தமிழக வேலை தமிழருக்கே

தமிழக வேலை தமிழர்க்கே என்ற முழக்கம் ஏன் எழுப்பப் படுகிறது ? தொடர்ந்து நடுவணரசு நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் எப்போதும் உண்டு. அதை மெய்ப்பிக்கும் விதமாக பொன்மலையில் இந்திய ரயில்வே யின் தொழிற்பழகுநர் பணியிடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1765 க்கு 1600 பேர் வட இந்தியர்கள். இதைத் தொடர்ந்து  தி.மு.க., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ் தேசியப் பேரியக்கம் ஆகியோர் இதனைக் கண்டித்தன. தமிழ்தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தியது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதமே இது. 

                      


இதைத் தொடங்கியவுடனே இதை ஒரு இனவெறிக் கருத்தாக மாற்றி நஞ்சைக் கக்கத் துவங்கினார்கள் காவிகள். தமிழ்நாட்டில் யாருமே வரக் கூடாது என்று சொன்னது போலவும், தமிழ்நாட்டுக்காரர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வேலை பார்க்கலாமா என்று அறிவாளித்தனமாகக் கேட்டனர். தனியார் வேலைக்கு வருவதும், நடுவணரசுப் பணிகளில் தேர்வு எழுதித் தேர்வாவதும் ஒன்றா ? இப்பிரச்சனையை அடிப்படையையே மாற்றி தமிழ் இனவெறி என்று பூச்சாண்டி காட்டினர். தமிழ்நாட்டில் எந்த போராட்டம் நடந்தாலும் அதை குற்றம் சொல்வதில் அவ்வளவு ஆவல். 

நடுவில் இரண்டு பேர். அவர்களின் ஒருவர் பத்திரிக்கையாளர், இன்னொருவர் பொருளாதார நிபுணர். இவர்களுக்கு அடித்துப் பேசவென்று எந்த வலுவான பதில்களோ கருத்துக்களோ இல்லை. நேராக தேசபக்தர்கள் என்றே போட்டிருக்கலாம். அவர்களுக்கு இது ஒரு பிரச்சனையே இல்லை. 

பத்திரிக்கையாளர் விஜயகுமாரின் கருத்துக்கள்,

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு திறமை தகுதி எல்லாமே இருக்கின்றன என தொடக்கத்திலேயே தடவிக்கொடுத்து விடுகிறார்.

1.  இது வெறும் நிர்வாகத் தவறுதான். 
2. சில தமிழ் முதலாளிகள் முழுக்க வட இந்தியர்களையே வேலைக்கு வைத்திருக்கிறார்கள் என்று தனியார் வேலையை இங்கே கொண்டு வந்து என்னவோ பெரிய கருத்து சொன்னதைப்போல புன்னகையுடன் அமர்ந்திருக்கிறார் பத்திரிக்கையாளர்.

பொருளாதார நிபுணரின் சத்யகுமாரின் கருத்துக்கள்.

1. பிரிவினை பேசக்கூடாது.
2. தமிழக அரசின் தவறு.
3. மாணவர்களுக்கு தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லை.
4. தமிழ்நாட்டின் உரிமையைப் பற்றிப் பேசும்போது உடனே மாவட்டவாரியாக பிரச்சனை செய்தால் என்ன     செய்வது ?என்று கேட்டு மடக்குகிறார். 
5. சென்னையைச் சார்ந்தவர்கள் அதிக இடங்களைப் பெறுவதாக இவரிடம் மற்ற மாவட்ட மாணவர்கள் குறை சொன்னார்களாம்.

101% ஐயமின்றிச் சொல்லலாம் காவிகளின் சிந்தனை நஞ்சு மட்டுமே. எப்போதும் நிரூபிக்கிறார்கள். மனதிலே காவிக் கறை படியாத மேன்மக்கள் அனைவருக்கும் இவ்விவாதத்தின் நியாயம் புரியும்.

90% தமிழ்நாட்டிலுள்ள நடுவணரசுக்கு சொந்தமான நிறுவனப் பணிகளில்
#தமிழகவேலைதமிழருக்கே
#TamilnaduJobsForTamils

என்று கேட்பது இனவெறியன்று. டெல்லியின் இந்திவெறிக்கு எதிரான இன உரிமையே. 

தமிழகத்தின் கல்வித் தரத்தால் மருத்துவப் படிப்பில் தரமற்றவர்கள் சேர முடிகிறார்கள் என்று சொல்லி NEET தேர்வைத் திணித்தார்கள். இப்போது இம்மாதிரியான தேர்வுகளில் கூட சேர முடியாத அளவுக்கு தமிழ்நாட்டு மாணவர்கள் இருக்கிறார்கள் ?

ஒரு வேளை இது தவறான போராட்டமாக இருப்பினும்இவர்கள் சொல்வது போல் தமிழக அரசின் தவறாகவோ, மாணவர்களுக்கு போதிய தேர்வு வழிகாட்டிகள் இன்மையோ, போதுமான பயிற்சி மையங்கள் இல்லாமையோதான் காரணமாக இருந்தாலும், கோரிக்கை நியாயமான கோரிக்கைதான். அது தமிழகத்தின் மீதான வன்மத்தின் எதிர்வினையாகவே கொள்ள வேண்டும். 

தமிழ்நாட்டில் கல்வியில் தரமில்லை, திராவிடக் கட்சிகளால் எதுவும் முன்னேறவில்லை என்றெல்லாம் சொல்லி, NEET தேர்வு திணிப்பு, ஹிந்தித் திணிப்பு உட்பட பல்வேறு விசயங்களில் தமிழ்நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் டெல்லி அரசின் இந்தி வெறி அதிகாரத்திமிருக்கு எதிர்ப்பாகவே பொருள் கொள்ள வேண்டும்.  

#தமிழகவேலைதமிழருக்கே
#TamilnaduJobsForTamils
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்