் ஆப்ரகாமிய மதங்களைப் போல் மற்றவரை வெறுக்கச் சொல்லவில்லை நாத்தீக நாதாரிகளையும் ஏற்றுக் கொள்வதுதானே நம் பண்பாடு. வாழு வாழவிடு என்பதுதானே நமது கொள்கை. இப்படிப் போராட்டம் பண்ணி வெறுப்பதெல்லாம் நமக்கு ஒத்து வராதே என்று தோணலாம். ஆனால் திருவரங்கப் பெருமானின் ஆலயத்தை பீரங்கி கொண்டு பிளக்க வேண்டும் என்ற சொறியான் ராமசாமியை மன்னிக்காத நாம், இலங்கையில் புதிய ஆலயங்களைக் கட்ட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக சில கோயில்களை ஆகம முறையில் ராமாயண காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்ட விமானங்களின் மூலம் குண்டு போட்டுத் தகர்த்த நமது ஸ்ரீமான் ராஜபக்ச அவர்களுக்கு நம் கோயிலில் வைத்து பூரணகும்ப மரியாதையும் செலுத்தி விட்டோம். நாம் நமக்கு நன்மை செய்தவர்களை போற்றுவதிலும் சிறந்தவர்கள். எதிரிகளை அழிப்பதிலும் சிறந்தவர்களே!
Download As PDF
Bookmark and Share

Post Comment

கூகிளின் அடுத்த அருட்கொடை - நமது குரல்/பேச்சு எழுத்துக்களாக மாறும் அதிசயம்

அடுத்த அற்புதத்தை நிகழ்த்தி விட்டது கூகிள். ஆம். நாம் பேசினால் அது எழுத்துக்களாக மாறுகிறது. இதற்காக நாம் எழுத்துக்களை குரலாக மாற்றித்தான் வாழ்கிறோம். ஆனால் குரலையே எழுத்துக்களாக மாற்றும் தொழில்நுட்பம் ஆங்கிலத்தில் ஏற்கெனவே வந்து விட்டது. கூகிள் நிறுவனத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் எத்தனை நன்றி சொன்னாலும் தகும். உங்களது ஆண்ட்ராய் திறன் பேசியில் இதைப் பயன்படுத்தலாம். தட்டச்சு செய்யும் வாய்ப்பில்லாதவர்கள், நேரமும் வாய்ப்பும் கிடைக்காதவர்கள் கூட இதைப் பயன்படுத்தி தனது கருத்துக்களை வெளியிடும் வாய்ப்பை இந்த கண்டுபிடிப்பு நமக்கு அளித்திருக்கிறது. தமிழ் கூறும் நல்லுலகம் கூகிளுக்கு கடமைப்பட்டுள்ளது. இதன் வேகம் தட்டச்சு செய்வதைக் காட்டிலும் மும்மடங்கு வேகத்தில் இருக்கிறது என்று கூறுகிறது கூகிள். 

கையால் ஒரு பலகையில் எழுதுவது போல் எழுதினால் கூகிள் அதை எழுத்தாக மாற்றித் தரும் வசதியான தமிழ் ஈர்த்தறி வசதி (Tamil Handwriting Recognition Facility) என்ற அற்புதத்தின் அடுத்த மைல்கல்லாக விளங்கப் போகிறது இந்த கண்டுபிடிப்பு. இதற்கு மேலும் என்னதான் வேண்டும் சொல்லுங்கள். 

இதைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஆண்ட்ராய்ட் அலைபேசியில் Gboard - எனப்படும் கூகிளின் தட்டச்சுப் பலகை செயலியை நிறுவ வேண்டியதுதான். பின்பு languages - என்ற பகுதியில் சென்று தமிழை தேர்ந்தெடுக்கவேண்டும். பின்பு பேசிக் கொண்டே இருக்கலாம். இதைக் கொண்டு இணைய உலாவிகளில் தேடல்களை நிகழ்த்தலாம். மின்னஞ்சல், ஃபேஸ்புக், கட்செவி அஞ்சல் (whatsapp) என அனைத்து செயலிகளிலும் பயன்படுத்தலாம். அதிகம் மெனக்கெட்டு தட்டச்சு செய்து அழித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை.        இவ்வாறு தன்னால் இயன்ற வரையில் எல்லாம் மொழிகளுக்கு தனது கடமையை ஆற்றிக் கொண்டிருக்கின்றன சில நிறுவனங்கள். ஆனால் இன்னும் தமிழை எந்த இடத்திலும் பயன்படுத்தக் கூடாது என்று இறுமாப்பாக இருப்பவர்கள் இதைப் பயன்படுத்துவார்கள் என்று நம்பலாம். இனிமேல் தமிழில் தட்டச்ச முடியாமல்தான் ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி, தமிழில் உரையாடும் அட்டூழியம் இனியாவது ஒழிய வேண்டும். ஆயிரம் நன்றிகள் இதை சாத்தியமாக்கிய கூகிள் ஊழியர்களுக்கு. 
     தமிழ் வாழ்க ! தொழில்நுட்பம் வாழ்க ! கூகிள் வாழ்க !


Download As PDF
Bookmark and Share

Post Comment

சின்னப் பெருமை

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
ஏப்ரல் 29 ஆம் நாள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள். அந்த நாளே எனது பிறந்தநாளும் என்பதில் அற்பத்தனமான ஒரு மகிழ்ச்சி என்னுள் எழுகிறது. அவரை தமிழ் தேசியக் கவி என்றும் கூறலாம். தமிழுணர்ச்சி ததும்பும் பாடல்களை எழுதியவர். அவரைப் பற்றி இன்னும் முழுவதும் அறியாமல் இருப்பது வெட்கமாக இருக்கிறது.  அவரைப் பற்றி சில செய்திகள். 


-அவர் பிறந்த நாள் - 29-04-1891

-இவரது மிகச் சிறந்த வரியாகக் குறிப்பிட வேண்டிய பாடல்களில் எனக்குப் பிடித்தவை

தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்
இன்னொன்று,

கொலைவாளினை எடடா
கொடியோர் செயல் அறவே 

பெரியார் ஏற்றுக் கொண்ட கவிஞர் - பெரியாரை ஏற்றுக் கொண்ட கவிஞர்

பாவேந்தரின் படத்தைத் திறந்து வைக்கும் பெரியார்

டெல்லி இந்தி ஏகாதிபத்தியம் இந்தியா முழுவதும் இந்திமயமாக்கும் வெறியில் இருக்கும் இவ்வேளையில் இந்தப் பாடல் இன்றும் பொருந்துகிறது.

தில்லி ஒழிக!

செந்தமிழ் நாட்டைத் தில்லி ஒழிக்குமுன்
தில்லிதன்னை ஒழிக்க வேண்டும் நாம்.

குந்திச் சிறிய கதைபேசித் திரியும்
குள்ளத் தலைவர் குற்றம் செய்தனர்

இந்திச் செய்தியில் நடந்த தெப்படி?
இன்பத் தமிழை மாய்ப்பதும் கண்டோம்!
பைந்தமிழ் நாட்டுக் குள்ள அதிகாரம்
பத்தில் ஒன்றும் பலித்ததா நமக்கு?

நாட்டினை ஆண்ட தமிழா அடிமைகள்?
காட்டு மிராண்டிக் கழுதையா ஆள்வது?
நாட்டையும் மொழியையும் நசுக்குதல்
கண்டும்;
நாய்வாழ்க் கையைநாம் நாடுதல் நல்லதா?

புலவர் உள்ளனந் எதற்குத்தாம்
உள்ளனர்?
பொன்னுளார் உள்ளனர் எப்பயன்
கண்டோம்?
கலைஞர் வாழ்கின்றார்; எதற்காக
வாழ்கின்றார்?
கைவிலங் குக்கு மெருகு போடவா?

சோறுண்ணுகின்றோம்;
நாயுண்ண வில்லையா?
துன்பமற்ற தலைமுறை செய்வோம்
ஆறு பாய்ந்தெனத் தமிழர்கள்
பாய்க!
அழிக்கும் பகையை
அழிப்பதற்கே!
 

ஆங்கிலத்தைக் கற்க வற்புறுத்திய பெரியாருக்கு எதிராகவும், அவரது எழுத்துச் சீர்திருத்தத்திற்கு எதிராகவும் தனது எழுதுகோலைச் சீறியிருக்கிறார் புரட்சிக்கவிஞர். பெரியார் ஏற்றுக் கொண்ட ஒரே கவிஞர் பாரதிதாசன் மட்டுமே என்பது இங்கே தனிச்சிறப்பு. பெரியாரின் கொள்கைகளையும் தனது பாட்டில் வடித்தவர் புரட்சிக்கவிஞர்.

தமிழால் தமிழர் ஆயினர் அன்னவர்
தமிழை ஒழிக்கவும் தளரா துழைத்தனர்.

தமிழால் தமிழர்க்குத் தலைவர் ஆயினர்;
தமிழால் தலைமை அடைந்த #அவர்கள்
'தமிழில் ஏதுளது' என்று சாற்றுவர்.

தமிழைப் பேசித் #தலைவர் ஆயினர்
தமிழை எழுதித் தலைவர் ஆயினர்
'தமிழால் பயன் ஏது?" என்று சொன்னார்.

தமிழர் வாழத் தக்கவை ஆன
எல்லாக் கருத்தையும் இயம்பி வந்தனர்;
எல்லா உண்மையும் எடுத்துக் காட்டினர்
அரைநூற் றாண்டாய் அறிவு புகட்டினர்

அந்த அருமைத் தலைவரே இந்நாள்
ஆங்கிலம் தாயாய் அமைக என்றும்
தமிழால் உருப்படோம் என்றும் சாற்றினர்
தமிழர் தலைவர் தமிழாற் பேசியும்
தமிழால் எழுதியும் தந்த கருத்தினைத்
தமிழர் தங்கு தடையின்றி உணர்ந்தனர்
உணர்ந்துதாம் நன்னிலை உற்றனர் என்க.

இதனைத் தலைவரும் ஏற்றுக் கொள்வர்!
அன்றியும் அருமைத் தமிழே அன்றி
வேறுமொழி எமக்கு வராதென விளம்புவர்.
தமிழே தலைவ ராக்கியது, மற்றும்

தமிழே புகழ்பெறச் செய்த தென்பதை
எவரும் மறுக்க இயலா தன்றோ?
இப்படிப் பட்ட தலைவர் என்பவர்
தமிழில் இலக்கியம் இல்லை என்றனர்!

தலைவரைச் செய்தது தமிழ்இலக் கியமே
தமிழினம் படைத்தது தமிழ்இலக் கியமே
தமிழைத் திறம்படப் பேசவும் எழுதவும்
வைத்தது யாது? வண்டமிழ் இலக்கியம்!

தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணத்தை
உண்டு பண்ண உதவ வில்லை
என்று தமிழர் தலைவர் சாற்றுவர்;
அதே நேரத்தில் அந்தத் தலைவர்
முப்ப தாண்டாய் முளைத்த இலக்கியம்
எத்தனை ஆயிரம் என்பதை அறியார்!
 

தமிழ் இலக்கியங்கள் ஒரு குப்பை என்று சொன்ன பெரியாருக்கு எதிராக எழுதியதுதான்.

நூலைப்படி-சங்கத்தமிழ் நூலைப்படி! -முறைப்படி நூலைப் படி! -சங்கத்தமிழ் நூலைப்படி!
காலையில் படி, கடும்பகலில் படி,
மாலை இரவு, பொருள்படும்படி

என்ற கவிதை.  அவரின் அடுத்த பிறந்த நாளுக்கு இன்னும் சிறப்பான முறையில் எழுத வேண்டும்

செய்திகள். படங்கள் ஃபேஸ்புக்கிலிருந்து எடுத்தவை.
Download As PDF
Bookmark and Share

Post Comment

சிறியதாய் சில பெருந்தவறுகள்

சிறிய விடயங்களில் ஏற்படும் தவறுகளை நாம் பெரியதாக கண்டு கொள்வதில்லை. ஆனால் அந்தச் சிறிய தவறுதான் எத்தனை பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. ஒரு முறை என் மனைவி ஒரு ஞெகிழிப் பையை மிக இயல்பாக சாக்கடையினுள் எறிந்தார். அங்கே ஏன் வீசறே ? என்றேன். வேற என்ன செய்யறது ? என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இன்னொரு முறை தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். ஒரு வயதான பெண் மாடி வீட்டிலிருந்து வெளியே வந்து, குப்பைகளை ஒரு ஞெகிழிப் பையில் இட்டு நிரப்பி முடிச்சுப் போட்டு அதை அப்படியே சாக்கடைக்குள் வீசிவிட்டுச் சென்றார். சாக்கடை நம் வீட்டிற்குள் வரவில்லையே என்ற எண்ணம்தான். கொஞ்சம் நடந்து போய் குப்பையில் குப்பைத்தொட்டியில்தான் போட வேண்டும் என்ற அடிப்படை அறமே (அறிவெல்லாம் நிறைய இருக்கிறது) இல்லாதவர்கள் முழு மாடாக வளர்ந்து நிற்கிறார்களே நாம் என்னதான் செய்வது. இது ஏன் என்று முதலிலிருந்து விளக்க வேண்டுமா ? சாக்கடை அடைத்துக் கொண்டால் ஒரு மனிதன்தான் இறங்கி அடைப்பை நீக்க வேண்டும். அதற்கு உன்னைப் போன்றவர்கள் குப்பை வீசுவதுதான் காரணம் என்று விளக்கிச் சொன்னால்தான் தெரியுமா ?. இதற்காக ஒவ்வொருவரிடமும் சண்டைதான் போட்டுக் கொண்டிருக்க முடியுமா ?. விதிமுறைகளை மதிப்பவன் அடிப்படை மனிதநேயத்துடன் நடப்பவர்களையெல்லாம் பகடி செய்து விட்டோ அல்லது வேற்று கிரக வாசியைப் பார்ப்பது போல் பார்த்துவிட்டோ அல்லது மகாத்மாவாக்கிவிட்டோ இது போல் பலர் அலட்சியமாக செய்யும் தவறுகள் எத்தனை விளைவுகளுக்குக் காரணமாகின்றன. இதற்கெல்லாம் யார் தண்டனை கொடுப்பது ? யார் அவர்களுக்கு உணர்த்துவது ? விடிவே இல்லை. சரி தமிழுக்கு வருகிறேன்.

படம் - நன்றி கூகிள்
இது போன்றே இன்னொரு வழக்கமும் இருக்கிறது. சிறு அலட்சியமும், அதிகப்பிரசிங்கித்தனமும் எப்படி பேரழிவை உண்டாக்குமோ (கடலூர், சென்னை பேரழிவு போல) அது போல விளங்கும் தமிங்கிலப் புற்று நோய்தான். தமிழ் நாட்டில்தான் தமிங்கிலம் என்ற வகை உயிரினம் வாழ்ந்து வருகின்றது. இந்த உயிரினம் பலருக்குள்ளும் இருக்கிறது. நான் வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும், அனைத்து இடங்களிலும் தமிழ் மொழியை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளவன் அல்ல. ஆனாலும் எல்லாவிடங்களிலும் இயன்ற வரையிலும் தமிழே மணக்க வேண்டும் என்ற பேராவல் உடையவன். அதே நேரம் தற்காலத்தின் நடைமுறை சாத்தியங்களையும் என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. எந்த இடத்தில் ஆங்கிலம் தவிர்க்க முடியாது என்றும் எனக்குத் தெரிகிறது. ஆனால் வேண்டுமென்றே திணிக்கப்பட்டுப் பேசப்படும் ஆங்கிலம்தான் என்னை ஆத்திரத்தில் ஆழ்த்துகிறது. இது தனிமனிதர்கள் செய்யும் தவறுகள் தொடங்கி பெரிய தொலைக்காட்சி அலைவரிசைகள், நாளிதழ்கள், வார இதழ்கள் வரை செய்யும் தமிழ்க்கொலைகள், தமிழைக் கொன்று வளரும் தமிங்கிலம் எரிச்சலை ஏற்படுத்துகிறது. தமிழைப் பயன்படுத்த முடியாத மிகவும் கடினமான தருணத்தில்தானே, இடத்தில்தானே ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டும் இல்லையா ? இங்கே என்ன நடக்கிறது. ஆங்கிலத்தால் சொல்ல முடியாத இடத்தில் மட்டும் தமிழைப் பயன்படுத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக Dilemma, Cliche, De javu போன்ற சொற்களுக்கு தமிழில் நேரடியான சொற்கள் இல்லை அல்லது இன்னும் உருவாக்கப்படவில்லை அல்லது பரவலாகப் பயன்படுத்தப் படவில்லை என்றும் சொல்லலாம். 

இது போன்ற சொற்கள் தவிர்த்து, மிக எளிமையான சொற்களுக்குக் கூட வேண்டுமென்றே ஆங்கிலத்தைப் பிதுக்கி மேதாவித்தனத்தைக் காட்டுவதுதான் சகிக்கவே முடியாத்தாக இருக்கிறது. மம்மி(அம்மா), டாடி(அப்பா), ஆன்ட்டி(அக்கா/அத்தை/சித்தி), லைஃப்(வாழ்க்கை), வைஃப்(இல்லை), ஹேப்பி(மகிழ்ச்சி), குட்(நல்லது), ஓகே(சரி) பாய்ஸ்(பசங்க), ட்ரோலிங்(கிண்டல்), மேரேஜ்(திருமணம்), ஃபங்க்சன், பஸ், சாங்ஸ் இப்படித் தொடர்கிறது தமிழ்க் கொலை. ஏன் இவற்றை தமிழில் சொன்னால் தேய்ந்தா விடும் ? இல்லை தன்மானம் குறையுமளவுக்கு பழங்காலச் சொற்களுமல்ல. ஆனாலும் இவை ஆங்கிலத்திலேயே சொல்லப்படுகின்றன. நான் தற்போது தொலைக்காட்சிகள் பார்ப்பதையே அறவே நிறுத்தியாகி விட்டது. அவ்வப்போது தொலைக்காட்சியைக் கடந்து செல்லும்போதும், கட்டாயமாக பார்க்க வேண்டிய இடங்களில் கவனித்ததில் நினைவில் இருப்பதைப் பற்றியும்தான் நான் பேசுகிறேன். இவையெல்லாம் ஒரே நாளில் நிகழவில்லை. தாங்கள் வருடக்கணக்காக தமிழில் சொல்லி வந்த சொற்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலத்தில் மாற்றிப் பேசி சுய இன்பம் காண்கிறது தமிங்கில இனம்.

இதற்கெல்லாம் என்ன காரணம், பண்பாட்டு மாற்றங்கள் மட்டும்தானா ? தமிழை வைத்துக் கல்லாக் கட்டி தமிழையே அழித்து வருகின்றவை, தொலைக்காட்சி அலைவரிசைகள்தான். பெரும்பான்மையான மக்கள் பார்க்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே திரைப்படக் கழிவுகளும், நடிகர்களைப் பற்றியதுமாகத்தான் இருக்கின்றன. இதைத் தொகுத்து வழங்குகிறவர்கள் பங்கெடுப்பவர்கள் கான்வென்டில் படித்த தவளைகள். வெறும் இணைப்புச் சொல்லாக மட்டும் தமிழைப் பயன்படுத்துகிறவர்கள். நடிகர்களைப் புகழ்வது மட்டுமே இவர்களுக்கு வேலை. நடிகர்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. ஒரே சார் மயம்தான். அந்த சார் இந்த சார். ஃப்ன்டாஸ்டிக்கா இருந்துச்சு, சூப்பர்பா பண்ணார். டிரைக்டர் சார் சொன்னார். ம்யூசிக் போட்டார் என்று ஆங்கிலச் சொற்களின் பின்னான் "ஆ" சேர்த்து பண்ணுச்சு, இருந்துச்சு, நொட்டுச்சு, புடுங்குச்சு என்றுதான் எல்லா இடத்திலும் பேசுகிறார்கள். இவர்களை தனது முன்மாதிரிகளாகவும், கனவு நாயகர்களாகவும், பொழுது போக்குக்காகவும் கருதுகிறவர்கள் இதையே பெரிய "புதுமைத்துவம்" என்று கருதி முடிந்த வரை ஆங்கிலத்தில் அசிங்கப்படுத்துகிறார்கள். ஃபேஸ்புக் என்பதை முகநூல் என்று சொல்லிவிட்டு, திரைப்படம் என்று சொல்லாமல் சினிமா என்றே பயன்படுத்துகிறார்கள் இணைய எழுத்தாளர்கள். அம்மா என்பதை விட அதிகமாக சினிமா என்ற சொல் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. ஏனென்றால் சினிமாவுக்கு இன்னும் தமிழ்ப்பதம் கண்டுபிடிக்கப்படவில்லை பாருங்கள். 

இதில் ஆங்கிலத்திலேயே படித்து, ஆங்கிலம் பேசுமிடத்தில் வேலை பார்த்து அதனால் அப்படிப் பேசிப் பழகியவர்கள் கொஞ்சம் பேர்தான். ஆனால் இவர்களைத்தான் தமிழார்வலர்கள் அதிகமாக விமர்சிக்கிறார்கள். ஆனால் உண்மையில் தமிழை இழிவும் செய்து புறக்கணிப்பவர்கள் இது போன்ற மேட்டுக்குடித் தமிழர்கள் இல்லை. அரைவேக்காட்டு நடுத்தரத் தமிழர்களைத்தான் நான் குறை சொல்வேன். சாலைகளெங்கும் போகும்போது இருபக்கமும் இருக்கும் கடைகளின் பெயர்களைக் கவனியுங்கள். பெயர்ப்பலகைகளைக் கவனியுங்கள். உணவகம், அச்சகம், கடை, அடுமனை என்றெல்லாம் 95 விழுக்காடு கடைகளில் எழுதியிருக்க மாட்டார்கள். எல்லாமே ஏதாவது சாமி பெயரில் இருக்கும். ஆனால் ஹோட்டல், பிரிண்டிங் பிரஸ், ஸ்டோர்ஸ், பேக்கர்ஸ் என்று எழுதியிருப்பார்கள். இந்த அறிவாளிகளுக்கு என்னதான் தேவை, ஆங்கிலத்தில் எழுதினால் போதாதா ? ஆங்கிலத்தை ஏன் தமிழில் எழுத வேண்டும் ? ஏனென்றால் Hotel, Press, Bakery என்று ஆங்கிலத்தைத் தமிழ் எழுத்துக்களில் எழுதினால் மட்டுமே படிக்கத் தெரிந்த அறிவாளிகள் ஆங்கிலத்தில் எழுதினால் "உ" "ஊ" தான்.. உங்கள் கடைக்கு வந்து வாங்கப்போகிறவர்கள் தமிழ்நாட்டுக்காரர்தான். நீங்கள் ஒன்றும் ஜப்பானிலோ சைனாவிலோ அமெரிக்காவிலோ கடை வைக்க வில்லை. இத்துப் போன தமிழன்தான் வரப் போகின்றான். பிறகெதற்கு ஆங்கிலத்தின் பெயரை தமிழ் எழுத்துக்களில் எழுதி தமிழை அழிக்கிறீர்கள். ஒரு மொழியைப் பேச வேண்டும் கற்க வேண்டுமென்றால் அதை முறைப்படி வேறு வழிகளில்தான் செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு இடையிடையே ஒரு சொல்லைப் புகுத்துவதும் தேவையில்லாத இடத்திலும் ஆங்கிலத்தைப் புகுத்துவதும் என்ன வகை தமிழ்(தாய்மொழி) வெறுப்பு மனநோய் ? குமரன் சில்க்ஸ், ஸ்ரீதிவ்யா பேக்கரி போன்ற பெயர்கள் சில எடுத்துக்காட்டுகள்.

நான் ஒன்றைக் கணித்து வைத்திருக்கிறேன் அது சரியா என்று தெரியவில்லை. இது போன்ற கடைகள், சிறிதும் பெரிதுமான கடைகள், மளிகைக் கடைகள், ஆலைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இது போன்றவற்றை நடத்துகிறவர்களுக்கு வயது எத்தனை இருக்கும் ? நிச்சயமாக 20 ஆக இருக்காது. 30, 40, 50, 60 இப்படி இருக்கும். இவர்களெல்லாம் ஆங்கில வாசனையே இல்லாத அரசுப் பள்ளிகள், தமிழ்வழிக் கல்வி கற்ற நபர்களாக இருப்பர். இவர்கள் தங்களுக்குத் தெரியாத ஆங்கிலம்தான் பெரிது என்றெண்ணிக் கொட்டாவி விட்டவாறே அரைவேக்காடு ஆங்கிலத்தில் பேசியும் பெயர்வைத்தும் தமிழ்ப் புறக்கணிப்புத் துரோகம் செய்வோர்களாக இருக்கின்றனர். மிகச்சிலரே ஊட்டி கான்வென்ட், இன்டர்நேசனல சிலபஸ் வகையான ஆங்கிலக் கல்விகள் கற்றவர்களாக இருப்பர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற தமிழகத்திற்கு வெளியே, இந்தியாவிற்கு வெளியே உலக அளவிலான வணிகம், சேவை, பணிப்பு, நியமம் வகையான நிறுவனங்கள் நடத்துகிறவர்களை விட்டு விடுகிறேன். அவர்களிடம் போய் தமிழில் தொழில் செய்யுங்கள் என்று சொல்ல முடியாது. ஆங்கிலம் என்பது ஏறக்குறைய உலக மொழியாக இருக்கிற காரணத்தால் அவர்கள் ஆங்கிலத்தில்தான் பெயர்வைக்க முடியும் தங்களுக்குள்ளேயான தகவல், ஆவண பரிமாற்றங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் செய்து கொள்ள முடியும். ஆனால் தமிழகத்திற்குள்ளேயே தமிழர்களிடம் மட்டுமே, அதுவும் தனது தெருவுக்குள்ளேயே பணி, வணிகம், தொழில் செய்யும் பிராணிகளுக்கு எதற்கப்பா ஆங்கிலப் பித்து. அதையும் தப்புத் தப்பாக எழுதி மானத்தை வாங்குகிறார்கள். இவர்களிடம் ஒவ்வொருவரிடமும் போய் சண்டை போட்டா தமிழைக் காக்க முடியும். சொல்லுங்கள். தமிழை வளர்ப்பது எவ்வளவு தேவையே அதை விடத் தேவை இருக்கும் தமிழை அழியாமல் காப்பதும். யாரிடமிருந்து தமிழர்களிடமிருந்துதான் என்பது என்ன ஒரு தர்மசங்கடம் பாருங்கள்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

"ஜி" போடாதீங்க "ஜி"

நான் சில நாட்களுக்கு முன்னர் எழுதிய இடுகை - ஜி போடுது கொங்கு நாடு - அதில் தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் நச்சுக் கலாச்சாரமான "ஜி" போட்டுப் பேசுவது பற்றி எழுதியிருந்தேன். ஜி போடுது கொங்கு நாடு என்பதற்குப் பதிலாக ஜி போடுது தமிழ் நாடு என்று தலைப்பு வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அது கோவைப் பகுதிகளில் மட்டும்தான் இருப்பதாக எண்ணியிருந்தேன். நாம் இருக்கும் பகுதிதானே நம் உலகம். ஆனால் தமிழகம் முழுவதுமே இப்படித்தான் பேசத் துவங்கியிருக்கிறார்கள். இனி நானும் வெட்கப்படாமல் ஜி போட்டுப் பேசும் ஒவ்வொருவருடனும்  ஜி போட்டுப் பேசாதீங்க (டா போட்டுப் பேசாதே என்பதைப் போல்) என்று கூறியாக வேண்டும் போல் இருக்கிறது. 

நான் ஈரோட்டில்தான் கல்லூரிப் படிப்பை முடித்தேன். அங்கே இருக்கும் வரை நண்பர்களை அழைப்பதும், நண்பர்கள் என்னை அழைப்பதும் "மாப்ள", "மாப்பி" என்றுதான் இருந்தது. நாங்கள் முடித்த பின்னர் வேலை தேடியலையும் படலம் வந்துவிட முக்கால்வாசிப் பேர் சென்னைக்குப் பொட்டியைக் கட்டினோம். அங்கே போய் இருந்த சில வருடங்களில் இந்த "மாப்பிள்ளை" என விளிப்பது போய் "மச்சான்" என்று அழைத்துக் கொள்ள ஆரம்பித்திருந்தோம். அதற்குப் பிறகு என்னாலும் இந்த மாப்பி என்றழைக்கும் பண்பாட்டை மீட்டெடுக்க முடியவில்லை.

வெள்ளுடை மேன்மக்கள் தொடங்கி அம்மா, ஆத்தா, ஆயா என்பவற்றை மாற்றி மூன்றெழுத்துக்  கெட்ட வார்த்தைகளாக அன்றாடம் பயன்படுத்தும் கீழ்மக்கள் வரை வரையறை இல்லாமல் ஜி போட்டுத் தாளிக்கிறார்கள். கேட்டாலே பற்றிக் கொண்டு வருகிறது. திரைப்படம், நாளிதழ்கள், வார இதழ்கள், நெடுந்தொடர்கள், நேர்காணல்கள் என எல்லா மக்கள் திரள் ஊடகங்களிலும் இந்தப் பண்பாடு படுவிரைவாகப் பரவி வருகிறது. குறிப்பாக தமிழை தமிழாக எழுத முனையும் இணையத் தமிழர்கள், தமிழை சரியாகப் பேசாதவர்கள், தமிங்கில தத்திகள், தமிழை சரியாக பேச முயலாதவர்கள், இடையிடையே தமிழில் பேசுகிறவர்கள் இப்படி எல்லாத் தரப்பினரும் ஜி போடுகின்றனர். 


ஃபேஸ்புக் - ஐ முகநூல் என்று அழைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் அது தவறாயிற்றே. என்ன செய்ய ? இது வரை எத்தனையோ ஆங்கிலச் சொற்களுக்கு இனிய தமிழாக மொழிபெயர்த்துள்ளார்கள். ஆனால் அதையெல்லாம் பயன்படுத்தத் தொடங்கவில்லை தமிழ்நாட்டினர். வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள யாவற்றையும் கிண்டலடித்து மகிழும் தமிழர்கள், கொஞ்ச வருடங்களுக்கு முன்பு வரை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரான நடிகை நமீதா தமிழில் பேசுவதை கண்டமேனிக்குக் கிண்டலடித்தவர்கள், நடிகர் ரஜினிகாந்த் கலைஞர்ஜி என்று அழைத்ததையும் கிண்டலடித்தவர்கள். அதாவது தமிழ் தெரியாதவர்கள் தமிழில் பேச முயற்சி செய்தால் அதையும் கிண்டல் செய்வார்கள். ஆனால் இவர்கள் மட்டும் ஒழுங்காகப் பேச மாட்டார்கள். வெட்டி பந்தாவுக்காக சார் போட்டும், ஜி போட்டும் பேசுவார்கள். ஆனால் தமிழ்த் திரையில் பாருங்கள் அரைவாசி நடிகர்களின் தாய்மொழி தெலுங்காகவோ, மலையாளமாகவோ இருக்கும். அவர்கள் எவ்வளவு சரளமாகத் தமிழ் பேசுகிறார்கள். ஆனால் தமிழ் நடிகர்களில் மற்ற மொழி பேசத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் ? மற்ற மொழிப் படங்களில் நடிப்பவர்கள் எத்தனை பேர் ? நமக்கு அடுத்தவர்களை ஓட்டுவதுதான் பிடிக்கும். நமது மொழியையே ஒழுங்காகப் பேசத் தெரியாமல் அடுத்த மொழியை எங்கே கற்பதாம் ?

அணு உலை எதிர்ப்பாளரும், தமிழ்தேசியவாதியுமான சுப. உதயகுமார் அவர்களும் ஃபேஸ்புக் - இல் "ஜி" குறித்துப் பதிந்த நிலைக் கூற்று

 
அடுத்ததாக நமது முதன்மை எதிரிகளான இந்துத்துவவாதிகள் சமீபத்தில் திறந்து வைத்த கொள்கை முழக்கங்கள் பொறிக்கப்பட்ட சுவர்(பெரியாருக்குப் பதிலடியாம்). இதில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் தமிழ் திரு. அர்ஜூன் சம்பத் என்று எழுதியிருப்பதை மனதாராப் பாராட்டுகிறேன். ஏனென்றால் இவர்கள்தான் சுவரொட்டிகளில் கூட பெயருக்குப் பின்னால் "ஜி"யைச் சேர்த்து எழுதுகிறவர்கள். அந்த "ஜி" யை இங்கே பொறிக்காமல் தமிழ் திரு என்று போட்டிருப்பது பாராட்டத்தக்கது. ஆனால் அதற்கு மேலே ஒரு சின்னம் வைத்திருக்கிறார்கள் பாருங்கள் ஒரு இந்தி "ஓம்". தமிழில் கூட ஓம் என்பதை எழுதலாம் என்று இவர்களுக்கு யாரும் சொல்லித் தரவில்லையா ? அல்லது ஹிந்திதான் "மேல்"  என்று "குறி"ப்பால் உணர்த்த விரும்புகிறார்களா ? 


இவரது பங்காளியான இந்து முன்னணித் தலைவர் ராம கோபாலன் "கோபால்ஜி ஹிந்து முன்னணி" என்றுதான் ஃபேஸ்புக்கில் வைத்திருக்கிறார்.  இது என்ன கேலிக் கூத்து ? கருணாநிதியின் ஃபேஸ்புக் பெயர் "கலைஞர் கருணாநிதி அவர்கள்" என்று எழுதியிருந்தால் எப்படி சிரித்திருப்பார்கள் ? அவரே அவரை அவர்கள் என்று அழைத்துக் கொள்வாரா என்று கேட்பது போல் ராம கோபாலன்"ஜி" - யே ராமகோபாலன்"ஜி" - யை ராமகோபாலன்"ஜி" என்று அழைத்துக் கொள்வாரா என்று கேட்கலாம். ஜி ! என்ன ஜி நீங்க இப்படிப் பண்றீங்களே ஜி !

வெளி மாநிலத்தார் யாரேனும் தமிழ்செல்வன் என்றோ தேன்மொழி என்றோ பெயர் வைக்கிறார்களா ? இல்லை டெல்லியில் யாரேனும் அர்விந்த் கேஜ்ரிவால் அவர்கள், அண்ணன் அமித் ஷா என்றோ அழைக்கிறார்களா ? தமிழர்களுக்கு மட்டும் என்னத்துக்கு இந்தப் பிழைப்பு ? "அக்கா தமிழிசை அவர்கள்" என்றுதான் வட மாநிலத்தலைவர்களும் கூப்பிட வேண்டும் என்று உங்க தேசியச் செயற்குழுவில் தீர்மானம் போடுங்கள் பார்ப்போம். இல்லை அக்காவையும் உங்கள் வடமாநிலப் பங்காளிகளைப் போல அக்கா"ஜி" என்றோ, தமிழிசை"ஜி" என்றோ அழைக்கப் போகிறீர்களா ? 

அடுத்ததாக நமது மதிப்பு மிக்க "நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்" கொண்ட தினமணி ஆசிரியர் ராகுல்"ஜி" என்று தலைப்பிட்டு தலையங்கமே எழுதி விட்டார். தனது நாளிதழில் எப்படி தமிழ் எழுத்தின் மூலமாகவே ஹிந்தித் திணிப்பை பணிவாகப் பரப்பி வருகிறார் என்பதைப் பாருங்கள். 

தினமணி கடைசிப்பக்கம்  - 09- 05 - 2015
 இப்படியே விட்டால் தமிழை ஹிந்திக்கும் ஆங்கிலத்துக்கும், தமிங்கிலத்துக்கும் இடையே தேடிப்பார்த்தாலும் கிடைக்காது போகும். தயவு செய்து ஜி போட்டுப் பேசாதீர்கள், பேசாதீர்கள். இதையெல்லாம் நம் போன்ற இணையப் போராளிகள்தான் முன்னின்று செய்ய வேண்டும்.

Download As PDF
Bookmark and Share

Post Comment

"ஜி" போடுது கொங்குநாடு

தலைப்பைப் படித்து பெரிதாக யாரும் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. ஓ போடுவது ஜே போடுவது ஜால்ரா போடுவது, ஆமாஞ் சாமி போடுவது, சோப்புப் போடுவது, கடலை போடுவது, அறுவை போடுது, ரம்பம் போடுவது, மொக்கை போடுவது, சீன்(scene) போடுவது என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்போம் இல்லையா. அது போலவே டீ போட்டுப் பேசுவது, டா போட்டுப் பேசுவது, சார்(sir) போட்டுப் பேசுவது என்பனவும் நமக்குத் தெரியும். தற்காலத்தில் தமிழ்நாட்டில் பலர் ஒன்றைப் போட்டுப் பேசுகின்றனர். அது என்னவென்பதைத்தான் தலைப்பாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

கொங்கு நாடு கேள்விப்பட்டிருப்பீர்கள். கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, போன்ற சில மாவட்டங்களை சேர்த்து கொங்கு நாடு என்று குறிப்பிடுவார்கள். அந்தப் பகுதிகளில் வழங்கும் தமிழ் வட்டார வழக்கும் கொங்கு தமிழ் என்றே வழங்கப்படுகிறது. "ஏனுங்" "சரிங்" "வாங்" "போங்" "ஙோவ்" அந்த க என்ற எழுத்தைச் சொல்கிறார்களா இல்லையா என்ற குழப்பம் வருகிற மாதிரி உச்சரிப்பார்கள். அதுவே கொங்கு தமிழின் அழகு எனலாம். இதை கிண்டல் செய்கிறேன் பேர்வழி என்று பண்பலை வானொலி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறவர்கள், சில திரைப்படங்கள் ஏனுங்கோ வாங்கோ போங்கோ என்று ஏற்றிச் சொல்லி அப்படிப் பேசுவதுதான் கோயமுத்தூர் தமிழ் என்று உயிரை வாங்கோ வாங்கென்று வாங்குவார்கள்.

என்னுடையது உன்னுடையது, என்பதை என்றது, உன்றது என்றும் சொல்வர். "என்றா கண்ணு சொல்லிப்போட்ட நீயி" என்ற குடும்பம், உன்ற புருசன் என்றெல்லாம் கே.எஸ். ரவிக்குமார் படங்களில் வரும் பெரிய மனுசன்மார்களின் வசனத்தையும் கேட்டிருக்கிறோம். என் + தன் = எந்தன் உன் + தன் = உந்தன் என்றுதான் கவிஞர்கள் பலரும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் உண்மையில் என்+தன் என்பது என்றன் உன்+தன் என்பது உன்றன் என்றுதான் குறிப்பிட வேண்டுமாம்.  (நன்றி - கவிஞர் மகுடேஸ்வரன்) சரி அது கிடக்கட்டும். எல்லாரும் ஒரு விடயம் சொல்வார்கள். கோயமுத்தூர்காரர்கள் மரியாதை உள்ளவர்கள். கோயமுத்தூர் மரியாதைக்குப் பெயர் பெற்ற ஊர் என்றெல்லாம் கூறுவார். மற்ற ஊர்க்காரர்கள் எல்லாம் மரியாதை தெரியாதவர்களா என்ன ? அவர்கள் மொழி நடை, வட்டார வழக்கு அடுத்தவர்களுக்கு மரியாதை தருவதாகத் தெரிகிறது. அவ்வளவே கேட்பதற்கு நன்றாக இருக்கிறது என்பது தாண்டி கோவை மரியாதை தரும் ஊர் என்பதெல்லாம் "தமிழ் உலகின் மொழி", "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய" போன்ற பழமொழிகளைப் போன்றே வெறும் கேட்பதற்கினிய வதந்தி தான் .

கோவையைத் தாண்டி சற்று ஊர்களுக்குச் சென்று பார்த்தான் தெரியும். பேரன் வயது மேல்ஜாதிச் சிறுவனை தாத்தா வயது கீழ்ஜாதிக்காரர் வாங்க போங்கவென்றுதான் அழைக்க வேண்டும். பேரன் வயது மேல்ஜாதிச் சிறுவன் அப்பா வயது கீழ் ஜாதிக்காரரை பெயர் சொல்லியும், சமயத்தில் வாடா போடாவென்றும் அழைக்கும் அளவுக்கு மரியாதை உள்ள ஊர். அந்தப் பெருமையைச் சொல்லி சிலிர்ப்பவர்கள் இதையும் சொல்ல வேண்டும் அல்லவா ? நமக்கு நடப்பை விட கனவுலகில் இருக்கும் மணித்திருநாடுதானே வேண்டும் போலிப்பெருமை கொள்ள ? ஆனால் கொங்கு நாடு என்பது உண்மையில் மணித்திருநாடாக (utopia)  இல்லாமல் (ஜாதிப்) பிணிமிகு நாடாக (dystopia) அன்றோ இருக்கிறது.

தலைப்புக்கு வருகிறேன். நாம் எல்லோரும் மரியாதையா ஒருவரை விழிப்பதென்றால் எப்படி விளிப்போம். வாங்க போங்க என்றும் நபரின் பெயர் சொல்லியும் அல்லவா ? தற்போது கோவையில் பலரும் பெயருக்குப் பின்னால் ஜி போட்டுத்தான் அழைக்கிறார்கள். 20 வயது கூட நிரம்பாதவர்கள் கூட இப்படிப் பேசிப் பழகியிருக்கின்றனர். என்னய்யா இது ஒரு வசதிக்காக மரியாதைக்காகவும் "ஜி" போட்டுப் பேசுவது தவறா என்று சிலர் எண்ணக் கூடும். நாம் எல்லோரையும் சார் போட்டு அழைக்கிறோமே அதுவே என்ன ஒரு இழிவு தெரியுமா நான் மேற்சொன்ன ஜாதி இழிவைப் போலத்தான். ஆங்கிலேயர் நம்மை ஆண்ட போது அவர்களை அண்டிப் பிழைத்தவர்கள் எல்லாம் இந்த "சார்" என்ற சொல்லைப் பயன்படுத்தித்தான் அவர்களிடம் இளித்து நின்றனர். ஆங்கிலேயர் போன பின்னரும் இந்த "சார்" நம்மை விடவில்லை. நமது எஜமானர்களை அழைக்கப் பயன்படுத்தி வருகிறோம். சார் என்றால் என்ன "Slave I Remain" என்று பொருளாம். ("Servant I Remain"  என்றும் பொருள்)

அவ்வப்போது என்னுடைய உறவினர் ஒருவர் மற்றவர்களை பேச்சினைடையே இப்படி அழைப்பார். அவர் பேசிக்கொண்டிருக்கும் நபரின் பெயர் மணி என்றால் " மணி "ங்க" இங்க பாருங்க. அதெல்லாம் சரிதாங்க" இது எனக்கு ரொம்பவும் விநோதமாகத் தெரிந்தது. இது மாதிரி வேறு யாரும் அழைத்ததாகத் தெரியவில்லை.

தேவையில்லாத இடங்களில் கூட, வேண்டுமென்றே ஜி ஜீ என்று பெயருக்கு முன்னரும் பின்னரும் சேர்த்துப் பேசத் துணிகின்றனர்.  திரைப்பட விழாக்களில் நடிகர்கள் மாற்றி மாற்றி அந்த சார் இந்த சார் என்று அறுத்தெடுக்கிறார்கள். அது போலவே இப்போது ஜி போட்டு விளிப்பது மிகவும் சர்வசாதரணமாகி வருகிறது.

இல்லீங்ஜி
ஆமாஞ்ஜி
ஜி என்ன இது
சரிங் ஜீ
வரட்டுமா ஜி
பாய்ஜி

ஆரம்பிக்கும்போதும் "ஜி"ல ஆரம்பித்து முடிக்கும்போதும் "ஜி" யிலேயே முடிக்கிறார்கள். ஒருவரை பெயர் சொல்லிக் கூட அழைப்பதில்லை, ஜீ மட்டுமே போதுமாயிருக்கிறது. பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் நம்மை விட மூத்த பெண்களை நாம் என்னவென்று அழைப்போம். அக்கா என்றுதானே ? ஆனால் தற்போது பாருங்கள் எல்லாரும் 30 வயது நடிகைகள், கொஞ்சம் மூத்த பெண்கள், திருமணமான பெண்களைக் கூட "ஆன்ட்டி" என்றே அழைக்கின்றனர். ஆன்ட்டி என்பது பெண்களை வயதானவர்கள் என்று சொல்லாமல் சொல்லும் கேலிக்குரிய பெயராகிவிட்டது.

முஸ்லிம்களைக் குறிப்பிடும்போது பாய் என்கிறோமே ஏன் ? ஹிந்தியில் பய்யா என்றால் அண்ணா என்று பொருள். முஸ்லிம் என்றாலே உருதுவில் பாய் என்றழைத்து அதுவே அவர்களின் அடையாளமுமாகிவிட்டது. தமிழ் முஸ்லிம்களைக் கூட பாய் என்றே அழைக்கிறோம். முஸ்லிம்களே கூட அவர்களிடையே பாய் என்று அழைத்துக் கொள்வதுமுண்டு. இதே போல் இந்த ஜீ என்பதும் வளர்ந்து வருகிறது. முதலில் வட இந்தியர்கள் மட்டும் பயன்படுத்தியது போய், வட இந்தியர்களிடம் பேசும்போது மட்டும் நாம் பயன்படுத்திய ஜி, தற்போது தமிழர்களிடையேயும் பரவிவருகிறது. நானும் கூட இப்படிப் பேச வேண்டி இருக்கிறது சமயத்தில். இணையத்தமிழர்களும் கூட ஜி போட்டு எழுதுகின்றனர்.

இதன் முக்கியக் குற்றவாளிகளாக இந்துத்துவா இயக்கத்தையே நான் குற்றம் சாட்டுகிறேன். ஏனென்றால் இவர்கள்தான் மொழிவாரி மாநிலம் என்பதையே ஏற்காதவர்கள். நம் பிரதமர் உட்பட. இந்தி, செங்கிருதம் போன்ற மொழிகளைக் கற்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பவர்கள். மாநாடுகள், பாராட்டு அறிக்கைகள், போராட்ட முழக்கங்கள் உட்பட அனைத்திலும் கூட ஜீ என்ற எழுத்தைப் போட்டுத்தான் சுவரொட்டிகள் அச்சடித்து ஒட்டுகின்றனர். சுவரெழுத்துக்களிலும் கூட ஜி என்பது சேர்ந்து விட்டது. ஏன் இவர்கள் அறிவிப்பு முழுவதையும் ஹிந்தியிலேயே எழுதியிருக்கலாமே. அவற்றையெல்லாம் படிக்கும் கொடுமை மற்றவர்களுக்கிருக்காதல்லவா ? இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று எழுதுவார்கள் எப்போதாம் ? சித்திரை ஒன்றாம் நாளுக்கு. அதிலும் அந்த ஓம் என்ற (வடமொழிக்)குறியீட்டை பெரியதாக தமிழெழுத்துக்களினிடையே திணித்து தமிழ் வாக்கியத்தைப் பிளந்து வைப்பார்கள். (இவர்களைக் கண்டால்தான் எனக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறது)

தமிழெழுத்தைப் பயன்படுத்தி ஹிந்தியை வளர்க்கும் இவர்களை போலத்தான் இந்தியா முழுதும் ஹிந்தி பேசாத மாநிலங்களிலும் ஆங்கில எழுத்துக்களின் மூலம் ஹிந்தியத் திணித்து வருகின்றனர். நிகாலோ, சலோ, பச்சோ என்றெல்லாம் ஹிந்திச் சொற்களை ஆங்கிலத்தின் மூலம் எழுதுகின்றனர். விற்பனை பொருட்களின்  பெயர்கள், திட்டங்களின் பெயர்கள்தான் ஹிந்தித் திணிப்பின் வாகனம். இதில் அரசு அல்லாத தனியார் நிறுவனங்களும் அடக்கம்.

இவர்களைப் போலவே இன்னொரு தேசியக் கட்சியான காங்கிரஸ் காரர்கள், இவ்வாறு ஜி சேர்த்து எழுதுவதில்லை. அன்னை சோனியா, அன்னை இந்திரா, தலைவி சோனியா அவர்கள்,  தலைவர் ராகுல், அமரர் ராஜீவ் என்றுதான் எழுதியும் பயன்படுத்தியும், பேசியும் வருகின்றனர். தமிழகத்திலுள்ள திராவிடக் கட்சிகள், ஜாதிக் கட்சிகள் கூட தமிழில்தான் பெயரையும் தலைவர் பெயருக்குப் பின்னர் அவர்கள் என்பதையும் எழுதி வருகின்றனர். கலைஞர் அவர்கள், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இப்படியெல்லாம் பார்த்திருப்போம்.  என்ன எரிச்சலென்றால் பெயருக்கு முன்னர் அடைமொழி எரிமலை, தானைத் தலைவர், இனமானக்காவலர் வைத்து சிரிப்பு மூட்டுவார்கள். பொதுவுடமைக்காரர்களோ தோழர் என்று சொல்லிக் கொள்வர்.

பாரதிய ஜனதாவின் ஆதரவாளர்கள்தான் மோடிஜீ மோடிஜீ என்று பேசியும் எழுதியும் வந்தனர். இது அப்படியே மற்ற தமிழகத் தலைகளையும் குறிப்பிடத் தொடங்கிவிட்டனர். ராமகோபாலன்ஜீ, அர்ஜூன் சம்பத் ஜீ, முருகானந்தம் ஜீ என்று மாறுகிறது. இன்னொரு எரிச்சல் என்னவென்றால் தமிழகம் சாராத தலைவர்களனைவருக்கும் ஜாதிப்பெயரையே தங்களது இரண்டாவது பெயராக வைத்துள்ளனர். பெரும்பான்மையாக இவர்களைக் குறிப்பிட இந்த ஜாதிப்பெயரே பயன்படுத்தப்படுகிறது. மோடி, நாயுடு, ரெட்டி,  பிரகாஷ் காரத், மம்தா பானர்ஜி, பாண்டே, பென், மேனன், நாயர், சாட்டர்ஜி, இப்படியெல்லாம் இருக்கின்ற பெயர்களையே அவர்களைக் குறிப்பிடுகின்றனர். இந்த ஜாதிப்பெயரின் பின்னால்தான் ஜீ போடுகிறார்கள். ஆந்திராவில் பெரியாரை ராமசாமி நாயக்கர் என்றுதான் அறிந்து வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஜாதிப்பெயரை சேர்த்துக்கொள்வது மட்டும்தான் இல்லை. மற்றபடிக்கு ஜாதி உணர்வெல்லாம் ஆகாவென்றுதான் இருக்கிறது. ஜாதிப்பெயர் பின்னால் இருக்கும் மற்ற மாநிலத்தில் ஜாதி உணர்வே இல்லாமல் இருப்பவர்களும் உள்ளனர். இருப்பினும் மற்ற மாநிலத்தவரைப் போல் ஜாதிப்பெயரை சேர்க்காமல் இருப்பதை நாம் பெருமையாகவே கருத வேண்டும். ஆனால் கெடுவாய்ப்பாக இப்போது தமிழ்நாட்டிலும் ஜாதிப்பெயரைப் பின்னால் சேர்த்துக் கொள்வதை ஃபேஸ்புக்கில் தொடங்கியுள்ளனர். ஜாதியை இனமென்றும் சொல்லிக் கொள்வதால் அதன் பெயரில் அழைத்துக் கொள்வதையே விரும்புகிறார்கள் சிலர். நாளை இவர்கள் பெரிய தலைவர்களாக வளரும் போது இவர்களைப் பார்த்து எல்லா ஜாதிக்காரர்களும் தங்களது பெயரைப் பின்னால் இணைத்துக் கொள்வர். அப்போது இந்த "ஜீ"யும் சேர்ந்து கொள்ளும். அன்றைய நாளினைக் கற்பனை செய்து கொண்டால் இப்படி இருக்கும். "முத்தரையர் ஜி யின் கருத்துக்கு கவுண்டர் "ஜி" அவர்கள் கண்டனம்",  "நாளை தேவர்ஜி பேசுகிறார்" "மதிப்புக்குரிய செட்டியார்ஜி இறந்தார்", "ஐயர் ஜி அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது" அறிவிக்கப்பட்டது" "மள்ளர்ஜி நாளை மதுரை வருகிறார்", "கள்ளர்ஜி அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றார்" "நாடார்ஜீ மாலை அணிவித்து வரவேற்றார்". 

இதையெல்லாம் கேட்க உங்களுக்கு ஆவலாக இருக்கிறதா ? "நமஸ்காரம்" என்பதே தமிழ்நாட்டில் பரவலாக இருந்தது. அதைத் தமிழில் வணக்கம் என்று மாறுவதற்கு தெருவில் நின்று போவோர் வருவோரிடமெல்லாம் வணக்கம் சொல்லி அதை மாற்றியிருக்கிறார்கள் நமது (திராவிட இயக்கத்தவர்)முன்னோர்கள். இதெல்லாம் இனி நிலைக்குமா ? ஏனென்றால் உலகத்திலேயே பேபி ஷாலினி என்று குழந்தைக்குப் பெயர் வைத்தது தமிழனன்றி வேறு யார் என்று எனக்குத் தெரியவில்லை.
Download As PDF
Bookmark and Share

Post Comment

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பில் கோவை அதிர்ந்த போது


தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் - இல் வெளியான ஒரு சிறு கட்டுரை. கோயமுத்தூரைச் சேர்ந்த ஒரு ஹிந்தி எதிர்ப்பு மொழிபோராளியைக் குறித்து சிறு கட்டுரை வெளியிட்டிருந்தது.  அறியப்படாத கொங்கு நாட்டு மொழிப்போர் வீரர்கள் - ஈகியர்கள் குறித்து ஒரு சிறு பதிவாக இருக்கும் என்று மொழிபெயர்த்தேன். பிழை நேர்ந்திருப்பின் வருந்துகிறேன்.

இளங்கீரன் - படம் நன்றி - தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்


தமிழகத்தில் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் முடிந்து 50 வருடங்கள் கடந்த பின்னரும், போராட்டக் காரர்களால் ஒரு காவலர் தீ வைத்து எரிக்கப்பட்டதை உலகம் நினைவில் வைத்திருக்கிறது. ஆனால் கோவையைச் சார்ந்த ஒரு காவலர், தான் ஒடுக்கும் சக்தியாக இருப்பதாக வருந்தி தனது சீருடையையே (காவலர் பதவியைத்) துறந்தார் என்பதை பலர் அறியவில்லை.

மனசாட்சி உறுத்திய அக்காவலர் காளிமுத்து, போராட்டக்காரர்களை நோக்கித் துப்பாக்கியால் சுடும்போது தன் கண்களை மூடிக் கொண்டவர். "அவர் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் மாணவர் இயக்கத்தின் இரகசிய ஆதரவாளர். அந்நிகழ்வின் பின்னர் தனது பணியை உதறிவிட்டு ஒரு தனியார் பேருந்தில் நடத்துனராக வாழ்க்கையை நடத்தினார் என்று நினைவு கூர்கிறார் இளங்கீரன் எனும் கோவையைச் சேர்ந்த பிரபலமான ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு மாணவர் இயக்கத் தலைவர். இவர் பேரூரிலுள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்லூரியில் தமிழாசிரியர் பட்டம் படித்துக் கொண்டிருந்தவர். அந்நாளில் நகரமே தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தது, அரசு இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டியிருந்தது என்கிறார். பூலைமேடு (இன்று பீளமேடு என்றழைக்கப்படுகிறது) தண்டபாணி என்ற பிஎஸ்ஜி தொழில்நுட்பக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர் நஞ்சுண்டு இறந்தார். மொழிப்போராட்டத்தில் எண்ணிறந்த மாணவர்கள் இறந்ததால் மனமுடைந்த அவர் இம்முடிவைத் தேடிக் கொண்டார்.

ஏ துரைக்கண்ணு என்று அரசுக் கல்லூரி மாணவர் தலைவர், கோவை நகர ஹிந்தி எதிர்ப்பியக்கத்தின் செயலாளராகவும், இளங்கீரன் தலைவராகவும் இருந்தனர். தலைமறைவாக இயங்கிய மாணவர்களைக் காவல்துறையினர் தேடிக் கொண்டிருந்த போது, நாங்கள் உப்பிலிபாளையத்திலுள்ள காவலர் குடியிருப்பிலேயே பதுங்கியிருந்தோம். காவலர் காளிமுத்து தனது இல்லத்தில் அவர்களுக்குத் தஞ்சம் அளித்தார்.

தலைமை அஞ்சல் அலுவலகம் அமைந்திருக்கும் சாலையில் மறியல் போராட்டம் செய்த போது மைசூரிலிருந்து வந்திருந்த ஆயுதப் படைக் காவலர் எனது முடியைப் பிடித்து அடித்து, நான்தான் ரிங் லீடரா என்று கேட்டார். ரிங் லீடர் என்பது அந்நாட்களில் குழுத் தலைவர் என்று பொருள்படும். கோவையில் இராணுவமே வந்திறங்கிய போதும் மாணவர்கள் அஞ்சவில்லை என்று குறிப்பிடுகிறார் இளங்கீரன். அந்நாளில் வெளிவந்த தமிழ் நாளிதழ் ஒன்று இப்படித் தலைப்புச் செய்தி வெளியிட்டதாம். "சுட்டுத் தள்ளினார்கள்... சப்பாத்தியை ! "(யாரையும் சுடவில்லை என்பதை அப்படிக் கிண்டலடித்ததாம்).

இளங்கீரன் ஒரு கவிதைத் தொகுப்பைக் காட்டினார். அது பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்களால் எழுதப்பட்ட ஹிந்தித் திணிப்பு-எதிர்ப்பு கவிதைகளின் தொகுப்பாகும். அதன் விலை 25 பைசா. அதன் தலைப்பு "ஜனவரி 26 இல் மானம் கெடும் தமிழர்க்கு"

அந்நூலின் தொகுப்பாசிரியர், துரைக்கண்ணு கீழ்க்கண்டவாறு அணிந்துரை எழுதினார். "எப்போது தோன்றியது என்று கண்டறிய முடியாத பழம்பெருமை வாய்ந்த தமிழ் என்ற மொழி, இந்நாளில் (26.1.1965) இறந்து விடும்". இந்தச் சிறு கவிதைத் தொகுப்பு என்பது கோவை கல்லூரி மாணவர்களின் கூட்டு முயற்சியாகும். நாங்கள் ஹிந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை ஆனால் ஹிந்தியை ஆட்சி மொழியாக்குவதற்கு எதிர்க்கிறோம். என்பதே அதன் சாரமாக இருந்தது.

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாக இயங்கிய ஏ ராமசாமி என்பவர், இந்திய மொழிகளின் சுதந்திரப் போராட்டம் என்ற தனது நூலில் சொல்கிறார். துரைக்கண்ணுவால் தலைமை தாங்கப்பட்ட ஒரு போராட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தியது. அதில் நான்கு மாணவர்கள் படுகாயமுற்றனர். அதனால் ஆத்திரமுற்ற மாணவர்கள், அதே நாள் மாலை 6 மணியளவில்
Aya Toofan என்ற ஹிந்திப்படம் திரையிடப்பட்ட நாஸ் திரையரங்கத்தை தீவைத்துக் கொளுத்தினர். அங்கே விரைந்த காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

என்னது பாஜக தமிழை ஏற்றுக் கொண்டதா ?

அய்யடா !! இந்திய மக்கள் கட்சி (பிஜேபி) தமிழைப் பெருமைப்படுத்தறாங்களாம். ஏன் இப்போதுதான் தமிழின் பெருமையை புரிந்து கொண்டீங்களாக்கும். சரி இருக்கட்டும். இந்த அறிவிப்பில் ஏதாவது நேர்மை இருக்கிறதா ?

இதுவரை ஹிந்தியை, செங்கிருதத்தை திணித்த போதும், பொய்களை அவிழ்த்து விட்ட போதும் ஒன்றுமே நடக்காதது போன்று கள்ள மௌனம் காத்தவர்களும், தமிழ் வெறியர்களும் சேர்த்து இதை "பாத்தியா பாத்தியா இப்ப என்ன சொல்வ? என்று  கொட்டி முழக்கலாம்.

ஹிந்தி மொழியையே திணிப்பதற்கும், திருக்குறளைக் கற்றுக் கொடுப்பதற்கும் வேறுபாடு இல்லையா ? 

ஹிந்தி மொழியை நாம் கற்க வேண்டும். பதிலுக்கு அவர்கள் திருக்குறள் பாடமும் திருவள்ளுவர் நாள் விழாவும். நீ அரிசி கொண்டு வா நான் உமி கொண்டு வரேன் ஊதி ஊதி ரெண்டு பேருந்திங்கலாம்.

இப்படிச் சொன்னால் புரியும், நீங்கள் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள். நாங்கள் ஹிந்தியில் ஒரு பெரிய அறிஞரின் இலக்கியத்தின் ஒரு பகுதியை பாடமாக வைத்துக் கொள்கிறோம். எப்படி வசதி ?

சரி தமிழல்லாத மற்ற மாநிலங்களில் இது போல் அவர்கள் மொழிக்கும் மொழிசார்ந்த இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குமா நடுவணரசு ?

ஹிந்தித் திணிப்புக்கு இந்த திருவள்ளுவர் விழாவும் டேலியாகாது என்ற போதும், இது தவறே.

அட ராமா !! இனி இங்க நம்ம இந்தியைத் திட்ற மாதிரி அங்க தமிழையும் வள்ளுவனையும் திட்டுவார்கள். தேவை எல்லா மொழிகளுக்கும் சமத்துவமே.

தமிழைப் புகழ்வதாலோ அடுத்தவன கொண்டாடச் சொல்வதையோ, படிக்கச் சொல்வதையோ ஏற்க  முடியாது. ஒரு மொழி பேசுவோர் மற்றதை கற்பது இயல்பாக நடக்க வேண்டும். நடக்கும். எப்போது ? எல்லா மொழிகளும் சமமாக நடத்தப்படும்போது.

இங்க இந்தித் திணிப்பும் வேண்டாம் அங்க தமிழ் வள்ளுவத் திணிப்பும் வேண்டாம். சம்பந்த சம்பந்தமில்லாமல் எதற்கெடுத்தாலும் அப்படிக் கொண்டாட வேண்டும் இதைக்கொண்டாட வேண்டும் என்று அறிவிப்பு.

முதலில் உங்கள் ஹிந்தி, சம்ஸ்கிருத  வெறியைக் கைவிடத் தயாரா  ?

ஹிந்தி விசயத்தில் காங்கிரசுக்கு எதிராக நிலைப்பாடு எடுங்களேன் பார்ப்போம்.

ஹிந்திதான் நாட்டின் முக்காவாசிப் பேர் பேசுகிறார் என்றெல்லாம், செங்கிருதம்தான் எல்லாவற்றுக்கும் மேல் என்று நம்பிக்கையுடையவர்களிடம் எல்லா மொழியும் சமமென்று சொல்லுங்களேன். திருந்த வேண்டியது நீங்கதான்.

கால் நூற்றாண்டாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தி பெரிய அளவில் கூட்டம் சேர்க்க இயலவில்லை. தமிழ் இந்துக்கள் வந்தமா சாமி கும்பிட்டமா என்று போனார்கள். இவர்களுடன் இணைந்து ராமன் கோயில் வேண்டுமென்று கலவரத்தில் ஈடுபடவில்லை. இவர்களுக்கு இவர்களே குண்டு வைத்தும் பார்த்தார்கள். வெறுப்பை விதைக்க முயன்று பார்த்தார்கள். கடைசியாக மோடி அலையில் அள்ளிவிடலாம் என்று நினைத்தார்கள். அதிலும் எதிர்பார்த்தளவு இல்லை. தூய இந்தியா என்ற இவர்களது நகைச்சுவை சுய விளம்பரக் கைப்படம்(செல்ஃபி) எடுத்து ரஜினி கமல் என்று அனைவரையும் டாக் செய்து பார்த்தார்கள். இப்போது ஆண்ட பரம்பரைக் கனவில் திளைக்கும் மேல்ஜாதி வெறிக் கூட்டத்தை வளைக்க ராஜ ராஜ சோழனைக் கொண்டாடி உள்ளே புகப் பார்க்கிறார்கள். அதன் அடுத்த முயற்சியாகத்தான் திருவள்ளுவரைப் புகழ்ந்து தமிழனின் நெஞ்சை நக்கி நஞ்சை விதைக்கப் பார்க்கிறார்கள்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

ஸ்ரீ தமிழ் நாடு


இலங்கைத் தீவு முன்பு சிலோன் எனப்பட்டது. அங்கே வாழும் பெரும்பான்மை மொழியினரின் மொழி/இனவெறி காரணமாக சிறுபான்மையினராக இருந்த தமிழர்கள் மீது வன்முறை செலுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கலவரம் தொடங்கிய ஆரம்ப வருடங்களில் தமிழர்கள் மீது கொடிய கொலை வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட சிங்களப் பேரினவாத வெறி காரணமாக தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறை கொலைகள் ஏவப்பட்டன. அதன் விளைவாக தமது வன்முறையை வெவ்வேறு கொடிய வழிகளில் வெளிப்படுத்திய காட்டுமிராண்டிகள் கொலை செய்யப்பட்ட தமிழ்ப் பெண்களின் மார்பகங்களின் மீது ஸ்ரீ என்ற சிங்கள எழுத்தை எழுதித் தனது வெறியைத் தணித்துக் கொண்டனர் என்று படித்திருக்கிறோம்.  இன்றும் ஸ்ரீலங்கா என்ற அந்நாட்டின் பெயர் அதன் இனவாதத்தைப் பறைசாற்றி நிற்கிறது. நிற்க.

தற்போது தமிழகத்தில் எங்கெங்கு காணினும் ஒரு நச்சுக் காளானைக் காண முடிகிறது. வீதிகளெங்கும் நிறைந்திருக்கும் கடைகளின் பெயர்ப்பலகைகளைக் கண்டால் கடைகளின் பெயர்களில் முன்னோ பின்னோ ஒட்டிக் கொண்டிருக்கும் "ஸ்ரீ". குழந்தைக்குப் பெயர் வைப்பதிலிருந்து பெரும் நிறுவனங்களுக்குப் பெயர் வைப்பது வரையில் ஸ்ரீ என்ற ஒரு எழுத்து இல்லாமல் பெயரையே காண முடிவதில்லை. எல்லாம் சிவமயம் என்று கேட்டிருக்கிறோம். இங்கே எல்லாம் ஸ்ரீ மயமாகி இருக்கிறது. ஸ்ரீ என்ற எழுத்தில் பெயர் இருந்தால் நன்மை நடக்கும் என்ற மூட நம்பிக்கையே இதற்குக் காரணம். இந்த மூட நம்பிக்கையைப் பரப்புவதோடு அல்லாமல், சமஸ்கிருதத்தையும் திணிக்கிறார்கள்.

இப்போது பிறக்கும் குழந்தைகளுக்கு வட ஹிந்தியர்கள் 70 வருடங்களுக்கு முன்பே வைத்திருக்கும் பெயர்களைத்தான் வைக்கிறார்கள் தமிழகத்தினர். இன்னும் சில முண்டங்கள் நடிகைகளின் பெயர்களையும் பயங்கரமான ட்ரென்டியாக, ஃபேஷனாகக் கருதி வைக்கிறார்கள். 5 வருடங்களில் அந்த நடிகையே இருக்க மாட்டார். அந்த பெயரும் காணாமல் போகும். எனக்குத் தெரிந்து மட்டும் மூன்று பேர்கள் தங்கள் குழந்தைக்கு ஹன்சிகா என்று பெயர் சூட்டியுள்ளனர். எனது நண்பன் ஒருவன் பெயர் கணேஷ்குமார். அவனது அப்பா ஏன் அவனுக்கு அந்தப் பெயரைச் சூட்டினாரென்று பெயர்க்காரணம் சொன்னான். அந்தப் பெயருக்கு வட இந்தியாவில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்குமாம். தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியாவுக்கு வேலை தேடிப்போன காலத்தில் உருவான மனநிலை, அவனுக்குப் பிடித்த மாதிரி பெயர் வைத்துக் கொண்டு பல்லிளித்தாள் அவன் உடனே அருள் பாலிப்பானா ? வட இந்தியர்கள் தென்னிந்தியாவுக்கு வேலை தேடி வரும் இக்காலத்திலும் தொடர்கிறது இந்த முட்டாள்தனம். போன தலைமுறைகளில் அதிக அளவில் வைக்கப்பட்ட சுரேஷ், ரமேஷ், தினேஷ், ஷங்கர், ராஜேஷ் போன்ற ஹிந்தித் திரைப்படம் பார்த்து பெயர் வைத்த மூடத்தனத்திலிருந்து இன்றைய தலைமுறையினர் மாறிவிட்டனர். இவர்கள் வைக்கும் பெயர்களைக் கேட்டால் வருங்காலத்தில் பாருங்கள் "நம்மை விட ஹிந்தி மொழியுணர்வு மிக்கவனாக இருப்பவன் தமிழன்" என்று வட இந்தியர்களே தலை சுற்றிக் கீழே விழுவார்கள்.

தமிழ்நாட்டில் வைக்கப்பட்ட பெயர்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், தொலைக்காட்சிகளில் வரும் குழந்தைகளுக்கான பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லும் நிகழ்ச்சியைப் பார்த்தால் தெரிந்து விடும். ஜாதியையும் அதன் சடங்குகளை மட்டும் ஒரு அங்குலம் விட்டுக் கொடுக்காமல் பின்பற்றும் தமிழர்கள் தமிழில் பெயர் வைப்பதை மட்டும் இழிவாகக் கருதி சமஸ்கிருதப் பெயர்களை வைக்கின்றனர். கண் தெரியாதவன் இருட்டுக்குள் கருப்புப் பூனையைக் கண்டதாக சொல்வது போல அடுத்த வீட்டுக்காரனைப் பார்த்தே தன்னை ஒப்பிட்டுக் கொண்டு வாழும் இவர்கள் பெயர் வைக்கவும் என்ன ஏதென்றே தெரியாமல் வாயிலேயே நுழையாத பெயரை வைக்கின்றனர்.  கட்டாயமாக ஹ ஷ, ஜ என்ற எழுத்துக்கள்  வழியில் தொடங்கும் பெயரையோ அல்லது அந்த எழுத்துக்களில் ஒன்றாவது பெயரின் இடையிலாவது வந்து விட வேண்டும். ஸ்ரீ என்ற எழுத்தை முன்னர் சேர்த்து வைப்பதில் பெயரியல் விதிகள் இடிக்கிறதா ? ஸ்ரீ நந்தினி /ஸ்ரீ வித்யா என்று வைக்க விரும்பியவர்கள் வித்யா ஸ்ரீ/நந்தினி ஸ்ரீ என்று வைத்துக் கொள்கிறார்கள். குழந்தைகளுக்குப் பெயர் வைப்பது மட்டுமல்ல பெரிய தொழிற்சாலைகளோ, பள்ளி, கல்லூரிகள் தொடங்குகிறவர்களும் முன்பு ஸ்ரீ என்ற எழுத்தை ஏதோ கட்டாயமாக சேர்க்க வேண்டும் என்பது போல் சேர்த்துக் கொள்கின்றனர்.

இதையெல்லாம் (முதல் பத்தியை இங்கு தொடர்பு படுத்திக் கொள்ளவும்) பார்க்கும் ஈழத்தமிழன் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவான். சிங்களனோ அடடா ஈழத் தமிழனுன்களை விட இவனுகளாகவே நம்ம வழிக்கு வந்துட்டானுகளே என்று இன்ப அதிர்ச்சி அடைவான்.

சரி மனிதர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும்தான் மட்டும்தான் வைக்கிறார்களா என்றால் இல்லை. தங்கள் குலதெய்வங்களுக்கும், இன்ன பிற கடவுளின் பெயருக்கு முன்னரும் ஸ்ரீ என்ற எழுத்தை சேர்த்துக் கொள்கின்றனர். ஏன் கடவுளுக்கே பெயரை மாற்றுகிறோமே அந்த கடவுளிடம்தான் தங்கள் தலையெழுத்தை மாற்றும்படி வழிபாடு செய்கிறார்கள் கடவுளின் பெயரையே மாற்றி வைக்கும் பக்தர்கள். என்னவொரு முரண்நகை. செல்லாண்டியம்மன், கோட்டை மாரியம்மன், பிடாரியம்மன், முத்துமாரியம்மன், அய்யன் என எல்லா அம்மன்களும், ஆத்தாக்களும், அப்பன்களும் தங்கள் திருப்பெயரின் முன் ஸ்ரீயுடன்தான் காட்சி தருகிறார்கள். எல்லாவற்றையும் மீறும் வகையில் தமிழ்க்கடவுள்களான சிவனுக்கும், முருகனுக்கும் கூட ஸ்ரீயைச் சேர்த்தாயிற்று. திருச்செந்தூர் முருகன் பேக்கரி/ட்ராவல்ஸ்/வாட்டர் சப்ளையர்ஸ் என்ற பெயர்களுக்குப் பதிலாக ஸ்ரீ செந்தூர் முருகன் என்று எழுத்துக்களைக் காண நேரிடுகிறது. ஸ்ரீ சிவன் என்ற பெயரைக் கண்டு எங்கே முட்டிக் கொள்வது என்று தோன்றியது. ஆழ்வார்களும், நாயன்மார்களும் உங்களை மன்னிக்க மாட்டார்கள். திருமறைக்காடு வேதாரண்யம் ஆனது போதாதா ?

தமிழ் தனித்தியங்கும் தன்மை பெற்றிருந்தாலும் பிறமொழி சொற்களையும், எழுத்துக்களையும் பயன்படுத்துவது தவிர்க்க முடியாது. வடமொழிப்பெயர்கள் தமிழ்த் தன்மையுடன் இருப்பதற்காகத்தான் எடுத்துக்காட்டாக ராம் என்ற பெயரை முன்னர் "இ" சேர்த்தும் இறுதியில் "அன்" விகுதியும் இராமன் சேர்த்துத் தமிழாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த தமிழ் வெறுப்பாளர்கள் சாதாரணமாக இருக்கும் சராசரி தமிழ்ப் பெயர்களையுமே கூட செங்கிருத ஒலியமைப்புடன் வரும்படி மாற்றிக் கொள்வதில் பெருமை கொள்கிறார்கள். மிகச் சொற்பமான அளவிலேயே தமிழ் செல்வன், தமிழரசன், தமிழ் செல்வி, தமிழரசி வகையிலான பெயர்கள் வைக்கப்பட்டு வந்தன. ஆனால் இந்த சமஸ்கிருதப் பித்து வெள்ளமெனப் பாய்ந்து பரவி வருகிறது.

ஆங்கிலப் படங்களை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். அதில் நகைச்சுவையைக் கூட்ட வேண்டும் என்பதற்காக வைக்கப்படும் "அது நம்மள நோக்கித்தான் வருது", எல்லோரும் தாழ்வான பகுதியை நோக்கி ஓடுங்க" நீங்க வடக்குப் பக்கம் போங்க" போன்ற வசனங்களை எல்லோரும் பேசிச் சிரித்து மகிழ்கின்றனர். அது மொழிமாற்றம் செய்ததன் குறையல்ல. உண்மையிலேயே ஆங்கிலப் படங்களில் பேசும் வசனமே அதுதான். நமக்கு ஆங்கிலம் தெரியாத காரணத்தால் அவர்கள் என்னமோ பயங்கரமான விஞ்ஞானம் பேசுவதாக நினைத்துக் கொள்கிறோம். அது போலத்தான் இந்த சம்ஸ்கிருதப் பெயர்களும் வெறும் கடவுளின் பெயர்களும், வினைப் பெயர்களும் தான். அது நமக்குப் புரியாத மொழியில் இருப்பதால் அது நமக்கு மிக உயர்ந்ததாகத் தெரிகிறது,

ஸ்ரீ என்பது திரு எனப் பொருள்படும் சம்ஸ்கிருத ஹிந்தி சொல்தானே. இப்போது எல்லோரும் சரிங்க் "ஜி" வாங்க"ஜி" என்று வயது பார்க்காமல் மரியாதை நிமித்தம் சொல்லப்படுவது போல.

ரஜினிகாந்த் பேசும் போது கலைஞர் "ஜி", மோடி"ஜி" என்பாரல்லவா .


அதுவே கமல் போன்றவர்கள் பேசும்போது பாலச்சந்தர் ஐயா "அவர்கள்", சிவாஜி ஐயா அவர்கள் என்பார். 


தொலைக்காட்சி விவாதங்களில் "தலைவர் கலைஞர் அவர்கள்" "புரட்சித் தலைவி அம்மா அவர்கள்" என்பனவற்றின் எளிய வடிவம்தான் ஜி என்பது.

அது போலவே திரு.கருணாநிதி, திரு.வைகோ திரு. நரேந்திரமோடி என்று சொல்வோம் (திருமிகு, திருமின் என்று பெண்பாலுக்கு இடலாம்)


ஹிந்திப் பித்துக்குளிகள் தமிழில் அடிக்கும் சுவரொட்டிகளிலேயே "ஸ்ரீ நரேந்திர மோடி ஜி அவர்கள்" வருகை புரிகிறார் என்று போடுவார்கள். வீரத் துறவி "ராமகோபாலன் ஜி" உரையாற்றுகிறார் என்றும் போடுவார்கள்.

குழந்தைக்கு பெயர்வைக்கிறவர்கள் ரொம்ப விவரமாக அந்தப் பெயருக்கு என்ன பொருள் என்று கேட்டுத்தானே வைக்கிறார்கள் இல்லையா. ஸ்ரீ - க்கு மட்டும் சும்மா புனிதம் என்று விட்டுவிடுகிறார்களா. ஸ்ரீ க்கு என்ன பொருளென்று வினவினால் திரு என்று வரும். அந்த திரு என்ற சொல்லைத்தான் எல்லாப் பெயர்களுக்கும் மெனக்கெட்டு வைக்கிறார்களா ? ஸ்ரீமதி என்றெல்லாம் வைக்கிறார்களய்யா.

வித்யா விகாஸ் என்று ஒரு பள்ளி இருக்கிறது.  பெயரின் பொருளென்ன. ஒன்றுமில்லை கனவான்களே !


வித்யா - கல்வி (அறிவு, ஞானம், கலை போன்ற பல பொருள்கள் தரும் சொல்) விகாஸ் - வளர்ச்சி, முன்னேற்றம், போன்ற பலபொருள்கள் கல்வி என்ற பொருளும் இதில் அடக்கம்)

 கல்வி வளருமிடம், அறிவு முன்னேற்றம் இவ்வளவுதான் அதன் பொருள். இதையே தமிழில் சொல்லும்போது இவ்வளவுதானா என்று வெத்தாகத் தோன்றுகிறது. சம்ஸ்கிருதத்தில் வைத்தால் கெத்தாக இருக்கிறது

நமக்குத் தெரியாத ஒன்றை உயர்வாக நினைக்கும் போக்குதான் இப்படியெல்லாம் செய்ய வைக்கிறது. இன்னும் சிலவற்றைப் பார்ப்போம்

சிவபெருமான் = ஷிவா
பிள்ளையார் = விக்னேஷ், கணேஷ், விநாயக்.. 

(மூர்த்தி என்றால் சிலை, கணேஸ் மூர்த்தி என்றால் வியாகர் சிலை, நாராயண மூர்த்தி என்றால் பெருமாள் சிலை என்று கிண்டல் செய்யலாம். எப்படி அருமையாக இருக்கிறது பாருங்கள்)
காளியாத்தா, கொற்றவை - துர்கா
அம்மன் - அம்பா
கலைமகள் - சரஸ்வதி
திருமால் - விஷ்ணு

இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். குமாரன் என்று தமிழ்த்தன்மையுடன் இருந்ததை மாற்றி குமார் என்று வைத்தார்கள். சிவக்குமார் என்ற எனது பெயரை யாராவது ஷிவா- என்று அழைத்தாலோ, shiva என்று எழுதினாலோ எரிச்சலாக இருக்கிறது. ஆனால் நிறைய பேருக்கு அதுதான் இயல்பாக இருக்கிறது. நடிகை ஸ்ரேயா-வின் பெயர் உண்மையில் ஸ்ரீயா என்பதுதான். அதை ஊடகப் புண்ணியவான்கள் எப்படி மாற்றி வைத்திருக்கிறார்கள் பாருங்கள். எங்கோ தொடங்கி எங்கோ வந்து விட்டேன். திரும்புகிறேன்.

நீலம், பச்சை, சிவப்பு போன்ற கண்ணைப் பறிக்கும் ஆடை அணிபவர்களை எள்ளி நகையாடும் விடலைகள் அதே நிறத்தில் ஃபேஷன் என்று வரும்போது பெருமிதத்துடன் அணிவதில்லையா அது போலவே பெயர் வைக்கும் நகைச்சுவையும் அரங்கேறுகிறது.

தமிழ் மொழியின் வழியில் வந்த இந்துக்களே இப்படி என்றால் எப்போது கிறித்தவ, இஸ்லாமியர் தமிழில் பெயர் வைக்கத் தொடங்குவது ?.

குறிப்பிட்ட அளவு கிறிஸ்தவப் பெயர்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால் மதம் சார்ந்த நூல்களை கருத்துக்களை சிறப்பாகத் தமிழ்ப்படுத்தியிருந்தாலும் இஸ்லாமியர் யாரும் (மணவை முஸ்தபா என்ற தமிழறிஞர் தவிர) வைத்த மாதிரி தெரியவில்லை. அப்படிப் பெயர் வைப்பது ஹரம் ஒன்றும் இல்லைதானே. இன்னும் ஏன் அன்பன் என்று இல்லாமல் ஆஷிக், மணிமகள் என்றல்லாமல் ஃபாத்திமா என்றெல்லாம் வைக்கிறீர்கள்.

இப்படியே ஸ்ரீ பைத்தியம் பிடித்து அலையும் தமிழ்நாட்டினர் கொஞ்சகாலத்தில் ஊர்ப்பெயர்களையெல்லாம் ஸ்ரீப்பூர்,  ஸ்ரீநெல்வேலி, ஸ்ரீசெந்தூர் என்று மாற்றுவார்கள். தமிழ் நாட்டின் பெயரையும் ஸ்ரீ தமிழ் நாடு என்று மாற்றுவார்கள் இல்லை ஸ்ரீ நாடு என்றே மாற்றுவார்கள். ஏன் தமிழ் மொழியின் பெயரையுமே ஸ்ரீ தமிழ் என்று அழைப்பார்கள் இல்லை இல்லை ஸ்ரீமிழ் என்றே ஆக்குவார்கள்.

வாழ்க ஸ்ரீ வளர்க ஸ்ரீ !

 
Download As PDF
Bookmark and Share

Post Comment

ஹிந்தித் திணிப்பு - பாஜகவின் நாடித்துடிப்பு - பின்பு நடிப்பு

மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டுமல்லவா ? தமிழ்நாட்டில் நாம் சொல்வது தமிழர்கள் உட்பட ஹிந்தி பேசாத மக்களின் மீதான ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பேயன்றி, தமிழர்கள் இந்தி மொழி கற்பதை எதிர்ப்பதன்று.


நாட்டின் இருக்கு பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வாக ஒரு இரட்சகர் வருவார் என்றெண்ணிக் காத்திருந்த இந்தியர்கள், நரேந்திர மோடி என்று பெருமாளாக்கப்பட்ட ஈறை நம்பி வாக்களித்து எக்காலத்திலுமில்லாத அளவுக்கு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரவைத்தனர்.

அன்னார் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததும் உத்தமபுத்திரர் மஹிந்தரையும் மற்ற நாட்டு அதிபருடன் அழைத்து வந்து ஈழத்தை வைத்து படம் காட்டிக் கொண்டிருக்கும் பத்தாம்பசலிகளுக்கும், அறிவிலிகளுக்கும் அதிர்ச்சியளித்தார். பாஜகவின் உண்மை முகத்தை அறிந்தவர்களுக்கு அது பெரிய ஏமாற்றமோ அதிர்ச்சியோ அளிக்காது. ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்களுக்கும், வேறு உள்நோக்கங்களுடன் ஆதரித்தவர்களுக்கும் (ஜாதிவெறி/ இந்துத்துவா + ஈழ ஆதரவு என கலந்து கலக்கும் நபர்கள்) அது கசப்பாக இருந்தது. அவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பார் என்ற அளவுக்கெல்லாம் நம்பும் ஆட்களும் இருக்கிறார்கள்.

அடுத்து ரயில்வே துறையை தனியார் மயமாக்கம், ரயில் கட்டண உயர்வு என்று அதிரடியாக முதல் மாதங்களிலேயே இந்தியாவையே குஜராத் பாணி "வளர்ச்சியை" நோக்கி நகர்த்தி வருகிறது பாஜக-மோடி அரசு. அதன் தொடர்ச்சியாக, RSS - கிளை இயக்கங்கள் படுகொலைகள்(புனே), கலவரங்கள் (சென்னை- பூந்தமல்லி இந்து முன்னணித் தலைவரின் இறுதி ஊர்வலம்) என தங்கள் பாணியில் செயல்பட்டு வருகின்றன.

அடுத்ததாக இந்தியாவிலிருக்கும் அனைத்து நடுவண் அரசு ஊழியர்களும் சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை ஆங்கிலத்தில்தான் வெளியிட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. பின்பு அது தமிழ்நாடு தவிர்த்து பிற மாநிலங்களில் என்று மாற்றி அறிவிக்கப்பட்டது. பின்பு ஹிந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே என்று அடக்கி வாசிக்கப்பட்டது.

இதற்கு முன்பாகவே டைம்ஸ் நவ் செய்தித் தொலைக்காட்சி தமிழ்நாட்டில் ஒரு பள்ளியில் சென்று சிறுவர்களிடம் பேட்டி கண்டு தமிழர்கள் "We want HIndi" என்று வேண்டுவதாகக் கருத்தை உருவாக்கியது. (அது உண்மைதான் எல்லோருக்கும் தேசிய மொழியைக் கற்கவில்லை, இன்னொரு மொழியைக் கற்கவில்லை என்ற வருத்தம்தான்) அதாவது அரசு சட்டமோ அறிவிப்போ கொண்டு வரும் முன்பு இது கருத்தைத் திணித்து அதைப் பொதுக் கருத்து போலவும், தேவை போலவும் ஆக்குவார்கள். ஊடகங்கள் கருத்தைத் திணிப்பார்கள், ஊழல் மன்னர்கள் ஹிந்தியைத் திணிப்பார்கள்.

ஹிந்தியல்லாத மாநிலங்களிலிருந்து எதிர்ப்பு கிளம்பியவுடன் தாளத்தை மாற்றி வாசிக்கத் தொடங்கினர்,

கிரண் ரிஜிஜூ, இந்தியை அனைத்துத் துறைகளிலும் முன்னிறுத்துவதும் மேம்படுத்துவதுமே தங்களது அரசின் முதன்மையான பணி என்றும் மீண்டும் குறிப்பிட்டார்.

.“இந்தி என்பது தேசிய மொழி, இந்த நாட்டின் இதயமாக இருக்கும் மொழி. எனவே இந்திக்கு முதன்மை முக்கியத்துவம் அளிப்பது என்பது ஆங்கிலத்தை அவதூறு செய்வதாகாது. எனவே இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பது என முடிவு செய்து அரசாங்கம் முன்னுரிமை அளித்திருப்பது வரவேற்கக்கூடிய நடவடிக்கையே. மேலும், இந்தி மொழி என்பதே தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, வங்காளி, அசாமி, உருது மற்றும் இதர பல்வேறு பிராந்திய மொழிகளின் கூட்டுக்கலவையே என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” இந்தி மொழியை அனைத்து இடத்திலும் பரப்ப காந்தி, நேரு, தீனதயாளன் உபாத்யாயா, ராம்மனோகர் லோகியா போன்ற தலைவர்கள் முயற்சி செய்ததாகவும், தங்களது அரசுக்குமுந்தைய அரசுகள் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வில்லை என்றும் குறிப்பிட்ட அவர், தற்போது இந்தியை மேம்படுத்த வாய்ப்புள்ள அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்வதற்கான தருணமாகும் என்று முக்தார் அப்பாஸ் நக்பி தில்லியில் வெள்ளியன்று கூறினார்.

பாஜகவினர். வெங்கையா நாயுடு குட்டிகரணமடித்து இது மார்ச் 10 நாளே ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அறிவித்ததாகும் அதை ஏன் சர்ச்சையாக்குகிறார்கள் என்றார்.

இவர்கள் இப்படி நாட்டியமாடிக் கொண்டிருக்கு தொலைக்காட்சி விவாதங்களிலோ பாஜக இன்ன பிற ஹிந்தித் திணிப்பு வெறியர்கள், ஹிந்தி வேண்டுமென்ற அறிவுத் தாகமுடையவர்கள் எல்லாம் 1940 களின் வாதங்களயும், இந்துத்துவ-ஹிந்தி வெறியுடனும் கத்திக் கொண்டிருந்தார்கள். வழக்கம் போலவே, தொலைக்காட்சியைக் கண்டு தனது அறிவை வளர்க்கும் பாமரத் தமிழர்கள், தமிழை வளர்க்கறானுகளாம் என்று ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பாளர்களையும், கருணாநிதியையும் திட்டிக் கொண்டிருந்தனர்.

தேர்தலுக்கு முன்பாக திருச்சியில் நடைபெற்ற இளந்தாமரை மாநாட்டில் ஹிந்தி மொழியில் உரையாற்றிய மோடி மொழி வாரி மாநிலங்களில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று சொன்னார். பாரதிய ஜனதாவின் கொள்கையும் அதுதான். இந்நிலையில் இவர்கள் இப்படி கிளப்பியிருப்பது வெறும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் என்று சமாதானாம் சொல்கிறார்கள். ஹிந்தியை ஆங்கிலம் இரண்டாம் மொழியாக்கி விட்டது, ஆகவே அந்நிய ஆங்கிலத்திலிருந்து இந்தியாவின் கலாச்சாரத்தைக் காக்க ஹிந்தியை வளர்க்கிறார்களாம். ஹிந்தியை வளர்ப்பதென்றால் ஹிந்தி பேசுகிறவர்களிடமல்லவா செய்ய வேண்டும். ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத பல கோடிப் பேர்களிடமுமல்லவா இவர்கள் திணிக்கிறார்கள். வளர்ப்பு வேறு திணிப்பு வேறு. இவர்கள் promotion என்கிறார்கள். ஆனால் அது  imposition மட்டுமே.

சரி பாகிஸ்தானிகள் பேசும் உருது கூட இவர்கள் பேசும் ஹிந்தி மாதிரியல்லவா இருக்கிறது. எல்லோரும் ஒன்றாகிவிட்டார்களா ? இல்லை இந்திய தேசபக்தர்கள் வந்தேறி முகலாயரின் வழி வந்த மொழியினை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள்.

சரி இப்போது தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் அல்லது நீறு பூத்த நெருப்பாக இருக்கும் ஹிந்தி தாகம்/மோகம் என்றோர் மாயையைக் கலைப்பதுதான் எனது நோக்கம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்/ பதில்கள்

ஹிந்தியை ஏன் வெறுக்கிறீர்கள்

ஹிந்தியை வெறுக்க வில்லை. ஹிந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். ஒருவரிடம் போய் ஏர்டெல் வாங்கிக்கொள்ளுங்கள் என்கிறீர்கள். அவர் என்னிடம் ஏற்கெனவே ஏர்செல் இருக்கிறது என்கிறார். நீங்கள் வந்து அவர் ஏர்டெல்லை ஏன் வெறுக்கிறார் என்று கேட்கிறீர்கள்


கருணாநிதியைக் கலாய்ப்பதாக நினைத்துக் கொண்டு இந்தப் புகைப்படத்தினை ஹிந்தி ஆதரவாளர்கள் பகிர்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் வேறு மொழியினரிடம் அவர்கள் மொழியில் வாக்குப்பிச்சை எடுப்பது எந்த வகையில் தவறு. இதன் மூலம் மக்களுக்கு ஹிந்திக் கல்வியைத் தடை செய்து விட்டு அவர்கள் கற்றுக் கொண்டார்கள் என்று விமர்சனம் செய்கிறார்கள். இது ஒன்று தமிழ் வெறியாக இருக்க வேண்டும் இல்லை இந்தி வெறியாக இருக்க வேண்டும். இங்கே நடந்தது கட்டாய ஹிந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டமேயன்றி, ஹிந்திக் காரர்களைக் கல்லெறிந்து தாக்க வேண்டும் என்ற இனவெறிக் கலவரமல்ல. இதன் மூலம் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பாளர்கள் ஹிந்தியை வெறுக்க வில்லை என்று தெரிந்து கொள்ளுங்கள். கருணாநிதியை எதற்குத் திட்ட வேண்டுமோ அதற்கு மட்டும் திட்டுங்கள்

தேசிய மொழியை ஏன் கற்க வேண்டாம் எனக் கூப்பாடு ?

ஹிந்தி தேசிய மொழி இல்லை என்பது மீண்டும் மீண்டும் நினைவூட்ட வேண்டியிருக்கிறது. ஹிந்தி அலுவல் மொழி மட்டுமே, மற்ற பிராந்திய மொழிகள் போலத்தான். அரசில் நிறைந்திருக்கும் ஹிந்தி மாநிலத்தவர்களின் ஆதிக்க வெறி காரணமாகத்தான் மற்ற மொழிகள் புறக்கணிக்கப்படுகின்றன.

இந்தியா முழுதும் பெரும்பான்மையினர் பேசும் மொழியை ஏன் நாம் கற்கக் கூடாது நமக்கு நன்மை பயக்கும்தானே ?


ஹிந்தி பெரும்பான்மையினர் பேசும் மொழியும் கிடையாது. இந்தியா முழுதும் பேசப்படும் மொழியும் கிடையாது. மாறாக ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத மற்ற மொழியினரே பெரும்பான்மையாக உள்ளனர். பேசப்படும் ஹிந்தி பேசுகிறவர்களும் ஒரே மாதிரியான ஹிந்தியைப் பேசுவதில்லை. கொஞ்சம் விரிவாக வாசிக்க இங்கு செல்க. 


வெளிமாநிலங்களுக்குச் செல்லும்போது ஹிந்தி தெரியாமல் சிரமப்படுவோம்தானே ?


தமிழ் நாட்டில் வந்து வேலை செய்யும், குடிவரும் வெளி/வட மாநிலத்தவர் தமக்குத் தமிழ் தெரியவில்லை, பள்ளியிலேயே தமிழ் கற்கவில்லை என்று கவலைப்படுகின்றனரா ?

நான் இங்கெல்லாம் பயணித்திருக்கிறேன். வட இந்தியாவில் பல மாநிலங்களில் ஹிந்தி ஒரு பாடமாக இருக்கிறது என்கிறார்கள். அதெப்படி ஒரிரு நாட்கள் சுற்றுலா சென்றவர்கள் வட இந்தியாவின் பல மாநிலங்களில் ஹிந்தியை பாடமாக வழங்குவதை புள்ளி விவரமாகச் சொல்கிறார்கள். அப்படி சுற்றுலா செல்கிறவர்களுக்காக ஹிந்தியைக் கற்க வேண்டுமெனச் சொன்னால் தமிழ் நாட்டில் பெரும்பான்மையானவர்கள் செல்லும் சுற்றுலாத்தளமாக ஊட்டி இருக்கிறது, அடுத்து கேரளா இருக்கிறது, கர்நாடகா இருக்கிறது, கோவா இருக்கிறது. எனவே தமிழர்கள் படுகு, மலையாள, கொங்கணி, துளு மொழிகளையும் பாடமாக வைக்கச் சொல்லிக் கேட்கலாம்.

ஒரு மொழியாக அரசே வழங்கும்போது கற்கலாமே ?

பல நூறு மொழிகள் பேசப்படும் நாட்டில், நடுவண் அரசு ஒரு மொழிக்கு மட்டும் முகவராக செயல்படுவது ஏற்க முடியாதது. மக்களின் வரிப்பணத்தை வைத்து மொழியை அடுத்தவனிடம் திணிக்கிறது.  ஹிந்தி பேசுகிறவர்கள் வேறு மொழிகளைக் கற்க வேண்டும் என்று நடுவணரசு எல்லா மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வட இந்தியாவில் பரப்புமா ?

ஒரு மொழியைக் கற்காமல் இருப்பது நமக்கு இழப்புதானே ? ஆம் இழப்புதான். எப்படி ஹிந்திக் காரர்கள் தமிழ் கற்காமல் இருப்பது நமது இழப்போ அது மாதிரிதான் இதுவும். அதற்கு எவ்வளவு கவலைப்பட வேண்டுமோ அது போலத்தான் இதற்கும் கவலைப்படவேண்டும். தகவல் தொழில் நுட்ப துறையில் குறிப்பிடத்தகுந்த இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு 2014 ஆம் ஆண்டில் ஹிந்திக்கு ஏன் மெனக்கெட்டு வருத்தப்பட வேண்டும். ஜாவா, பெர்ல், C, C++  என்பதையெல்லாம் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஏன் தமிழ்நாட்டைத் தவிர வேறு மாநிலத்தவர் எதிர்க்க வில்லை.

தவறு. பல்வேறு மாநிலங்கள் எதிர்க்கின்றன. முத்தாய்ப்பாக ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசத்தின் மாயாவதி எதிர்க்கிறார். கர்நாடகா, தமிழகத்திற்கு அடுத்தபடியாக எதிர்ப்பில் இருக்கிறது. தமிழகத்தின் இரு முதன்மைக்கட்சிகளும் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட திராவிட இயக்கத்தின் வழி வந்தவை என்பதால் தமிழகம் முதன்மையில் இருக்கிறது. மேலும் சமஸ்கிருதத்திற்கு ஈடான பழமையும், வளமும் அதன் கலப்பு அதிகமில்லாத தனித்துவமான மொழி தமிழ் மட்டுமே. ஆனால் இந்தியாவின் மற்ற மொழிகளில் சமஸ்கிருத/ஹிந்தி கலப்பு அதிகம். ஆயிரம் வருட காலமாக சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய வரலாறுடைய தமிழ் மொழியைப் பேசும் நான் இன்னும் அதிகமாக எதிர்க்க வேண்டும்.

வெளி மாநிலங்களுக்குச் சென்றால் ஹிந்தி தெரியாதா என்று அவமானப்படுத்துகிறார்கள் வெட்கமாக இருக்கிறது

அது காட்டுமிராண்டிகளின் இழிசெயல். நீங்கள் கறுப்பாக இருக்கிறீர்கள் என்று சொல்கிறார்கள். அதற்காக வெள்ளையாக வேண்டும் அழகாக வேண்டும் அப்படியில்லாதது நம் தவறு என்பீர்களா ? மெட்ராஸி என்கிறார்கள், மலையாளிகள் பாண்டிகள் என்கிறார்களல்லவா அது போன்ற இனவெறிதான் அப்படிப் பேசவைக்கிறது. மேலும் ஹிந்தி பேசிகளின் ஆண்டைத்தனம், வட இந்தியனின் தென்னிந்தியா மீதான் இழிவான பார்வை. அதற்கு நீங்கள் குற்ற உணர்வு அடையத் தேவையில்லை. நீ தமிழகம் வரும் போது ஏன் தமிழ் தெரியவில்லை என்று நான் கேட்டால் என்ன சொல்வாயோ அதுதான் இதற்கும் பதில் என்று சொல்வோம். (தென்னிந்தியாவில் மூன்று மொழிகள் செம்மொழியாகியிருக்கிறது என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியுமா ? அட செம்மொழிகள் என்று கூட வேண்டாம் நான்கு மொழிகள் கோடிக்கணக்கானவர்களால் பேசப்படுவதாவது தெரியுமா)

தமிழ் பேசாத பல மாநிலத்தவர்கள் தமிழகத்தில் வாழும்போது அவர்கள் மீதும் தமிழகத்தில்  கட்டாயத் தமிழ் சட்டம் என்பது தமிழ்த் திணிப்பு ஆகாதா ?

தமிழகத்தில் கட்டாயத் தமிழ் என்றால் எல்லோர்க்குமே மொழியுரிமை நினைவுக்கு வந்து விடும் என்பது மகிழ்ச்சி. தமிழகத்தில் மட்டுமல்ல எல்லா மாநிலங்களுமே அவரவர் மொழியைக் கட்டாயப்பாடமாகவும், பிறமொழியினர்க்கும் சேர்த்து வைப்பது நியாயமான செயலே. இதன் மூலம் அம்மாநிலத்தில் இருக்கும் பிறமொழியினர் ஒரு மொழியைக் கற்க முடியும். அங்கேயே வசிப்பவர்கள் அம்மொழியைக் கற்பதில் என்ன தவறு, இது பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கும் சேர்த்துத்தான். ஆனால் ஹிந்தியை, ஹிந்தி பேசாத பிற மாநிலங்களின் மீது திணிப்பது வேறு, அந்தந்த மாநிலங்களில் கட்டாயப் பாடமாக வைப்பது வேறு. இதன் மூலம் மட்டுமே பிராந்திய மொழிகளின் பாதுகாப்பும், வளர்ச்சியும் உறுதி செய்யப்படும்.

Download As PDF
Bookmark and Share

Post Comment

நடிகர் சிம்பு பாடல் எழுதாவிட்டால் குடிமுழுகி விடுமா ?


பல நாட்களாக வயிற்றெரிச்சலில் இருக்கிறேன். இவனுக்கெல்லாம் எதற்கு இந்த வேலை என்று பெருந்தன்மையாக திட்டுவதை விட இவருக்கெல்லாம் இரக்கமே இல்லையே என்று நம் மீதே பச்சாதாபமாக இருக்கிறது. நான் கொஞ்ச நாளுக்கு முன்பு பயந்தேன். அது இப்போது நடந்தே விட்டது. அது என்ன ?

அதற்கு முன்பு சில வரிகள்

இது சலிப்பூட்டும் ஒரு பெரிய இடுகை, கோர்வையில்லாமல் புலம்பலாகவே எழுதியிருக்கிறேன். இதற்கு மேலும் விரும்பியவர்கள் தொடரலாம்.

 
தமிழ் மொழியை நாட்டியமாடும் நயத்துடன் பாடல்களாக எழுதியவர் விஜய டி ராஜேந்தர். அவரை மிகப்பெரும் கவிஞர் என்று பாராட்டத்தக்கவராக இல்லாத போதும் அவர் வலைப்பூவிலும், ஃபேஸ்புக்கிலும் எழுதும் நம்மைப் போன்ற சராசரிக் கவிஞர்களை விடவும் திறமையும், கவிதை, பாடல்கள் எழுதும் ஆற்றலும் பெற்றவர். திரைப்படத்துறையில் குறிப்பிடத்தகுந்த ஒருவரான அவருக்குப் பிறந்த ஒரே காரணத்தால் நடிகனாகி நம் உயிரை வாங்கி வருபவர் அவரது மகன் திருவாளர் சிலம்பரசன்.

அவரது இரண்டாவது படமான "தம்" என்ற காவியத்தை திரையரங்கத்தில் கண்டும் உயிருடன் விண்டவன் நான். அதனால் எனது உணர்வுகளைப் புரிந்து கொள்ள தம், குத்து போன்ற படங்களைப் பார்த்தவர்கள் மட்டுமே முடியும். அவர் மீது நான் கொண்ட பிரமிப்புக்கு உதாரணமாக ஒன்றைச் சொல்கிறேன். எனக்கு கல்லூரி நண்பி ஒருவர் மீது அதிக பாசமும் மதிப்பும் வைத்திருந்தேன். எனக்குப் பிடித்த நடிகர் சிம்பு என்று அவர் சொன்ன ஒரே காரணத்திற்காக அவளிடம் நானும், இன்னொரு நண்பனும்  சொன்னது "உம்மேல இருந்த மரியாதையே போச்சு".  யாராவது சிம்புவைப் பிடிக்கும் என்று சொன்னாலே அவரை ஒரு மாதிரியான ஆளா இருப்பாப்பிடியோ என்றுதான் எண்ணும் அளவுக்கு அவரைப் பிடிக்கும். எங்காவது பேருந்திலோ, அல்லது வேறு எங்காவது படம் ஓடும் இடத்தில் மாட்டிக் கொண்டால் மட்டுமே படம் பார்க்க வேண்டிய நிலைக்கு ஆளாவேன். நானாக படத்தை விரும்பிப் பார்ப்பதில்லை. எந்தத் திரைப்படமும். அங்காடித் தெரு, ஆரண்ய காண்டம், வழக்கு எண் வகையான படங்களையாவது பார்க்க வேண்டும் என்று நினைப்பதுண்டு ஆனால் அதுவே நடக்க வில்லை. விஸ்வரூபம் கூடப் பார்க்கவில்லை. இதன் மூலம் எனக்கும்  திரைப்படங்களுக்குமான இடைவெளியை அறியலாம்.

இருப்பினும் திரைப்படமும் அதன் தாக்கமும் தூணிலும் துரும்பிலும் நீக்கமற நிறைந்திருப்பதால் அதைப்பற்றி முற்றிலும் தவிர்க்கவியலாமல் கேள்விப்படவும், பேசவும் நினைக்கவும் நேர்கிறது. இந்த எழவெடுத்த திரைப்படங்களின் ஒரு சில காட்சிகளைத் தொலைக்காட்சியில் காணும்போதே எரிச்சல் பற்றிக் கொண்டு வருகிறது. முக்கியமாக சிம்பு, தனுஷ் ஆகியோரின் படங்களும் சரி பாடல்களும் சரி உலகமாக எரிச்சலாக இருக்கிறது.

நான் முடிந்த வரை இதையெல்லாம் பார்ப்பதையும் பாடல்களைக் கேட்பதையும் தவிர்த்தே வந்திருக்கிறேன். ஆனாலும் விதி நம்மை விடுகிறதா ? நான் பொதுவாக எனக்குப்பிடித்த நபர்களைப் பற்றிய எதிர்மறை செய்திகளை எதிர்கொள்வதில் இயல்பாக எடுத்துக் கொள்ள முடிவதில்லை. எடுத்துக்காட்டாக தற்போது குமுதம் இதழில் இளையராஜாவின் பேட்டியைப் படித்தால் எடுத்தெறிந்த மாதிரி பேசும் இளையராஜாவின் மீது மரியாதை போய்விடும். அதனால் அதைப் படிப்பதில்லை. கமல்ஹாசனை அதிகம் வெறுத்து விடுவேனோ என்று உன்னைப் போல் ஒருவன், விஸ்வரூபம் விமர்சனங்களைப் படித்ததால் அப் படங்களை பார்க்கும் ஆசையே போய்விட்டது.

ஒரு சில படங்களில் வரும் ஒரு பாடல் வரியோ அல்லது காட்சியோ என்னை மிகவும் எரிச்சல் படுத்தி விடும். எடுத்துக்காட்டாக

ஐயா படத்தில் சரத் ஒரு காட்சியில், மனைவியை ஒருவன் மிகவும் கொடுமைப்படுத்துவானாம். அதற்கு அவனுக்கு பாடம் புகட்டும் விதமாக அவனது இடது கையை உடைத்துவிட்டுச் சொல்வார், அம்மா கூட செய்ய முடியாத வேலையை பொண்டாட்டிதான் செய்வா. இதன் மூலம் அவனது இடது கையை உடைத்து கணவனின் குண்டி கழுவும் வேலையை அந்தப் பெண்ணின் தலையில் கட்டிவிடுவார். இதன் மூலம் அந்த ஆண் பொண்டாட்டியின் பெருமையை உணர்ந்து கொள்வானாம். சரி. இது கணவனிடம் அடிவாங்குவதைவிடவும் கொடுமையான தண்டனையல்லவா ?

வரலாறு படத்தில் தன்னை ஆம்பிளையா என்று கிண்டல் செய்த பெண்ணை பாலியல் வன்முறை மூலம் பதில் சொல்லும் நாயகத்தனம்

தேவர் மகனில் வடிவேலு கமலுக்கு செருப்பு எடுத்துத் தரும் காட்சி

முதல்வனில் முந்தானையை எடுத்து என்னையே எடுத்துக்க என்று நாயகி சொல்லும் காட்சி

இப்படியாக பல இருக்கின்றன. இது போன்றே பல காட்சிகளிலும் எதுக்குடா இப்படி எடுக்கறானுக என்றெல்லாம் நினைத்துக் கொள்வதுண்டு.

எனக்கு இந்த சிம்பு, தனுஷ் படங்களில் பிடிக்காதது என்னவென்றால் எல்லாமேதான். அந்தக் காலத்தில் காதல் கொண்டேன், திருடா திருடியை விரும்பித்தான் பார்த்தேன். இப்போதெல்லாம் பார்த்தால் சுத்தமாகப் பிடிப்பதில்லை. ஏனென்றால் இவர்களது படங்களில் பொறுக்கித்தனத்தை நாயகத்தனமாக சித்தரிப்பார்கள். இவர்கள் மட்டுமல்ல இன்னொருவர் கார்த்தி. பார்த்தாலே பற்றிக் கொண்டு வரும். இவனுகள் இளித்துக் கொண்டு நக்கலடிப்பதெல்லாம் பார்த்து விட்டு சுற்றி இருப்பவர்கள் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். எனக்கோ எரிச்சலாக வரும்.

சுள்ளான் படத்தில் தனுஷ் அவரது அம்மாவிடம் சொல்வார். அவரது அப்பா மணிவண்ணன். வீட்டுக்குள் நடக்கும் ஏதோ ஒரு விளையாட்டுச் சண்டையில் அம்மாவிடம் "உம் புருசனை மூடிட்டு இருக்கச் சொல்லு". எப்படி இவனெல்லாம் இப்படிப் படமெடுக்கிறான் என்று எரிச்சல்.

மற்றபடி இவன்களின் படங்களில் என்ன எழவு இருக்கிறதென்று பார்த்தால் ஒரு மண்ணும் இல்லை. அரை மணிநேரம் கூடப் பார்க்க முடிவதில்லை. நிற்க. நான் சொல்ல வந்ததை விட்டு வேறெங்கோ சென்று விட்டேன்.

இந்தத் திரைப்படப்பாடல்களுக்கு வருவோம். நான் மேலே சொன்னது போல சில படக் காட்சிகளை சகிக்கவே முடியாது என்பது போலவே பாடல் வரிகளும் அதில் சில.

இந்தியன் படத்தில்

அக்கடான்னு நாங்க உடை போட்டா
துக்கடான்னு நீங்க எடை போட்டா
தடா உனக்குத் தடா

 
தித்திக்குதே படத்தில் வரும்

"ஈராக்கு யுத்தம் முடிஞ்சு போச்சு அங்க
எனக்குள்ள யுத்தம் தொடங்கிடுச்சு இங்க"
 


பூவெல்லாம் உன் வாசம் படத்தில் வரும்

இலங்கையில் நடக்கின்ற யுத்தம் நிறுத்து
எனக்கு காதல் வந்ததே (திந்திந்தாரா பாடலில்)

 
டிஷ்யும் படத்தில் வரும்

அமெரிக்கா நீயானா ஆஃப்கானிஸ்தான் நானானா
ஸ்ரீலங்கா நீயானா எல்டிடிஈ நானானா 

 
அந்நியன் படத்தில் வரும்

ஹிரோஷிமா நீதானோ நாகசாகி நீதானோ
உன்மீதுதானோ என் காதல் பாமோ

 
கந்தசாமியில் வரும்

ஹிட்லர் பேத்தியே ஹிட்லர் பேத்தியே
காதலொன்றும் யூதனில்லை கொல்லாதே
காஷ்மீர் நான் நீ பாகிஸ்தான் தீராது டிஷ்யும்தான்

 
2009 களின் தொடக்கத்தில் ஈழப்போர் நடை பெற்ற போது எல்லா ஊடகங்களிலும் அடிபட்ட ஒரு சொல் பாதுகாப்பு வலயப்பகுதி (யில் தாக்குதல் பல பேர் சாவு). இதை அப்படியே ஒரு பாடலில் பதிவு செய்தார் நா. முத்துக் குமார் மோதி விளையாடு படத்தில்

பாதி காதல் பாதி முத்தம் போதாது போடா ..
காதல் என்னைக் காதல் செய்ய
பாதுகாப்பு வலயப் பகுதியில் ...
  


என்று ஒரு பெண்ணின் பிரிவாற்றாமையை விளக்குகிறது. பூவெல்லாம் உன் வாசம், தித்திக்குதே பாடலையும் எழுதியவர் வைரமுத்து. இந்தப் பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பெயர்களும் அதன் பின்னுள்ள வரலாறும் தெரிந்துதானே இதை எழுதியிருக்கிறார்கள். இப்படிச் செய்வது நியாயமா ? தடா என்றால் தெரியாதா ? அனுபவித்தவர்களைக் கேட்டால் தெரியும். பல இலட்சம் பேர் செத்துச் சுண்ணாம்பான வரலாற்றுப் பேரழிவுப் பெயர்களை ஆணுறுப்பு விரைப்பதற்கும், பெண்ணுறுப்பு விரிவதற்கு உவமைப்படுத்தலாமா ?

தில்லையாடி வள்ளியம்மா
தில்லிருந்தா நில்லடியம்மா


திரிஷாவுக்கு எழுதியது குருவி படத்தில். திரிஷாவை ஒப்பிட வேறு ஒன்றும் கிடைக்கவில்லையா ?

 
எங்கோ நடக்கு இழவுகள் நமக்கு பொழுது போக்கு, காதலுக்கும் காமத்துக்கும் ஒப்புமைப் படுத்துவதற்கா ? இதற்கெல்லாம் போராட்டமெல்லாம் செய்ய முடியாது எழுதுகிறவர்கள்தான் பொறுப்புணர்ந்து மனசாட்சியுடன் எழுதவேண்டும்.

"முள்வேலிக்குள்ளே வாடும் தமிழீழம் போல் ஆனேனே"   

தமிழ்நாட்டிலிருந்தும் இதைச் செய்தால், இதில் அடுத்தவர்கள் நம்மைப் புரிந்து கொள்ளவில்லை என்ற புலம்பல் வேறு. இதெல்லாம் ஒரு மேட்டரா, கிறுக்கத்தனம் என்று கடந்து விடவும் முடியும், சற்றே சிந்தித்தால் அதிலுள்ள வக்கிரம், பொறுப்பில்லா அலட்சியமும் புரியும்.

இப்போது மீண்டும் சிம்புவுக்கு வருகிறேன்.

இந்த ஜென்மம் எழுதிய பாடல்கள் !!?? (பாடல்கள் என்று சொல்வதை விட பாடலுக்கு ஒரு அவமானம் தேவையில்லை) கேட்டாலே எனக்கு வெறியாகிறது. லூசுப் பெண்ணே கூட பரவாயில்லை. அடுத்தடுத்து எழுதியதெல்லாம் எவ்வளவு கேவலமான வரிகள். என்னத்தைக் கிறுக்கிக் கொடுத்தாலும் தாம் தூமென்று மெட்டுப்  போட்டு அதை வெற்றிப் பாடலாக்கி விட யுவன் போன்ற இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அதனால் சிம்புவுக்குக் கவலையே இல்லை. ஆனா ஆவன்னா இனா ஈயன்னா என்று உளறினால் கூட அதை ஒரு பாடலாக்கி உலகத்தமிழர்களின் செவியைக் குதறும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. இவர் அடிவயிற்றிலிருந்து முக்கிப் பாடுவைதையும் நினைத்தால்

எவன்டி உன்னப் பெத்தான் கைல கெடச்சா செத்தான் ...........

வாடி வாடி ஹாட் பொண்டாட்டி
தேவையில்ல வைப்பாட்டி
 


 இப்ப ஒரு பாடலை ""இயற்றிப் பாடி"யிருக்கிறார். அதில் வரும் வரிகள்

மேட்டரை ஏன்டா பத்தினியாக்கற
பத்தினிய ஏன்டா மேட்டராக்குற"


இப்படியெல்லாம் என்ன மயிறுக்குடா எழுதறீங்க ? இதையெல்லாம் செல்பேசியில் வைத்துக் கொண்டு கேட்பதற்கு உலகத்தில் பல கிறுக்குப் பயல்கள் இருக்கிறார்கள். இந்த விடலை கிறுக்குகள் தொடங்கி வாலிப வயோதிக அன்பர்கள் வரை இது போன்ற ஆணாதிக்கக் குப்பைகளை ரசித்துக் கேட்கிறாரகள். அதாவது பெண்கள் என்றால் காதலித்து ஏமாற்றுகிறவர்கள், ஆண்கள் உண்மையானவர்கள் தியாகிகள் என்று தாங்களாகவே நம்பிக் கொண்டிருக்கு அல்பைகளுக்கு இது இனிக்கும். தண்ணியடித்துவிட்டு ஆட்டம் போடுவது இன்னும் கூடுதல் பலம்.

சொந்தமாக ஒண்ணும் தெரியாது. எல்லாமே பழைய பாடல்களின் ரீமிக்ஸ் அல்லது படங்களின் ரீமேக். எல்லாப் பாடல்களிலிலும் இவரது படங்களின் பெயர்களையும், பாடலின் வரிகளையும் தவறாமல் சொல்லிக்  கொள்ள வேண்டியது. 

இந்த சிம்பு அய்யா இதற்கு முன்பு செய்ததை நினைத்துப் பார்க்கவும், தன்னை லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று கடந்த 10 வருடங்களாகச் சொல்லிக் கொண்டவர். தற்போது யங் சூப்பர் ஸ்டார். இன்னும் கொஞ்ச நாளில் சூப்பர் ஸ்டார் என்று அவரே சொல்லிக் கொள்வார். பின்பு நாமும் சொல்ல வேண்டியதுதான்.

தனுஷ் ரஜினி மகளைத் திருமணம் செய்து கொண்டபோது பெரிய தியாகியாகி எங்கிருந்தாலும் வாழ்க என்றார்.  பின்பு மன்மதன் படத்தில் இது என்னுடைய சொந்தக் கதை என்று வசனம் வைத்து தனுஷின் முந்தைய படமான சுள்ளானில் நாயகியாக நடித்த சிந்து துலானியை காதலித்து ஏமாற்றுகிறவளாக நடிக்க வைத்தார் (கதை திரைக்கதை சிம்பு). நுண் அரசியல் புரியுதுங்களா ? இதெல்லாம் நான் மட்டும் சொல்லல, படம் வந்தப்ப எல்லாரும் பேசிக்கிட்டமாக்கும். அந்தப் படம் மிகப்பெரும் வெற்றிப் படமென்றும் சொல்லிக் கொண்டார்கள். அப்போது பெரிய தயாரிப்பாளராக இருந்தவர்தான் இந்தியன் தியேட்டர்ஸ் கிருஷ்ணகாந்த. அந்தப் படத்திற்கு பின்னர்தான் காணாமல் போனார். இயக்குநர் முருகன் இன்னும் கண்ணீர் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

 வல்லவன் படத்துக்காக ஓவர்டோஸ் விளம்பரம் நயன்தாராவின் உதட்டைக் கடித்து இழுத்து மிகப்பெரிய ஃப்ளக்ஸ் பதாகையை மவுண்ட் சாலையில் வைத்தார். (அதற்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன). பின்பு நயனுடன் சண்டையில் பிரிந்தவுடன் இருவரும் படுக்கையறையில் இருந்த உதட்டு முத்தத்துடன் கூடிய படத்தை இணையத்தில் வெளியிட்டு (இவல்லாம் எங்கூட படுத்தவதானே என்று ஊர் பேச) தானொரு சாக்கடை என்று காட்டினார். (பழி வாங்கிட்டாராம்)

ரஜினி நீண்ட நாட்களுக்கு பின் நடித்த சந்திரமுகி. அதில் நாயகி ஜோதிகா அதில் ரஜினி பெயர் சரவணன். ஒரு குப்பைத் தெலுங்குப் படத்தை ரீமேக் செய்து அதற்கு சரவணா என்று பெயரிட்டு அதில் ஜோதிகாவை நாயகியாக்கினார் சிம்பு.

தனுஷின் கொலைவெறிக்குப்போட்டியாக உலக சமாதான கீதம், தனுஷின் மயக்கமென்ன நடித்த ரிச்சாவே ஒஸ்தியில் நாயகி என்று இவரது அரை வேக்காட்டுத்தனம் தொடர்கிறது. இதெல்லாம் பாட்டெழுதினால் எந்த லட்சணத்திலிருக்கும் என்பதற்கு உதாரணமே இவர் எழுதும் பாடல்கள்.

எல்லாப் படங்களிலும் செக்ஸியான உடைகளில் தன்னைச் சுற்றி வந்து கதாநாயகி பாடுவது போலவும், பத்து பதினைந்து பிகினிகள் சுற்றி நின்று தடவுவது போலவும் நடிக்கும் இந்த மன்மதன் "எவன்டி உன்னைப் பெத்தான்" பாடலில் "உன் மானங் காக்கிற மேலாடை நாந்தான்" என்ற வரியையும் எழுதியிருக்கிறார். பெண்களின் மானம் மேலாடையில் இருக்கிறது என்று நம்பும் சொல்லும் சராசரி ஆண்களைப் போலவே இந்த மன்மதனும் நினைக்கிறாராம். எல்லாப் பெண்களும் இவர் சொல்கிறது போல மானத்துடன் இருந்தால் இவர் புரட்டி எடுப்பதற்கும் மோப்பம் பிடிப்பதற்கும் எந்தப் பெண் நடிக்க வருவாள்?

அடுத்த அறிவாளி தனுஷ், பெரிய இடத்துப் பொண்ணை மடக்கிப் போட்டு இரண்டு குழந்தைகளுடன் செட்டிலான பின்பு
ம், 20 வயது பையனைப் போலவே தன்னைக் கருதிக் கொண்டு அப்பையன்களுக்குப் பிடித்த மாதிரி இன்னும் ஒரு அங்குலம் கூட பெண்கள் மீதான வன்மத்தை மாற்றாமல் இன்னும் பாடல்களிலும் படங்களிலும் காட்டிக் கொண்டிருப்பவர். நல்ல சிவந்த நிறமுடைய நடிகைகளை நாயகிகளாகப் போட்டுக் கொள்ள வேண்டியது, அவர்களின் பின்னால் அலைவது, ஊறுகாய் மாதிரி பாடல் காட்சிகளில் மோந்து பார்ப்பது அவர்களும் அவ்வப்போது ஸ்லோ மோசனில் திரும்பிப் பார்ப்பது கடைசியில் இவரது உண்மைக் காதலை உணர்ந்து ஒத்துக் கொள்வது இதெல்லாம் இவரது படத்தின் கதைகள். கதாநாயகிகள் எனப்படும் நடிகைகளுக்கு என்றுதான் விடிவோ தெரியவில்லை.

ஆடுகளம் படத்திற்கெல்லாம் தேசிய விருதென்றால் அதை விடக் கேவலம் வேறெதுவுமில்லை. சூரியா தம்பி கார்த்திக்கும் இதுதான் கதைக்களம். நல்லா வாயில வருது.

அப்பாவி மாதிரி மூஞ்சியை வைத்துக் கொண்டு தண்ணியடித்து, தம்மடித்து பொறுக்கித்தனம் செய்ய வேண்டியது ஊரிலேயே அம்சமான பொண்ணைப் பார்த்தி ஈயென்று இளித்துக் கொண்டு சுத்த வேண்டியது இது மாதிரியான மொன்னைகளுக்கெல்லாம் நம்ம அண்ணந்தான் குரு. சொந்த வாழ்க்கையில் ஃபிகர்களைக் கரெக்ட் பண்ண முடியாமல் ஏங்கித் தவிக்கும் லட்சோபலட்சம் இளைஞ்ஜர்களின் ஏக்கத்திற்கு வடிகால் இவர். யாரடி நீ மோகினியில் இவர் பெரிய நிறுவனத்தில் நேர்காணலில் தேர்வாவதும், காதல் கொண்டேனில் முதல் நாள் வகுப்பில்  கணக்கு வாத்தி கோட்டாவில் வந்தவன் என்று திட்டியதற்குப் பிறகு கரும்பலகையில் இவர் ப்ராப்ளத்தை சால்வ் செய்வதும் ரஜினி படத்தையே விஞ்சும் செம மாஸ் சீன்ஸ் (இதே மாதிரி பிரிச்சுப் போட்ட ஹீரோ ஹோண்டாவை சரியாக மாட்டும் ரவிகிருஷ்ணா - 7G படத்தில். யூத்துகளை அடித்து வீழ்த்தும் மாஸ். நன்றாக பல்ஸ் பிடித்து வைத்திருக்கும் இயக்குநர் செல்வராகவன்). பெண்கள் மீது வன்மத்தையும் வெறுப்பையும் கக்கும் பாடல்களை கூச்சநாச்சமில்லாமல் எழுதுவார்.

உன்னைப் பெத்தவன் உன்னப் பெத்தானா செஞ்சானா ?

ஒய் திஸ் கொலவெறி 

இப்படித் தொடர்கிறது இவரது சேவை. இவரது அண்ணாரோ ஒரு படி மேலே போய் 

வெட்றா அவள கொல்றா அவள அடிடா அவள 

 
என்று வெறியேற்றுகிறார்.

நண்பனின் அப்பாவையும் தனது அப்பாவையும் அவர் இவர் என்று சொல்வது, அதே நேரம் மனைவி, நண்பிகளின் அப்பாக்களுக்கு மரியாதை இல்லை. அவ அப்பன் இருக்கானே என்று ஒருமையில் விளிப்பதும் ஆண்கள் செய்வதுதான். அந்த அடிப்படையில்தான் இவர்கள் எழுதினால் அவர்கள் ரசிக்கிறார்கள். இந்தப் பெண்களெல்லாம் எப்படி இவனுகளையெல்லாம் பிடிக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தாலே கசக்கிறது. ஆத்திரமே வராதோ ? இவரு சம்சாரத்தோட அப்பா ரஜினியை, உங்க அப்பன் இருக்கானே என்றா சொல்வார். மூச்சுக்கு மூச்சு ரஜினி சார்
ரஜினி சார்னு கடையத்தெரியுதுல ?

இடுகையின் ஆரம்பத்தில் நான் சொன்னது, நான் பயந்தது நடந்தே விட்டது. அது என்ன வென்றால் இந்த சிம்பு தனுஷ் செல்வராகவன் வகை அற்பர்கள் பாடல்கள் எழுதினால் கொஞ்சநாளில் ஙொம்மா, ஙோத்தா தொடங்கி தேவிடியா பயல் வரை எல்லா வசைச் சொற்களையும் இவர்கள் எழுதும் "பாடலில்" கொண்டு வருவார்கள் என்று நினைத்தேன். உலக சமாதானத்திற்கு கீதம் இசைத்த கவிப்பொறுக்கி அல்லது பொறுக்கிக் கவி சிம்பு அதை நிறைவேற்றி விட்டார். இந்த காதலுனு சொன்னவன் என்ற பாடலை முடிக்கும் போது "த்தா' என்ற ஒலியுடன் முடிக்கிறார்.  இந்த "த்தா" என்பது வரிக்கொருமுறை சென்னையிலிருப்பவர்கள் பயன்படுத்தும் வசைச் சொல். அது ங்கோத்தா என்பதன் சுருக்கம். அதைச் சொல்லும் பாதிப்பேருக்கு அதன் பொருளே தெரியாது என்பது தனிக்கதை. 


விஜய் பகவதியில் பாடிய போடாங்கோ பாடலுக்கும் இது போல சலசலப்பு வந்தது. குங்குமமோ அல்லது குமுதமோ ஒரு பேட்டியில் விஜய் சொன்ன விளக்கம் அது கெட்ட வார்த்தையில்ல போடா கோமாளின்னு சொல்றோமில்லையா அது மாதிர் என்றார். 


இந்த மாதிரி நடிகர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் தனது படங்களில் ? பொறுக்கியாக இருப்பது வீரம், ஆண்மை, நாயகத்தனம்.

பெண்கள் பின்னாடி சுற்ற வேண்டும். அவளுக்கு சொந்த புத்தியெல்லாம் கிடையாது அவள் உனக்குத்தான் கிடைப்பாள். அதுதான் காதல் உண்மைக் காதல்.

முக்கியமாக பெண்களை ஃபிகர், ஆண்டி என்றுதான் சொல்ல வேண்டும், இல்லையென்றால் நீ ஆணே இல்லை. சந்தானத்துடன், கருணாசுடன் இணைந்து அழகாக இல்லாத பெண்களை அட்டு ஃபிகர், அய்யே என்றும் இகழ வேண்டும். (என்னமோ இவனுக மூஞ்சி மட்டும் டாம் க்ரூஸ் மாதிரி)

ஆண்கள் பாவம் பெண்கள் ஏமாற்றுப் பேர்வழிகள், அலைய விடுகிறவர்கள் என்று பெண்களைத் திட்டுவதே பாடல்.

கிளப் டான்ஸ், பப், பாப் இசை, குத்துப் பாட்டு என்று பட்டையைக் கிளப்பினாலும் பெண்ணுக்கு அறிவுரை சொல்லவும் கற்பைக் காக்கவும் கற்காலத்திற்கு ரிவர்ஸ் கியர் போடுவாரகள்.

இவர்களின் அல்லக் கைகளாக சந்தானம், சிவகார்த்திகேயன், கருணாசை வைத்து சொரிந்து கொள்ள வேண்டியது.

இன்னும் விடலைகள் ஆண்கள் செய்தால் மன்மதன், பெண்கள் செய்தால் - மேட்டர் என்ற அளவுகோலுடன்தான் திரிகிறார்கள். ஆணுக்கு வந்தா ரத்தம், பொண்ணுக்கு வந்தா தக்காளிச் சட்னி. ஆண் செய்தால் என்ஞாய்மென்ட், பெண் செய்தால் கற்பு போச்சு. இந்தக் கான்செப்ட்டை ஒத்துக் கொண்டவர்கள் கொஞ்சமும் உறுத்தலின்றி எல்லாப்படங்களையும், பாடல்களையும் மனசாட்சியைக் கழட்டி வைத்து விட்டு ரசிக்கலாம். ரசிகன் என்று சிலிர்த்து கொள்ளலாம். ஆணாதிக்க அரிப்பையும் சொரிந்து கொள்ளலாம். பொறுக்கித்தனத்தை ஏற்றிப் போற்றலாம்.

இவர்களின் படங்கள், பாடல்கள் மட்டுமல்ல இன்னும் பல பேர்கள் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லாப் பாடல்களும் காதலைச் சொல்வதில்லை. வெறும் காமத்தைத்தான் சொல்கின்றன. பெண்ணின் அழகைப்புகழ்கின்றன (அழகே அழகே அழகின் அழகே நீயடி, அழகோ அழகு உன் கண்ணழகு). உடலை வர்ணிக்கின்றன (இடுப்பிருக்கானா இல்லையானா இலியானா, விட்டம் மட்டம் படித்தேன் உன் நெஞ்சின் மேலே). உடலை வர்ணிப்பதும், அழகைப் புகழ்வதும் எப்படியப்பா காதலாகும் ? மெலடிகளில் கொஞ்சம் கவித்துவமாக எழுதியைதே குத்துப் பாட்டில் கொச்சையான வரிகளைப் போட்டால் மாறிவிடுகிறது. குத்து, போடு, போட்டுத்தாக்கு, வெச்சிக்க என்று காது கூசுமளவிற்கு அடித்து விளையாடலாம்.

என்ன கருமாந்திரமோ இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டு எழுத வேண்டுமா என்று தோன்றுகிறது. இரண்டரை மணி நேரம் ஒரு வாரத்துடன் மறக்கப்படும் இந்தத் திரைப்படக் குப்பைகளைப் பற்றியும் பாடல்களையும்தானே பற்றி பேசிக்கொண்டும், நினைத்துக் கொண்டும், எழுதுக் கொண்டுமல்லவா நாம் எல்லோரும் வாழ வேண்டியிருக்கிறது.  இணையம், அச்சு ஊடகம், தொலைக்காட்சிகள் வரை எல்லோரும் இதற்குத்தானே இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால்தானே நானும் புலம்ப வேண்டியிருக்கிறது.

எனக்கு
ஜக்கி வாசுதேவ் சொன்னது ஒன்று நினைவுக்கு வருகிறது.  நாம் அயோக்கியர்கள், திருடர்கள், கொலைகாரர்கள், மோசடிப் பேர்வழிகள் ஆகியோரை வீட்டுக்குள் விடுவதற்கு விரும்ப மாட்டோம். ஆனால் அவர்கள் அனைவரும் தொலைக்காட்சியின் வழியாக நமது வீட்டுக்குள் வந்தே விட்டார்கள்.

திரைப்படங்களையும், பாடல்களையும் நினைத்தால் எனக்கு அவர் சொன்னது சரியென்று தோன்றுகிறது.இந்த மேதாவிகளுக்கு நான் சூடு சுரணை ரசனை உள்ளவர்கள் சார்பில் சொல்வது இதுதான், தயவு செய்து பாடலை எழுதாதீர்கள், எழுதினாலும் அதைப் பாடல் என்று சொல்லாதீர்கள், சொன்னாலும் அதை சொந்தக்குரலில் பாடி எங்களைக் கொல்லாதீர்கள், தனியாக நாலு பேரிடம் பாடிக்காட்டி என்ன கிடைக்கிறதோ வாங்கிக் கொள்ளுங்கள். நிறுத்துங்கடா டேய்.
Download As PDF
Bookmark and Share

Post Comment