இராஜீவ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இராஜீவ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1984 கலவரத்தின் சில துளிகள்


இந்திரா காந்தியின் படுகொலையும் மக்களின் எதிர்வன்முறையும்

சிறுபான்மையினரின் மேல் வன்முறை ஏவப்படும்போது இந்துப் பயங்கரவாத இயக்கங்களின் தலைவர்கள் ஒரு பதில் சொல்வார்கள். இந்த வன்முறை இந்துக்களின் எதிர்த்தாக்குதல் என்று மொத்த இந்துக்களின் மீதும் பழியைப்போட்டுவிடுவார்கள். இதைத்தான் டெல்லியில் நடந்த படுகொலைக்குப் பின்பும் சொன்னார் இராஜீவ் காந்தி. இந்திராவின் படுகொலைக்கும் பஞ்சாப்பில் நிலவிய பிரிவினைத் தீவிரவாதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில் பல்லாயிரம் சீக்கியர்கள் பேராயக்கட்சிப் பேய்களின் கொடூரத்திற்கு இலக்காகி மாண்டுபோனார்கள். டெல்லியிலிருந்த சீக்கியர்கள் பலர் பேராயக்கட்சியின் ஆதரவாளர்களாகவும் இருந்தனர். இந்து மதவெறியைத் தூண்டுவதற்காக இவர்களைக் கொல்லப்படக் காரணமான கொலைகாரப் பயங்கரவாதி உதிர்த்த முத்துக்கள்தான் இவை. 

     "இந்திரா அவர்களின் படுகொலையைத் தொடர்ந்து சில கலவரங்கள் நடைபெற்றன. இந்தியாவே சில நாள்களுக்கு உலுக்கப்பட்டதிலிருந்து (சீக்கியர் படுகொலை) மக்கள் மிகவும் ஆவேசத்துடன் இருந்ததை நாம் அறிவோம், ஆனால் பெரிய மரம் வீழும்போது தரை சிறிது அதிர்வது இயற்கையானது" என்றார் இராஜீவ்.

இந்திராகாந்தி 1984 -ம் ஆண்டு, அக்டோபர் 31 ம் நாள் காலை 9.15 மணிக்கு சுடப்படுகிறார். அவர் அனைத்திந்திய மருத்துவக் கழகத்தில் (AIIMS) சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகிறார். பலனின்றி இரண்டு மணிநேரத்தில் இறந்துவிடுகிறார். அவரது இறப்புச் செய்தி அனைத்திந்திய வானொலியில் அறிவிக்கப்படுகிறது. நண்பகலில் அனைத்திந்திய மருத்துவக் கழகத்தில் மக்கள் கூடத் தொடங்குகின்றனர். அவர்களால் வெறுப்பைக் கக்கும் "இரத்ததிற்கு இரத்தம்", "சீக்கியர்கள் தேசத்துரோகிகள்" போன்ற முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன. அவை அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் அந்நாள் முழுவதும் ஒலிபரப்பப்பட்டன. அன்றைய குடியரசுத்தலைவரான ஜைல் சிங் அன்று மாலை அவ்விடம் வந்து சேர்ந்த போது அவரது வாகனம் தாக்கப்பட்டது. அங்கங்கே சீக்கியர்கள் மகிழுந்துகளிலிருந்தும், பேருந்துகளிலிருந்தும் வெளியே இழுத்து வரப்பட்டுத் தாக்கப்பட்டனர், அவர்களது தலைப்பாகைகள் கிழித்தெறியப்பட்டு எரிக்கப்படுகின்றன. இவ்வளவுதான் இந்திரா காந்தி படுகொலை நடந்த நாளில் சிக்கியருக்கு எதிரான பொதுமக்களின் எதிர்வினையாக இருந்தது.

திட்டமிடப்பட்ட வெறியாட்டம்

இந்த ஆவேசமானது ஒரு இரவுக்குள் மிகப்பெரும் படுகொலைகளைத் தொடக்கிவைக்கும் அளவுக்குக் கொலைகாரர்களால் ஊதிப்பெருக்கப்பட்டது. இதற்குக் காரணம் வருகின்ற தேர்தலில் பெரும்பான்மை இந்துக்களின் உணர்வுகளைத் தூண்டி வாக்குகளை அள்ளிக் கொள்ள வேண்டுமென்பதே. அந்தத் தந்திரம் வெற்றி பெற்றது. அந்தத தேர்தலில் மிகப்பெருமளவிளான வாக்குகளைப் பெற்று வென்றது பேராயக்கட்சி (காங்கிரஸ்).


 திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலையும் காவல்துறையின் உதவியும் மிகப்பெருமளவில் படுகொலைகள், கொள்ளையடிப்புகள், வன்கலவிகளுக்கு வழிவகுத்தன. நாடாளுமன்ற உறுப்பினர் சஜ்ஜன்குமாரும், வர்த்தக சங்கத் தலைவர் லலித் மேகன் என்பவரும் கொலைகாரக் கும்பலுக்குப் பணமும், சாராயமும் தந்து தூண்டிவிட்டவர்கள். ஜே.ஜே காலனி எனப்படும் இடம் அவசரநிலைக் காலத்தில் பேராயக்கட்சியின் ஆட்சியாளர்களால் சேரிகளுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட மறுகுடியேற்றப் பகுதிகளாகும். இந்தப் பகுதி பேராயக் கட்சிக்கு மிகப்பெரும் வாக்குவங்கியாக இருந்தது. குஜ்ஜார், ஜாட் போன்ற பிற்படுத்தப்பட்ட சாதியினர், பாங்கீஸ் என்ற தாழ்த்தப்பட்ட சாதியினர் வரை பலரும் பேராயக் கட்சியின் ஆதரவாளர்களாக இருந்தனர். இப்பகுதிகளில் இருந்த படிப்பறிவற்றவர்கள், உதிரிப்பாட்டாளிகள், சமூகப்பகைவர்கள், பொறுக்கிகள், பொறம்போக்குகளைக் கொண்டு பேராயக் கட்சி தமது அரசியல் போராட்டங்களில், பேரணிகளில், பொதுக்கூட்டங்களில், கலவரங்களில் ஈடுபடுத்தி வந்தது. இவர்களே கொலை, கொள்ளை, வன்புணர்ச்சிகளை நடத்தும் அடியாள்களாக செயல்பட்டனர்.


இந்தக் கொலைகாரர்களுக்கு மூன்று நாட்களும் போக்குவரத்து வசதி எல்லாவகையிலும் செய்து தரப்பட்டது. டெல்லி போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் தொடங்கி, காவல்துறையினரின் வாகனங்கள் வரையில் இந்தக் கும்பல்களை சீக்கியர்கள் செறிந்து வாழும் பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு உதவின. இந்தக் கும்பலுக்குத் தொடர்ந்து வெறியூட்டும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன். "சீக்கியரைக் கொல், கொள்ளையடி", "சீக்கியனுக்குப் பாடம் கற்பிக்க!", "ஒரு சர்தாரும் தப்பக்கூடாது!", "காவல்துறையே நம்முடன் இருக்கிறது!" இவை முழக்கமிடப்பட்டன. இந்தக் கொலைகாரப் பேய்களுக்கு உருட்டுக்கட்டைகள், கம்புகள், வேல்கள், வாட்கள், கத்திகள், இரும்புத்தடிகள் மண்ணெண்ணெய் போன்றவை தொடர்ந்து வழங்கப்பட்டன, அவர்களின் கைகளில் வாக்காளர் பட்டியல் இருந்தது. வீடுவீடாக வெறியாட்டம் நடந்தது. வீடுகளிலிருந்தவர்கள் வெளியே கொண்டுவரப்பட்டு அடித்தும், வெட்டியும், உயிருடன் எரிக்கப்பட்டும் கொல்லப்பட்டார்கள். சாலையில் துரத்தித் துரத்தி வெட்டியும் எரித்தும் கொல்லப்பட்டார்கள். ஆண்கள் தலைப்பாகையைக் கிழித்தும் முடியை வெட்டியும், பெண்கள் கணவர்கள், அண்ணன்கள் முன்னிய்லையில் கும்பல்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள். பாதி உயிருடன் எரிக்கப்பட்டவர்கள் உட்பட அனைவரது பிணங்களும் தெருவிலே கிடந்தன. அவைகள் மூன்று நாட்களுக்குப் பின்பே கொலையானவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டவேண்டிய நிலையில் அப்புறப்படுத்தப்பட்டன. 

காவல்துறையினர் பரப்பிய வதந்திகள்

டெல்லியின் காவல்துறையும் தன் பங்கிற்கு பொய்யான வதந்திகளைப் பரப்பி சீக்கியருக்கு எதிரான மனநிலையை உருவாக்கியது. பரப்பப்பட்ட மூன்று வதந்திகள் 

1. சீக்கியர்கள் இந்திராவின் இறப்புச் செய்தியைக் கேள்விப்பட்டதும் மகிழ்ச்சியுடன் நடனமாடினர், பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடியும், இனிப்புகளைப் பரிமாறிக்கொண்டும் மகிழ்ந்தனர். 

2. ஒலிப்பெருக்கியுடன் இருந்த காவல்துறையினரின் வாகனங்கள் "சீக்கியர்கள் டெல்லியின் குடிநீர் விநியோகத்தில் நச்சைக் கலந்து விட்டார்கள்" என்றன , சில இடங்களில் மக்கள் நீரைக் குடிக்க வேண்டாமென்றும் அறிவுறுத்தப்பட்டனர்.

3. பஞ்சாப்பில் கொல்லப்பட்ட இந்துக்களின் உடல்களுடன் இரயிலொன்று பழைய டெல்லி இரயில் நிலையத்தில் வந்துள்ளது. சீக்கியர்களின் கூட்டமொன்று கலவரத்தைத் தூண்டுகிறது, எனவே இந்துக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளவேண்டும் என்கிற பாணியில் பொய்ப்பரப்புரைகள் செய்யப்பட்டன.  

இதனால் சீக்கியர்களின் வழிபாட்டிடங்கள் இடிக்கப்பட்டன. அவர்களின் புனித நூல்கள் எரிக்கப்பட்டன. அவர்களின் குருத்துவாராக்களில் சிறுநீரைக் கழித்துவிட்டு அவைகள் தீக்கிரையாக்கப்பட்டன. காவல்துறையினர் சீக்கியரை வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தினர். கொலைகாரர்கள் வீடுவீடாக வாக்காளர் பட்டியலுடன் சென்று அடையாளம் கண்டு கொன்று குவித்தனர்.  மேலும் சீக்கியர்களில் ஆண்கள் தலைப்பாகை, தாடிகளைக் கொண்டும், பெண்கள் உடைகளைக் கொண்டும் எளிதாக அடையாளம் காணப்பட்டு சூறையாடப்பட்டனர். இத்தனைக் களேபரத்திலும் மிக நேர்த்தியாக நடந்த நிகழ்வுகள் சில, அன்றாடங்காய்ச்சிகளான உழைப்பாளி சீக்கியர்கள் வாழும்பகுதிகளில் அதிகமாக கொலைகளும் , பணக்கார சீக்கியர்கள் வாழுமிடங்களில் கொள்ளைகளும் அதிகமாக நடந்தன. கொலைகார ஓநாய்க்கூட்டத்திற்கு எந்தெந்தக் கடைகள் கொள்ளையடிக்கப்படவேண்டும், எந்தெந்தக் கடைகள் எரிக்கப்படவேண்டும் என்பதைத் தெளிவாக அறிந்து வைத்திருந்தனர். 

இந்தக் கொலைவெறியாட்டத்தினால் 3000 க்கும் அதிகமான எண்ணிக்கையில் சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. விதவைகள் எண்ணிக்கை 1300, பெற்றோர், உறவினரை இழந்து அநாதைகளானவர்கள் 4000 பேர்கள். உண்மையில் இன்னும் அதிகமாக இருக்கக்கூடும். இதனால் டெல்லியிலிருந்து மட்டும் ஏறக்குறைய 50,000 பேர்கள் வெளியேறினார்கள். இந்தக் கலவரத்தைப் பற்றியும், பாதிக்கப்பட்டவர்களில் சிலர் குறித்தும் பஞ்சாப்பில் சீக்கியர் மனநிலை குறித்தும் ஒரு ஆவணப்படம் கீழே.


Download As PDF
Bookmark and Share

Post Comment

1984: டெல்லியில் சீக்கியர் மீதான கலவரத்தைத் தூண்டிய அமிதாப் பச்சன்


சீக்கியர் இனப்படுகொலையை நிகழ்த்தியவர்கள் மொத்தம் 200 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அவர்களுள் 177 காங்கிரஸ் கொலைகாரர்களும் , 17 காவல்துறை அதிகாரிகளும் அடக்கம். இதுவன்றி குற்றம் சாட்டப்பட்ட பெரும்புள்ளி நடிகர் அமிதாப் பச்சன். முதன் முதலில் சீக்கியருக்கு எதிரான கலவரத்தை மக்களிடம் தூண்டியவர் அமிதாப் பச்சன் என்று குற்றம் சாட்டுகிறார்கள் சீக்கியர்கள். 
                                            
அமிதாப்பின் மீதான குற்றச்சாட்டுக்கள்

    

  சீக்கிய இனப்படுகொலைக்கு முன்பு அமிதாப் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் உரை நிகழ்த்தினார். அதில் சீக்கியர்களைக் கொல்லுமாறு மக்களைத் தூண்டினார்.

 "சீக்கியர்கள் இந்திராகாந்தியை மட்டும் கொல்லவில்லை, அவர்கள் இந்த தேசத்தின் தாயையே கொன்றுவிட்டார்கள்" என்றார்.

  "இந்திரா சிந்திய குருதியை கொலைகாரர்களும்(சீக்கியர்கள்)  சிந்த வேண்டும்" என்கிற பாணியில் "இரத்தத்திற்கு பதில் இரத்தம்" என்று முழங்கினார் அமிதாப்.

(Khoon ke chheente Indira ko marne walon ke gharon tak pahunchne chahiye (The bloodstains must reach the houses of those who killed Indira))



இந்திராவின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அகில இந்திய மருத்துவ கழகத்தில்(AIIMS), அமிதாப்பும் இராஜீவும் இருந்தனர். அப்போது தூர்தர்ஷனின் நிருபர்களும் இருந்தனர். அப்போதுதான் இந்த அமிதாப் கலவரத்தைத் தூண்டும் வகையில் கூடியிருந்த மக்களை நோக்கி "சர்தார்கள் தேசத்துரோகிகள்" என்றும் "இரத்ததிற்குப் பதில் இரத்தம்" (Blood for blood)  என்கிற தொனியில் முழக்கங்களை எழுப்பிக் கொண்டு மக்கள் கூட்டத்துடன் சில தொலைவு நடந்தார். இவரது ஆவேசப் பேச்சு தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பபட்டது. வட இந்தியா முழுவதும் சீக்கியருக்கு எதிராக இந்துக்களை கலவரத்தில் ஈடுபடுத்த இது ஒரு தூண்டுதலாக இருந்தது. 

இராஜீவ் - அமிதாப் நட்பு

இவர்களின் நட்பு மிகவும் புகழ் வாய்ந்தது. இராஜீவும் அமிதாப்பும் தோஸ்தி நெ.1 என்று அழைக்கப்படுமளவிற்கு நண்பர்களாக இருந்தனர். பச்சன் காந்தி குடும்பத்தின் நட்பு உலகறிந்தது. இரண்டு குடும்பங்களுமே அலகாபாத்தைச் சேர்ந்தவர்கள். டெல்லிக்குக் குடிபெயர்ந்த பின்னும் அவர்கள் நட்பு தொடர்ந்தது.  அமிதாப்பும் இராஜீவும் பால்ய காலத்தில்  ஒன்றாக ஊர்சுற்றியது, நீச்சலடித்ததையும் குறிப்பிட்டுள்ளார் அமிதாப். மேலும் 1968 - ல் சோனியா அன்டோனியோ மெய்னோ (சோனியா காந்தி) இந்தியா வந்த போது திருமணத்திற்கு முன் ராஜீவின் இல்லத்தில் தங்கக் கூடாது என்பதால் அமிதாப்பின் வீட்டில்தான் தங்க வைக்கப்பட்டார். அமிதாப்பின் தாயார் தேஜி பச்சன் அவருக்கு தாயாக இருந்து கவனித்துக் கொண்டார். 

மேலும் முதன் முதலில் அமிதாப் அரசியலுக்கு வந்ததற்குக் காரணம் இராஜீவ்தான். இந்திராவின் படுகொலைக்குப் பின்னர் இராஜீவ் வற்புறுத்தலினால்  தேர்தலில் நின்றார் அமிதாப். அலகாபாத் தொகுதியில் பஹூகுனா என்ற செல்வாக்குள்ள ஒருவருக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்ட அமிதாப் 62% வாக்குகளுடன் மிகப்பெரும் வெற்றி பெற்றார். இருப்பினும் மூன்று வருடங்கள் மட்டுமே அரசியலில் இருந்த அமிதாப் ஃபோபர்ஸ் குற்றச்சாட்டின் காரணமாக அரசியலிலிருந்து விலகினார். இராஜீவின் படுகொலைக்குப் பின்னர் இரு குடும்பத்திற்குமிடையிலான் நட்பு உடைந்தது. 2007 இல் அமிதாப்பின் தாயார் தேஜி பச்சனின் இறந்த போது, இறுதிச் சடங்கில் கூட சோனியா கலந்து கொள்ளவில்லை.

அமிதாப்பின் புகழைப் பயன்படுத்திக்கொண்ட இராஜீவ்

1980 களில் அமிதாப் மிகவும் புகழ்பெற்று விளங்கியவர் என்பது  நாம் அறிந்ததே. எல்லாக் காலத்திலும் திரைப்படங்களில் நாயகர்களுக்குப் புகழைத் தரும் பாத்திரமான "கோபக்கார இளைஞன்" வேடத்தில் நடித்துப் செல்வாக்குப் பெற்றவராக இருந்தவர் அமிதாப். சீக்கியர் மீதான வெறியைத் தூண்டும் இவரது ஆவேசப் பேச்சுக்கள் ஹிந்துக்களிடம் கலவரத்தைத் தூண்டியதில் மற்ற கொலைகாரர்களைக் காட்டிலும் பெரும் பங்கு வகித்ததாகக் குற்றம் சாட்டுகின்றனர் சீக்கியர்கள். அதுவும் தூர்தர்ஷன் இவரது உரையை நேரடியாக ஒளிபரப்பியது மிகவும் கீழ்த்தரமானது.  இவராகப் பேசினாரா அல்லது இராஜீவின் தூண்டுதலினால் பேசினாரா என்பது தெரியவில்லை. ஆனால் ஒரு நடிகர் அரசுத் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் உரை நிகழ்த்துவதை என்னவென்பது?

இதுவரையிலும் அமிதாப்பச்சனுக்கு எதிரான  வழக்குகள் எதுவும் கண்டுகொள்ளப்படவில்லை.  அமிதாப்பும் இதுவரையில் தனது நடவடிக்கைக்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்கவில்லை. இதை எதிர்த்து அமிதாப்பின் வலைப்பூவிலும் பின்னூட்டமிட்டவர் அஜ்மீர் சிங் ரந்தாவா என்பவர். அவரது வலைப்பூவில்  இது குறித்து விரிவாக எழுதியுள்ளார். 

அமிதாப்பின் தளத்தில் இடப்பட்ட பின்னூட்டமும் அவருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலும் 










அமிதாப்பச்சனின் அம்மா சீக்கியரா?

படுகொலையின் காரணங்களுக்குப் பதில் சொல்லும்போதெல்லாம் அமிதாப்பச்சனும், ஜக்தீஷ் டைட்லரும் தாம் சீக்கிய மதத்தைச் சார்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள். அது உண்மையா? ஜக்தீஷ் டைட்டல் சீக்கியராக பிறந்தவர்தான் எனினும் கிறித்தவராக மாறிவிட்டாரென்றும் கூறுகின்றனர். அமிதாப்பச்சனின் அம்மா தேஜி சீக்கியர்தான். ஆனால் அவர் உத்திரப்பிரதேசத்தைச் சார்ந்த இந்து ஒருவரைத் திருமணம் செய்து (இந்துவாக) மதம் மாறியவர்தான். மேலும் அவரது தந்தையாரும், தாத்தாவும் சீக்கிய மதத்துக்கு எதிரானவர்கள் என்று சீக்கியர்கள் கருதுகின்றனர். அவரது முப்பாட்டனார் தேஜிபச்சனின் தாத்தா சர் கெம் சிங் பேடி சீக்கியர்களை இந்து மத்திற்குள் உள்வாங்கும் இந்துத்துவாக்களுக்கு துணை நின்றவர். அவரது இரண்டு மகன்களும் இதே போன்று செயல்பட்டவர்கள். சீக்கியர்களின் புனித நூலை ஐந்தாவது வேதம் என்றும் சீக்கியர்கள் இந்துக்களே என்றும் கூறவும்  பரப்புரை செய்யவும் உதவியவர்கள். இந்தப் பரம்பரையில் வந்த அமிதாப் இயல்பாகவே சீக்கிய வெறுப்பில் வளர்க்கப்பட்டவர் என்று சீக்கியர்கள் கருதுகின்றனர்.                        
                                                                                                                                        (தொடரும்)
Download As PDF
Bookmark and Share

Post Comment

சீக்கியர்கள், இராஜீவ்காந்தி, காங்கிரஸ் மற்றும் இந்துப் பயங்கரவாதம்


இந்திய அரசால் (காங்கிரஸ்) இந்தியாவிற்குள்ளும், வெளியேயும் சிறுபான்மையினர் மீதான கலவரங்கள் விடுதலை பெற்ற 63 ஆண்டுகளில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. முஸ்லிம்கள், கிறித்தவர்கள், காஷ்மீரிகள், வடகிழக்கு மாநிலங்கள், பழங்குடியினர், ஈழத்தமிழர்கள் ஆகியோர் இதற்கு இரையானவர்கள் என்று சொல்லலாம் . இதில் சீக்கியர்களும் தப்பவில்லை. பயங்கரவாதம், பிரிவினைவாதம், அந்நியர்களின் சதி, தேசிய ஒருமைப்பாடு, உள்நாட்டுப் பாதுகாப்பு, பிராந்திய மேலாதிக்கம், நக்ஸல் பயங்கரவாதம், புலிப்பயங்கரவாதம் போன்ற காரணங்களுக்காக இவை நியாயப்படுத்தப் படுகின்றன. இந்த வகையில் ஒன்றுதான் சீக்கியர் மீதான கலவரம். தன்னுடைய தேர்தல் நலன்களுக்காக மதவாதத்தைத் தூண்ட காங்கிரஸ் தயங்கியதே இல்லை. காங்கிரசின் இந்துமதப் பயங்கரவாதத்தின் ஒரு உதாரணம்தான் 1984 - ல் நடைபெற்ற சீக்கியர் மீதான படுகொலைகள். பாஜக ஆதரவாளர்கள் காங்கிரசை என்னமோ பயங்கரவாதம், அருந்ததிராயைக் கைது செய்யாமல் இருப்பது, நக்சலைட்டுகளுடனான் போர், பாகிஸ்தானுடன் அமைதிப்பேச்சு வார்த்தை, சீன ஆக்ரமிப்பு போன்ற விவகாரங்களில் ரொம்பவும் மென்மைப் போக்கைக் கடைப்பிடிப்பதாகவும் பாஜக ஆட்சிக்கு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் அலட்டிக் கொள்வார்கள். ஆனால் பாஜகவை விட காங்கிரஸ் பலவிதங்களில் முன்னோடியாகவும், கொடூரமாகவும்  இருக்கிறது. நரேந்திரமோடிக்கு முன்னோடியே இராஜீவ் காந்திதான் என்பதற்கு  சீக்கியர்படுகொலை ஒரு எடுத்துக்காட்டு.

1984 - ல் சீக்கியர் இனப்படுகொலை முடிந்து 26 வருடங்கள் முடிந்துவிட்டன. இன்றுவரையில் அதன் முக்கியக் குற்றவாளிகள்(சஜ்ஜன் குமார், ஜெக்தீஷ் டைட்லர், ஹெச்.கே.எல். பகத், கமல்நாத் போன்ற) எவருக்கும் தண்டனை கிடைக்கவில்லை. இனிமேலும் கிடைக்காது. காங்கிரஸ் கொலைகாரகள் தமது ஊடக செல்வாக்கையும், அடியாள்களையும் பயன்படுத்தி சீக்கியர் மீதான இனப்படுகொலையை சீரும் சிறப்புமாக செய்து முடித்தனர். இந்த சீக்கியர் மீதான கொலையை கலவரம் என்று சொல்வதே தவறானது. கலவரம் என்பது இரண்டு குழுவினர் மோதிக்கொள்வது, இங்கே கொல்லப்பட்டவர்கள் சீக்கியர்கள் மட்டுமே என்பதால் இதைக் கலவரம் என்றே சொல்ல முடியாது . இதே விதிதான்  மும்பை, குஜராத் போன்ற நிகழ்வுகளுக்கும் பொருந்தும். இது எவ்வாறு நடைபெற்றது என்பதைப் பார்த்தாலே விளங்கிவிடும் இது கலவரமா இனப்படுகொலையா என்று. 

அக்டோபர் 31 1984 இல் இந்திரா காந்தி கொல்லப்படுகிறார். அதே நாள் இராஜீவ் பிரதமராகிறார். அன்றைய நாளில் சில இடங்களில் சீக்கியர் மீதான தாக்குதல் நடைபெறுகிறது, இருப்பினும் இரவுக்குள் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. சீக்கியர்கள் நிம்மதியடைகிறார்கள். அன்றைய நாளின் பின்னிரவில் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. நவம்பர் 1,2, மற்றும் 3 ம் தேதிகளில் நடந்த வெறியாட்டத்தில் 3000 க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்படனர். அவர்கள் உடமைகள் கொள்ளையடிக்கப்பட்டனர். பெண்களுக்கு என்ன நடந்தது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. 

                                          

இது மிகத்தெளிவாக திட்டமிடப்பட்ட  இனப்படுகொலை என்பதற்கு சாட்சியாக 


டெல்லியில் பாலம்(palam) விமான நிலையத்தில் வந்திறங்கிய இராஜீவ், இந்திரா கொலையான செய்தியைக் கேட்டதும் அங்கிருந்தவர்களைப் பார்த்துக் கூறினார். "என் அம்மா சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். நீங்கள் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? போய்ப் பழி வாங்குங்கள். ஒரு தலைப்பாகையும்(Turban) இங்கே இருக்கக் கூடாது. (No turban should be seen)

அக்டோபர் தேதி டெல்லியிலிருந்த சீக்கிய காவலர்களுக்கு  விடுப்பு அளிக்கப்பட்டு , அவர்களின் ஆயுதங்கள் பெறப்பட்டு,இராணுவக்  குடியிருப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஒரு சீக்கியர் தனது இந்து நண்பரின் வீட்டில் மறைந்து கொள்கிறார். அவரைத்தேடி வந்த கும்பல் அந்த வீட்டுக்காரரிடம் கேட்க, அவர் ஏற்கெனவே கொல்லப்பட்ட அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது என்று பதிலளிக்கிறார். நம்பாத அந்தக கும்பல் தம்மிடமுள்ள வாக்காளர் பட்டியலைக் காட்டி அதில் இன்னும்  அவரது பெயர் குறிக்கப்படவில்லை எனவே அவர் இன்னும் கொல்லப்படவில்லை என்றது.

மேலும் கலவரம் நடந்து கொண்டிருக்கும்போதே வாகனங்களில் வந்த நபர்களால், மண்ணெண்ணெய் போன்ற எரிப்பதற்குப்  பயன்படுத்தும் பொருட்கள்  கலவர கும்பலுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டது. காவல்துறை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பாரத்தது, சீக்கியர் தற்காபபுக்காக வைத்திருந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்தது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகள் கொலை வெறியாட்டத்தில் பங்குபெறும் காலாட்படையாக செயல்பட விடுதலை செய்யப்பட்டு இருந்தார்கள். 

கலவரம் நடந்த இடம் இந்தியாவின் தலைநகராகிய டெல்லியில், மூன்று நாட்களாகக் கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்ல, இராணுவத்தைக் கொண்டு சில மணிகளிலேயே கட்டுப்ப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்க முடியும். இராணுவமும் ஈடுபடுத்தப்படவில்லை. அதே நேரம் டெல்லி கலவரத்தின் எதிர்வினையாக பஞ்சாப்பில் சீக்கியர்கள் இந்துக்களின் மீது வன்முறையில் ஈடுபடுவார்கள் என்ற அச்சத்தினால் பஞ்சாப்பிற்கு அனுப்பவதற்கும் ஆயத்தமாக இருந்தது அரசு. ஆனால் பஞ்சாப்பில் எதிர்ப்பார்த்தபடி  கலவரம் ஏற்படவில்லை.

கலவரமானது டெல்லியிலிருந்து வட இந்திய மாநிலங்களுக்கும் பரப்பபட்டது. அரசு எந்திரமே இந்தப்படுகொலைக்கு உதவியது என்பதற்குச் சான்றாக டெல்லியின் மாநகர அரசுப் பேருந்துகள் கொலைக் கும்பலை கொண்டுவருவதற்காக பயன்படுத்தப்பட்டன.

அன்றைய ஊடகங்களான தூர்தர்ஷனும், அனைத்திந்தியா வானொலியும் "பிரதமர் இந்திராகாந்தி தனது "சீக்கிய" மெய்க்காப்பாளர்களால் கொல்லப்பட்டார்" என்று தொடர்ந்து ஒலிபரப்பின.

சீக்கிய எதிர்ப்பு மனநிலை

அந்நாள்களில் தற்போது காஷ்மீரிகள் மீது இந்தியர்களின் மனப்பான்மை  எப்படி இருக்கிறதோ  அதே போல் சீக்கியர்கள் மீது இருந்தது. இந்திரா காந்தியால் அகாலிதள் கட்சிக்கு எதிராக வளர்க்கப்பட்ட காலிஸ்தானிகள் தனிநாடு கேட்டுப் போராடிக் கொண்டிருந்தனர். இவர்களால் பஞ்சாப் மாநிலத்தில் வாழ்ந்த இந்துக்கள் கொல்லப்பட்டனர். மேலும் சீக்கியர்கள் இந்தியாவை வெறுப்பவர்கள் என்ற கருத்தும் பொதுவாக நிலவியது. இது போன்ற ஒரு காலகட்டத்தில் சீக்கியர்களின் புனித பொற்கோயிலில் நீல விண்மீன் நடவடிக்கையின் (Operation Blue Star)  வாயிலாக காலிஸ்தானிகளின் தலைவர் பிந்தரன்வாலே கொல்லப்பட்டார். சீக்கியரின் பொற்கோயிலுக்குள்  இந்திராவினால் இந்திய இராணுவம் நுழைந்ததை சீக்கியர்கள் தமது சமூகத்தின் மீதான அவமானமாகக் கருதினர். இந்துக்கள் சீக்கியரிடையே வெறுப்புணர்வும் இருந்தது.  இதற்குப் பின்னர்தான் தனது மெய்க்காப்பாளர்களால் இந்திரா கொல்லப்பட்டார்.

இதைப் பின்புலமாகக் கொண்டே இந்த வன்முறைக்கு சீக்கியர்மீதான கொலைவெறி திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது. இந்திராவின் படுகொலைக்குப் பின்னர், சீக்கியரின் படுகொலை குறித்து  இராஜீவ் தனது புகழ்பெற்ற கருத்தான "பெரிய மரம் சாய்கையில் தரை பலமாக அதிர்வது இயற்கைதான்" என்பதை வெளியிட்டார்.

இந்த சீக்கிய எதிர்ப்பு மனநிலையே பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகளை  சீக்கியர்  படுகொலைக்குப் பின்பு நடந்த தேர்தலில் பேராயக்கட்சிக்கு பெற்றுத் தந்தது.

இந்துத்துவாக்களின் ஆதரவு 

இந்திராவின் படுகொலையைத் தொடர்ந்து வீசிய அனுதாப அலையில் இந்துத்துவ  இயக்கங்களும்   இராஜீவ் காந்திக்கு ஆதரவாக இறங்கின. இராஜீவ் தேசிய ஒருமைப்பாடு சீக்கிய பயங்கரவாதம் ஆகியவற்றைப் பேசி வாக்குகளை வாங்கினார். முதன் முதலாக இராஜீவ் காந்திதான் பாபர் மசூதியின் கதவை இந்துக்களுக்காகத் திறந்துவிட்டு கலவரம் ஏறபடக் காரணமானவர் எனபதையும் நினைவில் கொள்ளவேண்டும்.  தற்போதைய் பாஜக வின் செயல்களெல்லாம் அன்றைய பேராயக் கட்சியிடமிருந்து கற்றுக் கொண்டதுதான். 1986 லிருந்தே இந்துத்துவாக்கள் ராஜீவின் பேராயக்கட்சிக்கு ஆதரவாகவே இருந்தன.

                                     


1984 தேர்தலில் காங்கிரஸ்  வரலாறு காணாத வெற்றி பெற்றது. மொத்தம் 80% இடங்க்ளைப் பெற்றது. காரணம் இந்திரா காந்தி கொலை தோற்றுவித்த அனுதாப அலை,  தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து, சீக்கிய தீவிரவாதம்  உடபட இந்துக்களைத் தூண்டி விடும் பரப்புரைகளும் மேற்கொள்ளப்பட்டன. RSS அமைப்பு பேராயக்கட்சிக்கு முழு ஆதரவளித்தது. அன்றைய RSS இயக்கத் தலைவர் நானாஜி தேஷ்முக் ராஜீவ் காந்தியை ஆதரித்ததற்கு சாட்சியாக எழுதியவை

 "சீக்கியர் மீதான இந்துக்களின் உண்மையான உணர்ச்சியை 1984 - இன் சீக்கியர்க்கெதிரான கலவரங்கள் காட்டுகின்றன." எல்லா சீக்கியர்களுமே இந்திரா காந்தி அவரது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் கொல்லப்பட்டதை ஆதரிக்கும்போது, அப்பாவி சீக்கியர்கள் மீதான தாக்குதலகளையும் மௌனமாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும்" .

RSS கருத்துக்களால் தூண்டப்பட்ட ஒருவன் மகாத்மா காந்தியைக் கொன்றபோது RSS காரர்கள் தாக்கப்படுகிறார்கள். அதற்குக் கொலைகாரனுக்கும் இயக்கத்திற்கும் தொடர்பில்லை என்றவர்களின் தலைவர் , இரண்டு சீக்கிய மெய்க்காவலர்கள் கொன்றதற்கான பாவத்தை மொத்த சீக்கியரும் அனுபவிக்க வேண்டும் என்கிறார்.

நானாஜி தேஷ்முக் சீக்கியர்களை தம்மை, இந்துக்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டுவதையும் கடிந்து கொள்கிறார்.

மேலும் பஞ்சாப்பில் நிகழ்ந்த வன்முறைக்கு சீக்கியரைக் குற்றம் சொல்கிறார், இந்திய ராணுவத்தின் பொற்கோயில நுழைவையும் நியாயப்படுத்தினார்.

குஜராத் படுகொலையப் பற்றிக் காங்கிரஸ்காரர்கள்  பேசும்போதெல்லாம் பாஜகவும் காங்கிரஸ் கொலைகாரர்களின்  சீக்கியருக்கெதிரான கலவரத்தைப்  பேசி பதிலடி கொடுப்பார்கள்.டெல்லியின் கலவரத்தின்போது சீக்கியர்களை காங்கிரஸ் கொலைகாரர்களிடமிருந்து நாங்கள் காப்பாற்றினோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர்களின் லட்சணம். கிறித்தவமும், இசுலாமும் வெளிநாட்டு மதமென்பதால் எதிர்க்கிறோம் என்று கூறியவர்கள், உள்நாட்டு மதத்தவரான  சீக்கியர்கள் கொல்லப்பட்டபோது அவர்களின் அரசியல் நிலைப்பாடு இதுதான். 

                                                                                                                                             ( தொடரும் )
Download As PDF
Bookmark and Share

Post Comment