அதிர வைத்த ஆவணப்படம் !! - பரப்புரை (Propaganda )

சமீபத்தில் ஒரு ஆவணப்படத்தைக் காண நேர்ந்தது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த ஆவணப்படம் வட கொரியாவைச் சேர்ந்தது. வடகொரியா என்பது இணையத்திலேயே கிட்டத்தட்ட எந்தவொரு தொடர்பும் வைத்துக் கொள்ளாத நாடாகவே இருக்கிறது. எந்த செய்தியும் அங்கிருந்து அடிக்கடி கேள்விப்பட முடிவதில்லை. அணு குண்டு ஆய்வு, அல்லது ஏவுகணை ஆய்வு அது குறித்த வெற்றி தோல்வி என்பதைத் தவிர வேறெந்த செய்திகளும் கிடைத்த பாடில்லை. அதன் அதிபர் இறந்த செய்தியையே உலகிற்கு இரண்டு நாள் கழிந்துதான் அறிவித்தார்கள். அவ்வளவு ஊடக் கெடுபிடிகள் நிறைந்தது.

அது இரும்புத்திரை நாடு, அடக்குமுறை உச்சத்தில் இருக்கும் நாடு, இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு, பசி பட்டினி நிறைந்த நாடு என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். சுருக்கமாக அது ஒரு பொதுவுடமை நாடு என்று ஊடகங்கள் வாயிலாக அறியப் பெற்றோம்.

அந்த நாட்டைக் குறித்து மேற்கண்ட செய்திகளை உண்மையாக்கும் ஆவணப்படங்கள் இருக்கின்றன. ஆனால் அந்நாடே ஒரு ஆவணப்படத்தைத் தயாரித்திருக்கிறது. அது மேற்கத்திய நாடுகளின் கொள்கைகளைப் பற்றி விளக்குகிறது. இதை விடாமல் பார்த்துவிட வேண்டும் என்று தோன்றியது முதல் ஒரு சில நிமிடங்களிலேயே. அது மிகவும் தீர்க்கமாக மேற்கத்திய நாடுகள் செய்யும் அட்டூழியங்களைப் புட்டுப் புட்டு வைக்கிறது.

வட கொரியாவின் ஆவணப்படம் என்பதற்காக அது கம்யூனிசப் பெருமைகளைச் சொல்லவில்லை. அதன் அதிபரை அங்கங்கே புகழ்ந்து கொண்டிருக்கவில்லை. ஆனால் 2 முறை அவைகளும் வருகின்றன. அது அவ்வளவு மிகைப்படுத்தப்பட்டதாகவும் இருக்கவில்லை உறுத்தவில்லை. நம்மை மட்டுமே அமெரிக்காவால் அடக்க முடியவில்லை என்று வட கொரியாவையும் அதிபரையும் மக்களையும் புகழ்கிறது. இறக்கும் வரை இவர்களை எதிர்த்துப் போரிடுவோம் என்று சூளுரைக்கிறது. இங்கு கேட்கும் போலிதேசபக்திக் கூச்சலை விட இது எவ்வளவோ மேலானது.

விளம்பரங்கள் ஊடகங்கள் திரைப்படங்கள் மூலம் அமெரிக்கர்களை எப்படி அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று காட்டிய விதம் அருமை. மேலும் இது வரலாற்றுச் செய்திகளை போகிற போக்கில் தொடர்பு படுத்தி பல விசயங்களைப் புரிய வைக்கிறது. தற்போதைய வரலாறு முதல் கொலம்பஸ் வரை. பிரிட்டனும் அமெரிக்காவும் ஐரோப்பியர்களும் இணைந்து புரிந்த புரியும் வரலாற்றுச் கொடுமைகளைப் புரியவைக்கிறது.

எடுத்துக்காட்டாக,

தன்னை வரவேற்ற மக்களைக் கொலம்பஸ் கொன்று குவித்தது

அமெரிக்காவின் பெர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்கப்போவதை அறிந்திருந்தும் அதை அனுமதித்தது

ஹிட்லருடனான ராக்பெல்லர், ஸ்காட்லாந்து வங்கி ஆகியோரின் அறக்கட்டளை தொடர்பு

அமெரிக்க உளவு நிறுவனமான் CIA நாஸி விஞ்ஞானிகளை வைத்து நடத்திய ஆய்வுகள்

பாலஸ்தீனம் திருடப்பட்ட வரலாறு

9/11 தாக்குதலின் போது எந்த தாக்குதலும் இல்லாமலே விழும் ஒரு கட்டிடம்

ஜப்பானின் மீதான அணுகுண்டுத் தாக்குதல்

கொரியா, வியட்நாம், ஈராக், ஆப்கன் உட்பட 37 நாடுகளின் மீதான நேரடியான மறைமுகமான தாக்குதல்

மக்கள் தொகைக் கட்டுப்படுத்தும் திட்டம்

மேலும் சிறப்பம்சமாக நான் காண்பது மதத்தை பயன்படுத்தி மக்களை மயக்கி வைத்திருப்பது என்பதையும் காட்டியது.

பிரபலங்கள் எனப்படும் செலிபிரிட்டிகளை உருவாக்கி மாயையை ஏற்படுத்துதல் செலிபிரிட்டிகள் என்பவர்கள் எந்த ஒரு திறமையுமில்லாதவர்கள் என்று உரைக்கிறது.

உலகெங்கும் உள்ள அமெரிக்கா இராணுவத் தளங்கள் முக்கியமாக தென்கொரியாவில் இருக்கின்றவை

எனப் பல செய்திகளைச் சொல்கிறது.

மொத்தமாக இப்படம் 1% பேர் எப்படி மற்ற 99% பேர்களை மயக்கி அவர்களை ஆள்கிறார்கள் என்று விளக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளது. இதை இன்னும் யூட்யூப்பில் விட்டு வைத்திருப்பது இன்னொரு ஆச்சரியம்

பார்க்கும் சில படங்களையும் இது போன்ற கருத்துச் செறிவுடைய படங்களைப் பார்ப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. எச்சரிக்கை மனதைப் பாதிக்கும் காட்சிகளைக் கொண்டது. இளகிய மனம் படைத்தோர் பார்க்க வேண்டாம்.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்