கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தில் கன்னடர்கள், மலையாளிகள் மற்றும் பினாயக் சென்

முல்லைப் பெரியாறு பிரச்சனையின் போது எனது மலையாள நண்பர்கள் தமிழ்நாட்டின் இரட்டை விளையாட்டு என்று தலைப்பிட்டு ஒரு புகைப்படத்தினைப் பகிர்ந்திருந்தார்கள். அதில் 100 ஆண்டுகள் பழமையான அணையை வலுவானது பாதுகாப்பானது என்றும், அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய அனல் மின்நிலையத்தை (இந்தியாவின் பெருமிதமான திட்டம் என்ற அடைமொழியுடன்) பாதுகாப்பில்லாதது என்றும் இரட்டை வேடம் போடுகிறது தமிழ்நாடு என்ற செய்தியுடன் இருந்தத்டு அப்புகைப்படம். அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தமிழர்கள் எந்தளவுக்கு அல்லது எந்தளவுக்கு முல்லை பெரியாறு விவகாரத்திற்கு ஆதரவளித்தார்கள் என்று. பாதித் தமிழர்கள் மலையாளிகளைத் திட்டுவதற்கே முல்லைப் பெரியாறு விடயத்தைக் கையிலெடுத்தார்கள் மாறாக முல்லைப் பெரியாற்றினால் பயன்பெறும் மக்களின் எதிர்காலம்  குறித்த கவலையிலல்ல.

முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட வேண்டுமென்பது ஒவ்வொரு கேரளத்தைச் சார்ந்தவனின் எண்ணமாக இருந்தது. ஏனெனில் அரசாங்கமே அப்படி ஒரு கருத்தைச் சார்ந்துதான் இயங்கியது. நாளிதழ்கள், வார இதழ்கள் இக்கருத்தைப் பரப்பின. சில இலட்சம் மக்களின் உயிருக்கு ஆபத்து என்று அனைவருமே நம்பினார்கள். அணை எந்நேரமும் உடையலாம் என்ற நிலையில்தான் இருந்தது. இதன் அடிப்படியில் தான் இனவெறியும் இருந்தது. ஆனால் சில தமிழர்கள் தமிழ்நாட்டிலுள்ள மலையாளிகளை விரட்ட வேண்டும் கடைகளைத் தாக்க வேண்டும் என்ற நிலையில் வெறித்தனமாக இருந்தனர். இதில் முல்லைப் பெரியாற்றைக் காக்க வேண்டும் என்பதற்கான நோக்கத்தில் அல்ல.

அதே வகையில் கூடங்குளம் எதிர்ப்பில் தமிழகம் ஒற்றுமையாக இல்லை. அப்பகுதி மக்கள் சில அறிவாளர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்,  எழுத்தாளர்கள் என்ற சிறு அளவிலான தரப்பே இதை எதிர்த்து வருகின்றனர். பின்பு திட்டமிட்ட மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் மீது இலக்கு வைத்து எதிர்ப்பரப்புரை திட்டமிட்டு நடுவண் அரசு தினமலர் போன்ற பார்ப்பன இதழ்களால் தொடர்ந்து அவதூறுகளாகப் பரப்பப்பட்டு வந்தது. அணுமின் நிலைய ஆதரவாளர்கள் என்றால் நாட்டு பற்றாளர்கள், அறிவியல் வளர்ச்சிக்கு ஆதரவாளர்கள் என்றும் எதிர்த்தரப்பினரோ தேசத்துரோகிகள், அறிவியல் வளர்ச்சிக்கு எதிரானவர்கள், மதவாதிகள், அமெரிக்கக் கைக்கூலிகள் என்ற சித்தரிப்புகள் ஆரம்பம் முதலே வைக்கப்பட்டு வந்தன. இந்தப் போரட்டத்தின் வீச்சாகத்தான் நடுவண் அரசால் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் ஊதிப் பெருக்கப்பட்டது. இதன் மூலம் கூடங்குளம் போராட்டத்தில் அம்மக்களுக்குத் துணை நின்ற மலையாளிகள், கேரள அறிவாளர்கள் (Intellectuals) முல்லைப் பெரியாறு அணைக்கு ஆதரவாக இதிலிருந்து பிரிந்து கேரளாவிற்கு ஆதரவாகச் சென்று விட்டனர்.

தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு அணையை எந்நேரமும் உடைந்து விடும் என்ற நிலையில் அணைகள் என்பவை தண்ணீர் வெடிகுண்டுகள் என்ற பரப்புரை கேரளாவின் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொண்டு புதிய அணை கட்டப்படவேண்டும் என்றே கருதுகின்றனர். அரசியல் கட்சிகள், திரைப்படத் துறையினர், அறிவாளர்கள் ஒன்றாக இருக்கின்றனர். இதில் சில விதிவிலக்குகள் நேர்மையான தீர்வுக்காகப் போராடுகின்றனர் அது வேறு. ஆனால் தமிழகத்திலோ காலாவதியாகிப் போன அணுகுண்டுகளை மடியில் கட்டிக் கொண்டிருப்பதற்கு இணையான அனல் மின் நிலையங்களை எதிர்க்கும் உணர்வில்லாமல் தன்னலவாதிகளாக மாறியிருக்கின்றனர். இதற்காக அப்பகுதி மக்கள் மட்டுமே போராடுகின்றனர். இது தமிழகத்தின் பிரச்சனை என்ற அளவில் இது கவனம் பெறவில்லை. அரசியல் கட்சிகள் மக்களுக்கு எதிராக இருக்கின்றனர். அதே போல் மக்களுக்கும் கூடங்குளம் திறந்தால் போதும் என்ற அளவில் மாற்றப்பட்டு விட்டனர் மாதக்கணக்காக செயற்கையாக மின்வெட்டு உருவாக்கப்பட்டு இக்கருத்தை உருவாக்குவதில் வெற்றி பெற்று விட்டனர். அதன் ஒரு பகுதியாகத்தான் கூடங்குளம் விவகாரத்தில் ஆதரவு எதிர்ப்பு என இல்லாமல் நடுநிலை என்ற போர்வையில் போராட்டத்திற்கு எதிராக இருந்த ஜெயலலிதா தேர்தல் முடிந்தவுடன் காவல் துறையை ஆயிரக்கணக்கில் அனுப்பி தனது பாணியில் போராட்டத்தை முடக்கக் காத்திருக்கிறார் எவ்விலை கொடுத்தேனும்.

இத்தனை கேவலங்களுக்கு மத்தியிலும் அண்டை மாநிலங்களில் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாகவும், போராட்டக்காரர்களின் மீதான அரசின் ஒடுக்கு முறைக்கெதிராகவும் அணு உலை எதிர்ப்பாளர்கள் இனம் கடந்து தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். திருச்சூரில் மனித உரிமைப் போராளி பினாயக் சென் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். திருச்சூரிலுள்ள சாகித்ய அகாடமி நிறுவனத்தில் இது நடத்தப்பட்டது அணு உலைக்கு எதிரானவர்கள் அமைப்பு இதை நடத்தியுள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள், அணு உலை எதிர்ப்பாளர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.


பினாயக் சென்


பெங்களூரில் நடந்த மெழுகுவர்த்தி ஏந்திய ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கெதிராகவும், போராட்டக் காரர்களுக்கு தமது ஆதர்வைத் தெரிவித்துள்ளனர்.  இதில் உரை நிகழ்த்திய மனோஹர் என்ற சமூக ஆர்வலர் "இப்போராட்டத்தினை கூடங்குளத்து மக்கள் போராட்டமென்றோஎன்றோ அல்லது தமிழர்கள் போராட்டமென்றோ சுருக்கக் கூடாது, இது மனித குலத்துக்கெதிரான அணுவாற்றல் அரசியலால் திணிக்கப்படும் அநீதி. தமிழக நடுவண் அரசுகள் ஏகாதிபத்திய அரசுகளின் வழிகாட்டலின் அடிப்படையில் செயல்படுகின்றன, சட்டப்பூர்வமான மக்களின் போராட்ட வடிவத்தைக் குற்றம் சாட்டுகின்றனர். இது அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டும்" என்றார். இந்தியாவில் இயங்கும் அனைத்துவிதமான அணுவாற்றல் அடிப்படையிலான திட்டங்கள் திரும்பப் பெறப்படவேண்டும் என்றும், அணு உலையை இயக்கக் கோரும் தமிழக அரசின் திட்டம் திரும்பப் பெறப்பட வேண்டுமென்றும், கைது செய்யப்பட்ட அணு உலை எதிர்ப்பாளகள் விடுவிக்கப்படவேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்துல்கலாமுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 



மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், அறிவாளர்கள், உரிமை ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்து கொண்ட மெழுகுவர்த்தி ஏந்திய ஆர்ப்பாட்டம் டவுன் ஹாலில் நடந்தது. குடிமக்கள் விடுதலைக்கான மக்கள் ஒன்றியம் (People’s Union for Civil Liberty ) என்ற அமைப்பு Vimochana, SICHREM, People’s Democratic Forum, Sangama, New Socialist Alternative ஆகிய அமைப்புகள் என பலருடன் சேர்ந்து நடத்தினார்கள்.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்