கடந்து சென்ற போது ............


மறக்க எத்தனித்துக் கொண்டிருக்கும் என்னிடம்
இத்தனை நாட்களுக்குப் பின் நீ ஏன் என் பார்வையில் மோத வேண்டும்
என் ஊழ்வினை
விநாடிகளில்  தொலைவில் கடந்து போய்விட்ட உன்னைக் காணத்தான் நான் 
காரணமின்றி அனிச்சையாய்த் திரும்பியது
ஆலயம் சென்று கொண்டிருந்த
உன் தரிசனத்தை
பெரிய அதிர்வுகளின்றி என் மனம் ஏற்றுக் கொண்டது
ஆயினும் என்னென்னவோ சொல்லி நச்சரிக்கிறது
பேருந்திருலிருந்து இறங்கி ஓடி உன்னிடம் வந்திருக்கலாம்
நம்மிடையே இடைவெளியும் உறவுகளும்
தடுப்பணைகளாய் இல்லாவிடில்
அல்லது உன் குரல் பழைய நேசத்துடனில்லை என்று
என் பேராசை சொல்லும்
பின்பெனது நிம்மதி கொல்லும்
உண்மை மறந்து உரிமை மறந்து எனது அறம் மாறும்
நினைவில் மட்டும் உன் சஞ்சாரம் போதும்
இன்றைக்கொரு கவி மட்டும் போதும்

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்