இலங்கை பயங்கரவாதத் தாக்குதல்

நமக்கு ஈரக்குலையே நடுங்குகிறது. 207 பேர் படுகொலை. இன்னும் படுகாயத்தால் எத்தனை பேர் இறப்பார்களோ என்று தெரியவில்லை. போரின் வடுக்கள் ஆறியிருந்தாலும், இன்னும் மீளாத் துயரில் இருக்கும் தமிழ் சமூகத்திடம் அச்சம் மேலிடுகிறது.
இந்த பயங்கரவாத இயக்கங்கள், இராணுவம் என்பவையெல்லாம் பொதுமக்களின் குருதியை ஓட வைப்பதிலேயே தனது தகுதியை என்னவென்று காட்டி விடுகின்றன.
இனிமேல் என்ன நடக்கும் என்று நினைத்தால் பேரச்சமாக இருக்கிறது
இப்படி வரிசையாகத் தொடர்ந்து தாக்குதல் நடத்துமளவுக்கு அங்கு எந்த ஒரு இயக்கமும் இயங்குவதாக செய்திகள் இதற்கு முன்னர் வந்ததில்லை.
சென்ற வாரம்தான் இனப்படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட போர்க்குற்றவாளியும் மகிந்த ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபாய தனது அமெரிக்கக் குடியுரிமையை துறந்து விட்டு இங்கே அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் வதந்திகள் உலவின.
30 வருடங்களுக்கு மேலாக இரு இனங்களுக்கு இடையேயான போரில் தமிழ் மக்களிடையே அதிகமான பிளவுகள்தான் ஏற்பட்டன. யாழ்ப்பாணத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், கிழக்குப் பகுதியினர், முஸ்லிம்கள் என்றெல்லாம் பிரிந்து இருந்தனர். இலங்கையில் நான்கு முதன்மையான மதங்களிடையே பெரிய ஒற்றுமை இருப்பதாகவும் தெரியவில்லை.
புலிகளின் முஸ்லிம்கள் மீதான நடவடிக்கைகளும் (மூதூர், காத்தான்குடி) காரணமாக, சிங்கள அரசு முஸ்லிம் அரசியல் தலைகளை தம்முடன் வைத்துக் கொண்டு தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை செயல்படுத்துவதும் (சத்துருகொண்டான்) நடக்க பொது மக்களும் (முஸ்லிம்கள்) தங்களை தனித்தே அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.
இந்துக்கள் கிறித்தவர்களிடையே பெரிய பிணக்குகள் இருக்கவில்லை எனினும் புலிகள் அழிந்த பின்னர் அங்கே ஈழத் தமிழர்களிடம் இந்தியாவிலிருந்து சென்ற காவிப் பிரிவினைவாதிகள், சிவசேனை இயங்கி வருகின்றனர். எனவே சைவ-கிறித்தவ மத ரீதியாக பிரிக்கப்படுவதும் இனி நடக்கும்.
சிங்களர்களிடையே பொதுபலசேனா (BSS) என்ற இலங்கை RSS இனவெறி அமைப்பு சிங்கள பேரினவாத நெருப்பு அணையாமல் காத்துக் கொண்டு இருக்கிறது. 2009 - க்குப் பிறகு சில பள்ளிவாசல் இடிப்புகள் முஸ்லிம்கள் மீது வன்முறைகள் நிகழந்துள்ளன.
ராணுவத்திடமிருந்து தங்களது நிலங்களை மீட்கப் போராடி வரும் தமிழ் மக்களைப் பற்றியோ, காணாமல் போன உறவினர்களுக்காகப் போராடும் மக்களைப் பற்றியோ, வானூர்த்தித் தாக்குதலால் சேதமான கோயில்களுக்காகவோ வாய் திறக்காத தமிழ் நாட்டுக் காவிகள், ஈழத்தில் ஒரு இடத்தில் சமீபத்தில் நடந்த கிறித்தவ-சைவர்கள் (கிறித்தவர்கள் நிகழ்த்திய திருக்கேதீச்சர ஆலய முகப்பு வளைவு உடைப்பு) மோதலைப் பெரிதுபடுத்தி இங்கே கூவினர்.
இப்படி இருக்கும்போது இப்போது கிறித்தவர்கள் மீதும், அவர்கள் ஆலயங்களின் மீதும், அவர்களின் கொண்டாட்ட நாளில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் மிகப்பெரிய கவலையயும் அச்சத்தையும் ஒரு சேரத் தருகின்றது.
இனி அரசாங்கம் தமது அடக்குமுறையை அவிழ்த்து விட, பெரும்பான்மை சிங்கள மக்களை தமது பேரினவாத அரசியலுக்குள் சிக்க வைக்க இது போன்ற குண்டுவெடிப்பு பயங்கரவாதத் தாக்குதல்கள் தேவையாய் இருக்கின்றன என்று எண்ணத் தோன்றுகிறது. மக்கள் மொழி ரீதியாக மத ரீதியாக இன ரீதியாக இட ரீதியாக பிரிந்திருப்பது அரசுக்குத் தேவையாய் இருக்கிறது.
இந்தியாவில் தேர்தல், அரசியல் காரணங்களுக்காக இங்கே நடத்தப்படும் மத ஜாதிக் கலவரங்களையும் அதைத் தொடர்ந்து பரவும் வெறுப்பும் எப்படி இருக்கும் என்பதையும் இச்சூழ்நிலையில் நாம் பொருத்திப் பார்க்க இயலும்
x
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

2 கருத்துகள்:

  1. கடவுள் ஒருவர் இருக்கின்றார்.
    எல்லாமவர் செயல்.
    காலம் பதில் சொல்லும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுள் இல்லை. எல்லாம் மனிதர்கள் செயல். காலம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்வதில்லை

      நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்