கறுப்பு ஜூலை - நிமலரூபனின் வடிவில் இன்னும் தொடரும் ஈழத்தின் சோகம்

நான் பிறந்ததிலிருந்தே இதுவரையிலும் எந்த ஒரு நல்ல செய்தியும் கேள்விப்பட வில்லை. போர் முடிந்த மூன்று வருடங்களிலோ ஒரே வகையான செய்திகளை மட்டுமே கேட்க இயலுகிறது.

தமிழ்மக்களுக்குத் தீர்வு வழங்கப்படும்.

இந்தியா வலியுறுத்தும்.

தமிழர் பகுதியிலிருந்து இராணுவம் திரும்பப் பெற மாட்டாது.

சிங்களர் குடியேற்றம்

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து விளக்கம் கோரி மக்கள் போராட்டம்

வெள்ளை வாகனத்தில் அடையாளம் தெரியாதவரால் கடத்தல்

இராணுவக் கட்டுப்பாடு

இந்தியாவிலிருந்து ஏதாவது ஒரு கெழடு இலங்கைக்குப் பயணம், தமிழ்மக்களுக்குத் தீர்வு வழங்க வலியுறுத்தல்

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா நலத்திட்ட உதவி

மேற்கண்ட செய்திகள்தானே திரும்பத் திரும்பக் காண முடிகிறது. போர்க்குற்றம் ஆ ஊ எனப் பூச்சாண்டி காட்டியவர்கள், ஆவணப்படம் எடுத்தவர்கள், ஐநாவில் முறையிட்டவர்கள் மகிந்தவை விருந்தினராக அழைக்கின்றனர்.

29 வருடங்களுக்கு முன்பு இந்த நாளில்தான் சிங்களப் பேரினவாதத்தின் கோரமுகத்தில் உச்சத்தை ஈழம் சந்தித்தது. போர் முடிந்து 3 வருடங்கள் கடந்த பின்னும் இன்னும் அவர்களது வாழ்வில் எந்த ஒரு வசந்தமும் வரவில்லை. சொல்லப்போனால் 29 வருடங்களுக்கு முன்பு அல்லது கலவரத்தின் பின் போர் தொடங்கிய பின்பு நடந்த கைதுகள் காட்டிக் கொடுப்புகள், சித்ரவதைகள், கொட்டடிக் கொலைகள் இன்னும் தொடருகின்றன. போர் மட்டும் இல்லை. சிங்களப் பேரினவாதம் இன்னும் வளர்ந்து தமது கோரப்பசிக்கு சிறுபான்மையினரை விழுங்கி வருகிறது.

எங்கும் இராணுவ ஆட்சியே நடக்கிறது. கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 650 பேர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் போயுள்ளனர். இதில் லலித், குகன் முக்கியமானவர்கள். சிங்கள இராணுவமே இதில் ஈடுபடுகிறது. ஆக்ரமிக்கப்பட்ட தமிழ் நிலங்களில் புதிது புதிதாக புத்தர் சிலைகளும், சிங்கள ராணுவமும் குடியேற்றப்படுகின்றனர். இஸ்லாமியரின் பள்ளிவாசல்கள் புத்த பிக்குகளின் தலைமையில் இடிக்கப்படுகின்றன.


தற்போது புலி என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட நிமலரூபன் என்ற இளைஞனின் கதை குட்டிமணி, ஜெகனின் கொலைகளை நினைவூட்டுகிறது. இந்த நிலையில் சிங்களர் தரப்பிலிருந்தும் சிலர் இனவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர் என்பது மட்டுமே நம்பிக்கை அளிக்கும் செய்தியாகும். 
இத்தனை பிரச்சனைகளை சிறுபான்மையினர் எதிர்கொண்டு வருகின்ற நிலையில் இந்தியா தமிழீழம் என்ற கோரிக்கையை, விடுதலைப் புலிகளின் பேரால் தடை செய்திருப்பது என்ன வகை நியாயம் என்பது நன்றாகவே புரிகிறது. இதற்குக் கருணாநிதியைச் சாடிப் பயனில்லை. 


Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்