பாகிஸ்தான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாகிஸ்தான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இந்திரா காந்தி ஏன் கொல்லப்பட்டார் (சீக்கியர்கள் பார்வையில்) ?


இந்திரா காந்தியைக் கொன்றவர்கள் சீக்கியர்களால் நியூஸிலாந்தில் உள்ள ஒரு குருத்வாராவில் ஈகியர்களாகப் போற்றப்பட்டனர். அவர்கள் ஏன் மாவீரர்களாகக் கொண்டாடப்படுகின்றனர் ?, அவர்கள் இந்திராவைக் கொன்றிருக்காவிட்டால் டெல்லியிலும் மற்ற மாநிலங்களிலும் சீக்கியருக்கெதிரான படுகொலைகள் நிகழ்ந்திருக்காது. அல்லது பொற்கோயிலில் இந்திய இராணுவத்தை ஏவி மிகப்பெரும் படுகொலைகளையும், சீக்கியரின் புனிதமாகக் கருதும் இடத்தை அழித்த இந்திராகாந்தியை கொன்றதால் கொண்டாடப்படுகிறார்களா என்றால் அதுதான் உண்மை. அவர்களிருவரும் பகத் சிங்கை விடவும் மதிப்புக்குரியவர்களாகக் கருதப்படுகின்றனர். இந்திரா காந்தி படுகொலையை அவர்கள் துன்பியல் நிகழ்வாகக் கருதவில்லை. அவர் கொல்லப்படுவார் என்பதை பஞ்சாப்பிய சீக்கியர்கள் உணர்ந்தே இருந்தனர். இந்திரா காந்தி ஏன் அவரது பாதுகாவலர்களால் கொல்லப்பட்டார், சீக்கியர்களின் புனித பொற்கோயிலின் மீது இராணுவத்தை ஏவியதால் ஆத்திரமுற்ற சீக்கிய மதத்தைச் சார்ந்த அவரது பாதுகாவலர்கள் அவரை சுட்டுக் கொன்றனர் இதுதான் வரலாறு கூறும் செய்தி. ஆனால் சீக்கியர்களிடம்  வேறு ஒரு காரணத்துக்காகத்தான் இந்திரா காந்தி கொல்லப்பட்டார் என்று ஒரு கருத்து உண்டு. இந்திரா படுகொலைக்கான காரணம் குறித்து குறித்து இணையத்தில் தேடிய போது இன்னொரு அதிர்ச்சித் தகவல் கிடைத்தது.  இது சீக்கியரின் சார்பான இணையங்களில் மட்டுமே காணக்கிடைக்கிறது . சங்கத் சிங் என்பவர் எழுதிய "வரலாற்றில் சீக்கியர்கள்" ( The Sikhs in History )  என்ற நூலில் எழுதப்பட்டுள்ளது.

                                       

அன்றைய காலத்தில் அதாவது இந்திராவின் ஆட்சியில்தான் பாகிஸ்தான் எதிர்ப்புணர்வு அதிகமாக இருந்தது. சோவியத் ஆதரவு நாடாக இருந்த இந்தியா அண்டை நாடுகளுடன் (சீனா, அமெரிக்க ஆதரவு நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தான்) சுமூகமான உறவுடன் இருக்கவில்லை. விடுதலை நாடான பின் இந்தியாவின் மிக மோசமான நாள்களாக இருந்தவைதான் இந்திராவினால் கொண்டுவரப்ப்ட்ட அவசரநிலைப் பிரகடனம். காஷ்மீர் பிரச்சனை, பஞ்சாப்பின் பிரிவினைவாதம் ஆகியவை உச்சத்தில் இருந்தன. பாகிஸ்தானுடன் போர் மூளும் நிலையும் இருந்தது.  இந்திராவின் இறுதிச்சடங்கிற்காக வந்திருந்த பாகிஸ்தான் அதிபர் முகமது ஜியா-உல்-ஹக் இவ்வாறு கூறினார். "அல்லா சொர்க்கத்தில் இருக்கையில், ரீகன் வெள்ளை மாளிகையில் இருக்கையில், இந்திராகாந்தியின் சாம்பல் இமயமலைகளில் தூவப்பட்டபின் எனக்கென்ன கவலை". அதாவது இந்திரா காந்தி உயிருடன் இருந்திருந்தால் இந்தியாவுடனான போரைத் தவிர்க்க இயலாது, அவர் இறந்து விட்டதால் தற்போது போர் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது என்ற பொருளில் அப்படிக் கூறினார். 

அமைதி நடவடிக்கை (Operation Shanti)

சீக்கியர்களின் கருத்துப்படி, இந்திரா சீக்கியர்கள் மீது மிகப்பெரும் இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட கொடூரமான திட்டம் தீட்டியிருந்ததாகவும் அதைக் கண்டுகொண்ட இந்திரா காந்தியின் காவலர்களான பீந்த் சிங், சத்வந்த் சிங் ஆகியோர் சீக்கியர் இனத்தைக் காக்கவே அந்தப் படுகொலையை செய்தனர். அந்த நடவடிக்கையின் பெயர் அமைதி நடவடிக்கை எனப்படும் Operation Shanti. இதன்படி பஞ்சாப்பில் பாகிஸ்தான் இராணுவத்திற்கெதிரான போரில் சீக்கியரையும் சேர்த்து அவர்கள் மீதும் போர்தொடுத்து மிகப்பெரும் அழிவை உண்டாக்குவது, அதே நேரம் இந்தியா முழுவதும் இளைஞர் காங்கிரஸ் கும்பலைக் கொண்டும் சீக்கியர்களை கலவரம், கொலை, கொள்ளைகள் மூலம் அழிப்பது என்பதே "அமைதி நடவடிக்கை"யின் சாரம். 

பொற்கோயில் தாக்குதலில் பல சீக்கியர்கள், பிந்தரன்வாலே கொல்லப்பட்ட பிறகும் இந்திராகாந்தி மனநிறைவு அடையவில்லை. எனவே அதைவிட பலமடங்கு கொடிய ஒரு திட்டம் தீட்டப்பட்டு, அது குறித்து முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனைகளும் நடத்தப்பட்டுவிட்டன. இந்தத் திட்டத்தின்படி குரு நானக்கின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் சீக்கியர்கள் கூடியிருக்கும் வேளைகளில் நவம்பர் மாதத்தின் முதலிரண்டு வார நாட்களில் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்குவது, காஷ்மீர் எல்லையிலல்ல பஞ்சாப் எல்லையில். பாகிஸ்தானின் எல்லையோரத்திலுள்ள ஜலந்தர், அமிர்தசரஸ், குருதாஸ்பூர், ஃபெரோஸ்பூர், கபுர்தலா ஆகிய மாவட்டங்களில் மீது வான்தாக்குதல் இராணுவ, துணை இராணுவத்தாக்குதல் மூலம் அழிப்பது என்பது திட்டம். இதற்குத் தோதாக பாகிஸ்தான் இராணுவத்தை சிறிது உள்வாங்க அனுமதித்து விட்டு, அதன்மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் சீக்கியர்களுக்கு அழிவை உண்டாக்குவது என்பது திட்டம். காரணம் கேட்டால் பாகிஸ்தான் படையெடுக்கிறது, அதற்கு ஆதரவாக சீக்கியர்களும் அவர்களுடன் இணந்து கொண்டு இந்தியாவுக்கெதிரான போரில் ஈடுபட்டார்கள் என்று பரப்புரை செய்துவிட வேண்டியது சீக்கியர்களுக்கெதிரான இந்த எதிர்ப்புணர்வைப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் இளைஞர் காங்கிரஸ் குண்டர்களைப் பயன்படுத்தி அவர்களுக்கெதிரான கலவரத்தைக் கட்டவிழ்த்து விட்டு இனப்படுகொலையை ஏவுவது இதுதான் அமைதி நடவடிக்கை.

இதற்காக கொல்லப்படுவதற்கு (அக்டோபர் 31, 1984) மூன்று நாள்கள் முன்பு 1984 அக்டோபர் 27 -ம் நாளில் காஷ்மீர் சென்ற இந்திராகாந்தி இராணுவத் தளபதியான வைத்யா என்பவரைச் சந்தித்து, பாகிஸ்தான் எதிர்பாராவிதமாகத் தாக்குதல் நிகழ்த்தினால் எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்குமாறு அறிவுறுத்தச் சென்றார் என்பது இந்திராகாந்தியின் முதன்மை உதவியாளரான பி.சி. அலெக்ஸாண்டர் என்பவரின் குறிப்பில் இருக்கிறது. அதாவது பஞ்சாப்பில் தாக்குதல் நடத்தும் வேளையில் பாகிஸ்தான் காஷ்மீர் எல்லையிலும் போரை தொடங்கும் நிலை வரலாம் என்பதற்காக. 1993 - ம் ஆண்டில் பாகிஸ்தான் அதிபரான குலாம் இஷாக் கான் இந்திரா காந்தி பாகிஸ்தானுடன் போருக்கு திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் பத்து நாட்கள் முன்பாகவே கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்திரா காந்தியின் இந்த இரகசியத் திட்டம் அவரது சிறப்பு உதவியாளரான ரஜிந்தர் குமார் தவான் (இவர்தான் இந்திரா காந்தியின் கொலையையின் சாட்சி)  என்பவரின் மூலமாக அறிந்த பீந்த் சிங் என்ற சீக்கிய காவலர் சத்வந்த் சிங் என்ற மற்றொரு சீக்கிய காவலருடன் இணைந்து இந்திராவை சுட்டுக் கொன்றார்கள். சுட்டபின்பு துப்பாக்கிகளைக் கீழே போட்டுவிட்டு "நான் செய்ய வேண்டியதை செய்து விட்டேன். நீங்கள் செய்ய வேண்டியதை செய்யுங்கள்" என்று கூறினார் பீந்த் சிங். இதனால்தான் சீக்கியர் மீதான போரைத் தடுத்தற்காகவே இந்திரா கொல்லப்பட்டார் என்று கருதுகின்றனர் சீக்கியர்கள்.

தொடர்புடைய முந்தைய பதிவுகள்;

பின்குறிப்பு: சீக்கியர்கள் பற்றி எழுதிய இடுகைகள், படங்கள்  அனைத்திற்கும் உதவிய தகவல்களின் மூலத்திற்கான  இணைப்புகளை அங்கங்கே கொடுத்துள்ளேன். அவையனைத்திற்கும் நன்றிகள். 
Download As PDF
Bookmark and Share

Post Comment

பாகிஸ்தானின் மிகப்பெரும் தாலிபன் இயக்கம்

கடந்த 80 வருடத்தில் இல்லாத மழைவெள்ளத்தால் நிலைகுலைந்துள்ள பாகிஸ்தானின் அடுத்தடுத்த பேரழிவை விளவிப்பவை தாலிபன் இயக்கங்களின் தாக்குதல்கள் . இம்மாதம் 3 - ம் தேதி நடத்திய தாக்குதலில் ஏறத்தாழ 70 பேரும் 6 - ம் தேதியில் நடந்த தாக்குதலில் 19 பேரும் உயிரிழந்துள்ளனர். இதற்குப் பொறுப்பேற்றுள்ள இயக்கம் தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) அல்லது பாகிஸ்தான் மாணவர் இயக்கம். மேலும் தாக்குதல்கள் தொடர்ந்து நடக்கும் என்று எச்சரித்துள்ளது. கடைசியாக நடந்த தாக்குதல்களில் 4 பள்ளிக்குழந்தைகள் கொல்லப் பட்டதற்கு அதன் செய்தித் தொடர்பாளர் அஸம் தாரிக் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தான்

அமெரிக்கா ஆஃப்கானிஸ்தானை ஆக்ரமித்தபோது இவர்கள் பாகிஸதானின் வடமேற்குப் பகுதிகளில் தஞசம் புகுந்தவர்களுடன் சேர்ந்து உருவானதே இவர்களின் இயக்கம். முன்பு தாலிபன் ஆதரவாளர்களாக மட்டும் இருந்த இக்குழுக்கள் தம்மை தாலிபன்களாக அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள பழங்குடியினத் தலைவரகளுக்கு மாற்றாக நிறுவிக கொண்ட இவர்கள் அங்கு தமது ஆட்சியையும் நிறுவிக் கொண்டனர். அவ்வப்போது இராணுவத் தாக்குதல்களிலும் ஈடுபட்டனர். 2005 - ல் பாகிஸ்தான் இவர்களைத் தடை செய்தது. பின்பு பாகிஸ்தான் இராணுவம் இவர்கள் மீது போர் தொடுத்தது முதல் அதிபயங்கரத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

தாலிபான்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதி




ஷியா முஸ்லிம்களின் ஊர்வலத்தில் தாக்குதல் நடத்தியதிலிருந்தே இவர்களின் அடிப்படையைத் தெரிந்து கொள்ளலாம். தியோபந்தி ( Deobandi ) சுன்னி இசுலாமியப் பிரிவு இவர்களின் அடிப்படைவாதமாக உள்ளது. ஆச்சரியமூட்டும் வகையில் தியோபந்தி பிரிவு தொடங்கப்பட்ட இடம் தற்போதைய இந்தியாவின் உத்தர பிரதேசத்திலுள்ள சாஹரன்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். இந்திய துணைக்கண்டடத்தில் சுன்னி மரபினைப் பரப்பும் மதரசா தொடங்கப்பட்ட இந்நகரின் பெயராலேயே இது அழைக்கப்படுகிறது. ஹிந்தியிலும் உருதுவிலும் இது "தேவ்பந்த்" (Devband) எனப்படுகிறது. அடுத்த ஆச்சரியம் இவர்களின் தோழமை அமைப்புகள காசுமிரில் இந்திய இராணுவத்திற்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டு வந்தாலும் இவர்கள் ஈடுபடவில்லை. காசுமிர் ஜிஹாத் தங்களின் இலட்சியத்திற்கு உதவாது என்கிறார் தாரிக். இவர்களின் எதிரிகளின் பட்டியலில் உள்ளவர்கள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இசுரேல் மற்றும் பாகிஸ்தான் அரசும் இவர்களின் முதன்மையான எதிரி. மேலும் ஷியா முஸ்லிம்களையும் தமது எதிரிகளாக் அறீவித்துள்ளது. இந்தியாவின் "ரா" உதவி பெறும் அமைப்பாக தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தான் அமைப்பை பாகிஸ்தான் அரசு பரப்புரை செய்வதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

பாகிஸ்தான் இன்னும் இசுலாமியமயமாக வேண்டுமென்பதே இவர்களின் நோக்கம். ஷாரியா தவிர வேறு எதையும் இவர்கள் ஏற்பதில்லை. ஜிஹாதிகளின் பொதுவான நோக்கங்களான் மேற்கு நாடுகளின் பிடியிலிருந்து இசுலாமிய நாடுகளின் விடுதலை, முசுலிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் ஷாரியத்- ஐ நடைமுறப்படுத்துவது என்பதே இவர்களின் கொள்கை. பாக். மட்டுமின்றி உலகளாவிய புனிதப் போரும் அடங்கும். இவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடைமுறைப்படுத்தியுமுள்ளனர். வங்கிகளைக் கொள்ளையடிப்பது, பெண்கள் பள்ளிகளைத் தகர்ப்பது, பெண்களுக்குக் கிடைக்கும் அரசு நிதிகளைக் கிடைக்காமல் செய்வது, முகச்சவரம் செய்வதைத் தடை செய்வது இவர்களின் சட்டங்கள். மேலும் ஷியா முஸ்லிம்களை கண்ணியமற்ற முறையில் நடத்துவதும் இவர்களின் நடைமுறை. மேலும் சிறுபான்மையினரான் கிறித்தவர்கள், ஹிந்துக்கள், சீக்கியரை தமது பகுதிகளிலிருந்து வெளியேற்றுவது இவர்களது கொள்கையிலுள்ளது. இவர்க்ளின் அட்டூழியத்தால் இதுவரையில் 3 இலட்சம் பேர் வெளியேறியுள்ளனர். துப்பாக்கியும் புனிதப்போருமே உலகில் அமைதியைக் கொண்டு வரும் சமாதானம் பேச்சுவார்த்தைகள் உதவாது என்பது இவர்களின் சாரம்.


பாகிஸ்தான் அரசுக்கு உதவி

கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்திற்கு இழப்பீடாக TTP இயக்கம் பாகிஸ்தான் அரசுக்கு 20 மில்லியன் டால்ர்கள் அளிக்க முன்வந்தது. மாறாக் பாகிஸ்தான் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் உதவிகளை மறுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது. பின்பு பாகிஸ்தான் அரசு வெளிநாட்டின் உதவிகளை மக்களின் நலனுக்காக பயன்படுத்தவில்லை என்றது.

ஆஃப்கானிஸ்தானின் எல்லையோரங்களிலுள்ள பாகிஸ்தானின் கிராமங்களில் அமெரிக்க, நேட்டோ படைகள் தாக்குதல் நடத்துகின்றன. மேலும் தாலிபன்களின் தலைமறைவாக் இருப்பதற்கு பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதிகளே புகலிடமாக விளங்குகின்றன. தாலிபன்கள் ஆஃப்கானிஸ்தானில் நடத்தும் போருக்கும் இங்கிருந்தே கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. இதனால் அமெரிக்க அரசுக்கு ஆதரவாக பாகிஸ்தானிலிருக்கும் தாலிபன்களை ஒடுக்குவதற்கு இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பல்வேறு தாலிபன் அமைப்புகளும் ஆஃப்காகானிலும், பாகிஸ்தானிலும் போரை நடத்தி வருகின்றன. தாலிபன்களுக்கு எதிராக ஆஃப்கானிஸ்தானுக்கு இந்தியாவும் உதவிகள் செய்து (பாகிஸ்தானுக்குப் போட்டியாக) தமது செல்வாக்கை உயர்த்திக் கொள்ள விரும்புகிறது. இதனால் தாலிபன்கள் அங்கு பணிபுரியும் இந்தியர்களை கடத்துவது, கொல்வது போன்ற நிகழ்வுகளும் நடந்தன. இந்திய தூதரக்த்தின் மீதான தாக்குதலையும் நடத்தினர்.

ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க, நேட்டோ படைகள் பொதுமக்களின் மீதான ஈவிரக்கமற்ற தாக்குதலினால் பலரைத் தாலிபான்களின் சேரவைத்துள்ளது. தாலிபன்களுக்கெதிரான் போரின் பெயரால் திருமண வீடுகள் தொடங்கி இழவு வீடுகள் வரை காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடைபெறுவதால் வெறுப்புற்ற ஆஃப்கானியர்கள் தாலிபன்களுக்கு ஆதரவளிக்கும் நிலைக்கு ஆளாகின்றனர். பாகிஸ்தானின் எல்லைப் புறங்களில் நடக்கும் அமெரிக்காவின் அத்துமீறிய தாக்குதல்கள், பாகிஸ்தானின் அமெரிக்க ஆதரவு நிலை இவற்றால் வெறுப்புற்ற பாகிஸ்தானின் சில் இயக்க்ங்கள் தாலின்களை ஆதரிக்கின்றன. இவ்வாறாக பெருமளவிலான் ஆதரவைப் பெற்றுள்ள் தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தானின் ஆற்றல் வாய்ந்த இயக்கமாக பல்லாயிரம் வீரர்களைக் கொண்டுள்ளதாக வளர்ந்துள்ளது. உறுதிப்படுத்தப்படாத தகவலின் படி 20000 - க்கும் மேலான வீரர்களைக் கொண்டுள்ள இயக்கமாகும்.

பாகிஸ்தானின் அமெரிக்க முதலீடுகளைக் குறிவைத்து தாக்குவதில் கவனம் செலுத்தும் TTP யின் ஆற்றலுக்கு ஓர் உதாரணம், கடந்த 2009 - ல் டிசம்பர் 28 - ல் கராச்சி நகரில் ஒரு பேரங்காடிகள், வணிக வளாகங்கள் கொண்ட ஒரு கட்டிடத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் பல கடைகள் அழிக்கப்பட்டு ஏறக்குறைய 10000 பேர் வெலையிழந்தனர்.



தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தான் - தலைவர் ஹகிமுல்லா மெசுத்

இவர்கள் தம்மை தாலிபான்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டாலும் ஆஃப்கானின் தாலிபன்களிலிருந்து வேறுபட்டுத் தனித்தே செயல் படுகின்றனர். தாலிபன்களின் தலைவரான முல்லா ஓமரின் தலைமையிலல்ல. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இதன் தலைவரான் பையத்துல்லா மெசுத் கொல்லப்பட்டார். பின்பு ஹகிமுல்லா மெசுத் என்பவர் தலைவராக நியமிக்கப் பட்டார்.தாலிபன்கள் இயக்கங்கள் தலைவர்கள் கொல்லப்படுவதால் எவ்விதப் பின்னடைவையும் அடைவதில்லை. பல்வேறு தலைவர்கள் கொல்லப்பட்டும், பிடிபட்டும் இன்னும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கின்றன. தலைவர்கள் கொல்லப்படுவதாலும் இராணுவ நடவடிக்கைகளாலும் தாலிபான்களை அடக்க முடியாது என்பதே தற்போது நிலவரமாக உள்ளது.
Download As PDF
Bookmark and Share

Post Comment