கருப்பர் கூட்டத்தைக் கண்டிக்கும் திமுக

 மோதி திருக்குறளைச் சொல்லி நமது நெஞ்சை நக்குவது போல் இதை, காவிகளின் நெருக்குதல் காரணமாக சடங்குக்கு வரும் அறிக்கையாகக் கொள்ளலாம்.

                                   

கொள்கையைப் பேசினால் காவிகள் கட்டம் கட்டி திசைதிருப்பி இந்து விரோதப் பட்டம் கட்டுவார்கள். இந்துக்களுக்காகப் பேசினால் நம்மளை மாதிரி போராளிகள் திமுகவிற்கு கொள்கை போதவில்லை/கைவிட்டுவிட்டது என்று மொத்துவார்கள். ஆக என்ன செய்தாலும்/செய்யாவிட்டாலும் திமுகவுக்கு அடிதான்.

திக தலைவர் ஆசிரியர் வீரமணியே கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவில்லை என்று சொன்ன பிறகும் திமுக காசு கொடுத்துத்தான் கறுப்பர் கூட்டம் நடக்கிறது என்று சொல்வார்கள்.

திமுககாரன், திமுக தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களோ கோயிலுக்குப் போனால் ஆகா இந்து மதத்தைப் பின்பற்றுகிறான் என்று சமாதானமாக மாட்டார்கள்.
பகுத்தறிவு பல்லிளிக்கிறது என்பார்கள்.

ரம்ஜான்/கிறிஸ்துமஸ் வாழ்த்துச் சொன்னால், இந்துப் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை மற்ற மதத்துக்கு மட்டும் வாழ்த்து சொல்லும் இந்து விரோதி, கிறித்தவக் கைக்கூலி என்றுதான் சொல்வார்கள்.

முருகனை அவமதித்ததற்காகக் திமுக கண்டிக்கிறது என்ற செய்தியை 99 % காவிகள் வேண்டுமென்றே பார்க்காததுபோல் இருந்து விட்டு திருட்டு திமுக இந்து விரோத திமுக என்பார்கள்.

திராவிடம், கடவுள் மறுப்புப் பேசாமலேயே இந்துக்கள் மனதை புண்படுத்தாமலேயே காவி பயங்கரவாதிகளை அம்பலப்படுத்த முடியும். அவர்கள் பாணியிலேயே போய் அவர்களைத் திரை கிழிக்க முடியும்.

பாஜக ஆட்சி நடத்தும் இலட்சணம் இந்துக்களுக்குத் தெரியாதா ? பிடி எதுவும் கிடைக்காமல்தான் இவர்கள் திமுக எதிர்ப்பை/மதவாதத்தைக் கையில் எடுக்கிறார்கள்.

மருத்துவத்தில் பெரும்பான்மை இந்துக்களின் இட ஒதுக்கீடைப் பறிக்கும் பாஜக என்று சொல்லியிருக்கலாம். காவிகளின் ஓட்டை வாயை அடைத்திருக்கலாம். திருடனுக்குத் தேள் கொட்டியது போல் முழித்திருப்பார்கள்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்