குமுதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குமுதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இந்த வார குமுதத்தின் பாஜக-இந்தி ஜால்ரா


வாரமானால் ஏதோ ஒரு பாஜக தலைவரைப் பற்றி ஒரு ஜால்ரா கட்டுரை எழுதாவிட்டால் குமுத்திற்கு அடங்காது. இல்லையென்றால் பாஜக பட்டையைக் கிளப்பும் ஒரு திட்டத்தைப் பற்றி உச்சி முகர்ந்து பாராட்டி எழுதாவிட்டால் குமுதத்தின் ஊடக நேர்மை தாங்காது. சமூக வலைத்தளங்களில் வரும் மீம்ஸில் இருந்து தேர்வு செய்து போடப்படும் படங்களில் கூட பாஜக வராது. மற்ற கட்சித் தலைவர்கள்தான் வருவார்கள்.

ஜால்ரா 1

அன்னையர் தின சிறப்பிதழான இந்த வார குமுதத்தில் அன்னையர் தினத்தைப் பற்றி அதாவது மறைந்த தனாது தாயாரைப் பற்றி பேட்டி கொடுத்திருப்பவர் உத்தமர் பொன்னார். காவிரி மேலாண்மை வாரியம் அமைவதைத் தடுத்தும், கர்நாடகாவை விட வறட்சி அதிகமான தமிழகத்தை விட்டு கர்நாடகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்த மோடியை புகழ்ந்த பொன்.ராதாகிருஷ்ணன். தமிழகத்தின் சாலைகளெங்கும் இத்துப் போன இந்தியைத் திணித்து வரும் நெடுஞ்சாலைத்துறையின் சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் உத்தமசிகாமணி பொன். ராதகிருஷ்ணன். அன்னையர் தினத்தின் புகழ்பாட வேறு யாரும் கிடைக்கவில்லை போலிருக்கிறது.



ஜால்ரா 2

அடுத்து ஒரு பக்கம் முழுவதும் மோடியின் படம். அதன் கீழே இந்தியத் தமிழன் என்று கொட்டை எழுத்துக்களில். கட்டுரையின் தலைப்பு மோடியின் ஏக் இந்தியா. என்ன கருமமோ ? என்ன எழவோ ?? இப்போது இந்தியா 500 துண்டுகளாகவா இருக்கிறது ? இனிமேல் ஏக் இந்தியா என்று உருவாக்க வேண்டுமோ ? தமிழ் தொன்மையான மொழி. இந்தியாவின் மொழி வளமைக்குச் சான்றாக பெருமையுடன் அதைக் குறிப்பிடலாம். என்று மோடி ராஷ்ட்ரபதிபவனில் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர் உயரதிகாரிகளின் மத்தியில் பேசினாராம். ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்பட வைக்கப் போகும் மோடியின் கனவுத் திட்டத்தின் வெளிப்பாடே இந்தப் பேச்சாம்.
                                     
                                        
மோடியின் படத்தை ஏக் இந்தியா கட்டுரைக்குப் போட்டு அவரை நாயகனாக்கியுள்ளது
                           
தமிழ்நாட்டில் பாஜக இந்தியைத் திணிப்பதாக அரசியல் செய்கிறார்களாம். இவர்கள் இந்தியைத் திணிக்கவே இல்லையாம். தார் சட்டியுடன் இந்தியை அழிப்பவர்கள் தமிழுக்கு ஒன்றுமே செய்யவில்லையாம். இவர்கள்தான் கிழிக்கப் போகிறார்களாம். சொல்பவர்கள் பாஜகவின் கலை கலாசார அணியினர்.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு மொழி கலாச்சாரம் இருக்கிறதாம் அதைத் தாண்டி இந்தியா என்று ஒற்றுமையாக நிற்கவேண்டுமாம். இதெல்லாம் இப்போது மட்டும் இந்தியா ஒற்றுமையாக இல்லையா என்று யாராவது  இவர்களிடம் சொல்லவேண்டும். அதாவது மாநிலங்களுக்கு இடையே குறுகிய கால புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவது, மாநிலங்களுக்கு இடையே கல்வி, கலாச்சாரச் சுற்றுலா, விளையாட்டுப் போட்டிகள், திரைப்பட விழாக்கள் நடத்துவது இதெல்லாம் மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் இதை நடத்தலாமாம். பிரதமர் தான் பதவியேற்ற வருடமான 2014 லேயே இதைத் தொடங்கி விட்டாராம் இப்போது ஹரியானா, மேற்குவங்கம், தெலுங்கானா, சட்டீஸ்கர், குஜராத் போன்ற மாநிலங்களில் செயல்படுத்தத் தொடங்கியாயிற்றாம். 


இதற்கு மேல் ஜால்ராவின் சத்தம் வேண்டுமென்பதால் தமிழருவி மணியனின் ஜால்ராவின் சத்தத்தையும் சேர்த்து ஒலிக்க விட்டிருக்கிறது குமுதம். ஏக் இந்தியா திட்டத்தில் தமிழகமும் இணையவேண்டும். தமிழக்த்தில் இருக்கும் அனைவரும் இந்தியத் தமிழர்கள்தான். பழைய மும்மொழித் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவரவேண்டுமாம். அதென்ன மும்மொழித்திட்டம் ? வட இந்தியா இந்தி ஆங்கிலம் அல்லாது வேறொரு தென்னிந்திய மொழியைக் கற்க வேண்டும். அப்போது இங்கே இந்தியை விருப்பப் பாடமாக ஏற்கலாமாம். கேட்கவே புல்லரிக்கிறது. என்ன அழகான எதிர்கால சிந்தனை. என்ன ஒரு நாய்த்தனம் தமிழருவி மணியனுக்கு ? அய்யா இந்திக்காரர்கள் ஆங்கிலம் படிக்காததால்தானே மற்ற மாநிலங்களிலும் இந்தியைத் திணித்து வருகிறார்கள். இந்திக்காரர்கள் இந்தி ஆங்கிலம் தவிர ஒரு தென்னிந்திய மொழியைப் படிப்பார்களாம் நாமும் இந்தியைப் படிக்க வேண்டுமாம். இது நடந்தால் மழை கீழிருந்து மேலே பொழியும். அடி செருப்பால !

இம்மாதிரி வெவ்வேறு மொழிகளைப் படித்து விடுவதால் மாநிலங்களுக்கிடையேயான பிணக்குகள், தண்ணீர் பிரச்சனை தீர்ந்து, சக இனங்களின் சகிப்புத் தன்மை பெருகி மாநிலங்களின் பொருளாதாரம உயரும் அதன் மூலம் தேசமும் உயருமாம். இதெல்லாம் தமிழருவி மணியன் உதிர்த்தவை. இவர் மோடியை பிரதமர் வேட்பாளராக ஆதரித்தவர். ஆட்சிக்கு வந்த பின்னர் மோடி அரசுக்கு ஆதரவில்லை என்று தாவியவர். இந்த உத்தமர் இப்போது கறிக்குதவாத மும்மொழிக்கொள்கைக்கு வால்பிடிக்கிறார்.

ஏன் மோடி அரசு இந்தித் திணிப்பை கைவிட்டு இதுமாதிரியான நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களைப் போட்டால் யார் எதிர்க்கப் போகிறார்கள். இந்தியையும் திணித்து விட்டு இது மாதிரி மொக்கைத் திட்டங்களைப் போட்டதைக் கணக்குக் காட்டி இவர்கள் தேசத்திற்காகத்தான் அனைத்தையும் செய்கிறார்கள் என்று தூக்கிப்பிடிக்கிறது குமுதம்.
 

இதே குமுதத்தில் தமிழக மாணவர்களுக்கு பெருங்கேடு விளைவிக்கும் நீட் தேர்வை ஓரளவுக்கு மிதமாக விமர்சித்து கட்டுரை தீட்டியிருக்கிறது குமுதம். ஆனால் அதில் நீட் தேர்வைக் கொண்டு வந்து இந்திய ஒற்றுமையை நிலைநாட்டிய மாவீரன் என்று மோடியின் படம் அச்சிடப்படவில்லை. மாறாக அழகிய கல்லூரி மாணவிகளின் படத்தை அந்தக் கட்டுரைக்கு அச்சிட்டுள்ளது. ஏன் நீட் தேர்வுக்கு வழிவகுத்து தமிழக மாணவர்களை புதைகுழிக்கு அனுப்பியது பாஜக மோடிதான் என்பது பார்த்தவுடனே விளங்கி விடும். கட்டுரை படிப்பவர்களுக்கு அப்படித் தெரியக்கூடாது, அவர்கள் கோபம் பாஜகவின் மீது போகக்கூடாது என்பதற்காகத்தான் தேர்வு குறித்த கட்டுரை என்ற போர்வையில் மாணவிகளின் புகைப்படம். 


ஆனால் மோடியின் அழகிய படத்தை ஏக் இந்தியா கட்டுரைக்குப் போட்டு அவரை நாயகனாக்கியுள்ளது. பிள்ளையைக் கிள்ளி விட்ட மாதிரியும் ஆச்சு, தொட்டிலை ஆட்டி விட்டமாதிரியும் ஆச்சு. இந்தியை எதிர்ப்பவர்களை விமர்சித்த மாதிரியும் ஆச்சு மத்திய அரசு இந்தியைத் திணிக்கவில்லை என்று சொன்ன மாதிரியும் ஆச்சு, மத்திய அரசு ஒன்றுபட்ட இந்தியாவுக்கு உழைக்கிறது என்று சொன்னமாதிரியும் ஆச்சு.

Download As PDF
Bookmark and Share

Post Comment

குமுதம் திருந்தாது !!


ஒரு நடிகையின் படத்தைப் போடுவதற்கு ஏதாவது ஒரு கருத்தோ அல்லது கிசு கிசுவோ அல்லது பயோடேட்டாவோ போடுவார்கள்.

ஆனால் ஒரு பொம்பள இறந்தால் கூட அவள் சின்ன வயசுல ஜட்டியுடன் இருக்கும் படத்தைப் போடுமளவிற்கு தரம் தாழ்ந்த அச்சு இதழ்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. ஒரு வேளை பிணம் நிர்வாணமாக இருந்து விட்டால் அதையும் வெளியிடத் தயங்குவதில்லை இவர்கள்.

இவர்கள் வெளியிடும் செய்திகள் திரைப்பட நடிகர்களைக் குறித்ததாக இருப்பின் முடிக்கும் போது ஆம் ஆம் என்றுதான் முடிப்பார்கள். சொல்லிவிட்டாராம், பேசிவிட்டாராம், முடித்துவிட்டாராம் என்று ஒரே ராம் புராணாமாக இருக்கும். இப்படிச் சொன்னால்தான் கிசு கிசு பரவும்.

அதற்கு தற்போதைய உதாரணம்; தோழர் காஜல் அகர்வால் அவர்கள் தமிழ் படத்தை விடவும் தெலுங்குப் படத்தில்தான் பெண்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள் என்று சொல்லிவிட்டார். பாரதிராஜா உணர்ச்சி வசப்பட்டு, காஜலை அறிமுகப்படுத்தியதற்காக வெட்கப்படுகிறேன் என்று அவரது எதிர்வினையை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்தச் செய்தியில் பாரதிராஜா வின் படத்தையும், கூடவே ஒரு நடுநிலை கருத்துச் சொன்ன ஜனனியின் புகைப்படத்தையு சிறிய அளவில், பிரசுரித்து விட்டு, காஜலின் சேலை விலகி வயிறு தெரியுமாறு இருக்கும் செக்ஸியான படத்தையும் போட்டிருக்கிறார்கள். நான் படம் பாடல்கள் பார்ப்பதை ஏறக்குறைய நிறுத்தி விட்டதால், எது எந்தப் படம் என்பது குறித்த பொது அறிவு குறைவு. ஆனால் காஜலின் அந்தப்புகைப்படம் தெலுங்குப் படத்தில் வருவதாக இருக்கலாம். ஒரு வேளை இதைத்தான் தெலுங்குப் படத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கலாம்.

எனக்கு என்ன ஐயமென்றால், இங்கே தமிழர்களைக் கேவலப்படுத்திய காஜல் மீது ஆத்திரம் வரவேண்டுமா அல்லது காஜலின் புகைப்படத்தைப் பார்த்து வேறெதாவது உணர்ச்சி வர வேண்டுமா? அந்த உணர்ச்சி வந்த பின் ஏதாவது நடக்க வேண்டுமா? என்ன விரும்புகிறது குமுதம்.

இதே பதிவு கொஞ்ச நாளுக்கு முன்புதான் எழுதினேன் எந்த மாற்றமுமில்லாமல். குமுதம் அப்படியேதான் இருக்கும். எனக்கு மீண்டும் பல முறை இதே பதிவை எழுதவைக்கும். 

குமுதம் ரிப்போர்ட்டர் என்ற புலனாய்வு வார இதழ் குஷ்புவையும், முகவையும் பெரியார் மணியம்மையாகச் சித்தரித்து நூறாவது தடவையாக தனது இயல்பை வெளிப்படுத்தியிருக்கிறது. அப்படியெல்லா
ம் யோசிப்பதற்கு, வெளியிடுவதற்கு, இது போன்ற நடிகைகளின் செக்ஸியான படங்களைப் போட்டு இல்லாததும் பொல்லாததுமான செய்திகளை நாட்டு நடப்புக்கு இணையான செய்திகளாக்குவதும்தான் காரணம். இறுதியில் அஃசல் குருவின் தூக்குத் தண்டனையை ஆதரித்து தனது பொது மனசாட்சியைக் காட்டியிருக்கிறது.

இது மட்டுமல்ல, ஆர்யா தமிழ் ரசிகர்களைக் கேவலப்படுத்தியது மாதிரியான தமிழகத்தின் மானம் காக்கும் முக்கியமான செய்திகளைச்சொல்வது பிரச்சனையைக் கிளப்புவது. இப்படியாக குமுதம் கிளப்பிய பிரச்சனைதான் ஜெயராம் கருத்த தமிழ்ப் பொண்ணு என்று தனது பணிப்பெண்ணை வர்ணித்ததை, தமிழர்களைக் கேவலப்படுத்தி விட்டதாகத் திரித்து பிரச்சனையாக்கியது.

ஆனால் இது வெளியிடும் பெண்கள் யாரும் தமிழ்ப் பெண்களாக இருக்க மாட்டார்கள், வட இந்திய, மலையாளப் பெண்களின் படங்களை மட்டுமே வெளியிடும் ஏனென்றால் அவர்கள்தான் பெருந்தன்மையாக உடையணிபவர்கள், குமுதத்திற்கு அந்த மாதிரியான படங்கள்தான் தேவை. என்னதான் ஃபாரின் பிகர்ஸ் பார்த்தாலும், நம்ம ஊரு ஃபிகருகளை சைட்டடிப்பதுதான் சுகமே என்று கருதும் வாசகர்களும் இருப்பதால், அப்பப்ப ஏதாவதொரு கல்லூரியில் சென்று 10 கல்லூரி மாணவிகளின் கருத்துக்கள் என்று இந்தியா முன்னேற்றமோ அல்லது, பிடித்த நடிகர்கள் குறித்த கருத்துக்களை விவாதங்கள் என்று போட வேண்டியது வெறும் படங்களைப் போடக்கூடாதல்லவா இதென்ன வலைப்பூவா இல்லை ஃபேஸ்புக்கா வெறும் பொம்பளப் படங்களை பகிரவும், வெளியிடவும் ஒரு நியாயம் வேண்டாமா. ஏதாவது மாடலிங், மிஸ் சென்னை, மிஸ் ஆசியா, அல்லது ஏதாவதொரு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற பெண் தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார், அவர் சென்னையைச் சேர்ந்த சுத்தத் தமிழ்ப் பெண் என்று பல பேரைப் போட்டிருக்கிறார்கள். அதில் எத்தனை பேர் தமிழ்ப் பெண்கள் என்றுதான் தெரியவில்லை.

சிறுகதையில் கூட வரையப்படும் படங்களில், முந்தானை நூல் மாதிரிதான் சுருண்டு கிடக்கும், ரவிக்கை தாழ்வாகவும் இருக்கும் நடுவில் ஒரு கோட்டை தவறாமல் வரைந்திருப்பார்கள். தொப்புளையும் வரைந்திருப்பார்கள், யார்தான் உலகத்தில் அப்படியெல்லாம் சேலை கட்டுவார்களோ தெரியவில்லை. சுடிதாராக இருந்தால் நன்றாக உடலைக் கவ்விப் பிடித்து வடிவைக் காட்டும்படி இறுக்கமாக இருக்கும். க்லீவேஜ் நிச்சயம்.

விளையாட்டு வீராங்கனகளின் படங்களைப் போடுகிறார்கள். அவர்கள் ஸ்போர்டி அல்லது மினி ட்ரொசர் மாதிரியான உடைகளுடன் இருக்கும் படங்கள் போடுகிறார்கள். இதை தவறானதாக சொல்ல வில்லை. குமுதத்தின் வாசகர்களாக இருப்பவர்களுக்கு குமுதம் எதனைப் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறது. நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை குறித்து கிசுகிசுக்களை மானாவாரியாகப் பரவவிடுவது, ஏதாவதொரு படத்தில் பிகினியில் நடித்தைப் படமாகப் போடுவது, இல்லை செய்தியாக முடியாவிட்டால் இரு அனுமானமாகவாவது போடுவது. இதையெல்லாம் படிக்கும் காணும் குமுதம் வாசகனுக்குப் பெண்ணைப் பார்த்தாலே சைட்டடிக்கவும், மார்க் போடவும், அளவெடுக்கவும், கேலி செய்யவும், கமெண்ட் அடிக்கவும்தான் கற்றுக் கொடுக்கிறது. அந்த மன்நிலையுள்ளவன் சானியாவையோ சாய்னாவையோ, தீபிகா பல்லிகலையோ அல்லது வேறு யாராவது விளையாட்டு வீராங்கனையையோ பற்றிய செய்திகளையும், புகைப்படத்தையும் வெளியிடும்போது அவைகளை என்ன கோணத்தில் பார்ப்பான் என்று குமுதம்தான் சொல்ல வேண்டும்.

இன்னொரு பிரச்சனையை சில நாட்களுக்கு முன்பு கிளப்ப முயன்றது குமுதம். நடிகை சுஹாசினி சொன்னார். கதாநாயகன் முடிவெட்டாமல், சவரம் பண்ணாமல் எப்படி இருந்தாலும் கதாநாயகி மட்டும் அனுஷ்கா மாதிரி அழகாக இருக்கிறார்கள். எங்களுக்கு மட்டும் அழகான ஹீரோக்களைப் பார்க்கணுன்னு ஆசையிருக்காதா ? எம்ஜிஆர், கமல், அரவிந்த் சாமிக்கு அப்பறம் ஹேண்ட்சம் ஆன ஹீரோக்களையே பாக்க முடியல என்று சொல்லியிருந்தாராம். அதை அப்படியே தமிழ்ப்படங்களில் அவர் சொன்னதையே செய்து கொண்டிருக்கும் சில் இயக்குநர்கள், நடிகர்களிடம் சொல்லி அவர்களின் கருத்தை வாங்கி அதை, சுஹாசினிக்கு எதிராகப் பொங்கும் தமிழ் ஹீரோக்கள் என்று ஒரு பிரச்சனையாக சித்தரிக்க முயன்றது. அப்புக் குட்டி, தருண்கோபி, விதார்த், இன்னும் யாரோ இருவர். இவர்களெல்லாம் சொன்னது சுஹாசினி அப்படியெல்லாம் சொல்லியிருக்கக்கூடாது, தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பான்மையான ஆண்கள் சராசரியான தோற்றம் கொண்டவர்கள்தான் என்ற பொருளில் என்று சொல்லி வருத்தப்பட்டிருந்தார்கள். இதில் யார் சொன்னது சரி தமிழ் திரை ரசிகர்கள் எல்லாரும் சொல்வதைத்தான் சுஹாசினி சொன்னார். இந்த நடிகர்கள் எல்லாம் சராசரியான ஆணின் தோற்றம் அல்லது பொறுக்கியாக இருக்கும் ஒருவன் அந்த வட்டாரத்திலேயே அழகான கதாநாயகியைக் காதலிப்பதாக அல்லது ஆசைபடுவதாகக் காட்டி அந்தக் காதலை வெற்றி பெற வைத்து ஆண்களை பரவசப்படுத்தும் கதைகளை எடுப்பவர்கள் அல்லது நடிப்பவர்கள். இதை என்னவோ பெரிய சண்டையாக கோர்த்து விட முயன்றது குமுதம்.

குமுதம் கிளப்பி விட்டு கதையெழுத நினைத்த பல கிசுகிசுக்கள் பிசுபிசுத்துப் போயின. காஜல் - கார்த்தி காதல், விஷால்- ரீமா காதல், மாதவன் - பூஜா காதல், சித்தார்த்- ஷ்ருதி காதல், இருப்பதிலேயே மிகவும் மோசமாக எழுதப்பட்ட கிசு கிசு கமல் - சிம்ரன் காதல்தான். குமுதம் மட்டுமல்லா எல்லா இதழ்களும் செய்தன.. அதை விடவும் கேவலமாக எழுதப்பட்டது ஷ்ருதி ஹாசன் - தனுஸ் காதல்தான். அதற்கு ஷ்ருதி மறுப்பு வெளியிட்டு அதையே குமுதம் வெளியிடுமளவுக்கு கீழ்த்தரமாக இறங்கியது குமுதம். நன்கு காசு பார்த்த கிசுகிசுக்கள் நயன் - பிரபுதேவா, நித்யானந்தா - ரஞ்சிதா.

ரஜினி படையப்பா படம் முடிந்து 5 வருடங்கள் கழித்து நடித்த பாபா படம் தோல்வி அடைந்திருந்த நிலையில் ரஜினி படத்தில் மீண்டும் நடிப்பாரா அல்லது நிறுத்தி விடுவாரா என்ற சந்தேகம் இருந்தது, ரஜினி இமயமலைக்குக் கீது சென்று விட்டால் ஏதாவது கதை கிதை எழுதி காசுபாக்க முடியாது, எனவே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் விஜய்யா விக்ரமா,தனுசா என்ற முக்கியமான பிரச்சனையை எழுப்பியது. இப்படியாக குமுதத்தின் சேவை தமிழ்நாட்டுக்குத் தேவை.

அரசியல் ரீதியான விமர்சனத்தில், இப்படி பாலியல் ரீதியாக விமர்சிப்பது எந்த வகை நியாயமென்று தெரியவில்லை. இதற்கு முன்பு கனிமொழி-ராசாவை இணைத்து நகைச்சுவைக்காகக் பேசப்படும் கிசுகிசுக்கள், மன்மோகச் சோனியாவை இணைத்துப் பேசப்படும் கிசுகிசுக்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

குமுதம் மட்டுமல்ல தினகரன், நக்கீரன், தினத் தந்தி, தினமலர் என்ற எதுவும் இதற்கு விதி விலக்கல்ல. இதில் முதலிடம் தினகரனுக்கே. கடந்த திமுக ஆட்சியின் போது தினகரனில் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையை சோபனுடன் இணைந்து வாழ்ந்த (Living together) ஜெயலலிதாவின் யோக்கியதையைப் பாரீர் என்று திராவிட அறிவாளிகளுக்கே உரிய தரத்துடன் வெளியிட்டிருந்தது. இதுதான் இவர்களின் யோக்கியதையே.
Download As PDF
Bookmark and Share

Post Comment

திருந்தித் தொலையுங்கள்

குமுதம் என்ற வார இதழில் வரும் அரசு பதில்கள் நான் விரும்பிப் படிக்கும் ஒரு பகுதி. அதில் பதிலளிப்பவர் உலக அளவிலான பல துறைகள் சார்ந்தும் பதிலளிப்பார். அதே நேரம் ஒரு குப்பைக்கும் ஆகாத நடிகைகள் குறித்த கேள்விகளுக்கும் பதிலளிப்பார். அதை நான் விமர்சிக்க விரும்புகிறேன். காரணம் பெண்களைக் கிண்டல் செய்வது எனக்கு அருவருப்பானது. தனக்குத் தெரியாத, உறவுமில்லாத ஒட்டுமில்லாத ஒரு பெண்ணை ஒரு பெண் என்ற காரணத்திற்காகவே தனது அரிப்பை சொறிய ஒரு ஆண் செய்யும் கிண்டல் பற்றி நான் சொல்ல வருவது.

டெல்லி பாலியல் வன்முறை தொடங்கும் முன் ஜோதியையும் அவளது நண்பனையும் கிண்டல் செய்து பின்னர் ஜோதி சண்டை போட்ட பின்னரே தொடங்கியது. எனவே இந்த ஈவ் டீஸிங் என்பது ஒரு குற்றம் என்று சொல்ல வருகிறேன். மேலும் இதை செய்பவர்கள் இது ஒரு தவறு என்பதைக் கூட உணர்வதில்லை. அதையே இவர்கள் தனக்கு வேண்டிய பெண்களை இது போன்று விமர்சிக்க மாட்டார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

டெல்லி பாலியல் வன்முறைக்கு எதிராக பல இளம் பெண்களும் ஆண்களும் தெருவுக்கு வந்ததை நாம் அறிவோம். ஒரு போராட்டம் மும்பை கேட் அருகே நடந்த போது போராட்டம் நடத்திய இளம் பெண்களைப் பார்த்து இரண்டு ஆண்கள் விசில் அடித்தார்களாம். என்ன புதுமையென்றால் அந்த ஆண்களும் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட வந்தவர்களாம். எப்படியிருக்கிறது பாருங்கள் கதை.

இன்னொரு உதாரணம் நச்சென்று புரியவைக்கும் இதன் இரு வேறு பரிமாணங்களை.

முதல்வன் படத்தில் ஒரு நாள் முதல்வராக இருக்கும் புகழேந்திக்கு ஒரு அழைப்பு தொலைபேசியில் வரும். ஒரு இளம் பெண் தலையில் வழியும் குருதியைத் துடைத்து கொண்டு அழுது கொண்டே இங்க ஈவ் டீஸிங் தொல்ல தாங்க முடியல சார் என்பாள். நாயகன் சென்று அந்தப் பொறுக்கிகளை அடித்து நொறுக்கி உள்ளாடையுடன் "பெண்கள் நம் கண்கள்" என்று சொல்லிக் கொண்டேமுட்டி போட்டு நடக்கச் செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றுவார். இது பெண்களைக் கேலி செய்தவர்களுக்கு எதிரான ஒரு அறச்சீற்றக் காட்சி.

பாய்ஸ் படத்தில், 5 விடலை நாயகர்களும் அறிமுகப் பாடல்களில் தூள் கிளப்புவார்கள். ரங்கநாதன் தெருவில் தன் அம்மாவின் வயதுள்ள பெண்களை பின்னால் உரசுவார்கள், வேண்டுமென்றே இடிப்பார்கள். குழந்தையைத் தூக்கும் சாக்கில் முலையில் உரசுவார்கள். மிகவும் சிரித்த முகத்துடன் இதையெல்லாம் செய்வார்கள்.

பின்பு பலத்த எதிர்ப்புக்களின் பின்பு இக்காட்சிகள் நீக்கப்பட்டன. நடப்பதைத்தானே காட்டியிருக்கிறார் என்று பலர் விளக்கம் நியாயம் சொன்னார்கள். அந்தப் படம் பார்க்கும் வரை அது மாதிரி நடப்பது எனக்குத் தெரியாது என்பதையும் சொல்லிக்கிறேன். நடப்பதைக் காட்டலாம் அதை ஒரு நாயகத்தனமாகக் காட்டியது தவறு. முதல்வன் படத்தில் வரும் ஈவ் டீஸிங்க் கூட நடப்பதுதான் அதை எப்படி தவறாகக் காட்டினார். அதை விடக் கேவலமாக இதை ஒரு குறும்பைப்போலவும், தமாசாகவும் நாயகத்தன்மையாகக் காட்டியது என்ன நியாயம். இதை எஸ் ஜே சூர்யாவோ சிம்புவோ, தனுசோ செய்திருந்தால் பரவாயில்லை. சமூகப்பிரச்சனையை மையமாகக் கொண்டு படமெடுக்கும் இயக்குநர் என்று சொல்லப்பட்ட ஷங்கரின் புத்தியே இப்படி கோணலாக இருக்கிறதென்றால் மற்ற ஆண்களுக்கு எப்படியிருக்கும்.

பாலியல் வன்முறைகளின் ஒரு வகைதான் ஈவ் டீஸிங்  என்பதும். பெண்களைக் கேலி செய்வது. எப்படிப் பார்ப்பது, எப்படிக் கமென்ட் அடிப்பது என்பனவற்றையும் சொல்லிக் கொடுப்பவை ஊடகங்கள். முக்கியமானது திரைப்படம். அடுத்ததாக வருகின்றவைதான் குமுதம் போன்ற இதழ்களில் வரும் இது போன்ற கண்டு பிடிப்புகள், விவரிப்புகள். கேட்டால் நக்கலடிக்கத் தோன்றும்தான். ஆனாலும் இதுதான் உண்மை. பெண்களின் அழகைக் கிண்டல் செய்வது, உடல் அசைவுகளை, உடல் பாகங்களைக் கிண்டல் செய்வது, உடையைக் கிண்டல் செய்வது என எல்லாமே இதில் அடங்கும். இதை மிகவும் சிறப்பாக செய்வது அரசுவின் பாணி. என்ன இவர் அதிகமாக நடிகைகளை வர்ணிப்பார். அவ்வப்போது  பொதுவிலும் பெண்களைக் கிண்டல் செய்வார்.

என்ன காரணம் என்றால் பெண்களைக் கிண்டல் செய்வது ஆண்களின் பிறப்புரிமை. அது அழகான பொழுது போக்கு. அது தவறில்லை என்ற எண்ணம். இதை செய்கிறவன் பொறுக்கியாகத்தான் இருக்க வேண்டும் என்பதெல்லாம் பழைய கற்பிதம். நல்லவன், வல்லவன், க்யூட் பாய்ஸ், ஸ்மார்ட் பாய்ஸ், அறிவிலி, அறிவாளன் என்ற எந்த பேதமுமில்லை. பின்நவீனத்துவம் பேசுகிற ஆண்களிலிருந்து பொம்பளப் பொறுக்கிகள் வரைக்கும், வயசு வந்த விடலைகளிலிருந்து நாடி நரம்பெல்லாம் ஆடிப்போன கெழ போல்டுகள் வரை இதுதான் வழக்கம்.

இதைத்தான் பாலியல் வன்முறை செய்கிறவனும் நினைக்கிறான். பெண்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், கிண்டலடிக்கலாம் என்று எண்ணுகிற ஆண் ஒரு கலாச்சார அடிப்படைவாத, மத அடிப்படைவாத ஆண் போலவே பெண்களின் ஒழுக்கத்தையும் கேள்வி கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறான். கலாச்சார, மதவாதிகள் ஒழுக்கம் பற்றிப் பேசுவதிலாவது ஒரு நியாயம் இருக்கிறது. அவன் ஒரு சில கட்டுப்பாடுகள், கொள்கைகளாவது வைத்திருக்கிறான். ஆனால் சைட்டடிப்பதையும், ஈவ் டீஸிங் செய்வதையும் மட்டுமே தொழிலாகக் கொண்டவர்களும் ஒழுக்கத்தைப் பேசுகிறார்கள் என்பது எரிச்சலோ எரிச்சல்.

எனது எரிச்சலுக்குக் காரணம் போனவாரம் குமுதத்தில் அரசு பதில்களில் ஒரு கேள்வி ?

நயன்தாரா தமன்னா (வேறு யாரோ நினைவில்லை) எந்த நடிகைக்கு போலிஸ் அதிகாரி வேடம் நன்றாக இருக்கும் ?

 அரசு சொல்கிறார். ஏன் நடிகர்கள் நெஞ்சைத் தூக்கிக் கொண்டு நடப்பது பிடிக்கவில்லையா ?.

இன்னொரு கேள்வி:

நான் நிர்வாணமாகச் சென்றாலும் என்னை வன்புணர யாருக்கும் உரிமை  இல்லை என்கிறாரே பிரியங்கா சோப்ரா ?

அரசு : நம் வீடு என்றாலும் பாத்ரூமிற்கு கதவு இருக்கிறது என்பதை பிரியங்கா சோப்ரா போன்றவர்கள் உணர வேண்டும்.

மேலே முதல் கேள்வியில் பெண்களின் உடலைக் கிண்டல் செய்யும் கருத்து இது ஒரு செக்ஸிஸ்ட் ஜோக்தான். ஏன்னா அது சும்மா ஜாலிக்கு. எது பெரிசு எது சிறிசு இப்படியெல்லாம் சொல்வது ஃபன். இரண்டாம் கேள்வியில் அபச்சாரம் அபச்சாரம் என்று பாதுகாப்பாக இருக்க வேண்டும் அறிவுரை சொல்கிறது. நூல் முழுக்கவும் கவர்ச்சிப்படங்களைப் போட்டுக் கொண்டு கண்ட கமெண்டுகளையும் எழுதிக் கொண்டு விற்பனையாகும் இது போன்ற இதழ்களே பெண்களை, பெண் உடலை ஒரு மாஸ்ட
ர்பேசன் ஆப்ஜெக்ட் ஆக்கிவிட்டு, பெண்களுக்கு அறிவுறைகளையும் அள்ளி வழங்குகின்றார்கள்.


 ஸ்ரீயாவின் பிகினி படத்தையும் பிரசுரித்துகொள்ள வேண்டியது, கீழே அய்யோ இதுக்கு இன்னும் ட்ரெஸ்ஸே போடத்த் தெரில என்ற கமெண்ட்டையும் போட்டுக் கொண்டு யோக்கியனாக காட்டிக் கொள்ள வேண்டியது. அவ்வப்போது பெண்களுக்கு அட்வைஸ் மழை.

இந்த மனநிலையில்தான் எல்லா ஆண்களும் இருக்கிறார்கள். தாம் செய்யும் பொறுக்கித்தனத்தை எல்லோரும் இயல்பாகக் கருதுகிறார்கள். பெண்கள் கருத்துச் சொன்னால் பாதுகாப்பின் அவசியம் பற்றிப்பேசுவார்கள். டெல்லியின் வீரத்தலைமகன் ஆண்மையின் சின்னம் ராம்சிங் சொன்னது தனியாக இரவில் வந்த பெண்ணுக்குப் பாடம் புகட்ட நினைத்தேன். அதே கருத்தைத்தான் எல்லோரும் வழிமொழிகிறார்கள்.

ஆணாதிக்க அல்பைகள் ஒழுங்காக உடையணியவும், அந்த பெண் ஏன் தனியாகப் போனாள், இரவில் போனாள் என்ற அபத்தமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த போது, அதற்கெதிராக போராடிய இளம் பெண்கள் என்னை எப்படி உடையணிய வேண்டும் என்று சொல்லாதே, பாதிக்கப்பட்டவளைக் குற்றவாளியாக்காதே, உடை அணிவது என் உரிமை என்ற பொருள் தரும் கருத்துக்களைத் தாங்கிய பதாகைகளை ஏந்திக் கொண்டிருந்ததை ஊடகங்கள் வழியாகக் கண்ட ஆண்களுக்குப் பொறுத்துக்க முடிய வில்லை. அது போன்றதுதான் அரசுவின் இரண்டாவது பதில். இந்த வாரம் குமுதத்தில் ஒரு கேள்வி பதில்

எந்த நடிகை காலில் டாட்டூ குத்தியிருக்கிறார் ?

அரசு: நான் கால்களைப் பார்ப்பதில்லை.

இன்னொரு கட்டுரை கீற்றுவில் படித்தேன். அதில் வன்னி அரசு என்பவர்  திரைப்படங்கள் தாக்கத்தின் காரணமாக பெண்களைக் குறிப்பிடும் ஃபிகர் என்ற சொல்லைப் பற்றி எழுதியிருந்தார். அதில் அழகில்லாத பெண்களை ஆண்கள் கிண்டல் செய்யும் ஒரு சொல் அட்டு ஃபிகர் என்பதாகும். இந்த அட்டு என்ற சொல் "Hut" என்ற குடிசையைக் குறிக்கும் சொல்லிலிருந்தே வந்திருக்கும். "Hut Figure" என்று குடிசையில் வாழும் தலித் பெண்களை இழிக்கப் பயன்படுத்திய சொல்லே இது போன்று மாறியிருக்கலாம் என்கிறார். அது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனாலும் அழகில்லாத பெண்களை ஆண்கள் என்ன சொல்கிறார்கள். மொக்க ஃபிகரு, அட்டு ஃபிகரு, சப்பை ஃபிகரு, டம்மி பீசு இவைகள் போக மேல்ஜாதி ஆண்கள் சொல்வது சக்கிலிச்சி மாதிரியே இருக்கா, கொறத்தி மாதிரி, பறச்சி மாதிரி என்று சொல்வார்கள். இதெல்லாம் "ஜாதிகள் இல்லாத" நகரத்தில் கம்பியூட்டர் யூத்கள் கூடப் பேசுகிறார்கள். எனவே அவர் சொல்வதும் உண்மையாக இருக்கலாம்.

என்ன ஃபிகர் என்று சொல்வதை விடவும், ஃபிகர் என்று சொல்வதே தவறு என்கிறேன். புறத்தோற்றத்தை வைத்து கிண்டலடிப்பது, ஜாதியைச் சொல்லிக் கிண்டலடிப்பது என்று வந்தாலும் இது அனைத்தும் பெண்களைக் கிண்டலடிக்கும் ஆணாதிக்க மனநோயே ஆகும். இதைத் தவறென்று எண்ணுவதற்குக் கூட ஆண்களுக்கு மனம் வருவதில்லை. புரிந்தவர்கள் திருந்திக் கொள்ளுங்கள், அடுத்தவரையும் திருத்துங்கள். திருந்தாதவர்கள் திருந்தித் தொலையுங்கள்.

இன்னொரு விசயம் டெல்லி பாலியல் நிகழ்வில் பலபேர் ஜோதி தனியாக சென்றதாகவும், இரவில் சென்றதாகவும், காதலனுடன் சென்றதாகவும், உல்லாசமாக இருந்ததாகவும் அடித்து விடுகிறார்கள். அவர்கள் செல்ல வருவது அவர்கள் இருவரும் "அது" செய்வதற்காகவே வெளியில் திரிந்து விட்டு வந்தார்கள் அவர்கள் மீதும் குறிப்பாக அந்தப் பெண்ணின் மீது தவறு இருக்கிறது. அதாவது சுருக்கமாக ஜோதி கற்பில்லாதவள், ஒழுக்கமற்றவள்.

அவர்கள் சென்றது நள்ளிரவிலல்ல, 9 மணி வாக்கில்தான். திரைப்படத்திற்குத்தான் சென்றிருக்கிறார்கள். அவள் தன்னிடம் திருமண ஆசை குறித்துச் சொல்லவில்லை எனவும், அந்தப் பையன் வேறு ஜாதி என்பதால் அதற்கு வாய்ப்பில்லை, அவள் படிப்பில்தான் ஆர்வமாக இருந்தாள் எனவும் ஜோதியின் தந்தை குறிப்பிட்டிருந்தார். தன் மகள் மீது தவறு இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். ஜோதியைக் குதறியதில் அந்த 6 பிசாசுகள் தவிர்த்து, பெண்களின் ஒழுக்கத்தைக் கேள்வி கேட்பவர்கள் அதற்கு வெளியிலிருந்து ஆதரவு தெரிவிப்பவர்கள் ஏனென்றால் குற்றவாளி ராம்சிங்கின் கருத்தைத்தான் அவர்களும் சொல்கிறார்கள்.

அந்த நண்பன் காதலனாக இருந்தாலும், அவர்கள் கலவி செய்யத்தான் வெளியே சுற்றி விட்டு வந்திருந்தாலும் கூட எனது நிலையில் எந்த மாற்றமுமில்லை. ஜோதி சிங் பாண்டே குற்றமற்றவள்தான். சொக்கத் தங்கம்தான். 

அந்தப் பொறுக்கி *@#$%^%^% யை சிறுவன் என்று சொல்லி வெளியில் விடக்கூடாது. இதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. மற்றவர்களுக்குக் கொடுக்கும் தண்டனையே இவனுக்கும் முடிந்தால் இன்னும் கூடுதலாகவும் பரிந்துரைக்கலாம்.

அடுத்ததாக கமலஹாசன் ஷ்ருதிக்கு முத்தம் கொடுப்பதை பெரிய கலாச்சாரா அதிர்ச்சியாக சித்தரிக்கிறார்கள். பெற்றவன் மகளுக்கு முத்தம் கொடுப்பதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதி விளக்கம் தர வேண்டியிருக்கிறதே. காதல் குற்றம், முத்தம் குற்றம் நல்ல கலாச்சாரம். இந்த கலாச்சாரம் சீரழவு குறித்து விமர்சிப்பவர்கள் நம்முடைய கலாச்சாரா வரலாற்றையும், ஜாதியையும் வைத்தே சொல்லி விடலாம் எவ்வளவு அருமையான கலாச்சாரம் என்று. 


 கூடுதல் தகவலாக கமல் தனது 49 பிறந்த நாளின் போது விருமாண்டி படம் வெளியாகும் முன்பு , மேடையிலேயே வைத்து நடிகை காந்தி மதி கமலுக்கு முத்தம் கொடுக்க, கமலும் திருப்பி முத்தம் பல கொடுத்தார். அதையும் விமர்சிக்கலாம்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

குமுதம் அரசுவின் அக்கப்போர் !!


மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக ஒரு கேள்வி பதிலை குமுதம் அரசு பதில்கள் பிரிவில் வெளியிட்டுள்ளனர். தற்போதைய திருவாய் மலர்ந்தருளிய செய்தி - வேறென்ன ஹிந்தியைப் படிக்க விடாமல் திராவிட இயக்கத்தின் துரோகம் குறித்துத்தான். தமிழர்களைப் படிக்கவிடாமல் செய்தது திராவிட இயக்கங்களின்  துரோகம்தானே என்று ஒரு வாசகி கேட்க, அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் மட்டும் ஹிந்தி கற்கும்படி பார்த்துக் கொண்டார்கள் அதுதான் துரோகம் என்று பதிலளித்து இருக்கிறார். திராவிட இயக்கங்களைக் குறை சொல்ல வேறு 100 காரணங்கள் இருக்கின்றன. 

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் தமிழர்களுக்கு எதிரானது என்பதாகவும்,  ஹிந்தியைப் படிப்பது துரோகம் என்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. அடடா என்ன கைங்கரியம். ஹிந்தி திணிப்பதை எதிர்ப்பதும், அல்லது ஹிந்தியைக் கற்பதும் துரோகமாம். தேவைப்படுபவன் கற்றுக் கொள்வதில் யாரும் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை, அதே நேரம் கட்டாயத் திணிப்பை எதிர்ப்பதில் நியாயமிருந்தது. இப்போது ஆங்கிலத் தாக்கத்தினால் தமிழ் மொழி குறித்து கவலைப்படும் நாம் ஆங்கிலம் கற்றுக் கொள்வது துரோகம் என்று சித்தரிப்பதில் என்ன நேர்மையிருக்கிறதோ அது போலத்தான் இதுவும்.

எத்தனை முறை கரடியைப் போல் கத்தினாலும் தேசிய மொழி ஹிந்தியைக் கற்க விடாமல் செய்தது திராவிட இயக்கம் என்று திரும்பத் திரும்ப முதலிலிருந்த தொடங்குகிறார்கள். இதைப்பார்த்தால்தான் கொதிக்கிறது.

ஹிந்தி தேசிய மொழி இல்லை, அதைக் கற்காததால் என்ன இழப்பு ஏற்பட்டு விட்டது, ஹிந்தியல்லாத வெறொரு மொழி தெரியாததால் ஏற்படும் தொல்லைகள்தானே ஒழிய வேறொன்றும் தனிச் சிறப்பாக ஏற்படவில்லை. சில இணைப்புகள் தருகிறேன். வேறு ஏதேனும் சிறப்பான கட்டுரைகள் ஹிந்தி திணிப்பு குறித்து இருந்தால் தெரியப்படுத்தவும்





வெட்கம் கெட்டவர்களுக்காக !   (கோவி கண்ணனின் பதிவில் சில இணைப்புக்களும் உள்ளன. )



என்னுடைய பதிவு


Download As PDF
Bookmark and Share

Post Comment

புளித்த மாவும் அரைத்த மாவும் !

இந்த வாரம் குமுதம் படித்தேன். வார வாரம் படிப்பதுதான். இருபது வருடங்களாகவே படிக்கிறேன் என நினைக்கிறேன். சில வருடங்களாகத்தான் நாளிதழ்களிலும், வார இதழ்களிலும் வருவதையும் அப்படியே நம்பவேண்டியதில்லை என்ற தெளிவு வந்திருப்பதாலும் அதை விமர்சித்து எழுதுவதற்கு வலைப்பூவும் இருப்பதாலும் சிலவற்றைப்படித்தால் புலம்பாமல் இருக்க முடியாது என்பதாலும் இதை எழுதுகிறேன்.

குமுதத்தில் அப்படி என்னதான் இருக்கிறதென்று பார்த்தால் அதிகம் திரைப்படங்கள், நடிகைகள், பிரபலங்கள் குறித்துத்தான். பிரபங்கள் வீட்டு திருமணங்கள், இன்ன பிற விழாக்கள் மருந்துக்குக் கொஞ்சம் அரசியல், அப்போதைய சூடான விவாதங்கள் குறித்து சிறு அளவிலும் குறிப்பிட்டிருப்பார்கள். அவ்வப்போது சில மனிதநேய, சாதனை, வேதனை, அதிசயம் என்கிற ரீதியில் சில ஆர்வமூட்டும் மசாலாவும் இணைக்கப்படும். அதிகமாக முதன்மைப்படுத்தப்பட்டு வெளிவருவது நடிகைகளின் கவர்ச்சிப்படங்கள்தான். படம்போடுவதற்கு ஒரு நியாயம் வேண்டுமென்பதற்காக பக்கத்திலேயே ஒரு கிசுகிசுவையும் எழுதுவார்கள் அது நாயைக் குளிப்பாட்டிய செய்தியாகவும் இருக்கலாம்.

தற்போது தமிழினத்தை அவமானப்படுத்திய காஜல் குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார்கள். காஜல் தன்னை தென்னிந்திய நடிகை என அழைப்பதை விரும்பமாட்டேன் என்றாராம் உடனே தமிழ், தெலுங்கு திரையுலகினர் கொந்தளித்து விட்டனராம். இதில் இவர்கள் கொந்தளிக்க என்ன இருக்கிறது என்பதுதான் தெரியவில்லை. ஒருவேளை அவர் தென்னிந்தியப்படங்களில் நடிகைகளை கண்ணியமாக மட்டுமே நடிக்க வைப்பார்கள் என்று சொல்லியிருந்தால் கூட இவர்கள் பொங்கியிருக்கலாம் ஒரு நியாயம் இருந்திருக்கும். ஆனாலும் குமுதம் போன்றவர்கள் இருக்கும்வரையில் தமிழனின் தன்மானம் தாழ்ந்து விடாது என நம்பலாம். இதற்கு முன்பு இது போன்று தமிழர்களை அவமானப்படுத்தியவர்கள் ஆர்யா, அதற்கு முன்பு ஜெயராம். இது போன்ற ஒரு பைசாவுக்கு உதவாத செய்திகளை வைத்து உசுப்பேத்தி அதில் குளிர்காய்வதுதான் இவர்களுக்கு வேலையே.

அது தொலையட்டும், இப்போது இந்த காஜலை வைத்து ஒரு செய்தி இருந்ததல்லவா அதில் பாரதிராஜா காஜலை நடிக்க வைத்த வரலாற்றை சொல்லி அவரை சாடியும் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். இந்தக்கட்டுரைக்கு காஜலின் செக்ஸியான படங்களைப் போட்டிருக்கிறார்கள் அதுதான குமுதத்தின் தனி பாணியே. இந்த செய்தியைக் படிக்கும் போது தமிழர்களுக்கு தன்மான உணர்ச்சி வருமா இல்லை வேற எதாவது வருமா என்று குமுதம்தான் சொல்ல வேண்டும். இதுமட்டுமல்ல ஸ்டார் சமையலில் வருபவர்கள் இறக்கமாக சேலையைக் கட்டியபடிதான் வரவேண்டும் என்ற சட்டமா ? சமயல் செய்யும்போது தோசைக்கல்லில் எதாவது இருக்கிறதோ இல்லையோ பாதித் தொப்புளாவது தெரியாமல் புகைபடம் போட மாட்டார் சித்ராமணி. அடுத்து க்ளிக் கலாட்டாவில் வரும் திரைப்பட விழாக்களில் எடுத்த படங்களைப் போட்டு அதில் எழுதப்படும் வாசகங்கள் அனைத்தும் மூன்றாந்தரம். அதில் வரும் புகைப்படங்கள் நவீன அரைகுறை, ஒளிபுகும் ஆடைகளணிந்த பெண்களை பலவித கோணங்களிலும் மிக அருகிலும் எடுத்தவையாக இருக்கும். அதில் இடும் வசனங்கள் இப்படி இருக்கும். "பெரிசா இருக்கு", "ரெண்டுமே நல்லா இருக்கு", "பிளவு தெரியுது கூட்டணியில", சின்னதா இருந்தாலும் பளிச்னு இருக்கு" இந்த மாதிரியானவை. ஏன் இப்படியெல்லாம் எழுதுகிறீர்கள் ?

நடிகையின் படமில்லாவிட்டால் வாங்கமாட்டார்கள் என்று அரசு பதில்களில் எழுயிருந்தார்கள் எப்போதோ. அரசு பதில்களில் பெண்கள் குனிந்திருக்கும் படங்களுக்குத்தான் முன்னுரிமை கிடைக்கும். போதாக்குறைக்கு நடிகைக்களைப்பற்றி அரசுவின் பதில்களும், நான் நடிகைகளின் வாலிபால் போட்டியில் பந்தை மட்டும்தான் பார்ப்பேன், மார்க்கெட் தொங்கிப்போச்சு இப்படியெல்லாம் போகும். 

இதெல்லாம் புதிதில்லைதான், இருப்பினும் இதே குமுதம்தான் கோவையில் சிலமாதங்களுக்கும் முன்பு இரு குழந்தைகள் கொல்லப்பட்ட போது, பத்திரிகைகள் ஆபாசப்படம் போடக்கூடாது என்று எழுதியது, ஏன் இப்படி குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவது ? நீங்கள் எபபோது மாறப்போகிறீர்கள் ?

Download As PDF
Bookmark and Share

Post Comment