தென் அமெரிக்கத் தலைவர்களுக்கு புற்று நோயைப் பரப்பியது சிஐஏ ?


இது ரஷ்யாவைச் சேர்ந்த இணையத்தளமொன்றில் ஒரு வருடத்திற்கு முன்பு வெளியான கட்டுரை. இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் இதைப்படித்தேன். சாவேஸின் இறப்பும் அதைத்தொடர்ந்து நிகழ்ந்து விட்டதால் இதை மொழிபெயர்க்க வேண்டும் என்று தோன்றியது. இதை நம்புவது சிலருக்குக் கடினமாக இருக்கலாம். அதற்கு முன்பு உலகில் எய்ட்ஸ் பரவியது என்பது எப்படி என்பதையும் படித்து விட்டால் இதை நம்புவது அவ்வளவு சுலபம். இது உண்மையாக இருக்கலாம் இல்லாமலும் போகலாம். ஆனால் நடந்திருக்கவே முடியாது என்று மட்டும் சொல்ல முடியாது.

கடந்த 18 மாதங்களில் லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த 4 (முன்னேற்றத்தை விரும்பும்) முற்போக்குவாதத் தலைவர்களும் மக்களும் மருத்துவர்களால் வெளியிடப்பட்ட தகவலைக் கேட்டு அதிர்ந்து போயினர். மருத்துவர்கள் சொன்ன தகவல் புற்று நோய். 


ஃபெர்னாண்டோ லூகோ (Fernando Lugo) - பராகுவே

லூயிஸ் இனாசியோ லூலா ட சில்வா (Luis Inacio Lula da Silva) மற்றும் டில்மா ரௌஸஃப் (Dilma Rousseff) - பிரேஸில்

ஹியூகோ சாவேஸ் - வெனிசுலாவோ

சமீபத்தில் கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் டி கிரிஸ்னர் - அர்ஜென்டைனா

ஆகியோரிடம் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களின் இனிமேல் உயிர்வாழ்வதும் கேள்விக்குறியாகியுள்ளது.


சாவேஸ் "தனக்குத் தேவையில்லாத தலைவர்களை அழிக்கும் அமெரிக்காவின் ஆயுதமே இந்த நோயாக இருக்கலாம்" என்று கூறினார். ஆனால் முரணாக இந்தத் தலைவர்கள் தமது பதவிகளிலிருந்தோ பொறுப்புக்களிலிருந்தோ விலகவில்லை. தமது ஆதரவைப் பெருக்கிக் கொண்டதுடன் தமது ஆதரவாளர்களிடம் ஊர்வலமும் சென்றார்கள்.

முதன் முதலாக 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பராகுவே அதிபர் ஃபெர்னாண்டோ லூகோவின் நிணநீர் மண்டலத்தில் (lymphatic system) புற்றுநோய்க் கட்டிகள் கண்டறியப்பட்டன. சாஓ பௌலோவிலும் (Sao Paulo)  அசன்சனிலும் (Asuncion) ஆறு முறை வேதிச்சிகிச்சை (chemotherapy) எடுத்துக் கொண்ட பிறகு புற்றுநோய்க்கட்டிகள் மறைந்தன. இவர் 2008 - இல் தேர்ந்தெடுக்கப்பட்டவர், தனது தேவாலய பதவியை (ecclesiastical rank)  விட்டு விலகியவர், பராகுவே நாட்டின்  இரண்டாவது இடதுசாரியத் தலைவர்.
66 வயதான பிரேஸிலின் முன்னாள் அதிபரான லூயிஸ் இனாசியோ லூலா ட சில்வா வுக்கு அக்டோபர் 2011 இல் தொண்டைப் புற்றுநோய் (larynx cancer) கண்டறியப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே தில்மா ருஸ்ஸஃப் - இடம் பதவி மாறியிருந்தது. லூயிஸ் இனாசியோ சிகிச்சை மேற்கொள்ளும்பட்சத்தில் அவர் நிரந்தரமாகவே பேசும் ஆற்றலை இழந்து விடக்கூடும் என்பதால் மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கவில்லை.

அவர் பல முறை எடுத்துக்கொண்ட வேதிச்சிகிச்சையின் காரணமாக அவருக்கு இருந்த புற்று நோய் 75% குணமாகி விட்டது. அவர் அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 2003 -லிருந்து 2010 வரை பிரேஸிலின் அதிபராக இருந்த லூலா வறுமையைக் குறைத்தார், லத்தின் அமெரிக்க நாடுகளின் ஒருங்கிணைத்தார், பிரேஸிலின் பொருளாதாரத்தை உலகின் பெரிய நாடுகளின் அளவுக்கு உயர்த்தினார்.
நெஸ்டர் கிர்ச்னர் உடன் சாவேஸ், ஃபெர்னாண்டோ லூகோ
57 வயதான வெனிசுவேலாவின் அதிபர் 2011 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியிலிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளத் துவங்கினார். அவர் எந்தவகைப் புற்று நோயால் பீடிக்கப்பட்டுள்ளார் என்பதற்கான தரவுகள் இதுவரை இல்லை. ஹவானாவில் ஜூலை 20 ஆம் நாள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நான்கு முறை வேதிச் சிகிச்சையும், பல ஆய்வுகளும் செய்யப்பட்ட பின்பு அவருக்கு நோய் குறைந்தது. அவர் 1999 - லிருந்து, 2012 வரையில் அதிபராக இருந்தார். தற்போது மூன்றாம் முறையாகப் போட்டியிடவிருக்கிறார்.

இறுதியாக டிசம்பர் 2011 இல் 58 வயதான அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் டி கிரிஸ்னர் 2012 ஜனவரி மாத தொடக்கத்தில் தைராய்டு சுரப்பியில் ஏற்பட்ட புற்றுநோய்க்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவிருக்கிறார், உடல் நிலையில் முன்னேற்றமும் காண்பார் என்று ஊடகங்கள் கணித்தன. கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் டி கிரிஸ்னர் 2011 டிசம்பரில் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், தீவிரமான அமெரிக்க எதிர்ப்பாளராகவும் இருக்கிறார்.

முதன்முதலாக இது குறித்து ஐயத்தை வெளியிட்டவர் ஹியூகோ சாவேஸ். "நான் குறிவைக்கப்படுவதினால் அன்சுகிறவனல்ல ஆனால் தனக்கு எதிரான தலைவர்களை நீக்குவது என்பது பேரரசின் (அமெரிக்கா) நீண்டகால வழமையாக இருக்கிறது. என்னிடம் ஆதாரமில்லை ஆனால் நிச்சயமாக ஏதோ ஒரு புதுமையான காரணம் லத்தீன் அமெரிக்க முற்போக்குத் தலைவர்கள் விசயத்தில் இருக்கிறது" என்று கூறினார் சாவேஸ்.

அவர் சரியாகச் சொல்லியிருக்கிறார் என்பதை ஃபிடல் காஸ்ட்ரோ மீது பலமுறை கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பதிலிருந்து அறியலாம். வெனிசுலாவின் எழுத்தாளர் லூயிஸ் ப்ரிட்டோ கார்சியா என்பவர் கருத்துப்படி அமெரிக்க உளவுத்துறை (CIA) 900 முறைகளுக்கும் மேலாக காஸ்ட்ரோவைக் கொலை செய்ய முயன்றுள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மட்டுமல்ல, இஸ்ரேலுக்கு எதிராகவும் ஒன்றிணைந்துள்ளன. ஏனென்றால் ஏறக்குறைய அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகளும் பாலஸ்தீன விடுதலையை அங்கீகரித்துள்ளன. எனவே சிஐஏ மட்டுமல்லாது மொசாத்தின் பங்கு குறித்து ஆராய வேண்டும். இன்னொரு விசித்திரம்  என்னவென்றால் சாவேஸ் நோய்வாய்ப்பட்டதையும், அவரது விந்துப்பை (Prostate) புற்றுநோய் பற்றிய தகவலை முதன் முதலில் வெளியிட்டது, சிஐஏவினைச் சார்ந்த ஊடகம், நூவோ ஹெரால்ட், இது அமெரிக்க அரசாங்கத்தின் உதவியால் வெளியாகும் செய்தி நாளிதழாகும்.

புற்றுநோய் என்பது உளவுத்துறையால் பயன்படுத்தப்படும் ஆயுதங்களின் பக்க விளைவுகளா ? இல்லை வெறும் தற்செயல் நிகழ்வுகள் எதிரிகளான லத்தீன் அமெரிக்க அரசுகளை சுற்றி நடக்கின்றனவா? இந்த சதிக்குப் பல முன்தேவைக் காரணங்கள் இருக்கலாம். மிகவும் இன்றியமையாத  ஒன்று, 


தென் அமெரிக்க நிகரமைவாதம் (சோஷலிசம்) உருவாவதைத் தடுப்பது.

இரண்டு, methods of operation have been developed, and the most unsuccessful ones are   discussed by the entire world என்று குறிப்பிட்டுள்ளார்கள் எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை நேரடியான போர் நடவடிக்கைகள் தோல்வியுற்றும் உலகத்தால் பேசப்படுகின்றதைச் சுட்டலாம்.

மூன்றாவதாக அறிவியல் கண்டுபிடிப்புகளின் சாத்தியப்பாட்டின் மூலம் உயிரியல், வேதியியல், மின்னணு ஆயுதங்களை பயன்படுத்தி இது போன்ற மறைமுகமான உள்நாட்டுப் போர்கள் நடத்த முடியும்
 
இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது என்னவென்றால், யாருடைய கொள்கைகளெல்லாம்  அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு எதிரானதாக இருந்ததோ அவர்களுக்கு மட்டுமே இந்நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன.  எல்லாவற்றுக்கும் முன்பாக, குருதிப் புற்றுநோயால் அவதிப்பட்ட பாலஸ்தீன அதிபர் யாசர் அராஃபத் 2004 இல்  விசித்திரமான முறையில் இறந்தார். ஃப்ரான்ஸ் நிபுணர்களின் கருத்துப்படி, அவர் குருதியோட்ட ஒழுங்கு சிதைந்து குருதிக்கசிவு மூளையில் ஏற்பட்டதன் காரணமாக இறந்தார். குருதியோட்டம் மாறக் காரணமாக இருந்தது பெயரிடப்படாத ஒரு தொற்றுக் கிருமிதான். இதனால் நோயாளியின் குருதிச்சிறுதட்டுக்கள் (blood platelet) எண்ணிக்கை குறைந்தும், வெள்ளை அணுக்கள் அதிக எண்ணிக்கையிலும் இருக்கும். இதே போன்ற அறிகுறிகள் புற்றுநோய், நுரையீரல் அழற்சி (inflammation of the lungs) மற்றும் சில வகை குருதிக் குறைபாடு உட்பட பலவகையான பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்க்கும் காண முடியும்.

போலோனியம் - 210 மூலம் ரசாயன நச்சூட்டப்பட்டதால் மர்மமான முறையில் 2004 இல் இலண்டனில் இறந்தவர் அலெக்ஸாண்டர் லிட்வினென்கோ (ருஷ்ய உளவாளி பின்னர் இங்கிலாந்து உளவாளி).  எந்த சிறப்புப் படை இதை செய்தது என்று தெரியவில்லை எனினும், இவர் உடலின் முக்கிய உள் உறுப்புக்களைத் தாக்கும் புற்றுநோயால் இறந்தார். இதே மாதிரியாக உக்ரேனின் முன்னாள் அதிபரான விக்டர் யுஸ்சென்கோ அதிதூய டையாக்ஸின் (dioxin of high purity) மூலம் நஞ்சூட்டப்பட்டார். இந்த ரசாயனம் ருஷ்யாவுக்கு வெளியே எங்கோ ஒரு ஆய்வகத்தில் தயாரானது. இது மூக்கு - மூச்சுக் குழாயில் புற்றுநோயை உருவாக்கும் திறனுடையது.

அமெரிக்கா தனது, ஆப்கான், ஈராக் படையெடுப்புக்களின்போது பல புதுவிதமான ஆயுதங்களையும் போரில் பயன்படுத்தி ஆய்வு செய்தது. உதாரணத்திற்கு நுண்ணலைத் துப்பாக்கிகள் எனப்படுகின்ற ஆயுதங்கள்,  நுண்ணலை அடுப்பு (conventional microwave oven)  செயல்படும் விதியின் படி இயங்குகின்றவை, அவை குறுங்கிய பீம் - ல் (narrow beam) அடைக்கப்பட்டிருந்தாலும் அதன் பாதிப்புக்கள் பரவலாக இருக்கும். புற்று நோயை பரப்புவதுடன் அவை அதற்குச் சற்றும் குறையாத இன்னொரு தன்மையும் வைத்திருக்கின்றன. தோல்களிலும் செல்களின் இடைவெளிகளிலுமுள்ள (intercellular space) நீரை வெப்பமாக்கிவிடும் தன்மையுடையவை, உயிரைக் கொல்லாது என்றபோதும், தீக்காயத்துக்கு இணையான வேதனையை உண்டாக்கும். இது போன்ற அறிகுறிகளுடன் இறந்த ஒருவர்
அர்ஜென்டைனா அதிபர் நெஸ்டர் கிர்ச்னர். 2011 ஆம் ஆண்டுக்கான அதிபர் தேர்தல் போட்டிக்கு வேட்புமனுவை விண்ணப்பித்த பின்னர்   அதிபர் நெஸ்டர் கிர்ச்னர் திடீரென 27 அக்டோபர் 2010 இல் இறந்தார்.

விக்கிலீக்ஸ் கூறிய தகவல், 2008 இல் சிஐஏ தனது பராகுவே தூதரகத்திடம் கேட்ட தகவல்கள் என்னவென்றால் பராகுவே நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் நான்கு பேர்களின் டிஎன்ஏ குறியீடு உள்ளிட்ட உயிரிபுள்ளியல் தரவுகள் (biometric data). புற்று நோயால் பாதிக்கப்பட்ட பராகுவே அதிபர் ஃபெர்னாண்டோ லூகோவை நினைவில் கொள்க ஒருவரின் டிஎன்ஏ குறியீட்டைப் பயன்படுத்தி ஆன்கோஜீன்கள் அல்லது புற்றணுக்கள் (oncogene) எனப்படும் புற்றுநோயினை உண்டாக்கும் அணுக்களை உருவாக்கிட முடியும். இதே  நிகழ்வை பிரேஸிலின் தேர்தலுக்கு முன்பு நடந்ததாகக் கருதினால்  பிரேஸில் அதிபர் தில்மா ருஸ்ஸஃப் புற்று நோயால் பாதிக்கப்பட்டது எப்படி என்றும், இது  போலவும் நடந்திருக்கலாமென  ஐயப்படுவதற்கும் இடமுண்டு.

தனது செல்வாக்கின் ஒரு பகுதியை லத்தீன் அமெரிக்காவில் இழந்து விட்டது அமெரிக்கா. எனவே தனக்கு வேண்டாத தலைவர்களைச் சமாளிக்க மிகவும் சுலபமானதும், செலவில்லாததுமான வழியைத் தேர்ந்தெடுத்துள்ளது. அதிக காலம் ஆல்பா கதிர்வீச்சுக்குட்படுத்தல், மின்காந்த அலைகள், அல்லது ரசாயன ஆயுதங்கள் மூலமாக உடனடியாக புற்றுநோயையும் பரப்ப இயலும். இந்த வகையான அனுபவங்களை பயன்படுத்தி, சிஐஏ தனது ஆயுதங்களை முற்போக்குவாத, புரட்சிகர லத்தீன் அமெரிக்கத் தலைவர்களிடம் ஆய்வு செய்கிறது.

அமெரிக்கப் பொருளாதாரமும் கிரீஸுக்கு இணையான தோல்வியைத்தான் சந்தித்துள்ளது. பணத்தை அச்சடிக்கும் இயந்திரத்தினைக் கொண்டுதான் இன்னும் கடனில் மூழ்காமலிருக்கிறது. இருப்பினும், அமெரிக்க அரசு இராணுவத்தை பயன்படுத்தி, எல்லோரையும் ஆதிக்கம் செய்ய பணம் அதிகமாகுமென்பதால்  அதை விரும்பவில்லை. எனவே எதார்த்தத்திற்கேற்ப செலவில்லாத, உடனே செயல்டுத்தக் கூடிய முறைகளைப் பயன்படுத்தி எதிரிகளை அழிக்கிறது. இதில் இன்றியமையாத முன்னேற்றம் என்னவெனில் இந்த முறையிலான ஆயுதங்கள் எவ்வித தடயங்களுமில்லாமல், நேரடியாகவும் தாக்காமல் யாருக்கும் பொறுப்பேற்க வேண்டிய சுமையே இல்லாமல் மறைமுகமாகவே தாக்குபவை.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்