புலம்பல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புலம்பல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நடிகர் சிம்பு பாடல் எழுதாவிட்டால் குடிமுழுகி விடுமா ?


பல நாட்களாக வயிற்றெரிச்சலில் இருக்கிறேன். இவனுக்கெல்லாம் எதற்கு இந்த வேலை என்று பெருந்தன்மையாக திட்டுவதை விட இவருக்கெல்லாம் இரக்கமே இல்லையே என்று நம் மீதே பச்சாதாபமாக இருக்கிறது. நான் கொஞ்ச நாளுக்கு முன்பு பயந்தேன். அது இப்போது நடந்தே விட்டது. அது என்ன ?

அதற்கு முன்பு சில வரிகள்

இது சலிப்பூட்டும் ஒரு பெரிய இடுகை, கோர்வையில்லாமல் புலம்பலாகவே எழுதியிருக்கிறேன். இதற்கு மேலும் விரும்பியவர்கள் தொடரலாம்.

 
தமிழ் மொழியை நாட்டியமாடும் நயத்துடன் பாடல்களாக எழுதியவர் விஜய டி ராஜேந்தர். அவரை மிகப்பெரும் கவிஞர் என்று பாராட்டத்தக்கவராக இல்லாத போதும் அவர் வலைப்பூவிலும், ஃபேஸ்புக்கிலும் எழுதும் நம்மைப் போன்ற சராசரிக் கவிஞர்களை விடவும் திறமையும், கவிதை, பாடல்கள் எழுதும் ஆற்றலும் பெற்றவர். திரைப்படத்துறையில் குறிப்பிடத்தகுந்த ஒருவரான அவருக்குப் பிறந்த ஒரே காரணத்தால் நடிகனாகி நம் உயிரை வாங்கி வருபவர் அவரது மகன் திருவாளர் சிலம்பரசன்.

அவரது இரண்டாவது படமான "தம்" என்ற காவியத்தை திரையரங்கத்தில் கண்டும் உயிருடன் விண்டவன் நான். அதனால் எனது உணர்வுகளைப் புரிந்து கொள்ள தம், குத்து போன்ற படங்களைப் பார்த்தவர்கள் மட்டுமே முடியும். அவர் மீது நான் கொண்ட பிரமிப்புக்கு உதாரணமாக ஒன்றைச் சொல்கிறேன். எனக்கு கல்லூரி நண்பி ஒருவர் மீது அதிக பாசமும் மதிப்பும் வைத்திருந்தேன். எனக்குப் பிடித்த நடிகர் சிம்பு என்று அவர் சொன்ன ஒரே காரணத்திற்காக அவளிடம் நானும், இன்னொரு நண்பனும்  சொன்னது "உம்மேல இருந்த மரியாதையே போச்சு".  யாராவது சிம்புவைப் பிடிக்கும் என்று சொன்னாலே அவரை ஒரு மாதிரியான ஆளா இருப்பாப்பிடியோ என்றுதான் எண்ணும் அளவுக்கு அவரைப் பிடிக்கும். எங்காவது பேருந்திலோ, அல்லது வேறு எங்காவது படம் ஓடும் இடத்தில் மாட்டிக் கொண்டால் மட்டுமே படம் பார்க்க வேண்டிய நிலைக்கு ஆளாவேன். நானாக படத்தை விரும்பிப் பார்ப்பதில்லை. எந்தத் திரைப்படமும். அங்காடித் தெரு, ஆரண்ய காண்டம், வழக்கு எண் வகையான படங்களையாவது பார்க்க வேண்டும் என்று நினைப்பதுண்டு ஆனால் அதுவே நடக்க வில்லை. விஸ்வரூபம் கூடப் பார்க்கவில்லை. இதன் மூலம் எனக்கும்  திரைப்படங்களுக்குமான இடைவெளியை அறியலாம்.

இருப்பினும் திரைப்படமும் அதன் தாக்கமும் தூணிலும் துரும்பிலும் நீக்கமற நிறைந்திருப்பதால் அதைப்பற்றி முற்றிலும் தவிர்க்கவியலாமல் கேள்விப்படவும், பேசவும் நினைக்கவும் நேர்கிறது. இந்த எழவெடுத்த திரைப்படங்களின் ஒரு சில காட்சிகளைத் தொலைக்காட்சியில் காணும்போதே எரிச்சல் பற்றிக் கொண்டு வருகிறது. முக்கியமாக சிம்பு, தனுஷ் ஆகியோரின் படங்களும் சரி பாடல்களும் சரி உலகமாக எரிச்சலாக இருக்கிறது.

நான் முடிந்த வரை இதையெல்லாம் பார்ப்பதையும் பாடல்களைக் கேட்பதையும் தவிர்த்தே வந்திருக்கிறேன். ஆனாலும் விதி நம்மை விடுகிறதா ? நான் பொதுவாக எனக்குப்பிடித்த நபர்களைப் பற்றிய எதிர்மறை செய்திகளை எதிர்கொள்வதில் இயல்பாக எடுத்துக் கொள்ள முடிவதில்லை. எடுத்துக்காட்டாக தற்போது குமுதம் இதழில் இளையராஜாவின் பேட்டியைப் படித்தால் எடுத்தெறிந்த மாதிரி பேசும் இளையராஜாவின் மீது மரியாதை போய்விடும். அதனால் அதைப் படிப்பதில்லை. கமல்ஹாசனை அதிகம் வெறுத்து விடுவேனோ என்று உன்னைப் போல் ஒருவன், விஸ்வரூபம் விமர்சனங்களைப் படித்ததால் அப் படங்களை பார்க்கும் ஆசையே போய்விட்டது.

ஒரு சில படங்களில் வரும் ஒரு பாடல் வரியோ அல்லது காட்சியோ என்னை மிகவும் எரிச்சல் படுத்தி விடும். எடுத்துக்காட்டாக

ஐயா படத்தில் சரத் ஒரு காட்சியில், மனைவியை ஒருவன் மிகவும் கொடுமைப்படுத்துவானாம். அதற்கு அவனுக்கு பாடம் புகட்டும் விதமாக அவனது இடது கையை உடைத்துவிட்டுச் சொல்வார், அம்மா கூட செய்ய முடியாத வேலையை பொண்டாட்டிதான் செய்வா. இதன் மூலம் அவனது இடது கையை உடைத்து கணவனின் குண்டி கழுவும் வேலையை அந்தப் பெண்ணின் தலையில் கட்டிவிடுவார். இதன் மூலம் அந்த ஆண் பொண்டாட்டியின் பெருமையை உணர்ந்து கொள்வானாம். சரி. இது கணவனிடம் அடிவாங்குவதைவிடவும் கொடுமையான தண்டனையல்லவா ?

வரலாறு படத்தில் தன்னை ஆம்பிளையா என்று கிண்டல் செய்த பெண்ணை பாலியல் வன்முறை மூலம் பதில் சொல்லும் நாயகத்தனம்

தேவர் மகனில் வடிவேலு கமலுக்கு செருப்பு எடுத்துத் தரும் காட்சி

முதல்வனில் முந்தானையை எடுத்து என்னையே எடுத்துக்க என்று நாயகி சொல்லும் காட்சி

இப்படியாக பல இருக்கின்றன. இது போன்றே பல காட்சிகளிலும் எதுக்குடா இப்படி எடுக்கறானுக என்றெல்லாம் நினைத்துக் கொள்வதுண்டு.

எனக்கு இந்த சிம்பு, தனுஷ் படங்களில் பிடிக்காதது என்னவென்றால் எல்லாமேதான். அந்தக் காலத்தில் காதல் கொண்டேன், திருடா திருடியை விரும்பித்தான் பார்த்தேன். இப்போதெல்லாம் பார்த்தால் சுத்தமாகப் பிடிப்பதில்லை. ஏனென்றால் இவர்களது படங்களில் பொறுக்கித்தனத்தை நாயகத்தனமாக சித்தரிப்பார்கள். இவர்கள் மட்டுமல்ல இன்னொருவர் கார்த்தி. பார்த்தாலே பற்றிக் கொண்டு வரும். இவனுகள் இளித்துக் கொண்டு நக்கலடிப்பதெல்லாம் பார்த்து விட்டு சுற்றி இருப்பவர்கள் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். எனக்கோ எரிச்சலாக வரும்.

சுள்ளான் படத்தில் தனுஷ் அவரது அம்மாவிடம் சொல்வார். அவரது அப்பா மணிவண்ணன். வீட்டுக்குள் நடக்கும் ஏதோ ஒரு விளையாட்டுச் சண்டையில் அம்மாவிடம் "உம் புருசனை மூடிட்டு இருக்கச் சொல்லு". எப்படி இவனெல்லாம் இப்படிப் படமெடுக்கிறான் என்று எரிச்சல்.

மற்றபடி இவன்களின் படங்களில் என்ன எழவு இருக்கிறதென்று பார்த்தால் ஒரு மண்ணும் இல்லை. அரை மணிநேரம் கூடப் பார்க்க முடிவதில்லை. நிற்க. நான் சொல்ல வந்ததை விட்டு வேறெங்கோ சென்று விட்டேன்.

இந்தத் திரைப்படப்பாடல்களுக்கு வருவோம். நான் மேலே சொன்னது போல சில படக் காட்சிகளை சகிக்கவே முடியாது என்பது போலவே பாடல் வரிகளும் அதில் சில.

இந்தியன் படத்தில்

அக்கடான்னு நாங்க உடை போட்டா
துக்கடான்னு நீங்க எடை போட்டா
தடா உனக்குத் தடா

 
தித்திக்குதே படத்தில் வரும்

"ஈராக்கு யுத்தம் முடிஞ்சு போச்சு அங்க
எனக்குள்ள யுத்தம் தொடங்கிடுச்சு இங்க"
 


பூவெல்லாம் உன் வாசம் படத்தில் வரும்

இலங்கையில் நடக்கின்ற யுத்தம் நிறுத்து
எனக்கு காதல் வந்ததே (திந்திந்தாரா பாடலில்)

 
டிஷ்யும் படத்தில் வரும்

அமெரிக்கா நீயானா ஆஃப்கானிஸ்தான் நானானா
ஸ்ரீலங்கா நீயானா எல்டிடிஈ நானானா 

 
அந்நியன் படத்தில் வரும்

ஹிரோஷிமா நீதானோ நாகசாகி நீதானோ
உன்மீதுதானோ என் காதல் பாமோ

 
கந்தசாமியில் வரும்

ஹிட்லர் பேத்தியே ஹிட்லர் பேத்தியே
காதலொன்றும் யூதனில்லை கொல்லாதே
காஷ்மீர் நான் நீ பாகிஸ்தான் தீராது டிஷ்யும்தான்

 
2009 களின் தொடக்கத்தில் ஈழப்போர் நடை பெற்ற போது எல்லா ஊடகங்களிலும் அடிபட்ட ஒரு சொல் பாதுகாப்பு வலயப்பகுதி (யில் தாக்குதல் பல பேர் சாவு). இதை அப்படியே ஒரு பாடலில் பதிவு செய்தார் நா. முத்துக் குமார் மோதி விளையாடு படத்தில்

பாதி காதல் பாதி முத்தம் போதாது போடா ..
காதல் என்னைக் காதல் செய்ய
பாதுகாப்பு வலயப் பகுதியில் ...
  


என்று ஒரு பெண்ணின் பிரிவாற்றாமையை விளக்குகிறது. பூவெல்லாம் உன் வாசம், தித்திக்குதே பாடலையும் எழுதியவர் வைரமுத்து. இந்தப் பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பெயர்களும் அதன் பின்னுள்ள வரலாறும் தெரிந்துதானே இதை எழுதியிருக்கிறார்கள். இப்படிச் செய்வது நியாயமா ? தடா என்றால் தெரியாதா ? அனுபவித்தவர்களைக் கேட்டால் தெரியும். பல இலட்சம் பேர் செத்துச் சுண்ணாம்பான வரலாற்றுப் பேரழிவுப் பெயர்களை ஆணுறுப்பு விரைப்பதற்கும், பெண்ணுறுப்பு விரிவதற்கு உவமைப்படுத்தலாமா ?

தில்லையாடி வள்ளியம்மா
தில்லிருந்தா நில்லடியம்மா


திரிஷாவுக்கு எழுதியது குருவி படத்தில். திரிஷாவை ஒப்பிட வேறு ஒன்றும் கிடைக்கவில்லையா ?

 
எங்கோ நடக்கு இழவுகள் நமக்கு பொழுது போக்கு, காதலுக்கும் காமத்துக்கும் ஒப்புமைப் படுத்துவதற்கா ? இதற்கெல்லாம் போராட்டமெல்லாம் செய்ய முடியாது எழுதுகிறவர்கள்தான் பொறுப்புணர்ந்து மனசாட்சியுடன் எழுதவேண்டும்.

"முள்வேலிக்குள்ளே வாடும் தமிழீழம் போல் ஆனேனே"   

தமிழ்நாட்டிலிருந்தும் இதைச் செய்தால், இதில் அடுத்தவர்கள் நம்மைப் புரிந்து கொள்ளவில்லை என்ற புலம்பல் வேறு. இதெல்லாம் ஒரு மேட்டரா, கிறுக்கத்தனம் என்று கடந்து விடவும் முடியும், சற்றே சிந்தித்தால் அதிலுள்ள வக்கிரம், பொறுப்பில்லா அலட்சியமும் புரியும்.

இப்போது மீண்டும் சிம்புவுக்கு வருகிறேன்.

இந்த ஜென்மம் எழுதிய பாடல்கள் !!?? (பாடல்கள் என்று சொல்வதை விட பாடலுக்கு ஒரு அவமானம் தேவையில்லை) கேட்டாலே எனக்கு வெறியாகிறது. லூசுப் பெண்ணே கூட பரவாயில்லை. அடுத்தடுத்து எழுதியதெல்லாம் எவ்வளவு கேவலமான வரிகள். என்னத்தைக் கிறுக்கிக் கொடுத்தாலும் தாம் தூமென்று மெட்டுப்  போட்டு அதை வெற்றிப் பாடலாக்கி விட யுவன் போன்ற இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அதனால் சிம்புவுக்குக் கவலையே இல்லை. ஆனா ஆவன்னா இனா ஈயன்னா என்று உளறினால் கூட அதை ஒரு பாடலாக்கி உலகத்தமிழர்களின் செவியைக் குதறும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. இவர் அடிவயிற்றிலிருந்து முக்கிப் பாடுவைதையும் நினைத்தால்

எவன்டி உன்னப் பெத்தான் கைல கெடச்சா செத்தான் ...........

வாடி வாடி ஹாட் பொண்டாட்டி
தேவையில்ல வைப்பாட்டி
 


 இப்ப ஒரு பாடலை ""இயற்றிப் பாடி"யிருக்கிறார். அதில் வரும் வரிகள்

மேட்டரை ஏன்டா பத்தினியாக்கற
பத்தினிய ஏன்டா மேட்டராக்குற"


இப்படியெல்லாம் என்ன மயிறுக்குடா எழுதறீங்க ? இதையெல்லாம் செல்பேசியில் வைத்துக் கொண்டு கேட்பதற்கு உலகத்தில் பல கிறுக்குப் பயல்கள் இருக்கிறார்கள். இந்த விடலை கிறுக்குகள் தொடங்கி வாலிப வயோதிக அன்பர்கள் வரை இது போன்ற ஆணாதிக்கக் குப்பைகளை ரசித்துக் கேட்கிறாரகள். அதாவது பெண்கள் என்றால் காதலித்து ஏமாற்றுகிறவர்கள், ஆண்கள் உண்மையானவர்கள் தியாகிகள் என்று தாங்களாகவே நம்பிக் கொண்டிருக்கு அல்பைகளுக்கு இது இனிக்கும். தண்ணியடித்துவிட்டு ஆட்டம் போடுவது இன்னும் கூடுதல் பலம்.

சொந்தமாக ஒண்ணும் தெரியாது. எல்லாமே பழைய பாடல்களின் ரீமிக்ஸ் அல்லது படங்களின் ரீமேக். எல்லாப் பாடல்களிலிலும் இவரது படங்களின் பெயர்களையும், பாடலின் வரிகளையும் தவறாமல் சொல்லிக்  கொள்ள வேண்டியது. 

இந்த சிம்பு அய்யா இதற்கு முன்பு செய்ததை நினைத்துப் பார்க்கவும், தன்னை லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று கடந்த 10 வருடங்களாகச் சொல்லிக் கொண்டவர். தற்போது யங் சூப்பர் ஸ்டார். இன்னும் கொஞ்ச நாளில் சூப்பர் ஸ்டார் என்று அவரே சொல்லிக் கொள்வார். பின்பு நாமும் சொல்ல வேண்டியதுதான்.

தனுஷ் ரஜினி மகளைத் திருமணம் செய்து கொண்டபோது பெரிய தியாகியாகி எங்கிருந்தாலும் வாழ்க என்றார்.  பின்பு மன்மதன் படத்தில் இது என்னுடைய சொந்தக் கதை என்று வசனம் வைத்து தனுஷின் முந்தைய படமான சுள்ளானில் நாயகியாக நடித்த சிந்து துலானியை காதலித்து ஏமாற்றுகிறவளாக நடிக்க வைத்தார் (கதை திரைக்கதை சிம்பு). நுண் அரசியல் புரியுதுங்களா ? இதெல்லாம் நான் மட்டும் சொல்லல, படம் வந்தப்ப எல்லாரும் பேசிக்கிட்டமாக்கும். அந்தப் படம் மிகப்பெரும் வெற்றிப் படமென்றும் சொல்லிக் கொண்டார்கள். அப்போது பெரிய தயாரிப்பாளராக இருந்தவர்தான் இந்தியன் தியேட்டர்ஸ் கிருஷ்ணகாந்த. அந்தப் படத்திற்கு பின்னர்தான் காணாமல் போனார். இயக்குநர் முருகன் இன்னும் கண்ணீர் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

 வல்லவன் படத்துக்காக ஓவர்டோஸ் விளம்பரம் நயன்தாராவின் உதட்டைக் கடித்து இழுத்து மிகப்பெரிய ஃப்ளக்ஸ் பதாகையை மவுண்ட் சாலையில் வைத்தார். (அதற்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன). பின்பு நயனுடன் சண்டையில் பிரிந்தவுடன் இருவரும் படுக்கையறையில் இருந்த உதட்டு முத்தத்துடன் கூடிய படத்தை இணையத்தில் வெளியிட்டு (இவல்லாம் எங்கூட படுத்தவதானே என்று ஊர் பேச) தானொரு சாக்கடை என்று காட்டினார். (பழி வாங்கிட்டாராம்)

ரஜினி நீண்ட நாட்களுக்கு பின் நடித்த சந்திரமுகி. அதில் நாயகி ஜோதிகா அதில் ரஜினி பெயர் சரவணன். ஒரு குப்பைத் தெலுங்குப் படத்தை ரீமேக் செய்து அதற்கு சரவணா என்று பெயரிட்டு அதில் ஜோதிகாவை நாயகியாக்கினார் சிம்பு.

தனுஷின் கொலைவெறிக்குப்போட்டியாக உலக சமாதான கீதம், தனுஷின் மயக்கமென்ன நடித்த ரிச்சாவே ஒஸ்தியில் நாயகி என்று இவரது அரை வேக்காட்டுத்தனம் தொடர்கிறது. இதெல்லாம் பாட்டெழுதினால் எந்த லட்சணத்திலிருக்கும் என்பதற்கு உதாரணமே இவர் எழுதும் பாடல்கள்.

எல்லாப் படங்களிலும் செக்ஸியான உடைகளில் தன்னைச் சுற்றி வந்து கதாநாயகி பாடுவது போலவும், பத்து பதினைந்து பிகினிகள் சுற்றி நின்று தடவுவது போலவும் நடிக்கும் இந்த மன்மதன் "எவன்டி உன்னைப் பெத்தான்" பாடலில் "உன் மானங் காக்கிற மேலாடை நாந்தான்" என்ற வரியையும் எழுதியிருக்கிறார். பெண்களின் மானம் மேலாடையில் இருக்கிறது என்று நம்பும் சொல்லும் சராசரி ஆண்களைப் போலவே இந்த மன்மதனும் நினைக்கிறாராம். எல்லாப் பெண்களும் இவர் சொல்கிறது போல மானத்துடன் இருந்தால் இவர் புரட்டி எடுப்பதற்கும் மோப்பம் பிடிப்பதற்கும் எந்தப் பெண் நடிக்க வருவாள்?

அடுத்த அறிவாளி தனுஷ், பெரிய இடத்துப் பொண்ணை மடக்கிப் போட்டு இரண்டு குழந்தைகளுடன் செட்டிலான பின்பு
ம், 20 வயது பையனைப் போலவே தன்னைக் கருதிக் கொண்டு அப்பையன்களுக்குப் பிடித்த மாதிரி இன்னும் ஒரு அங்குலம் கூட பெண்கள் மீதான வன்மத்தை மாற்றாமல் இன்னும் பாடல்களிலும் படங்களிலும் காட்டிக் கொண்டிருப்பவர். நல்ல சிவந்த நிறமுடைய நடிகைகளை நாயகிகளாகப் போட்டுக் கொள்ள வேண்டியது, அவர்களின் பின்னால் அலைவது, ஊறுகாய் மாதிரி பாடல் காட்சிகளில் மோந்து பார்ப்பது அவர்களும் அவ்வப்போது ஸ்லோ மோசனில் திரும்பிப் பார்ப்பது கடைசியில் இவரது உண்மைக் காதலை உணர்ந்து ஒத்துக் கொள்வது இதெல்லாம் இவரது படத்தின் கதைகள். கதாநாயகிகள் எனப்படும் நடிகைகளுக்கு என்றுதான் விடிவோ தெரியவில்லை.

ஆடுகளம் படத்திற்கெல்லாம் தேசிய விருதென்றால் அதை விடக் கேவலம் வேறெதுவுமில்லை. சூரியா தம்பி கார்த்திக்கும் இதுதான் கதைக்களம். நல்லா வாயில வருது.

அப்பாவி மாதிரி மூஞ்சியை வைத்துக் கொண்டு தண்ணியடித்து, தம்மடித்து பொறுக்கித்தனம் செய்ய வேண்டியது ஊரிலேயே அம்சமான பொண்ணைப் பார்த்தி ஈயென்று இளித்துக் கொண்டு சுத்த வேண்டியது இது மாதிரியான மொன்னைகளுக்கெல்லாம் நம்ம அண்ணந்தான் குரு. சொந்த வாழ்க்கையில் ஃபிகர்களைக் கரெக்ட் பண்ண முடியாமல் ஏங்கித் தவிக்கும் லட்சோபலட்சம் இளைஞ்ஜர்களின் ஏக்கத்திற்கு வடிகால் இவர். யாரடி நீ மோகினியில் இவர் பெரிய நிறுவனத்தில் நேர்காணலில் தேர்வாவதும், காதல் கொண்டேனில் முதல் நாள் வகுப்பில்  கணக்கு வாத்தி கோட்டாவில் வந்தவன் என்று திட்டியதற்குப் பிறகு கரும்பலகையில் இவர் ப்ராப்ளத்தை சால்வ் செய்வதும் ரஜினி படத்தையே விஞ்சும் செம மாஸ் சீன்ஸ் (இதே மாதிரி பிரிச்சுப் போட்ட ஹீரோ ஹோண்டாவை சரியாக மாட்டும் ரவிகிருஷ்ணா - 7G படத்தில். யூத்துகளை அடித்து வீழ்த்தும் மாஸ். நன்றாக பல்ஸ் பிடித்து வைத்திருக்கும் இயக்குநர் செல்வராகவன்). பெண்கள் மீது வன்மத்தையும் வெறுப்பையும் கக்கும் பாடல்களை கூச்சநாச்சமில்லாமல் எழுதுவார்.

உன்னைப் பெத்தவன் உன்னப் பெத்தானா செஞ்சானா ?

ஒய் திஸ் கொலவெறி 

இப்படித் தொடர்கிறது இவரது சேவை. இவரது அண்ணாரோ ஒரு படி மேலே போய் 

வெட்றா அவள கொல்றா அவள அடிடா அவள 

 
என்று வெறியேற்றுகிறார்.

நண்பனின் அப்பாவையும் தனது அப்பாவையும் அவர் இவர் என்று சொல்வது, அதே நேரம் மனைவி, நண்பிகளின் அப்பாக்களுக்கு மரியாதை இல்லை. அவ அப்பன் இருக்கானே என்று ஒருமையில் விளிப்பதும் ஆண்கள் செய்வதுதான். அந்த அடிப்படையில்தான் இவர்கள் எழுதினால் அவர்கள் ரசிக்கிறார்கள். இந்தப் பெண்களெல்லாம் எப்படி இவனுகளையெல்லாம் பிடிக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தாலே கசக்கிறது. ஆத்திரமே வராதோ ? இவரு சம்சாரத்தோட அப்பா ரஜினியை, உங்க அப்பன் இருக்கானே என்றா சொல்வார். மூச்சுக்கு மூச்சு ரஜினி சார்
ரஜினி சார்னு கடையத்தெரியுதுல ?

இடுகையின் ஆரம்பத்தில் நான் சொன்னது, நான் பயந்தது நடந்தே விட்டது. அது என்ன வென்றால் இந்த சிம்பு தனுஷ் செல்வராகவன் வகை அற்பர்கள் பாடல்கள் எழுதினால் கொஞ்சநாளில் ஙொம்மா, ஙோத்தா தொடங்கி தேவிடியா பயல் வரை எல்லா வசைச் சொற்களையும் இவர்கள் எழுதும் "பாடலில்" கொண்டு வருவார்கள் என்று நினைத்தேன். உலக சமாதானத்திற்கு கீதம் இசைத்த கவிப்பொறுக்கி அல்லது பொறுக்கிக் கவி சிம்பு அதை நிறைவேற்றி விட்டார். இந்த காதலுனு சொன்னவன் என்ற பாடலை முடிக்கும் போது "த்தா' என்ற ஒலியுடன் முடிக்கிறார்.  இந்த "த்தா" என்பது வரிக்கொருமுறை சென்னையிலிருப்பவர்கள் பயன்படுத்தும் வசைச் சொல். அது ங்கோத்தா என்பதன் சுருக்கம். அதைச் சொல்லும் பாதிப்பேருக்கு அதன் பொருளே தெரியாது என்பது தனிக்கதை. 


விஜய் பகவதியில் பாடிய போடாங்கோ பாடலுக்கும் இது போல சலசலப்பு வந்தது. குங்குமமோ அல்லது குமுதமோ ஒரு பேட்டியில் விஜய் சொன்ன விளக்கம் அது கெட்ட வார்த்தையில்ல போடா கோமாளின்னு சொல்றோமில்லையா அது மாதிர் என்றார். 


இந்த மாதிரி நடிகர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் தனது படங்களில் ? பொறுக்கியாக இருப்பது வீரம், ஆண்மை, நாயகத்தனம்.

பெண்கள் பின்னாடி சுற்ற வேண்டும். அவளுக்கு சொந்த புத்தியெல்லாம் கிடையாது அவள் உனக்குத்தான் கிடைப்பாள். அதுதான் காதல் உண்மைக் காதல்.

முக்கியமாக பெண்களை ஃபிகர், ஆண்டி என்றுதான் சொல்ல வேண்டும், இல்லையென்றால் நீ ஆணே இல்லை. சந்தானத்துடன், கருணாசுடன் இணைந்து அழகாக இல்லாத பெண்களை அட்டு ஃபிகர், அய்யே என்றும் இகழ வேண்டும். (என்னமோ இவனுக மூஞ்சி மட்டும் டாம் க்ரூஸ் மாதிரி)

ஆண்கள் பாவம் பெண்கள் ஏமாற்றுப் பேர்வழிகள், அலைய விடுகிறவர்கள் என்று பெண்களைத் திட்டுவதே பாடல்.

கிளப் டான்ஸ், பப், பாப் இசை, குத்துப் பாட்டு என்று பட்டையைக் கிளப்பினாலும் பெண்ணுக்கு அறிவுரை சொல்லவும் கற்பைக் காக்கவும் கற்காலத்திற்கு ரிவர்ஸ் கியர் போடுவாரகள்.

இவர்களின் அல்லக் கைகளாக சந்தானம், சிவகார்த்திகேயன், கருணாசை வைத்து சொரிந்து கொள்ள வேண்டியது.

இன்னும் விடலைகள் ஆண்கள் செய்தால் மன்மதன், பெண்கள் செய்தால் - மேட்டர் என்ற அளவுகோலுடன்தான் திரிகிறார்கள். ஆணுக்கு வந்தா ரத்தம், பொண்ணுக்கு வந்தா தக்காளிச் சட்னி. ஆண் செய்தால் என்ஞாய்மென்ட், பெண் செய்தால் கற்பு போச்சு. இந்தக் கான்செப்ட்டை ஒத்துக் கொண்டவர்கள் கொஞ்சமும் உறுத்தலின்றி எல்லாப்படங்களையும், பாடல்களையும் மனசாட்சியைக் கழட்டி வைத்து விட்டு ரசிக்கலாம். ரசிகன் என்று சிலிர்த்து கொள்ளலாம். ஆணாதிக்க அரிப்பையும் சொரிந்து கொள்ளலாம். பொறுக்கித்தனத்தை ஏற்றிப் போற்றலாம்.

இவர்களின் படங்கள், பாடல்கள் மட்டுமல்ல இன்னும் பல பேர்கள் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லாப் பாடல்களும் காதலைச் சொல்வதில்லை. வெறும் காமத்தைத்தான் சொல்கின்றன. பெண்ணின் அழகைப்புகழ்கின்றன (அழகே அழகே அழகின் அழகே நீயடி, அழகோ அழகு உன் கண்ணழகு). உடலை வர்ணிக்கின்றன (இடுப்பிருக்கானா இல்லையானா இலியானா, விட்டம் மட்டம் படித்தேன் உன் நெஞ்சின் மேலே). உடலை வர்ணிப்பதும், அழகைப் புகழ்வதும் எப்படியப்பா காதலாகும் ? மெலடிகளில் கொஞ்சம் கவித்துவமாக எழுதியைதே குத்துப் பாட்டில் கொச்சையான வரிகளைப் போட்டால் மாறிவிடுகிறது. குத்து, போடு, போட்டுத்தாக்கு, வெச்சிக்க என்று காது கூசுமளவிற்கு அடித்து விளையாடலாம்.

என்ன கருமாந்திரமோ இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டு எழுத வேண்டுமா என்று தோன்றுகிறது. இரண்டரை மணி நேரம் ஒரு வாரத்துடன் மறக்கப்படும் இந்தத் திரைப்படக் குப்பைகளைப் பற்றியும் பாடல்களையும்தானே பற்றி பேசிக்கொண்டும், நினைத்துக் கொண்டும், எழுதுக் கொண்டுமல்லவா நாம் எல்லோரும் வாழ வேண்டியிருக்கிறது.  இணையம், அச்சு ஊடகம், தொலைக்காட்சிகள் வரை எல்லோரும் இதற்குத்தானே இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால்தானே நானும் புலம்ப வேண்டியிருக்கிறது.

எனக்கு
ஜக்கி வாசுதேவ் சொன்னது ஒன்று நினைவுக்கு வருகிறது.  நாம் அயோக்கியர்கள், திருடர்கள், கொலைகாரர்கள், மோசடிப் பேர்வழிகள் ஆகியோரை வீட்டுக்குள் விடுவதற்கு விரும்ப மாட்டோம். ஆனால் அவர்கள் அனைவரும் தொலைக்காட்சியின் வழியாக நமது வீட்டுக்குள் வந்தே விட்டார்கள்.

திரைப்படங்களையும், பாடல்களையும் நினைத்தால் எனக்கு அவர் சொன்னது சரியென்று தோன்றுகிறது.இந்த மேதாவிகளுக்கு நான் சூடு சுரணை ரசனை உள்ளவர்கள் சார்பில் சொல்வது இதுதான், தயவு செய்து பாடலை எழுதாதீர்கள், எழுதினாலும் அதைப் பாடல் என்று சொல்லாதீர்கள், சொன்னாலும் அதை சொந்தக்குரலில் பாடி எங்களைக் கொல்லாதீர்கள், தனியாக நாலு பேரிடம் பாடிக்காட்டி என்ன கிடைக்கிறதோ வாங்கிக் கொள்ளுங்கள். நிறுத்துங்கடா டேய்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

திருமணச் சந்தையின் நிலவரம் அச்சமாக இருக்கிறது - இவர்கள் இப்படித்தான் - 3

என்னவாகப் போகிறது தெரியவில்லை. எதிர்காலத்தில் திருமணத்திற்கான சடங்குகளும் செலவுகளும் மிகப் பெரிய அளவில் பரிணமிக்கப்போகின்றன என்பது  மட்டும் தெளிவாகத் தெரிகிறது. மாப்பிள்ளை வீட்டினரின் பேராசை தெரிந்த்த கதைதான். தற்போது அது முன்னேறி பெண் வீட்டுக்காரர்கள் ஆட்டம் போடத் துவங்கியுள்ளனர்.

பெரும்பான்மையான பெண்கள் இன்னும் 50 வருடம் பின்னோக்கியே வாழவேண்டிய சூழலில் வசதியும் வாய்ப்பும் ஓரளவு வாய்க்கப் பெற்றவர்களோ, தமக்குக் கிடைத்த வாய்ப்பை வேறுவழியில் பயன்படுத்தி வருகின்றனர். வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான வழக்குகளை தவறாகப் பயன்படுத்துகிறவர்கள், பாலியல் வன்முறை வழக்குகளைத் தவறாகப் பயன்படுத்துகிறவர்கள் என பட்டையைக் கிளப்புகின்றனர். இதே போல் தீண்டாமை வன்கொடுமை வழக்குகளையயும் சிலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர். இதையே சாக்காக வைத்து இது போன்ற வரதட்சிணைக் கொடுமை, தீண்டாமை, பாலியல் வன்முறை வழக்குகளெல்லாமே பொய்யாக சித்தரிக்கப்படுபவை என்று சொல்லி வருவதையும் நாம் காண்கிறோம்.

தற்போது கணவர் சங்கம் வைத்து ஆண்கள் உரிமைக்காகப் போராடும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். இதில் நான் சொல்ல வந்தது திருமணம் அதன் செலவு குறித்து. இப்போது நடுத்தரக் குடும்பங்களில் மாப்பிள்ளை பார்ப்பவர்கள் மிகப் பெரிய தகுதிகளை எதிர்பார்க்கின்றனர். பெண்கள் குறைந்த பட்சம் இரண்டு பட்டங்கள் பெற்றவர்களாக இருக்கின்றனர். வேலைக்குச் செல்லும் பெண்களின் கணக்கு வேறு. இவர்கள் திருமணம் செய்து வைப்பதற்காகவே வளர்க்கப்படுகின்றனர். திருமணம் நடக்கும் வரை சும்மாயிருக்க வேண்டாமே என்று படிக்க வைக்க அனுப்பப்படுகின்றனர்.

படித்த முடித்தவுடன், ஏற்ற துணை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இவர்கள் படித்ததைக் கொண்டு ஒரு பணியைத் தேடிக்கொள்ளவும் முடியாது. கல்யாணம் ஆகப்போற பொண்ணு வேலைக்கு ஏன் போக வேண்டும் என்றுதான். இவர்களுக்குப் படிப்புச் செலவு, திருமணம், நகை, சீதனம், இன்ன பிற பொருட்கள், சீமந்தம், குழந்தை பிறந்தால் ஆகும் செலவு என ஏகப்பட்ட சடங்குகள். செலவுகள். இதையெல்லாம் செய்து முடிக்க ஆகும் செலவு நிச்சயம் கடன் வாங்காமல் முடியாது அதை அடைக்க ஆகும் பல வருடங்கள் இல்லையென்றால் பரம்பரை சொத்து கொஞ்சம் விற்க வேண்டும். இதெல்லாம் பெண்கள் பக்கப் பிரசச்சனைகள்.

ஆண்களுக்கு வேறு பிரச்சனை. பாதிப்பேருக்கு நிரந்தர வேலையே தொழிலோ இல்லை. எல்லா நடுத்தரப் பெற்றோரும் அதிகமாக எதிர்ப்பார்க்கத் தொடங்கி விட்டனர். முன்பெல்லாம் வரதட்சணை என்ற சொல் எல்லாரையும் அச்சுறுத்தும். தற்போது பெண் வீட்டுக்காரர்களின் விதிமுறைகள் மூச்சு முட்ட வைக்கிறது. 

50000 சம்பளம், சொந்த வீடு, சொத்து என அவர்களின் நிலைக்கேற்ப கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். யாரோ ஒருவர் நிலைத்தகவல் போட்டிருந்தார்கள் இப்படி, வரதட்சணை கேட்பது தவறு ! ஆனால் சொந்த வீடு கார், ஒரு இலட்சம் சம்பளம் உள்ள பையன் வேண்டும் என கேட்பது தவறில்லையா என. அது உண்மைதான் கிட்டத்தட்ட.

போதாக்குறைக்கு ஜாதகம் என்ற ஒன்றைப் பார்க்கிறார்கள். ஜோதிடர்களுக்கும், தரகர்களுக்கும் செமயான வணிகம் அது. யார் இது வேண்டுமென்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள் என்று பார்த்தால், 25 அல்லது 30 வருடங்களுக்கு முன்பு ஜாதகம் பார்க்காமலே திருமணம் செய்து வாழ்ந்து காட்டிய இன்றைய பெற்றோர்தான். பல நவீன சடங்குகளை ஏற்றுக் கொண்டு விட்டார்கள். ஆனால் ஒழித்துக் கட்ட வேண்டிய ஜாதகம், சீதனம் என தேவையில்லாத காலத்திற்கொப்பாத பெண்ணடிமைச் சடங்குகளையெல்லாம் இன்னும் கட்டிக் கொண்டு அழுகின்றனர்.  படித்த பெண்களே இது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அலட்டிக் கொண்டாலும் யாரும் கேட்பதாயில்லை. அதை நினைக்காமலிருந்தால் மனச்சுமை படத் தேவையில்லை அவ்வளவே.

முன்பு இலையில் அருந்தியது போய் பஃபே முறைக்கு மாறிவிட்டார்கள். பிளாஸ்டிக் டம்ளருக்கு மாறியாகிவிட்டது. இனி இலை மட்டும்தான் மிச்சம். அதற்கும் பிளாஸ்டிக் பயன்படுத்தத் தொடங்கினாலும் இன்னும் நவீனமாகிவிடும். ஆனாலும் ஜாதிக்குள் திருமணம், தாலிகட்டுவது, காரை சீதனமாகக் கொடுப்பது, அதை திருமண வரவேற்பிலேயே முன்னாடி நிற்க வைத்து ஒரு காட்டு காட்டுவது என்று நடந்து கொண்டிருக்கிறது.

அதே நேரம் சொந்த ஜாதியில் பெண் கிடைக்காவிட்டால் வேறு ஜாதியில் பெண் எடுப்பதும் நடக்கிறது. மேலே போய் மலையாள நாட்டில் போய் வெள்ளைத் தோல் பெண்கள் எடுத்து வரும் மறத் தமிழர்கள் இருக்கிறார்கள். அதே போல், ஜாதகம் பொருந்தவில்லை எனினும், இரண்டு வீட்டினருக்கும் பிடித்துப் போய்விட்டால் திருமணம் நடந்து விடுகிறது. ஜாதகத்தைக் கண்டுகொள்வதில்லை. இல்லையென்றால் இன்னொரு ஜோசியத்தைப் பார்த்து ஏதாவது ஒரு பரிகார பூஜையை நடத்தி விட்டால் போச்சு. ஜாதகம் என்பதை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கே. இன்னும் சில ஜோதிடர்கள் இரண்டு பேரை சேர்க்க வேண்டுமென்றால் அதற்குத் தக்கபடி மாற்றியும் கொடுத்து விடுகிறார்கள். இப்படித் தேவைப்பட்டால் எந்த சம்பிரதாயத்தையும் சடங்கையும் மாறி செய்கின்றனர். ஆனால் அதே ஒரு பருவமடைந்த வேறு ஜாதியில் ஆணும் பெண்ணும் தனிப்பட்ட முறையில் மனமொன்றித் திருமணம் செய்வதை மட்டும் எதிர்க்கின்றனர்.

3 என்ற படத்தில் பாடல் பார்த்தேன். அதில் நாயகன் நாயகிக்கு சாராயக் கடையில் வைத்து தாலிகட்டுவான். இது  போன்றதுதான் சடங்குகளும். காதலனும், காதலும் ஒன்றாக மதுக்கடைக்குச் செல்வது வரை ஜாலி, என்டெர்டெயின்மென்ட் என்று எடுத்துக்கொள்வார்கள், அதே திருமணம் என்றால் தாலியைத்தான் கட்ட வேண்டும் என்ற கற்பிதம் இருக்கிறதே அதுதான், நம்மாளுகள் தேவையில்லாத சடங்கை விடுவதில்லை ஆனால் நாகரீகம் என்ற பெயரில் சீரழிவை மட்டும் ஏற்றுக் கொள்வார்கள்.

என்து உறவினர் சொன்ன ஒரு செய்தியைக் கேட்ட பின்னர்தான் இதை எழுதத் தோன்றியது. தெரிந்த இரு குடும்பத்தினர் பற்றிச் சொன்னார். ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை ஒன்று இப்போதுதான் 4 -வது படிக்கிறது. அதற்கு இப்போதே 80 பவுன் தங்கநகை வாங்கி வைத்து விட்டார்கள். அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகும்போது, 200 சவரன் போட வேண்டுமென்பதினை இலக்காக வைத்திருக்கிறார்களாம். இன்னொருவரின் வீட்டில் இதே கதைதான் ஆனால் பெண் குழந்தை பிறந்த உடனே வாங்கிச் சேர்க்க ஆரம்பித்து விட்டார்களாம்.

தங்கம் விற்கும் விலைக்கு யாரும் அடிபட்டதாகத் தெரியவில்லை. மேலும் மேலும் ஆட்டம்தான் போடுகிறார்கள். ஆமா சீதனம் வாங்கிறது தப்பா இல்லையா என்ற விவாதமெல்லாம் போயே போச்சு. பெண்ணடிமைத்தனம் என்று அதிகமாகப் பேசுகிறோம். ஆணுக்கு மட்டும் என்ன உரிமை இருக்கிறது திருமணத்தில். ஒரு ஆண் தான் விரும்பியபடி வேறு ஜாதியில் உள்ள பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள சம்மதம் பெற்றோரிடம் வாங்கிவிட முடிகிறதா ? இன்னும் முக்கால்வாசிப்பேர் ஜாதியை விட மாட்டார்கள். எனக்கு வரதட்சணை வாங்க விருப்பமில்லை என்று சொன்னால் விட்டு விடுவார்களா ?

பொண்ணப் பெத்தவனெல்லாம் இனித் துண்டப் போட்டுட்டு போக வேண்டியதுதான் -

இனியெல்லாம் பசங்களுக்குப் பொண்ணு கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம்தான் -

இவையிரண்டும் திருமணச் சந்தையின் இருவேறு துருவங்கள்

என்னவோ புலம்பனும்னு தோணியது அவ்வளவுதான்.
 
Download As PDF
Bookmark and Share

Post Comment

அப்பாடக்கர்கள் தொல்லை தாங்க முடியல

இந்த அப்பாடக்கர் அப்படிங்கற சொல்லைத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கிய சந்தானம் அத யாருக்குச் சொன்னாருனு படம் பாத்த எல்லார்க்குமே தெரியும். படத்துல நயனோட அப்பாவா வர்றவர் வெட்டிப்பயல் ஆர்யாவ அடிக்கடி கேப்பாரு "தம்பி நீங்க அப்படி என்னதான் பண்றீங்க"ன்னு. அவரு கேட்டதுல ஒரு நியாயமிருக்கு, ஏன்னா தன்னோட மருமகனோட தம்பி அதில்லாம தன்னோட ரெண்டாவது பொண்ணுக்கு நூலு விடறதுனால பொண்ணோட அப்பாவா அந்த அக்கறையும் பயமும் இருக்கணும். ஆனா இந்த அப்பாடக்கருங்க இருக்காங்களே அதாங்க நம்மளோட மாமா, மச்சான், சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சித்தி, தாத்தா, பாட்டி தூரத்து சொந்தம், பக்கத்து சொந்தம், தெரிஞ்சவங்க,  வேண்டியவங்க, அதில்லாம இவங்களோட சொந்தக்காரங்க, இவங்களோட கூட்டாளிக இப்படி எல்லாருமே ஒரு மாதிரியாத்தான் அலையராங்க போல.

(எச்சரிக்கை இது முற்றிலும் என்னுடைய சொந்த புலம்பல் மட்டுமே ரொம்ப அறுவையா இருக்கும். பெரிய சுவாரசியமாகவோ நகைச்சுவையோ இருக்காது. இவைகளை எதிர்ப்பார்ப்பவர்கள் இந்த இடுகையைப் படித்து ஏமாந்து உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று தயவு கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன்)

இப்ப நீங்க ஒரு ஆணா இருந்தீங்கன்னா நான் சொல்றத நீங்களும் கொஞ்சமாவது அனுபவச்சிருப்பீங்க. முக்கியமா உங்களுக்கு 20 லிருந்து 30 வயதில இருக்கற ஆளா இருந்தா இன்னும் நல்லா தெரிஞ்சிருப்பீங்க. நீங்க கல்லூரியில் படிப்ப முடிக்கற நாட்களிலிருந்து ஒரு விதமான அழுத்தத்தை இவங்க உங்களுக்குக் கொடுத்துட்டே இருப்பாங்க.

உங்க வீட்டுக்கு வர்ற சொந்தக்காரங்களோ இல்ல நீங்க வழியில எங்கயாவது மாட்டிகிட்டீங்கனாக்க இப்படித்தான் கேட்டு சாகடிப்பாங்க முக்கியமா உங்க கூட யாராவது இருக்கும் போதுதான் மாட்டுவீங்க. இந்த மாதிரி கேட்கறவங்க பெரும்பான்மையா படிக்காதவங்களா இருக்காங்க. படிச்சவங்களா இருந்தாலும்  நிலவரம் தெரியாதவங்களா இருக்கிறாங்க. இவங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் டாக்டரு, வக்கீலு, இஞ்சினீயரு, வாத்தியாரு, கவுருமெண்டு இவ்வளவுதான். பெரும்பான்மையானவங்க படிக்கிறது இது எதுவுமே இல்ல. பொறியியல் குறிப்பிட்ட சிலர்,  மருத்துவம் மிகச்சிலர், இது போக அதிகம் பேர் படிக்கிறது கணிணி தொடர்பான துறைகள், மத்தவங்க பிகாம், பிபிஏ, பிபிஎம், இன்னும் பாலிடெக்னிக், டிப்ளமோ, சில அறிவியல் தொடர்பான படிப்புகள்தான். இதுல எங்கயாவது வேலைக்கு உத்தரவாதம் தர்ற படிப்பு எதுன்னு கேட்டா எதுவுமே இல்லன்னுதான் சொல்ல முடியும். ஐஐடி, இன்னும் சில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், சில பெரிய கல்லூரிகள் இவைகளில் படிச்சா மட்டும்தான் நேர்காணல்ல கலந்துக்கற வாய்ப்பே கிடைக்கும். இல்லன்ன பொட்டியக் கட்டிட்டு சென்னைக்கோ பெங்களூருவுக்கோ போயி  தெருத்தெருவா அலஞ்சாதான் ஏதாவது மாட்ட வாய்ப்பு இருக்கு. நல்லா படிங்க மாட்ட வாய்ப்பு இருக்கு உறுதியா கிடைக்கும்னு சொல்ல முடியாது. இதுதான் நிலவரம். இதெல்லாம் படிச்சு முடிச்சப்பறம்தான் நமக்கே தெரியும். இந்த லட்சணத்துல சோத்துக்கு வந்தமா தின்னுட்டுப் போனமான்னு இல்லாம

என்ன படிக்கற ?,

எதப்பத்தி படிக்கற ?

என்ன மாதிரி வேல கெடைக்கும் ?

கவுருமென்ட்டு வேல கெடைக்குமா ?

இப்படியெல்லா கேட்டுட்டு அப்படியே பேச்சுவாக்கில "இந்தக் காலத்துலெல்லாம் எங்கங்க வேல கெடக்குது. எல்லாரும் டிகிரி படிச்சிட்டு வேலைக்குப் போகனும்னா நடக்கறதா ? கம்முனு படிக்க வைக்கிற செலவுக்கு தொழில பாத்துகிட்டாலாச்சு கைக்காசு மிச்சமாகும்.

இந்த மாதிரி கொளுத்திப்போட்டுட்டு போக வேண்டியது. கெடச்ச இடத்திலெல்லாம் நோண்டி நொங்கெடுக்க வேண்டியது. இங்க எங்களுக்கு டங்குவாரு அந்து போகுது.

போதாக்குறைக்கு நான் படிச்சது உயிர்நுட்பவியல் (Biotechnology) இத படிச்சா என்ன வேல கிடைக்கும்ன்னு யாருக்குமே தெரியாது. இவங்களுக்கு நான் பதில் சொல்ல பட்ட பாடு இருக்கே யப்பப்பா !! அத ஏங் கேக்கறீங்க !

அதாவது பரவால்ல வேல கிடைக்காம சுத்திட்டிருந்தப்பத்தான் உச்ச கட்ட மனஅழுத்தமே வந்திரும். ஒவ்வொரு முறையும் நேர்காணலுக்குப் போயிட்டு வெளியே வரும்போது ஒரு மாதிரியா இருக்கும். வெறுமையா இருக்கும். ரெஸ்யூமை தூக்கிட்டு சாலையில போறப்ப வர்றப்ப எல்லோரும் நம்மளையே பாக்க்ற மாதிரி கூச்சமா இருக்கும். நேர்காணல்ல நாலு சுவத்துக்குள்ள நாப்பது பேர்க்கு நடுவுல மானம் போறது தனிக்கதை.

அதுவும் நான் படிச்சு முடிச்சப்ப சரியா உலக பொருளாதார தேக்கம் வந்தது. 2008 இல். அப்ப இருக்கறவங்களுக்கே வேலை எப்ப வேணா போகுன்ற நிலைமைதான் இருந்துச்சு. என்னதான் நாம முக்குனாலும் ஒரு சிலருக்குத்தான் ஓரளவுக்கு மனநிறைவான வேலையே கிடைக்குது. ஒருவேளை வேலை நமக்குப் பிடிக்கலன்னாலும் ஊதியமாவது ஓரளவுக்கு வந்தால் கூட போதும். ஆனா பாருங்க இது எத்தன பேருக்கு அமையும்.

தகவல் தொழில் நுட்பத்துறையில் இருக்கறவங்களுக்கு ஓரளவுக்கு காலூன்றி விட்டார்கள் என சொல்லலாம். பணிச்சுமை மிகவும் அதிகம்தான். இருந்தாலும் ஒரு சிலருக்கு மட்டுமே சமாளிக்க முடியாதளவுக்கு இருக்கு சிலர் பரவால்ல என்கிற மாதிரிதான் சொல்கிறார்கள். இருந்தாலும் அவர்கள்தான் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் ஓரளவு முன்னேற்றப்பாதையில் இருக்கிறார்கள் எனலாம்.

ஆனா இந்த பிபிஓ என்கிற சேவைத்துறை இருக்கிறதே அதுதான் நான் சொல்ல வர்றதே. சேவைத்துறையில் மிக எளிமையா வேலை வாங்கிரலாம், ஆரம்பத்திலேயே 10000 வரையில் அல்லது அதுக்கு மேல வரைக்கும் கிடைக்கும், ஆனா முன்னேற முடியாது தகவல் தொழில்நுட்பத்துறையில் இருப்பது மாதிரி என்பார்கள். ஆனால் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பிபிஓ பணியில் சேர்வதும் மிகவும் சிரமமானது. ஒரு சிலருக்குத்தான் அதிர்ஷ்டமே இருக்கும். திறமையும் வேண்டும் சில நேரத்தில் அதிர்ஷ்டம் மட்டுமே வேண்டும்.

இதில்லாமல் சிறு சிறு நிறுவனங்களின் பிபிஓக்களில் சேர்ந்தால் தொலைந்தீர்கள். நேந்து விட்ட காளைமாதிர்தான். கொத்தடிமைதான். கொத்தடிமை என்னும் சொல்லுக்கு முழுப்பொருளையும் அனுபவித்து உணரலாம்.  கண்வலிக்க கணிணியைப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும். நாளும் பணிச்சுமை, உற்பத்தி இலக்கு (target) இருக்கும். இவையெல்லாம் எல்லாப் பணிகளிலும் இருப்பதுதான் எந்த வேலையும் எளிதானதல்ல என்பதும் சரிதான். ஆனால் பிபிஓ வில் இவையெல்லாம் இன்னும் தனித்துவமானது. இருமடங்கு வேலை பாதி ஊதியம் என்ற அளவில்தான் இருக்கும். இதில் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே உங்கள் இயல்பே மாறிவிடும். உடல் நலம் மனநலமும் குன்றி விடும். எனக்கே பார்த்தீங்கன்னா முன்பெல்லாம் நிறைய நூல்களை விரும்பிப் படிப்பேன். அப்போ வாங்கக் காசில்லைன்னு வேலைக்குப் போய் சம்பாதிச்சு நிறைய வாங்கி வச்சுப் படிச்சு அறிவாளியாயிரலாம்னு கணக்குப் போட்டிருந்தேன். குடுக்கிற சம்பளம் வாயக்கும் வயத்துக்குமே சரியாப்போச்சு அது வேற. ஆன எதையும் புதுசா படிக்கவே தோன்றுவதில்லை, நூல்களும் வாங்குவதில்லை. நூலகத்திற்கும் போவதில்லை. பள்ளி, கல்லூரியில் படிக்கிறப்பவெல்லாம் ஓரளவு கவிதைகள் எழுத வரும் ஏன்னா நானொரு தமிழ் ஆர்வக்கோளாறு. ஆனால் இப்ப சுத்தம்.

நான் நான்கு வருடம் முன்பே வலைப்பூவை அறிந்திருந்தேன். மூன்று வருடத்திற்கு முன்பே வலைப்பூ எழுத தொடங்கி விட்டேன். இரண்டு முறை வலைப்பூவை எழுதும் எண்ணத்தைக் கைவிட்டு அதை அழித்தும் விட்டேன். இது மூன்றாவது வலைப்பூ ஏதோ ஒரு மனநிலையில் இதை மட்டும் அழிக்காமல் வைத்திருக்கிறேன். மாதம் ஒரு இடுகை கூட எழுத இயலவில்லை. இதுதான் எனது மாற்றம். சேவைத்துறைக்கு நன்றி.

இப்படி பைத்தியம் புடிக்கற அளவுக்கு வேலை பார்த்தாலும் உங்களால ரூ 10000 கூட வாங்க முடியாது. பெரும்பான்மையான சிறு பிபிஓ நிறுவங்களின் சம்பளம் பத்தாயிரம் அல்லது அதுக்கு மேல இருக்காது. எனக்குத் தெரிந்து 5000 - 8000  வரை சராசரியாக. இதில் இன்னொரு செய்தி என்னன்னா இதில் வேலை நேரம் இரவாகத்தான் இருக்கும். பகல் நேரம் பெண்கள் மட்டுமே வேலை பார்க்க வேண்டியிருக்கும். ஊக்கத்தொகை ஒரு ஆயிரமோ இரண்டாயிரமோ அதிகமாகக் கிடைக்கும். அவ்வளவுதான் நான் 4000 ரூபாய் சம்பளத்தில் ஒரு 6 மாதங்கள் வரையில் இரவு நேர பணியில் இருந்திருக்கிறேன். ஊதியம்தான் குறைவே ஒழிய வேலையெல்லாம் சும்மா ஙொக்காமக்கான்னு இருக்கும். எப்படா காலைல 5 மணியாகும்னு இருக்கும். இந்த மாதிரி 5000க்கும்  6000க்கும் வேலை பார்ப்பவர்கள் அதுவும் இரவு நேரம் 50 கிலோ மீட்டர்கள் வரை பயணித்து வந்து பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். என்ன செய்ய வெற வழியில்ல. போதாக்குறைக்கு எப்ப வேண்டுமானாலும் வேலையிலிருந்து துரத்தியடிக்கப்படும் அபாயம். சனிக்கிழமை விடுமுறையும் கிடையாது.

மீண்டும் அப்பாடக்கர்களுக்கு வருவோம். இப்படியெல்லாம் செத்துச் சுண்ணாம்பாயி வேல பார்த்தா இவர்கள் என்ன கேட்கிறார்கள் என்றால்

எதுக்கு அந்த வேலைக்குப் போற ?
(வேற வேல கிடக்கல இது கூடவா தெரியாது)

 உடனே எடுத்து விடவேண்டியது கம்பியூட்டரு வேலன்னா 50000, 60000 கிடைக்கும்னு சொல்றாங்க ?

இப்படியெல்லாம் கேட்டா என்ன செய்யறது.

இந்த முண்டங்கள்தான் குழந்தைகளைப் படிக்க வைக்கும்போதே ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கச் சொல்லி அச்சுறுத்தும் வன்முறையாளர்கள். அதிகம் சம்பாதிக்கத் துப்பில்லாதவனை மதிப்பின்றி பார்க்கிறார்கள். எல்லோராலும் முதலிடத்திற்கு வரமுடியாது என்ற எளிய உண்மையைக் கூட உணராதவர்கள். எத்தனை நாள்தான் இவர்களுக்கு பதில் சொல்லப் பயந்தே ஓடி ஒளிவது. யாராவது எதார்த்தமாகக் கேட்டால் கூட குத்துகிறது.

இது போதாதென்று சில நண்பர்களும் அப்பாடக்கர் அவதாரமெடுக்கிறார்கள். ஒரு குழுவிலிருக்கும் ஒரு நண்பனுக்கு மற்றவர்களை விட மிக் உயர்ந்த இடத்தில் பணி கிடைத்துவிட்டால் நமக்கு ஒருவித தாழ்வு மனப்பான்மையும் அவர்களிடம் ஒரு அந்நியத்தன்மையும் வந்து விடுகிறது.

என்னடா மச்சி ஃபேஸ்புக்ல அப்டேட்டெ பண்றதில்லையா ?

வேற வேலைக்கு ட்ரை பண்ற ஐடியாவே இல்லையா ? என்றும் கடுப்பேத்துகிறார்கள். ஃபேஸ்புக்கில் அப்டேட்டுமள்விற்கு ஒண்ணுமில்ல என்று தெரிந்தும் கேட்டால் என்ன செய்வது.

இப்போது திருமணச்சந்தையில் விலைபோகாத சரக்குகளாக இருப்பவர்கள் இவர்கள்தான்.(நானும்தான்( எல்லாம் ஒரு சுய பச்சாதாபம்தான்)). 10000 கூட சம்பாதிக்க இயலாதவனை நம்பி யார்தான் பெண் தருவார்கள். என்னுடைய நண்பி ஒருத்தி கூட எனக்காகப் பரிதாபப் பட்டார்.

"அச்சச்சோ உங்களுக்கெல்லாம் யாரு பொண்ணு கொடுப்பா?" என்று.

அது சரிதான யாரு குடுப்பா ?. படிச்சு முடிச்ச ரெண்டு வருடங்களில் ஓரளவுக்காவது சம்பளத்துல வேல உங்களுக்குக் கிடைக்கவில்லையென்றால் அவ்வளவுதான் கடைசி வரை சிங்கியடிக்க வேண்டியதுதான். ஒரு சிலருக்கு மட்டும் மிக விரைவிலேயே அது அமைந்து விடும். நம்மள விட ஏழெட்டு வருடம் பின்னால பொறந்த முண்டங்களெல்லாம் வந்து நம்முடனேயே வேலை பார்க்கிறதுகள். என்னை பெருசு என்று வேறு ஓட்டுகிறார்கள். அது சரிதான தொப்பை வருது, முடி நரைக்குது, முடி கொட்டி சொட்டை விழுது வேற எப்படிக் கூப்பிடுவார்கள். என்னத்த சொல்றது ??. திருமண வயசு ஆகிட்டதால இனி பொண்ணு பார்க்கற வைபவம் வந்துச்சுன்னா அப்பதான் இருக்கு கச்சேரியே. இன்னும் எத்தனை வகையான அப்பாடக்கர்களிடம் சிக்கி சின்னபின்னமாவதோ ?

Download As PDF
Bookmark and Share

Post Comment