அச்சமற்றவளின் சாவுக்கு நீதி கிடைக்கவில்லை


நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவையே தலைகுனிய வைத்த டெல்லி பேருந்து பாலியல் வன்முறை வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை தீர்ப்பாக வந்திருக்கிறது. இதுவே சரியான நீதியாகும். ஆனால் ஒரு அநீதி இந்தக் கொடுங்குற்றத்தில் பங்கெடுத்த ஒரு அயோக்கியப் பிறவி 3 மாதங்கள் சிறியவன் என்பதால் சிறுவனாக பாவிக்கப்பட்டு 3 வருடத்தில் வெளிவந்து விட்டான். இதைத்தான் சகிக்க முடியவில்லை. அவனுக்கு சராசரி மனிதர்களுக்குக் கிடைக்கும் சுதந்திரமான வாழ்வு சமூகத்தில் அனுமதிக்கப்படவே கூடாது அவனையும் சேர்த்துத் தூக்கில் போட்டிருக்க வேண்டும். இப்பேர்ப்பட்ட ஒருவன் வெளியில் சுதந்திர மனிதனாக உலாவுவதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

                                                 

நிர்பயாவின் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் நான்கு பேரின் மீதான தூக்கு தண்டனை தீர்ப்பு. இந்த வழக்கில் மொத்தம் ஆறு பேர் தொடர்புடையவர்கள். அதில் ஏற்கெனவே குற்றவாளிகளில் ஒருவனான ராம் சிங் சிறையிலேயே ஒரிரு வருடங்களுக்கு முன்னர் தூக்கு மாட்டி இறந்து விட்டான். இன்னொருவன் சிறுவன் என்று ஒரு வருடத்துக்கு முன்னர் விடுவிக்கப்பட்டு விட்டான். இது சகிக்கவே முடியாத அவமானம். இதைக் கேட்டாலே பற்றிக் கொண்டு வருகிறது. இந்தக் குற்றத்தைச் செய்த போது அவனுக்கு 17 வயது முடிய 3 மாதங்கள் இருந்தன. எனவே அவனை ஒரு குற்றவாளியாகக் கருத முடியாது என்று 3 வருடங்கள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு விட்டான். இந்தக் கேவலைத்தை எங்கே போய் சொல்வது. அவனுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும். சிறுவனாக இருப்பவன் எப்படி பெரியவர்கள் செய்யும் பாலியல் வன்முறையைச் செய்திருக்க முடியும். பாலியல் வன்கொடுமை செய்தவர்களிலேயே அதிகமாக செய்தவன் அந்தக் கொடியவன்தான். 
                                                
                                                    இந்தியாவின் மகனான உத்தமச் சிறுவன்

நடந்த கொடுமையைப் பாருங்கள். ஜோதிசிங் பாண்டே தனது நண்பனுன் படம் பார்த்துவிட்டு 9 மணி இரவில் இந்தப் பேருந்தில் ஏறியிருக்கிறாள். அந்தப் பேருந்திலிருந்த 5 பேர் (ஓட்டுநருடன் 6 பேர்) தனியாக ஒரு பெண் ஆடவனுடன் இருப்பதைப் பற்றி கிண்டலடிக்க, அந்தப் பெண் அதை எதிர்த்துப் பேச அதனால ஆத்திரமுற்ற இந்தக் கயவர்கள் அந்தப் பெண்ணையும் ஆணையும் தாக்கியுள்ளனர். அந்தப் பெண்ணை பாலியல் வன்முறை செய்திருக்கின்றனர். ஒரு 24 வயதுடைய பெண் ஒரு ஆணுடன் தனியாக இரவில் வருவது தவறாம் அதை எதிர்த்துக் கேட்டால் அந்தப் பெண்ணுக்கு பாலியல் வன்முறைதான் பதிலாம். அதிலும் அந்த உத்தமச் சிறுவன் 17 வயது நிரம்பாத ஒரு --------------- தன்னை விட 6 வயது மூத்த பெண்ணை வன்முறைக்கு உள்ளாக்கி, அவள் பெண்ணுறுப்புக்கள் இரும்புக் கம்பியை விட்டு கொடுமை செய்து நிர்வாணமாக வெளியில் எறிந்து விட்டுப் போயிருக்கிறான். இந்த ஜென்மம் சிறுவன் என்று 3 வருடத்தில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறான் கூடவே அவனது பிழைப்புக்கு தையல் எந்திரத்தையும் வழங்கியிருக்கிறது அரசாங்கம். இந்தக் கேவலைத்தை எங்கே போய் சொல்லி அழ !?. அச்சமற்றவளின் சாவுக்கு நீதி கிடைக்கவில்லை அவளின் ஆசையும் நிறைவேறவில்லை. அவள் அந்தக் குற்றவாளிகளை உயிருடன் எரிக்கவேண்டும் என்று கூறியிருந்தாள்.
                                    
அவனுக்கு தண்டனை கிடைக்காதது மட்டுமன்றி, ஒரு பெண் தனியாக ஆணுடன் செல்லக்கூடாது என்ற சமூகக் கட்டுப்பாட்டை எப்பேர்ப்பட்ட பொறுக்கிகளும் கூட கையிலெடுக்கலாம், பெண் ஆணுடன் செல்வதைக் காட்டிலும் கொடிய குற்றமான பாலியல் வன்முறையை ஏவலாம் என்ற துணிவை சமூகம் ஆண்களுக்கு அளித்திருக்கும் பண்பாட்டை, மனநிலையை மக்கள் மாற்றிக் கொண்டதாகத் தெரியவில்லை. ஒரு ஆணும் பெண்ணும் இணைந்திருப்பதை, செல்வதை சமூகம் கண்டு கொள்ளாமல் எளிதாகக் கடக்கும் நாளே பண்பாட்டில் சிறந்த நாள். 

அந்தக் கயவனுக்கு தண்டனை கிடைக்காதது மட்டுமல்ல. நிர்பயாவுக்கு நடந்தது போலவே கொடுமைகள் இந்தியாவெங்கும் அதற்குப் பிறகும் நடந்தேறின. நிர்பயாவுக்குக்கிடைத்த ஊடக வெளிச்சம் மற்ற பெண்களுக்குக் கிடைக்கவில்லை நீதியும் கிடைக்கவில்லை.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

1 கருத்து:

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்