கேலிச்சித்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேலிச்சித்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அடடே மதி மீண்டும் அசத்தல்


தினமணியின் கேலிச்சித்திர ஓவியர் அடடே மதி மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் இன்றைக்கு வெளியிட்டுள்ள முதல் பக்க கேலிச்சித்திரத்தைப் பாருங்கள். ஏதோ ஒரு காங்கிரஸ் காரன் பேசுவதைப் போன்று வரைந்துள்ளார். சும்மா எதற்கெடுத்தாலும் இந்துத்துவா இந்துத்துவா என்று கத்துகிறார்களாம். நக்கலடிக்கிறார் அடடே மதி. காங்கிரஸ் காரர்கள் மட்டுமா கத்துகிறார்கள், இடது சாரிகள் வலது சாரிகள் என எல்லா சாரிகளும்தானே கத்துகிறார்கள் புலம்புகிறார்கள். இந்த நக்கலின் மூலம் நடப்பது இந்துத்துவா ஆட்சி இல்லை என்று சமாளிக்கிறாராம்.


இவர் நேற்றைக்கு வரைந்த கேலிச்சித்திரத்தைப் பார்க்கலாம். இது தினமணியின் நடுப்பக்கத்தில் வந்தது. வழக்கமாக முதல் பக்கத்தில் வரும் கேலிச்சித்திரத்தில்தான் நீண்ட வசனம் இருக்கும். நடுப்பக்கத்தில் படமே ஒரு கருத்துச் சொல்வது போல் இருக்கும். இப்போது நடுப்பக்கத்தில் வரும் கேலிச்சித்திரத்திலும் ஒரு நீண்ட வசனத்தை புகுத்தியுள்ளார். என்ன செய்ய ? கேலிச்சித்திரத்திலேயே கருத்துச் சொல்லும் அளவிற்கு மதிக்கு மதி நுட்பம் போதவில்லை போலும். தின மாடு என்ற நாளிதழ் வருமளவிற்கு நாடே மாட்டைப் பற்றி விவாதிக்கிறதாம். இந்தப் படத்தில் மட்டும் ஒரு சராசரிக் குடிமகனைப் போல் அலுத்துக் கொள்கிறார். ஏன் உலகத்திலேயே மாட்டிறைச்சி உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கு இந்தியாவில் மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என்று ஏகத்துக்கும் ரகளை செய்து, கொலை செய்து அசிங்கப்பட்டு நிற்கும் RSS பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்கிறார். மாட்டுக்கறி விற்கும் பாஜக அரசியல்வாதியாலேயே மாட்டுக்கறி வைத்திருந்ததாகச் சொல்லி ஒருவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டு நாடே காறித்துப்பிய போதும், இரண்டு பேர் சண்டையை வேடிக்கை பார்க்கும் வழிப்போக்கனாக மாறி அசத்துகிறார்  அடடே மதி. எப்படிப் பேசுவார் அவருக்கு பிடித்த இயக்கத்தைப் பற்றி அவரே எப்படி விமர்சிப்பார் என்கிறீர்களா ? மறைமுகமான மாட்டுக்கறி எதிர்ப்பு, மறைமுகமான மோடி விமர்சன எதிர்ப்பு, மறைமுகமான இந்தித் திணிப்பு ஆதரவு என்று அனைத்தும் பாஜகவிற்கு மறைமுகமான ஆதரவு தரும் தேன்தடவிய விசக் கருத்துக்களையே கட்டுரைகளாக நடுப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறது தினமணி.
அடுத்தது அப்துல் கலாம் பற்றிப் பார்ப்போம். அப்துல் கலாம் மறைவின்போது அடடே மதி வெளியிட்ட கருத்து மிகவும் பிரபலமானது.  ஒரு கடையடைப்பு இல்ல, கல்வீச்சு இல்ல, சாலை மறியல் இல்ல அனைத்துத் தரப்பு மக்களும் இணைந்து அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தியிருந்ததை பெருமைப்படுத்திப் போட்டிருந்தார். எப்போதும் இல்லாதவகையில் தினமணியில் ஒரு நாள் அப்துல் கலாம் குறித்து ஒரு கட்டுரையும் எழுதியிருந்தார். அதே போல் அப்துல் கலாமின் பிறந்த நாளின் போதும் ஒரு சிறந்த கருத்து வெளியிட்டார். அதுவும் பெரும்பான்மையினரால் ஏற்குமளவிற்கு இருந்தது. அப்பேர்ப்பட்ட அப்துல் கலாமின் ரசிகரான பக்தரான அடடே மதி அப்துல் கலாமிற்கு இழைக்கப்பட்ட அவமானத்திற்குப் பொங்கியது இவ்வளவுதான். ஆயிரம் இருந்தாலும் அப்துல் கலாம் இல்லையா என்று நினைக்காதீர்கள். அப்துல் கலாமாகவே இருந்தாலும் பிறப்பால் அவர் முஸ்லிம் இல்லையா ? என்று கேட்காமல் கேட்கிறது பாஜக அரசு. அதற்குக் கோபப்பட வேண்டிய மதி, அந்த நிலையில் கூட பாஜகவின் மதவெறியைப் பற்றிப் பேசாமல் ஜாதிக் கட்சித் தலைவர் என்று ரிவர்ஸ்கியர் போடுகிறார். இதே காங்கிரஸ் செய்திருந்தால் பேயாட்டம் போட்டிருப்பார். ஸ்டாலின் குறித்த மீம்ஸ் வரை சமூக நிகழ்வுகளின் அப்டேட் ஆக இருக்கும் அடடே மதி ராகுல், கருணாநிதி, கெஜ்ரிவால் போன்ற பாஜக அல்லாத தலைவர்கள், கட்சிகளை பெயர் சொல்லியே நக்கலடிப்பார். ஆனால் பாஜகவை மட்டும் பெயரையே சொல்ல மாட்டார். மோடியின் பெயரை சொல்லி கேலிச் சித்திரம் வரைந்தாலும் மக்கள் மோடியைப் பற்றிப் பெருமையாகப் பேசுவதைப் போலவே வரைவார். நாடே மோடியை மீம்ஸ்களில் வெளிநாட்டுப் பிரதமர் என்று கிண்டலடிப்பதையெல்லாம் அவர் அறியாமலா இருப்பார்.

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையை மறைக்கவே, அப்துல் கலாமை புகழ்ந்தார்கள், மோடியை அவருடன் ஒட்ட வைத்து இணையதளங்களில் வருங்காலா பிரதமரும், வருங்கால ஜனாதிபதியும் என்று ஆரம்பித்தார்கள். அப்துல் கலாமைப் பெருமைப்படுத்துவதாகச் சொல்லி ஔரங்கசீப் சாலைக்கு அப்துல் கலாம் பெயரை வைத்தார்கள். அப்துல் கலாம் வேலை முடிந்ததும் கலாம் வசித்த வீட்டை, ஒரு சுற்றுலாத் துறை அமைச்சருக்கு ஒதுக்கிவிட்டு, அப்துல் கலாம் பயன்படுத்திய பொருட்களை விமானத்தின் மூலமாக அப்துல் கலாமின் சகோதரரிடம் அனுப்பி வைத்து விட்டார்கள். அந்த சுற்றுலாத்துறை அமைச்சர் யார் தெரியுமா ? மகேஸ் சர்மா, அனைவரும் இந்தி படிக்க வேண்டும் என்று கூப்பாடு போட்டவர், அப்துல் கலாம் முஸ்லிமாக இருந்தாலும் "தேசபக்தர்" என்று வெறியைக் கக்கியவர். முஸ்லிமாக இருந்தாலும் தேசபக்தனாக இருப்பவர் என்பது எவ்வளவு பெருமை இல்லையா ?  எத்தனை தேசவிரோத செயல்களைச் செய்தாலும் இந்துவாக இருந்தாலே போதும், தேசபக்தன்தான். இப்பேர்ப்பட்ட ஆளுக்குத்தான் அப்துல் கலாமின் இல்லம். இவ்வளவுதான் இவர்களின் இலட்சணம் எல்லாம். பாஜகவின் தீவிர ஆதரவு நாளிதழான தினமணி இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் முழிக்கிறது. 

மகேஸ் ஷர்மா
என்ன செய்வது தினமணி ஆசிரியர் வைத்தியநாதனும் சரி அடடே மதியும் சரி. காந்தியவாதிகளாக இருக்கிறார்கள், ஆனால் கோட்ஸே கட்சியைத்தான் ஆதரிக்கிறார்கள். பிறகெங்கே இருக்கும் நடுநிலையும் நேர்கொண்ட பார்வையும்.

Download As PDF
Bookmark and Share

Post Comment

தினமணி அடடே மதி - கேலிச்சித்திரமே கேலியாக இருக்கிறதே அடடே எரிச்சல் குறி !

நன்றி -தினமணி(23-042015)
இது இரு நாட்களுக்கு முந்தைய (23-042015) தினமணியின் கேலிச்சித்திரத்தில் அடடே மதி வரைந்தது. ஒரு கேலிச்சித்திரத்தில் இவ்வளவு நீளமான வசனத்தை இப்போதுதான் பார்க்கிறேன். இதில் இவர் என்ன சொல்ல வருகிறார் என்று யாராவது கூற முடியுமா ? இல்லை இதில் நேர்மை இருக்கிறதா ?

இந்த அடடே மதி எத்தகைய நேர்மையாளர் என்று தெரியுமா ? வாரத்தில் மூன்று நாட்கள் கருணாநிதியை நக்கலடிப்பார். இரண்டு நாட்கள் ராகுல் காந்தியை நக்கலடிப்பார். மீதி இரண்டு நாட்களும் வேறு ஏதாவது பொதுவான விடயங்கள் குறித்தும் நக்கலடிப்பார். இப்போது இவருக்கு இன்னொருவர் கிட்டியிருக்கிறார் அவர் அரவிந்த் கேஜ்ரிவால். இன்னும் புரியவில்லையா ? ஏன் அவர்களை விமர்சிக்க உரிமையில்லையா  என்று கேட்கிறீர்களா ? நிச்சயம் இருக்கிறது. ஆனால் இந்த விமர்சன அளவுகோலை மற்ற கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் வைக்காத இந்த தினமணி ஒரு நடுநிலை நாளிதழ் என்ற போர்வையில் வெளிவந்துகொண்டிருந்தாலும், இது மறைமுகமாக அதிமுக - பாஜகவுக்கு ஜால்ரா அடிக்கும். இதுவரை "மக்களின் முதல்வர்" குறித்தோ நரேந்திர மோடி குறித்தோ ஒரு நக்கலும் அடடே மதியில் வராது. வந்தால் கூட போனால் போகிறதென்று ஏனோதானோவென்றுதான் வரும். இல்லையென்றால் மோடியைப் பாராட்டி மட்டும் வரும்.

நம் நாட்டில் அதிகாரத்திலுள்ள கட்சிகளல்லாமல் எதிர்கட்சிகளைக் குறித்து மட்டும் விமர்சனம் செய்து வாழ்க்கையை ஓட்டும் ஆட்கள் இவர்கள். அதே காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் ஆளும் கட்சியாக இருந்தால் "நேர்மையாக" விமர்சிப்பார்கள். ஆளும் கட்சியின் நிர்வாகச் சீரழிவு குறித்துக் கூட அடக்கியே வாசிக்கிறார்கள். இவர்கள் ஊடகம் நடுநிலை என்று சொல்வதற்குப் பதிலாக அக்கட்சியின் ஊதுகுழல் என்று வைத்துக் கொள்ளலாமே. எதற்கு இந்த உத்தம வேடம். உண்மை, விடுதலை எல்லாம் திராவிடர் கழகம் வெளியிடும் நாளிதழ்கள் என்று தெரியும், நமது எம்ஜிஆர், முரசொலி ஆகியவை முறையே அதிமுக, திமுக - வின் வெளியீடுகள் என்றும் எல்லார்க்கும் தெரியும். அதனால்தான் அவைகளைக் கட்சிக்காரர்கள் சிலர் தவிர யாரும் வாங்குவதில்லை. ஆனால் தினமலர், தினமணி போன்றவையெல்லாம் நடுநிலை என்ற பெயரில் வந்து குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் ஜால்ரா தட்டுவதற்குப் பெயர் என்ன ? தினமலராவது அவ்வப்போது விமர்சனம் செய்கிறது. தினமணியோ மூச்சே விடுவதில்லை.

ஓ காதல் கண்மணி படத்திற்கு ஓகே வீரமணி என்று பெயர் வைத்திருக்கலாம் என்று நக்கலடிக்கிறார். இவர் படத்தை எடுத்த மணி ரத்னம் மீது வெறுப்பைக் கக்காமல் வீரமணியை வாருகிறார். இதில் இவர் சொல்வதிலாவது உண்மை இருக்கிறதா ? வீரமணி சேர்ந்து வாழ்தலையா பரப்பி வருகிறார். அதை(Living together) அவர் ஏற்றுக் கொண்டாலும் சுயமரியாதைத் திருமணம் என்று திருமணத்தைத்தான் வேறு பாணியில் செய்து வைக்கிறது திராவிடர் கழகம். என்ன அதில் தாலிதான் இல்லையே தவிர திருமணம் என்றுதானே சொல்கிறார்கள். இதே தினமணி இதழில் ஞாயிற்றுக் கிழமைதோறும் தமிழ்மணி என்று ஒரு பக்கம் ஒதுக்கி தமிழ்மொழி வளர்ச்சி பற்றியும் சங்க இலக்கியம் பற்றியும் எழுதி வருகிறார்கள். அதில் சங்க இலக்கியத்தில் திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் தலைவன் தலைவி காதல், பிரிவாற்றாமை, உடன்போக்கு (இன்றைய மொழியில் சொன்னால் ஓடிப் போவது) பற்றிய பாடல்களையெல்லாம் கூட இலக்கியம் என்று வெளியிடுகிறார்கள். இதை வைத்து நான் சொல்லலாமல்லவா? தினமணி ஆசிரியர் சேர்ந்து திருமணம் இல்லாமல் வாழும் (லிவிங் டுகெதர்) முறையை தினமணி நாளிதழ் பரப்புகிறது என்று.

அதற்கும் மேலாக இந்தக் கேலிச்சித்திரமே ஒரு மொக்கை. அதான் திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழ்தல் என்றாலே எல்லார்க்கும் புரியுமே. அப்புறமெதற்கு இச் கொடுப்பது, தாம்பத்ய உறவு கொள்வது, என்றெல்லாம் நீட்டி முழக்குவானேன்.  ஏன் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் கூட தாலி கட்டாமல் தானே திருமணம் செய்கிறார்கள். உங்களுக்கு விமர்சிக்க வரவில்லை என்றால், காரணம் இல்லையென்றால் விட்டு விடுங்களேன் அடடே மதி ! மணிரத்னத்தை விமர்சனம் செய்ய மனமில்லாமல் வீரமணியை ஓட்டிக் கொண்டிருக்கிறார். வீரமணி உடைத்தால் பொன்சட்டி , மணிரத்னம் உடைத்தால் மண்சட்டியோ ?!!
Download As PDF
Bookmark and Share

Post Comment

ஜால்ரா மணி கலாச்சிட்டாராம்

தினமணிக்கு அம்மாவின் புகழ் பாட முடியவில்லை. அதனால் இந்தத் தீர்ப்பு தவறானது என்று ஜாடை மாடையாகச் சொல்லும் கட்டுரைகள் நடுப்பக்கத்தில் வருகின்றன. அம்மா சிறையில் வாடுகிறார். அதனால் துன்பத்தில் வாடும் தினமணி ஆசிரியர், இரண்டாம் பக்கத்தில் அதிமுக காரர்கள் மொட்டயடிப்பது, காவடி எடுப்பது, காது குத்துவது, சிறப்பு யாகம் நடத்துவது, பட்டினிப் போராட்டம் நடத்துவது, நடைப் பயணம் போவது, வேலை நிறுத்தம் செய்வது என்று பலவாரியானா போராட்டங்கள் மூலம் தமிழகத்தையே ஒரு புரட்சிகரமான சூழலில் வைத்திருக்கிறார்.

அவருக்கு இருக்கும் மிகப்பெரிய பலம், நிம்மதி என்னவெனில் நடுவணரசாக வீற்றிருக்கும் பாஜகதான். அதனால் பிரதமர் என்ன செய்தாலும் அதை ஏற்றிப் போற்றுவார்.

இன்றைக்கு தினமணியில் வந்த அடடே மதி கேலிச்சித்திரத்தைப் பாருங்கள். முன்னாள் அரசை கலாச்சிட்டாராம். கலாய்ப்பதற்கு ஒரு தகுதி வேண்டாமா தினமணி ? தற்போதைய சூழலில் கருணாநிதியை நொட்டுவதற்கு ஒன்றும் கிடைக்க வில்லை போலும் அதனால் மன்மோகனைக் கலாய்க்கிறது தினமும் ஜால்ரா அடிக்கும் மணி.


தினமணி ஆசிரியர் வைத்திய நாதன் அகில உலக புரட்சியான "தூய்மை இந்தியா" திட்டத்தைப் போற்றியும் ஏற்றியும் கடந்த வாரத்தில் ஒரு தலையங்கம் எழுதியுனார். கடைசியில் அவரது விதியின்படி (காந்தி அல்லது பாரதியார் பற்றி) ஒரு செய்தியைச் சொல்லி) உச் கொட்டியிருக்கிறார். விளம்பர மன்னனான பாரதப் பிரதமர் என்னவொரு திட்டமோ, செய்தியோ , அறிவிப்போ சொன்னால் அதை ஆமோதித்து நைசாக மிகப்பெரும் சிந்தனை போல் சித்தரித்து அதை ஏற்றி விடுவதை செவ்வனே செய்வார்.

ஒன்று தலையங்கத்தில் மிகப்பெரும் சிந்தனை செயல் வடிவம் பெற்றது எதிர்காலத்தில் பட்டையக் கிளப்பப் போகும் திட்டம் என்று அடக்கமான மொழியில் எழுதுவார். இல்லையெனில் "அடடே மதி" யை விட்டு கேலிச்சித்திரத்தின் மூலம் மறைமுகமாகப் புகழ்வார்.

எடுத்துக்காட்டாக, சமஸ்கிருத, ஹிந்தித் திணிப்பு வெறி பிடித்த பாஜக அரசு ஆசிரியர் தினத்தை "குரு உத்சவ்" என்று சம்ஸ்கிருதப் பெயரில்தான் கொண்டாட வேண்டும் என அறிவித்தது. அதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தது. ஏற்கெனவே இளைஞர்களின் முதன்மை ஆளுமையாக பிம்பமேற்றப்பட்டிருக்கும் பிரதமருக்கு அப்துல் கலாம் (குழந்தைகளின் நாயகன்) பிம்பத்தை உருவாக்கும் முகமாக பள்ளிக் குழந்தைகள் விடுமுறை நாளன்று மாலை வரை இருத்தி வைக்கப்பட்டு பாரதப் பிரதமர் ஹிந்தியில் அறுத்துத் தள்ளியதை செவியில் சீழ் வடியக் கேட்டு வாடினர். ஆங்கிலத்தில் கேள்வி கேட்டாலும் ஹிந்தியிலேயே "பாத் கர்த்தே ஹோ" செய்தார் பிரதமர்.

அப்பேர்ப்பட்ட நன்னாளன்று அடடே மதி வெளியிட்டிருந்த சித்திரம் - ஒரு மாணவன் ஆசிரியரிடம் சொல்கிறான். "ஆசிரியர் தினம், டீச்சர்ஸ் டே, குரு உத்சவ் வாழ்த்துக்கள் சார்." இதில் என்ன பிரச்சனையிருக்கிறது என்று நினைத்தால் உங்களுக்குப் புரியவில்லை என்று பொருள். தினமணி ஜால்ரா அடிக்கும் அரசு ஒரு சர்ச்சைக்குரிய அறிவிப்பை விடுகிறது. அதைக் கண்டிக்காமல் எதிர்க்காமல், குரு உத்சவ் என்பதையும் சேர்த்து ஒரு மாணவன் சொல்வதாக இருந்தது அந்தச் சித்திரம். அரசு ஹிந்தி, சமஸ்கிருதத்தைத் திணித்தால், அதை எதிர்க்காமல் அதைப் பரப்பி சேவை செய்கிறது தினமணி. பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக "ஆசிரியர் நாள்"  என்று தமிழில் முதலில் சொல்லி, கடைசியில் குரு உத்சவ் - ஐ வாலை ஒட்டி விடுகிறது. இனி அடுத்த வருடத்திலிருந்து குரு உத்சவ் இந்தியாவில் மூவாயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்படும் கலாச்சாரம் என்றெல்லாம் கட்டுக் கதைகள் அவிழ்த்து விடப்படும் பாருங்கள்.

போன வாரமே எழுத நினைத்து முடியாமல் போனது இது.

இந்தியா ஏன் சுத்தமில்லாமல் இருக்கிறது என்றால் மாலையில் வீட்டைப் பெருக்கி கோலமிட்டு விளக்கேற்றும் பண்பாடு மறைந்து விட்டது, மேல் நாடுகளைப் போல் இந்தியாவில் குப்பை அது சேர வேண்டிய இடத்தில் சரியாகச் சேர்வதில்லை. வீடுகளில் கூட கழிவறைகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. எல்லாவற்றுக்கும் மனிதர்களே காரணம், நவீன வாழ்வில் பெருகிவிட்ட ஞெகிழி உட்பட பல குப்பைகள். எல்லாம் சரிதான் பாராட்டக் கூடியதுதான்.

புறத்தூய்மை நீரான் அமையும் என்கிறது வள்ளுவம். அதாவது புறத்தூய்மைக்கு நீங்கள்தான் அடிப்படை என்று தலையங்கம் முடிகிறது. நாமனைவரும் பொறுப்புதான் என்கிறார். எனவே நாமனைவரும் பொறுப்பு எனில் அதில் அன்னார் வைத்தியநாதரும் அடக்கம்தானன்றோ !

ஆகவே இவருக்கு மனசாட்சியிருந்தால், விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில், மக்களின் கடவுள் நம்பிக்கைக்குள் புகுந்து மதவெறியாட்டம் போடும் பயங்கரவாத இயக்கங்களுக்கு இலவச விளம்பரம் தருவதை நிறுத்துவாரா ?

கண்ட இடங்களிலெல்லாம் சிலைகளை வைத்து சுற்றுச் சூழல் மாசுக்களை அதிகப்படுத்தும் விநாயகன் சிலைகளை நீர் நிலைகளில் கரைத்து நீரை நாசப்படுத்துவதை எதிர்ப்பாரா ?

இல்லை காட்டுக்கூச்சல் போட்டுக் கொண்டு போவதை, வன்முறையைத் தூண்டுவதை, தெருவெங்கும் குப்பை போடுவதை எதிர்ப்பாரா ?

உத்தமரின் "தூய்மை இந்தியா" திட்டத்தில் முதலில் இணைக்க வேண்டியது இந்தத் திட்டத்தை அல்லவா !

இல்லை இந்தியாவையே குப்பை மேடாக்கும் கூறு கெட்ட தீபாவளி என்ற பண்டிகையின் பேரில் பட்டாசு வெடிப்பதை எதிர்ப்பாரா ?

செய்யவே மாட்டார்.  இந்து முண்ணனியும், இந்து மக்கள் கட்சியும், பாரதிய ஜனதாக் கட்சியும் தெருவுக்குத் தெரு, ஊருக்கு ஊர் விநாயகர் சிலை பிரதிஷ்டை என்று விளம்பரம் கொடுப்பார்.

இன உணர்வு என்றால் சும்மாவா ??

தீபாவளி விளம்பரங்கள், பட்டாசு கடைகள், எதையும் எதிர்க்க மாட்டார். ஆனால் இந்த தீபாவளியின் புது வரவான சீனப் பட்டாசு தீமைகள் பற்றி, இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று கட்டுரை வெளியிடுவார். அதனால் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்துவிட்டதால் மட்டும் தினமணி இனிமேல் தனது குப்பைக் கட்டுரைகள் வெளியிடாது என்று நம்ப இடமில்லை.

Download As PDF
Bookmark and Share

Post Comment