அமெரிக்க முகமூடி அம்பலமானது

அமெரிக்க எப்பேர்ப்பெற்ற குடிநாயக நாடு என்று அனைவருக்கும் தெரியும். ஜனநாயகமா இல்லை பணநாயகமா என்று தற்போது தெளிவாக அம்பலமாகி வருகிறது, இந்தியாவிலும் சிலர் இது போன்ற இணையத்தில் வெளியிட்ட கருத்துக்களுக்குக்காக கைது செய்யப்பட்டனர், ஆனால் அது அரசு என்றளவில் இல்லாமல் செல்வாக்குடைய அரசியல்வாதிகளின் அதிகார துஷ்பிரயோகத்தைப் பயன்படுத்தித்தான் கைது செய்துள்ளனர். ஆனால் அமெரிக்காவிலோ அரசே முன்னின்று இந்த இழிசெயலை நடத்தியுள்ளது. தனிநபர் உரிமைகளில் சாதனை படைத்த நாடு, யாரும் விருப்பம் போலச் செயல்பட எவ்விதத் தடையும் செய்யாத நாடு. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அப்படியான நம்பிக்கை மூட நம்பிக்கையே என்று நிரூபணமாகியுள்ளது.

அமெரிக்கா என்பது ஒரு நாடு அல்ல அது ஒரு வணிகம் ( USA is not a country it's a business ) என்று ஓர் சொல் உண்டு. அதுதான் எவ்வளவு உண்மை. அமெரிக்கா ஒரு மக்கள் அதிகாரமற்ற நாடு என்பது மீண்டுமொரு முறை நிரூபணமாகியுள்ளது. அதற்குக் காரணமானவர் எட்வர்ட் ஸ்னோடன் என்ற அமெரிக்க உளவுத்துறை ஊழியர். தனது மனசாட்சி உறுத்தலின் காரணமாக இவர் வெளியிட்ட தகவல் அமெரிக்கர்களின் கண்களைத் திறந்துள்ளது.

அமெரிக்காவின் உண்மை முகத்தை அறிந்தவர்களுக்கு இது ஒன்றும் பெரிய ஆச்சரியமாக இராது. ஆனால் அமெரிக்கக் குடிமக்கள் அல்லது அமெரிக்க குடிமக்களல்லாத அமெரிக்க ஆதரவாளர்களுக்குத்தான் இது அதிர்ச்சியாக இருந்திருக்கும். அமெரிக்காவை எதிர்ப்பது என்றால் அமெரிக்காவின் 30 கோடிப்பேரை வெறுப்பது என்று பொருள் கொள்வதெல்லாம் அவரவர் விருப்பம்.
எட்வர்ட் ஸ்னோடன்
அமெரிக்கா குறித்த எளிய உண்மை. அமெரிக்கா என்பது என்ன ? அம்மண்ணின் மைந்தர்களை ஐரோப்பிய வந்தேறிகள் இனக்கொலை செய்து ஆக்ரமித்துக் கொண்ட நிலம். அங்கே ஆப்ரிக்க அடிமைகளின் குருதியில்தான் வளர்ந்து நிற்கிறது வானுயர் கட்டிடங்கள். இதல்லாமல் இரண்டாம் உலகப்போர் தொடங்கி 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இராணுவ ஆக்ரமிப்பை நிகழ்த்தியுள்ளது. ரஷ்யா பால்டிக் நாடுகளை அச்சுறுத்த நேட்டோ என்ற ராணுவ அமைப்பையும் வைத்திருக்கிறது. 50 உலகின் பல்வேறு நாடுகளில் தனது ராணுவத் தளத்தையும் நிறுவியுள்ளது.  தனது உளவு அமைப்பின் மூலமாக பல நாடுகளின் அரசுகளைக் கவிழ்க்கவும் தனது கைப்பாவை அரசுகளைக் காக்கவும் தனது ராணுவ, தொழில்நுட்ப வலிமைகளைக் கையாள்கிறது.

ஒரு நாட்டின் அரசுக்கு எதிராக பயங்கரவாதிகளை உருவாக்கவும், அல்லது ஒரு நாட்டையே பயங்கரவாதம் என்று சொல்லி ஆக்ரமிக்கவும் செய்யும். தற்போது ஒரு எடுத்துக் காட்டு தான் ஆக்ரமித்துள்ள ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் இஸ்லாமியத் தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடுவதாகச் சொல்லும் அமெரிக்கா உள்நாட்டுப்போர் நடக்கும் சிரியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகளை ஆதரிக்கிறது. 21 ஆம் நூற்றாண்டிலும் இரண்டு நாடுகளை ராணுவ ரீதியாக ஆக்ரமித்து நிற்கிறது. 

பிராட்லி மானிங்
இப்பேர்ப்பட்ட கொடிய வெறிபிடித்த சர்வாதிகார நாட்டை ஏன் பலரும் ஆதரிக்கின்றனர். அமெரிக்காவில் இருக்கும் ஜனநாயகம் வேறெந்த நாட்டிலும் இல்லை. இது நிச்சயம் உண்மைதான். பல விடயங்களில் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத உரிமைகள் அமெரிக்கக் குடிமக்களுக்கு வாய்த்திருக்கிறது.

ஆனால் அதுவும் பொய்யென நிருபித்திருக்கிறார் ஸ்னோடன். யார் இவர் ? அமெரிக்க உளவுத்துறையான CIA - இன் ஊழியர். சொந்த அமெரிக்க மக்களையே அமெரிக்க அரசு வேவு பார்த்திருக்கிறது. சமூக வலைத்தளங்கள், இணையதளங்கள், மின்னஞ்சல் முகவரிகள்  என அனைத்தையும் வேவு பார்த்திருக்கிறது. இதைக் காணச் சகிக்காத ஸ்னோடன், இதை அம்பலப்படுத்தினார். இந்த CIA - என்பது என்ன ? அமெரிக்க உளவுத்துறை, உலகில் மற்ற நாடுகளில் நடக்கும் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளையும் கவனிப்பது, அமெரிக்க நலனுக்கு எதிரான அரசியல் போக்கு உலகின் எந்த நாட்டிலாவது தென்பட்டால் அங்கே மூக்கை நுழைப்பது, உளவாளிகளை அனுப்புவது, இலஞ்சம் கொடுப்பது, கூலிப்படையை அனுப்புவது, தேவைப்பட்டால் ஆட்சிக் கவிழ்ப்புகள், படையெடுப்புகள் வரை நடக்கும். இதில் இருப்பவர்கள் மனசாட்சியை அடக்கம் செய்து விட்டுத்தான் வேலை பார்க்க வேண்டும். அடுத்தவன் பிழைப்பில் மண்ணள்ளிப் போடும் இந்த வேலையைத்தான் அமெரிக்க ஹாலிவுட் திரைப்படங்கள் நாயகர்களாகவும், தேசபற்றாகவும் சித்தரிக்கின்றன. ஹாலிவுட் படங்கள் சொல்வது உலகத்திலேயே தியாகி அமெரிக்க ராணுவ வீரன், உலகத்திலேயே சிறந்த தேசபக்தன் CIA, FBI உளவாளி.  

ஹாலிவுட் திரைப்படங்களில் பார்த்தால் மிகவும் பிரபலமான படங்களான, ஜேம்ஸ்பாண்ட் (இங்கிலாந்து உளவாளி), ராம்போ, மிசன் இம்பாஸிபிள் மாதிரியான உளவாளிகள் அல்லது ராணுவ வீரர்களை வியந்து போற்ற வைக்கும். இவர்கள் வெவ்வேறு நாடுகளில் போய் போரிடுவது அந்நாட்டுக்கு எதிராக செயல்படுவதும் வீரமாகவும், திறமையாகவும் புத்திசாலித்தனமாகவும், நாயகத்தனமாகவும் சித்தரிக்கப்படும். ராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தும் படங்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. ஈராக்கிலும், ஆப்கானிலும் அமெரிக்க ராணுவ வீரர்களின் துயரத்தை அலசும் படங்கள் (ஹார்ட் லாக்கர்) , அமெரிக்காவின் பிறநாட்டு ஆட்சிக் கவிழ்ப்பை நியாயப்படுத்தும் ஆர்கோ போன்ற படங்கள் ஆஸ்கர் விருதுகளை வெல்கின்றன. இது போன்ற படங்களை ரசிக்கும் நாமும் அறிந்தோ அறியாமலோ அமெரிக்காவின் அயோக்கியத்தனத்தை ரசித்து அதை ஆதரிக்கிறோம்.

அமெரிக்கா ஈராக்கில் நடத்திய கொடுமைகளை அம்பலமாக்கியது முதன் முதலில் விக்கிலீக்ஸ் என்ற இணையம். அதன் நிறுவனர் அமெரிக்க பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தியதால், அமெரிக்க அரசால் இன்னும் துரத்தப்பட்டு ஆபத்தான நிலையில்தான் ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சமடைந்து வாழ்கிறார். இன்னொருவர் ப்ரோட்லி மானிங் இவரும் விக்கிலீக்ஸ் க்கு தகவல்கள் - இராணுவ ரகசியத்தை வழங்கியதற்காக சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இருவரும் அமெரிக்க பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தியதற்காக தண்டனை அனுபவிக்கின்றனர். தற்போது எட்வர்ட ஸ்னோடனும் அது போலவே அமெரிக்க சராசரி மக்களைக் கண்காணிக்கும் படு கீழ்த்தரமான அமெரிக்க அரசின் செயலை அம்பலப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம் (NSA - National Security Agency) இணையக் கண்காணிப்பின் மூலம் பல்வேறு நாடுகளின் ரகசிய ஆவணங்களைத் திருடியுள்ளது. அமெரிக்கர்களின் அசைவுகளையும் கண்காணித்து வருகின்றது என்பதை அம்பலப்படுத்தி உள்ளார் எட்வர்ட்.

ஹாங்காங்கில் தஞ்சமடைந்து இதை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவுக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கும் எட்வர்ட் தற்போது ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார். அமெரிக்க அதிபரோ உலக நாடுகளையெல்லாம்  யாரும் எட்வர்ட் ஸ்னோடனுக்கு தஞ்சமளிக்கக் கூடாது என்று எச்சரித்துக் கொண்டிருக்கிறார். பலநூறு கோடிக்கணக்கான தகவல்கள் பல்வேறு நாடுகளிடமிருந்து திருடப்பட்டுள்ளன. அதிகமாகக் கண்காணிக்கப்பட்ட நாடுகளில் ஐந்தாமிடத்தில் இந்தியாவும் இருக்கிறது என்பது அதிர்ச்சி. என்ன தேசபக்தி அதிர்ச்சியெல்லாம் ஒன்றுமில்லை. இந்தியா அமெரிக்காவின் எந்த ஒரு நிலைப்பாட்டிலும் எதிர்ப்புத் தெரிவிக்காத நாடு என்று அனைவருக்கும் தெரியும் அப்படி இருந்தும் இந்தியாவையும் கண்காணித்திருக்கிறது என்பது என்ன நியாயமோ.

இதற்கு முன்பு உலகையே அதிரவைத்த அமெரிக்க போர்க்குற்றங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அஸான்ஞ்சே இன்னும் ஈக்வடார் தூதரகத்தில்தான் தஞ்சமடைந்து வாழ்கிறார். எட்வர்ட் ஸ்னோடன் ரஷ்யாவின் வானூர்தி நிலையத்திலிருக்கிறார்.

இப்படி அமெரிக்கா சொந்த மக்களையும் நட்பு நாடுகளையும் கூட கண்காணித்துக் கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்காவை ஏதோ ரட்சகனைப் போலவும் சிலர் நம்புகின்றனர். அமெரிக்க உளவுத்துறையோ பாதுகாப்புத் துறையோ பல்வேறு கண்ணுக்கு தெரியாத மென்பொருட்களை வைத்து பல்வேறு தனிநபர்கள், அரசுகள், நிறுவனங்களிடமிருந்தும் தகவல்களை ஒட்டுக் கேட்பது ஏற்கெனவே அரசல் புரசலாக வெளியான செய்திகள்தான். அரபு வசந்தம், துருக்கி வசந்தம், கிரீஸ்போராட்டம் போன்றவற்றின் தாக்கத்திற்கு முக்கியத் தூண்டுதலாய் இருந்தது சமூக வலைத்தளங்களே என்பதால் அதையும் கண்காணித்து வருகிறது என்ற செய்தியும் ஏற்கெனவே வெளியானது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் அமெரிக்கா தனிநபர் சுதந்திரத்தில் தலையிடாது என்று மூட நம்பிக்கை உடையவர்களின் கவனத்திற்கு,

சமூக வலைத்தளங்களை வெவ்வேறு போலி முகவரிகளில் வந்து விவாதங்களில் கூட பங்கெடுக்கும் பாமரர்களைப் போலவும் உளவுத் துறையினர் கண்காணிக்கின்றனர். உலகப் புகழ் பெற்ற நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக், யாஹூ ஆகியோரும் தனிநபர்களின் தகவல் பரிமாற்றங்களை வழங்கி  உதவியிருக்கின்றன.

சிவலிங்கம் சிவானந்தம் என்ற தமிழர் ஒசாமா பின்லேடனைக் கண்டுபிடித்துக் கொல்லும் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக வெள்ளை மாளிகையின் விருது பெற்றிருக்கிறார். இதைத் தமிழர்கள் கொண்டாடுகின்றனர். பின்லேடனை உருவாக்கியதே அமெரிக்காவின் சிஐஏ அவரை பயங்கரவாதி என்று அறிவித்து தேடியும், இரு நாடுகளின் மீது படையெடுத்தும், பல மில்லியன் டாலர் செல்வாக்கி அமெரிக்கப் பொருளாதாரமே நாசமாக்கியது. லேடனைத் தேடிக் கொல்வதற்கெல்லாம் தொழில் நுட்பத்தை உருவாக்கியவரெல்லாம் தமிழருக்குப் பெருமை சேர்த்தவராம். இந்த பின்லேடன் பற்றிய கட்டுக்கதையெல்லாம் இன்னும் நம்புவதற்கு ஆளிருக்கிறது. .சரி ஈழப்போர் நடந்த போது இலங்கை அரசுக்கு புலிகளின் நடவடிக்கைகள் பற்றி உளவுத் தகவல்கள் வழங்கிய இரு நாடுகள் இந்தியாவும் அமெரிக்காவுமே. இந்தியா எட்டி உதைத்தாலு ஈழத் தமிழர்களுக்கு இந்தியா மீதான மூட நம்பிக்கை மாறாது. அதே போலத்தான் அமெரிக்காவின் மீதான் நம்பிக்கையும். புலிகளின் நடவடிக்கைகளை எப்படி அமெரிக்க உளவுத்துறை வேவுபார்த்திருக்கும், அவர்கள் உரையாடல்களைக் கேட்டிருக்கும், சிவலிங்கம் போன்ற தமிழர்கள்தானே உதவியிருப்பார்கள். அவர்களையும் கொண்டாடுவார்களா தமிழர்கள் ? சரி புலிகளின் தகவல்களை அறிய அமெரிக்க, இந்திய, இலங்கை அரசுகளுக்கு உதவிய ஒரு முஸ்லிம் என்று ஒரு செய்தி வருகிறது அதை எப்படி எதிர்கொள்வார்கள் இத் தமிழர்கள்.

எட்வர்ட் ஸ்னோடன், பிராட்லி மானிங்க் போன்றவர்கள் அமெரிக்கனாக இருந்தபோதும் மன்சாட்சியுடன் போலித்தனமான தேசபக்தியையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல், அரசின் கொடியமுகத்தை அம்பலப்படுத்தினர். சிலர் அமெரிக்கனாக இல்லாதபோதும் உளவுத்துறைக்குத் துதிபாடுகின்றனர்.    
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

ஜியாகானின் உருக்கமான இறுதிக் கடிதம் - இவர்கள் இப்படித்தான்


ஜியா கானின் கடிதத்தைப் படித்தால் என்ன தோன்றுகிறது.  திரைப்படங்களில் காணும் நாயகியைக் காட்டிலும் கிறுக்குத்தனமான பெண்ணாக இருந்திருக்கிறாள். ஒருவன் அயோக்கியன் என்று தெரிந்தும் அவனையே தொடர்ந்து காதலிப்பது, அதற்காகத் தன்னையே வருத்திக் கொள்வது இறுதியில் தற்கொலை செய்து கொண்டது.

சூரஜ் பஞ்சோலிக்கு இப்போதுதான் 23 (?? !!) வயது. ஜியாவைக்காட்டிலும் வயது குறைவு. இவர்கள் இரண்டு வருடங்கள் காதலித்திருந்தாலோ அல்லது இணைந்து வாழ்ந்திருந்தாலோ கூட அது சூரஜ் 20 வயதுகளில் ஆரம்பித்திருக்க வேண்டும். என்னவோ ?

  

திரைப்படத்தில் அறிமுகமாகும் கனவில் இருப்பவன் தன்னைவிட வயதில் மூத்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கா இருப்பார். அப்போதைக்கு கிடைத்ததை அனுபவித்து விட்டுப் போகிறவனாகத்தான் இருப்பார். இப்படி பத்தோடு பதினொன்றாகக் கிடைத்த ஒருத்தி காதலித்தால் அதையெல்லாம் அவர் கண்டுகொள்ளப்போவதில்லை. பிரச்சனை இவ்வளவு பெரியதாகும் என்று நினைத்திருக்க மாட்டார். தனது படம் வெளியாகவிருக்கும் நேரத்தில் தன் பெயரைக் கெடுத்து விட்டு செத்து போய்விட்டாள் என்று திட்டிக் கொண்டிருப்பார்.
சூரஜ் பஞ்சோலி
  ஒருவன் தன்னை ஏமாற்றுகிறான், உடலை பயன்படுத்துக் கொள்கிறான், மற்ற பெண்களுடன் சுற்றுகிறான் என்று தெரிந்த பின்னும் எப்படி ஒரு பெண்ணால் காதலிக்க முடிகிறது.  இலண்டனில் பிறந்து வளர்ந்தும் இந்திய மனப்பான்மை  இன்னும் அவருக்குள் மாறவில்லை.

 இப்படத் தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தியவனுக்காக தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டுமா என்று தோன்றுகிறது. காதலிக்கும் நபர் ஆணோ பெண்ணோ தன்னை மதிக்க வில்லை, தன்னை சீண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார், ஏமாற்றுகிறார் என்று தெரிந்தால் உதறிவிடுவதே உத்தமம். அதை விட்டு விட்டு குருட்டுத் தனமாக உணர்ச்சி வயப்பட்டால் யாருக்கு நட்டம். காதலிப்பவர்கள் எதற்குத் தயாராக இருக்கிறார்களோ இல்லையே இதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

எத்தனை  கதை கேட்டாலும் அயோக்கியர்களிடம் ஏமாறுவதே எமக்கு இலட்சியம் என்று திரிகிறார்கள்  :((

அந்த அயோக்கியன் செய்திருக்கும் காவாலித்தனங்களைப் பார்த்தால் !! தன்னிடம் மயங்கிய ஒரு பெண்ணை என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய்து விட்டு, எப்படியெல்லாம் அனுபவிக்க முடியுமோ அனுபவித்து விட்டு கொடுமைப்படுத்திவிட்டு, உடல் மன ரீதியில் தொல்லை செய்து விட்டு அந்தா இந்தா என்று போக்கு காட்டியிருக்கிறான், இவள் இல்லாவிட்டால் இன்னும் பல பேர் அவனுக்குக் கிடைக்காமலா போய்விடுவார்கள். திரைப்படத்தில் நாயகனாக வேறு அறிமுகமாகப் போகிறார். இவளோ ஒரு தோல்வியடைந்த நடிகை. தனது எதிர்காலத்தை ஒப்பிட்டால் இவளுடைய உறவு அவனுக்கு நிச்சயம் கசந்து போயிருக்கிறது. அவளுக்கு இவனே எதிர்காலமாய்த் தெரிந்திருக்கிறான். அவளும் பொறுத்துப் பார்த்துவிட்டு இறந்து விட்டாள். இவனிடம் போய் எப்படி அன்பை எதிர்பார்த்தாள் ?

திருமணத்திற்கு முன் இணைந்து வாழ்தல், பாலியல் உறவு இதெல்லாம் நம் நாட்டு ஆண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான். ஆடே கசாப்புக் கடையைத் தேடிப் போனது போலத்தான். அதிலும் பெண்களை பாலியல் ரீதியில் சுரண்டுவதற்கு எளிதான் திரைப்படத் துறையில்தான் இது போன்ற அயோக்கியர்கள் அதிகமிருப்பார்கள். இந்த ஜென்மங்களையெல்லாம் நேசித்து பதில் அன்பை  எதிர்பார்த்து உயிரை விடுவது பரிதாபமானது. 


 

ஜியாகானின் உருக்கமான இறுதிக்கடிதம் 

I don't know how to say this to you but I might as well now as I have nothing to lose. I've already lost everything. If you're reading this I might have already left or about to leave. I am broken inside. You may not have known this but you affected me deeply to a point where I lost myself in loving you. Yet you tortured me everyday. These days I see no light I wake up not wanting to wake up. There was a time I saw my life with you, a future with you. But you shattered my dreams. I feel dead inside. I've never given so much of myself to someone or cared so much. You returned my love with cheating and lies. It didn't matter how many gifts I gave you or how beautiful I looked for you. I was scared of getting pregnant but I gave myself completely the pain you have caused me everyday has destroyed every bit of me, destroyed my soul. I can't eat or sleep or think or function. I am running away from everything. The career is not even worth it anymore.

When I first met you I was driven, ambitious and disciplined. Then I fell for you, a love I thought would bring out the best in me. I don't know why destiny brought us together. After all the pain, the rape, the abuse, the torture I have seen previously I didn't deserve this. I didn't see any love or commitment from you. I just became increasingly scared that you would hurt me mentally or physically. Your life was about partying and women. Mine was you and my work. If I stay here I will crave you and miss you. So I am kissing my 10-year career and dreams goodbye. I never told you but I received a message about you. About you cheating on me. I chose to ignore it, decided to trust you. You embarrassed me. I never went out, I never went with anyone else. I am a loyal person. I never met anyone with Karthik I just wanted you to feel how you make me feel constantly. No other woman will give you as much as I did or love you as much as I did. I can write that in my blood. Things were looking up for me here, but is it worth it when you constantly feel the pain of heartbreak when the person you love wants to abuse you or threatens to hit you or cheats on you telling other girls they are beautiful or throws you out of their house when you have no where to go and you've come to them out of love or when they lie to your face or they make you chase after them in their car. Or disrespects their family. You never even met my sister. I bought your sister presents. You tore my soul. I have no reason to breathe anymore. All I wanted was love. I did everything for you. I was working for us. But you were never my partner. My future is destroyed my happiness snatched away from me. I always wished the best for you, was ready to invest what little money I had in your betterment. You never appreciated my love, Kicked me in the face. I have no confidence or self esteem left, whatever talent whatever ambition you took it all away. You destroyed my life. It hurt me so much that I waited for you for ten days and you didn't bother buying me something.
The Goa trip was my birthday present but even after you cheated I still spent on you. I aborted our baby when it hurt me deeply. You destroyed my Christmas and my birthday dinner when I came back. When I tried my hardest to make your birthday special. You chose to be away from me on Valentines Day. You promised me once we made it to one year we would get engaged. All you want in life is partying, your women and your selfish motives. All I wanted was you and my happiness you took both away from me. I spent money on you selflessly you would throw in my face. When I would cry for you. I have nothing left in this world to live for after this. I wish you had loved me like I loved you. I dreamt of our future. I dreamt of our success. I leave this place with nothing but broken dreams and empty promises. All I want now is to go to sleep and never wake up again. I am nothing. I had everything. I felt so alone even while with you. You made me feel alone and vulnerable. I am so much more than this."


    


Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

காதல் வலியது


ஜியாவின் இறப்பைக் கேள்வியுற்றபோது இவளுக்கெல்லாம் என்ன குறைச்சல் என்று நினைத்தேன். லண்டனில் பிறந்து வளர்ந்து பின்பு நடிப்பதற்காக இந்தியா வந்து பிரகாசிக்க முடியாமல் தோல்வியடைந்து, காதல் கசந்து பின்பு தற்கொலை செய்துகொண்டார். காதல் தோல்வியால் தற்கொலை, கொலை செய்வதெல்லாம் நம்மைப் போன்ற சராசரி மனிதர்களிடம் உள்ள வழக்கம். இப்படி பணக்கார பிரபலங்கள் கூட இப்படி செய்து கொள்கிறார்களா என்று தோன்றியது. இது போன்ற தோல்விகளை அதுவும் காதல் தோல்விகளை ஒரு பொருட்டாகவா அவர்கள் கருதுகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்களும் அதே உணர்வுகள் உருவானவர்கள்தான் போலும். 

ஜியா கான் / நஃபிஸா கான்
18 வயதில் அமிதாப் நடிக்கும் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் உருவான "நிஷப்த்" படத்தில் அறிமுகமாகிறார். பின்பு அமீர்கானின் "கஜினி" (தமிழ் - கஜினியில் நயன்தாராவின் வேடத்தில்) நடித்தார். இப்படி பெரிய நடிகர்களுடன் முதலிரண்டு படங்களில் நடித்தும் அவள் எதிர்பார்த்தது போல் நல்ல வாய்ப்புக்கள் எதுவும் அதற்குப் பிறகு வரவில்லை. இரு வருடங்களுக்கு முன்பு ஹௌஸ்ஃபுல் (Housfull) படத்தில் சிறுவேடம் மட்டுமே கிடைத்தது. அறிமுகமாகி ஆறு வருடங்கள் ஆகி விட்டது. இன்டீரியர் டிசைனர் ஆகலாம் என்று முடிவெடுக்கிறார். ஹைதராபாத்தில் ஒரு நிகழ்ச்சிக்குச் செல்கிறார்.  அதுவும் தோல்வியில் முடிகிறது. பின்பு தனது காதலனுடன் நடந்த சண்டையில் வீட்டிலேயே துப்பட்டாவால் தூக்குப் போட்டுக் கொள்கிறார்.

பட வாய்ப்புக்கள் எதுவும் இல்லாததால் ஏற்பட்ட மனவருத்தத்தில் இருந்ததாகவும் சொல்கிறார்கள். ராம் கோபால் வர்மா தன்னை சந்திக்க ஜியா வந்ததாகவும், "இத்தனை வருடங்களாக நான் கண்ணாடியில் எனது முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், எனக்கு என்ன குறை எனக்கு ஏன் வாய்ப்புக்கள் வரவில்லை என்று தெரியவில்லை என்று கூறினாள். ஆனால் அவளுக்குப் பொருத்தமான பாத்திரம் தன்னுடைய படங்களில் இல்லாததால் அவளை நடிக்க வைக்க முடியவில்லை அதனால் அவளிடம் காத்திருக்கும்படியும் கூறினேன்" ஆறு வருடங்களாக மிகப்பெரிய வாய்ப்புகள் ஏதும் வராததால் மனமுடைந்திருக்கலாம் என்று கூறினார். ஆனால் தற்போது ஒரு படம் ஒப்பந்தமாகியிருப்பதாக தன்னிடம் தெரிவித்ததாகவும் ஜியாவின் தங்கை சொல்லியிருக்கிறார். அதனால் அவள் தனது திரைப்பட வாழ்க்கையில் தோல்வியடைந்தது மனமுடையவில்லை, அவள் குடிக்கு அடிமையாகவுமில்லை என்று கூறியிருக்கிறார்.

தனது ட்விட்டரில் தன்னைப் பற்றி நடிகை, கவிஞர், இசைக் கலைஞர், கனவு காண்பவள், வாழ்க்கையை ரசிப்பவள் என்று எழுதி வைத்திருக்கும் ஒரு 25 வயதுப் பெண் தற்கொலை செய்துகொண்டாள் என்று சொன்னால் நம்ப முடியவில்லை. ஆனால் உண்மை காரணம் காதல் தோல்வி.

காதலில் தோல்வி என்பதற்காக உயிரை விடுமளவிற்கு காதல் வலிமையான உணர்வா ? கொலை செய்வது, அமிலம் ஊற்றுவது போன்ற பிசாசுகளைப் பற்றியெல்லாம் பேசவே தேவையில்லை. அவரவர் உயிரையே மாய்த்துக் கொள்ளுமளவுக்கா காதல் வலியது ?  அங்கங்கே படித்த படிக்கும் செய்திகள் அப்படித்தான் சொல்கின்றன. சில செய்திகள் எத்தனை நாட்களானாலும் மறப்பதில்லை. ஆள் ஊர் பெயர் மறந்தாலும் அந்த நிகழ்ச்சியின் வீரியம் அதை மறக்க முடியாமல் செய்து விடுகிறது. ஜியா  ஒரு பிரபலம் அல்லது நடிகை என்பதால் எனக்கு தனிப்பட்ட கரிசனம் ஏற்படவில்லை.

ஒரு செய்தியில் தம்பதியினர் இறப்பைப் பற்றியது கணவர் இறந்த அந்நாள் நண்பகலிலேயே மனைவியும் இறந்து விடுகிறார். இவர்களிருவரும் 80 வயதைக் கடந்தவர்கள்.

மனைவி இறந்த துக்கம் தாளாமல் தூக்குப் போட்டுக் கொண்ட கணவர்

இன்னொரு செய்தியில் வட இந்தியாவில் லாரி ஒட்டுநராகச் சென்ற தன் கணவர் இறந்த செய்தி கேட்டு கர்ப்பிணியாக இருக்கும் மனைவி தன் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி செய்தார்.

இப்படிப் பல செய்திகள் அவ்வப்போது கேள்விப்படுகிறோம்.

நடிகைகள் போன்ற பணக்காரர்கள் காதல் தோல்வியடைந்தால் துடைத்து விட்டு வேலையைப் பார்க்கத் தொடங்கி விடுவார்கள். ஆனால் காதல் தோல்விகளால் தற்கொலை செய்து கொண்ட நடிகைகள் இருக்கிறார்கள். தமிழ்த் திரையுலகில் ஷோபா, ஃபடாபட் ஜெயலட்சுமி, விஜி, சில்க் ஸ்மிதா, ப்ரத்யுஷா, மோனல் என்று நீள்கிறது. சின்னத்திரை, துணை நடிககள் யார் யாரோ தெரியவில்லை.

அம்மாவோ அப்பாவோ இறந்தால் அல்லது பிரிந்தால் அல்லது சண்டையிட்டால் யாரும் தற்கொலை செய்து கொள்வதில்லை

அண்ணனோ தம்பியோ இறந்தால் அல்லது பிரிந்தால் அல்லது சண்டையிட்டால் யாரும் தற்கொலை செய்து கொள்வதில்லை

அக்காவோ தங்கையோ இறந்தால் அல்லது பிரிந்தால் அல்லது சண்டையிட்டால்யாரும் தற்கொலை செய்வதில்லை

நண்பர்கள் இறந்தால் அல்லது பிரிந்தால் அல்லது சண்டையிட்டால் யாரும் தற்கொலை செய்வதில்லை.

சில தற்கொலைகள் நடந்திருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிகச் சிறிய எண்ணிக்கையிலேயே இருக்கின்றன.

ஆனால் தான் காதலித்த நபரோ, வாழ்க்கைத் துணையோ அல்லது அவர்களது பிரிவோ ஏற்படுத்தும் மனவேதனை தற்கொலையை நோக்கித் தள்ளுகிறது.

காதலுக்காக பெற்றோரையே விட்டுவிடத் துணிகிறார்கள்

சொத்தை விட்டுவிடத் துணிகிறார்கள்

மதம் மாறி கடவுளையும் மாற்றிக் கொள்கிறார்கள்.

காதல் உண்மையில் மகத்தானதுதான்.

காதல் இருக்கட்டும். என்னுடைய நண்பனொருவனின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியைக் கேட்டால் இன்னும் கொஞ்சம் தலை சுற்றும்.  அவன் மற்ற சராசரி ஆண்களைப் போல் பெண்களுடன் பேசுவதில் எவ்வித கிளுகிளுப்பும் பரவசமும் கொள்ளாதவன், பெண்களுடன் பழகுவதையே வெறுத்தவன். திருமணமே வேண்டாம் என்று இருந்தவன். இறுதியாக பெண் தேடும் படலம் தொடங்கிய போது, வெவ்வேறு இடங்களிலிருந்தும் அவனுக்கு வரன்கள் வந்தன. இறுதியாக ஒரு இடத்தில் திருமணமும் முடிவாகியிருந்தது. இதற்கு முன்பும் பல பேருடன் பேச்சுவார்த்தையும் நடந்து கொண்டிருந்தது. அதனால் மாப்பிள்ளை தேடிய சில பெண்கள் இவனுடன் அவ்வப்போதுஅலைபேசியிலும் பேசியிருக்கிறார்கள். வெவ்வேறு காரணங்களால் அவர்கள் யாரும் கூடி வரவில்லை.

இப்போது ஒரு பெண்ணுடன் இவனுக்கு நிச்சயமான பிறகும், இன்னும் மூன்று பெண்கள் தன்னையே திருமணம் செய்து கொள்ளும்படி அவனை வற்புறுத்தினார்கள். திரும்பத் திரும்ப அலைபேசியில் அழைத்துப் பேசினார்கள். அவனுக்கு ரொம்பவும் சங்கடமாகப் போய்விட்டது. இதில் ஒன்று மிகப் பெரிய தொகையாக சீதனம் கொடுப்பதற்கும் முன் வந்தார்கள். அந்த மூன்று பேரில் இன்னொரு பெண் இவனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது தெரிந்த பின்னர் தூக்க மாத்திரையை விழுங்கி விட்டாள். இதில் வேடிக்கை என்னவென்றால் அம்மூவரும் இவனை நேரில் கூடக் காணாதவர்கள். புகைப்படத்தில் கண்டதோடு சரி, அலைபேசியில் பேசியது மட்டுமே அவர்களுக்கிடையிலான தொடர்பு. இதையும் என்னால் நம்ப முடியவில்லை.

ஆண்கள் சிலர் ஒரே சமயத்தில் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பார்கள், பொழுது போக்குவார்கள். ஆனால் என்னுடைய நண்பன் வேறு விட இயல்புடையவன். பேசியே மயக்குமளவுக்கு இவனிடம் சரக்குமில்லை. பெரிய பணக்காரனுமில்லை. நல்ல ஊதியம் வாங்கும் பணியிலுமில்லை. அரசாங்க வேலையுமில்லை, சாதாரண தனியார் நிறுவனத்தில்தான் பணி புரிகிறான். இதையெல்லாம் தாண்டி அந்தப் பெண்கள் இவனிடம் எதை விரும்பினார்கள், திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார்கள் என்று சிந்தித்துப் பார்த்தால் இன்னும் புரியவில்லை. இதையேதான் அவனும் என்னிடம் சொன்னான். நானும் அவனிடம் சொன்னேன். இருவரும் சிரித்துக் கொண்டோம். பெண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன். அவர்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் மனம் மாறலாம். ஆனால் தூக்க மாத்திரையை விழுங்குமளவிற்கு திடீரென்று தோன்றும் அவநம்பிக்கைக்குக் காரணமென்ன ?

பெண்கள் என்றால் காதலித்து ஏமாற்றுகிறவர்கள், பணத்திற்கு ஆசைப்படுகிறவர்கள் என்று சொல்பவர்கள்தான் சிந்திக்க வேண்டும். காதல் நாம் நினைப்பதை விட வலியது.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment