புற அழகைப் பழிப்போரின் அக அழகு


இப்போது, யார் வேண்டுமானாலும் ஓர் புகைப்படத்தை போட்டோஷாப்பில் எடிட் பண்ண கற்றுக் கொள்ள முடியும். தமிழிலும் அதன் மீது எழுதிவிடலாம். இதனால் சகட்டு மேனிக்கு இணையத்தில் புகைப்படங்களைப் புழங்க விடுகிறார்கள். அது ஒவ்வொன்றும் அருவருப்பாக இருக்கிறது. இதில் அதிகமாக இருப்பவை பெண்களைக் கிண்டல் செய்பவை.

அடுத்ததாக திரைப்பட நடிக நடிகையரின் படங்களைப் போட்டு திரையரங்கில் படம் ஓடும்போது என்னவெல்லாம் சொல்லிக் கத்திக் கூச்சலிடுவார்களோ அதையெல்லாம் வசனமாகப்போட்டு புகைப்படங்களை ஃபேஸ்புக்கிலும் கூகிள் ப்ளஸ்சிலும் பகிர்கிறார்கள்.

இது சற்றும் மனிதாபிமானமில்லாமலும், சக மனிதர்களை இழிபிறவிகளாகவும் சித்தரிக்கின்றன. இதைப்பார்த்து சிரிக்கும் அளவுக்கு அனைவருக்கும் மனசாட்சி மரத்துப் போய்விட்டது. இதில் திரைப்பட நடிக நடிகையர்கள் மட்டுமல்லாமல் அரசியல்வாதிகளையும் சகட்டு மேனிக்கு இழிவு செய்கிறார்கள். கருத்து சுதந்திரம் இருக்கிறது என்ற ஒரு காரணத்திற்காக ரொம்பவும் தறிகெட்டு ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இவை மிகச் சாதாரணமாக ஃபேஸ்புக்கில் பகிரப்படுகின்றன. நக்கலடிக்கப்படுகின்றன. இது போன்ற சில பன்னாடைகளைக் கொண்டே ஃபேஸ்புக் போன்ற ஊடக சுதந்திரம் பறிக்கப்படலாம். 

அரசியல்வாதிகளில் கருணாநிதியை அதிகமாக கேவலப்படுத்துகிறார்கள். அதுபோல நடிகர்களில் விஜயை படுகண்றாவியாக சித்தரித்து வைத்திருக்கிறார்கள் இந்த போட்டோஷாப் நிபுணர்கள். யாரும் இதுவரை இது குறித்துப் புகாரளிக்காதது அதிசயமாக இருக்கிறது.


இது ஒன்றும் அமெரிக்கா அல்ல என்பதையும் நினைவூட்டிக் கொள்ளவும். 

அடுத்ததாக திரைப்படப் பைத்தியங்கள். திரைப்பட நடிகர்கள் மிகை மனிதர்களாகவே ஊடகங்களால் சித்தரிக்கப்படுகின்றனர். அவர்கள் என்ன செய்தாலும் செய்தியாகிறது. அவர்கள் ஊருக்குப் போவதை, திரைப்படம் பார்த்ததை, கருத்து சொல்வதை ஃபேஸ்புக்கில், ட்விட்டரில் கூட போட மாட்டார்கள் ஆனால் அது நாளிதழ், வார இதழ்களில் துணுக்குகளாக வெளிவருகின்றன. இந்த விளம்பரங்களைக் கொண்டுதான் அவர்களின் செல்வாக்கு சராசரி மனிதர்களிலிருந்து உயர்த்தி வைக்கப்பட்டு அவர்கள் மீதான செய்திகளை ஆர்வமூட்டப்பட்டு அவர்கள் கைகழுவும் செய்தியைக் கூட பெரிய செய்தியாக்குகிறார்கள்.

அதனால் அவர்கள் நடித்து வெளியாகும் படங்களுக்கு பெரிய பரபரப்பை உண்டாக்கி காசு பாக்க முடிகிறது. இதன் மூலம்தான் இந்த நட்சத்திர அந்தஸ்தைப் பயன்படுத்தி அவர்களும் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க முடிகிறது. இதே எதிர்வினையாக ஒரு குறிப்பிட்ட நடிகை, அல்லது நடிகர்களைப் பற்றி படுகேவலமான தொனியில் விமர்சிப்பதும், அதைத் தொடர்ந்து செய்வதுமாக இருக்கின்றனர். இதைத் திரையரங்கில் ஏதோ குடிகாரப் பொறுக்கிகள் மட்டும்தான் செய்வார்களில்லை. 

இதில் சில உதாரணங்கள் 

விஜயின் மனைவியுடன் விஜயின் தந்தையை இணைத்து சஞ்சயின் அப்பா அம்மா என்று எழுதியிருந்தார்கள். அங்கங்கே தல வாழ்க என்ற அஜீத்
புராணமும் இருந்தது.

ஏதே இரு மேல்நாட்டு ஜோடிகளின் டிஸ்கோதே கிளப்பில் கட்டிப்பிடித்துக் கொண்டு இருப்பதை, சோனியா- மன்மோகன், மாயாவதி-ப்ராணாப் முகங்களை ஒட்டி வைத்திருந்தார்கள்,

மன்மோகனும் சோனியாவும், மன்மோகனும் காதோடு பேசுவது போன்ற புகைப்படத்தில் இருவரும் முத்தம் கொடுப்பது போன்ற விளக்கத்துடன் பகிரப்பட்டிருந்தது.

காந்தி நேரு ஆகியோர் வெள்ளைக்காரப் பெண்மணிகளுடன் இருப்பதைப் போன்ற புகைப்படங்களும் அதன் விளக்கங்களும். விமர்சிப்பதற்கும் ஒரு தரம் வேண்டும்.

இப்படிப்பலவாறு இருக்கின்றன. 

நடிகர் விஜயின் முகத்தை ஆப்ரிக்கர்களின் உடலிலோ அல்லது மனநிலை சரியில்லாத ஒரு பிச்சைக்காரரின் உடலில் ஒட்டி விட்டால் அது "கலாய்த்து விட்டதாகக்" கருதப்படுகிறது. இது என்ன ஒரு வக்கிரமான மகிழ்ச்சி !! ஏன்னா ஆப்ரிக்காக் காரன் கருப்பாக அசிங்கமாக இருப்பான் என்ற எண்ணம் உயர்வு மனப்பான்மை,  கூலி வேலை செய்பவனின் மீதான ஏளனப் பார்வைதான். 


இந்த நடிகர்களின் ரசிகர்கள் ஒரு மன்நோயாளிகள் என்பதில் எந்த ஐயமும் வேண்டியதில்லை. எந்த நடிகனுமே இயக்குநர் சொல்லி, நடன இயக்குநர் சொல்லித்தான் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள். யாருக்கும் எந்த மேனமையும் கீழ்மையும் கிடையாது. ஆனால் எந்த ரசிகர்கள் ஒரு நடிகனை கடவுளைப் போல ஏற்றி வைக்கிறார்கள், தனக்குப்பிடிக்காத இன்னொரு நடிகனை படு கீழ்த்தரமாக கேவலப்படுத்துகிறார்கள். 

விஜயை மற்ற எல்லோரும் கிண்டல் பண்ணுகிறார்கள் என்றால், இன்னும் சிலர் சூர்யாவை கிண்டல் செய்வதாக நினைத்து அவரது உயரத்தைக் கிண்டல் செய்கிறார்கள். இந்த மன்நோயாளிகளின் அடிப்படையெல்லாம் ஒன்றுதான். உருவத்தைக் கிண்டல் செய்தல், இதை அதிகமாக பெண்களின் மீது ஏவப்படும் வன்முறை அவ்வப்போது ஆண்களின் மீதும் ஏவப்படுகிறது.

இதில் அதிகமாக செய்வது,

கருப்பாக இருப்பவர்கள் - இவர்கள் கேவலமானவர்கள் இவர்களைப்பார்த்தாலே சிரிக்க வேண்டும், கருப்பு என்றால் சிரிக்க வேண்டும். ரஜினி கருப்பு என்பதை ரஜினையைப் பிடிக்காதவர்கள் சொல்வார்கள். அதே நேரம் ரஜினியைப் பிடித்தவர்களெல்லாம்  கருப்பு நிறத்தைப் பழிக்காதவர்களல்ல.

குண்டாக இருப்பவர்கள்

அடுத்தது சூர்யாவைப்பிடிக்காதவர்கள் சொல்வது குள்ளமாக இருக்கிறார் என்பது.

அஜீத்தைப் பிடிக்காதவர்களுக்கு உள்ள பிடி, நடனமாடத் தெரியாது, தொப்பை இருக்கிறது என்பது போல இருக்கும்,

விஜய டி, ராஜேந்தர், பவர் ஸ்டார் இவர்களையெல்லாம் குரங்கு, கழுதை படங்களுடன் ஒப்பிட்டு கிண்டல் செய்திருக்கிறார்கள்.

கனிமொழியையும் ராசாவையும் இணைத்து பேசி இன்பம் காண்பவர்கள்

நயன்தாரா, ரஞ்சிதா ஆகியோரெல்லாம் இவர்களுக்குக் கிடைத்த புளியங்கொம்புகள், பெண்களாக இருந்தும் விட்டால் போதும் பொங்கல் வைத்து விடுகிறார்கள்.

இவர்களின் அரிப்புக்குத் தோதாக அவ்வப்போது சிவகாசி ஜெயலட்சுமி, சஹானாஸ் என ஒரு தீனி கிடைத்து விடுகிறது.

இதில் தற்போது ஹினா ரப்பானி கர் நல்ல வேளை அவர் இந்தியாவில் இல்லை.

இந்தப் பன்னாடைகளையெல்லாம் என்ன சொல்லித் திருத்துவது. ஒரு குறிப்பிட்ட உருவம் இருப்பவர் தனக்கு வேண்டப்பட்டவர் என்றால் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை அதே நேரம் அவர் தனக்கு வேண்டப்படாதவராகவோ ஒரு  பொது வாழ்வில் இருப்பவர்களாகவோ இருந்து விட்டால் அவ்வளவுதான் தனது கழிசடைத்தனத்தையெல்லாம் காட்டி விடுவார்கள்.

இதையே ஒரு கருத்தாக வைத்துத்தான் வடிவேலு, கவுண்டமணி,விவேக், சந்தானம் ஆகியோரும் சிரிக்க வைக்கிறார்கள். அதனால் இதற்கும் படத்தில் இது போன்ற காட்சிகளை வைக்கும், புண்ணியவான்கள்தான் பதில் சொல்ல வேண்டும். கருப்பாக இருப்பது, குள்ளமாக இருப்பதையெல்லாம் நகைச்சுவையாக சித்தரித்து படமெடுப்பவர்கள், கவிதை, கதை, நிலைத்தகவல், பதிவு எழுதுகிறவர்களின் மனசாட்சியைப் பொறுத்தது.

இதையெல்லாம் செய்பவர்களுக்கு - உமக்கொரு நிலை வரும்வரை ஆடுங்கள்.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்