ஜாதி

ஜாதி என்பது இந்து மதத்திற்குச் சொந்தம் என்பதெல்Ýgr¨?லாம் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. அது ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் சொந்தமானது. இந்தியாவைத் தாண்டியும் வெவ்வேறு வடிவங்களில் இருக்கிறது. இன்னும் மனுதர்மத்திலிருந்துதான் பார்ப்பனர்களிடமிருந்துதான் ஜாதியை அனைவரும் கற்றுக் கொள்கிறார்கள் என்பதெல்லாம் நம்பும்படியா இருக்கிறது ?   
ஜாதி வெறியற்ற மிகச்சில இந்துக்களையும் மதவெறியர்களாக்கி, இந்துத்துவாவாதிகளிடம் தள்ளிவிட்டதுதான் தமிழ்நாட்டு முற்போக்குவாதிகள் சாதனை. பெரும்பான்மை இந்துக்களால் நிராகரிக்கப்படும் பாரதிய ஜனதாக் கட்சியை வளர்த்துவிடுவதற்கு இந்தப் போக்கும் ஒரு காரணம். 
இதை அவர்கள் உணர்ந்ததாகவும் தெரியவில்லை. ஆனால் இவர்கள் ஜாதி உணர்வில்லாத மத நம்பிக்கை அதிகமாக உள்ள முஸ்லிம்களை எந்தவொரு நெருடலுமில்லாமல் இவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இஸ்லாமியர்களைத் தோழர் என்றே அழைக்கிறார்கள். அவர்களின் மதப்பரப்புரைகளையும் மதப்பெருமிதங்களையும் மௌனமாகக் கடந்து செல்கிறார்கள். அதே வழிமுறையை இந்துக்களிடம் அவர்கள் செய்வதில்லை. 
இஸ்லாமிய மதவாதத்தை ஒரு விமர்சித்தாலே அவரைக் "காவிகள்" என்னுமளவிற்கு அவர்கள் இஸ்லாமியர்களை வளர்த்து விட்டுள்ளனர். சமீபத்தில் இஸ்லாமிய மதத்திலிருந்து வெளியேறிய, விமர்சித்த பெரியார் இயக்கத்தைச் சார்ந்த ஒருவரை அம்மதத்தைச் சேர்ந்த ஐந்தாறு காட்டுமிராண்டிகள் படுகொலை செய்தனர். அதைக் கூட கண்டிக்காத முற்போக்கு பெரியாரியவாதிகள் இருக்கின்றனர். கொல்லப்பட்டவன் பெரியாரிய இயக்கத்தில் இருந்தால் கூட அம்மதத்தை விமர்சிப்பது தீட்டுப் பட்டுவிடும் போலும். 
மற்றபடிக்கு, அவர்கள் இண்டு இடுக்கெல்லாம் இந்துத்துவ அடையாளங்களை நோண்டியெடுத்து அடையாளங்காட்டுகிறவர்கள். இதெல்லாம் எங்கு போய் முடியும் ? 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்