அவன் யார் ?

எதிர்கட்சியாக இருக்கும்போது விலைவாசி உயர்வை எதிர்க்கும். ஆளும் கட்சியாக இருக்கும்போது விலைவாசியை உயர்த்தும்.

அது என்ன?

பாகிஸ்தான் என்றால் பாயும்.
சீனா என்றால் சிணுங்கும்.

அது என்ன ?

ஆட்சியில் இல்லாதபோது அரசைக் கேள்வி கேட்பது தேசபக்தி என்பான். ஆட்சியில் இருக்கும்போது அரசைக் கேள்வி கேட்பது தேசத்துரோகம் என்பான்.

அவன் யார் ?

அன்னம் தண்ணி புழங்க மாட்டான். மதம் மாறினால் கதறுவான்

அவன் யார் ?

எல்லாத்துக்கும் காரணம் நேருவும் காங்கிரசும்தான் என்பான்
எல்லாத்தையும் தொடங்கியது கருணாநிதியும் திமுகவும்தான் என்பான்.

அவன் யார் ?

சீன நிறுவனப் பொருட்களை புறக்கணிக்கச் சொல்வான்
சீன நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெறுவான்.

அவன் யார் ?

ஆளுங்கட்சியை விட்டுவிட்டு எதிர்க் கட்சியைத் திட்டுவான்.  
அடித்தவனை விட்டு அடிவாங்கியவனைத் திட்டுவான்.

அவன் யார் ?

எல்லா ஊடகங்களிலும் வருவான். அவர்களையே வேசி ஊடகங்கள் என்பான். 

அவன் யார் ?

ஜாதியை ஆங்கிலேய சதி என்பான் திராவிட சதி என்பான். ஜாதிதான் பண்பாடு என்பான் ஜாதிதான் மதம் என்பான். 

அவன் யார் ?

விடுதலைப்போராட்டத்தில் போராடாமல் சும்மா இருப்பான்.  விடுதலைப்போராளிகளைக் காட்டிக்கொடுப்பான். 70 வருடங்கள் கழித்து போராளியாகக் கரடி விடுவான்.

அவன் யார் ?

தேசத்துரோகிகளுக்குவெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்பான்.
அவனும் வெளிநாட்டிலிருந்து பணம் பெறுவான்.

அவன் யார் ?

பாஜக. 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்