தொகுப்புகள்


மீண்டும் மீனவர் கொலை

ராமநாதபுரத்திலிருந்து கடந்த 2 ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் திரும்பவேயில்லை. இந்நிலையில் இரு நாட்களுக்கும் முன்பு த்லையில்லாத உடலொன்று புதுக்கோட்டை மாவட்ட மணமேல்குடி அருகே உள்ள புதுக்குடி ஓடாய்மடம் எனும் ஊரில் கரை ஒதுங்கியுள்ளது. மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி அருகே பாசிப் பட்டணம் கடற்கரையில் ஒதுங்கிய இரு உடல்களும் அடையாளம் காணப்பட்டன. இன்னொரு மீனவரின் உடல் யாழ்ப்பாணத்தில் கிடைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இவர்கள் யாவரும் சிங்கள் இனவெறி பிடித்த இலங்கைக் கடற்படையாலேயே கொல்லப்பட்டிருக்க முடியும். இவர்கள் கிரிக்கெப் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடந்த அன்று மீன்பிடிக்கச் சென்றவர்கள் என்ப்தே இதற்கு மேலும் ஐயமுற வைக்கிறது. கிடைத்த உடல்களை கண்டபோது அவர்கள் மிகவும் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டுக் கொலை செய்ய்ப்பட்டிருப்பது தெரியவருகிறது. கிரிக்கெட்டில் இலங்கை தோற்றுவிட்டதால் இந்த வெறிநாய்கள் கொலை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பினும் இது ஒரு மேம்போக்கான நொண்டிச் சாக்குதான். மீனவர்களை தொழிலிருந்து அப்புறப்படுத்துவதையே கொள்கையாக வைத்திருக்கும் ஆட்சியாளர்கள் இதற்கு மூலகாரணம். இது இந்திய இலங்கை அரசுகளின் அனுமதிக்குட்பட்டே அவர்கள் மேற்பார்வையிலேயே இது நடைபெறமுடியும். அத்துமீறி மீன்பிடித்ததால்தான் சுட்டோம், முதலில் எச்சரித்தோம், கேட்காததால்தான் சுடவேண்டிவந்தது என்று சொல்வார்கள்.

இலங்கையின் கடல் எல்லைக்குள் இந்தியமீனவர்களின் அதிகமான புழக்கத்தினால்தான் மீன்வளம் அழிந்தது. இந்தியமீன்பிடிதான் தடைசெய்யப்பட்ட இழுவைப்படகுகள் மூலமாக மீன்பிடிக்கின்றனர். இவர்களின் இயந்திரப்படகுகள் இலங்கை மீனவர்களின் வலைகளையும் அறுத்துச் சென்றுவிடுகின்றனர். இதனால் இலங்கைத் தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் இந்திய மீனவர்கள் மீது எதிர்ப்புணர்வுடன் இலங்கை மீனவர்கள் உள்ளனர். இந்த எதிர்ப்புணர்வை சிங்கள இனவெறி கடற்படை பயன்படுத்திக் கொண்டு தமிழக மீனவர்களைச் சுட்டும், சித்ரவதை செய்தும், கொள்ளையடித்தும் பயன்படுத்திக் கொள்கிறது. இவர்கள் இலங்கை மீனவர்களுக்காகத்தான் தமிழக (இந்திய) மீனவர்களைக் கொல்கிறார்கள் என்பது கொடூரமான நகைச்சுவை. கொல்லப்படும் மீனவர்கள் அனைவரும் கன்னத்தில் டொக்கு விழுந்த ஏழை மீனவர்கள்தானே ஒழிய இயந்திரப்படகுகளில் வந்து இலங்கை மீனவர்களில் வளத்தை அழிக்கும் பெரும்மீன்பிடியாளர்கள் அல்ல. ஒவ்வொருநாளும் உயிருக்கு உத்தரவாதமில்லாத தொழிலில் சிங்களனிடம் சிக்கினால் கொல்லப்படுவது உறுதி என்ற நிலைதான் எதார்த்தமாக இருக்கிறது. சிங்கள இனவெறிக்கு அப்பாற்பட்டு இந்திய இலங்கை அரசுகளின் உள்நோக்கமும் இந்தக் கொலைகளில் மறைந்துள்ளது. இருவருமே எல்லை தாண்டுவதையே காரணமாகக் கூறி அப்படித்தான் கொல்லப்படுவீர்கள் என்கிறார்கள். நம்மால் ட்விட்டர்களிலும், வலைப்பூக்களில் மட்டுமே அட்டைக்கத்தி வீச முடியும் என்று கண்டுவைத்துள்ளனர். 

மீனவர்களுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டுமென்பது நம்தலையில் நாமே  கொள்ளிவைத்துக் கொள்வதற்கு ஒப்பானது. அவர்கள் மீன்பிடிப்பதற்கே அரும்பாடு படவேண்டியிருக்கிறது. சிங்களக் கடற்படை நிராயுதபாணியாக இருக்கும்போதே இத்தனை கொலைகளைச் செய்கிறான். ஆயுதமும் கொடுத்து விட்டால் முதலில் இந்திய மீனவர்கள்தான் சுட்டார்கள் நாங்கள் தற்காப்புக்காகச் சுட்டோம் என்று கொத்துக் கொத்தாக கொலைகள் செய்வான். முன்பு புலிகள் ஆயுதம் கடத்துகிறார்கள் என்பார்கள் இன்றோ எல்லை கடத்தல் என்பது மட்டும் போதுமானதாக இருக்கிறது. சோமாலியக் கொள்ளையர்களையெல்லாம் விரட்டி விரட்டிப் பிடிக்கும் இந்திய கடற்படை, பாகிஸ்தானிய மீனவர்களை ஒப்படைப்பதில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளும் அரசு கேவலம் இந்த சிங்கள் அரசை பணியவைக்க முடியாதா ? மீனவர்களைக் கடலிலிருந்து அப்புறப்படுத்தி பணக்காரர்களுக்கு தாரை வார்க்கும் உலகமய அரசியலுக்கு ஏற்ப இந்திய அரசும் இலங்கை அரசும் கொலைகளை அரங்கேற்றி வருகின்றன. 

விபச்சாரத்தில் தள்ளப்படும் பழங்குடியினச் சிறுமிகள்

மத்தியப் பிரதேசத்திலுள்ள மண்டசௌர் மாவட்டம் நீமுச் (Neemuch) தொடங்கி ரட்லம் (Ratlam) வரையிலான நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் பஞ்ச்சாடா(Banchchada) பழங்குடியினப் பெண்களைப் பார்க்க முடியும். அவர்கள் நிர்வாணமாக இருப்பார்கள், பட்டப்பகலில். அந்தப்பகுதி சுற்றுலாவுக்கும் பெயர் பெற்றது. அதனால்தான் இங்கு பல ரக வாகனங்களும் செல்லும் நெடுஞ்சாலையாக இருக்கிறது. 

இவர்கள் பல வாகன ஓட்டுநர்கள் முதல் சுற்றுலாப்பயணிகளையும் கவர்வதற்கே வெற்றுடலுடன் காணப்படுகின்றனர். இவர்களை "பஞ்ச்சடாக் கறி" (Banchchada Dish) என்று அழைக்கிறார்கள். இவர்க்ளின் பாரம்பரியம் இடைக்காலத்திலிருந்தே தொடங்குகிறது. இப்பகுதிகளில் கொள்ளையடிக்க வரும் முகலாயார், இராஜபுத் இராணுவத்தினருக்கான பெண்களின் தேவைக்காக இவர்கள் பயன்பட்டார்கள். தற்போது சுற்றுலாப்பயணிகள், மற்றும் வாகன ஓட்டுநர்கள், மற்ற வாடிக்கையாளர்கள் ஆகியவர்க்காக பல சிறுமிகள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கடத்தப்படுகிறார்கள். இவர்க்ள் 1 லிருந்து 8 வயது வரையிலான சிறுமிகள். இங்கு வந்த பிறகு இயக்க ஊக்கிகள் (steroids) கொடுக்கப்பட்டு இயற்கைக்கு மாறாக பருவமடைய வைக்கப்படுகிறார்கள். பின்பு சந்தைக்கு ஆயத்தமாகிறார்கள். இவ்வாறு கொடுக்கப்படுவதால் எதிர்காலத்தில் நிரந்தர சிறுநீரகக் கோளாறுகளுக்கு ஆளாக நேரிடும். 

மண்டசௌர் மாவட்ட எஸ்பி. ஜீ.கே. பதக் என்பவரின் துரித நடவடிக்கை காரணமாக இதுவரை 869 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். 34 தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3 வாரங்களில் மட்டும் 21 சிறுமிகள் மீட்கப்பட்டனர் வயது 1 - 8 வரையிலானவர்கள்.

சரத் பவாரை சாடும் வந்தனா சிவா !

சமூக ஆர்வலரும் சுற்றுச் சூழல் போராளியுமான வந்தனா சிவா வேளாண்துறை அமைச்சரானா சரத் பவாரை பதவி விலகக் கோரியுள்ளார். என்டோசல்ஃபன் பூச்சிக்கொல்லியை தடை செய்யாமல் அதற்கு ஆதரவாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய வந்தனா இந்திய கிரிக்கெட் அவைக்கு (ICC) வழங்கிய 30 % வரித்தள்ளுபடி செய்ததன் மூலம் கிடைத்த இலாபத்தை என்டொசல்ஃபன் பூச்சிக்கொல்லியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டுமென்றும் கூறினார். முன்பு இராசாயனங்கள் போரில் பயன்படுத்தப்பட்டன. தற்போது உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய அரசின் செயல்பாடுகள் மக்கள் நலத்திற்கு எதிரானவை என்றும் குறிப்பிட்டார். 


                                என்டோசல்பனால்   பாதிக்கப்பட்டவர் -   நன்றி தெஹல்கா

என்டொசல்ஃபன் 60 நாடுகளில் தடை செய்யப்பட்டிருந்தாலும், 40 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலக சந்தையில் 80 விழுக்காடுகள் இந்தியாவில் விற்பனையாகிறது. இந்தியாவில் பாதிப்புகள் கண்டறியப்பட்டதன் விளைவாக கேரளா, கர்நாடகத்தில் மட்டும் தடைசெய்யப்பட்டுள்ளது.


இலங்கையின் போர்க்குற்றம்

ஐக்கிய நாடுகள் சபை அமைத்த நிபுணர் குழு இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்ததாக அறிக்கை அளித்துள்ளது. ஏன் இந்த ஈர வெங்காயமெல்லாம் முன்பே தெரியாதா? குற்றம் நடக்கும் வரை உடனிருந்து உதவி வழிகாட்டிவிட்டு, சும்மாவாச்சும் பம்மாத்துப் பண்ணுவதுதான் இந்த ஐநாவின் வேலை போலும்.  உலகின் 6 வது பிரபலமான மனிதப் பிறவி மஹிந்தவை என்ன்தான் செய்யப்போகிறார்கள். ஏதாவதுஒரு குழுவை அமைக்கிறார்கள். அறிக்கையை வெளியிடுகிறார்கள் அவ்வளவுதான்.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்