ஆண்டாளை இழிவு செய்த எச்.ராசா, விஜயேந்திர சங்கராச்சாரி !

 எச்.ராசா அவர்களின் தந்தையாரின் உழைப்பில் வெளியான செங்கிருதம்-தமிழ் அகராதி ஒன்றை வெளியிடுவதற்காக எச்.ராசா விழாவை ஏற்பாடு செய்திருந்தார். அதில் கிறிஸ்தவரான சாலமன் பாப்பையாவையும் மதச்சார்பின்மை போற்றியான ராசா அவர்கள் வரவேற்றிருந்தார். இந்த விழாவை சிறப்பிப்பதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களும் வந்திருந்தார். ஏனென்றால் சமஸ்கிருதத்தைப் புகழ வேண்டுமே. இந்த விழா நடந்த போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பாரதமாதாவின் புத்திரர்களாக அனைவரும் எழுந்து நின்றனர். உயர்வான மேடையில் அமர்ந்திருந்த சங்கராச்சாரியும் எழுந்து நின்றார். பின்பு தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதற்கு அந்த மேன்மகனார் எழுந்து நிற்கவில்லை.  

தமிழை தனது ஆன்மாவிலிருந்து வெறுக்கும் ஒருவரை இம்மேடையில் ஏற்றியதன் மூலமாக அவருக்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தி விட்டார் எச். ராசா. தமிழினத் தலைவர் எச். ராசா அவர்களும் இதைக் கண்டுகொள்ளவோ கண்டிக்கவோ இல்லை. அப்படிச் செய்திருந்தாலும் அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. தமிழைத் தனது பெயரில் தாங்கிக் கொண்டிருக்கும் தமிழிசை அவர்கள் இதை எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறார். தமிழை வளர்த்த ஆண்டாளுக்கு இப்படி ஓர் இன்னல் நேருமென்பதை அவர் எப்படி எதிர்கொள்வார் ?

இதற்கு முன்பும் கூட ராசா ஆண்டாளை வேசி என்று கூறினார். நம்ப மாட்டீர்கள் என்று தெரியும். அது எப்படி?  வைரமுத்து ஆண்டாளை தனது தாயாகக் கருதுவதாகக் கூறினார். ராசாவோ வைரமுத்துவை வேசிமகன் என்று திட்டினார். என்ன ஒரு சின்ன சிக்கல் எச். ராசா முதலில் வைரமுத்துவை வேசிமகன் என்று கூறிய பின்னர்தான் வைரமுத்து ஆண்டாள் எனது தாய் என்று கூறினார். முன்ன பின்ன இருந்தாலும் அன்னை ஸ்ரீ ஆண்டாளை இழிவு படுத்திய எச். ராசாவை மன்னிக்கலாமா பக்தர்களே ! இப்பக் கணக்கு நேராயிட்டுது பார்த்தேளா ? 


பிரச்சனை என்ன என்பது இங்கு முக்கியமில்லை. ஆண்டாளை அவமானப்படுத்திய எச். ராசா அவர்களும், விஜயேந்திர சங்கராச்சாரி அவர்களும் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால் அது எங்கள் உணர்வைப் புண்படுத்தியதாகும். என்ன ஏது என்று விளக்கம் கேட்காதீர்கள். அது எங்கள் உணர்வு சார்ந்தது. ஆம் ஆண்டாளை இழிவு படுத்தி விட்டார் எச்.ராசா. மார்கழிப்புரட்சியின் தலைவரான அழகுத் தமிழ் திருவாய் மொழியாளரான ராசா அவர்கள் ஆண்டாளை அவமானப்படுத்தியிருக்கிறார். ஆண்டாள் அளவுக்கு தனக்கு தமிழ் வரவில்லை என்பதால் அவமானப்படுத்தியிருக்கலாம் என்று ஒரு வாரம் முன்பிருந்து ஆண்டாளைத் தாயாக வரித்துக் கொண்ட தமிழர்கள் கருதுகிறோம். 


ஆண்டாளை எங்கே இழிவு படுத்தினார் என்று கேட்கக் கூடாது. ஆண்டாள் கோடிக்கணக்கான தமிழர்களின் தாய். எனவே தமிழர்களின் தாய்=தமிழ்த்தாய் என்று கொள்வோம். ஆக தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்த்தாய்க்கு மட்டுமல்ல, தமிழ்த்தாயாகிய ஆண்டாளுக்கும் சேர்த்துத்தான் பாடப்படுகிறது. இது எங்களது நம்பிக்கை. அதில் தலையிட எவனுக்கும் உரிமையோ அருகதையோ இல்லை.  இந்த விளக்கத்தைல் சமாதானமாகதவர்களுக்காக இன்னொரு விளக்கத்தையும் கொடுக்கிறேன். சார்ந்தோர்கள் ஏற்றுக் கொள்ள முயற்சி செய்யவும். ஆண்டாள் வளர்த்ததால்தான் தமிழ் வளர்ந்தது. அதனால்தான் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பெற்றது.  எனவே தமிழ்த்தாய் வாழ்த்தை மதிக்காதது ஆண்டாளை அவமதிப்பது போலாகும்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது எழுந்து நிற்காத சங்கராச்சாரி 100 கோடி இந்துக்களையும் இழிவு செய்துவிட்டார். எப்படி என்று கேட்பவர்களுக்கு, ஆண்டாள் தமிழர்களின் தாய், தமிழர்கள் இந்துக்கள், எனவே உலகில் உள்ள இந்துக்கள் அனைவரும் புண்பட்டுவிட்டனர். இங்கே இந்துக்களுக்காக கேள்வி கேட்க இந்துக்களே உள்ளனர், புலுத்தறிவுப் பன்னாடைகள், கம்மனாட்டிக் கம்மூனிசிட்டுகள் உட்பட எச்சக்களைகள் அந்நிய மதத்துக்கு மட்டுமே சொம்பு தூக்குவர். 

இந்த நம்பிக்கையைக் கேள்வி கேட்கும் பஹூத்தறிவுப் பன்னாடைகள் மற்ற மொழிக்காரர்களிடம் கேட்க முடியுமா ? கேட்டால் வாயிலியே வெட்டுவார்கள் என்பதால்தானே இந்துத் தமிழர்களிடம் மட்டும் இந்த வீரம் ?. இப்போதெல்லாம் அது நடக்காது தமிழ் இந்துக்கள் விழித்துக் கொண்டனர்.  நாம் இந்துக்களாப் போராடினால் மதவெறி என்று கூவுவார்கள் திருட்டு திராவிடக் கும்பல். எனவே நாம் தமிழ் + ஆண்டாள் என்று போராடினோம். தற்போது அதையே தொடர்வோம். இப்போது பாருங்கள் தமிழ் இனவெறி என்று அவதூறு செய்வார்கள் கம்மினாட்டி கம்யூனிஸ்ட்டுகள். அதெல்லாம் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. 

எனவே தமிழன்னை ஆண்டாளைப் போற்றும் பாடலுக்கு நிற்காமல் இழிவு செய்ய விஜயேந்திரனுக்கு எப்படித் துணிவு வந்தது, இந்த விழாவை ஏற்பாடு செய்யக் காரணமான எச்.ராசா கொடுத்த உற்சாகமாகத்தான் இருக்கும். எச்.ராசாவின் தமிழ்ப்பற்றும், தமிழகப்பற்றும், இனவுணர்வும், தமிழ்மொழியுணர்வும் எங்களுக்குத் தெரியும், இருந்தாலும் அவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும்.  

புரட்சி நடக்கும்போது புரட்சியில் ஈடுபட்டவர்களே புரட்சிக்குத் துரோகமிழைத்த நிகழ்வுகள் வரலாற்றில் நிறைய உண்டு. அவ்வகையில் மார்கழிப் புரட்சி நாயகனான எச். ராசா அவர்களே அப்புரட்சியைக் காட்டிக் கொடுத்துள்ளார். எனவே மார்கழிப் புரட்சியாளர்கள் தங்களது களத்தை மாற்றிக் கொண்டு புரட்சியைத் தொடருமாரு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  ஆண்டாளை இழிவு படுத்தியவர்களைக் கண்டிக்கப் போன அவர், தானும் தமிழ்த்தாயை அவமதித்த செயலுக்கு மூல காரணாமாகிவிட்டார். என்னே ஆண்டாளின் திருவிளையாடல் ! தெய்வம் நின்று கொல்லும் என்பது உண்மைதானன்றோ !

 மன்னிப்புக் கேட்கும் முறை: 

நாம் எதிரிகளை மதிப்பவர்கள். எனவே எதிரிகளின் மொழிகளிலேயே மன்னிப்புக் கேட்க வைப்போம். தங்களின் பெருமதிப்புக்குரிய சொறியான் ஈவே ராம்சாமி நாயக்கனின் சிலை முன்பு நின்று கருப்புச் சட்டை அணிந்து கொள்ள வேண்டும். பின்னர் வாயைத் திறக்காமல் 5 முறை, 

 கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லை 
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்;  
கடவுளை பரப்பியவன் அயோக்கியன் 
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி 

 என்று சொல்லிக் கொண்டே மன்னிப்புக் கேட்க வேண்டும். செய்வீர்களா ? செய்வீர்களா ?. மன்னிப்புக் கேட்க வேண்டிய கடைசித் தேதி மன்னிப்பு கேட்ட பின்னர் அறிவிக்கப்படும். 

இப்போது தர்மப்போராளிகளுக்கு ஒரு வித கலக்கமும், ஐயமும் நேரலாம். நம்ம மதம் ஆப்ரகாமிய மதங்களைப் போல் மற்றவரை வெறுக்கச் சொல்லவில்லை நாத்தீக நாதாரிகளையும் ஏற்றுக் கொள்வதுதானே நம் பண்பாடு. வாழு வாழவிடு என்பதுதானே நமது கொள்கை. இப்படிப் போராட்டம் பண்ணி வெறுப்பதெல்லாம் நமக்கு ஒத்து வராதே என்று தோணலாம். ஆனால் திருவரங்கப் பெருமானின் ஆலயத்தை பீரங்கி கொண்டு பிளக்க வேண்டும் என்ற சொறியான் ராமசாமியை மன்னிக்காத நாம், இலங்கையில் புதிய ஆலயங்களைக் கட்ட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக சில கோயில்களை ஆகம முறையில் ராமாயண காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்ட விமானங்களின் மூலம் குண்டு போட்டுத் தகர்த்த நமது ஸ்ரீமான் ராஜபக்ச அவர்களுக்கு நம் கோயிலில் வைத்து பூரணகும்ப மரியாதையும் செலுத்தி விட்டோம். நாம் நமக்கு நன்மை செய்தவர்களை போற்றுவதிலும் சிறந்தவர்கள். எதிரிகளை அழிப்பதிலும் சிறந்தவர்களே!
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

1 கருத்து:

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்