ஈழம் - மறைக்கப்படும் போர்க்குற்றங்களும் உண்மைக்குற்றவாளிகளும் !!

தற்போது சேனல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணப்படத்தைத் தொடர்ந்து செயற்கையான ஒரு பதட்டமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. என்னவோ இந்த புகைப்படங்களும் காட்சிகளும் இது வரையில் வெளியிடப்படாதது போன்று ஒரு சித்தரிப்பும் இதில் நிலவுகிறது. எதிர்பார்த்தது போன்றே பிரபாகரன் அவரது மகன் பாலச்சந்திரன் ஆகியோர் கொல்லப்படும் காட்சிகள் இதில் வெளிவரவில்லை. இந்த ஆவணப்படம் ஏற்கெனவே வெளியாகியிருந்த காட்சிகளும், புகைப்படங்களும் தொகுக்கப்பட்டு போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்ற ரீதியில் பேசுவதாகத் தெரிகிறது. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று அரசியல் செய்பவர்களின் ஆதரவுக்கான ஒரு தரவாகவே இந்தத் திரைப்படம் இருக்கிறது. இதிலிருந்தே தெரிகிறது இது சும்மா இலங்கையை அச்சுறுத்திப் பணிய வைக்கும் அமெரிக்க நாடகம் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. இதற்கு ஒத்து ஊதுவது ஐக்கிய நாடுகள் சபை என்ற அமெரிக்கக் கைப்பாவை. முதலில் ஏன் இந்த இலங்கை எதிர்ப்புத் தீர்மானம் என்பது செல்லாக்காசு அல்லது தமது பொருளாதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள எத்தனிக்கும் அமெரிக்க, மேற்குலக நாடுகளின் நடவடிக்கை என்று சொல்லலாம்.

முதலாவதாக மனித உரிமை மீறல் குறித்துப் பேச அமெரிக்காவுக்கு எந்த அருகதையும் கிடையாது. அமெரிக்கா உலகம் முழுக்க மனித உரிமை மீறலை நிகழ்த்துகிறது, அல்லது தமது நலனுக்காக மனித உரிமையை மீறுபவர்களை ஆதரிக்கிறது. இதை கொண்டுவருவதன் மூலமாக அமெரிக்கா உட்பட மேற்குல வல்லரசுகள் தாம் மனித உரிமையை காப்பவர்கள் என்று காட்டிக் கொள்ள முனைகிறார்கள்.

அடுத்ததாக இவர்களும் போரை ஆதரித்தவர்கள்தான். இரு வருடங்களுக்கு முன்பு போர் நடந்த போது அதை எதிர்க்காமல் தற்போது போலவே ஒப்புக்கு மனித உரிமை மீறல் நடக்கிறது, புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்று பேசினார்கள். இவர்கள் விடுதலைப்புலிகளின் கடந்த கால செயல்பாடுகள் தற்கொலைத் தாக்குதல்கள், மனித உரிமை மீறல்கள், குழந்தைகளை போரில் ஈடுபடுத்தியது வகையிலான காரணங்கள், தமது ஆலோசனையான மேலும் பேச்சுவார்த்தை மூலம் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண முயலாமல் போரில் இறங்க முயன்றது, எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கையில் நடக்கும் போர் தமது தடையற்ற வர்த்தகத்திற்கு, முதலீட்டிற்கு தடையாக இருந்ததால் இலங்கையில் "அமைதியை" வேண்டியது போன்ற காரணங்களால் புலிகளுக்கு கடும் எச்சரிக்கைகள் பின்பு புலிகள் பயங்கரவாத அமைப்பு என்று அறிவித்துத் தடை செய்தார்கள். மறைமுகமாக புலிகளுக்கு எதிரான நிலையையே கொண்டிருந்தன இந்நாடுகள். இங்கிலாந்து, இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் போர்த்தளவாட விற்பனை, நிதி வழங்கல் என்று இலங்கையின் பக்கமே நின்றன.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக அந்த போரை திட்டமிட்டு வழிவகுத்து நடத்தியது இந்திய அரசே ஆகும். இப்படிப் போர்க்குற்றவாளிகளே தமக்குள் நடத்தும் நாடகத்தில் இலங்கை அரசை மட்டும் தனிமைப்படுத்துகிறார்கள். உலக பயங்கரவாதி அமெரிக்கா கொண்டுவரும் தீர்மாணம் இலங்கைக்கு எதிராகவாம். இதை அடுத்த போர்க்குற்றவாளி இந்தியா ஆதரிக்க வேண்டுமாம். நல்ல கூத்து இது. தன்னுடைய இனவாத கொள்கைகளினால் இலங்கையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக குருதியை ஆறாக ஓட வைத்த இலங்கையின் சிங்கள இனவாதிகள் தான் விதைத்ததை அறுவடை செய்வதன் மூலமாக இலங்கையை மொத்தமாக அமெரிக்காவிடமும் இலங்கையிடமும் அடகு வைத்து விட்டனர்.

இன்னொன்று இந்த இனப்படுகொலை போர்க்குற்றம் ஆகியவற்றுக்குத் தீர்வும் நீதியும் வேண்டி நிற்பவர்கள் இந்தியாவின் தயவையும் அமெரிக்காவின் தயவையும் வேண்டி நிற்பதுதான் அசிங்கமாக இருக்கிறது. அதாவது எய்தவன் (இந்தியா) அம்பை (இலங்கை) ஆதரிக்கக் கூடாது என்கிறார்கள். சரி இந்தியாவின் போர்க்குற்றத்தை யார் விசாரிப்பது.

போரைத் திட்டமிட்டு வழிநடத்தி ஆயுதங்கள் வழங்கிய இந்தியா

செயற்கைக் கோள்கள் உட்பட அதிநவீன தொழில்நுட்ப உதவிகளுடன் உளவுத் தகவல்களை இந்தியாவுடன் இணைந்து இலங்கைக்கு வழங்கிய அமெரிக்கா

இங்கிலாந்தும் இப்போருக்கு நிதியளித்ததாக குற்றச்சாட்டுக்கள் உண்டு

இது குறித்தெல்லாம் இந்த ஆவணப்படம் பேசவில்லை

இலங்கை இராணுவத்துடன் இந்திய இராணுவத்தினர் நிற்கும் காட்சிகள் - ஈழப்போரின் இறுதி மாதங்களில் முல்லைத் தீவு முற்றுகையின் போது எடுக்கப்பட்டவை இப்புகைப்படங்கள்.


ஜனவரி 2009 -இல் இலங்கை இராணுவ அதிகாரிகளுடன் மாலத்தீவுகள், ஜப்பான், அமெரிக்கா, வங்கதேசம் ஆகிய நாடுகளின் இராணுவ அதிகாரிகள். இவர்களுடன் இந்தியா பாகிஸ்தான் நாடுகளின் இராணுவ அதிகாரிகள் ஒன்றாக இருக்கும் கண்கொள்ளாக் காட்சி
 




முல்லைத்தீவுக்குள் புலிகள் முடக்கப்பட்ட பின்பு கல்மடுக்குளம் அணையைத் தகர்த்து மிகப்பெரும் சேதத்தைப் புலிகள் இலங்கை இராணுவத்திற்கு ஏற்படுத்தினர் (இதில் 200 இந்திய இராணுவத்தினர் இறந்ததாகவும் ஒரு உறுதிப்படுத்தப்படாத செய்தி அல்லது வதந்தியும் நிலவியது அந்நாட்களில்). அதற்குப் பின்னர் சிங்கள இராணுவத்திற்கு அனுப்பப்பட்ட பீரங்கிகள் தமிழ்நாட்டின் வழியாக அனுப்பப்பட்ட அரிய காட்சி.
 



Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்