ஆர்.எஸ்.எஸ் - இன் கொலைவெறியை மறைக்கும் தினமணி நாளிதழ்

செய்தி விமர்சனத்துக்குப் போகும் முன் ஒரு சிறிய தகவல். 100% கல்விக்குப் பேர் பெற்ற கேரளா மாநிலம் தற்போது மதவெறி இயக்கங்களின் கட்சிகளின் வளர்ச்சிக்கும் அற்புதமான இடமாக இருக்கிறது. கடந்த மாதம் வீட்டிலேயே வெடிகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த RSS  தொண்டர் ஒருவர் அப்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமுற்று மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இது பரவலாக வெளியாகாத செய்தி.  இதே ஒரு முஸ்லிம் இயக்கத்தைச் சேர்ந்தவரோ அல்லது இயக்கம் சாராத முஸ்லிமோ செய்திருந்தால் என்னாவாகியிருக்கும். இந்தியா முழுவதும் ஊடகங்களுக்கு ஒரு வாரத்திற்கான பரபரப்புத் தீனி கிடைத்திருக்குமல்லவா ?

இதை வைத்து கேரளாவில் இந்துத் தீவிரவாதம் பயங்கரமாக வளர்ந்து விட்டது என்று சொல்ல வரவில்லை. அங்கே குண்டு வைத்துக் கொல்வது சாதாரணம் என்றும் சிலர் ஃபேஸ்புக்கில் பேசிக் கொள்வதையும் கேட்டேன். சிபிஎம் காரர்களும், பாஜகவினரும் வெட்டிக் கொண்டு சாவதும் அவ்வப்போது நடக்கிறது. ((

காந்திக்குப் பதிலாக நேருவைக் கொன்றிருக்க வேண்டும். இது ஆர்.எஸ்.எஸ் என்ற அகில இந்திய பயங்கரவாத இயக்கத்தின் கேரளப் பிரிவின் சார்பில் மலையாள மொழியில் வெளியாகும் "கேசரி" என்ற இதழில் வெளியான கருத்து ஆகும். இது பல்வேறு தரப்பிலும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் தோற்றுவித்துள்ளது. இதை ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ் பெருந்தலைகள் சொதப்பியும், மழுப்பியும் பதில் சொல்லி வருகின்றனர். அப்படி மழுப்பியதில் ஒன்று அதற்கும் ஆர்.எஸ்.எஸ் -க்கும் தொடர்பு இல்லை என்பது. இன்னொன்று காந்தி கொல்லப்பட்டதற்கான காரணமே நேருதானாம். என்ன ? காந்தி ஒரு கோழை. இந்துக்கள் முஸ்லிம்களால் கொல்லப்படக் காரணமானவர். ஆனால் இந்துக்கள் கலவரத்தில் ஈடுபடும்போது மட்டும் தடுத்தார். முஸ்லிம்கள் கலவரத்தைத் தொடங்கிய போது எதுவும் செய்யவில்லை என்பனவையே வழக்கமாக இவர்கள் பாடும் பல்லவி. அதானே. நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ் காரன் இல்லை என்று கூட அடித்து விடுபவர்கள்தானே இவர்கள்.
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மீதான தடையை நீக்கிய நேருவுக்கு இது தேவைதான்.
 

சரி அது கிடக்கட்டும். நமது தினமணி செய்திருக்கும் ஊழியத்தைப் பாருங்கள். தினமணியை மட்டும் வாசிப்பவர்கள் என்ன நினைப்பார்கள். அந்த கேசரி இதழில் வெளியான கருத்து என்னவென்றே தெரியாதளவுக்கு மறைத்து ஆர்.எஸ்.எஸ் இயக்கத் தலைவர்களின் மறுப்பை மட்டுமே முதன்மைப் படுத்தியுள்ளது. இதைப் படிப்பவர்கள் என்ன நினைப்பார்கள். ஆஹா இந்த மதச்சார்பின்மை மண்டூகங்கள் மீண்டும் சின்ன விசயத்தைப் பெரிதுபடுத்தி ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தையும், பாஜகவையும், மோடியையும் இழிவு படுத்தத் தொடங்கி விட்டார்கள் என்று மனக்குரலைக் கேட்டு புலம்புவார்கள்.

இதில் கடைசிப் பத்தியில் சிந்தனையிலோ செயலிலோ எவ்வித வன்முறையையும் ஆர்.எஸ்.எஸ் கண்டித்தே வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இதை ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் கண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வோம். ஏனெனில் அது அவர்களை இழிவு படுத்தும் செய்தியன்றோ !

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்