வரவேற்கப்படவேண்டிய சபரிமலை தீர்ப்பு ஏன் எதிர்க்கப்படுகிறது ?


மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்யும் நிலையில் கேரளாவில் உள்ள சபரிமலையில் நுழைய இந்துப் பெண்களுக்கு உரிமை உண்டு என்ற நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை இந்துக்களின் எதிரிகள், துரோகிகள் என்று சொல்லப்படுகின்றவர்கள் வரவேற்கின்றனர். 

இந்துப் பெண்கள் இந்துக் கோயிலுக்குள் செல்ல ஒரு நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை நியாயமாகப் பார்த்தால் கொண்டாட வேண்டியதுதானே ? மசூதிக்குள் பெண்கள் செல்ல முடியுமா ஆனால் கோயிலுக்குள் இந்துப் பெண்கள் செல்ல முடியும் என்று மார்தட்டுவதை விட்டு விட்டு ஏன் இப்படி எதிர்க்கிறார்கள் என்று புரியலையே ?

முதன் முதலில் உடன்கட்டை ஏற்றும் பழக்கம், விதவைகள் மறுமணம், தேவதாசி முறை ஒழிப்பு தடை செய்யப்படும்போதும் மதம் பண்பாடு கலாச்சாரம் ஆகியவற்றுக்கு எதிரானது என்று கூறி எதிர்க்கப்பட்டவைதான். 

நன்கு குறித்து வைத்துக் கொள்ளுங்கள் இப்போது இதை எதிர்ப்பவர்கள் இன்னும் சில வருடங்கள் கழித்து சபரிமலை போன்ற கோயில்களில் இந்துப் பெண்கள் வழிபாடு செய்ய முடியும். ஆனால் மசூதிகளில் முஸ்லிம் பெண்கள் தொழுகை நடத்த முடியுமா ? இந்து மதத்தில் இருக்கும் ஜனநாயகம் மற்ற மதத்தில் இல்லை என்று பெருமை பேசுவார்கள். இப்படித்தான் எல்லாக் காலத்திலும் சீர்த்திருத்தவாதிகள், இந்து மத எதிர்ப்பாளர்கள், மனித்நேயர்கள், ஜனநாயகவாதிகள், முற்போக்கு வாதிகளால் போராடிக் கொண்டு வந்த மாற்றங்களையெல்லாம் இந்துமதம் தன்னகத்தே கொண்டுள்ள பெருமையைப் போல் பார்த்தாயா எங்க மதத்தின் ஜனநாயகத்தை என்று சொல்லி நம் முதுகிலேயே குத்துவார்கள். 

மோடியின் ஆட்சி படுதோல்வியடைந்து விட்டது. மோடியின் ஆதரவாளர்களே என்ன சொல்லி ஆதரிப்பது என்று தெரியாமல் சக மோடி ஆதரவாளர்களிடம் கூட மோடியின் மகிமையை விளக்கிச் சொல்லி அதாவது தற்போதைய மொழியில் சொன்னால் முட்டுக் குடுக்க வேண்டிய நிலையில் அதை அவர்களும் நம்பினாலும் நம்ப முடியாத நிலையிலும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் விருப்பக் குறியைச் சொடுக்கும் நிலையிலும் வாட்ஸப்பில் பகிரவும் வேண்டிய நிலையிலும் உள்ளனர். 

எனவே இது போன்ற எந்த ஒரு சிறு பிடி கிடைத்தாலும் அதைப் பிடித்து ஒரு ஆட்டு ஆட்டி விட்டுத்தான் வேறு வேலையைப் பார்க்க முடிகிறது. ஏனென்றால் அதைத் தவிர அவர்களுக்கு வேறு அரசியல் தெரியாது. தெரிந்தாலும் உண்மையான இந்துக்களின் பிரச்சனைகளுக்காகப் போராட அவர்களும் விரும்புவதில்லை. 

சில செய்திகளைத் தொடர்ந்து சொல்வதன் மூலம் அதை உண்மையென நம்ப வைக்கிறார்கள். 

* இந்து மதம் ஆபத்தில் உள்ளது. (எனவே இந்து மத்தைக் காப்பாற்ற பாஜகவை ஆதரிக்க வேண்டும்)

* தீராவிடர்கள், நாசகார கம்யூனிஸ்டுகள், மதமாற்றும் கிறித்தவ மிஷனரிகள், முஸ்லிம் ஜிகாதிகள் ஆகியோர் இந்து மதத்தை அழிக்கிறார்கள். 

* நாட்டின் வளர்ச்சிக்காக போடும் திட்டங்களை சீனாவிடம் பாகிஸ்தானிடம் பணம் வாங்கிக் கொண்டு எதிர்க்கிறார்கள், போராட்டத்தைத் தூண்டுகிறார்கள்.

மதமாற்றம் என்பதினை என்னவோ இந்திய இறையாண்மைக்கே எதிரானது போல் ஏற்றி விடுகிறார்கள். 
ஊடகங்கள் எல்லாம் மோடிக்கு எதிரானவை, கிறித்தவர்கள் வசம் இருக்கின்றன. எல்லாமே இந்துக்களுக்கு எதிராக நடக்கிறது. 

இந்துக்கள் இளிச்சவாயர்களாக இருக்கிறார்கள். முஸ்லிம்களும் கிறித்தவர்களும் எல்லா உரிமைகளையும் சிறுபான்மை என்ற பெயரில் இந்துக்களை அவர்களின் கலாச்சாரத்தை அழிக்கிறார்கள் இந்த நாட்டுக்கே எதிரான செயல்களைச் செய்கின்றனர்.

இவை பற்றிய கருத்துக்களைச் சுற்றித்தான் சாமானியர்களிடம் அவர்களின் அரசியல் கட்டுரைகளைப் பரப்புகிறார்கள். இப்படி இருப்பவர்கள் சபரிமலை தீர்ப்பைக் கண்டால் விடுவார்களா பிடித்துக் கொண்டார்கள். மதவெறியைத் தூண்டுவதைத் தவிர இவர்களுக்கு கவனத்தைப் பெறும் அறிவோ அறமோ இல்லை.

எனவே இந்துக்களின் பாரம்பரிய வழக்கங்களில் நீதிமன்றம் தலையிடலாமா ? முஸ்லிம்களின் மசூதிகளில் பெண்களை அனுமதிக்க நீதி மன்றம் தீர்ப்பு வழங்குமா என்று எதுகை மோனையாக கேட்டு அனத்துகிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர்தான் முத்தலாக் தீர்ப்பு கூட வந்தது நீதிமன்றம்தான் வழங்கியது. முஸ்லிம்கள் ஒன்றும் இப்படிக் குதிக்கவில்லையே. இதெல்லாம் மக்களுக்கு நினைவிருக்காது என்ற துணிச்சலில்தான் இவர்கள் இப்படி முஸ்லிம்களுக்கு தீர்ப்பு சொல்ல முடியுமா கிறித்தவர்களுக்குச் சொல்ல முடியுமா என்று கத்துகிறார்கள். 

தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்கள் பங்கெடுத்த ஜல்லிக் கட்டு ஆதரவுப் போராட்டத்தைக் கூட இவர்களால் நேர்மையாக ஆதரிக்க முடியவில்லை. எல்லாப் போராட்டத்தையும் கொச்சைப் படுத்துவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் திமுக அதிமுக கட்சியை வெறுப்பவர்களைக் கூட இவர்களால் ஆதரவாளர்களாக வெல்ல முடியாமல் மக்களிடமிருந்து அவர்களது கொள்கைகளைப் போலவே அந்நியப் பட்டு நிற்கின்றனர் 

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

வினை செய்த விநாயகர் சதுர்த்தி

சற்றே நானும் தினமலர் பாணியில் ஒரு தலைப்பை முயன்று பார்த்தேன். விநாயகர் சதுர்த்தியை வைத்து வினை விதைக்க முயன்றவர்களுக்கு வினை தீர்க்கப்பட்டிருக்கிறது. விநாயகர் வினை தீர்ப்பாரா ? அதாவது கொலைகாரனை காவல்துறையிடம் சிக்க வைப்பாரா ? 

பரவலாக ஒரு சொல்வடை உண்டு. எதிரியை விட துரோகிதான் தீயவன். விநாயகர் சதுர்த்தியை வைத்து தமிழகத்தில் நடத்தப்படும் அரசியல். எப்போதும் இந்து மதத்தையே விமர்சிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. இந்து மதத்தை விமர்சிப்பது என்பது மதவாதத்திற்கும், மூட நம்பிக்கைக்கும் எதிரான குரல். இது எல்லா நாட்டிலும் அந்தந்த நாட்டில் நிலவும் மூடத்தனத்திற்கு எதிரான குரல். இங்கே பெரும்பான்மை மதமான இந்து மதத்திற்கு எதிராக எழுகிறது, ஏனெனில் பெரும்பான்மை இந்து மதத்திலிருந்தே இறைமறுப்பாளர்கள் உருவாகின்றனர் அவர்கள் தமது மதத்தால் பாதிக்கப்படுவாலும், தமது மதத்தவர் மூடத்தனத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற முனைப்பிலிருந்தும் உருவாகிறது. ஏன் என் மதத்தை மட்டும் விமர்சிக்கிறாய் என்பது எவ்வளவு அபத்தமான கேள்வியென்றால், நீ ஏன் உன் மதக் கடவுளை மட்டும் வணங்குகிறாய் என்ற கேள்வியே இதன் பதில். சரி உங்கள் நம்பிக்கையை எதிர்ப்பவர்கள் உங்கள் எதிரியாகவே இருக்கட்டும். உங்கள் மதத்தை காக்கிறோம், கலாச்சாரத்தைக் காக்கிறோம் என்பவர்களின் அருகதையைப் பார்க்கலாம். 

குறிப்பாக விநாயகர் சதுர்த்தியை எதிர்த்து குரல் எழுப்பப்படும்போதெல்லாம் அது அதிகமாகக் கேட்கும் குற்றச்சாட்டு. என்னவோ இந்துக்கள் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது போலவும், தமது வீடுகளில் விநாயகர் படத்தை வைத்து வணங்குவதற்குக் கூட அரசு தடை செய்வது போலவும் மதவெறி ஏற்றி விடப்படுகிறது. 

இவ்வருடத்தில் விநாயகர் சதுர்த்தியின்போது கிடைத்த இரண்டு நெகிழ்ச்சியான புகைப்படங்கள். 

யாரை எதிர்த்து ஊர்வலம் நடக்கிறதோ அவர்களே தன்முனைப்பாக கலந்து கொண்டது கலவர வெறியர்களுக்கு தொண்டையைக் கவ்வியிருக்கும். இனி அடுத்தது என்ன கேட்பார்கள் ? ஏன் முஸ்லிம்கள் சும்மாதான் வருவார்களா ஆட மாட்டார்களா மோளம் அடிக்க மாட்டார்களா ? சிலையை தூக்க மாட்டார்களா ? வணங்க மாட்டார்களா ? அதானே ?

அவசரத்துக்கு வேற வண்டி கிடைக்கல. பாய் வண்டிதான் கிடைச்சது என்று கொண்டு போகிறார்கள். இவர்களுக்கோ இல்லை இந்த வாடகை வண்டிக்கார்களுக்கோ இன்னும் கலவர நஞ்சு பாயவில்லை என்று நிம்மதியடையலாம்

மற்ற மதத்தை வம்புக்கு இழுத்து கலவரம் செய்யும் நோக்கம் ஒன்றையே குறியாகக் கொண்டு நடத்தப்படும் விநாயகர் சதுர்த்தியின் நோக்கம் பல்வேறு வீடியோக்களால் அவ்வப்போது அம்பலப்படுகிறது.  பதினைந்து வயது கூட நிரம்பாத சிறுவர்கள் காவல்துறையின் முன்னிலையிலேயே கற்களால் கடைகளைத் தாக்குவது, விநாயகர் சிலையின் அடியிலே அமர்ந்து மது அருந்துவது ஆகிய வீடியோக்கள் இவ்வருட விநாயகர் சதுர்த்தியின் சிறப்பம்சங்கள். ஒரிரு வருடங்களுக்கு முன்னர் சிலை வைக்கும் தகராறில் ஒருவர் கொல்லப்பட்டார் அது பெரிய அளவில் பரபரப்பாகவில்லை. ஊரும் மறந்து விட்டது. 



தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் உள்ளூர் வேலையில்லா உத்தமர்கள் அனைவரும் வெவ்வேறு குழுக்களாக அல்லது RSS- இன் ஏதாவது ஒரு பெயரில் ஒரு குறிப்பேட்டை எடுத்துக் கொண்டு வீடு வீடாகவும் கடை கடையாகவும் சென்று எல்லாருடைய உயிரையும் வாங்கி பணம் வசூலிப்பர். சில இடங்களில் மிரட்டல் செய்தும் "நன்கொடை" பெறப்படும். பணம் தராத கடை உரிமையாளர்கள் குறித்து வைத்துக் கொள்ளப்பட்டுப் பின்னர் ஏதாவது ஊர்வலத்தின் போது கல்வீசித் தாக்கப்படும் இல்லையெனில் சூறையாடப்படும் அபாயமும் உண்டு. இவர்களுக்குள் போட்டி மோதல் இருக்கும். எந்தக் குழு எவ்வளவு பெரிய சிலை வைக்கிறது என்கிற போட்டி எப்போதும் இருக்கும். இதற்கு பெயர் இந்துக்களின் எழுச்சி விழா. கடைசி நாளில் விநாயகர் சிலை கரைப்பு என்ற பெயரில் பல பத்து வாகனங்களில் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டு ஊரே மலம் கழித்து சாக்கடை நீரால் நிரம்பியிருக்கும் குளங்களில் கொண்டு போய் விநாயகர் சிலைகளைக் கரைப்பார்கள். இதற்கு காவல்துறை காவல்காத்து நிற்கும். 

இவர்களின் நோக்கமே மதக் கலவரத்தினைத் தூண்ட வேண்டும் என்பதால் காவல்துறை பல்வேறு கெடுபிடிகளை விதிக்கிறது. தொடர்ந்து காவலுக்கு ஆட்களை நிறுத்துகிறது. எனவே இவர்களின் மதக்கலவரத்தைத் தூண்டும் திட்டம் தோல்வியடைகிறது. நீதிமன்றமும் இவர்களுக்கு சில இடங்களில் மற்ற மத்தவர் செறிந்து வாழும் இடங்களில் ஊர்வலம் செல்வதை மறுக்கிறது. இதன் காரணமாகத்தான் ஹெச். ராஜா என்ற மகாத்மா ஹைக்கோர்ட்டாவது மயிராவது என்று பொங்கினார். 

எடுத்துக்காட்டாக தற்போது கோவையில் நடந்த ஒரு கொலை பற்றிப் பார்ப்போம். விநாயகர் சதுர்த்திக்கு வசூலான தொகையில் கிடா விருந்து வைத்து இருக்கிறார்கள் அதில் நடந்து வரவு செலவுத் தகராறில் ஒருவர் கண்ணாடி புட்டியால் குத்தி இன்னொருவர் இறந்து விட்டார். விநாயகர் சதுர்த்திக்கி இவர்கள் இந்துக்களிடம் பெற்ற பணத்தில் இவர்கள் கறியும் மதுவும் உண்டு களிக்கின்றனர் என்றால், விநாயகர் சிலை வைக்க என்று நம்பி காசைக் கொடுத்து இதைக் கொண்டாடும் இந்துக்கள்தான் இளிச்சவாயர்களா ? இப்படித்தால் எல்லா ஊர்களிலும் விநாயகர் சதுர்த்தி வசூல் ராஜாக்கள் கும்மியடிக்கிறார்கள் போலும். 


//கோவை நல்லாம்பாளையம் பகுதியை சார்ந்த இளைஞகள் விநாயகர் சதுர்த்திக்காக பல இடங்களில் பணம் வசூல் செய்து விழாவை கொண்டாடியுள்ளனர். பின்னர் விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன், ஆலாந்துறை பகுதியில் விநாயகர் சதுர்த்தியின் போது வசூலான மீதி பணத்தில் கடந்த 30ம் தேதி பாஜக வினர் மதுவுடன் கிடா விருந்து வைத்துள்ளனர். விருந்தின் போது விநாயகர் சதுர்த்தி வரவு செலவு கணக்கு பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் பாஜக உறுப்பினர் நாகராஜ் என்பவரை, குடி போதையில் இருந்த  பாஜக இளைஞர் அணி  நல்லாம்பாளையம் பகுதி தலைவர் குட்டி (எ) கந்தசாமி பாட்டிலால் குத்தியதில் நாகராஜ் படுகாயம் அடைந்துள்ளார். பின்னர் அவரை சக நண்பர்கள் மீட்டு கோவையில் உள்ள  கே.ஜி.மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த  நாகராஜ் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். இதனையடுத்து ஆலாந்துறை போலிசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றினர். மேலும், தலைமறைவான பாஜக மாவட்ட இளைஞரணி தலைவர் கந்தசாமிக்கு ஆலாந்துறை போலீசார் தேடி வருகின்றனர்.//

இன்னும் ஒரு செய்தி.

பாஜகவின் தேசியச் செயலாளர் அமித் ஷா கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் சமூக வலைத்தள உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் பேசும் போது பொய்த்தகவலைகளைப் பரப்புவதை வெளிப்படையாகவே (எதிர்ப்பதைப் போல் பேசி ஜாடைமாடையாக அதை வரவேற்றுள்ளார்). வரும் தேர்தலில் சமூக வலைத்தளங்களை வைத்தே வெற்றி பெற வேண்டும் என்று கூறியுள்ளார். இவர் இவர் கட்சியினர் இப்படிச் செய்வது அதிசயமோ ஆச்சரியமோ பட வைப்பதில்லை. அறியாத மக்களை இவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றனர் பாருங்கள். 

ஆதார இணைப்பு
https://www.thequint.com/news/politics/amit-shah-real-fake-can-make-messages-viral

இன்னுமோர் முக்கியமான செய்தி

சபரி மலைக்கு பக்தர்கள் சென்ற பேருந்தின் மீது செங்கோட்டை அருகே கல் எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கல் எரிந்தவர்களை விரட்டி பிடித்து விசாரித்ததில் அவர்கள் இந்து முன்னணியினர் என்பதும், செங்கோட்டையில் விநாயகர் சிலை மீதும் கல் எரிந்தவர்கள் அவர்கள் தான் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

http://goodnewstamil.com/hindu-munnai-people-arrested-for-stone-throwing-to-vijayanagar-statue/


இந்த வருடம் விநாயகர் சதுர்த்தியின் நோக்கத்தை அப்பட்டமாகக் காட்டியுள்ளது ஒரு கொலை. அது என்ன நோக்கம் விநாயகர் சதுர்த்திக்கு அந்தந்த வட்டாரங்களில் பிள்ளையார் சிலை வைக்க வேண்டி பணத்தை வசூல் செய்து, ஒரு சிலையை வைத்து விட்டு மீதிக்காசில் கும்பல் கும்பலாக குடித்து கூத்தடிப்பதுதான். அதுவும் வசூல் அதிகமாக இருந்தால் கிடா வெட்டி கறியும் மதுவுமாக வெறியாட்டம். அற்புதமான வளர்ச்சி.

இங்கே இரண்டு பாஜகவினர் இடையேயான மோதலால் எதுவும் நிகழவில்லை. இதுவே கொலை செய்தவர் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் ? இக்கொலைக்குக் காரணம் மதப்பிரச்சனை இல்லை வெறும் பணப் பிரச்சனை என்றாலும் கொன்றவர் முஸ்லிமாக இருந்தால் அது மதப்பிரச்சனை ஆக்கப்பட்டிருக்கும். இதனால்தான் விநாயகர் சதுர்த்தி என்ற அயோக்கியத்தனம் தொடர்ந்து கடுமையாக எதிர்க்கப்படுகிறது. இதை தங்கள் நம்பிக்கையின் பெயரால் பயங்கரவாத்தை வளர்க்கும் ஒரு தீயவர் கூட்டம் என்பதை இந்துக்கள் புரிந்து கொள்வார்களா ? 

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment