உலகின் மிக அழகான பெண்


10 வருடங்களாக தனது தாய்மண்ணுக்காக, கொள்கைக்காக உண்ணாநிலையில் உறுதியுடன் இருப்பவரை உலகின் மிக அழகான பெண் என்று சொல்வதைத் தவிர்த்து வேறு எப்படி அவருக்கு மரியாதை செலுத்த முடியும் என்பது தெரியவில்லை.


அவர் எழுதிய கவிதை கீழே 

When life comes to its end
You, please transport
My lifeless body
Place it on the soil of Father Koubru

To reduce my dead body
To cinders amidst the flames
Chopping it with axe and spade
Fills my mind with revulsion

The outer cover is sure to dry out
Let it rot under the ground
Let it be of some use to future generations
Let it transform into ore in the mine

I'll spread the fragrance of peace
From Kanglei, my birthplace
In the ages to come
It will spread all over the world.

-lrom Sharmila

ஒரு கவிஞர் தனது தான் எழுதிய கவிதையைப் போன்றே வாழ்ந்து காட்டுவது நடைமுறையில் குறைவு. இரோம் ஷர்மிளா சானுவின்  போராட்டம் நிச்சயமாக அவரது கவிதையைக்காட்டிலும் அழகானது. 

உலகின் மிகப்பெரும் ஜனநாயகம் என்று சொல்லிக்கொள்ளும் நாடு எவ்வாறு தனது மக்கள் மீது வன்முறையைக் கொடூரமாக ஏவுகிறது என்பதறகு மணிப்பூர் ஒரு உதாரணம். இந்தியா விடுதலை பெற்ற பின்பு வலுக்கட்டாயமாக பத்துக்கணக்கான தேசிய இனங்கள் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப் பட்டன. அதில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் வடகிழக்கு மாநிலங்கள், இந்திய துணைக்கண்டத்தின் பொதுவான பண்பாட்டுடனும், வரலாற்றுப் பழக்க வழக்கங்களுடன் எந்தவொரு ஒற்றுமையுமற்ற இவர்களும் வலுக்கட்டாயமாக இந்திய தேசிய ஒருமைப்பாடு எனும் தேசிய இனங்களின் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்பு "விடுதலை" பெற்ற இந்தியாவிடமிருந்து இவர்கள் விடுதலை கோரும்  போராட்டத்தைத்  தொடங்கினார்கள். பிறகு வரலாற்றின் வழக்கத்தின்படி காட்டிக்கொடுப்புகள், அரசியல்தலைவர்களின் சதி, ஆயுதக் குழுக்களின் தவறுகள்,  என்ற அனைத்தும் அரங்கேறின. பின்பு அரசுகள் வழக்கமான நடத்தும் செய்யும் பிரிவினைவாதம், பயங்கரவாதம் , தேசத்துரோகம் பொன்றவற்றைச் சொல்லி அவைகளைத் தடுக்க இராணுவத்தை நிறுத்தியுள்ளது.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் (The Armed Forces (Special Powers) Act (AFSPA) 1958) என்ற சட்டம் ஆங்கிலேய அரசு இந்திய விடுதலைப் போராளிகளை ஒடுக்க பிறப்பித்த சட்டத்தின் மறுபதிப்பு. காசுமீர் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களில் 1980 களிலும் காஷ்மீரில் 1990 களிலும் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. இதை நீக்கும் வரையில் தமது போராட்டம் நடைபெறும் என்று 10 வருடங்களாகக் கூறிவருகிறார் ஷர்மிளா. ஆனால் இவரது போராட்டம் தொடங்கிய பின்புதான் பிறகுதான் மனோரமா தேவி என்ற பெண்ணின் படுகொலையும், மணிப்பூர் பெண்கள் நிர்வாணப் போராட்டம் நடத்தி இராணுவத்தின் கொடூர முகத்தை உலகிற்கு அம்பலப்படுத்தியதும் நடந்தது. இவர் இறந்தால் கூட இது திரும்பப் பெறப்படாது என்பதே இந்தியா அரசின் கொள்கையாக இருக்கும் போல் தெரிகிறது.   இவர் தனது பட்டினிப் போராட்டத்தைத்துவக்கியது நவ 2, 2000ம் ஆண்டு. இதுநாள் பத்து வருடங்களாக வரையிலும் குழாயின் மூலமாக சத்துக்கள் அடங்கிய திரவ  உணவு செலுத்தப்பட்டு வருகின்றது. இல்லையெனில் இவரும் திலீபனைப் போலவே இறந்திருப்பார்.தற்கொலை முயற்சிக்கு ஓரிரு வருட சிறைத்தண்டனை தான் அளிக்க முடியும் என்பதால் கைது செய்யப்படுவதும், விடுவித்த பின்பு மீண்டும் போராட்டத்தைத் தொடர்வதும் வழக்கமாக இருக்கிறது.  


                                           இரோம் சானு ஷர்மிளா  
200 வருடங்களாக உலகையே கொள்ளயடித்தவன் ஒரு தலைவரின் அஹிம்சைப் போராட்டத்தில் தோற்றுப்போய் மனமிரங்கி இந்தியாவுக்கு விடுதலையைக் கொடுத்துவிட்டுப் போய்விடுவானா ?   அப்படிக் கிடைத்த விடுதலை எத்தகையது என்பதை அஹிமசைப் போராட்டத்தின் தலைவரை , இந்திய தேசத்தின் தந்தை எனப்புகழப்படுபவரையே தேசபக்தர்கள் எனப்படுவோர் கொன்று நிரூபித்தார்கள். அது கிடக்கட்டும். காந்திய தேசம் எனப்படும் ஒரு நாடு காந்திய வழியில் போராடுவோர்க்கு என்ன பதிலை வைத்திருக்கிறது கைது, சிறையிலடைப்பு என்பதைத்தவிர. இவரது போராட்டத்தைத் தற்கொலை முயற்சி என்று சிறுமைப்படுத்தியும், குற்றம் சாட்டியும் சிறையில் அடைக்கப்பட்டார்.

காஷ்மீர் என்றால் பாகிஸ்தான் சதி, பயங்கரவாதிகள் சதி, பிரிவினைவாதம், மதவாதம் என்று சொல்லிட முடிகிறது. மணிப்பூருக்கு என்ன காரணங்கள் சொல்ல வருகிறார்கள்? இவரொன்றும்  தனிநாடு கேட்டுப் போராட வில்லையே, இராணுவத்தின் வரம்பற்ற அதிகாரச் சட்டத்தை நீக்கச் சொல்லித்தானே போராடுகிறார். 

2006 - ம் ஆண்டில் ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார்.

" நான் செய்தித் தாள்களின் முதல் பக்கத்தில், பொது மக்களின் ரத்தம் சிதறிய பிணங்களைப் பார்த்தேன். இதுதான் என்னை இந்த மரணப் போராட்டத்தின் பக்கம் திசை திருப்பியது. ஒன்றுமறியாத மக்கள் மீது ஆயுதப் படையினர் ஏவும் வன்முறைகளைத் தடுத்து நிறுத்த, எனக்கு வேறு வழி தெரியவில்லை. அமைதிப் பேரணி என்பது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றியது. நிலைமையை மாற்ற, ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயம் எனக்கு உருவானது. எனக்கிருக்கும் ஒரே வழி அதுதான். ஏனென்றால், பட்டினிப் போராட்டம் என்பது என் உணர்வு சார்ந்தது. இதில் உடலை வருத்திக் கொள்வது என்பதே கிடையாது. இது நான் செய்தே ஆகவேண்டிய கடமை. எனக்கு தற்கொலை எண்ணம் துளிகூட கிடையாது. அப்படி இருந்தால், உங்களுடன் இத்தனை இயல்பாகப் பேசிக் கொண்டிருப்பேனா? எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உண்மைக்காக நான் போராடுகிறேன். கடைசியில் உண்மைதான் வெல்லும்"




39 வயதாகும் அவருக்கு தொடர்நது உண்ணாமல் இருப்பதால் மாதவிடாய் சுழற்சி நின்றுவிட்டது.வலுவிழந்து  உடல் நிலையும் அபாயமாக இருப்பதாகவே தெரிகிறது. அவர் நாள்தோறும் செய்யும் யோகாப் பயிற்சியும், அவருடைய ஆன்மிக நம்பிக்கையின் காரணமாகவும் எப்படியோ உயிர் வாழ்கிறார். இவரது கோரிக்கையை இந்திய அரசு நிறைவேற்றி சர்மிளாவையும், தன்னையும் காக்க வேண்டும் என்பதுதான்  இவரது ஆதரவாளர்களின் வேண்டுகோள் . பத்தாவது ஆண்டை நிறைவு செய்துள்ள போராளிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும்!




Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

2 கருத்துகள்:

  1. நல்ல பகிர்வு !

    பல விசயங்கள் தெரிந்துக்கொள்ள முடிந்தது

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆமினா

    பதிலளிநீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்