பெரியாரியம் பேசுவோரின் சிறியாரியம்

 


பெரியார் சொன்னது என்ன ?

நான் யாருக்குப்பிறந்தாலும் எப்படிப் பிறந்தாலும் அது என் கவலையில்லை. தேவையுமில்லை. நான் தன்மானத்துடன் இருக்கின்றேனா என்பதுதான் தேவை. என்னுடைய பிறப்பின் காரணம் பற்றிப் பேசுகிறவர்கள் முட்டாளும் அயோக்கியனுமே.

இதே பெரியார்தான் இந்து மதம் சுமத்திய சூத்திரப் பட்டம் ஒழியப் போராடினார். சூத்திரன் என்பவன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன், அதாவது தேவடியாப் பையன் என்று மனுதர்மத்தின் கூற்றுக்கு எதிராகப் போராடினார். அவரேதான் பிறப்பிற்கான மூலத்தைப் பற்றியும் மேற்கண்டவாறு சொல்லியுள்ளார்.

நமது கருத்தென்ன,

இங்கே பெரியாரியம் பேசுவதாகச் சொல்லிக் கொள்பவர்கள் தனக்கு எதிர்க்கருத்து, எதிர் அரசியல் பேசுவோரை எதிர்க்கவும் திட்டவும் தேவடியாப் பையன் என்று சரளமாகச் சொல்கிறார்கள். இந்து மதம் சுமத்திய சூத்திர இழிவுக்கு எதிராகப் போராடுவதாகச் சொல்பவர்கள் எப்படி அதையே சொல்லித் தனது எதிரிகளைத் திட்ட முடியும் ? இல்லை முதலில் அப்படிச் சொல்வது எப்படி அவர்களைத் திட்டுவதாகும் அல்லது இழிவு செய்வதாகும் என்று கூற முடியுமா ?

அதிலும் பிறப்பால் பார்ப்பனரான பெண்கள் பெரியாருக்கு எதிரான கருத்துக்களைக் கூறினால் அவர்களையும் ஐட்டம், தேவிடியா என்றெல்லாம் அனைவரும் சொல்கின்றனர். இதற்கெல்லாம் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

ஒருவேளை பெரியார் தான் சொல்வதை அப்படியே பின்பற்ற வேண்டாம். உன் புத்திக்குச் சரி என்று பட்டதை மட்டும் ஏற்றுக் கொள் என்று சொன்னதைத்தான் பின்பற்றி அடுத்தவனை தேவிடியா பையன், தேவிடியா என்றெல்லாம் சொல்வது சரி என்று கருதிச் செய்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. 


Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

காந்தி

ஒரு மனிதரின் தாக்கம் அவர் வாழ்ந்த நாள்களில் இருந்ததைக் காட்டிலும் அவர் இறந்த நாளில் அதிகமாக இருக்கும். அவர் எப்படி இறந்தார் என்பதைப் பொறுத்தும் அந்தத் தாக்கம் மாறுபடும். அதன் மூலம் அவரை வெறுத்தவர்கள் கூட அவரது நியாயத்தைப் புரிந்து கொள்ள வாய்க்கும்.  இந்நிலையில் இந்திய துணைக்கண்டத்தில் ஏன் உலக அளவில் அறிமுகம் ஆகியிருந்த அக்டோபர் 2 - இல் பிறந்த மோகன்தாசு கரம்சந்த் காந்தி என்ற 



தேசபக்தர், விடுதலைப் போராளி, மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு இந்துத்துவர், ஆன்மிகவாதி இன்ன பிற ஆளுமை கொண்ட ஒருவர் தற்போது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட அந்த குறிப்பிட்ட பெரும்பான்மையான மதத்தைச் சாராத ஒருவரால், அக்குறிப்பிட்ட மத இயக்கத்தைச் சாராத ஒருவரால் கொல்லப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் ?

அதாவது

ஒரு முஸ்லிம் மதத்தைச் சார்ந்த ஒருவரால் கொல்லப்பட்டிருந்தாலோ, முஸ்லிம் லீக் கட்சியைச் சார்ந்த ஒருவரால் கொல்லப்பட்டிருந்தாலோ

அல்லது

கம்யூனிஸ்ட் கொள்கையாளரால் கொல்லப்பட்டிருந்தாலோ, கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த ஒருவரால் கொல்லப்பட்டிருந்தாலோ

அல்லது

கிறித்தவ மதத்தைச் சார்ந்த ஒருவரால் கொல்லப்பட்டிருந்தாலோ, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கொல்லப்பட்டிருந்தாலோ

அல்லது 

அண்ணல் பாபாசாகேப் ஆதரவாளரால் கொல்லப்பட்டிருந்தாலோ

அல்லது 

திராவிடர் கழகத்தால் கொல்லப்பட்டிருந்தாலோ 

கொன்ற பிறகு அதற்கு தான் நம்பிய சித்தாந்த நூலின் வரிகளைக் காரணம் காட்டியிருந்தாலோ தற்போதைய நிலவரம் என்னவாக இருந்திருக்கும் ?

அந்த இயக்கம் இன்னும் தடை செய்யப்பட்டிருக்கும். அந்த நபர் பின்பற்றிய மதமோ கொள்கையோ தவறாமல் காந்தி கொலையின்போது முன்னிறுத்தப்பட்டுக் கொண்டிருக்கும். இப்போது தங்கள் பெயரால் பிற சமூகத்தவர் மீது எத்தகைய கொடூர வன்முறையை ஏவினாலும் படுகொலைகள் செய்தாலும் இம்மியளவும் பதறாமல் இருக்கும் பெரும்பான்மை சமூகம் பொங்கிக் கொண்டிருக்கும். 

அதனால்தான் இன்னும் அவர் கொலை செய்யப்ட்டதற்கான காரணங்களை முன்னிறுத்தாமல் அவரது கொள்கைகளையும் அரசியல் செயல்பாடுகளை மட்டும் முன்னிறுத்துவதன் மூலம் யார் அரசியல் ஆதாயம் அடைய முடியுமோ அவர்கள் அடைந்து கொண்டிருக்கிறார்கள்

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

இஸ்லாமிய மதவாத ஆதரவை வெளிப்படுத்த வெட்காத திராவிடப் பகுத்தறிவு

இஸ்லாமை விமர்சிக்காத மதிமாறனின் எதுகை மோனை வசனம் ஒன்று ஃபேஸ்புக்கில் பகுத்தறிவுவாதிகளால் பகிரப்பட்டுவருகிறது. 


யாராவது எதுகை மோனையாகப் பேசினால் அதைப் பகுத்தறிந்து விளக்குவது மதிமாறனின் இயல்பு. ஆனால் இம்முறை, தன்னுடையை வழமையான இஸ்லாமிய மதவெறியை விமர்சிக்காமல் தவிர்க்கும் பொருட்டு அவரே எதுகை மோனையாக பேசி நழுவியுள்ளார்.

நேர்மையாகச் சொல்ல வேண்டுமெனில், 
எனக்கு விமர்சிக்க விருப்பம் இல்லை நேர்மையும் இல்லை. 
எனது நோக்கம் இந்து மதம் விமர்சனம் மட்டுமே என்று விட்டுப் போக வேண்டும். 

ஆனால் இஸ்லாம் மதவாதத்தை மதவெறியை ஒன்றுமே இல்லாதது போல் பேசுவதுதான் சகிக்க முடியவில்லை. 

மதிமாறன் இந்துத்துவாவை எதிர்த்துப் பேசுவது எல்லாம் இஸ்லாமியர் நடத்தும் பொதுக் கூட்டங்களில்  பிறகெப்படி இஸ்லாம் மதத்தை விமர்சிப்பது ?

இஸ்லாமியர்களை விமர்சித்தால்/திட்டினால் வன்முறை நிகழ வாய்ப்பு மிகவும் குறைவு. இஸ்லாம் என்ற மதத்தையும் முகமது நபியையும் தன்னுடைய நேர்மையான பகுத்தறிவுப்படி திட்டக்கூட வேண்டாம், விமர்சனம் செய்தால் கூட போதும், மதிமாறனுக்கும் தலையோ கையோ இரண்டுமோ இருக்காது
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

களவாடிய பொழுதுகள் - நிறைவு

                         

  2017 இல் வந்த படத்தை இப்போதுதான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் பார்த்து நிறைவாகவும் கனமாகவும் உணர்ந்தேன். காதல் என்பது எப்போது திகட்டாத உணர்வு. இதை வைத்துத்தான் இந்தியத் திரைப்படங்கள் 95 விழுக்காடுகள் உருவாக்கப்படுகின்றன. அதிலும் 99 விழுக்காடுகள் இளைஞர்களின் காதலை மட்டுமே பேசுகின்றன. காதல் என்பது எல்லா வயதினருக்கும் வருவதுதான் என்றபோதிலும் அதற்கான வாய்ப்புகள் எல்லோர்க்கும் இருப்பதில்லை. நம்முடைய சமூகத்தைப் பொறுத்தமட்டில் திருமணம் தோல்வியடைந்தவர்கள், திருமணம் செய்யாமல் இருப்பவர்கள் போன்றவர்கள் பரிதாபத்துக்குரியவர்களாகத்தான் பார்க்கப்படுகின்றனர். திருமணம் செய்துவிட்டதால் மட்டுமே வேறு வழியில்லாமல் குழந்தைகளுக்காகவும் பிடிக்காத நபருடன் கொடுமையான வாழ்க்கையை வாழவும் சிலர் விதிக்கப்பட்டுள்ளனர். 

   இப்படி சமூகம் தரும் நன்னடத்தைச் சான்றிதழுக்கும், குடும்ப மானம் என்று தாங்கள் நம்பும் ஒன்றுக்காகவும் தமது வாழ்க்கையையே நரகமாக்கிக் கொண்டு வாழும் இணையர்களையும் நாம் நேரடியாகக் கண்டிருப்போம். இப்படி விருப்பப்பட்டவரை மணக்க முடியாமலும், மணந்தவரை விரும்ப முடியாமலும் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் மனிதர்கள் நிரம்பியதுதான் நம் சமூகம். அதே போல் பருவ வயதுக் காதல் பெரும்பாலும் தோல்வியில் முடிந்திருக்கும். சொல்ல முடியாமலும் சொல்லி ஏற்கப்படாமலும் இருதரப்பு வீட்டாரின் எதிர்ப்பால் பிரிந்ததாகவும் தோல்வியின் காரணங்கள் இருக்கலாம். 

   களவாடிய பொழுதுகள் என்ற இப்படத்திலும் சேரமுடியாத காதலர்கள் தமது திருமணத்தின் பின்னர் சூழ்நிலையால் சந்திக்க நேர்கிறது. அதன் பின்பு அவர்களின் பரிதவிப்பும், மனப்போராட்டமும்தான் படம். நடிகர்களாக இன்பநிலாவும், பிரபுதேவாவும், பூமிகா சாவ்லாவும், பிரகாஷ் ராஜும் மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். இப்படம் காதலிப்பவர்கள், காதலித்து வென்றவர்கள், காதலித்துத் தோற்றவர்கள் காதலென்றால் என்னவென்றே தெரியாதவர்கள் என எல்லாத்தரப்பு மக்களையும் கவரும் வகையில் இருந்தாலும் சில காட்சிகள் துருத்திக் கொண்டும், தேவையில்லாமலும் உறுத்திக்கொண்டும் இழுவையாகவும் இருக்கின்றன. 

கதை:

    வாடகை வாகன ஓட்டுனரான பொற்செழியன், விபத்தில் சிக்கிய ஒருவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கிறார். அவர் மிகப்பெரிய தொழிலதிபரான சௌந்தரராஜன். பொற்செழியன் விபத்தில் காயமடைந்த சௌந்தரராஜனுக்காக தனது பணத்தை மருத்துவமனையில் கொடுக்கிறார். அவர் வீட்டுக்கும் தகவல் கொடுக்கிறார். பின்பு வெளியில் சென்று வரும் பொற்செழியன், மருத்துவமனையில் சௌந்தரராஜனின் மனைவி இருப்பதைப் பார்க்கிறார். அது அவரது கல்லூரிக் காலத்தில் அவரைக் காதலித்த ஜெயந்தி. அதிர்ச்சியடைந்த பொற்செழியன் அங்கிருந்து சொல்லாமல் வெளியேறுகிறார். குணமடைந்த சௌந்தரராஜனும் ஜெயந்தியும் மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றிய நபர் சொல்லாமல் சென்று விட்டதால், அவருக்கு அலைபேசியில் அழைத்து அவரை வரச்சொல்லுமாறு கேட்கின்றனர். பேசாமல் தவிர்த்துச் செல்லும் பொற்செழியன் ஒரு கட்டத்தில் ஜெயந்தியின் அலைபேசி அழைப்பை ஏற்று பேசுகிறார். ஜெயந்தியை மருத்துவமனையில் கண்டதால் பிரச்சனை வேண்டாமென்று தான் சென்று விட்டதாகக் கூறுகிறார். இருவரும் அழுகின்றனர்.

   அவர்களது கல்லூரிக்காலக் காதல் பற்றி கதை செல்கிறது. பணக்காரவீட்டுப் பெண் ஜெயந்தி நடுத்தரக் குடும்ப பொற்செழியன் இருவரும் ஒருவருக்கொருவர் விரும்புகின்றனர். இது ஜெயந்தியின் அப்பாவுக்கு பிடிக்காததால் வேறொரு வழக்கில் சிறையில் இருக்கும் பொற்செழியனை காவல்துறைக்கு பணம் கொடுத்து, பொய்வழக்கில் அவரை சிறையிலேயே இருக்க வைக்கிறார். இதற்கிடையில் தொழில் நட்டமடைந்து நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடக்கும் ஜெயந்தியின் அப்பா, தனது விருப்பத்திற்கேற்றவாறு ஒருவரை மணந்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி திருமணமும் செய்வித்து விடுகிறார். இது நடந்து சில வருடங்கள் கழிந்துத்தான் இப்படி அவர்கள் சந்திப்பு நடக்கிறது. 

   தன் உயிரை காப்பாற்றிய செழியனுக்கு ஏதாவது கைம்மாறு செய்யவேண்டுமென்று துடிக்கும் சௌந்தரராஜன், தனது மனைவியிடம் பணம் கொடுத்து அதை செழியனிடம் கொடுத்து வருமாறு அனுப்புகிறார். அதை செழியனின் வீட்டிற்குச் சென்று கொடுக்க நினைக்கிறார். அவரது வீட்டில் பொற்செழியனின் மனைவியிடம் கொடுக்கும் ஜெயந்தி, அவனது குழந்தைக்கு யாழினி என்ற பெயர் வைத்திருப்பதைக் கேட்டு நெகிழ்கிறாள். காதலிக்கும் காலத்தில் ஜெயந்தி செழியனிடம் தமக்கு பெண்குழந்தைதான் பிடிக்கும் என்றும் பெயர் யாழினி என்று வைக்க வேண்டும் என்று கூறியதை நினைத்துப் பார்க்கிறாள். 

   பொற்செழியனுடன் அவனது வாகனத்தில் பயணிக்கும் ஜெயந்தி தன் உதவியை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்கிறாள். பணத்தை வாங்கிக் கொண்டு வேறு ஊரிலாவது நல்லதொரு வாழ்க்கையை வாழுமாறு கெஞ்சுகிறாள். பிடிவாதமாக மறுத்துக் கொண்டே இருக்கிறான் பொற்செழியன். மனைவி வைத்திருக்கும் பணத்தை கொண்டு போய் சௌந்தரராஜனிடம் கொடுத்து விடச் சொல்கிறான். சௌந்தரராஜன் ஒரு மரியாதைக்காகவாவது தன்னை வந்து பார்க்குமாறு சொல்கிறார். அப்படி வந்த பொற்செழியனை அவர் தன்னுடனே இருக்கும்படி வற்புறுத்தி வைத்துக் கொண்டு, தனது நிறுவனத்தில் உயர்ந்த பதவியையும் கொடுக்கிறார். இது வரையில் பொற்செழியனின் ஊதியத்தைக் கொண்டு ஏழ்மையில் வாழ்ந்த பொற்செழியனின் இணையர் ராணி, நல்வாய்ப்பாகக் கருதி இந்த புதிய வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழிக்கிறாள். 

   இடையிடையே ஜெயந்தியை சந்திக்க நேர்வதும், பேச நேர்வதும் இருவருக்கும் மனப்போராட்டத்தை உண்டாக்குகிறது. முடிந்த வரை ஜெயந்தியைத் தவிர்க்கிறான் பொற்செழியன். தன்னைக் காணவருமாறு பொற்செழியனை நச்சரிக்கும் ஜெயந்தி இயலாமையால் அவன் வராவிட்டால் தன்னை உயிருடன் பார்க்க முடியாது என்று மருட்டுகிறாள். வேறு வழியில்லாமல் அவளைக் காண வருகிறான் செழியன். அங்கே தனியறையில் மீண்டும் தன்னிடம் பணத்தை வாங்கிக் கொண்டு எங்காவது போய்விடுமாறும், பணத்தைக் கொண்டு சிறந்த முறையில் வாழவும் வேண்டுகிறாள். அவன் மறுக்கிறான். உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருவரும் அணைத்துக்கொண்டும் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். 

    இதற்கிடையில் ஜெயந்தி-பொற்செழியனின் காதல் குறித்து அறியவரும் சௌந்தரராஜன் சற்று குழம்பி, பின்னர் அவர்கள் சூழ்நினையைப் புரிந்து கொண்டு மனைவியை சமாதானம் செய்ய முனைகிறார். ஆனால் குற்ற உணர்ச்சி காரணமாக ஜெயந்தி தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் சேர்க்கப் படுகிறாள். பொற்செழியன் குடும்பத்துடன் ஊரை விட்டுச் செல்கிறான். சௌந்தரராஜனின் அலைபேசி அழைப்பை புறக்கணித்து, தனது சிம் அட்டையை உடைத்து எறிகிறான். 

என் கருத்து,

     நல்லவேளையாக தாமதமானாலும் இப்படத்தை தவறவிடவில்லை என்று தோன்றுகிறது. இப்படம் முழுக்கவும் உணர்வுகளின் போராட்டமாக இருக்கிறது. பொற்செழியனுக்கு ஏன் அந்த வறட்டு கௌரவம் என்பது புரியவில்லை. ஜெயந்தி விரும்பியவாறு பணத்தைப் பெற்றுக் கொண்டு வேறெங்கேனும் சென்றாவது சற்றே மேம்பட்ட வாழ்க்கையை வாழுமாறு கேட்பதைக் கூட ஏன் ஏற்றுக்கொள்ள மறுத்தான் என்று புரியவில்லை. பொற்செழியனின் வீம்புக்காக அவனது இணையர் ராணியும் அவர்களது மகள் யாழினியும் சேர்ந்து அல்லல்படுகிறார்கள். ராணி தற்காலத்தில் பெரும்பான்மையான ஏழைப் பெண்களின் நிலையை நினைவூட்டுகிறார். ஏழ்மையின் கட்டாயத்திற்காக வாழ்க்கைப்பட்டு, கணவனின் முரட்டுப் பிடிவாதத்தால் கண்ணீர் சிந்திக் கொண்டே இருக்கிறார். இப்படி ஆண்களின் உணர்ச்சிக் குழப்பத்தில் தன்னுடைய வீட்டில் இருக்கும் பெண்களின் கண்ணீரின் வேதனையை உணர்வதில்லை. இப்படி முரட்டுத்தனமான புனிதத்தைப் பேணவும், வறட்டுக் கௌவரவத்துக்கும், சமூக மதிப்புக்காகவும் இவைகளைக் காப்பாற்ற வாழ்வோரை/இறப்போரை நம்பி எத்தனையோ உள்ளங்கள் நித்தம் அழுது கொண்டுதான் உள்ளன. 

    கதை தங்கர் பச்சான் எழுதியதாம். தனது தமிழுணர்வை முடிந்த வரையில் காட்ட முற்படும் தங்கர் பெரியாரையும் தோழர் ஜீவாவையும் கூட உணர்ச்சியூட்டும் வசனம் பேச வைத்து தமிழனுக்கு விழிப்புணர்வூட்ட முனைகிறார். படம் ஏறக்குறைய 10 வருடங்களுக்கு முந்தையது என்பதால் ஈழப்போரைப் பற்றியும் பெரியார் (சத்யராஜ்) பேசுகிறார். குத்துப்பாடல்களை குறைசொல்லும் தங்கர் தனது படத்தில் வந்த குருவி கொடைஞ்ச கொய்யாப்பழம் என்ற பாடலையும் நேர்மையாக சுட்டியிருக்கிறார். 

   மே நாள், காரல் மார்க்ஸ் என்று பாட்டுப் பாடும் பொற்செழியன் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முயல்வதாகக் காட்டாமல், திடீரென்று சௌந்தரராஜனின் சேரன் நிறுவனத்தின் Board of directors சந்திப்பில் முதலாளியின் ஊதிய உயர்வை உயர்த்தியும், இலாபத்தையும் பேசுவது பெரிய முரண். 

  நெறியாளுநர் தங்கர பச்சான் வசனங்கள் மூலமாக,
குழந்தைகளுக்கான பெயர்கள் தமிழில் இருக்க வேண்டுமென்பதை மறைமுகமாகச் சொல்கிறார்
வங்கிகளில் படிவங்களில் இந்தியும் ஆங்கிலமும் இருப்பதை எதிர்க்கிறார்
முருகனுக்கு செங்கிருதத்தில் மந்திரம் சொல்வதை விமர்சிக்கிறார். 
சக்திவேல் முருகனார் என்ற தமிழ் பண்பாட்டுப் போர்வாளுக்கு அறிமுகம் கொடுக்கிறார். (இவ்விரண்டு வசனங்களை பேசுகிறவர்கள் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பிரபுதேவா, பிரகாஷ்ராஜ் என்பது இனிமை)
வேலு சரவணன் என்ற குழந்தைகளுக்கான கலைஞருக்கு பொன்னாடை போர்த்தி மதிப்பு அளிக்கிறார்

     பிரபுதேவாவின் சமீபத்திய படங்கள் எல்லாமே 15 வருடங்களுக்கு முன்னர் வந்த படங்களின் காட்சிகளையே நினைவூட்டுகின்றன. சார்லி சாப்ளின் 2, குலேபகாவலி மற்றும் களவாடிய பொழுதுகள் உட்பட

பிடித்த காட்சிகள்

வங்கியில் இந்தி ஆங்கிலத்திற்கு எதிராக பொற்செழியன் பேசும்/போராடும் காட்சி
"ஆயிரம் மலர்களே" என்ற பழைய சோகப்பாடல் பின்னணியில் ஒலிக்க அதற்குப் பிறகு ஜெயந்தியும் பொற்செழியனும் பேசுவது
பொற்செழியனின் மகள் பெயரை யாழினி அறிந்து கொள்ளும் ஜெயந்தி, தாங்கள் காதலித்த நாட்களில் சொன்னதை நினைவு கூர்வதும், தொலைபேசியில் அதற்கு பொற்செழியனிடம் நல்ல பெயர் என்று சொல்வதும் அழகோ அழகு. 
தனது இணையரின் பழைய காதலை அறிந்து சௌந்தரராஜன் தனது மனைவி ஜெயந்தியைத் தேற்றும் காட்சி அற்புதம்

பிடித்த வசனங்கள்

ஜெயிச்ச காதல் எல்லாம் குழந்த குட்டியோட முடிஞ்சு போயிடுது தோல்வியடைஞ்சு நிறைவேறாத காதல்தான் காவியமாகுது
காதலிப்பவர்கள் கல்யாணம் பண்ணிக்கணும். தோத்துப்போயிடவே கூடாது. அப்புறம் வாழ்க்கையே நரகமாயிடும்
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

இப்போது அத்திவரதர் அடுத்து என்னவோ ?

அத்தி வரதர் என்ற பெயர் என் அம்மாவுக்கு சொல்ல வரவில்லை. நாப்பது வருசங் கழிச்சு ஒரு சாமி வந்திருக்குதாமா என்று, நேரடியாக எதிலோ காட்டுகின்ற தொலைக்காட்சியாலாவது போட்டுக் காட்டச் சொன்னார். அம்மாவின் நண்பர் ஒருவர் அங்கே சென்றதாகக் கூறியதிலிருந்து அவருக்கும் ஆர்வம் தாங்கவில்லை. அதைத் தொலைக்காட்சியிலாவது பார்த்து விடலாம் என்பது என்ன நம்பிக்கை என்று புரியவில்லை.

வாடிக்கையாக தங்களுக்கு இருக்கும் வழிபாடுகளைத் தாண்டிய ஆர்வம் எல்லோருக்கும் இருக்கிறது. சிலர் ஐயப்பன், முருகனுக்கு மாலை, மேல்மருவத்தூர், கொஞ்சம் மேல்தட்டு மக்களுக்கு ஈஷா, வாழும் கலை, வாழ்க வளமுடன், நித்தியானந்தா, மித்ரேஷிவா... என்று போகும். இந்துக்களுக்கு புதுசு புதுசாக ஏதாவது பண்டிகையோ, கடவுளோ, புது விதமான வழிபாடுகளோ, ஜோசியமோ, பரிகாரம், ஹோமம், யாகம், திருக்குடமுழுக்கு, ஆண்டு விழா, கோயில் புனரமைப்பு, புதிய கோயில் கட்டுவது, ஏதாவது கேள்விப்படாத ஊரில் இருக்கும் கோயில் அல்லது அம்மன் அல்லது அத்திவரதர் மாதிரியான திடீர் இன்ப அதிர்ச்சிகளோ தேவை. 

ஒன்று இவைகளை தாங்களாகவே செய்ய வேண்டும். இல்லை செய்தவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் ஃபேஸ்புக், வாட்சப்பில் கோயில், கடவுள் மகாத்மியங்கள் பற்றிய வீடியோ, கட்டுரைகளைப் பகிர்வது, இல்லையென்றால் அதைத் தொலைக்காட்சியில் பார்த்தே அருள் பெறுவது என்று இந்துக்களின் நம்பிக்கை நீள்கிறது.

வாழ்க்கையில் கடவுள் ஏதாவது அதிசயம் நடத்தி தங்களை இன்னலிலிருந்து மீட்டு விடுவார் கடவுள் என்று நம்பும் மக்கள் எந்த வித வழிபாட்டு முறைகளையும் தவறாமல் ஒரு "உள்ளேன் ஐயா" போட்டு விட எத்தனிக்கிறார்கள். இன்னலில் தவிப்பவர்கள் இந்த எண்ணத்துடன் வருகிறார்கள் என்றால், வாழ்வின் அனைத்து வசதிகளையும் துய்த்துக் கொண்டு இருப்பவர்கள் தமது "ஆன்மிகத் தேடலுக்காகவும்" பொழுது போக்கிற்காகவும் வருகின்றனர்.  40 வருடங்களுக்கு ஒரு முறைதான் "அத்திவரதர்" தரிசனம் "தருகிறார்" என்பதால் அடுத்த 40 வருடம் தாம் இருக்க மாட்டோம் என்று பாதி பேரும், 40 வருடங்களுக்கு முன்பு வந்ததை அறியாமல் விட்டு விட்டோமே என்று மீதி பேரும் எப்பாடு பட்டேனும் அத்தியை கண்டு விட வேண்டும் என்று வருகின்றனர். 

அட்சயதிரிதியை, தொடங்கி தாமிரபரணி புஷ்கரணி, கும்பகோணம் மகாமகம், கும்பமேளா, அத்திவரதர் என்ற பல வருடங்களுக்கு ஒருமுறை என்று பரபரப்பு ஏற்றப்பட்ட வழிபாடுகள் ஊடகங்களின் வெறித்தனமான பரப்புதல்கள் மூலம் வணிக நோக்கில் பரப்பப் படுகின்றன. இனியும் வரும் காலங்களில் இவை போன்ற புதிது புதிதான கடவுள்கள், வரலாறுகள், அறிவியல் உண்மைகள், கொண்டாட்டங்கள் வந்து கொண்டே இருக்கும். 

இப்படியான புதுப்புது கதைகளைச் சொல்வதும் கேட்பதும்தான் இந்துக்கள் தங்கள் நம்பிக்கைக்காக செய்யும் செயலாக இருக்கிறது. மற்ற மதங்களில் எல்லாம் மதத்தைப் பரப்புவதற்கு ஒரு குழுவோ தனி நபரோ இருப்பார். இந்து மதத்தைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு தனிநபரும் மதத்தை பரப்பும் மதவாதியாக இருக்கிறார்கள். 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

மே 18 ஈழத்தமிழ் இன அழிப்பு நினைவு நாள்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் முடிந்து 10 வருடங்கள் கழித்து, இன்று இன்னொரு சிறுபான்மையினரான தமிழ் முஸ்லிம்கள் மேல் கலவரங்கள் தொடங்கியிருக்கும் நிலையில்,

த்து வருடங்களுக்கு முன்னர் நினைத்துப் பார்த்தால் இன்னும் வேதனையாக இருக்கிறது. அப்போதுதான் இணையம் பயன்படுத்துவது அறிமுகமாயிருந்தது. பணிக்குச் சேர்ந்த புதிதில் வேலையை முடிக்க முடியாமல், ஈழப்போரின் செய்திகளைக் காண ஆர்வம் மிகுதியால் இடையிடையே தமிழ்மணம், புதினம், பதிவு, தமிழரங்கம், வினவு உட்பட பல இணையத் தளங்களில் படித்து நொந்து போய் இருந்த காலம். 

போர் நின்றால் போதும் என்ற நல்ல செய்திக்காக ஏங்கி ஏங்கி பல்வேறு வகையான போரின் பேரழிவைக் காட்டும் புகைப்படங்களும் மக்களின் துயரங்களும் இடம்பெயர்வுகளும் கையறு நிலையும் தமிழ்நாட்டில் இருந்த நம்மைப் போன்றவர்களின் நிம்மதியையே பறித்தன. மிகப்பெரிய குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கின. புலிகள் ஏதேனும் திருப்பு முனையை ஏற்படுத்த மாட்டார்களா என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த மனம் மாறி ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் ஒழிய நடக்காது என்று தெரிந்து போனது. 

வரலாறும், அவர்களின் நடவடிக்கைகள் மீதான விமர்சனங்களும் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்ததால், உணர்ச்சிவயப்பட்ட விடுதலைப் புலி ஆதரவாளனாக/எதிர்ப்பாளனாக இல்லாத போதும், புலிகளை அழிக்க முடியாது என்ற பெரும் நம்பிக்கை இருந்த போதே, போரின் போக்கானது புலிகள் இல்லாமல் ஆக்கப்படுவார்கள் என்று உள்ளுணர்வு மூலம் சொல்லிக்கொண்டே இருந்தது.  இதை என்னுடைய பாமரத் தமிழ் மனம் ஏற்காமல் இறைஞ்சிக் கொண்டிருந்தது. சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான தமிழ்ப் பெருமிதமாகவே அவர்களின் குற்றங்களைத் தாண்டி ஏற்றி வைத்து இருந்தேன். 

பொதுமக்களின் அழுகையும், குழந்தைகளின் குதறப்பட்ட உடல்களும், படுகாயமடைந்த மனிதர்களும், பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளும், புலிகளின் படுதோல்வியும் விரக்தியின் உச்சத்துக்கு இட்டுச் சென்றன. இனி ஈழம் என்னவாகுமே என்ற கேள்வியும் வாட்டியது. 

போரின் கொடுந்துயரை நமக்குக் கொடுத்தன. ஈழப்போர் முடிந்தும், 6 மாத காலம் வரை அரைப் பைத்தியம் பிடித்த நிலைதான் இருந்தது. அதற்குப் பிறகும் மேன் மேலும் வந்து கொண்டிருந்த மோசமான செய்திகள் இராணுவத்தால் கொலை செய்யப்படும் வீடியோக்கள் என துயரம் அதிகரிக்கச் செய்யும் நிகழ்வுகளாகவே இருந்தன. 

                                           

ஆர்க்குட் இல் இருந்து சேமித்த சில புகைப்படங்களைப் பகிரத் தோன்றியது.      

                                            

ஈழப்போரின் இறுதி நாட்களில் முல்லைத் தீவுக்குள் தோல்வியின் விளிம்பிலிருந்த புலிகளை அழிக்கும் போர்த் திட்டத்தைப் பற்றிப் பார்வையிட வந்திருந்த வேற்று நாடுகளின் (அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், வங்கதேசம், மாலத்தீவுகள், இந்தியா, பாகிஸ்தான்) பாதுகாப்பு ஆலோசகர்கள். இதில் இந்தியா பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் அனைவரும் ஒன்றாக சிங்கள இராணுவத்தினரின் திட்டத்தை கவனிக்கின்றனர். 

புலிகளும் மக்களும் உடல் சிதறிச் செத்த பல புகைப்படங்களால் நான் அடைந்த அதிர்ச்சியைக் காட்டிலும், இந்தியா பாகிஸ்தான் வங்கதேசம் என்று பகைவர்களாக இருக்கும் நாடுகள் எப்படியெல்லாம் ஒன்றாகின்றனர் என்று அதிர்ச்சியடைந்தேன். 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான இந்தப் இப்புகைப்படங்கள் என்னை இன்னும் வியப்பில் ஆழ்த்துகின்றன.
#Justice4TamilGenocide
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

தமிழக வேலை தமிழருக்கே

தமிழக வேலை தமிழர்க்கே என்ற முழக்கம் ஏன் எழுப்பப் படுகிறது ? தொடர்ந்து நடுவணரசு நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் எப்போதும் உண்டு. அதை மெய்ப்பிக்கும் விதமாக பொன்மலையில் இந்திய ரயில்வே யின் தொழிற்பழகுநர் பணியிடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1765 க்கு 1600 பேர் வட இந்தியர்கள். இதைத் தொடர்ந்து  தி.மு.க., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ் தேசியப் பேரியக்கம் ஆகியோர் இதனைக் கண்டித்தன. தமிழ்தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தியது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதமே இது. 

                      


இதைத் தொடங்கியவுடனே இதை ஒரு இனவெறிக் கருத்தாக மாற்றி நஞ்சைக் கக்கத் துவங்கினார்கள் காவிகள். தமிழ்நாட்டில் யாருமே வரக் கூடாது என்று சொன்னது போலவும், தமிழ்நாட்டுக்காரர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வேலை பார்க்கலாமா என்று அறிவாளித்தனமாகக் கேட்டனர். தனியார் வேலைக்கு வருவதும், நடுவணரசுப் பணிகளில் தேர்வு எழுதித் தேர்வாவதும் ஒன்றா ? இப்பிரச்சனையை அடிப்படையையே மாற்றி தமிழ் இனவெறி என்று பூச்சாண்டி காட்டினர். தமிழ்நாட்டில் எந்த போராட்டம் நடந்தாலும் அதை குற்றம் சொல்வதில் அவ்வளவு ஆவல். 

நடுவில் இரண்டு பேர். அவர்களின் ஒருவர் பத்திரிக்கையாளர், இன்னொருவர் பொருளாதார நிபுணர். இவர்களுக்கு அடித்துப் பேசவென்று எந்த வலுவான பதில்களோ கருத்துக்களோ இல்லை. நேராக தேசபக்தர்கள் என்றே போட்டிருக்கலாம். அவர்களுக்கு இது ஒரு பிரச்சனையே இல்லை. 

பத்திரிக்கையாளர் விஜயகுமாரின் கருத்துக்கள்,

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு திறமை தகுதி எல்லாமே இருக்கின்றன என தொடக்கத்திலேயே தடவிக்கொடுத்து விடுகிறார்.

1.  இது வெறும் நிர்வாகத் தவறுதான். 
2. சில தமிழ் முதலாளிகள் முழுக்க வட இந்தியர்களையே வேலைக்கு வைத்திருக்கிறார்கள் என்று தனியார் வேலையை இங்கே கொண்டு வந்து என்னவோ பெரிய கருத்து சொன்னதைப்போல புன்னகையுடன் அமர்ந்திருக்கிறார் பத்திரிக்கையாளர்.

பொருளாதார நிபுணரின் சத்யகுமாரின் கருத்துக்கள்.

1. பிரிவினை பேசக்கூடாது.
2. தமிழக அரசின் தவறு.
3. மாணவர்களுக்கு தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லை.
4. தமிழ்நாட்டின் உரிமையைப் பற்றிப் பேசும்போது உடனே மாவட்டவாரியாக பிரச்சனை செய்தால் என்ன     செய்வது ?என்று கேட்டு மடக்குகிறார். 
5. சென்னையைச் சார்ந்தவர்கள் அதிக இடங்களைப் பெறுவதாக இவரிடம் மற்ற மாவட்ட மாணவர்கள் குறை சொன்னார்களாம்.

101% ஐயமின்றிச் சொல்லலாம் காவிகளின் சிந்தனை நஞ்சு மட்டுமே. எப்போதும் நிரூபிக்கிறார்கள். மனதிலே காவிக் கறை படியாத மேன்மக்கள் அனைவருக்கும் இவ்விவாதத்தின் நியாயம் புரியும்.

90% தமிழ்நாட்டிலுள்ள நடுவணரசுக்கு சொந்தமான நிறுவனப் பணிகளில்
#தமிழகவேலைதமிழருக்கே
#TamilnaduJobsForTamils

என்று கேட்பது இனவெறியன்று. டெல்லியின் இந்திவெறிக்கு எதிரான இன உரிமையே. 

தமிழகத்தின் கல்வித் தரத்தால் மருத்துவப் படிப்பில் தரமற்றவர்கள் சேர முடிகிறார்கள் என்று சொல்லி NEET தேர்வைத் திணித்தார்கள். இப்போது இம்மாதிரியான தேர்வுகளில் கூட சேர முடியாத அளவுக்கு தமிழ்நாட்டு மாணவர்கள் இருக்கிறார்கள் ?

ஒரு வேளை இது தவறான போராட்டமாக இருப்பினும்இவர்கள் சொல்வது போல் தமிழக அரசின் தவறாகவோ, மாணவர்களுக்கு போதிய தேர்வு வழிகாட்டிகள் இன்மையோ, போதுமான பயிற்சி மையங்கள் இல்லாமையோதான் காரணமாக இருந்தாலும், கோரிக்கை நியாயமான கோரிக்கைதான். அது தமிழகத்தின் மீதான வன்மத்தின் எதிர்வினையாகவே கொள்ள வேண்டும். 

தமிழ்நாட்டில் கல்வியில் தரமில்லை, திராவிடக் கட்சிகளால் எதுவும் முன்னேறவில்லை என்றெல்லாம் சொல்லி, NEET தேர்வு திணிப்பு, ஹிந்தித் திணிப்பு உட்பட பல்வேறு விசயங்களில் தமிழ்நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் டெல்லி அரசின் இந்தி வெறி அதிகாரத்திமிருக்கு எதிர்ப்பாகவே பொருள் கொள்ள வேண்டும்.  

#தமிழகவேலைதமிழருக்கே
#TamilnaduJobsForTamils
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

பயங்கரவாத இயக்கங்களும் பயங்கரவாத அரசுகளும் ஒன்று பாமரர்கள் வேறு

ஒரு இயக்கமோ அல்லது ஒரு அரசாங்கமோ தான் சார்ந்ததாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு கூட்டத்திற்கோ, இனத்திற்கோ, மதத்திற்கோ, நாட்டுக்கோ எதிரானவர்களாகச் சித்தரிக்கும் மக்கள் கூட்டத்தை இராணுவத்தைக் கொண்டோ, தற்கொலைத் தாக்குதலைக் கொண்டோ கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிக்குமானால்,  அது பயங்கரவாத இயக்கம் என்றோ பயங்கரவாத அரசு என்றோதான் அழைக்கப்படவேண்டும். 

அப்படி கொன்று குவிக்கும் அரசோ அல்லது இயக்கமோ தான் போராடுவதாகவும், காப்பாற்றுவதாகவும் காட்டிக் கொள்ளும் தமது மக்களிடமே கடும் வெறுப்புக்கு ஆளாகியிருக்கும். அம்மக்களை  அச்சுறுத்தியோ அல்லது அவர்களின் நம்பிக்கையின் பேரில் மூளைச் சலவை செய்தோதான் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். 

அம்மக்கள் கூட்டத்திலும் அந்த அரசாங்கத்தையோ அந்த இயக்கத்தையோ கடுமையாக வெறுப்பவர்கள், எதிர்ப்பவர்கள் இருப்பார்கள். எனவே ஒரு மத, இனம், மொழி, நாடு சார்ந்த கடும்போக்கு அரசாங்கமோ இயக்கமோ இன்னொரு கூட்டத்தை கொன்று குவிப்பதை அடக்கி ஒடுக்குவதை வஞ்சிப்பதைக் கொண்டு ஒட்டு மொத்த மக்களையும் வெறுக்கக் கூடாது, அவர்களனைவரையும் எதிரிகளாகக் கருதுவதும் கூடாது. இதை பொருளாதார பிரச்சனைகளைத் திசை திருப்பும் சதியாகத்தான் கருத வேண்டும். 

உண்மையான எதிரி யார் ? உண்மையான பிரச்சனை என்ன ? என்றெல்லாம் மக்கள் அறியாதவாறு திசை திருப்பவே இது மாதிரியான "நாம்" "அவர்கள்" என்ற பிரிவினை வலுக்க வைக்கப் படுகிறது. விருப்பு வெறுப்பில்லாத கற்றலின் மூலம் இதை நாம் அறிந்து கொள்ள முடியும். இதற்குத் தடையாக இருப்பதே அவரவர் இனம் மொழி இடம் சார்ந்த வெறி என்று நம்புவது. இதைத் தாண்டி சிந்திக்கும்போதுதான் நம்மால் உண்மையின் அருகிலாவது செல்ல முடியும்.

நான் இந்த நாட்டைச் சார்ந்தவன். என்னுடைய நாட்டை நேசிக்கிறேன். எனவே,
நான் இந்த மொழியைச் சார்ந்தவன். என்னுடைய மொழியை நேசிக்கிறேன். எனவே,
நான் இந்த இனத்தைச் சார்ந்தவன். என்னுடைய இனத்தை நேசிக்கிறேன். எனவே,
நான் இந்த பண்பாட்டைச் சார்ந்தவன். என்னுடைய பண்பாட்டை நேசிக்கிறேன். எனவே,
நான் இந்த மதத்தைச் சார்ந்தவன். என்னுடைய பண்பாட்டை நேசிக்கிறேன். எனவே,

என்னுடைய நாட்டை, மொழியை, இனத்தை, பண்பாட்டை, மதத்தை தன்னுடைய கொள்கையாகக்கொண்ட என்னுடைய அரசு/எனக்காகப் போராடும் இயக்கம் எனது எதிரியாகக் கருதும் ஒரு தரப்புக்கு எதிராக என்ன நடவடிக்கையை, அது எத்தகைய கொடூரமாக இருந்தாலும், யாருக்கு எதிராக எடுத்தாலும் அதை என்னுடைய நாட்டின், இனத்தின், மொழியின், பண்பாட்டின், மதத்தின் பாதுகாப்புக்கு தேவை என்பேன் சரியென்பேன் என்று சொல்லத் தொடங்கினால் என்ன ஆகும் ? அதுதான் இங்கே நடக்கிறது.

அது போலவே, நான் எனது நாடு, இனம், மொழி, மதம், பண்பாடு ஆகியவை என்னை எதிரியாகக் கருதும் இன்னொரு தரப்பின் அரசின் பயங்கரவாதத் தாக்குதலினாலோ, இயக்கத்தின் பயங்கரவாதத் தாக்குதலினாலோ பாதிக்கப்பட்டால் அதற்காக எதிர்த்தரப்பின் அனைவருமே நமக்கு எதிரிகள் அனைவரும் கொல்லப்பட வேண்டியவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்று கருதுவது தவறானது. அந்த உணர்வு வெற்றிகரமாகத் தூண்டப்படுவதால்தான் இங்கே பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகமாக நிகழ்கின்றன. 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

இலங்கை பயங்கரவாதத் தாக்குதல்

நமக்கு ஈரக்குலையே நடுங்குகிறது. 207 பேர் படுகொலை. இன்னும் படுகாயத்தால் எத்தனை பேர் இறப்பார்களோ என்று தெரியவில்லை. போரின் வடுக்கள் ஆறியிருந்தாலும், இன்னும் மீளாத் துயரில் இருக்கும் தமிழ் சமூகத்திடம் அச்சம் மேலிடுகிறது.
இந்த பயங்கரவாத இயக்கங்கள், இராணுவம் என்பவையெல்லாம் பொதுமக்களின் குருதியை ஓட வைப்பதிலேயே தனது தகுதியை என்னவென்று காட்டி விடுகின்றன.
இனிமேல் என்ன நடக்கும் என்று நினைத்தால் பேரச்சமாக இருக்கிறது
இப்படி வரிசையாகத் தொடர்ந்து தாக்குதல் நடத்துமளவுக்கு அங்கு எந்த ஒரு இயக்கமும் இயங்குவதாக செய்திகள் இதற்கு முன்னர் வந்ததில்லை.
சென்ற வாரம்தான் இனப்படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட போர்க்குற்றவாளியும் மகிந்த ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபாய தனது அமெரிக்கக் குடியுரிமையை துறந்து விட்டு இங்கே அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் வதந்திகள் உலவின.
30 வருடங்களுக்கு மேலாக இரு இனங்களுக்கு இடையேயான போரில் தமிழ் மக்களிடையே அதிகமான பிளவுகள்தான் ஏற்பட்டன. யாழ்ப்பாணத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், கிழக்குப் பகுதியினர், முஸ்லிம்கள் என்றெல்லாம் பிரிந்து இருந்தனர். இலங்கையில் நான்கு முதன்மையான மதங்களிடையே பெரிய ஒற்றுமை இருப்பதாகவும் தெரியவில்லை.
புலிகளின் முஸ்லிம்கள் மீதான நடவடிக்கைகளும் (மூதூர், காத்தான்குடி) காரணமாக, சிங்கள அரசு முஸ்லிம் அரசியல் தலைகளை தம்முடன் வைத்துக் கொண்டு தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை செயல்படுத்துவதும் (சத்துருகொண்டான்) நடக்க பொது மக்களும் (முஸ்லிம்கள்) தங்களை தனித்தே அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.
இந்துக்கள் கிறித்தவர்களிடையே பெரிய பிணக்குகள் இருக்கவில்லை எனினும் புலிகள் அழிந்த பின்னர் அங்கே ஈழத் தமிழர்களிடம் இந்தியாவிலிருந்து சென்ற காவிப் பிரிவினைவாதிகள், சிவசேனை இயங்கி வருகின்றனர். எனவே சைவ-கிறித்தவ மத ரீதியாக பிரிக்கப்படுவதும் இனி நடக்கும்.
சிங்களர்களிடையே பொதுபலசேனா (BSS) என்ற இலங்கை RSS இனவெறி அமைப்பு சிங்கள பேரினவாத நெருப்பு அணையாமல் காத்துக் கொண்டு இருக்கிறது. 2009 - க்குப் பிறகு சில பள்ளிவாசல் இடிப்புகள் முஸ்லிம்கள் மீது வன்முறைகள் நிகழந்துள்ளன.
ராணுவத்திடமிருந்து தங்களது நிலங்களை மீட்கப் போராடி வரும் தமிழ் மக்களைப் பற்றியோ, காணாமல் போன உறவினர்களுக்காகப் போராடும் மக்களைப் பற்றியோ, வானூர்த்தித் தாக்குதலால் சேதமான கோயில்களுக்காகவோ வாய் திறக்காத தமிழ் நாட்டுக் காவிகள், ஈழத்தில் ஒரு இடத்தில் சமீபத்தில் நடந்த கிறித்தவ-சைவர்கள் (கிறித்தவர்கள் நிகழ்த்திய திருக்கேதீச்சர ஆலய முகப்பு வளைவு உடைப்பு) மோதலைப் பெரிதுபடுத்தி இங்கே கூவினர்.
இப்படி இருக்கும்போது இப்போது கிறித்தவர்கள் மீதும், அவர்கள் ஆலயங்களின் மீதும், அவர்களின் கொண்டாட்ட நாளில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் மிகப்பெரிய கவலையயும் அச்சத்தையும் ஒரு சேரத் தருகின்றது.
இனி அரசாங்கம் தமது அடக்குமுறையை அவிழ்த்து விட, பெரும்பான்மை சிங்கள மக்களை தமது பேரினவாத அரசியலுக்குள் சிக்க வைக்க இது போன்ற குண்டுவெடிப்பு பயங்கரவாதத் தாக்குதல்கள் தேவையாய் இருக்கின்றன என்று எண்ணத் தோன்றுகிறது. மக்கள் மொழி ரீதியாக மத ரீதியாக இன ரீதியாக இட ரீதியாக பிரிந்திருப்பது அரசுக்குத் தேவையாய் இருக்கிறது.
இந்தியாவில் தேர்தல், அரசியல் காரணங்களுக்காக இங்கே நடத்தப்படும் மத ஜாதிக் கலவரங்களையும் அதைத் தொடர்ந்து பரவும் வெறுப்பும் எப்படி இருக்கும் என்பதையும் இச்சூழ்நிலையில் நாம் பொருத்திப் பார்க்க இயலும்
x
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

திமுக கூட்டணிக்கு வாக்களிப்பது தமிழினப் படுகொலையில் பங்கெடுப்பது ஆகுமா ?

திமுக-பேராயக்கட்சி-பொதுவுடமைக் கட்சிக் கூட்டணிக்கு வாக்களிப்பது ஈழத் தமிழர் இனப்படுகொலையை மறந்து விட்டதாகவும், ஈழத்தமிழர்க்கு துரோகம் செய்துவிட்டதாகவும் சொல்கின்றனர். இது உண்மையா என்று பார்க்கலாம். ஒரு கோணத்திலிருந்து பார்த்தால் இது உண்மை போலத் தோன்றும்.

தேர்தல் புறக்கணிப்பு செய்பவர்களுக்கு அல்ல, 

ஃபேஸ்புக் போராளிகள், களப்போரளிகளாக இருந்து கொண்டே + வாக்களிப்பது கடமை என்றும் தமிழ் நாட்டை நேசிப்பவர்களுக்கும், சில தமிழ் உணர்வாளர்களுக்கும் மற்றும் குற்ற உணர்ச்சி கொண்ட அனைவருக்கும். 

வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை பெற்றுத் தந்த ஒரு மிகப்பெரிய அறிவாளரையே ஜாதிக்கண்ணாடியைப் போட்டுப் பார்க்கும் இந்திய சமூகத்தில், அந்த உரிமையைக் கொண்டே தம் ஜாதிக்காரனுக்கு வாக்களிக்கும் நாட்டில்,

மதவெறியில் வாக்களிப்பவர்கள், நம்மாளு என ஜாதிக்காக வாக்களிப்பவர்கள், ஒரு கட்சி பிடிக்காமல், ஒருவரின் ஜாதி/மதம்/இனம் பிடிக்காமல் எதிர்கட்சிக்கு வாக்களிப்பவர்கள், மாற்றத்துக்காக புதியவர்களுக்கு வாய்ப்பு தருவோம் என்பவர்கள், இனத்துக்காக வாக்களிப்போம் என்பவர்களுக்கும், எவனும் வேண்டாம் என்று NOTA வுக்கு வாக்களிப்பவர்கள், கடமைக்கு வாக்களிப்பவர்கள் போன்றவர்களுக்கு எவ்விதக் குழப்பங்களும் இருந்ததில்லை. அதனால் பாஜக, அதிமுக இன்னபிற ஜாதிக்கட்சிகளுக்கு பிரச்சனை இல்லை. அதுவே ஜாதி ஒழிப்பு, தமிழ் உணர்வு, ஜனநாயகம், சமத்துவம், மனித உணர்வு, பெண்களுக்கு சம உரிமை இன்னும் பல கொள்கைகளைக் கொண்டவர்களுக்குத்தான் எத்தனை தயக்கங்கள், சங்கடங்கள் ? 

காங்கிரசும் பாஜகவும் ஒன்னு (தேசியக் கட்சிகள்)
திமுகவும் அதிமுகவும் ஒன்னு (திராவிடக் கட்சிகள்)
பாமகவும் விசிகவும் ஒன்னு (ஜாதிக் கட்சிகள்)
புலிகளும் சிங்கள அரசும் ஒன்னு (இனவெறியர்கள்)

என்றெல்லாம் கூட நாம் சொல்லிக் கொண்டே போகலாம் நமக்கு நேர்மையும் அக்கறையும் இல்லாவிடில். 

ஆனால், காங்கிரசை கேரளத்தில் எதிர்க்கிறார்கள். தமிழ்நாட்டில் ஆதரிக்கிறார்கள் என்று கம்யூனிசக் கட்சியினரைச் சொல்கிறார்கள். ஏன் இடம் பொருள் ஏவல் காலம் தேவை என்று எல்லாவற்றையும் பார்த்துத்தானே இதெல்லாம் நடக்கிறது.

பாஜக உள்ள வந்துரும் என்பது வெறும் நகைச்சுவையா ? மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உடனே ராணுவத்தைக் கொண்டு வந்து நம் தெருவில் நிறுத்தமாட்டார்கள். ஆனால் படிப்படியாக செய்வார்கள். ஒவ்வொன்றாக செய்வார்கள். ராணுவத்தைக் கொண்டுவராவிட்டாலும் நம்மையெல்லாம் தெருவுக்கு கொண்டு வருவார்கள். 

பாஜக வந்தால் நாமெல்லாம் படிக்க முடியாது என்று 2014 -இல் சொன்னால் திடீர் பாஜக மோடி ரசிகர்கள் எல்லாரும் சிரித்திருப்பார்கள். ஆனால் NEET,  5 ஆம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு, புதிய கல்வித் திட்டம் என்று வரிசையாக வருகிறது இல்லையா ?

இந்திய அரசு என்பது பார்ப்பன-பனியா முதலாளிகளின் நலனுக்காகச் செயல்படுகிறது. இதைத் தாண்டித்தான் நம்முடைய வாழ்க்கை நடக்கிறது. அவர்களுக்கு எதிரான நம்முடைய உரிமைகள் பறிக்கப்படுவதும் நடக்கிறது. ஈழப்படுகொலை நடந்து கொண்டிருந்த போது விடுதலைப் புலிகளை ஆதரிக்காதவர்கள் கூட ராஜபக்சே அரசுக்கு எதிராகத்தான் இருந்தனர். அதற்காக அவர்கள் விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள் என்று பொருளில்லை. 

தேர்தல் அரசியல் கட்சிகள் என்பதெல்லாம் தேசிய முதலாளிகளுக்கு ஊழியம் செய்வதற்கும், பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு ஏற்ற திட்டங்களைத் தீட்டுவதற்கும்தான் என்றும் எல்லாமே உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்ற ஏகாதிபத்திய அமைப்புகளால் ஏவப்படுகின்றது என்ற அளவுக்கு உலக அரசியல், பொருளாதரம் எல்லாம் தெரிந்தவர்களே கூட, கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் Minority திமுக என்று எதிர்க் கட்சியால் ஏளனம் செய்யப்பட்ட ஒரு மாநிலக் கட்சி நடுவணரசுக்கு தனது ஆதரவை விலக்கி இனப்படுகொலை தடுக்க வில்லை என்று சொல்வது என்ன நியாயம் ?. 

இதன் மூலம் இனப்படுகொலைக்குயில் பங்கு வகித்த, மற்ற மேற்கு நாட்டு வல்லரசுகள், ஒற்றர்கள், தூதர்கள், புலத்திலிருந்து புலிகளை தவறாக வழிநடத்தியவர்கள் இன்னும் நம் அறிவுக்கு அப்பாற்பட்ட நபர்கள், அரசியல்  என அனைவரையும் தவிர்த்து விட்டு இவர்களை மட்டும் எதிர்க்கிறார்கள். இல்லை தமிழகத்தில் அதிமுகவும், நடுவணரசில் பாஜகவும் இருந்திருந்தால் என்ன ஆயிருக்கும் ?

இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருக்கிறது. இதில் பெரும்பான்மையான இனங்கள் மக்களாட்சியின் உரிமைகள் பெற்றுத்தான் வாழ்கின்றன. காஷ்மீர், வடகிழக்கில் சில மாநிலங்கள் ராணுவ அடக்குமுறையின் கீழ் வாழ்கின்றன. பல மாநிலங்களில் பழங்குடியினர் நக்சல்கள்களுக்கு எதிரான போரில், துணை ராணுவத்தின் அடக்குமுறைகளுக்கும் ஆளாகின்றன. 

இப்படி அடக்குமுறையை ஏவும் இந்திய அரசிடம் வந்து ஏன் புலிகள் ஆயுதப்பயிற்சி பெற்றார்கள். இந்தியாவின் உதவியை ஏற்றுக் கொண்டதால் இந்தியாவின், மற்ற தேசிய இனங்களின் மீதான அடக்குமுறையைப் புலிகள் ஏற்றுக் கொண்டார்கள் என்று பொருளா ? இல்லை இந்திய அரசுக்கு ஈழத் தமிழர்கள் விடுதலை பெற வேண்டும் என்ற விருப்பமா ?

பாலஸ்தீனம் என்ற நாட்டை ஆக்ரமித்து வந்தேறிகளால் கட்டியெழுப்பப் பட்ட இஸ்ரேல் என்ற நாட்டிடமும் பயிற்சி பெற்றனர். அதனால் அவர்கள் பாலஸ்தீன ஆக்ரமிப்பை ஆதரிக்கிறார்கள் என்று பொருளா ?

1987 - இல் இந்திய அமைதிகாக்கும் இராணுவம் புலிகளை அடக்கத் துவங்கியபோது சிங்கள ராணுவத்திடம் ஆயுதங்களை வாங்கி இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போராடியது புலிகள் இயக்கம்.  அதனால் சிங்கள அரசுக்கு புலிகள் எதிரி இல்லை என்றாகவில்லை. அதன் பிறகு இந்திய அரசு இலங்கைக்கு இராணுவ உதவியை செய்யாமலில்லை. 2002 இல், புலிகளின் ராணுவ முற்றுகையில் சிக்கிய 20000 சிங்கள ராணுவ வீரர்களை சந்திரிகா அரசு, இந்திய அரசின் உதவியுடன் புலிகளிடமிருந்து மீட்டது. 

ஜேவிபிக்கு எதிராக நடந்த போரில் சிங்கள அரசு, ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை நிகழ்த்தியது போலவே ஜேவிபி ஆதரவாளர்களைக் (சிங்களர்கள்) கொன்று குவித்தது. அப்போது தமிழ் அகதிகளுக்கு அடைக்கலமும் அளித்தது. 

ஈழத்தில் நடந்த இறுதிப் போரின் போது இந்தியாவின் தலைவர்கள் இலங்கை இறையாண்மை உடைய நாடு அதன் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது என்று வியாக்யானம் பேசிக் கொண்டிருந்த போது, புலிகள் தாங்கள் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்போம் சிங்கள அரசு சீனாவுக்குத்தான் ஆதரவளிக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். எந்த இந்தியாவுக்கு ? தங்களை அழிக்க ஆயுதமும் ஆதரவும் இலங்கைக்கு தந்து கொண்டிருக்கின்ற இந்தியாவுக்கு. தமிழ்நாட்டிலும், இன்ன பிற நாடுகளிலும் ஈழ இனப்படுகொலைக்கு எதிராக போராடுகிறவர்கள் இங்கே மாநில அரசையும், நடுவணரசையும் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்க ஈழத்திற்கு போராடுகிற புலிகள் இந்தியாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டினர். அவர்களின் நிலை அதுவாக இருந்தது. 

தனக்கு வேலை "தந்த" "சோறு போடும்" முதலாளிக்கு எதிராகத்தான் இயக்கம் கட்டி தொழிலாளர்கள் போராடுகிறார்கள். அது போல,

அவசரநிலை அமல்படுத்தப்பட்ட போது, பேராயக் கட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்ட கட்சி திமுக. இப்போதும் திமுக காங்கிரசுடன் கூட்டணி வைக்கிறது. 

மாநில தன்னாட்சிக்காகப் போராடும் திமுக மாநில உரிமைகள் நசுக்கும் ஒரு தேசியக் கட்சியுடன்தான் கூட்டணி வைக்கிறது.

சூத்திர ஜாதிவெறிக்கு எதிராகப் போராடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சூத்திரர்கள் நிரம்பிய கட்சியுடன்தான் கூட்டணி வைக்கிறது.

அருந்ததியர்கள் கட்சித் தலைவர் அதியமானும், அருந்ததியர்களை ஒடுக்கும் கவுண்டர்களின் ஜாதிவெறிக் கட்சியான கொமதேக ஈஸ்வரனும் ஒரே கூட்டணியில் உள்ளனர்.

இந்திய இறையாண்மையைக் காப்போம் என்று கட்சிக் கொள்கையில் இருப்பதால் நாம் தமிழர் கட்சி இந்திய தேசியத்துக்கு ஆதரவளிப்பது ஆகி விடுமா ?. கட்சிக் கூட்டங்களில் பெரியார் படத்தையும் வைத்துக் கொள்வதைப் போல, நாளை திமுக உடன் கூட்டணியும் வைத்தால் போகிறார்கள். அதற்காக அவர்கள் திராவிடம் பேசுகிறார்கள் என்று சொல்ல முடியுமா ? 

இவையெல்லாம்தான் தேர்தல் ஜனநாயகம் வழங்கும் வாய்ப்புகள். அவரவர் வளர்ச்சிக்கு கொள்கையை மறந்து கூட்டணி வைக்கிறார்கள். 

மாநிலங்களை அழிக்க வேண்டும் என்ற கொள்கையுடைய பாஜக என்ன செய்கிறது எல்லா மாநிலக் கட்சிகளுடனும் கூட்டணி வைத்து அவைகளை அழித்து அந்தந்த மாநிலங்களின் முக்கிய எதிர்க்கட்சியாக மாறுகிறது. எந்தக் கொள்கை உடைய எந்தக் கட்சியிலிருந்து எப்பேர்ப்பட்ட குற்றவாளி வந்தாலும் ஏற்றுக் கொள்கிறது. இப்படி என்ன செய்தாலும் அதனுடைய அடிப்படைக் கொள்கை மாறவே இல்லை. 

அவர்கள் ஆணவப் படுகொலையும் ஆதரிக்கிறார்கள். இந்து ஒற்றுமையையும் ஆதரிக்கிறார்கள். உயர்ஜாதியினர்க்கு ஆதரவாக 10% இட ஒதுக்கீடு, NEET என்று கொண்டு வருகிறார்கள். அதிகமான பட்டியலினத்தவர்கள் எங்கள் கட்சியில்தான் இருக்கிறார்கள் என்றும் பெருமை பேசுவார்கள். இதற்காக காவிகள் கடுகளவும் கூச்சப்படுவதில்லை. 

நமக்கு மட்டும் ஏன் இத்தனை யோசனைகள். என்ன வாய்ப்பு உள்ளதோ அதைப் பயன்படுத்த வேண்டியதுதான். எதிர்க்க வேண்டியதை எதிர்க்க வேண்டியதுதான். ஆதரிக்க வேண்டியதை ஆதரிக்க வேண்டியதுதான். ஒருவரை ஆதரிப்பதால் அவர்கள் செய்யும் எல்லாவற்றுக்கும் நாம் பொறுப்பேற்கவோ பதில் சொல்லவோ வேண்டியதில்லை. 

எனக்கும் தேர்தலில், முதலாளித்துவ ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. பயங்கரவாதத்துக்கு பதிலடி பயங்கரவாதமே. நாம் என்ன ஆயுதம் எடுக்கவேண்டும் என்று நம் எதிரியே தீர்மானிக்கிறான். எனவே நடுவிரலை மனதுக்குள் காட்டி விட்டு எனது ஆட்காட்டி விரலை தேர்தல் பணியாளரிடம் நீட்டினேன். அவர் மையைத் தடவி அனுப்பினார். நான் வாக்கு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தி விளக்கு எரிந்ததைக் கண்டு வேட்பாளரின் பெயரும் சின்னமும் திரையில் தெரிந்ததை உறுதிப் படுத்திக் கொண்டு திரும்பினேன். 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

யாரைத் தேர்ந்தெடுத்தால் சேதாரம் குறையும் ?

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்

குறள் - 504

மக்களுக்கு எதிராக என்ன கிறுக்குத்தனம் செய்தாலும், அவர்களின் வாழ்வையே பறித்துக் கொண்டாலும் இந்து மதம் ஆபத்தில் இருக்கிறது, பாகிஸ்தான் சதி, பொருளாதாரம் வளர்கிறது, ஊழல் ஒழிந்து விட்டது, ராமன் கோயில் கட்டுவோம் என்றெல்லாம் அடித்து விட்டால் போதும் அவர்கள் தப்பித்துக் கொள்ளலாம்.

மக்கள் எந்த லட்சணத்தில் இருக்கிறார்களோ அந்த அளவில்தானே கட்சிகளும் இருக்கும். 

காவி பயங்கரவாதிகளுக்கு எதிரான ஃபாசிசத்துக்கு எதிராக வாக்களிப்போம் என்பதை நக்கலடிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், பேராயக் கட்சி (congress) என்ன யோக்கியமா அவர்களும் ஃபாசிஸ்ட்டுகள்தான் என்று அவர்களுடைய பழைய குற்றங்களை எடுத்துக் காட்டுகின்றனர். இப்போது பாஜகவில் இருப்பவர்கள் பேசுவதைப் போலத்தான் 75 வருடங்களுக்கு முன்பிருந்த காங்கிரஸ் ஆட்கள் பேசிக்கொண்டிருந்தனர். இன்னமும் காங்கிரஸ் கட்சி அப்படியேதான் இருக்கிறதா ?. திமுகவின் காங்கிரஸ் கூட்டணிக்கும், முன்பு பாஜவுடன் கூட்டணி வைத்ததற்கும் எதிர்ப்பது நியாயம்தான். ஆனால் நிலவரம் எப்படி இருக்கிறது ? 

இல்லை நாம்தான் புரட்சி செய்து கொண்டிருக்கிறோமா ? இல்லையே அப்படி இருவரையும் சமமாக எதிர்ப்பதாக இருந்தால் இந்நேரம் மாஓ-இயர்களாக, நக்சல்களாக துப்பாக்கி ஏந்தி காட்டுக்குள் வாழவில்லையே. சுகமாக ஃபேஸ்புக்கில் வடிவேலு படம் போட்டு அரசியல் பேசிக்கொண்டிருக்கிறோம்தானே ? 

பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் வந்தால் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்று யாரும் நம்பவில்லை. இதற்கு முந்தைய தேர்தலில் காங்கிரசுக்கு மாற்றாக பாஜகவை சொன்னவர்களல்ல இப்போது பாஜகவிற்கு மாற்றாக காங்கிரசை சொல்பவர்கள். காங்கிரசை எதிர்த்தனரே அன்றி பாஜகவை பரிந்துரை செய்யவில்லை. அது சில அரை வேக்காடுகள் தந்நலவாதிகள் செய்ததுதான். 

நமது அச்சம் என்ன ? நமக்கிருக்கும் சில உரிமைகளும் பண்பாடும் பறிபோய், கீழ்த்தரமான மனிதர்களால் ஆளப்படுவோம் என்பதுதான். இப்போது இருக்கும் ஆட்சி தொடர்ந்தால் என்ன ஆகும் மொழி, தேசிய இன உரிமைகள் பறிக்கப்பட்டும், சீனாவைப் போன்ற ராணுவ சர்வாதிகாரமும், முஸ்லிம் நாடுகளைப் போன்ற மதவாத அடக்குமுறைகளும், ஜாதிய அடிமைத்தனங்களும் இன்ன பிற ஒழிக்கப்பட வேண்டிய மனித குலத்திற்கு எதிரான அனைத்தும் தலைவிரித்தாடும் என்ற அச்சமும்தான். இது ஒன்றன்பின் ஒன்றாக நம் மீது கட்டப்படும். 

பாஜக/ஜாதிக் கட்சிகள் வன்முறை செய்வதற்கும் மற்ற கட்சியினரின் வன்முறைக்கு என்ன வேறுபாடு இருக்கின்றது ? பாஜக அல்லது ஜாதிக் கட்சிகள் அடையாள அரசியல் செய்பவை. நாம் அவர்கள் என்று உணர்வுப் பூர்வமாக பிரித்து அதன்மூலம் பூசல் வெறுப்புணர்வு வளர்த்து அதன் மூலம் வன்முறை செய்பவை. இது அரசியல் சாராத பொதுமக்களையும் உணர்வுரீதியாக இணைத்து மற்றொரு பிரிவினர் மீது வன்முறை செய்பவை. இந்தியாவில் பொதுவாகவே பெரும்பான்மை மக்கள் தம்மை ஜாதியுடனும் மதத்துடனும்தான் இணைத்து தம்மை அடையாளப்படுத்த விரும்புகின்றனர். இப்படி இருக்க இவர்கள்து பொருளாதார ரீதியான பிரச்சினைகள் திசை திருப்ப மதவாதம் ஜாதியம் தேசப்பற்று என கவர்ச்சியான காரணங்கள் போதும் இதைக் கொண்டே மற்றவர்கள் மீதும் வன்முறையை ஏவவும் முடியும். 

மதவாதம்/ஜாதி/ இனவாதம் அல்லாத கட்சிகள் செய்யும் வன்முறை என்பது அக்கட்சியின் அதிகாரப் போட்டி காரணமாக குழுக்களுக்கிடையே போட்டி பொறாமை தனி நபர்களுக்கிடையேயான போட்டி பொறாமை காரணமாக விளைவது, அல்லது தனிநபரின் பொறுக்கித்தனம் ரௌடித்தனம் காரணமாக விளைவது இதனால் மிகச்சில பொதுமக்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர். இது நியாயம் என்றோ சாதாரணம் என்றோ சொல்ல வரவில்லை. இது போன்ற கட்சியிலிருப்பவர்களும் கூட ஜாதி மத வெறியின் காரணமாக கொலைகள் செய்வதுண்டு என்றாலும், இது கட்சியின் கொள்கை காரணமாக விளைவதில்லை என்பதுதான் இங்கே முக்கியமானது.

10 வருடங்களுக்கு முன்பு ஈழப் படுகொலைக்கு எதிராக தமிழ்நாட்டில் பரவலாகப் போராட்டம் நடந்த போது இந்திய அரசுக்கு எதிராகவும், இறையாண்மைக்கு எதிராகவும் பரவலான முழக்கங்கள் எழுந்தன. தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் ராஜிவ் படுகொலையை முதன்மைப் படுத்தியும், விடுதலைப் புலிகளுக்கு (தீவிரவாத எதிர்ப்பாம்) எதிராகவும் பேசினர். அதற்காக தமிழ்நாட்டை இழிவும் செய்தோ வெறுப்போ காட்டவில்லை. அவர்கள் கட்சிக்கு விசுவாசமாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தனர். 

தற்போது பாருங்கள். தமிழ்நாட்டில் எந்தவொரு வாழ்வாதாரப் போராட்டம் நடந்தாலும் கட்சியிலேயே இல்லாத காவி பயங்கரவாதிகள் டுமிலன், போராளீஸ் என்றெல்லாம் என்னமா நக்கலடிக்கிறார்கள் ? இத்தனைக்கும் தேர்தலில் ஈடுபடும் கட்சிகள் கூட இது போன்ற போராட்டங்களில் முன்னிறுத்தப்படவில்லை. இப்படி சராசரி மக்களின் போராட்டத்தையே இப்படி வெறுப்பு காட்டி நக்கலடிக்கும் காவி இழிபிறவிகள், தமிழ்நாட்டின் இறையாண்மைக்கு எதிரான நாக்பூர் பயங்கரவாதிகளின் காலை நக்கி தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் சங்கிகளை எதிர்க்க வேறு என்ன வழி ? இங்கே பெரும்பான்மை மக்களும், ஏன் படித்து முடித்த அறிவாளிகளே ஜனநாயக உணர்வற்ற, அரை வேக்காடுகளாக சங்கிகளாக ஜாதி வெறியன்களாக இருக்கும் நிலையில் நாம் வேறு என்ன செய்ய முடியும் ?

காங்கிரஸ் மட்டுமல்ல இங்கு மூன்று தேசியகட்சிகளுமே இந்தியாவின் ஏதோ ஒரு இனப்படுகொலையில் கைநனைத்தவைதான். 

இப்போது காங்கிரஸை எதிர்ப்பவர்கள் சொல்லும் காரணங்கள் என்னென்னா ? காஷ்மீர் வடகிழக்கு மாநிலங்கள் தேசிய இனங்கள் மீதான ராணுவ கொடூரங்கள், மாநிலங்களின் தன்னாட்சி உரிமை இன்ன பிற குறித்து காங்கிரசின் நிலையும் பாஜக நிலையும் ஒன்றுதான் என்கின்றனர். 

இந்திரா காந்தி வெறியாட்டம் போட்ட அவசர நிலை ஆட்சி, பிந்த்ரன்வாலே காலத்தில் பொற்கோயில் ராணுவ நடவடிக்கை, பஞ்சாப் படுகொலைகள் மற்றும் பல. இந்திரா படுகொலையைத் தொடர்ந்து சீக்கிய இனப்படுகொலையுடன் அரசியலில் இறங்கிய ராஜீவ் நடத்திய ஃபாசிச ஆட்சி, இந்திய அமைதிப்படை நடத்திய ஈழப்படுகொலை இப்படி எல்லாமே இருக்கின்றன. 30 ஆண்டுகள் முந்தைய நிலை இது. 

அதாவது 30 ஆண்டுகளுக்கு முன்பு பாஜக தலையெடுக்கும் முன்பு காங்கிரஸ் ஆடிய வெறியாட்டம் இப்போது இருக்கும் பாஜகவுக்கு நிகரானது அல்லது அதிகமானது. இந்தியாவின் நிலை, இந்தியாவின் ஆளும் கட்சியின் நிலை இப்படியிருக்க இலங்கையில் சிங்கள-புத்த பேரினவாத தமிழ் வெறுப்பு நச்சு இலங்கை முழுவதும் பரவலாக ஈழத்தமிழினத்தை குதறி எடுத்துக் கொண்டிருந்தது. தமிழ் ஆயுதக் குழுக்கள் எழுச்சி இராணுவத் தாக்குதலையும் ஈழத்தமிழனை கொன்று குவிக்கத் தொடங்கியிருந்தது. இப்படி இலங்கையின் பயங்கரவாத ஃபாசிஸத்திற்கு எதிரான ஆயுதமேந்திய தமிழர்கள் 

ஏன் ஏன் ஏன் 

இந்தியாவின் தேசிய இனங்களை வேட்டையாடியும், அடக்கியும் வைத்துள்ள இந்தியாவிடம், ஆளும் காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம், இந்திய ராணுவத்திடம், உளவுத் துறையிடம் வந்து, ஆயுதமும் பணமும் பயிற்சியும் பெற்றார்கள் என்பதை விளக்கினால் நலம். அப்படி வந்தவர்களிடம் ஏன் காங்கிரசின் யோக்கியதை விளக்கிக் கூறி தடுக்க வில்லை. 

ஃபாசிச எதிர்ப்பிற்காகத்தானே?

அப்படி வந்து ஆயுதப் பயிற்சி பெற்றவர்களை ஆதரிப்பவர்கள் ஏன் இதை எதிர்க்கிறார்கள் என்று புரியவில்லை. இல்லை புலிகள் ராஜபக்சேவுக்கு ஆதரவாக தேர்தலைப் புறக்கணித்து, ரணிலைத் தோற்கடித்து தனக்குத்தானே குழி தோண்டியதைப் போல பெரிய திட்டத்தோடேவா ?
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment