உலக பயங்கரவாத நாள் ஆகஸ்ட் - 6, 1945

நேற்றைக்கு உலகெல்லாம் நண்பர்கள் நாள் அசத்தலாக கொண்டாடப்பட்டது. ஆனால் இது அரசியல் ரீதியில் இன்றியமையாத நாளாகும். ஏனெனில் இன்றைக்கு சரியாக 67 வருடங்கள் முன்பு இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜப்பானிய நகரமான ஹிரோஷிமாவில் அணு குண்டு வீசப்பட்டது. 


மனித குலத்திற்கே எதிரான இந்த கொடிய பயங்கரவாதச் செயலை உலகின் கவனத்திலிருந்து படிப்படியாக மறைக்கும் பொருட்டே ஒவ்வொரு வருடமும் உலக அளவில் நண்பர்கள் நான் கொட்டி முழக்கப்பட்டு வருகின்றது.

நான் இன்னொரு தகவலையும் எங்கோ வாசித்தேன். அது உண்மையா பொய்யா என்றும் தெரியாது. இக்குண்டுகள் ஜப்பானின் மீது வீசப்படுவதற்கு முன்பே ஜப்பான் தளபதிகள் தோல்வியை ஒப்புக் கொண்டு சரணடைந்து விட்டார்களென்றும், அணு குண்டுகளை ஆய்வு செய்வதற்காகவே ஜப்பானின் மீது அமெரிக்கா வீசியது என்பதும் அத்தகவல். இது உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம். 


உலகமெங்கும் அமெரிக்கா நடத்தி வரும் போர் வெறியாட்டங்களை நினைத்துப் பார்த்தால் இது உண்மையாக இருக்கவும் வாய்ப்புள்ளது. தனது நாட்டின் மீதே தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்களும், ஆவணங்களும் விரவிக் கிடக்கின்றன.

ஆப்கான், ஈராக், லிபியா, சிரியா என எத்தனை எத்தனை ஆக்ரமிப்புகள் ஈரான், வட கொரியா மீதான  அச்சுறுத்தல்கள்.

இறந்த ஜப்பானியர் நினைவாகவும், அணு ஆயுதங்களுக்கு எதிராகவும் நம் அனைவராலும் நினைவு கூரப்பட வேண்டிய நாளிதுவாகும். 

புகைப்படங்களுக்கு நன்றி கூகிள், ஃபேஸ்புக்
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்