இந்துக்கள் மதம் மாற்றுவதில்லையா ?

விவேகானந்தரிலிருந்து பார்த்தால் இந்து மதம் கூவிக் கூவி விற்கத் தொடங்கியது 125 வருடங்களுக்கு முன்னால்,

                                                  

என்னென்னவோ கடவுளை வணங்கிய மக்களையெல்லாம் அவர்களின் அனுமதியின்றி அவர்களுக்கே தெரியாமல் இந்து மதத்தின் கீழ் இணைத்து விட்டனர். உலகிலேயே இப்படி ஒரேயடியில் அதிகமான மக்களை மதம் மாற்றிய பெருமை இந்து மதத்திற்கே உண்டு. இந்துக்களுக்கு நாங்கள் மதம் மாற்ற மாட்டோம் என்று பெருமையும் பேச வேண்டும். இந்து மதம் வெளிநாட்டில் பரவுகிறது என்ற பெருமையும் வேண்டும். 

மற்ற மதங்கள் ஏழைகளைக் குறிவைத்து அவர்களின் ஏழ்மையை வேதனையைப் போக்குவதாகச் சொல்லி அவர்களை தமது கொள்கைக்கு மாற்றின.

ஆனால் இந்து மதமோ நேரடியாக பணம் படைத்த மேலை நாட்டு மேன்மக்களைக் குறிவைத்து இயங்கி அவர்களிடமே பணத்தை கறந்து அதனூடேயே வளர்ந்து வருகிறது.

கொஞ்சமாவது வெட்கப்பட வேண்டாமா ?

இது திணிக்கப்படாமல், எப்படிப் பரவியது ?

இந்தப் பெண் தானாக ஏழு கடல்களையும், மலைகளையும் தாண்டி வந்து கிளியின் வயிற்றுக்குள் இருந்த சாவியை எடுத்து, புதையலறையில் 100 டன் தங்கத்தின் அடியில் ஒளித்து வைத்திருந்த இந்த பகவத் கீதை என்ற நூலை எடுத்துக் கொண்டாரா ? இல்லை ஒரு மதம் பரப்பியின் நச்சுத் தாங்காமல் வாங்கி புகைப்படத்திற்குக் காட்சி தந்திருப்பாரா ?

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்