இந்துக்கள் மதம் மாற்றுவதில்லையா ?

விவேகானந்தரிலிருந்து பார்த்தால் இந்து மதம் கூவிக் கூவி விற்கத் தொடங்கியது 125 வருடங்களுக்கு முன்னால்,

                                                  

என்னென்னவோ கடவுளை வணங்கிய மக்களையெல்லாம் அவர்களின் அனுமதியின்றி அவர்களுக்கே தெரியாமல் இந்து மதத்தின் கீழ் இணைத்து விட்டனர். உலகிலேயே இப்படி ஒரேயடியில் அதிகமான மக்களை மதம் மாற்றிய பெருமை இந்து மதத்திற்கே உண்டு. இந்துக்களுக்கு நாங்கள் மதம் மாற்ற மாட்டோம் என்று பெருமையும் பேச வேண்டும். இந்து மதம் வெளிநாட்டில் பரவுகிறது என்ற பெருமையும் வேண்டும். 

மற்ற மதங்கள் ஏழைகளைக் குறிவைத்து அவர்களின் ஏழ்மையை வேதனையைப் போக்குவதாகச் சொல்லி அவர்களை தமது கொள்கைக்கு மாற்றின.

ஆனால் இந்து மதமோ நேரடியாக பணம் படைத்த மேலை நாட்டு மேன்மக்களைக் குறிவைத்து இயங்கி அவர்களிடமே பணத்தை கறந்து அதனூடேயே வளர்ந்து வருகிறது.

கொஞ்சமாவது வெட்கப்பட வேண்டாமா ?

இது திணிக்கப்படாமல், எப்படிப் பரவியது ?

இந்தப் பெண் தானாக ஏழு கடல்களையும், மலைகளையும் தாண்டி வந்து கிளியின் வயிற்றுக்குள் இருந்த சாவியை எடுத்து, புதையலறையில் 100 டன் தங்கத்தின் அடியில் ஒளித்து வைத்திருந்த இந்த பகவத் கீதை என்ற நூலை எடுத்துக் கொண்டாரா ? இல்லை ஒரு மதம் பரப்பியின் நச்சுத் தாங்காமல் வாங்கி புகைப்படத்திற்குக் காட்சி தந்திருப்பாரா ?

Download As PDF
Bookmark and Share

Post Comment

டெல்லி கலவரம் 2020








                                          

                                          

                                          

                                         

                                          

                                         

                                        

                                        

                                        

                                        

                                        

                                        

Download As PDF
Bookmark and Share

Post Comment

பெரியாரியம் பேசுவோரின் சிறியாரியம்

 


பெரியார் சொன்னது என்ன ?

நான் யாருக்குப்பிறந்தாலும் எப்படிப் பிறந்தாலும் அது என் கவலையில்லை. தேவையுமில்லை. நான் தன்மானத்துடன் இருக்கின்றேனா என்பதுதான் தேவை. என்னுடைய பிறப்பின் காரணம் பற்றிப் பேசுகிறவர்கள் முட்டாளும் அயோக்கியனுமே.

இதே பெரியார்தான் இந்து மதம் சுமத்திய சூத்திரப் பட்டம் ஒழியப் போராடினார். சூத்திரன் என்பவன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன், அதாவது தேவடியாப் பையன் என்று மனுதர்மத்தின் கூற்றுக்கு எதிராகப் போராடினார். அவரேதான் பிறப்பிற்கான மூலத்தைப் பற்றியும் மேற்கண்டவாறு சொல்லியுள்ளார்.

நமது கருத்தென்ன,

இங்கே பெரியாரியம் பேசுவதாகச் சொல்லிக் கொள்பவர்கள் தனக்கு எதிர்க்கருத்து, எதிர் அரசியல் பேசுவோரை எதிர்க்கவும் திட்டவும் தேவடியாப் பையன் என்று சரளமாகச் சொல்கிறார்கள். இந்து மதம் சுமத்திய சூத்திர இழிவுக்கு எதிராகப் போராடுவதாகச் சொல்பவர்கள் எப்படி அதையே சொல்லித் தனது எதிரிகளைத் திட்ட முடியும் ? இல்லை முதலில் அப்படிச் சொல்வது எப்படி அவர்களைத் திட்டுவதாகும் அல்லது இழிவு செய்வதாகும் என்று கூற முடியுமா ?

அதிலும் பிறப்பால் பார்ப்பனரான பெண்கள் பெரியாருக்கு எதிரான கருத்துக்களைக் கூறினால் அவர்களையும் ஐட்டம், தேவிடியா என்றெல்லாம் அனைவரும் சொல்கின்றனர். இதற்கெல்லாம் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

ஒருவேளை பெரியார் தான் சொல்வதை அப்படியே பின்பற்ற வேண்டாம். உன் புத்திக்குச் சரி என்று பட்டதை மட்டும் ஏற்றுக் கொள் என்று சொன்னதைத்தான் பின்பற்றி அடுத்தவனை தேவிடியா பையன், தேவிடியா என்றெல்லாம் சொல்வது சரி என்று கருதிச் செய்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. 


Download As PDF
Bookmark and Share

Post Comment

காந்தி

ஒரு மனிதரின் தாக்கம் அவர் வாழ்ந்த நாள்களில் இருந்ததைக் காட்டிலும் அவர் இறந்த நாளில் அதிகமாக இருக்கும். அவர் எப்படி இறந்தார் என்பதைப் பொறுத்தும் அந்தத் தாக்கம் மாறுபடும். அதன் மூலம் அவரை வெறுத்தவர்கள் கூட அவரது நியாயத்தைப் புரிந்து கொள்ள வாய்க்கும்.  இந்நிலையில் இந்திய துணைக்கண்டத்தில் ஏன் உலக அளவில் அறிமுகம் ஆகியிருந்த அக்டோபர் 2 - இல் பிறந்த மோகன்தாசு கரம்சந்த் காந்தி என்ற 



தேசபக்தர், விடுதலைப் போராளி, மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு இந்துத்துவர், ஆன்மிகவாதி இன்ன பிற ஆளுமை கொண்ட ஒருவர் தற்போது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட அந்த குறிப்பிட்ட பெரும்பான்மையான மதத்தைச் சாராத ஒருவரால், அக்குறிப்பிட்ட மத இயக்கத்தைச் சாராத ஒருவரால் கொல்லப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் ?

அதாவது

ஒரு முஸ்லிம் மதத்தைச் சார்ந்த ஒருவரால் கொல்லப்பட்டிருந்தாலோ, முஸ்லிம் லீக் கட்சியைச் சார்ந்த ஒருவரால் கொல்லப்பட்டிருந்தாலோ

அல்லது

கம்யூனிஸ்ட் கொள்கையாளரால் கொல்லப்பட்டிருந்தாலோ, கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த ஒருவரால் கொல்லப்பட்டிருந்தாலோ

அல்லது

கிறித்தவ மதத்தைச் சார்ந்த ஒருவரால் கொல்லப்பட்டிருந்தாலோ, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கொல்லப்பட்டிருந்தாலோ

அல்லது 

அண்ணல் பாபாசாகேப் ஆதரவாளரால் கொல்லப்பட்டிருந்தாலோ

அல்லது 

திராவிடர் கழகத்தால் கொல்லப்பட்டிருந்தாலோ 

கொன்ற பிறகு அதற்கு தான் நம்பிய சித்தாந்த நூலின் வரிகளைக் காரணம் காட்டியிருந்தாலோ தற்போதைய நிலவரம் என்னவாக இருந்திருக்கும் ?

அந்த இயக்கம் இன்னும் தடை செய்யப்பட்டிருக்கும். அந்த நபர் பின்பற்றிய மதமோ கொள்கையோ தவறாமல் காந்தி கொலையின்போது முன்னிறுத்தப்பட்டுக் கொண்டிருக்கும். இப்போது தங்கள் பெயரால் பிற சமூகத்தவர் மீது எத்தகைய கொடூர வன்முறையை ஏவினாலும் படுகொலைகள் செய்தாலும் இம்மியளவும் பதறாமல் இருக்கும் பெரும்பான்மை சமூகம் பொங்கிக் கொண்டிருக்கும். 

அதனால்தான் இன்னும் அவர் கொலை செய்யப்ட்டதற்கான காரணங்களை முன்னிறுத்தாமல் அவரது கொள்கைகளையும் அரசியல் செயல்பாடுகளை மட்டும் முன்னிறுத்துவதன் மூலம் யார் அரசியல் ஆதாயம் அடைய முடியுமோ அவர்கள் அடைந்து கொண்டிருக்கிறார்கள்

Download As PDF
Bookmark and Share

Post Comment