மொழிபெயர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொழிபெயர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பாலியல் வன்முறையைத் தவிர்க்க ஐந்து யோசனைகள்

இதை ஃபேஸ்புக்கில் பார்த்தேன். பாலியல் வன்முறையையிலிருந்து தப்ப பெண்களுக்கான யோசனைகள் என்று பகிரப்பட்டு வருகிறது. இது எல்லாப் பெண்களுக்கும் பொருந்தாது எனினும் ஒரு சில யோசனைகள் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஓரளவுக்கு உதவக்கூடியவையாகத் தெரிந்ததால் இதைப் பகிர நினைத்தேன்.

தனிமையில் செல்ல வேண்டிய நிலை வந்தால் பெண்கள் எப்போதும் எச்சரிக்கையுடனும், முன் யோசனைகளுடனும் இருக்க வேண்டும். 
 

1) நடு இரவில் ஒரு பெண் அடுக்ககக் குடியிருப்பில் (apartment) இருக்கும் மின்னுயர்த்தியில் (lift) தனியாக ஒரு  அந்நிய ஆணுடன் செல்ல வேண்டிய நிலையில் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் ?

 நீங்கள் 13 வது மாடிக்குச் செல்ல வேண்டுமென்றால், 1 லிருந்து 13 வரை அத்தனை பட்டன்களையும் அழுத்தி விடவும். இதனால் மின்னுயர்த்தி ஒவ்வொரு தளத்திலும் நின்று செல்லும். நீண்ட தனிமை தவிர்க்கப்படுவதால் நீங்கள் வன்முறையிலிருந்து தப்பும் வாய்ப்பு அதிகம்.

2) நீங்கள் உங்கள் வீட்டில் தனியாக இருக்கும்போது ஒருவன் உங்களைத் தாக்க முயன்றால் என்ன செய்வது
?

முதலில் சமையலறைக்கு ஓடுங்கள். மிளகாய்த் தூளும், மஞ்சளும் எங்கிருக்கிறதென்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். கத்தியும் தட்டுக்களும் எங்கு வைக்கப்பட்டுள்ளன என்பதும் உங்களுக்கு மட்டுமே தெரியும். இவை பெரும் ஆயுதங்களாகப் பயன்படும். எதுவும் இல்லையென்றால் தட்டுக்களையும், இன்னபிற பாத்திரங்களையும், பொருட்களையும் அவன் மீது எறியுங்கள். அவை உடையட்டும். முடிந்தவரை அதிகமாக சத்தம் போட்டு அலறவும். சத்தம் பாலியல் வன்முறையாளனின் மிகப்பெரிய எதிரியாகும். ஏனென்றால் அவன் பிடிபடுவதற்கு விரும்ப மாட்டான். பிடிபடுவதற்குக் காரணமாக இருப்பது அலறலே. அதனால் அவன் அஞ்சுவான்.

3) இரவில் தனியாக ஆட்டோவிலோ டாக்ஸியிலோ போக வேண்டிய நிலை வந்தால் என்ன செய்ய வேண்டும் ?


வாகனத்தில் ஏறும் முன்பு அவ்வாகனத்தின் பதிவு எண்ணைக் குறித்துக் கொள்ளவும். பின்பு அலைபேசியில் உங்களது நண்பருக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ நீங்கள் அக்குறிப்பிட்ட எண் உடைய வாகனத்தில் பயணம் செய்வதைத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் அலைபேசியில் இத்தகவலைத் தெரிவிப்பது அந்த வாகன ஓட்டிக்கும் கேட்குமாறு தெளிவாகவே பேசுங்கள். ஒரு வேளை உங்களது அழைப்பை மறுமுனை இருப்பவர் எடுக்காவிட்டாலும், நீங்கள் அதைக் காட்டிக் கொள்ளாமல் பேசுவது போலவே நடியுங்கள். விவரமாக குறுந்தகவல் அனுப்ப மறக்க வேண்டாம். இதன் மூலம் நீங்கள் பயணிக்கும் வாகனம் பற்றிய தகவல் மற்றவருக்கும் தெரிந்து விட்டதால், ஏதாவது தவறு நடந்தால் தனக்குப் பிரச்சனை வரும் என்று அந்த வாகன ஓட்டுநருக்குப் புரிந்து விடும். எனவே உங்களைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று சேர்க்க வேண்டிய பொறுப்பு அந்த ஓட்டுநருக்கு ஏற்பட்டு விடும். உங்களின் மோசமான எதிரியாக இருக்க வேண்டியவர் உங்கள் பாதுகாவலராக மாற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

4) ஓட்டுநர் வேறு பாதையில் திருப்பி ஓட்டிச் சென்றாலோ அல்லது ஆபத்தான பகுதிக்குள் நுழைந்தது போலவோ நீங்கள் உணர்ந்தாலோ என்ன செய்வது ?

உங்கள் கைப்பையின் கைப்பிடியையோ அல்லது துப்பட்டாவைக் கொண்டோ அவன் கழுத்தை இறுக்கியவாறு பின்னால் இழுங்கள். இதனால் அவன் மூச்சுத் திணறி நிலைகுலைவான். இல்லாத பட்சத்தில் சட்டையின் கழுத்துப் பட்டையை இழுக்க வேண்டும்.

5) இரவில் யாரோ பின்தொடர்ந்தால் என்ன செய்ய வேண்டும் ?

அருகிலிருக்கும் கடைகளிலோ அல்லது வீட்டிலோ சென்று உங்கள் இக்கட்டான நிலையைச் சொல்லுங்கள். இரவில் கடைகள் எதுவும் திறந்திருக்காவிடில், ஏடிஎம் இருக்கும் இடத்திற்குச் செல்லுங்கள் அங்கே கட்டாயமாக பாதுகாவலர் இருப்பார். அவர்களும் ஏடிஎம் இலிருக்கும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள் எனவே உங்களை மீது வன்முறையை ஏவ அவர்கள் தயங்குவார்கள்.

நன்றி: ஃபேஸ்புக்

 1) What should a woman do if she finds herself alone in the company of a strange
male as she prepares to enter a lift in a high-rise apartment late at night?

Experts Say: Enter the lift. If you need to reach the 13th floor, press
all the buttons up to your destination. No one will dare attack you in a lift that stops on every floor.


2) What to do if a stranger tries to attack you when you are alone in your
house, run into the kitchen.

Experts Say: You alone know where the chili powder and turmeric are kept.
And where the knives and plates are. All these can be turned into deadly
weapons. If nothing else, start throwing plates and utensils all over.
Let them break. Scream. Remember that noise is the greatest enemy of a
molester. He does not want to be caught.

3} Taking an Auto or Taxi at Night.

Experts Say: Before getting into an auto at night, note down its registration
number. Then use the mobile to call your family or friend and pass on the
details to them in the language the driver understands .Even if no one
answers your call, pretend you are in a conversation. The driver now knows
someone has his details and he will be in serious trouble if anything goes
wrong. He is now bound to take you home safe and sound. A potential attacker
is now your de facto protector!

4}What if the driver turns into a street he is not supposed to - and you
feel you are entering a danger zone?

Experts Say: Use the handle of your purse or your stole (dupatta) to wrap
around his neck and pull him back. Within seconds, he will feel choked
and helpless. In case you don’t have a purse or stole just pull him back
by his collar. The top button of his shirt would then do the same trick.

5} If you are stalked at night.

Expert Say: enter a shop or a house and explain your predicament.
If it is night and shops are not open, go inside an ATM box. ATM centers
always have security guards. They are also monitored by close circuit television.
Fearing identification, no one will dare attack you.

After all, being mentally alert is the greatest weapon you can ever have.

Please spread it to all those women u care & spread awareness as dis is d least we can do for a social & moral cause and fr d safety of women.
Download As PDF
Bookmark and Share

Post Comment

தென் அமெரிக்கத் தலைவர்களுக்கு புற்று நோயைப் பரப்பியது சிஐஏ ?


இது ரஷ்யாவைச் சேர்ந்த இணையத்தளமொன்றில் ஒரு வருடத்திற்கு முன்பு வெளியான கட்டுரை. இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் இதைப்படித்தேன். சாவேஸின் இறப்பும் அதைத்தொடர்ந்து நிகழ்ந்து விட்டதால் இதை மொழிபெயர்க்க வேண்டும் என்று தோன்றியது. இதை நம்புவது சிலருக்குக் கடினமாக இருக்கலாம். அதற்கு முன்பு உலகில் எய்ட்ஸ் பரவியது என்பது எப்படி என்பதையும் படித்து விட்டால் இதை நம்புவது அவ்வளவு சுலபம். இது உண்மையாக இருக்கலாம் இல்லாமலும் போகலாம். ஆனால் நடந்திருக்கவே முடியாது என்று மட்டும் சொல்ல முடியாது.

கடந்த 18 மாதங்களில் லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த 4 (முன்னேற்றத்தை விரும்பும்) முற்போக்குவாதத் தலைவர்களும் மக்களும் மருத்துவர்களால் வெளியிடப்பட்ட தகவலைக் கேட்டு அதிர்ந்து போயினர். மருத்துவர்கள் சொன்ன தகவல் புற்று நோய். 


ஃபெர்னாண்டோ லூகோ (Fernando Lugo) - பராகுவே

லூயிஸ் இனாசியோ லூலா ட சில்வா (Luis Inacio Lula da Silva) மற்றும் டில்மா ரௌஸஃப் (Dilma Rousseff) - பிரேஸில்

ஹியூகோ சாவேஸ் - வெனிசுலாவோ

சமீபத்தில் கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் டி கிரிஸ்னர் - அர்ஜென்டைனா

ஆகியோரிடம் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களின் இனிமேல் உயிர்வாழ்வதும் கேள்விக்குறியாகியுள்ளது.


சாவேஸ் "தனக்குத் தேவையில்லாத தலைவர்களை அழிக்கும் அமெரிக்காவின் ஆயுதமே இந்த நோயாக இருக்கலாம்" என்று கூறினார். ஆனால் முரணாக இந்தத் தலைவர்கள் தமது பதவிகளிலிருந்தோ பொறுப்புக்களிலிருந்தோ விலகவில்லை. தமது ஆதரவைப் பெருக்கிக் கொண்டதுடன் தமது ஆதரவாளர்களிடம் ஊர்வலமும் சென்றார்கள்.

முதன் முதலாக 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பராகுவே அதிபர் ஃபெர்னாண்டோ லூகோவின் நிணநீர் மண்டலத்தில் (lymphatic system) புற்றுநோய்க் கட்டிகள் கண்டறியப்பட்டன. சாஓ பௌலோவிலும் (Sao Paulo)  அசன்சனிலும் (Asuncion) ஆறு முறை வேதிச்சிகிச்சை (chemotherapy) எடுத்துக் கொண்ட பிறகு புற்றுநோய்க்கட்டிகள் மறைந்தன. இவர் 2008 - இல் தேர்ந்தெடுக்கப்பட்டவர், தனது தேவாலய பதவியை (ecclesiastical rank)  விட்டு விலகியவர், பராகுவே நாட்டின்  இரண்டாவது இடதுசாரியத் தலைவர்.
66 வயதான பிரேஸிலின் முன்னாள் அதிபரான லூயிஸ் இனாசியோ லூலா ட சில்வா வுக்கு அக்டோபர் 2011 இல் தொண்டைப் புற்றுநோய் (larynx cancer) கண்டறியப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே தில்மா ருஸ்ஸஃப் - இடம் பதவி மாறியிருந்தது. லூயிஸ் இனாசியோ சிகிச்சை மேற்கொள்ளும்பட்சத்தில் அவர் நிரந்தரமாகவே பேசும் ஆற்றலை இழந்து விடக்கூடும் என்பதால் மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கவில்லை.

அவர் பல முறை எடுத்துக்கொண்ட வேதிச்சிகிச்சையின் காரணமாக அவருக்கு இருந்த புற்று நோய் 75% குணமாகி விட்டது. அவர் அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 2003 -லிருந்து 2010 வரை பிரேஸிலின் அதிபராக இருந்த லூலா வறுமையைக் குறைத்தார், லத்தின் அமெரிக்க நாடுகளின் ஒருங்கிணைத்தார், பிரேஸிலின் பொருளாதாரத்தை உலகின் பெரிய நாடுகளின் அளவுக்கு உயர்த்தினார்.
நெஸ்டர் கிர்ச்னர் உடன் சாவேஸ், ஃபெர்னாண்டோ லூகோ
57 வயதான வெனிசுவேலாவின் அதிபர் 2011 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியிலிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளத் துவங்கினார். அவர் எந்தவகைப் புற்று நோயால் பீடிக்கப்பட்டுள்ளார் என்பதற்கான தரவுகள் இதுவரை இல்லை. ஹவானாவில் ஜூலை 20 ஆம் நாள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நான்கு முறை வேதிச் சிகிச்சையும், பல ஆய்வுகளும் செய்யப்பட்ட பின்பு அவருக்கு நோய் குறைந்தது. அவர் 1999 - லிருந்து, 2012 வரையில் அதிபராக இருந்தார். தற்போது மூன்றாம் முறையாகப் போட்டியிடவிருக்கிறார்.

இறுதியாக டிசம்பர் 2011 இல் 58 வயதான அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் டி கிரிஸ்னர் 2012 ஜனவரி மாத தொடக்கத்தில் தைராய்டு சுரப்பியில் ஏற்பட்ட புற்றுநோய்க்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவிருக்கிறார், உடல் நிலையில் முன்னேற்றமும் காண்பார் என்று ஊடகங்கள் கணித்தன. கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் டி கிரிஸ்னர் 2011 டிசம்பரில் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், தீவிரமான அமெரிக்க எதிர்ப்பாளராகவும் இருக்கிறார்.

முதன்முதலாக இது குறித்து ஐயத்தை வெளியிட்டவர் ஹியூகோ சாவேஸ். "நான் குறிவைக்கப்படுவதினால் அன்சுகிறவனல்ல ஆனால் தனக்கு எதிரான தலைவர்களை நீக்குவது என்பது பேரரசின் (அமெரிக்கா) நீண்டகால வழமையாக இருக்கிறது. என்னிடம் ஆதாரமில்லை ஆனால் நிச்சயமாக ஏதோ ஒரு புதுமையான காரணம் லத்தீன் அமெரிக்க முற்போக்குத் தலைவர்கள் விசயத்தில் இருக்கிறது" என்று கூறினார் சாவேஸ்.

அவர் சரியாகச் சொல்லியிருக்கிறார் என்பதை ஃபிடல் காஸ்ட்ரோ மீது பலமுறை கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பதிலிருந்து அறியலாம். வெனிசுலாவின் எழுத்தாளர் லூயிஸ் ப்ரிட்டோ கார்சியா என்பவர் கருத்துப்படி அமெரிக்க உளவுத்துறை (CIA) 900 முறைகளுக்கும் மேலாக காஸ்ட்ரோவைக் கொலை செய்ய முயன்றுள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மட்டுமல்ல, இஸ்ரேலுக்கு எதிராகவும் ஒன்றிணைந்துள்ளன. ஏனென்றால் ஏறக்குறைய அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகளும் பாலஸ்தீன விடுதலையை அங்கீகரித்துள்ளன. எனவே சிஐஏ மட்டுமல்லாது மொசாத்தின் பங்கு குறித்து ஆராய வேண்டும். இன்னொரு விசித்திரம்  என்னவென்றால் சாவேஸ் நோய்வாய்ப்பட்டதையும், அவரது விந்துப்பை (Prostate) புற்றுநோய் பற்றிய தகவலை முதன் முதலில் வெளியிட்டது, சிஐஏவினைச் சார்ந்த ஊடகம், நூவோ ஹெரால்ட், இது அமெரிக்க அரசாங்கத்தின் உதவியால் வெளியாகும் செய்தி நாளிதழாகும்.

புற்றுநோய் என்பது உளவுத்துறையால் பயன்படுத்தப்படும் ஆயுதங்களின் பக்க விளைவுகளா ? இல்லை வெறும் தற்செயல் நிகழ்வுகள் எதிரிகளான லத்தீன் அமெரிக்க அரசுகளை சுற்றி நடக்கின்றனவா? இந்த சதிக்குப் பல முன்தேவைக் காரணங்கள் இருக்கலாம். மிகவும் இன்றியமையாத  ஒன்று, 


தென் அமெரிக்க நிகரமைவாதம் (சோஷலிசம்) உருவாவதைத் தடுப்பது.

இரண்டு, methods of operation have been developed, and the most unsuccessful ones are   discussed by the entire world என்று குறிப்பிட்டுள்ளார்கள் எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை நேரடியான போர் நடவடிக்கைகள் தோல்வியுற்றும் உலகத்தால் பேசப்படுகின்றதைச் சுட்டலாம்.

மூன்றாவதாக அறிவியல் கண்டுபிடிப்புகளின் சாத்தியப்பாட்டின் மூலம் உயிரியல், வேதியியல், மின்னணு ஆயுதங்களை பயன்படுத்தி இது போன்ற மறைமுகமான உள்நாட்டுப் போர்கள் நடத்த முடியும்
 
இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது என்னவென்றால், யாருடைய கொள்கைகளெல்லாம்  அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு எதிரானதாக இருந்ததோ அவர்களுக்கு மட்டுமே இந்நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன.  எல்லாவற்றுக்கும் முன்பாக, குருதிப் புற்றுநோயால் அவதிப்பட்ட பாலஸ்தீன அதிபர் யாசர் அராஃபத் 2004 இல்  விசித்திரமான முறையில் இறந்தார். ஃப்ரான்ஸ் நிபுணர்களின் கருத்துப்படி, அவர் குருதியோட்ட ஒழுங்கு சிதைந்து குருதிக்கசிவு மூளையில் ஏற்பட்டதன் காரணமாக இறந்தார். குருதியோட்டம் மாறக் காரணமாக இருந்தது பெயரிடப்படாத ஒரு தொற்றுக் கிருமிதான். இதனால் நோயாளியின் குருதிச்சிறுதட்டுக்கள் (blood platelet) எண்ணிக்கை குறைந்தும், வெள்ளை அணுக்கள் அதிக எண்ணிக்கையிலும் இருக்கும். இதே போன்ற அறிகுறிகள் புற்றுநோய், நுரையீரல் அழற்சி (inflammation of the lungs) மற்றும் சில வகை குருதிக் குறைபாடு உட்பட பலவகையான பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்க்கும் காண முடியும்.

போலோனியம் - 210 மூலம் ரசாயன நச்சூட்டப்பட்டதால் மர்மமான முறையில் 2004 இல் இலண்டனில் இறந்தவர் அலெக்ஸாண்டர் லிட்வினென்கோ (ருஷ்ய உளவாளி பின்னர் இங்கிலாந்து உளவாளி).  எந்த சிறப்புப் படை இதை செய்தது என்று தெரியவில்லை எனினும், இவர் உடலின் முக்கிய உள் உறுப்புக்களைத் தாக்கும் புற்றுநோயால் இறந்தார். இதே மாதிரியாக உக்ரேனின் முன்னாள் அதிபரான விக்டர் யுஸ்சென்கோ அதிதூய டையாக்ஸின் (dioxin of high purity) மூலம் நஞ்சூட்டப்பட்டார். இந்த ரசாயனம் ருஷ்யாவுக்கு வெளியே எங்கோ ஒரு ஆய்வகத்தில் தயாரானது. இது மூக்கு - மூச்சுக் குழாயில் புற்றுநோயை உருவாக்கும் திறனுடையது.

அமெரிக்கா தனது, ஆப்கான், ஈராக் படையெடுப்புக்களின்போது பல புதுவிதமான ஆயுதங்களையும் போரில் பயன்படுத்தி ஆய்வு செய்தது. உதாரணத்திற்கு நுண்ணலைத் துப்பாக்கிகள் எனப்படுகின்ற ஆயுதங்கள்,  நுண்ணலை அடுப்பு (conventional microwave oven)  செயல்படும் விதியின் படி இயங்குகின்றவை, அவை குறுங்கிய பீம் - ல் (narrow beam) அடைக்கப்பட்டிருந்தாலும் அதன் பாதிப்புக்கள் பரவலாக இருக்கும். புற்று நோயை பரப்புவதுடன் அவை அதற்குச் சற்றும் குறையாத இன்னொரு தன்மையும் வைத்திருக்கின்றன. தோல்களிலும் செல்களின் இடைவெளிகளிலுமுள்ள (intercellular space) நீரை வெப்பமாக்கிவிடும் தன்மையுடையவை, உயிரைக் கொல்லாது என்றபோதும், தீக்காயத்துக்கு இணையான வேதனையை உண்டாக்கும். இது போன்ற அறிகுறிகளுடன் இறந்த ஒருவர்
அர்ஜென்டைனா அதிபர் நெஸ்டர் கிர்ச்னர். 2011 ஆம் ஆண்டுக்கான அதிபர் தேர்தல் போட்டிக்கு வேட்புமனுவை விண்ணப்பித்த பின்னர்   அதிபர் நெஸ்டர் கிர்ச்னர் திடீரென 27 அக்டோபர் 2010 இல் இறந்தார்.

விக்கிலீக்ஸ் கூறிய தகவல், 2008 இல் சிஐஏ தனது பராகுவே தூதரகத்திடம் கேட்ட தகவல்கள் என்னவென்றால் பராகுவே நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் நான்கு பேர்களின் டிஎன்ஏ குறியீடு உள்ளிட்ட உயிரிபுள்ளியல் தரவுகள் (biometric data). புற்று நோயால் பாதிக்கப்பட்ட பராகுவே அதிபர் ஃபெர்னாண்டோ லூகோவை நினைவில் கொள்க ஒருவரின் டிஎன்ஏ குறியீட்டைப் பயன்படுத்தி ஆன்கோஜீன்கள் அல்லது புற்றணுக்கள் (oncogene) எனப்படும் புற்றுநோயினை உண்டாக்கும் அணுக்களை உருவாக்கிட முடியும். இதே  நிகழ்வை பிரேஸிலின் தேர்தலுக்கு முன்பு நடந்ததாகக் கருதினால்  பிரேஸில் அதிபர் தில்மா ருஸ்ஸஃப் புற்று நோயால் பாதிக்கப்பட்டது எப்படி என்றும், இது  போலவும் நடந்திருக்கலாமென  ஐயப்படுவதற்கும் இடமுண்டு.

தனது செல்வாக்கின் ஒரு பகுதியை லத்தீன் அமெரிக்காவில் இழந்து விட்டது அமெரிக்கா. எனவே தனக்கு வேண்டாத தலைவர்களைச் சமாளிக்க மிகவும் சுலபமானதும், செலவில்லாததுமான வழியைத் தேர்ந்தெடுத்துள்ளது. அதிக காலம் ஆல்பா கதிர்வீச்சுக்குட்படுத்தல், மின்காந்த அலைகள், அல்லது ரசாயன ஆயுதங்கள் மூலமாக உடனடியாக புற்றுநோயையும் பரப்ப இயலும். இந்த வகையான அனுபவங்களை பயன்படுத்தி, சிஐஏ தனது ஆயுதங்களை முற்போக்குவாத, புரட்சிகர லத்தீன் அமெரிக்கத் தலைவர்களிடம் ஆய்வு செய்கிறது.

அமெரிக்கப் பொருளாதாரமும் கிரீஸுக்கு இணையான தோல்வியைத்தான் சந்தித்துள்ளது. பணத்தை அச்சடிக்கும் இயந்திரத்தினைக் கொண்டுதான் இன்னும் கடனில் மூழ்காமலிருக்கிறது. இருப்பினும், அமெரிக்க அரசு இராணுவத்தை பயன்படுத்தி, எல்லோரையும் ஆதிக்கம் செய்ய பணம் அதிகமாகுமென்பதால்  அதை விரும்பவில்லை. எனவே எதார்த்தத்திற்கேற்ப செலவில்லாத, உடனே செயல்டுத்தக் கூடிய முறைகளைப் பயன்படுத்தி எதிரிகளை அழிக்கிறது. இதில் இன்றியமையாத முன்னேற்றம் என்னவெனில் இந்த முறையிலான ஆயுதங்கள் எவ்வித தடயங்களுமில்லாமல், நேரடியாகவும் தாக்காமல் யாருக்கும் பொறுப்பேற்க வேண்டிய சுமையே இல்லாமல் மறைமுகமாகவே தாக்குபவை.
Download As PDF
Bookmark and Share

Post Comment

எமது பணி குறை சொல்லிக் கிடப்பதே !- இவர்கள் இப்படித்தான் - 2

இந்த வலைப்பூ, அல்லது ஃபேஸ்புக், கூகிள் ப்ளஸ் இன்னும் நாம் பல இடங்களில் இணையத் தளங்களில் தமிழில் எழுதவும் படிக்கவும் பரிமாறிக் கொள்ளவும் இயல்கிறது. இதற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும். யாரோ ஒருவரின் தனிப்பட்ட ஆர்வம் அதே ஆர்வமுடைய பலருடன் இணைந்து கூட்டு முயற்சியால்தான் உருவாகியிருக்கிறது. அவரகள் கடின உழைப்பின் பலனைத்தான் நாம் நோகாமல் நொங்கு தின்பது போல் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஒரு அரசு செய்ய வேண்டிய வேலையையெல்லாம் தனிநபர் ஆர்வத்தாலும் அவர்களின் தன்னலம் கருதா உழைப்பினாலும்தான் அனைவருக்கும் சாத்தியமாகியிருக்கிறது. இது அவர்கள் மொழியின் மீது கொண்ட தீராத காதலினால்தான் அவர்கள் உந்தப் பட்டிருக்கிறார்கள்.

எம்புருசனும் கச்சேரிக்கி வந்திருக்கிறான் என்ற பாணியில் சிலர் நக்கலடிக்கிறார்கள். எதை ? ஃபேஸ்புக், ஃபைர்ஃபாக்ஸ் முதலியவற்றை முறையே முகநூல், நெருப்பு நரி என மொழிமாற்றம் செய்து சிலர் பயன்படுத்துவதை. எனக்குக் கூட இதில் பெரிய ஆதரவு இல்லை. காரணம் பெயர்ச்சொல்லை நாம் மொழிமாற்றம் செய்து பயன்படுத்தினாலும் அந்நிறுவனம் சொல்லும் பெயரே அறுதியானது. அதை நம் தமிழார்வத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டாலும் அப்பெயரை பயன்படுத்துவது அதிகாரப்பூர்வமாக அந்நிறுவனத்தைச் சுட்டாது. நிற்க! பின்பேன் நான் அதற்கு கொடி பிடிக்க வேண்டுமென்றால் வேறு எப்படித்தான் தமிழார்வத்தை வளர்ப்பதாம் !! நம்மைப் போன்ற சாமானியர்கள்தான் இதைக் கடைப்பிடித்துப் பரப்ப வேண்டும். வேறு யார் செய்வது ?

இதே போல் நக்கல்களையும் நையாண்டிகளையும் தாண்டித்தானே இணையத்தில் தமிழைப் புகுத்த முடிந்தது. இப்போது படிக்காதவர்கள் கூட ABCD தெரியாதவர்கள் கூட வேண்டுமென்றே ஆங்கிலத்தில் பேச முயற்சிக்கின்றனர். ஆங்கிலத்தில் பேச முயற்சிப்பதை வரவேற்கலாம். ஆனால் வேண்டுமென்றே ஆங்கிலத்தை இடையிடையே புகுத்துவதுதான் சகிக்க முடியவில்லை. என்னுடன் ஒரு ஓட்டுநர் தங்கியிருக்கிறார். அவருக்கு அலைப்பேசியிலுள்ள ஆங்கிலத்தில் பதிவு செய்திருப்பதால் பெயர்களையே வாசிக்க சிரமப்படுவார். அவர் பேசும்போது அடிக்கடி சொல்வது I "means"  என்று சொல்லிவிட்டு நான் என்ன சொல்றன்னா? என்பார். பிறகு நான் சொல்லித் திருத்தி விட்டேன். இது எதற்கு ஆங்கில மோகமா இல்லை வேறு எதாவதா ? இன்னும் பல வாகன ஓட்டுநர்கள் வண்டி நிற்க வேண்டிய இடம் வந்தால் கத்துவார்கள் ஓஓஓஓல்ல்டீங்க் !! என்று. "Hold on" என்பதைத்தான் Hold in ஆக்கி ஓல்டீங் என மாற்றி விட்டார்கள். உலக மகா எரிச்சலைக் கிளப்பும் இன்னொரு வசனம் நீங்களும் கேட்டிருக்கக் கூடும். பட்டானா வந்து (Butஆனா வந்து என்று கொள்க),  "நடு சென்டரு". இவர்களைக் கிண்டல் செய்வதற்காக நான் இவைகளைச் சொல்ல வில்லை. இப்படிப் பாமரர்களையும் ஆங்கில மோகம் ஆட்டிப் படைக்கிறதே என்பதுதான் என் கவலை. அதற்குத் தமிழிலேயே பேசிட்டுப் போவதற்கென்ன. இல்லை ஆங்கிலத்திலேயே But அல்லது center என்று சொல்ல வேண்டியதுதானே ? ஆங்கிலச் சொல்லின் பின்னால் ஊ போட வேண்டாமே!

ஒரு முறை நான் முன்பு வேலை செய்த அலுவலகத்தில் ஒரு கலந்துரையாடல் நடந்தது. என்னுடைய மேலாளர் உரை நிகழ்த்தினார். அப்போது சில கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. இடையில் தமிழில் கூட உரையாடினோம்.  அப்போது அவர் "Ethics & Values" குறித்துப் பேசினார். அப்போது "ethics" என்றால் என்ன என்று கேட்டார். எல்லோருக்கும் தெரிந்ததுதானே விதிகள் அல்லது விதிமுறைகள் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் Values என்றால் என்ன ? மதிப்பு என்பது சரியாகுமா ? ஒரு சில இடங்களில் மதிப்பு என்ற சொல் சரியானது. ஆனால் இவ்விடத்தில் விழுமியம் என்பதே சரியானது. இதை நான் ஒரு நூலில் கண்டது நினைவிருந்தது. அதைச் சொன்னேன். அதிலும் விழுமியத்தில் வருகின்ற "ழு" என்பதை அழுத்திச் சொன்னேன். எல்லோரும் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். ஒரு பெண் "எங்களுக்குத் தெரியலங்கறதுக்காக சும்மா என்ன வேணாலும் சொல்லாதிங்க" என்று கிண்டலடித்தார். இல்லை அவர் தமிழைக் கிண்டலடித்தார் என்று நான் சொல்ல வரவில்லை. என்னை ஒரு நட்புரிமையில்தான் அப்படிச் சொன்னார். எனது கவலை என்னவென்றால் இப்படியே ஒவ்வொரு சொல்லாக ஆங்கிலத்திற்கு மாறினால் அல்லது தமிழ்ச்சொல்லை அறியாமல் சென்றால் பின்பு என்னவாகும்.

எனக்கு ஆங்கிலம் சரியாக வராது. இருந்தாலும் அலைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பும்போதோ அல்லது ஆர்குட், ஃபேஸ்புக், மின்னஞ்சல் அரட்டையிலோ நான் ஆங்கிலத்தில்தான் செய்வேன். ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்காக என்பது முதல் காரணம். ஆங்கில எழுத்தில் தமிழில் எழுதுவது எனக்குப் பிடிக்காதது இரண்டாவது காரணம். ஆங்கில எழுத்தில் தமிழில் எழுதுவது என்பதைக் காட்டிலும் ஆங்கிலத்திலேயே எழுதுவது சுலபம். நிறையப்பேர் என்னை விட ஆங்கிலம் சிறப்பாக எழுதவும் பேசவும் இயன்றவர்கள் கூட தமிழை ஆங்கிலத்தில்தான் எழுதி கருத்தினை, பின்னூட்டமிடுகிறார்கள். சிலர் நிலைத்தகவல் கூட ஆங்கில எழுத்தில் தமிழை இடுகிறார்கள். ஏன் தமிழ்தான் சுலபமாக வருகிறது. தமிழில் தட்டச்சு செய்வது ஆங்கிலம் போல எளிதாக இருந்தால் நிறையப்பேர் தமிழில்தான் செய்வார்கள்.

இப்படி இணையத்தில் தேவையில்லாதவற்றையெல்லாம் தமிழ்ப்படுத்துவதாக கொக்காணி காட்டுகிறவர்கள், வேறு மாற்றுவழியிருந்தால் தெரிவிக்கவும். தங்கள் பொன்னான யோசனையைச் செவிக் கொண்டு தமிழை வளர்ப்பவர்கள் தொண்டு செய்வார்கள். அம்மா, ஆத்தா, விலைமகள் வகையிலான வசைச் சொற்களையெல்லாம் தூயதமிழில் பயன்படுத்துகிறார்கள். அதே நேரம் ப்ளீஸ், ப்லாக், போஸ்ட், கமென்ட்டு, ஷேர், ஸ்டேசன், டவுட்டு, ஃபேக்ட்டு, சார் என்றெல்லாம் திரைப்படங்களின் குப்பை வசனங்களையெல்லாம் மாய்ந்து மாய்ந்து ஆங்கிலத்தில் எழுதுவதேன். இப்படிக் கண்ட மேனிக்கு ஆங்கிலத்தைக் கலந்து எழுதிவிட்டு தம்மை பெருமைப்படுத்திக் கொள்கிறவர்கள் இருக்கும்போது, தமிழார்வலர்களில் சிலர் தமது அதிகப்படியான ஆர்வக் கோளாறினால் முகநூல், நெருப்பு நரி என்றெல்லாம் மொழிபெயர்த்தால் உமக்கு என்ன ஓய் ? மகிழுந்து, எழுதுகோல் என்றெல்லாம் உங்களை முற்றிலும் தூய தமிழில் எழுதச் சொல்லிக் கட்டாயப்படுத்த வில்லை. உங்களுக்கு தெரிந்த தமிழ்ச்சொல்லை இயன்றளவில் பயன்படுத்துவதில் என்ன குறை கண்டீர் ஐயன்மீர் ?
Download As PDF
Bookmark and Share

Post Comment

பாலினப்படுகொலை: பிறக்காமல் போன 160 மில்லியன் பெண்கள்


"இவ்வுலகிலிருந்து100  மில்லியனுக்கும் அதிகமான பெண்களைக் காணவில்லை" என்று  கூறி  1990  இல்  அதிர்ச்சியை   ஏற்படுத்தினார்  நோபல்  பரிசு  பெற்ற  அறிஞரான  அமர்த்தியா  சென்.  பொருளாதார  வளர்ச்சி  பெண்களின்  எண்ணிக்கையைக்  குறைத்திருப்பதாக  எழுதிய  அமர்த்தியா  சென்  இருப்பினும்  பெண்களின்  எண்ணிக்கை  எப்படிக்  குறைந்தது  என்பது  குறித்துத்  தெளிவாக  அவர்  விளக்கவில்லை. அமர்த்தியா சென் இதற்கான காரணிகளாக ஊட்டச்சத்துக் குறைபாடு, வறுமை, கல்வியின்மை எனற வகையிலேயே விளக்கியிருந்தார். மிக முக்கியக் காரணியாக இருந்த ஒன்றைக் குறிப்பிடவில்லை, இதை  மாரா விஸ்டெண்டால்  (Mara Hvistendahl)  என்பவர்,  தன்னுடைய  "Unnatural Selection: Choosing Boys Over Girls, and the Consequences of a World Full of Men"  என்ற  நூலில்  விளக்கியுள்ளார்.  உலகில்  அதிகமான  ஆண்குழந்தைகள்  பிறந்து  இறக்கின்றன.  இயற்கையாகவே  இது  நடக்கிறது.  இயல்பான  பிறப்பு  விகிதம்  என்பது,  100  பெண்குழந்தைகளுக்கு  103  -  106  பெண்குழந்தைகள்  வரையில்  பிறப்பதாக  இருந்தது.  ஆனால்  சமீப  வருடங்களில்  இது  மாறி  அதிகமான  பெண்குழந்தைகளின்  இறப்பு  அதிகமாகியிருக்கிறது.  இதற்குக்  காரணம்  பாலினப்படுகொலை (gendercide).  அதாவது  பெண்குழந்தைகளைக்  கருவிலேயே  கலைத்து  விடுவதாகும்.  எடுத்துக்காட்டாக  சீனாவில்  ஆண்  பெண்குழந்தைகளின்  பிறப்பு  விகிதமானது  125:  100  என்ற  நிலைக்கு  நெருங்குகிறது.  2005  -  இல்  எடுக்கப்பட்ட  கணக்கீடுகளின்படி  ஆண்பெண்  பிறப்பின்  சமன்பாடு  மோசமான  நிலையில்  இருக்கும்  5  நாடுகள்  சீனா,  தென்கொரியா,  அஸர்பெய்ஜான்,  ஆர்மீனியா  மற்றும்  ஜார்ஜியா.  2010  இல்  எடுக்கப்பட்ட  புள்ளிவிபரங்களின்  படி  இவ்வாறு  பிறக்காமல்  போன  பெண்கள்  இந்தியா,  சீனாவில்  மட்டும்  85  விழுக்காடுகள்  இருக்கலாம்.



கருவிலிருக்கும்  குழந்தையின்  பாலினத்தை  அறிந்து  கொள்ள  தாய்க்கு  அனுமதியில்லையென்ற  போதிலும்  மருத்துவர்கள்  இதில்  குறுக்கு  வழியில்  உதவுகின்றனர்.  கருவிலிருக்கும்  குழந்தையின்  பாலினத்தை  அறியும்  ஆய்வும்,  (கருவானது  பெண்ணாக  இருக்கும்  பட்சத்தில்) அதனைத்  தொடர்ந்த  கருக்கலைப்பும்  ஆசியக்  கண்டத்தில்  மட்டும்  160  மில்லியன்  பெண்களை  அழித்துள்ளது.  இந்தத்  தகவல்  2005  இல்  எடுக்கப்பட்ட  புள்ளி  விவரத்தின்  அடிப்படையில்  அமைந்ததாகும்.  அமெரிக்காவிலுள்ள மொத்தப் பெண்களின்  எண்ணிக்கையைக் காட்டிலும் இது அதிகமாகும்.

இதன்  மூலகாரணமாக  விளங்குபவை  பெண்குழந்தையைக்  காட்டிலும்  ஆண்குழந்தை  பெறுவதை  விரும்பும்  கட்டுப்பெட்டித்தனமான  பிற்போக்குத்தனமான, ஆணாதிக்க  ஆசிய  சமூக  பண்பாட்டுக்  காரணிகளே.  ஆணாதிக்கப் பாதிப்பு நிறைந்த இந்தியாவில்  வரதட்சிணை  எனும்  மணக்கொடை  பெண்குழந்தை  பெற்றுக்  கொள்வதை  சிரமமாகக்  கருதுகிறது.  இந்து, கிறித்தவம், புத்தம், என அனைத்து சமயங்களிலும் இதுவே நிலை. சீனாவில்  பிறப்பிக்கப்பட்ட  ஒரு  குழந்தைத்  திட்டத்தின்  பின்பு சீனர்கள் பெண்குழந்தைகளைக் கலைத்து விட்டு ஆண்குழந்தையை பெற்றுக் கொள்ளவதில் ஆர்வம் காட்டினர்.

உலக அளவில் ஆண் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 101:100  என்ற அளவில் இருந்தாலும் மக்கள் தொகைப் பெருக்கம் நிறைந்த ஆசிய நாடுகளிலும் இந்தியா சீனாவிலும் ஏற்பட்டுள்ள இந்நிலை உலக அளவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மாரா  விஸ்டென்டால் சிலிர்க்க  வைக்கும்  காரணங்களை  தனது  நூலில்  கூறுகிறார்.  இவர்  விருது  பெற்ற  அறிவியல்  இதழாளர்.  ஆசியாவில்  9  நாடுகளில்  பயணித்துள்ள  இவர்  இந்நாடுகளில்  பெண்குழந்தைகளின்  பிறப்பு  விகிதம்  குறைவாக  இருப்பதற்கான  காரணங்களை  ஆராய்ந்து  அதன்  மூலகாரணங்களை  கண்டறிந்து  தனது  நூலில்  எழுதியுள்ளார்.  ஆசியாவில்  பாலினத்  தேர்வு (sex selection)  நடப்பது  நாம்  நினைப்பது  போல்  அவ்வளவு  சாதாரணமாகவோ இயல்பாகவோ  இல்லை  என்று  குறிப்பிடும்  மாரா  இதற்காக  மேற்குலகைக் குற்றம்  சாட்டுகிறார்.  அவர்கள்  ஏன்  அதைச்  செய்தார்கள்  என்ற  காரணத்தையும்  அவரே  விளக்கியும்  விடுகிறார்.
மாரா  விஸ்டென்டால்
மேற்குலகின் உதவி

மேற்குலக அரசுகளும், மனித வள மேம்பாட்டு (philanthropic)  நிறுவனங்களும்  இதற்குப்  பெருமளவில்  உதவின.  1950  களிலேயே  மூன்றாமுலக  நாடுகள்  கருக்கலைப்பை  சட்டப்பூர்வமாக்கியதுடன்  அதற்காதரவாக  அமெரிக்கப்  பணத்தின்  உதவியுடன்  பரப்புரையும்  செய்யத்  துவங்கின.   (ஃபோர்டு  அறக்கட்டளை,  உலக  வங்கி,  ராக்ஃபெல்லர்  அறக்கட்டளை போன்ற நிறுவனங்கள் இதில் உதவின ) பனிப்போர்க்காரர்களான  குடியரசுக்  கட்சியினரும்  மக்கள்  தொகைப்பெருக்கம் காரணமாக அதிகமான எண்ணிக்கையிலான பசித்த வயிறுகள் கம்யூனிசத்தை நோக்கித் திரும்பும் அபாயம் இருப்பதால், பொதுவுடமைத்  தத்துவம்  வளர  வழிவகுத்துவிடுமென்று  நம்ப,  இடதுசாரி  விஞ்ஞானிகளும்,  இயக்கங்களும்  "பெண்களின்  தேவை (
பெண்களின் உரிமை)"  என்றும்,  "எதிர்கால  மனித  வளத்துக்கு  அல்லது  மனிதன்  உலகில்  நிலைத்திருப்பதற்கும்"  கருக்கலைப்பை  இன்றியமையாததாகக்  கருதினர்.  இப்படியாக மாற்றுக் கொள்கைகைக் காரர்களாக இருந்த பொதுவுடமைவாதிகளும் தனியுடமைவாதிகளும் பெண்களின் "பிறக்கும் உரிமைக்கு" ??!  எதிராக கொள்கை ரீதியாக ஒன்றானார்கள்.  இது  போன்ற  மக்கள்  தொகை  கட்டுப்பாட்டு ஆதரவாளர்களின் மக்கள்  தொகையைக்  கட்டுப்படுத்தும்  ஒரு கோரிக்கையாக முன்வைத்தது  பாலினத்  தேர்வையே.  இதன் மூலம் பெண்கள் குறைவான எண்ணிக்கையில் வைத்திருக்கும் சமூகம் குறைவான மக்கள் தொகையையே  பெறும்  என்று  கணக்கிட்டிருந்தார்கள்.

பனிப்போர்  காலத்தில்  தொடங்கப்பட்ட  மக்கள்  தொகைக்  கட்டுப்பாட்டு  இயக்கங்களின்  மூலமாக,  அதிகமாக  குழந்தைகள்  பிறப்பதும்  அவர்கள்  பசியுடன்  வளர்வதும்  அவர்கள்  கம்யூனிசத்தில்  ஈர்க்கப்பட்டு  விடுவார்கள்  என்று  அஞ்சினார்கள்.  இந்த  அச்சுறுத்தலின்  காரணமாக விளைந்த கொள்கைகளால் இந்தியா,  சீனா,  தென்கொரியா  ஆகிய  ஆசிய  நாடுகளில்  பெண்குழந்தைகளின்  பிறப்பு  விகிதத்தைக்  குறைத்தது.  இதற்கான  ஆதாரங்களையும்  மாரா  கூறுகிறார்.  பல  நிறுவனங்கள்  மக்கள்  தொகையைக்  குறைப்பதற்கான  ஒருவழியாகவே  கருக்கலைப்பை  ஊக்குவித்தனர்.  மேற்குலகின்  பணத்தைக்கொண்டு  இதற்காக  மிகப்பெரும்  வலைப்பின்னல்  உருவாக்கப்பட்டது.   குடும்பக்கட்டுப்பாட்டு  ஆலோசகர்களும்,  மருத்துவர்களும்  பெண்களை  அமினோ  சிண்டிசிஸ்  ஆய்வினை  மேற்கொள்ளுமாறு  ஊக்கப்படுத்தினார்கள்.


அமினோசென்டிசிஸ் (பனிக்குட துளைப்பு) என்ற ஆய்வானது, கருவறையிலிருந்து பெறப்பட்ட ஒரு திரவத்தை ஆய்ந்து அதன் மூலம் கருவிலிருக்கும் குழந்தையின் உடல்நலத்தினை உறுதி செய்யும் நோக்கில் வடிவமைக்கப்பட்டதாகும். ஆனால் இந்தியாவிலோ அமினோசென்டிசிஸ் கருவின் பாலியலை உறுதி செய்யும் (Sex Determination) நோக்கத்திற்காகவே அந்நாட்களில் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆய்வை நடத்தி வந்த  மருத்துவ நிறுவனனங்கள், வெளிப்படையான விளம்பரங்களுடனேயே இதை செய்தன. இதற்கெதிரான சட்டமோ கட்டுப்பாடுகளோ இருந்திருக்கவில்லை. இந்த ஆய்வு நடத்துவதற்கு ஆகும் செலவு ரூ 500 என்ற நோக்கில் இம்மருத்துவ நிறுவனங்களின் விளம்பர வாசகங்கள் இவ்வாறு இருந்தன. "எதிர்காலத்தின் செலவு 50,000-ஐ  விட தற்போதைய செலவு 500 சிறந்தது" (“Better 500 now than 50,000 later”) அதாவது எதிர்காலத்தில் (பெண்ணின்) திருமணத்திற்கு ரூ 50000 செலவு செய்வதைக் காட்டிலும் தற்போது ரூ 500 செலவில் அமினோசென்டிசிஸ் ஆய்வை செய்து, பெண்குழந்தையாக இருப்பின் அதைக் கலைத்து செலவை மிச்சப்படுத்துங்கள் என்றன அவ்விளம்பர வாசகங்கள். இவ்வாறு ஒரு சிசு நோய்க்குறியீட்டுடன் இருந்தால் அதைக் கலைத்து விடுவது நல்லது என்பதைப் போலவே சிசு பெண்ணாக இருப்பதால் கலைத்துவிடலாம் தவறில்லை என்ற கருத்து பரவலாக இருந்தது.

அதனால்  இந்தியாவில்,  பெண்  சிசுக்கொலைகள்  அதாவது  கருக்கலைப்புகள் அரசு  மருத்துவமனைகளில்  வெளிப்படையாகவே  நடைபெற்றது.  மருத்துவர்கள்  கருவிலிருக்கும்  குழந்தையின்  பாலினத்தை  அறிய  உதவியதுடன்,  பெண்குழந்தையாக  இருப்பின்  அதைக்  கலைக்கவும்  செய்தார்கள்.  மேலும்  இந்தியாவில்  மிகப்பெரும்  மருத்துவ  நிறுவனமான  அகில  இந்திய  மருத்துவக்  கழகம்  (AIIMS)  இதில்  முன்னணியில்  இருந்தது.  இதன்  மருத்துவர்கள்  கருவிலிருக்கும்  குழந்தையின்  பாலினத்தை  அறியும்  சோதனைகளை  அதிகப்படுத்துவதன்  மூலம்  மக்கள்  தொகையைக்  கட்டுப்படுத்த  முடியும்  என்ற  கருத்தைப்  பரப்பினார்கள்.  இதையே  இன்னும்  கொஞ்சம்  தெளிவாகச்  சொன்னால்  மக்கள்  தொகைக்  கட்டுப்பாடு  என்ற  பெயரில்  பெண்சிசுக்களைக்  கலைத்தனர்.  பாலினத்தேர்வு  (sex determintion) பற்றி 1970  களின்  பின்பகுதியில்தான் இந்தியப்  பெண்ணியவாதிகள்    எதிர்ப்புக்குரல்  எழுப்பத்  தொடங்கினர்.  ஆனால்  அதற்கு  முன்னதாகவே  பெருமளவிலான  பெண்சிசுக்கள்  கலைக்கப்பட்டிருந்தன.  இதன்  மூலமாக  பெண்குழந்தைகள்  பிறப்பானது  குறைக்கப்பட்டிருந்தது.  அகில்  இந்திய  மருத்துவக்  கழகத்தில்  மட்டும்  ஏறக்குறைய  100000  பெண்சிசுக்கள்  கலைக்கப்பட்டிருந்தன.  இந்தியர்களின்  வரிப்பணமும்  மேற்குலகின்  பணமும்  இதற்கு  உதவின.

1978 - இல் ஒரு நிகழ்வு, டெல்லியிலுள்ள லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மருத்துவமனையிலுள்ள மகப்பேறு தளத்திற்கு ஒரு மருத்துவ மாணவர் செல்கிறார்.
தன் வாயில் உள்ளங்கை அளவிலான ஒரு சதைத் துண்டைக் கவ்வியவாறு பூனையொன்று, அவரைக்  கடந்து செல்கிறது, ஆரம்பத்தில் பூனையின் வாயிலிருப்பது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை, ஆனால் பின்பு அவர்  அறுவைசிகிச்சைக்கான கருவிகள் வைக்கப் பயன்படும் தட்டில் சிதைக்கப்பட்ட சிசுவும் இரத்தத்துடன் வைக்கப்பட்டிருந்ததைக் காண்கிறார் பின்பு புரிந்து கொண்டு அதிர்ச்சியுடன் அங்கிருந்த செவிலியரிடம் அதை ஏன் முறையாக அடக்கம் செய்யவில்லை என்று கேட்கிறார். அதற்கு அவர் அது பெண்சிசு என்று பதிலளித்தாராம். பெண்சிசுக்கள் கலைக்கப்படுவது மிகவும் இயல்பாகவும் சாதாரண நிகழ்வாகவும் இருந்திருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு

மேலும்  மேற்கு  செய்த  அடுத்த  கொடுமை  வறுமை  சூழ்ந்த  பகுதிகளில்  வாழும்  ஏழைகளுக்கு  பணம்  வழங்கப்பட்டு  குடும்பக்கட்டுப்பாடு  செய்தது.  இந்திரா காந்தியின் அவசர நிலைக் காலத்தில் மட்டும்கட்டாய  குடும்பக்  கட்டுப்பாட்டு  அறுவை  சிகிச்சைகள்  ஒருவருடத்தில்  மட்டும்  அரசாங்கத்தால்  ஏறக்குறைய  6  மில்லியன்  ஏழை  இந்தியர்களுக்கு  நடத்தி  முடித்தது.  இது  நாஜிக்கள்  யூதர்களுக்கு  நிகழ்த்தியதை  விட  15  மடங்கு  அதிகமாகும்.


இக்காலங்களிலெல்லாம்  பெண்கள்  பிறப்பு  விகிதம்  தொடர்ந்து  குறைந்து  கொண்டேயிருந்தது.  1970  களின்  இறுதியிலிருந்து  மருத்துவ  மனைகளும்  (clinic)  கருவின்  பாலினச்  சோதனையை  நடத்துவதை  விளம்பரமாகவே  செய்யத்  தொடங்கின.  பஞ்சாப்பிலிருந்து  இது  டெல்லி  ஹரியானா  போன்ற  மாநிலங்களுக்கும்  பரவியது.  1978  லிருந்து  1983  வரையிலான  காலப்பகுதியில்  மட்டும்  78000  பெண்சிசுக்கள்  கலைக்கப்பட்டன.  கருவை  அறியும்  சோதனைகளின்  மூலமாகவே  பெண்குழந்தைகளின்  விகிதம்  மோசமான  அளவுக்குக்  குறைந்து  போனது.


இவை  மட்டுமல்ல,  1960  களின்  இறுதியிலும்,  1970  களின்  தொடக்கங்களிலும்,  செல்வாக்கும்  மிக்க  அமெரிக்க  நிபுணர்கள்  கல்வியில்  இதைத்  திணிக்க,  அரசாங்கத்தால்  நிகழ்த்தப்படும்  கருத்தரங்களிலும்  கலந்து  கொண்டு இதை  வலியுறுத்தினார்கள்.  1969  இல்  பாலினத்  தேர்வு  என்பதை  உலகிற்கான  முக்கியமான  திட்டமாக  அமெரிக்க  அரசாங்கத்தால்  அறிவிக்கப்பட்டது. இதன்  முக்கியமான  அம்சம்  பிறப்பு  விகிதத்தைக்  கட்டுப்படுத்துவது.

பாலியல்  சமநிலையின்மையினால்  ஏற்படும்  சமூக  சீரழிவுகள்  :

ஆணாதிக்க  உலகில்  இயல்பாகவே  இருக்கும்  குடும்ப  வன்முறை,  சமூக  வன்முறை, குடும்பப் பெருமை சீர்குலைவு போன்றவற்றை எதிர்கொண்ட பெண்களும் தாம் பெண்குழந்தை பெறுவதைவிரும்பவில்லை.  அமெரிக்க  வாழ்  ஆசிய  சமூகத்தைச்  சார்ந்த  பெண்களிடம்  இது  அதிகமாக  இருக்கிறது. ஆசிய நாடுகளில் பெண் சிசுவைக் கலைக்க விரும்பும் பெண்கள் எழைகளல்ல, மாறாக மெத்தப்படித்தவர்களான மேட்டுகுடி வர்க்கத்தினராவர். நவீன பொருட்களை விரைவாகவும் எளிதாகவும் நுகரும் திறனுள்ள வசதியான பெண்களே பெண் சிசுக் கலைப்பை அதிகமாக செய்கிறார்கள். 





இது   போன்ற   பிறப்பு   விகிதக்   குறைபாட்டினால்   பெண்களின்  எண்ணிக்கை  கணிசமாகக்   குறைந்து   விட துணை   கிடைக்காத   ஆண்களின்   எண்ணிக்கை   அதிகரிக்கிறது.   தென்கொரியாவில்   2008   இல்   நடந்த   திருமணங்களில்   11%   ஆண்கள்   வெளிநாட்டிலிருந்தே   மணப்பெண்ணையே   தேர்ந்தெடுத்துள்ளனர்   என்பதே   இதற்கு உதாரணம்.   மேலும்   சமூக   வன்முறையும்   பெண்துணை   கிடைக்காத   ஆண்களால்   அதிகரிக்கிறது.   இன்னும்   கவலைக்குரியதாக   பெண்கள்   மீதான   வன்முறையை   இன்னும்   பல   மடங்குகளாக   அதிகரிக்கிறது.   இந்த ஆண் பெண் விகிதாச்சாரமானது வன்முறையில் பெரும்பங்கு வகிப்பதாக வாதிடுகிறார் மாரா. இதன் ஆதாரமாக அவர் சீனாவிலுள்ள மாகாணங்களில் எங்கெல்லாம் பாலின விகிதம் சமச்சீரின்றி உள்ளதோ அங்கெல்லாம் வன்முறை அதிகமாக இருப்பதாகக் கூறுகிறார். பெண்களின் விகிதம் குறைவாக இருப்பதால் திருமண நடப்பதே உறுதியில்லாத நிலமையில் உள்ள குறைவான வருவாயைக் கொண்டுள்ள ஆண்களால் வன்முறை அதிகரிக்கிறது என்கிறார். இதனால் வன்முறைக்குக் காரணமாக இருப்பது பாலின விகிதாச்சாரக் குறைவேயன்றி வருமானக் குறைவு மட்டும் அல்ல என்கிறார். 



தற்போது வளர்ந்த நாடுகளிலுள்ள ஆண்கள் ஏழை நாடுகளிருந்து பெண்களை திருமணம் செய்திருப்பது அதிகரித்திருக்கிறது. இதனால் வியட்நாமில் மணப்பெண்களை, பெண்களுக்கு தட்டுப்பாடு நிலவும் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் வணிகம் அதிகரித்திருக்கிறது. இவ்வாறு பெண்களுக்கான கிராக்கி ஏற்பட்டு அவர்களின் மதிப்பு கூடி இருப்பது அவர்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது. பெண்களின் தேவை காரணமாக அவர்கள் கடத்தப்படுவது, விற்கப்படுவது, கட்டாயத் திருமணம், வேறு நாடுகளுக்கு திருமணம் செய்து கொடுப்பது, விருப்பமில்லாத திருமணத்தை ஏற்றுக்கொள்வது, விபச்சாரத்தில் தள்ளப்படுவது, பாலியல் அடிமைகளாக சிக்கிக் கொள்வது என்று அவர்களின் தலையிலேயே விடிகிறது.


 மாரா  எழுதுகிறார்,  "ஆண்களால்  நிறைந்த  இவ்வுலகில்  தைவா
ன்  முதல்  தென்கொரியா  ஹரியானா  வரையிலும்  பெண்துணை  கிடைக்காத  ஆண்களால்  பெண்கள்   மீதான  வன்முறையை  அதிகரிக்கவே  செய்யும்.    பெண்கள்  சகோதர உறவுடைய  ஆண்களை  மணந்து  கொள்ளும்  கலாச்சார நிலை வரும். பாலின ஒடுக்குமுறை (ஆணாதிக்கம்) காரணமாக பெண்களின் விகிதம் குறைந்திருக்கிறது என்று அமர்த்தியா சென் கூறுவதை மறுக்கும் மாரா பெண்கள் உரிமையின்றி வாழும் மத்திய கிழக்கு நாடுகளில் ஆண் பெண் விகிதம் ஓரளவு சமமாக இருப்பதைக் காட்டுகிறார். உலக அளவில் ஆண் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 101:100  என்ற அளவில் இருந்தாலும் மக்கள் தொகைப் பெருக்கம் நிறைந்த ஆசிய நாடுகளிலும் இந்தியா சீனாவிலும் ஏற்பட்டுள்ள இந்நிலை உலக அளவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

தம்முடைய நோக்கம் கருக்கலைப்புக்கு எதிரான மதவாத, பழமைவாத அமைப்புகளின் நோக்கத்திலிருந்து வேறுபட்டது என்று தனது அரசியலை தெளிவுபடுத்தியிருந்தாலும் அதை முன்னெடுப்பதில் மாராவுக்கு சிக்கல் நிரம்பியிருக்கிறது. ஏனெனில் கருக்கலைப்பு என்பது பெண்ணின் உரிமை என்ற நிலையில் கருக்கலைப்பைத் தடை செய்யக் கோரவும் முடியாது. கருக்கலைப்பை தடை செய்யக்கோரினால் அது பெண்ணியத்திற்கு பல ஆண்டுகள் போராடிப் பெற்ற பெண்ணுரிமையை  இழக்கும் வகையில் ஒரு பெருமிழப்பாகும். இதற்காக பெண்குழந்தைகள் கருவில் சிதைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளவும் இயலாது என்ற நிலையில் மாரா அல்ட்ரா சவுண்ட் ஆய்வின் போது கருவின் பாலினத்தை அறியும் ஆய்வைத் தடை செய்யவும், அதற்காக தண்டனை விதிப்பதை நடைமுறைப் படுத்துவதையும், பெண் சிசுவைக்  கலைக்க விரும்பும் பெண்களிடம் முறையான காரணத்தை அறியவும் அதிக சிரத்தை எடுக்கவும் மருத்துவர்கள் முன்வரவேண்டும் என்பதையும் மட்டுமே செய்ய வேண்டுமென பரிந்துரைக்கிறார்.

நன்றி Times of India


Progressive என்ற இணைய வானொலிக்கு மாரா விஸ்டெண்டால் நேர்காணல்:



Download As PDF
Bookmark and Share

Post Comment