இந்திய விடுதலை நாளில் - இந்தியிடமிருந்து விடுதலை வேண்டி - ‪#‎StopHindiImposition‬

நேற்று இந்தியாவின் விடுதலை நாள் இந்தியா முழுவதும், இந்தியர் வாழும் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்பட்டது. அதே நேரம் ட்விட்டரில்  ஹிந்தித் திணிப்புக்கு எதிரான கருத்துக்களைத் தாங்கிய சுட்டுரைகள்/கீச்சுகள்/ட்விட்டுகள் ‪#‎StopHindiImposition‬ என்ற ஹாஷ்டாக் மூலமாக தொடர்ந்து பகிரப்பட்டு, அது ட்விட்டர் ட்ரென்டில் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் "பரபரப்பான" தலைப்பாக வைக்கப்பட்டது. பலமொழிகளிலும் வெளியிடப்பட்ட ட்விட்கள், வெளியிடுவதற்கென்றே சேமித்து வைக்கப்பட்டு பின்பு பகிரப்பட்டன. சிலர்  சொந்தக் கருத்துக்களையும் பகிர்ந்தனர்.


இதன் மூலம் மக்கள் தொடர்பு ஊடகங்களில் செய்தியாகவும் எதிர்பார்த்தபடி வந்தது. இதன் மூலம் ஹிந்தி தேசிய மொழி, இந்தியா முழுவதும் ஹிந்தி கட்டாயமாக்கப் பட வேண்டும், அனைவரும் ஹிந்தி படிக்க வேண்டும், இதன் மூலம்தான் இந்தியா ஒற்றுமையாக இருக்கும், கலாச்சாரம் காக்கப்படும் என்றெல்லாம் உளறி வரும் அனைத்து மொழி/அனைத்து வர்க்க/அனைத்து இன/அறிவிலிகள் முதல் அனைத்து மொழி/அனைத்து வர்க்க/அனைத்து இன/அறிவாளிகள் வரை எல்லாரிடமும் சிறு சலனத்தை ஏற்படுத்த முடிந்தது.


இன்னொரு முக்கியமான சேதி, இந்த இத்துப்போன தமிழன்தான் இந்தி எதிர்ப்பு பேசி நாசமானான், மற்றவர்கள் (தமிழல்லாத மற்ற தென்னிந்திய மாநிலங்கள்) எல்லாம் ஹிந்தி படித்து வளமாக வாழ்கிறார்கள் என்றெண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு - இந்தி ட்விட்டரில் அதிகமாக பங்கெடுத்தவர்கள் கன்னட ட்விட்டர்கள். இவர்கள்தான்  ஹிந்தித் திணிப்பால் அதிகமான பாதிப்படைந்த மாநிலக்காரர்கள். பெரும்பாலும் படித்த இளைஞர்கள்தான் இந்த ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பில் ட்விட்டியவர்கள்.

Promote Linguistic Equality: Hindi is Not the National language of India - மொழிச் சமத்துவத்தை பரப்பு - ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அன்று என்பதே இந்த ஃபேஸ்புக் குழுவின் பெயர். இதில் இந்தியா முழுவதுமிருந்தும் சில ஆயிரக்கணக்கான ஃபேஸ்புக் பயனர்கள் இணைந்துள்ளனர். இதில்தான் ஹிந்தித் திணிப்பு குறித்தும், "இந்தி"ய அரசின் நடவடிக்கைகள், ஊடகங்களின் நடவடிக்கைகள் குறித்தும் விமரசனங்களும், விவாதங்களும் நடக்கின்றனர். பிராந்திய மொழிகளின் வளர்ச்சி குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன.  இது ஹிந்தி மொழியின் மீது வெறுப்பை வளர்ப்பதற்காகவோ, ஹிந்தி பேசும் மக்களின் மீதான இனவெறியை வளர்ப்பதற்காகவோ இல்லை. தாய்மொழியைக் காக்கும் தற்சார்பு, தற்காப்பு உணர்வின் காரணமாகவே ஹிந்தி மொழி பல்வேறு துறைகளில் பல்வேறு வகைகளில் திணிப்பதை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலும் அனைத்து மொழிகளையும் அலுவலக மொழியாக அறிவிக்கப்பட வேண்டும். ஹிந்தி பேசுவோர்க்கு மட்டும் இருக்கும் சிறப்புரிமை ஆகியவை டிவிட்டரில் வந்த கருத்துக்களில் முதன்மையாக இருந்தன.

பஞ்சாபியர்கள் எப்படி ஹிந்தி பேசியதால் மொழியினை இழப்பார்கள் என்று விளக்கும் படம். நாமே சீக்கியர்களை ஹிந்தி பேசுவோர் என்றுதானே நினைக்கிறோம்.



ஊடகங்களில் இது குறித்து வந்த செய்திகள்

தி ஹிந்து வில் வந்த செய்தி

ஐபிஎன்லைவ் - இல் வந்த செய்தி

பலமொழிகளிலும் வெளியிடப்பட்ட ட்விட்கள் அனைத்தும் இங்கே உள்ளன. இதில் ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் (கன்னடம், தெலுங்கு, மராத்தி) வெளியிட்டவை அடங்கும். 

(படங்கள் அனைத்தும் ஃபேஸ்புக்-லிருந்து எடுக்கப்பட்டவை)
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

எமனின் வாகனங்கள்


வளர்ந்து விட்டது மனித இனம்
வகையின்றிப் பெருகின வாகனங்கள்
வரையறையின்றிப் போகின்றன விற்பனையகங்கள்
வன்முறையை நினைவுறுத்துகின்றன வேகங்கள்
உடல்வலியின்றிக் கொண்டு சேர்க்கின்றன மனிதனை
வழியின்றி தவிக்கின்றன வழித்தடங்கள்
வழிமாறித் தவிக்கின்றன வனஇனங்கள்
வழிகொடுக்காமல் செல்கின்றன சிலஇனங்கள்
சமிக்ஞையை சட்டை செய்யாத சாகசங்கள்



எங்கெங்கு காணினும் வாகனமே
அதன் மேலே செல்லுது எல்லாக் கணமுமே
சாலையில் செல்பவனுக்கு எப்போதும் வரும் திவசம்
இருப்பினும் அணியான் தலைக்கவசம்


பேருந்துகளில் பிதுங்கித் தொங்குகின்றனர்
வல்லுந்துகள் வர்ரென்று போகின்றன
சர்ரென்று போகின்றன சரக்குந்துகள்
சீரற்றுப் போகும் சீருந்துகள்
மளமளவென்று மறையும் மகிழுந்துகள்

மாதமொரு மாதிரிகள் மன்றத்திலே
மகிழ்வுடன் அறிமுகப்படுத்தும் மாதர்கள்
மனமயக்கத்தில் வாங்கித் தள்ளும் மானிடர்கள்

நடப்பதெல்லாம் முற்காலம்
தடுக்கிவிழும் தூரமும் வண்டியிற்
கடப்பதெல்லாம் இக்காலம்

குளிர் மோர் குடித்தே முப்பாட்டன்
கலைப்பையுடன் களமாடிய காட்டினை
கண்டமாக்கி விற்றுக் காசாக்கி
குளிரூட்டி மகிழுந்து வாங்கி ஆயாசத்
தற்படமெடுக்கும் தற்காலத் தலைமுறை

அமெரிக்க தயாரிப்பை அம்மன் துணையும்
ஜப்பானின் தயாரிப்பை ஜாதிக்கொடியும்
ஜெர்மனியின் தயாரிப்பை கட்சிக் கொடியும்
அழகூட்டி உலாச் செல்லும் அழகும்
விபத்து இயற்கையின் முடிவுபோல்
எதிலும் முடியும் யாருடைய விதி
இன்று இதுதான் நீதி

நடப்பன ஊர்வன பறப்பன
உயிர்களின் உயிரில்லா உடல்களும்
சாலையில் நசுங்கிக் கிடக்கின்றன
என்னை எச்சரித்து
உச் கொட்டியபடியே
என் நாள் எந்நாளோ என்று இதயம்
உடைந்து கடந்து கொண்டிருக்கிறேன்
எல்லா இறப்புகளையும்

ஆம் எருமையில் மட்டுமல்ல
எமன் எல்லா வாகனங்களிலும்
கண்ணுக்குத் தெரியாமல்
அமர்ந்திருக்கிறான்





Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

போர்னோகிராஃபி - மனிதத் தன்மையற்ற செயல்

இது குறித்து  எழுத வேண்டும் என்று நெடுநாட்களாக அன்று வருடங்களாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். போர்ன் படங்களை ஆதரித்துப் பேசவும் என்னிடம் காரணங்கள் உண்டு. ஆனால் அது நேர்மையாகாது. என்னுடைய தேவையைப் பொறுத்து, என்னுடைய விருப்பங்களைப் பொறுத்து எனது கருத்து இருக்கக் கூடாது என்று விரும்புகிறேன். அதனால் பிறிதொருவர் சீரழியக் காரணமாக இருப்போம் என்ற உணர்விலிருந்து சொன்னால் போர்னோகிராஃபி என்பது மனிதத் தன்மையற்ற செயலே ஆகும். ஃபேஸ்புக்கில் படித்த இரண்டு இடுகைகளை இங்கே கொடுக்கிறேன். இதில் ஒன்று போர்ன் தடை செய்யத் தேவையில்லை என்று வாதிடுகிறது எனினும் அதன் மற்ற கருத்துக்களுக்கு மரியாதை செய்யும் விதமாக அதை இங்கே பதிகிறேன். இதை விடச் சிறப்பாக என்னால் சொல்லிவிட முடியாது. 

இடுகை ஒன்று - எழுத்தாளர் ஷோபா ஷக்தி

இந்தியாவில் 'போர்ன்' இணையத்தளங்கள் தடை செய்யப்படலாமா கூடாதா என்ற விவாதங்களைக் கவனித்தபோது ஒன்று சொல்லத் தோன்றுகிறது.
போர்ன் இணையத்தளங்களை தடைசெய்யக்கூடாது எனச் சொல்பவர்கள் தனிமனித சுதந்திரம், மேலைநாடுகளில் தடையில்லை, சிறுவர்கள் இவ்விணையங்களைப் பார்க்காமல் ஒழுங்குபடுத்தினால் போதுமானது என்றெல்லாம் சொல்கிறார்கள். இந்த சொல்விற்பனர்கள் அதிமுக்கியமான விடயங்களைக் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள்.
இன்று உலகில் நடத்தப்படும் மனிதக் கடத்தல்களில் எண்பது விழுக்காடு கடத்தல்கள் பாலியல் வணிகத்திற்காகவே நடத்தப்படுகின்றன. ஜப்பானில் தொடங்கி இங்கிலாந்து அமெரிக்காவரை இந்தக் கடத்தல் தொழில் கொடிகட்டிப்பறக்கிறது. சர்வதேச மாஃபியாக்களின் கையிலிருக்கும் இந்த வணிகம் போதைப்பொருள், ஆயுதக்கடத்தல் போன்றவற்றிற்கு இணையாகப் பணம் புழங்கும் தொழிலாகயிருக்கிறது. போர்ன் இணையங்களில் வெளியாகும் காட்சிகளில் இவ்வாறாகக் கடத்திக்கொண்டு வரப்படும் பெண்களே பெரிதளவில் நடிக்கவைக்கப்படுகிறார்கள். இணையங்களின் வருகையோடு போர்ன் தொழிலும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. அதற்கேற்ப கடத்தப்படும் பெண்களும் சிறுமிகளும் அதிகரித்துள்ளார்கள்.
சிறுமிகளையும் சிறுவர்களையும் பாலியல் பண்டங்களாகக் காட்சிப்படுத்தும் ஏராளமான இணையத்தளங்கள் உள்ளன. இவற்றை அரசுகளால் இன்றுவரை கட்டுப்படுத்த முடியாமலேயே இருக்கின்றது. சிறுவர் பாலியல் இணையங்களும் பல்லாயிரக்கணக்கில் புதிது புதிதாகத் தோன்றியவண்ணமேயுள்ளன.
போர்னோவில் 'அடிமைகள்', 'அடித்தல்', 'அவமானப்படுத்தல்', 'விலங்குகளோடு புணர்ச்சி' என்றெல்லாம் ஏராளம் வகைப்பாடுகளுள்ளன. சட்டவிரோதமாக அல்லது ஏமாற்றி அழைத்துவரப்படும் பெண்களும் இந்தப் படங்களில் நடிக்க வைக்கப்படுகிறார்கள். இதைவிடக் கொடுமை என்னவென்றால் உண்மையாகவே பெண்கள் மீது சித்திரவதையை நடத்தி அதை இரத்தமும் பாலும் வழிய இணையங்களில் போடுகிறார்கள்.
பாலியல் விடுதிகளிலே அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கும் சிறுமிகள் மத்தியில் 'வன்முறை செக்ஸ்' குறித்த அச்சத்தைப் போக்கவும் வாடிக்கையாளரின் எந்த விருப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே என்பதைச் சிறுமிகளின் மனதில் படியச் செய்யவும் போர்ன் படங்களே பெரிதும் உபயோகிக்கப்படுகின்றன. இத்தகைய அடிமைச் சிறுமிகள் இருக்கும் விடுதிகளில் இந்தப் போர்னோ படங்கள் இடைவிடால் ஓடவைக்கப்படுகின்றன.
போர்னோவில் நாம் காணும் காட்சிகள் பெரிதும் மிகையானவை மற்றும் போலியானவை. இத்தகைய காட்சிகளில் வன்முறை இருப்பது பொதுவானது. இக்காட்சிகள் மெதுமெதுவாக மனித மனதில் பாலுறவு குறித்த இயல்புக்கு மாறான வன்முறைச் சித்திரத்தைப் பதிய வைக்கிறது. அது குடும்ப வன்முறையாக நீட்சியும் பெறுகிறது. போர்ன் படங்களைத் தொடர்ச்சியாகப் பார்ப்பது மனச்சமநிலையைச் சரித்துவிடுகிறது என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.
இவ்வகைப் போர்னோ இணையத்தளங்கள் எல்லாமே 'Hidden camera' என்றொரு வகையை வைத்துள்ளார்கள். குளியலறைகளில், படுக்கையறைகளில், தங்குவிடுதிகளில், மசாஜ் சென்டர்களில், ஆடை அங்காடிகளில் சம்மந்தப்படவர்களிற்குத் தெரியாமலேயே எடுக்கப்படும் படங்கள் இப்பிரிவில் இணையங்களில் பதிவிடப்படுகின்றன. பாதிக்கப்பட்ட எத்தனையோ பெண்களும் குடும்பங்களும் தூக்கிலே தொங்கியிருக்கின்றன. அவமானத்தால் உயிருடன் செத்தவர்கள் பல இலட்சம். இதற்கெல்லாம் எந்த அரசாங்கமும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
போர்ன் இணையத்தளங்களிற்குப் பின்பு இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது போர்ன் இணையங்களைத் தடைசெய்யக்கூடாது எனச் சொல்வதில் ஏதும் நியாயங்கள் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நம்முடைய சில நிமிட காட்சியின்பத்திற்காக பெண்களும் சிறுமிகளும் கடத்தப்படுவதும் வதைக்கப்படுவதும் மனநிலை சரிவதும் மறுபுறத்தில் மாஃபியாக்களும் இணைய முதலாளிகளும் கொழிப்பதும் எதுவிதத்திலும் நியாயமற்றதென்றே நினைக்கிறேன்.
நாளை நீங்கள் அல்லது உங்கள் பிள்ளைகள், துணையோடு சம்போகத்தில் ஈடுபடும் காட்சி இவ்வகை இணையத்தளங்களில் 'லைவ்'வாக ஒளிபரப்பப்படுவதற்கு எல்லாவகையான சாத்தியங்களும் உண்டென்பதை மறவாதீர்கள்.

இடுகை 2 - உமாமகேஸ்வரன் பன்னீர் செல்வம் 

ரயில் ரோடு ஓரம் மலம் கழித்த அனுபவம் இருக்கிறதா ?குறைந்தபட்சம் திறந்தவெளியில் ? பதறவேண்டாம் .சத்தியமாக nostalgia போஸ்ட்டோ , melodrama போஸ்ட்டோ இல்லை.
1.மதுரை, சென்னை போன்ற ஊர்கள், சில சிறுநகரங்களில் ரயில்ரோடு நுழையும் முன்பு சேரிகள், அதிகமாக முன்னேறாத ஊர்கள் வழியாக கடந்து வரும் . அதிகாலை வேளைகளில் அங்கே ரயில்ரோடு ஓரம் மலம் கழிக்க வரும் ஆண்கள் பெரும்பாலும் ரயில் கடக்கும்போது எவ்வித பிரச்சினையுமின்றி மலம் கழிப்பார்கள். புட்டத்தை ரயில்போகும் பாதை பக்கம் திருப்பி அமர்ந்துகொண்டால் போதுமானது. யார் பாக்கிறார்கள் என்ற கவலை எல்லாம் பெரிதாகத் தோன்றாது. பெண்களின் பாடு அப்பேர்பட்டது அல்ல. என்னதான் அதிவேகமாகக் கடக்கும் எக்ஸ்ப்ரெஸ் ரயிலாக இருந்தாலும் , மலம் கழித்துக்கொண்டிருக்கும் பெண்கள் ரயில் கடக்கும்வரை மலம் கழிப்பதை நிறுத்திவிட்டு எழுந்து நிற்பார்கள்.
போனா போவுது.. கொஞ்ச நேரம் தானே என்று எந்த பெண்ணும் காட்டிக்கொண்டு இருந்து நான் பார்த்ததில்லை.இவ்வளவு இருந்தும் ஏன் மீண்டும் ரயிலடி ஓரம் கலைக்கடனுக்கு ஒதுங்குகிறார்கள் என்றால் அவர்கள் குடியிருக்கும் பகுதியில் உருப்படியான கழிப்பிட வசதி இருக்காது. இருந்தாலும் சரியாக பராமரிக்கப்பட்டிருக்காது. கழிப்பிடவசதி குன்றியிருக்கும் ஊர்களில் பெரும்பாலும் இத்தகைய இடர்பாடு சாதாரணம்.
2. மூன்று வருடங்களுக்கு முன்பு வேலைவெட்டி இல்லாமல் வீட்டில் இருந்த காலத்தில் மதியம் ஒருமணி வாக்கில் வீட்டு காலிங் பெல்லை ஊதுபத்தி , வாசனைத் திரவியங்கள் விற்கும் பெண்ணொருவர் அடித்தார். உள்ளூர “ இவிங்க யாராச்சும் ஆட்டைய போடுற க்ரூப்பா இருப்பாய்ங்களோ ?” என்ற பயம் எனக்கு எப்பவும் இருப்பதால் ஊதுபத்தி, அனாதை ஆசிரமம், வாய்ப்பேசாத குழந்தைகள், encyclopedia ஆட்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் பெரியதாக பேச்சு குடுக்கவோ, பொருட்கள் வாங்கவோ மாட்டேன். அன்றும் அதே போல் அந்த பெண்மணி எவ்வளவோ கேட்டும் எதையும் வாங்கவில்லை. கொஞ்சம் தண்ணி கெடைக்குமா என்று கேட்டவர் , தயங்கியபடி “ சார் உங்க பாத்ரூம் கொஞ்சம் யுஸ் பண்ணிக்கட்டுமா ?” என்றார். கண்டிப்பா பண்ணிக்கோங்க என்று சொல்லவும் பயன்படுத்திக்கொண்டார். பின்பு யோசித்துப் பார்த்தபோது யாரென்று தெரியாத ஆளிடம், அதுவும் விற்பனைக்கு சென்ற இடத்தில், ஆடவரிடம் “உங்க பாத்ரூம் யூஸ் பண்ணிக்கவா “ என்று கேட்க எவ்வளவு சங்கோஜப் பட்டிருப்பார் என்று யோசித்தேன். சேல்ஸ் ஆட்கள் என்றாலே திருடர்கள், வீட்டில் என்ன இருக்கிறது, வீட்டு blue pint எப்படி என்று உளவு பார்க்க வருகிறவர்கள், போன்ற நம்பிக்கைகள் “ மயக்க மருந்தடித்து 13 சவரன் நகைகள் கொள்ளை “, தனியே இருந்த மூதாட்டியின் காதை அறுத்து பாம்பாடம் களவு “ போன்ற செய்திகள் உலவுவதை விற்பனைப் பிரதிநிதிகளும் அறிந்திருப்பார்கள். படாரென சாத்தப்படும் கதவுகளையும் சேர்த்து “ இது திருட்டு கேசோ ? “என்ற பார்வையையும் அவர்கள் அறியாமலிருக்க மாட்டார்கள். வீட்டில் இருக்கும் ரத்த சம்பந்தங்களிடமே மலம் கழிக்கவோ , சிறுநீர் கழிக்கவோ செல்கிறேன் என்று சொல்லாமல் “பாத்ரூம் போறேன் “ என்று சொல்லும் ஆட்கள் அனேகம்.இப்படி எல்லாம் இருக்க யாரோ ஒரு அந்நியனிடம் உங்க பாத்ரூம் யூஸ் பண்ணிக்கட்டுமா ? என்று ஒரு பெண் கேட்கிறார் என்றால் காரணம் சிம்பிள்.
பொதுவெளியில் ஆண்கள்போல் பெண்கள் ஜாலியாக நினைத்த நேரத்தில் சிறுநீர் கழிக்க இயலாது. டிரான்ஸ்பார்மர் ம் சுவர் என தோணும் இடத்தில் எல்லாம் “M A G E S H “ என்று சிறுநீரால் எழுதி எல்லாம் விளையாட முடியாது..என் வீட்டிலிருந்து பஸ் ஸ்டாண்ட் 3 கிலோ மீட்டர்கள். பஸ் ஸ்டாண்டில் மட்டுமே பொதுக்கழிப்பிடம் உண்டு.. அதில் கிமு.4 ஆம் நூற்றாண்டில் யாரோ பொழிந்துவிட்டு போன மலம் நீர் ஊற்றி சுத்தம் செய்யப்படாமல் இருக்கும் அங்கே சென்று மலம் கழிப்பது சாத்தியமில்லை. வேறு வழியே இல்லாமல் வெட்கத்தைவிட்டு கேட்டார் .ஓருவேளை எங்காவது கழிவறையைப் பயன்படுத்த அனுமதிக்கும் மூஞ்சி தேடி பல வீட்டு கதவுகளைத் தட்டிக்கொண்டு வந்தாரோ என்றும் யோசித்தேன்.
3.சென்னை- திருச்சி- மதுரை அரசு பேருந்தில் செல்பவராக இருந்தால் விக்கிரவாண்டி அல்லது தொழுதூர் இரண்டில் ஒரு ஊரில் கட்டாயம் வண்டி நிறுத்தப்படும். அரிஸ்டோ, ஹில்டா என ஏதாவது ஒரு ஹை ஃபை பெயரில் ஆளும்கட்சி புள்ளி ஒருவரால் நடத்தப்படும்.தோசை 60, பரோட்டா 80 ரூபாய்,,100 ரூபாய் கொடுத்தால் மீதி 20 வராது என்பதை எல்லாம் விடுங்கள். அங்கே இருப்பது போல் கேவலமான கழிப்பிடங்களை வேறு எங்கும் இருக்க வாய்ப்பில்லை.அனேகமாக நாஜி கட்சியினர் விக்கிரவாண்டி , தொழுதூர் மோட்டல் டாய்லெட்டில் புகுந்தபின்னரே வதைமுகாம்களில் holocaust செய்து யூதர்களை விஷவாயு மூலம் சாகடிக்கும் யோசனை பெற்றிருப்பார்கள். அந்த அளவுக்கு துர்நாற்றம் வீசும் இடங்கள். Perfume என்ற அயல்தேசப் படத்தில் கதாநாயகன் மோப்பம் பிடித்துக்கொண்டே அலையும் காட்சி பார்க்கும்போதெல்லாம் “கண்டார ஓ நாயே உன்னைய எல்லாம் விக்கிரவாண்டி மோட்டல் கக்கூஸ்ல மோப்பம் பிடிக்க விடனும்டா “ என்று நக்கல் அடித்திருக்கிறோம் என்றால் விக்கிரவாண்டி, தொழுதூர் கழிவறைகள் எவ்வளவு கீழ்த்தரமானவை என்று யூகித்துக்கொள்ளுங்கள்.
அங்கே இருக்கும் சில கழிவறைகளின் வடிவமைப்பு ஆச்சரியமானதாக இருக்கும். ஆண்கள் பெண்கள் என bifurcation இருந்தாலும், outlet இரண்டுக்கும் பொதுவானதாக இருக்கும். அதாவது ஆண்கள் இந்த பக்கம் சிறுநீர் கழித்தால் , நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால்வழியோடி புல்லுக்கும் அங்கே பொசிவதைப்போல் பெண்கள் கழிவறை பகுதிக்கு சிறிய outlet வழியாக சென்று பின்பு வெளியே போகும்வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும். ஆண்களைப்போல் பெண்கள் அனைவரும் நின்றுகொண்டே சிறுநீர் கழிக்கும் ஆட்கல்லல ( புடவைக் கட்டிய சில பெண்கள் தவிர்த்து ). சல்வார், ஜீன்ஸ் அணிந்திருந்தால் குத்த வைத்துதான் கழித்தாக வேண்டும். இருக்கும் ஒரே ஒரு மூடிய கழிவறையும் vacant ஆக இருக்கும் சாத்தியக்கூறுகள் குறைவு என்பதால் வேறு வழியும் இருக்காது. பெண்ணுறுப்பு இப்பேர்ப்பட்ட சுகாதாரமற்ற இடங்களில் எந்த அளவுக்கு அசுத்தமான outlet அருகில் expose ஆகும் என்று யோசித்துக்கொள்ளுங்கள். சரி இதுதான் இப்படி, வெளியே எங்காவது நைசாக நகர்ந்து போய்விடலாம் என்றால் , அங்கே ஆள் வைத்து விசில் ஊதி லத்தி வைத்து விரட்டுவார்கள். எல்லோர் முன்பும் மானம் போகும் என்பதால் இங்கே தான் கழித்தாக வேண்டும். அல்லது அடக்கிக்கொண்டு இருந்தாக வேண்டும்.
சில சிடுமூஞ்சி கண்டக்டர்கள் எவ்வளவு கெஞ்சினாலும் சிறுநீர் கழிக்க வண்டியை நிறுத்த மாட்டார்கள். குளிர் காலத்தில் முட்டிக்கொண்டு வரும்போதுகூட ஒருமுறை மட்டுமே வண்டி நிறுத்துவார்கள். சில வேளைகளில் காலி பிஸ்லரி பாட்டில் எடுத்துக்கொண்டு கடைசி சீட்டில் அமர்ந்து “ஸ்பீடு பிரேக்கர் வரக்கூடாது ஆண்டவா “என்று வேண்டிக்கொண்டே வேலையை முடித்திருக்கிறேன். இந்த இடங்களில் தான் சாப்பிட்டு ஆகவேண்டும். நீ வெளியில் மூத்திரம் அடிக்கக்கூடாது. நான் காட்டும் கேவலமான இடத்தில் தான் நீ ஜிப்பை அவுக்கவேண்டும் என்று நிர்பந்திப்பது அரச பயங்கரவாததில் கண்டிப்பாக சேரும். இப்படி டாய்லட் பிரச்சனையால் தண்ணீரே குடிக்காமல் பயணம் செய்யும் பெண்டிர் ஏராளம். தண்ணீர் குறைவாக பருகினால் உடம்பில் எனென்ன வளர்சிதை மாற்றங்கள் நடக்கும் என்பதை கூகிள் செய்துகொள்ளுங்கள். ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்த என் ஊர்க்காரர் “ சூப்பர்வைசர் வேணும்னே எல்லார் முன்னாடியும் வச்சி என்னா பாப்பா அவ்ளோ நேரம் கக்கூஸ்ல என்ன பண்ணுற ?”ன்னு கேட்டு அசிங்கப்படுத்துறான்” என்றார். இப்படிப்பட்ட ஆட்களையும் பெண்கள் சமாளித்து தான் ஒன்றுக்கு செல்லவேண்டிய சூழல் இருக்கிறது.
இந்தியாவை diabetic capital of the world என்று ஜாலியாக குறிப்பிடுவார்கள். அத்தனை சக்கரை நோயாளிகள் உண்டு. அவர்களுக்கு மூத்திரம் அடக்குவது என்பது அத்தனை சிரமம். ஆனால் இவ்வளவு நோயாளிகள் இருந்தும், இத்தனை மக்கள்தொகை இருந்தும் people to Toilet ratio கண்டிப்பாக அதலபாதாளத்தில் தான் இருக்கும். பிட்டு படங்கள் சரளமாக புழங்கும் மேலை நாடுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு என்று பிரத்யேக கழிவறைகள் உண்டு. யாருடைய உதவியும் இன்றி ஜம்மென்று அவர்கள் கழிப்புக்கு சென்றுவிட்டு வரலாம். தனியான கழிப்பறைகள், தனி பேருந்து இருக்கைகள் , லிப்ட் வசதி, ramp என மாற்றுத்திறனாளிகளுக்கு என்று எல்லாமும் உண்டு. நமது ஊரில் மாற்றுத்திறனாளிகள் கழிவறை sophisticated mall களில் கூட வந்த பாடில்லை. உலகின் இரண்டாவது மிகப்பெரிய employer என சுட்டப்படும் இந்தியன் ரயில்வேயில் மாற்றுத்திறனாளிகள் கழிவறையைப் பயன்படுத்த என்ன ஏற்பாடுகள் செய்திருக்கிறது? கக்கூசை விடுங்கள். Elevated stairs இருப்பதால் கை கால் நன்றாக இருக்கும் ஆட்களே முக்கி மேலேறும்போது மாற்றுத் திறனாளிகள் எந்த அளவுக்கு சுயமாக ஏறுவார்கள்.ரயிலில் கழிவறை என்பது ஒரு மாற்றுத்திறனாளிக்கு எவ்வளவு பெரிய Nightmare?. மாற்றுத்திறனாளி பெண்ணாய் இருக்கும் பட்சத்தில் இந்த ரயில்வே கழிவறை பயன்பாட்டின் இடர்பாடு magnify ஆகுமா ஆகாதா ?
மேற்கூறிய அனைத்தும் பிட்டு படங்களை எல்லாம்விட பெண்களை கேவலப்படுத்தும் சமாச்சாரம். பிட்டு படங்கள் சமூகத்தை சீரழிக்கின்றன என்றால் மேலே இருக்கும் சமாச்சாரங்கள் A** F*** செய்கிறதா இல்லையா ? 
சராசரி குடிமகனின் குஞ்சாமணிக்கு , பெண்ணின் யோனிக்கு அரசு தரும் மதிப்பு இவ்வளவு தான் என்கையில் Porn வெப்சைட் எல்லாம் சமூகட்ட்தைக் கெடுக்கின்றன என்று சொல்வது சூ வில் சிரிப்பு வரவைக்கும் நகைமுரண் இல்லையா ?
காரமான ஆந்திரா மிளகாயைக் கடித்ததைப் போல் முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு yes yes yes, oh god, oh yeah என்பதை விதவிதமான permutations னில் கத்தும் பெண். ஆஆஆஆஆஅர்ர்ர்ர என்று பிரசவ வேதனையில் கத்துவது போல் கத்தும் ஆண் இதையெல்லாம் பார்த்து சிரிப்பு வரல ?


aunty, bhabi, போன்ற வார்த்தைகள் சும்மா தேடினால்கூட இந்திய பிட்டுகள் எல்லாம் தான் வரும். கேவலமான 1 MP camera இருக்கும் செல்போனை வைத்துக்கொண்டு எப்படியாவது எதையாவது பிட்டு விடியோ ஆக்கவேண்டும் என்று அலைவது இந்திய சிங்கங்கள் தான். அப்பேர்ப்பட்ட இந்திய பிட்டு சைட்டுகள் எல்லாம் சுதந்திரமாக உலாவவிட்டு, அயல்தேச பிட்டு மட்டுமே தடை செய்வது இன்னொரு நகைமுரண். 


Sylvia saint, Terra Patrick, Rocco Siferedi போல் “செய்து” பார்த்தவர்களைவிட WWE மூவ் எல்லாம் செய்து பார்த்தவர்கள் தான் ஏராளம்.பிட்டு பாக்குறவன் எல்லாருமே ரேப் செய்கிறான் என்றால் இந்நேரம் WWE பார்த்த அனைவரும் ரோட்டு சண்டையில்கூட Rock Bottom போட்டுக்கொண்டு இருக்கவேண்டும். எல்லாருமே John cena, Brock lesnar போல் திரிந்துகொண்டு இருக்கவேண்டும். கொஞ்ச நாள் முன்னர் ஹீரோயின் அம்மாவை செம்ம கட்டை, வீட்டுக்காரன் வாழ்ந்திருக்கான், centering வேல இப்பதான் பாத்தாங்களா என வில்லன் நடிகர் பேசுவது போல் ஒரு பிரபல டிவியின் சீரியலில் ஓடியது. குழந்தைகள் எளிதில் பார்க்கும் இந்த மாதிரியான விஷயங்களை எல்லாம் கண்காணிக்க ஆளே இல்லை. “A “ என சர்டிபிகேட் வாங்கிய படத்துக்கு எளிதில் சிறுவர்களை நாம் அழைத்துசென்று படம் பார்த்துவிட்டு வரமுடியும். A என்றால் பிட்டு இல்லை. வன்முறைக் காட்சிகள் நிறைந்த படம். பிட்டு தாரளமாக புழங்கும் மேலை நாடுகளில் இப்படி சிறுவர்கள் எல்லாம் A படம் பார்க்க முடியாது. பெற்றோர்களும் அழைத்து செல்ல மாட்டார்கள் இங்கே தியேட்டரில் அப்படி எந்த regulation இருக்கிறதா ? PG எனப்படும் Parental Guidance பற்றி தீவிரமான ஆலோசனை இங்கே உண்டா? சிறுவர்கள் பார்க்கும் சீரியல், Hip Gyrating songs with pseudo sexual movements பற்றிய கவலை எல்லாம் இங்கே இல்லை. இதில் Porn மட்டும் தடை செய்கிறேன் என்பது மிகப்பெரிய காமெடி.
Sex, Porn எல்லாம் எங்கு எளிதில் கிடைக்க வாய்ப்பில்லையோ அங்கே தான் அடக்கி வைக்கப்பட்ட இச்சை வெறியாக மாறுகிறது. உலகமெங்கும் உள்ள military troops எங்காவது வேறு நாட்டுக்குள் நுழையும்போது இதெல்லாம் அசால்ட்டாக வெளியே ஓடிவந்து வன்கலவி, சிறுமிகளை வன்கலவி செய்வது என வெளிப்பட்டுவிடுகிறது. Special mention to Indian Army.
கொசுறு : பெண் சிசுக்கொலைகள் பரவலாக செய்து Male: Female gender ratio வை காமெடி ஆக்கிவிட்டு , எஞ்சியுள்ள ஆண்களுக்கு pornனும் கிடையாது என்றால் அவர்கள் கதி என்ன என்பது குடையும் கேள்வியாக இருக்கிறது


4. கடந்த சில மாதங்களாக (6 மாத அளவில் ), பிரபல பிட்டு இணையதளங்கள் ஒரு காரியத்தை செய்திருக்கின்றன. Drunk , passed out, druged, date rape, rape போன்ற keyword போட்டு பிட்டு வீடியோக்கள் தேடினால் result not found , no videos matching your search என்று காட்டத்தொடங்கி நெடுநாட்கள் ஆகிவிட்டன. அதாவது வன்புணர்வு எங்கெல்லாம் சாத்தியம் , எத்தகைய தேடுதல்கள் வன்கலவியை ஊக்குவிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்றாய்ந்து அத்தகைய வீடியோ பதிவுகளை ஏற்கனவே தடுத்து நிறுத்திவிட்டன பிட்டு இணையதளங்கள். 80 களில் மிகவும் பரபரப்பாக இருந்த snuff movies ( கொடூரமான, கலவிக்குப் பின்னர் பெண்ணைக் கொல்லுதல் போன்ற பிட்டு வகையறா. இன்டர்நெட் பிரபலமாகாத 90 களில் கூட அத்தகைய படங்கள் சுலபமாக கிடைப்பதில்லை என்று ஹாய் மதன் சொல்லியிருந்தார் ) ஒன்றே ஒன்றுகூட இன்றைய பிட்டு வெப்சைட்டில் பார்க்க முடியாது. கொஞ்சம் ட்ரெஸ் குறைந்த சினிமா இண்டஸ்ட்ரி போல் தான் பிட்டு இண்டஸ்ட்ரி செயல்படுகிறது.
மேலும் பிட்டு வீடியோக்களில் “ the people involving in these scenes are over 18 “ என்ற டிஸ்க்ளைமர் இல்லாமல் இல்லை. Child Pornography யை அதிகரிக்க செய்வதாக பிட்டு வெப்சைட் மீது குற்றம் சொல்கிறார்கள். உண்மை யாதனில் child sex, child porn, sex with children,போன்ற keyword குடுத்து google search செய்தால் கூட வெளியூர்களில் அந்த IP Track செய்யப்படும். மேலும் Child pornography யை பப்ளிஷ் செய்வதோ, கடைபிடிப்பதோ காட்டுத்தனமான தண்டனையைப் பெற்றுத் தரும். எந்தவொரு பிட்டு சைட்டிலும் குழந்தைகளுடன் செய்யும் செக்ஸ் மறைமுகமாக கூட இருக்காது.Live Cams, Glory holes, என என்னெனவோ pop ups வந்தாலும் child, children என பிட்டு இணையதளங்களில் பார்க்கவே முடியாது. பார்ன் இண்டஸ்ட்ரி மக்களின் மூளையுடன் விளையாடும் சமாச்சாரம்.Dancing to the tunes of people s fantasies. பல நேரம் கலவி, கொடூரமான ட்ரெஸ், எல்லாம் , 18 இன்ச் ஆணுறுப்பு , Bukkake எல்லாம் அச்சு அசலான உண்மை என்று நம்பினால் அவர் WWF உண்மை என்று நம்பும் ஆளாகத் தான் இருக்கவேண்டும். மனசை தொட்டு சொல்லவேண்டுமானால் இணைய பிட்டுப்படங்கள் அனைத்தும் சிரிப்பை வரவைக்கும் ரகம். 
பிட்டு படங்களில் மிகவும் கவனிக்கவேண்டிய அம்சம் Homemade, amateur , hidden cam என்ற Tag வைத்து வரும் படங்கள் தான் . தனிமனித சுதந்திரத்தை கொச்சைப் படுத்தியோ, கலவியில் ஈடுபடும் நபருக்குத் தெரியாமல் எடுத்து பப்ளிஷ் செய்யப்படுவது எல்லாம் இந்த கேட்டகரியில் தான். முன்னது Porn என்றால் பின்னது scandal. சவால் விட்டு சொல்கிறேன். எந்த பிட்டு சைட்டுக்கு நீங்கள் சென்றாலும் இந்த கேட்டகரியில் அதிகம் வீடியோ அப்லோடு செய்திருப்பது இந்தியர்கள் தான். வெள்ளைக்காரன் லவ்வர்கள் கில்மாவாக இருக்கும் வீடியோவை ரிலீஸ் செய்தால் “ with tuition student, prof doing school girl “ என சைல்ட் பார்ன் என்கரேஜ் செய்வது இந்தியர்கள் தான். 
5. நியாயப்படி வெறிகொண்டு, சேர், ஏணி, கார்ல கட்டை, செம்ம கட்டை , நாட்டு கட்டை என கையில் எது கிடைத்தாலும் எடுத்து அடித்து ரத்தக்களறி ஆக்கும் WWE சாதரணமாக புழங்குகிறது. பிட்டு சைட் பார்க்கத்தொடங்கும் முன்னரே WWE பார்த்து அதை இமிடேட் செய்யும் சிறுவர்கள் அநேகம் . Rock Bottom, Stone cold stunner, Hitman ‘s Boston crab, DDT, Suplex choke slam , Spear எல்லாம் முயன்று பார்க்காத ஆள் யார் ?. 
சான்ஸ் கிடைத்தால் Mussolini’s Barber (Graeme Donald ) புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். அதோடு மட்டுமல்லாமல் இரண்டாம் உலகப்போரில் French விலைமாதர்களிடமிருந்து Syphilis நோய் தொற்றை நாஜிப்படையினர் வேகமாக வாங்கிக்கொண்டு இருந்தார்கள். அதைத் தடுக்கும்பொருட்டு Siliconeனால் செய்யப்பட்ட Blow up sex dolls , அதாவது காற்று நிரப்பினால் பெண்போல் தோற்றமளிக்கும் பொம்மைகள் சப்ளை செய்ய ஹிட்லர் உத்தரவிட்டார். இதன்மூலம் பிரெஞ்ச் விலைமாதர்களிடமிருந்து நோய்த்தொற்று வாங்காமல் நாஜிவீரர்கள் தப்பிப்பார்கள், அடக்கிவைத்த காம இச்சை காரணமாக வீடுபோய் சேரவேண்டும் என்று எண்ணம் வந்து போரில் சோடை போகமாட்டார்கள் என்றும் ஹிட்லர் எண்ணியதாக குறிப்பு உண்டு. 1940 களில் அனேக வீரர்களின் உயிரைக் காப்பாற்றியதில் penicillin னுக்கு நிகரான பங்கு செக்ஸ் பொம்மைகளுக்கும் உண்டு. அடக்கிவைக்கப்பட்ட காமத்தைக் கண்டு அரசாங்கங்களே அஞ்சிய கதைகள் அவை.
சில யோகா ஆசிரமங்கள், பாதிரி கோஷ்டிகள் எல்லாம் கில்மா கைவரிசைக் காட்டுவது இப்படி ஆசையை அடக்கி நாங்கள் celibates என்று உட்டாலக்கடி விடுவதால் தான். வெளியே நடக்கும் Porn விட இத்தகைய ஆட்கள் மூளைக்குள் நொடிக்கு நொடி porn தான் ஓடிக்கொண்டே இருக்கும். அத்தகைய கோஷ்டிகள் எல்லாம் ஜாலியாக இங்கே உலாத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். Good touch Bad touch பத்தி தெரியும் முன்னரே சிறுவர்கள் எங்கையாவது ஒரு யோகா மாஸ்டரின் எவ்வித கண்காணிப்புமின்றி summer camp பில் விடப்படுகிறார்கள். சிறுவர்களுடன் வேலை செய்யும் எந்த பணியாக இருந்தாலும் அவர் மேல் proven criminal, proven paedophilic ரெக்கார்ட்ஸ் இருக்கிறதா என்று வெளியூர்களில் அதிதீவிரமாக பரிசோதிப்பார்கள். அத்தகைய பரிசோதனை எல்லாம் அரசு செய்கிறதா ? அரசை விடுங்கள் எங்காவது யோகா கிளாசுக்கு போவட்டும் என்று அனுப்பும் சமூகம் செய்கிறதா ?
6. முஜ்ரா நடனங்கள், ரெக்கார்ட் டான்ஸ். ஜாக்கெட்டில் காசு குத்துவது, பபூன் ஜோக்ஸ் என இவர்கள் காலம் காலமாக வேடிக்கை பார்த்தபோது ஒன்றுமே தடை செய்யப்படவில்லை. அப்பொழுது எல்லாம் பிட்டு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. அண்மைக்காலங்களில் பெண்களும் பிட்டு பார்க்கிறார்கள் , பிட்டு குறித்து சரளமான உரையாடல்கள் பெண்கள் மத்தியில் இருக்கின்றது, தனக்கு வரவேண்டிய துணைவன் எப்படி எல்லாம் செய்ய வேண்டும், Orgasm, oral sex என்று பெண்கள் அதிகமாக பேசத் தொடங்கியவுடன் பிட்டு படங்கள் எல்லாம் தடை ஆகின்றன என்றால் isn’t that fishy ? Rings a bell ?
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment