இந்தப் பெண் தலை குனியவில்லை !!

 

இரண்டு காணொளிகளையும் கண்டிருந்தால் யார் மீது தவறு என்று புரியும் . நான் பொதுவாக இது போன்ற நிகழ்ச்சிகளைக் காண்பதில்லை. இஸ்லாமியப் பெண்மணியில் ஒரு இடுகையை பதிந்திருந்தார்கள். அதில் இக்காணொளியை மையப்படுத்தி இருந்தது. அதில் பின்னூட்டமிட்டிருந்த சிலர் இதனால் இஸ்லாமிய சமூகத்திற்குத் தலை குனிவு என்று பொருள்படும்படி எழுதியிருந்தார்கள். நான் அதை மறுக்கிறேன்.



இந்த நிகழ்ச்சியின் இக்குறிப்பிட்ட பெண் பங்கு கொண்ட இரு காணொளிகளையும் கண்டேன். ஸீ தமிழ் தொலைக்காட்சி மிகச் சிறப்பாக பிரச்சனைகளை வைத்து நிகழ்ச்சியைத் தயாரித்து அடுத்தவன் பிரச்சனையைப் பற்றிப் பேசித் தனது ஆற்றாமையைத் தீர்த்துக் கொள்ளும் நபர்களின் தினவெடுத்த மூளைக்குத் தீனி போடவும், கலாச்சாரக் காவலர்கள் கரித்து கொட்டவும் ஏற்ற் வகையில் எரிச்சலைக் கிளப்பும் பின்னணி இசையுடன் ஒளிபரப்புகிறார்கள். 

இதில் இருப்பது என்னவென்று எல்லோர்க்கும் புரிந்திருக்கும். முஸ்லிம் பெண் இந்து ஆண் இருவரும் காதலித்திருக்கிறார்கள். இப்போது பெண் கருவுற்றிருக்கிறாள். ஆணோ அவளை ஏற்க முடியாது சிறைக்குச் சென்றாலும் பரவாயில்லை புகார் கொடுத்துக் கொள் என்கிறான். அவள் அழுது கெஞ்சுகிறாள். அவன் மீது புகார் கொடுப்பதற்கல்ல, சேர்ந்து வாழத்தான் இங்கு வந்தேன், அவனை வரவைத்தேன் என்கிறாள். அவனோ அவள் இவ்வளவு அவமானப்படுத்திய பிறகு சேர்ந்து வாழமுடியாது என்கிறான். அவன் திருமணம் செய்துகொள்வதுதான் தீர்வு, இல்லையெனில் அவன் மீது புகார் அந்தப் பெண் கொடுத்தால் அதை ஆதரிப்போம் என்கிறார் லட்சுமி.

உண்மையில் தலைகுனிந்து அமர்ந்திருப்பது அந்த ஆண்தான். ஆண்கள்தான் இதற்குத் தலை குனியவேண்டும். அந்தப் பெண் தலை நிமிர்ந்துதான் நிற்கிறாள். தனக்கு நிகழ்ந்த அநீதிக்கு நீதி கேட்டுத் தலை நிமிர்ந்துதானே நிற்கிறாள். இதில் என்ன தவறு ?  இதை ஏன் அப்பெண்ணுக்குத் தலை குனிவு என்று சொல்ல வேண்டும். அவனிடம் கெஞ்சிக் கேட்டதாலா ? அவனைப் போன்றவனிடம் போய்க் கெஞ்சுவது பெண்ணுக்குத் தலை குனிவுதான். அவள் கேட்ட கேள்விகளுக்கு எதுவுமே சரியான பதில் அவனிடமிருந்து வரவில்லை, அவமானப்படுத்திவிட்டாள் என்கிறான். அவளோ அவனது அண்ணன் இருப்பதால்தான் புகாரளிக்க துணிச்சலாகச் சொல்கிறான் என்கிறாள். அவன் பேந்தப் பேந்த முழிப்பதும் அவளது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மழுப்புவதும் அவன் பொய் சொல்கிறான் என்பதற்குப் போதுமானதாக இருக்கிறது.

ஆக மொத்தம் இவனுக்குக் கசந்து விட்டதால் மொன்னைக் காரணத்தைச் சொல்லி இவளை வேண்டாமென்கிறான். அவள் அவனுடன் வாழ்வதுதான் வேண்டும், புகாரளிக்க விருப்பமில்லை என்கிறாள். அவன் பொய் பேசுகிறவன் என்பதை ஏற்கெனவே தெரிந்துதான் காதலித்தேன் என்கிறாள். என்னை கேட்டால் இவனிடமெல்லாம் கெஞ்சுவது அவளது தன்மானத்திற்கும், பண்புக்கு இழுக்கு என்றுதான் கூறுவேன். அவன் வந்து  கெஞ்சினால் கூட இவள் ஒத்துக் கொள்ளக் கூடாது. இவனைத் தூக்கியெறிந்து விட்டு வாழவேண்டும். வாழ்க்கை விரைவில் அவளுக்கோர் நல்வழிகாட்டும். அவளைப் பார்த்தால் பக்குவப்பட்டவளாகவே தெரிகிறது.

பெண்கள் என்றாலே காதலித்து ஏமாற்றுகிறவர்கள் என்று குறுந்தகவல் அனுப்புகிறவர்கள், ஒரே சமயத்தில் இரண்டு மூன்று ஃபிகர்களுடன் சாட்டிங் செய்து கொண்டே "வேணாம் மச்சா வேணாம் இந்தப் பொண்ணுங்க காதலு" என்று நிலைத்தகவல்கள் போட்டு "லைக்"கள் வாங்கும் அறிவாளிகளுக்கு இந்தப் பெண்ணின் காதல் சமர்ப்பணம். இது பெண்களின் காதலுக்கு ஒரு உதாரணம்.

பெண் காதலிக்க மறுத்ததற்காக அமிலத்தை ஊற்றுவது, பாலியல் வன்முறையை ஏவுவது, கொலை செய்வது என்று வெறியாட்டம் போடும் ஆண்களுக்கு நடுவில் காதலுக்காக இரந்து நிற்கும் இவள் பெண்களின் காதலுக்கு ஒரு உதாரணம்.

ஆண்கள் எல்லாம் தியாகிகள் என்பது போலவும் பெண்கள் என்பவர்கள் பொழுது போக்கவும், பணத்துக்காகவும், ஊர்சுற்றுவதற்காகவும்  மட்டுமே காதலிப்பதாக நடிக்கிறார்கள் என்று அயோக்கிய நடிகன் பேசும் குப்பை வசனத்துக்காகவும் காது வரை சிரித்து மகிழும் ஆண்களுக்கும் இது சமர்ப்பணம்.

இதை வைத்து காதலிக்கும் பெண்களுக்கு எச்சரிக்கை செய்வோர்க்கும் சமர்ப்பணம்.

ஆண்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது மேட்டர் முடிச்சியா, கை வச்சிட்டியா என்று சர்வ சாதாரணமாகக் கேட்டுக் கொள்வார்கள். அதே ஒரு பெண்ணைப் பற்றிப் பேசினால் அவளே ஒரு மேட்டர், கெட்டுப் போனவள், சோரம் போனவள் என்று சொல்வார்கள். பழி ஓரிடம் பாவம் ஓரிடம். பெண்களைக் குற்றவாளியாக்கும் ஆண்களின் இரட்டை நாக்கு. ஆண்கள் கலவி செய்தால் அது வெற்றி, அதையே பெண்கள் செய்தால் அது தோல்வி. நல்ல மதிப்பீடு.

ஆண்கள் தாங்கள் அயோக்கியர்களாக இருப்பது பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். பெண்கள் ஏன் அயோக்கியனையே காதலிக்கிறார்கள், அவர்களையே விரும்புகிறார்கள் என்று எரிச்சல்படுவார்கள்.
இப்போது இந்தப் பெண்ணுக்கு  இந்த சமூகத்திடம் கெட்ட பெயர், அல்லது இந்த சமூகமே காறித் துப்புகிறது என்ற கருத்தை எடுத்துக் கொள்வோம். இந்த நிகழ்ச்சியின் போது இந்தப் பெண்ணுடைய தங்கையும் யாரையோ காதலிப்பதாக அவன் சொல்லி விட்டான். இதனால் அந்தப் பெண்ணுக்கும் கெட்ட பெயர். இங்கு இந்த சமூகம் என்ன சொல்கிறதென்றால், ஒரு பெண் காதலித்தால் அவள் களங்கப்பட்டவள். இதெல்லாம் இந்த சமூகம் வைத்திருக்கும் மதிப்பீடுகள்.

நான் மனித உணர்வுகளுக்குத்தான் மதிப்பளிக்க வேண்டும் என்று சொல்கிறேன். ஜாதி, மதம் போன்ற மாயக் காரணங்களுக்கல்ல. மனிதனுக்குத்தான் மதமே தவிர, மதத்துக்காக மனிதனல்ல. அந்த வகையில் காதல் என்பது மனித உணர்வுகளில் ஒன்று. நான் காதலை ஆதரிக்கிறேன். அதுதான் பெரிய சவால். இதில்தான் ஆபத்தும் அதிகம், அதிக கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்

ஒன்று சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதாலேயே அது சரியானது என்றாகிவிடுமா ? இல்லை ஒன்றை இந்தச் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதாலேயே அது தவறானதாகிவிடுமா? நான் அநீதியான இந்த சமூகத்தையே ஏற்றுக் கொள்ளவில்லை. அது வைக்கும் அளவுகோலையும் மதிப்பதில்லை. இந்த சமூகம் எதை மதிக்கிறது என்று சொன்னால் ஒரு பெண் படிக்கிறாள், வேலைக்குப் போகிறாள். திருமணம் செய்யும் வயது வருகிறது. பின்பு வேலையையும் விட்டு விட்டு பிறந்த வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்குச் சென்று கணவனுக்கும்  அவன் வீட்டினர்க்கும் பணிவிடை செய்து வாழ வேண்டும். 


எத்தனை பவுன் நகை, எத்தனை பணம், சீதனமாக என்னென்ன கொடுத்தார்கள். என்பதைப் பற்றி சமூகத்தினர் தமக்குள் பேசிக்கொள்வர். பொண்ணு மாப்பிள்ளை பொருத்தம் எப்படி, அழகு எப்படி குடும்பம் எப்படி என்றெல்லாம் கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும்.  இதுதான் இந்த சமூகம் மெச்சத்தக்க குணம் என்று எதைச் சொல்கிறார்கள். இந்த மாதிரிதான் பெண்கள் இருக்க வேண்டும். வேறு ஜாதிக்காரனுடன் திருமணம் கூடாது. நடந்தால் கொலை கூட நடக்கும்.  இப்படி ஜாதிவாரியாக சீதனம், நகை என்று என்ற தலையை அடகு வைத்து கடன் வாங்கி வணிகத்தைத்தான் நடக்கும் திருமணம் சமூகம் கொண்டாடுகிறது. ஜாதிக்காரன் என்பதற்காக கொஞ்ச நஞ்சம் சீதனம் கொடுக்கல் வாங்கலில் குறைந்தால் கூட திருமணம் நடப்பது பிரச்சனை ஆகிறது. இப்படிப் பெரும்பான்மையான திருமணங்கள் நடந்தாலும், சீதனத்திற்காக மருமகளைக் கொடுமை, கொலை செய்வது வரை நடக்கிறது. இப்படி நடக்கும் திருமணங்கள் கூட சில நேரம் தோல்வியில் முடிகின்றன. இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால் இத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், திருமணமே தவறு திருமணமே வேண்டாம் என்று கூட வேண்டாம் சீதனம் தருவது தவறு என்று கூட பெரிய அளவில் மாற்றத்தைக் காணோம். திருமணம் என்ற சடங்கு அல்லது வணிகம் சமூகத்தின் முழு ஆதரவுடன் ஆரவாரமாக நடந்து வருகிறது.

அனைவரது ஆதரவு, பொருளாதாரச் சிக்கலின்றி நடக்கும் திருமணங்களிலேயே இத்தனை பிரச்சனையிருக்கும்போது, பக்குவமும், அனுபவமும் இல்லாத இரண்டு பேர் எல்லோரையும் எதிர்த்து நடக்கும் காதல் திருமணங்களில் இன்னும் சிக்கல்களும், சவால்களும், போராட்டமும் அதிகம் தோல்வியடையும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஒழுக்கங்கெட்டவர்கள், ஓடுகாலிகள், குடும்ப மானத்தை வாங்கியவர்கள் என்ற பட்டப்பெயர்கள் சமூகத்திடமிருந்து இலவசமாகக் கிடைக்கும். இப்படி இருக்கிறது நிலைமை. காதலிப்பவர்களெல்லாம் பெற்றோரை ஏமாற்றுகிறவர்கள், மானத்தை வாங்குகிறவர்கள் என்றெல்லாம் ஏசுகிறார்கள். பெற்றோர் நடத்தி வைக்கும் வணிகத் திருமணங்களை ஏற்றுக் கொள்ளும் ஆணும் பெண்ணும் தன்மானமற்றவர், உணர்ச்சியற்றவர்கள் என்று கருதலாமா ?

யாரும் நம்மை 20 வருடம் பெற்று வளர்த்துக் காப்பாற்றும் பெற்றோரை ஏமாற்றியே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தெரியாமல் ஊர் சுற்றுவதில்லை,  வேறு மத, ஜாதிக்காரனைக் கட்டிக் கொண்டு ஓடுவதில்லை. நான் இன்னாரைக் காதலிக்கிறேன் என்று வீட்டில் சொல்லுமளவுக்கு பக்குவப்பட்டவர்களாகவா பெற்றோர் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் உயிருக்காவது உத்தரவாதமிருக்கிறதா ? காதலென்றாலே கல்லைப் போட்டுக் கொல்லுமளவிற்கு ஜாதி வெறியும், மதவெறியும் பிடித்து இருக்கிறார்கள். தலையை வெட்டிக் கொல்கிறார்கள்., கழுத்தை நெரிக்கிறார்கள், நஞ்சை ஊட்டுகிறார்கள். எரித்தும் கொல்கிறார்கள். கட்டாயத் திருமணம் விருப்பமில்லாம செய்விக்கிறார்கள். காதலை ஏற்றுக் கொள்வது போல் நடித்து வீட்டுக்கு வரவைத்துக் கொல்கிறார்கள். இல்லாததும் பொல்லாததும் சொல்லிப் பிரித்து விட முயற்சிக்கிறார்கள். இப்படி எழவெடுத்த எதற்கும் பயனில்லாத ஜாதியைக் கட்டிக் கொண்டுதான் வெறிகொண்டு அலையும் பெற்றோர்கள் எதற்கும் வெட்கப்பட மாட்டார்கள். காதலிப்பவர்கள் தவறு செய்கிறார்களாம், பெற்றோரை ஏமாற்றுகிறார்களாம்.

தனிப்பட்ட மனிதர்களின் திருமணத்தில் கூட மதமும், ஜாதியும்தான் போலி கௌரவம், குடும்பமானம் என்ற பெயரில் மூக்கை நுழைக்கிறது. அதற்காக பெற்ற பிள்ளைகளின் விருப்பத்தையும் நிராகரிக்கிறார்கள் பெற்றோர். ஒரு வேளை பெற்றோர் சம்மதித்தாலும் கூறுகெட்ட ஜாதி, மத, பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட கூறு கெட்ட சமூகம் அதை தடுக்கிறது.

எல்லோரும் முகம் சுளிக்கும் இன்னொன்று, இவர்கள் வீட்டிலேயே திருமணத்திற்கு முன்பு உறவு கொண்டார்கள், அவள் கருவுற்றாள் என்பது. இது தவறாகவே இருக்கட்டும். நானும் இதைத் தவிர்க்கவே சொல்கிறேன். இருப்பினும் இதை ஒரு உலக மகாக் குற்றமாகச் சொல்வதால் இந்தப்புனிதத்தையும் கேள்வி கேட்க வேண்டும்.  வீட்டிலேயே இக்கூத்தைச் செய்திருக்கிறார்கள் என்றால் எவ்வளவு மோசமானவர்களாக இருந்திருக்க வேண்டும் என்பார்கள். இதே வெளியில் போய் செய்திருந்தாலும் வெளியே போய்க் கூத்தடித்திருக்கிறார்கள் என்பார்கள். சரி இப்போது திருமணத்தில் என்ன நடக்கிறது ? யாரென்றே பேசிப் பழகாத ஆணும் பெண்ணும் திருமணம் செய்கிறார்கள். இப்போது அலைபேசியின் புண்ணியத்தால் பேசிப் பழக வாய்ப்புக் கிடைக்கிறது. அதே 10 வருடங்கள் முன்னால் என்ன நடந்தது ? யாரென்று தெரியாத ஒருவருடன் திருமணம் செய்த பிறகு அன்றிரவு உடலுறவு கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு அவருடன் குடும்பம் நடத்த வேண்டும். அந்த நபருக்கு எய்ட்ஸ் இருக்கிறதா என்று கூட சந்தேகப்படத் தேவையில்லை. ஏனெனில் இது பெற்றோர் உற்றார் பணம் செய்து ஊரைக் கூட்டி செலவு செய்து வைத்த திருமணம், புனிதமானது. பேசாமல் கொள்ளாமல் உடலுறவு கொண்டுவிட்டு அடுத்த நாளிலிருந்து பேசிப் பழகிக் கொள்ளலாம். வாழ்ந்து கொள்ளலாம். இந்த அசிங்கத்தை ஒன்றும் உறுத்தலில்லாமல் ஏற்றுக் கொள்பவர்கள் 7 வருடங்கள் நன்கு பழகி புரிந்து காதலித்தவர்கள் செய்தால் அதைக் காறித் துப்புகிறார்கள். நன்றாக இருக்கிறது.

என்ன இருந்தாலும் பெண் இதை ஒத்துக் கொள்ளலாமா ? இப்போது அவள்தானே அவமானப்பட்டு நிற்கிறாள். பெண் பலவீனமானவள் என்பதால் தானே ஒரு ஆண் அவளிடம் அன்பைக் காட்டி தேனொழுகப் பேசி உடலுறவுக்கும் சம்மதிக்க வைக்கலாம். இதுவும் பெண்களின் பலவீனம் 


பெற்றோரும் சமூகமும் சேர்ந்து, திருமணம் செய்து கொண்டு கணவனுக்கு ஒத்தாசையாய் வாழ்வதே சிறந்த வாழ்க்கை கலாச்சாரம் என்றும் நம்ப வைக்கலாம். இதுவும் பெண்களின் பலவீனம். 

இதை மட்டும் பெண் இதை எப்படி ஏற்றுக் கொள்ளலாம் என்று கேட்கிறீர்களா ?  இல்லையே அதுதான் பெண்களுக்கு நல்லது என்றுதானே போதிக்கிறார்கள். இரண்டையும் நம்பித்தான் அவள் செயல்படுகிறாள். இதில் ஒன்றை மட்டும் குறை சொன்னால் எப்படி?

ஒரு பெண் கருவுற்றால் அது அவளது "தவறோ" அல்லது அவளுக்கு மட்டுமே "பொறுப்பு" என்று ஆகாது. அதை செய்த ஆணுக்கும் அதில் பாதி பங்கு உண்டும். ஒரு பெண் தான் பெற்ற குழந்தையை குப்பைத் தொட்டியில் போடுகிறாள் என்றால் அது அவள் மட்டும் செய்யும் தவறல்ல. அதற்குக் காரணமான அந்த ஆணும்தான் அதற்குப் பொறுப்பாவான். அது போலத்தான் இதுவும். குழந்தை பெண்ணின் வயிற்றில் இருப்பதால் மட்டும் அவள் களங்கமானவள், தன்னையே இழந்து விட்டாள், கற்பு போச்சு, கண்ணியம் போனது என்று சொல்வதெல்லாம் வெறும் கண்துடைப்புகளே. அவைகள் சொற்பிழைகள், கருத்துப் பிழைகள். பாதிக்கப்பட்டவரையே குறை சொல்லும் தந்திரம்.

5 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டாள் என்று செய்தி வருகிறது. 5 வயது சிறுமிக்கு கற்பு எங்கே இருக்கிறது என்று தோண வேண்டாமா ? அது மாதிரிதான் இதுவும் பெண்ணுக்கு மட்டும் எப்படி கண்ணியம் கற்பு எல்லாம் அழிகிறது, மானம் போகிறது இந்தப் போலிக் கற்பித்தத்தைச் செய்த சமூகத்தை நாம் ஏன் மதிக்க வேண்டும். பெண்களின் உணர்வை மதிக்காத இந்த சமூகத்தை ஏன் நாம் மதிக்க வேண்டும். கற்பு, கண்ணியம், பாதுக்காப்பு, குடும்ப மானம் என்று எல்லா எழவையும் பெண்களின் மீது சுமத்தி அவர்களை அலைக்கழிக்கும் சமூகத்தின் தூற்றுதலுக்கு ஏன் செவிசாய்க்க வேண்டும்.

இந்தக் கற்பு, ஆணாதிக்கம் பற்றித் தெரிந்தவரே அதை எதிர்க்காமல், பாதிக்கப்பட்ட பெண்ணைக் காரணம் காட்டி, நான் அப்பவே சொன்னேனே கேட்டியா, இப்படி ஆயிட்டியே, மானம் போச்சே, வாழ்க்கை போச்சே என்கிற பாணியில் பேசுகிறார்கள்.

பாதிக்கப்பட்ட இந்தப் பெண் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்கிறாள். இதில் அவளது மானமோ, கண்ணியமோ எதுவும் போகவில்லை. காதலிக்கும் பெண்களை இழிவாகப் பேசுகிறவர்கள்தான் கண்ணியமில்லாதவர்கள். அப்படி மானம் போனது என்று சொல்கிறவர்கள் இன்னும் கொஞ்சம் சிந்திக்கட்டும். அவள் தலைகுனியவில்லை. தேவையுமில்லை.

காதலிக்கும் பெண்களே !!

ஆண்கள் எச்சரிக்கை
சமூகம் எச்சரிக்கை
கண்ணியம் எச்சரிக்கை
தூற்றுதல் எச்சரிக்கை
கற்பிதங்கள் எச்சரிக்கை
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

பாலியல் வன்முறையைத் தவிர்க்க ஐந்து யோசனைகள்

இதை ஃபேஸ்புக்கில் பார்த்தேன். பாலியல் வன்முறையையிலிருந்து தப்ப பெண்களுக்கான யோசனைகள் என்று பகிரப்பட்டு வருகிறது. இது எல்லாப் பெண்களுக்கும் பொருந்தாது எனினும் ஒரு சில யோசனைகள் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஓரளவுக்கு உதவக்கூடியவையாகத் தெரிந்ததால் இதைப் பகிர நினைத்தேன்.

தனிமையில் செல்ல வேண்டிய நிலை வந்தால் பெண்கள் எப்போதும் எச்சரிக்கையுடனும், முன் யோசனைகளுடனும் இருக்க வேண்டும். 
 

1) நடு இரவில் ஒரு பெண் அடுக்ககக் குடியிருப்பில் (apartment) இருக்கும் மின்னுயர்த்தியில் (lift) தனியாக ஒரு  அந்நிய ஆணுடன் செல்ல வேண்டிய நிலையில் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் ?

 நீங்கள் 13 வது மாடிக்குச் செல்ல வேண்டுமென்றால், 1 லிருந்து 13 வரை அத்தனை பட்டன்களையும் அழுத்தி விடவும். இதனால் மின்னுயர்த்தி ஒவ்வொரு தளத்திலும் நின்று செல்லும். நீண்ட தனிமை தவிர்க்கப்படுவதால் நீங்கள் வன்முறையிலிருந்து தப்பும் வாய்ப்பு அதிகம்.

2) நீங்கள் உங்கள் வீட்டில் தனியாக இருக்கும்போது ஒருவன் உங்களைத் தாக்க முயன்றால் என்ன செய்வது
?

முதலில் சமையலறைக்கு ஓடுங்கள். மிளகாய்த் தூளும், மஞ்சளும் எங்கிருக்கிறதென்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். கத்தியும் தட்டுக்களும் எங்கு வைக்கப்பட்டுள்ளன என்பதும் உங்களுக்கு மட்டுமே தெரியும். இவை பெரும் ஆயுதங்களாகப் பயன்படும். எதுவும் இல்லையென்றால் தட்டுக்களையும், இன்னபிற பாத்திரங்களையும், பொருட்களையும் அவன் மீது எறியுங்கள். அவை உடையட்டும். முடிந்தவரை அதிகமாக சத்தம் போட்டு அலறவும். சத்தம் பாலியல் வன்முறையாளனின் மிகப்பெரிய எதிரியாகும். ஏனென்றால் அவன் பிடிபடுவதற்கு விரும்ப மாட்டான். பிடிபடுவதற்குக் காரணமாக இருப்பது அலறலே. அதனால் அவன் அஞ்சுவான்.

3) இரவில் தனியாக ஆட்டோவிலோ டாக்ஸியிலோ போக வேண்டிய நிலை வந்தால் என்ன செய்ய வேண்டும் ?


வாகனத்தில் ஏறும் முன்பு அவ்வாகனத்தின் பதிவு எண்ணைக் குறித்துக் கொள்ளவும். பின்பு அலைபேசியில் உங்களது நண்பருக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ நீங்கள் அக்குறிப்பிட்ட எண் உடைய வாகனத்தில் பயணம் செய்வதைத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் அலைபேசியில் இத்தகவலைத் தெரிவிப்பது அந்த வாகன ஓட்டிக்கும் கேட்குமாறு தெளிவாகவே பேசுங்கள். ஒரு வேளை உங்களது அழைப்பை மறுமுனை இருப்பவர் எடுக்காவிட்டாலும், நீங்கள் அதைக் காட்டிக் கொள்ளாமல் பேசுவது போலவே நடியுங்கள். விவரமாக குறுந்தகவல் அனுப்ப மறக்க வேண்டாம். இதன் மூலம் நீங்கள் பயணிக்கும் வாகனம் பற்றிய தகவல் மற்றவருக்கும் தெரிந்து விட்டதால், ஏதாவது தவறு நடந்தால் தனக்குப் பிரச்சனை வரும் என்று அந்த வாகன ஓட்டுநருக்குப் புரிந்து விடும். எனவே உங்களைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று சேர்க்க வேண்டிய பொறுப்பு அந்த ஓட்டுநருக்கு ஏற்பட்டு விடும். உங்களின் மோசமான எதிரியாக இருக்க வேண்டியவர் உங்கள் பாதுகாவலராக மாற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

4) ஓட்டுநர் வேறு பாதையில் திருப்பி ஓட்டிச் சென்றாலோ அல்லது ஆபத்தான பகுதிக்குள் நுழைந்தது போலவோ நீங்கள் உணர்ந்தாலோ என்ன செய்வது ?

உங்கள் கைப்பையின் கைப்பிடியையோ அல்லது துப்பட்டாவைக் கொண்டோ அவன் கழுத்தை இறுக்கியவாறு பின்னால் இழுங்கள். இதனால் அவன் மூச்சுத் திணறி நிலைகுலைவான். இல்லாத பட்சத்தில் சட்டையின் கழுத்துப் பட்டையை இழுக்க வேண்டும்.

5) இரவில் யாரோ பின்தொடர்ந்தால் என்ன செய்ய வேண்டும் ?

அருகிலிருக்கும் கடைகளிலோ அல்லது வீட்டிலோ சென்று உங்கள் இக்கட்டான நிலையைச் சொல்லுங்கள். இரவில் கடைகள் எதுவும் திறந்திருக்காவிடில், ஏடிஎம் இருக்கும் இடத்திற்குச் செல்லுங்கள் அங்கே கட்டாயமாக பாதுகாவலர் இருப்பார். அவர்களும் ஏடிஎம் இலிருக்கும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள் எனவே உங்களை மீது வன்முறையை ஏவ அவர்கள் தயங்குவார்கள்.

நன்றி: ஃபேஸ்புக்

 1) What should a woman do if she finds herself alone in the company of a strange
male as she prepares to enter a lift in a high-rise apartment late at night?

Experts Say: Enter the lift. If you need to reach the 13th floor, press
all the buttons up to your destination. No one will dare attack you in a lift that stops on every floor.


2) What to do if a stranger tries to attack you when you are alone in your
house, run into the kitchen.

Experts Say: You alone know where the chili powder and turmeric are kept.
And where the knives and plates are. All these can be turned into deadly
weapons. If nothing else, start throwing plates and utensils all over.
Let them break. Scream. Remember that noise is the greatest enemy of a
molester. He does not want to be caught.

3} Taking an Auto or Taxi at Night.

Experts Say: Before getting into an auto at night, note down its registration
number. Then use the mobile to call your family or friend and pass on the
details to them in the language the driver understands .Even if no one
answers your call, pretend you are in a conversation. The driver now knows
someone has his details and he will be in serious trouble if anything goes
wrong. He is now bound to take you home safe and sound. A potential attacker
is now your de facto protector!

4}What if the driver turns into a street he is not supposed to - and you
feel you are entering a danger zone?

Experts Say: Use the handle of your purse or your stole (dupatta) to wrap
around his neck and pull him back. Within seconds, he will feel choked
and helpless. In case you don’t have a purse or stole just pull him back
by his collar. The top button of his shirt would then do the same trick.

5} If you are stalked at night.

Expert Say: enter a shop or a house and explain your predicament.
If it is night and shops are not open, go inside an ATM box. ATM centers
always have security guards. They are also monitored by close circuit television.
Fearing identification, no one will dare attack you.

After all, being mentally alert is the greatest weapon you can ever have.

Please spread it to all those women u care & spread awareness as dis is d least we can do for a social & moral cause and fr d safety of women.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

வடகிழக்கு மாநில மாணவர்கள் கட்டாய ஹிந்தி/ இந்திய மொழிகள் திணிப்புக்கு எதிராக போராட்டம்


ஒரு பொய்யை ஏறக்குறைய அரை நூற்றாண்டாகச் சொல்லி வருகிறார்கள். ஹிந்தி படிக்காததால் தமிழர்கள் முன்னேற முடியவில்லை. கழிவறையில் நீர் வராது போனால் கூட கருணாநிதியை கடிந்து கொள்ளும் இன்றைய நிலையில் இந்த எழவெடுத்த ஹிந்தித் திணிப்பை எதிர்த்து தமிழர்களின் வாழ்க்கையில் மண்ணைப் போட்டு விட்டதாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்று வரையில் தினமலரின் பின்னூட்டங்களில் இதைக் காண முடிகிறது. ஹிந்தி படிக்காததால் நாம் எதை இழந்திருப்போம் என்று யோசித்தால் பெரிதாக ஒன்றும் புலப்படவில்லை. ஹிந்திக்காரர்களுடன் உரையாட முடியவில்லை, அங்கே சுற்றுலா சென்றால் லோல்படுவது, எடுபட்ட பாலிவுட் குப்பைகளுக்கு இருக்க வேண்டிய சந்தை இல்லாமல் போனது தவிர்த்து வேறொன்றுமில்லை. மேலும் ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை ஆங்கிலம் போலவே வெறும் அலுவல் மொழிதான் என்பதை ஆயிரமாவது தடவையாகச் சொல்லிக் கொள்ளவும் வேண்டும். ஹிந்தி பேசும் மாநிலத்தவர்கள் இங்கு தமிழகத்தில் கொத்தடிமைகளாக அவதியுறும் இக்காலத்திலும் இந்தப் பொய் இன்னும் உயிருடன் இருக்கிறது.

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பதை "ஹிந்தி எதிர்ப்பு" என்று ஹிந்தி மொழியையே வெறுப்பதாகவும் எதிர்ப்பதாகவும் தேசியமொழியான இந்தியைக் கற்க மறுக்கிறார்கள் மொழிவெறியர்கள் என்றும் காதில் பூ சுற்றுவதை எப்போதுதான் நிறுத்துவார்களோ ஹிந்தி வெறியர்கள்.

ஹிந்தி மட்டுமல்ல வேறெந்த மொழியும் மற்ற மொழியினர் மீது திணிக்கப்படக்கூடாது என்பதே நேர்மையானதாகும். அதற்கான தற்போதைய உதாரணம் டெல்லி பல்கலைக் கழகத்தின் வடகிழக்கு மாணவர்கள் போராட்டம். 


படங்கள் நன்றி ஃபேஸ்புக்
டெல்லி பல்கலைக் கழகத்தின் ஹிந்தி/இந்தியாவின் நவீன மொழிகள் திணிப்பு:

வரும் 2013/14 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் எல்லாப் பிரிவு முதலாண்டு மாணவர்களும் ஹிந்தி அல்லது இந்தியாவின் நவீன மொழிகளில் (Modern Indian Language) ஒன்றை அடிப்படையாக (foundational course) கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளது. அதாவது மாணவர்கள் ஒரு பாடமாக ஹிந்தியைப் படிக்க வேண்டும். அல்லது அல்லது 8 வது அரசியலமைப்பு சட்டத்தின் படி வரையறுக்கப்பட்ட நவீன இந்திய மொழிகளான அஸ்ஸாமி, வங்கம் (பெங்காலி), போடோ, டோக்ரி, குஜராத்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மைத்திலி, மலையாளம் மற்றும் மணிப்புரி ஆகியவற்றில் ஒன்றைக் கற்க வேண்டும். இதில் ஹிந்தியையோ அல்லது மேற்கண்ட மொழிகளுல் ஒன்றைத் தமது மொழியாகக் கொள்ளாத பல வடகிழக்கு மாநில மாணவர்களுக்கும் மிகுந்த சுமையைக் கொடுப்பதாகும்.

நாங்கள் இது பற்றி விவாதிக்க கோரிக்கை வைத்தும் நிர்வாகம் அதற்கு முன்வரவில்லை. நாங்கள் அலுவலகத்திற்கு வெளியே காவலர்களால் தள்ளப்பட்டோம், மாணவியர் மீது பாலின ரீதியான மொழியில் ஏசினார்கள்.

நவீன இந்திய மொழிகளைப் பேசும் மாணவர்களுக்கும் இந்தப் பாடத்திட்டம் கடினமானதுதான். ஏனென்றால் பல்கலைக் கழகத்திலுள்ள துறை, விரிவுரையாளர்கள் மிகக் குறைவான அளவே உள்ளதால் பல்கலைக் கழகத்தின் மொத்தப் பொறுப்பையும் மேற்பார்வையிடுவது இயலாது.

உலக நல்லிணக்கத்திற்கான வடகிழக்கு மாநிலங்கள் குழுமம் (The North-East Forum for International Solidarity (NEFIS)) - இதற்கான போராட்டங்களை மார்ச் 22, 25 ஆம் தேதிகளில் நடத்தியுள்ளது.

ஆசிய மனித உரிமை நடுவம், தேசிய மனித உரிமை ஆணையத்திடம் ஹிந்தி/இந்தியாவின் நவீன மொழிகள் திணிப்புக்கு எதிரான ஒரு புகாரை அளித்துள்ளது. 

வடகிழக்கு மாணவர்களின் கூடுதல் தேவைகள் புறக்கணிக்கப்படுவது அலட்சியப்படுத்தப்படுவதும் புதிதல்ல. பல்கலைக்கழகத்தின் கொள்கைகள் விதிகள் செயல்படுத்தப் படும்போதெல்லாம் வடகிழக்கு மாணவர்களின் விருப்பத்துக்கு எதிராகவே இருப்பதை நாங்கள் கவனித்து வந்துள்ளோம். ஆகவே இப்போது அதற்கு எதிராக நாங்கள் செயல்பட வேண்டியிருக்கிறது.

போராட்டம்

மார்ச் 22 ஆம் நாள் நண்பகல் 2 மணியளவில் டெல்லிப் பல்கலைக்கழகத்தின் கலைத் துறையின் (Faculty of Arts) வாயிலில், விவேகானந்தர் சிலையருகில் ஒன்று கூடலை நிகழ்த்தினார்கள். வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு பேச்சாளர்கள் டெல்லி பல்கலைக் கழகத்தின் பண்பாட்டு மீறலைக் கண்டித்துப் பேசினர். முழக்கங்கள் எழுப்பட்டதைத் தொடர்ந்து வாகனத்தில் வந்த காவல் துறையினரால் கூட்டம் தடுக்கப்பட்டது, டீனும், ப்ரோக்டரும் வந்து கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். டெப்டி டீன் அங்கே கூடியிருந்தவர்கள் மீது இனவெறிக் கருத்தை வெளியிட்ட பின்பு கைகலப்பு ஏற்பட்டது. மன்னிப்புக் கேட்கும் வரை கோரிக்கை மனுவைக் கொடுக்க மாட்டோம், பிரதிநிதிகளை அனுப்ப மாட்டோம் என்று கூறினார்கள் மாணவர்கள். இரண்டும் மணிநேர தொடர் முழக்கங்களுக்குப் பின்னர் டெப்டி டீன் வந்து மன்னிப்புக் கேட்டார். பின்பு பேச்சுவார்த்தைக்கு அஸ்ஸாமி, நாகா, மைத்தீஸ் (Meities), குகிஸ் (Kukis), டாங்குள்ஸ் (Tangkhuls), ஆஸ் (Aos) மற்றும் தமிழ் பிரதிநிதிகள் அனுப்பப்பட்டனர்.  அவர்களிடம் மீண்டும் திங்களன்று வருமாறும் அவர்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுமென்றும் உறுதியளிக்கப்பட்டது. போராட்டக்குழுமம் கோரிக்கை நிறைவேற்றாவிடில் திங்களன்று மீண்டும் போராட்டத்திற்கு ஒன்று கூடுமாறு அறிவித்தது. ஒற்றுமையுடன் இருப்பவர்கள் நிச்சயம் வெல்வார்கள் என்ற முழக்கத்துடன் கலைந்து சென்றார்கள் போராட்டக்காரர்கள்.

நவீன இந்திய மொழிகள் :

நவீன இந்திய மொழிகள் என்று வரையறுக்கப்பட்ட மொழிகள் 8 வது அரசியலமைப்புச் சட்டத்தின் படி அஸ்ஸாமி, பெங்காலி, போடோ, டோக்ரி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மைத்திலி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகியன. இந்த மொழிகளுக்காகவும் டெல்லி பல்கலைக் கழகம் குறைவான விரிவுரையாளர்களையே கொண்டுள்ளது. வடகிழக்கிலிருக்கும் சிறுபான்மை/விளிம்பு நிலை குழுக்கள் சார்ந்த மொழிகளுக்கு விரிவுரையாளர்கள் இல்லை. மொழிகள் அங்கீகரிக்கப்படவில்லை.

எனவே இம்மொழி சாரா வடகிழக்கு மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெற்று தேற முடியும், இல்லையெனில் தோல்வியடைவார்கள். இது மாணவர்களின் கல்வித் தரத்தையும், வேலைவாய்ப்புக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் இவர்களில் பெரும்பான்மையினர் பள்ளியில் ஹிந்தியைக் கற்றவர்களல்ல. இந்தியா டுடேவுக்கு பேட்டி அளித்த டீன் வெறும் 40% மதிப்பெண்கள் இடைநிலைத் தேர்வில் (semester) வெற்றியடையப் போதுமானது எனவே மாணவர்களின் கோரிக்கை அடிப்படையற்றது. எனவே கட்டாய மொழியில் நாங்கள் 0 எடுத்தால் கூடப் போதுமானது என்றும் கூறியிருக்கிறார். இதற்காக நாங்கள் படிக்க வரவில்லை. நாங்கள் சிறந்த மதிப்பெண்கள் எடுத்து நல்ல வேலையில் அமரவே விரும்புகிறோம்.

மேலும் வட கிழக்கு மாணவர்கள் பாரபட்சத்துடனேயே நடத்தப் படுகின்றனர். கடந்த வருடங்களில் நூற்றுக் கணக்கான மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர்.

கோரிக்கையின் சாரம்: 

 கட்டாய ஹிந்தி/ இந்திய நவீன மொழிகள் கற்றலை தனிப்பட்டவர் விருப்பத்திற்குரியதாக (optional) மாற்ற வேண்டும்.

நவீன இந்திய மொழிகளுக்கான பாடத்திட்டங்கள், பேராசிரியர்கள் நியமித்தலை உடனடியாக மேம்படுத்த வேண்டும்.

சட்டத்திற்கு புறம்பான முறையில் பழைய பாடத்திட்டத்தின்படி இந்தி கற்க வேண்டிய நிலையில், அதன் காரணமாக தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்களின் நிலையைக் கவனத்தில் எடுக்க வேண்டும்.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இப்போராட்டத்திற்கு நமது ஆதரவை அளிப்போம்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

நடிகர் சிம்பு பாடல் எழுதாவிட்டால் குடிமுழுகி விடுமா ?


பல நாட்களாக வயிற்றெரிச்சலில் இருக்கிறேன். இவனுக்கெல்லாம் எதற்கு இந்த வேலை என்று பெருந்தன்மையாக திட்டுவதை விட இவருக்கெல்லாம் இரக்கமே இல்லையே என்று நம் மீதே பச்சாதாபமாக இருக்கிறது. நான் கொஞ்ச நாளுக்கு முன்பு பயந்தேன். அது இப்போது நடந்தே விட்டது. அது என்ன ?

அதற்கு முன்பு சில வரிகள்

இது சலிப்பூட்டும் ஒரு பெரிய இடுகை, கோர்வையில்லாமல் புலம்பலாகவே எழுதியிருக்கிறேன். இதற்கு மேலும் விரும்பியவர்கள் தொடரலாம்.

 
தமிழ் மொழியை நாட்டியமாடும் நயத்துடன் பாடல்களாக எழுதியவர் விஜய டி ராஜேந்தர். அவரை மிகப்பெரும் கவிஞர் என்று பாராட்டத்தக்கவராக இல்லாத போதும் அவர் வலைப்பூவிலும், ஃபேஸ்புக்கிலும் எழுதும் நம்மைப் போன்ற சராசரிக் கவிஞர்களை விடவும் திறமையும், கவிதை, பாடல்கள் எழுதும் ஆற்றலும் பெற்றவர். திரைப்படத்துறையில் குறிப்பிடத்தகுந்த ஒருவரான அவருக்குப் பிறந்த ஒரே காரணத்தால் நடிகனாகி நம் உயிரை வாங்கி வருபவர் அவரது மகன் திருவாளர் சிலம்பரசன்.

அவரது இரண்டாவது படமான "தம்" என்ற காவியத்தை திரையரங்கத்தில் கண்டும் உயிருடன் விண்டவன் நான். அதனால் எனது உணர்வுகளைப் புரிந்து கொள்ள தம், குத்து போன்ற படங்களைப் பார்த்தவர்கள் மட்டுமே முடியும். அவர் மீது நான் கொண்ட பிரமிப்புக்கு உதாரணமாக ஒன்றைச் சொல்கிறேன். எனக்கு கல்லூரி நண்பி ஒருவர் மீது அதிக பாசமும் மதிப்பும் வைத்திருந்தேன். எனக்குப் பிடித்த நடிகர் சிம்பு என்று அவர் சொன்ன ஒரே காரணத்திற்காக அவளிடம் நானும், இன்னொரு நண்பனும்  சொன்னது "உம்மேல இருந்த மரியாதையே போச்சு".  யாராவது சிம்புவைப் பிடிக்கும் என்று சொன்னாலே அவரை ஒரு மாதிரியான ஆளா இருப்பாப்பிடியோ என்றுதான் எண்ணும் அளவுக்கு அவரைப் பிடிக்கும். எங்காவது பேருந்திலோ, அல்லது வேறு எங்காவது படம் ஓடும் இடத்தில் மாட்டிக் கொண்டால் மட்டுமே படம் பார்க்க வேண்டிய நிலைக்கு ஆளாவேன். நானாக படத்தை விரும்பிப் பார்ப்பதில்லை. எந்தத் திரைப்படமும். அங்காடித் தெரு, ஆரண்ய காண்டம், வழக்கு எண் வகையான படங்களையாவது பார்க்க வேண்டும் என்று நினைப்பதுண்டு ஆனால் அதுவே நடக்க வில்லை. விஸ்வரூபம் கூடப் பார்க்கவில்லை. இதன் மூலம் எனக்கும்  திரைப்படங்களுக்குமான இடைவெளியை அறியலாம்.

இருப்பினும் திரைப்படமும் அதன் தாக்கமும் தூணிலும் துரும்பிலும் நீக்கமற நிறைந்திருப்பதால் அதைப்பற்றி முற்றிலும் தவிர்க்கவியலாமல் கேள்விப்படவும், பேசவும் நினைக்கவும் நேர்கிறது. இந்த எழவெடுத்த திரைப்படங்களின் ஒரு சில காட்சிகளைத் தொலைக்காட்சியில் காணும்போதே எரிச்சல் பற்றிக் கொண்டு வருகிறது. முக்கியமாக சிம்பு, தனுஷ் ஆகியோரின் படங்களும் சரி பாடல்களும் சரி உலகமாக எரிச்சலாக இருக்கிறது.

நான் முடிந்த வரை இதையெல்லாம் பார்ப்பதையும் பாடல்களைக் கேட்பதையும் தவிர்த்தே வந்திருக்கிறேன். ஆனாலும் விதி நம்மை விடுகிறதா ? நான் பொதுவாக எனக்குப்பிடித்த நபர்களைப் பற்றிய எதிர்மறை செய்திகளை எதிர்கொள்வதில் இயல்பாக எடுத்துக் கொள்ள முடிவதில்லை. எடுத்துக்காட்டாக தற்போது குமுதம் இதழில் இளையராஜாவின் பேட்டியைப் படித்தால் எடுத்தெறிந்த மாதிரி பேசும் இளையராஜாவின் மீது மரியாதை போய்விடும். அதனால் அதைப் படிப்பதில்லை. கமல்ஹாசனை அதிகம் வெறுத்து விடுவேனோ என்று உன்னைப் போல் ஒருவன், விஸ்வரூபம் விமர்சனங்களைப் படித்ததால் அப் படங்களை பார்க்கும் ஆசையே போய்விட்டது.

ஒரு சில படங்களில் வரும் ஒரு பாடல் வரியோ அல்லது காட்சியோ என்னை மிகவும் எரிச்சல் படுத்தி விடும். எடுத்துக்காட்டாக

ஐயா படத்தில் சரத் ஒரு காட்சியில், மனைவியை ஒருவன் மிகவும் கொடுமைப்படுத்துவானாம். அதற்கு அவனுக்கு பாடம் புகட்டும் விதமாக அவனது இடது கையை உடைத்துவிட்டுச் சொல்வார், அம்மா கூட செய்ய முடியாத வேலையை பொண்டாட்டிதான் செய்வா. இதன் மூலம் அவனது இடது கையை உடைத்து கணவனின் குண்டி கழுவும் வேலையை அந்தப் பெண்ணின் தலையில் கட்டிவிடுவார். இதன் மூலம் அந்த ஆண் பொண்டாட்டியின் பெருமையை உணர்ந்து கொள்வானாம். சரி. இது கணவனிடம் அடிவாங்குவதைவிடவும் கொடுமையான தண்டனையல்லவா ?

வரலாறு படத்தில் தன்னை ஆம்பிளையா என்று கிண்டல் செய்த பெண்ணை பாலியல் வன்முறை மூலம் பதில் சொல்லும் நாயகத்தனம்

தேவர் மகனில் வடிவேலு கமலுக்கு செருப்பு எடுத்துத் தரும் காட்சி

முதல்வனில் முந்தானையை எடுத்து என்னையே எடுத்துக்க என்று நாயகி சொல்லும் காட்சி

இப்படியாக பல இருக்கின்றன. இது போன்றே பல காட்சிகளிலும் எதுக்குடா இப்படி எடுக்கறானுக என்றெல்லாம் நினைத்துக் கொள்வதுண்டு.

எனக்கு இந்த சிம்பு, தனுஷ் படங்களில் பிடிக்காதது என்னவென்றால் எல்லாமேதான். அந்தக் காலத்தில் காதல் கொண்டேன், திருடா திருடியை விரும்பித்தான் பார்த்தேன். இப்போதெல்லாம் பார்த்தால் சுத்தமாகப் பிடிப்பதில்லை. ஏனென்றால் இவர்களது படங்களில் பொறுக்கித்தனத்தை நாயகத்தனமாக சித்தரிப்பார்கள். இவர்கள் மட்டுமல்ல இன்னொருவர் கார்த்தி. பார்த்தாலே பற்றிக் கொண்டு வரும். இவனுகள் இளித்துக் கொண்டு நக்கலடிப்பதெல்லாம் பார்த்து விட்டு சுற்றி இருப்பவர்கள் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். எனக்கோ எரிச்சலாக வரும்.

சுள்ளான் படத்தில் தனுஷ் அவரது அம்மாவிடம் சொல்வார். அவரது அப்பா மணிவண்ணன். வீட்டுக்குள் நடக்கும் ஏதோ ஒரு விளையாட்டுச் சண்டையில் அம்மாவிடம் "உம் புருசனை மூடிட்டு இருக்கச் சொல்லு". எப்படி இவனெல்லாம் இப்படிப் படமெடுக்கிறான் என்று எரிச்சல்.

மற்றபடி இவன்களின் படங்களில் என்ன எழவு இருக்கிறதென்று பார்த்தால் ஒரு மண்ணும் இல்லை. அரை மணிநேரம் கூடப் பார்க்க முடிவதில்லை. நிற்க. நான் சொல்ல வந்ததை விட்டு வேறெங்கோ சென்று விட்டேன்.

இந்தத் திரைப்படப்பாடல்களுக்கு வருவோம். நான் மேலே சொன்னது போல சில படக் காட்சிகளை சகிக்கவே முடியாது என்பது போலவே பாடல் வரிகளும் அதில் சில.

இந்தியன் படத்தில்

அக்கடான்னு நாங்க உடை போட்டா
துக்கடான்னு நீங்க எடை போட்டா
தடா உனக்குத் தடா

 
தித்திக்குதே படத்தில் வரும்

"ஈராக்கு யுத்தம் முடிஞ்சு போச்சு அங்க
எனக்குள்ள யுத்தம் தொடங்கிடுச்சு இங்க"
 


பூவெல்லாம் உன் வாசம் படத்தில் வரும்

இலங்கையில் நடக்கின்ற யுத்தம் நிறுத்து
எனக்கு காதல் வந்ததே (திந்திந்தாரா பாடலில்)

 
டிஷ்யும் படத்தில் வரும்

அமெரிக்கா நீயானா ஆஃப்கானிஸ்தான் நானானா
ஸ்ரீலங்கா நீயானா எல்டிடிஈ நானானா 

 
அந்நியன் படத்தில் வரும்

ஹிரோஷிமா நீதானோ நாகசாகி நீதானோ
உன்மீதுதானோ என் காதல் பாமோ

 
கந்தசாமியில் வரும்

ஹிட்லர் பேத்தியே ஹிட்லர் பேத்தியே
காதலொன்றும் யூதனில்லை கொல்லாதே
காஷ்மீர் நான் நீ பாகிஸ்தான் தீராது டிஷ்யும்தான்

 
2009 களின் தொடக்கத்தில் ஈழப்போர் நடை பெற்ற போது எல்லா ஊடகங்களிலும் அடிபட்ட ஒரு சொல் பாதுகாப்பு வலயப்பகுதி (யில் தாக்குதல் பல பேர் சாவு). இதை அப்படியே ஒரு பாடலில் பதிவு செய்தார் நா. முத்துக் குமார் மோதி விளையாடு படத்தில்

பாதி காதல் பாதி முத்தம் போதாது போடா ..
காதல் என்னைக் காதல் செய்ய
பாதுகாப்பு வலயப் பகுதியில் ...
  


என்று ஒரு பெண்ணின் பிரிவாற்றாமையை விளக்குகிறது. பூவெல்லாம் உன் வாசம், தித்திக்குதே பாடலையும் எழுதியவர் வைரமுத்து. இந்தப் பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பெயர்களும் அதன் பின்னுள்ள வரலாறும் தெரிந்துதானே இதை எழுதியிருக்கிறார்கள். இப்படிச் செய்வது நியாயமா ? தடா என்றால் தெரியாதா ? அனுபவித்தவர்களைக் கேட்டால் தெரியும். பல இலட்சம் பேர் செத்துச் சுண்ணாம்பான வரலாற்றுப் பேரழிவுப் பெயர்களை ஆணுறுப்பு விரைப்பதற்கும், பெண்ணுறுப்பு விரிவதற்கு உவமைப்படுத்தலாமா ?

தில்லையாடி வள்ளியம்மா
தில்லிருந்தா நில்லடியம்மா


திரிஷாவுக்கு எழுதியது குருவி படத்தில். திரிஷாவை ஒப்பிட வேறு ஒன்றும் கிடைக்கவில்லையா ?

 
எங்கோ நடக்கு இழவுகள் நமக்கு பொழுது போக்கு, காதலுக்கும் காமத்துக்கும் ஒப்புமைப் படுத்துவதற்கா ? இதற்கெல்லாம் போராட்டமெல்லாம் செய்ய முடியாது எழுதுகிறவர்கள்தான் பொறுப்புணர்ந்து மனசாட்சியுடன் எழுதவேண்டும்.

"முள்வேலிக்குள்ளே வாடும் தமிழீழம் போல் ஆனேனே"   

தமிழ்நாட்டிலிருந்தும் இதைச் செய்தால், இதில் அடுத்தவர்கள் நம்மைப் புரிந்து கொள்ளவில்லை என்ற புலம்பல் வேறு. இதெல்லாம் ஒரு மேட்டரா, கிறுக்கத்தனம் என்று கடந்து விடவும் முடியும், சற்றே சிந்தித்தால் அதிலுள்ள வக்கிரம், பொறுப்பில்லா அலட்சியமும் புரியும்.

இப்போது மீண்டும் சிம்புவுக்கு வருகிறேன்.

இந்த ஜென்மம் எழுதிய பாடல்கள் !!?? (பாடல்கள் என்று சொல்வதை விட பாடலுக்கு ஒரு அவமானம் தேவையில்லை) கேட்டாலே எனக்கு வெறியாகிறது. லூசுப் பெண்ணே கூட பரவாயில்லை. அடுத்தடுத்து எழுதியதெல்லாம் எவ்வளவு கேவலமான வரிகள். என்னத்தைக் கிறுக்கிக் கொடுத்தாலும் தாம் தூமென்று மெட்டுப்  போட்டு அதை வெற்றிப் பாடலாக்கி விட யுவன் போன்ற இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அதனால் சிம்புவுக்குக் கவலையே இல்லை. ஆனா ஆவன்னா இனா ஈயன்னா என்று உளறினால் கூட அதை ஒரு பாடலாக்கி உலகத்தமிழர்களின் செவியைக் குதறும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. இவர் அடிவயிற்றிலிருந்து முக்கிப் பாடுவைதையும் நினைத்தால்

எவன்டி உன்னப் பெத்தான் கைல கெடச்சா செத்தான் ...........

வாடி வாடி ஹாட் பொண்டாட்டி
தேவையில்ல வைப்பாட்டி
 


 இப்ப ஒரு பாடலை ""இயற்றிப் பாடி"யிருக்கிறார். அதில் வரும் வரிகள்

மேட்டரை ஏன்டா பத்தினியாக்கற
பத்தினிய ஏன்டா மேட்டராக்குற"


இப்படியெல்லாம் என்ன மயிறுக்குடா எழுதறீங்க ? இதையெல்லாம் செல்பேசியில் வைத்துக் கொண்டு கேட்பதற்கு உலகத்தில் பல கிறுக்குப் பயல்கள் இருக்கிறார்கள். இந்த விடலை கிறுக்குகள் தொடங்கி வாலிப வயோதிக அன்பர்கள் வரை இது போன்ற ஆணாதிக்கக் குப்பைகளை ரசித்துக் கேட்கிறாரகள். அதாவது பெண்கள் என்றால் காதலித்து ஏமாற்றுகிறவர்கள், ஆண்கள் உண்மையானவர்கள் தியாகிகள் என்று தாங்களாகவே நம்பிக் கொண்டிருக்கு அல்பைகளுக்கு இது இனிக்கும். தண்ணியடித்துவிட்டு ஆட்டம் போடுவது இன்னும் கூடுதல் பலம்.

சொந்தமாக ஒண்ணும் தெரியாது. எல்லாமே பழைய பாடல்களின் ரீமிக்ஸ் அல்லது படங்களின் ரீமேக். எல்லாப் பாடல்களிலிலும் இவரது படங்களின் பெயர்களையும், பாடலின் வரிகளையும் தவறாமல் சொல்லிக்  கொள்ள வேண்டியது. 

இந்த சிம்பு அய்யா இதற்கு முன்பு செய்ததை நினைத்துப் பார்க்கவும், தன்னை லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று கடந்த 10 வருடங்களாகச் சொல்லிக் கொண்டவர். தற்போது யங் சூப்பர் ஸ்டார். இன்னும் கொஞ்ச நாளில் சூப்பர் ஸ்டார் என்று அவரே சொல்லிக் கொள்வார். பின்பு நாமும் சொல்ல வேண்டியதுதான்.

தனுஷ் ரஜினி மகளைத் திருமணம் செய்து கொண்டபோது பெரிய தியாகியாகி எங்கிருந்தாலும் வாழ்க என்றார்.  பின்பு மன்மதன் படத்தில் இது என்னுடைய சொந்தக் கதை என்று வசனம் வைத்து தனுஷின் முந்தைய படமான சுள்ளானில் நாயகியாக நடித்த சிந்து துலானியை காதலித்து ஏமாற்றுகிறவளாக நடிக்க வைத்தார் (கதை திரைக்கதை சிம்பு). நுண் அரசியல் புரியுதுங்களா ? இதெல்லாம் நான் மட்டும் சொல்லல, படம் வந்தப்ப எல்லாரும் பேசிக்கிட்டமாக்கும். அந்தப் படம் மிகப்பெரும் வெற்றிப் படமென்றும் சொல்லிக் கொண்டார்கள். அப்போது பெரிய தயாரிப்பாளராக இருந்தவர்தான் இந்தியன் தியேட்டர்ஸ் கிருஷ்ணகாந்த. அந்தப் படத்திற்கு பின்னர்தான் காணாமல் போனார். இயக்குநர் முருகன் இன்னும் கண்ணீர் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

 வல்லவன் படத்துக்காக ஓவர்டோஸ் விளம்பரம் நயன்தாராவின் உதட்டைக் கடித்து இழுத்து மிகப்பெரிய ஃப்ளக்ஸ் பதாகையை மவுண்ட் சாலையில் வைத்தார். (அதற்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன). பின்பு நயனுடன் சண்டையில் பிரிந்தவுடன் இருவரும் படுக்கையறையில் இருந்த உதட்டு முத்தத்துடன் கூடிய படத்தை இணையத்தில் வெளியிட்டு (இவல்லாம் எங்கூட படுத்தவதானே என்று ஊர் பேச) தானொரு சாக்கடை என்று காட்டினார். (பழி வாங்கிட்டாராம்)

ரஜினி நீண்ட நாட்களுக்கு பின் நடித்த சந்திரமுகி. அதில் நாயகி ஜோதிகா அதில் ரஜினி பெயர் சரவணன். ஒரு குப்பைத் தெலுங்குப் படத்தை ரீமேக் செய்து அதற்கு சரவணா என்று பெயரிட்டு அதில் ஜோதிகாவை நாயகியாக்கினார் சிம்பு.

தனுஷின் கொலைவெறிக்குப்போட்டியாக உலக சமாதான கீதம், தனுஷின் மயக்கமென்ன நடித்த ரிச்சாவே ஒஸ்தியில் நாயகி என்று இவரது அரை வேக்காட்டுத்தனம் தொடர்கிறது. இதெல்லாம் பாட்டெழுதினால் எந்த லட்சணத்திலிருக்கும் என்பதற்கு உதாரணமே இவர் எழுதும் பாடல்கள்.

எல்லாப் படங்களிலும் செக்ஸியான உடைகளில் தன்னைச் சுற்றி வந்து கதாநாயகி பாடுவது போலவும், பத்து பதினைந்து பிகினிகள் சுற்றி நின்று தடவுவது போலவும் நடிக்கும் இந்த மன்மதன் "எவன்டி உன்னைப் பெத்தான்" பாடலில் "உன் மானங் காக்கிற மேலாடை நாந்தான்" என்ற வரியையும் எழுதியிருக்கிறார். பெண்களின் மானம் மேலாடையில் இருக்கிறது என்று நம்பும் சொல்லும் சராசரி ஆண்களைப் போலவே இந்த மன்மதனும் நினைக்கிறாராம். எல்லாப் பெண்களும் இவர் சொல்கிறது போல மானத்துடன் இருந்தால் இவர் புரட்டி எடுப்பதற்கும் மோப்பம் பிடிப்பதற்கும் எந்தப் பெண் நடிக்க வருவாள்?

அடுத்த அறிவாளி தனுஷ், பெரிய இடத்துப் பொண்ணை மடக்கிப் போட்டு இரண்டு குழந்தைகளுடன் செட்டிலான பின்பு
ம், 20 வயது பையனைப் போலவே தன்னைக் கருதிக் கொண்டு அப்பையன்களுக்குப் பிடித்த மாதிரி இன்னும் ஒரு அங்குலம் கூட பெண்கள் மீதான வன்மத்தை மாற்றாமல் இன்னும் பாடல்களிலும் படங்களிலும் காட்டிக் கொண்டிருப்பவர். நல்ல சிவந்த நிறமுடைய நடிகைகளை நாயகிகளாகப் போட்டுக் கொள்ள வேண்டியது, அவர்களின் பின்னால் அலைவது, ஊறுகாய் மாதிரி பாடல் காட்சிகளில் மோந்து பார்ப்பது அவர்களும் அவ்வப்போது ஸ்லோ மோசனில் திரும்பிப் பார்ப்பது கடைசியில் இவரது உண்மைக் காதலை உணர்ந்து ஒத்துக் கொள்வது இதெல்லாம் இவரது படத்தின் கதைகள். கதாநாயகிகள் எனப்படும் நடிகைகளுக்கு என்றுதான் விடிவோ தெரியவில்லை.

ஆடுகளம் படத்திற்கெல்லாம் தேசிய விருதென்றால் அதை விடக் கேவலம் வேறெதுவுமில்லை. சூரியா தம்பி கார்த்திக்கும் இதுதான் கதைக்களம். நல்லா வாயில வருது.

அப்பாவி மாதிரி மூஞ்சியை வைத்துக் கொண்டு தண்ணியடித்து, தம்மடித்து பொறுக்கித்தனம் செய்ய வேண்டியது ஊரிலேயே அம்சமான பொண்ணைப் பார்த்தி ஈயென்று இளித்துக் கொண்டு சுத்த வேண்டியது இது மாதிரியான மொன்னைகளுக்கெல்லாம் நம்ம அண்ணந்தான் குரு. சொந்த வாழ்க்கையில் ஃபிகர்களைக் கரெக்ட் பண்ண முடியாமல் ஏங்கித் தவிக்கும் லட்சோபலட்சம் இளைஞ்ஜர்களின் ஏக்கத்திற்கு வடிகால் இவர். யாரடி நீ மோகினியில் இவர் பெரிய நிறுவனத்தில் நேர்காணலில் தேர்வாவதும், காதல் கொண்டேனில் முதல் நாள் வகுப்பில்  கணக்கு வாத்தி கோட்டாவில் வந்தவன் என்று திட்டியதற்குப் பிறகு கரும்பலகையில் இவர் ப்ராப்ளத்தை சால்வ் செய்வதும் ரஜினி படத்தையே விஞ்சும் செம மாஸ் சீன்ஸ் (இதே மாதிரி பிரிச்சுப் போட்ட ஹீரோ ஹோண்டாவை சரியாக மாட்டும் ரவிகிருஷ்ணா - 7G படத்தில். யூத்துகளை அடித்து வீழ்த்தும் மாஸ். நன்றாக பல்ஸ் பிடித்து வைத்திருக்கும் இயக்குநர் செல்வராகவன்). பெண்கள் மீது வன்மத்தையும் வெறுப்பையும் கக்கும் பாடல்களை கூச்சநாச்சமில்லாமல் எழுதுவார்.

உன்னைப் பெத்தவன் உன்னப் பெத்தானா செஞ்சானா ?

ஒய் திஸ் கொலவெறி 

இப்படித் தொடர்கிறது இவரது சேவை. இவரது அண்ணாரோ ஒரு படி மேலே போய் 

வெட்றா அவள கொல்றா அவள அடிடா அவள 

 
என்று வெறியேற்றுகிறார்.

நண்பனின் அப்பாவையும் தனது அப்பாவையும் அவர் இவர் என்று சொல்வது, அதே நேரம் மனைவி, நண்பிகளின் அப்பாக்களுக்கு மரியாதை இல்லை. அவ அப்பன் இருக்கானே என்று ஒருமையில் விளிப்பதும் ஆண்கள் செய்வதுதான். அந்த அடிப்படையில்தான் இவர்கள் எழுதினால் அவர்கள் ரசிக்கிறார்கள். இந்தப் பெண்களெல்லாம் எப்படி இவனுகளையெல்லாம் பிடிக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தாலே கசக்கிறது. ஆத்திரமே வராதோ ? இவரு சம்சாரத்தோட அப்பா ரஜினியை, உங்க அப்பன் இருக்கானே என்றா சொல்வார். மூச்சுக்கு மூச்சு ரஜினி சார்
ரஜினி சார்னு கடையத்தெரியுதுல ?

இடுகையின் ஆரம்பத்தில் நான் சொன்னது, நான் பயந்தது நடந்தே விட்டது. அது என்ன வென்றால் இந்த சிம்பு தனுஷ் செல்வராகவன் வகை அற்பர்கள் பாடல்கள் எழுதினால் கொஞ்சநாளில் ஙொம்மா, ஙோத்தா தொடங்கி தேவிடியா பயல் வரை எல்லா வசைச் சொற்களையும் இவர்கள் எழுதும் "பாடலில்" கொண்டு வருவார்கள் என்று நினைத்தேன். உலக சமாதானத்திற்கு கீதம் இசைத்த கவிப்பொறுக்கி அல்லது பொறுக்கிக் கவி சிம்பு அதை நிறைவேற்றி விட்டார். இந்த காதலுனு சொன்னவன் என்ற பாடலை முடிக்கும் போது "த்தா' என்ற ஒலியுடன் முடிக்கிறார்.  இந்த "த்தா" என்பது வரிக்கொருமுறை சென்னையிலிருப்பவர்கள் பயன்படுத்தும் வசைச் சொல். அது ங்கோத்தா என்பதன் சுருக்கம். அதைச் சொல்லும் பாதிப்பேருக்கு அதன் பொருளே தெரியாது என்பது தனிக்கதை. 


விஜய் பகவதியில் பாடிய போடாங்கோ பாடலுக்கும் இது போல சலசலப்பு வந்தது. குங்குமமோ அல்லது குமுதமோ ஒரு பேட்டியில் விஜய் சொன்ன விளக்கம் அது கெட்ட வார்த்தையில்ல போடா கோமாளின்னு சொல்றோமில்லையா அது மாதிர் என்றார். 


இந்த மாதிரி நடிகர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் தனது படங்களில் ? பொறுக்கியாக இருப்பது வீரம், ஆண்மை, நாயகத்தனம்.

பெண்கள் பின்னாடி சுற்ற வேண்டும். அவளுக்கு சொந்த புத்தியெல்லாம் கிடையாது அவள் உனக்குத்தான் கிடைப்பாள். அதுதான் காதல் உண்மைக் காதல்.

முக்கியமாக பெண்களை ஃபிகர், ஆண்டி என்றுதான் சொல்ல வேண்டும், இல்லையென்றால் நீ ஆணே இல்லை. சந்தானத்துடன், கருணாசுடன் இணைந்து அழகாக இல்லாத பெண்களை அட்டு ஃபிகர், அய்யே என்றும் இகழ வேண்டும். (என்னமோ இவனுக மூஞ்சி மட்டும் டாம் க்ரூஸ் மாதிரி)

ஆண்கள் பாவம் பெண்கள் ஏமாற்றுப் பேர்வழிகள், அலைய விடுகிறவர்கள் என்று பெண்களைத் திட்டுவதே பாடல்.

கிளப் டான்ஸ், பப், பாப் இசை, குத்துப் பாட்டு என்று பட்டையைக் கிளப்பினாலும் பெண்ணுக்கு அறிவுரை சொல்லவும் கற்பைக் காக்கவும் கற்காலத்திற்கு ரிவர்ஸ் கியர் போடுவாரகள்.

இவர்களின் அல்லக் கைகளாக சந்தானம், சிவகார்த்திகேயன், கருணாசை வைத்து சொரிந்து கொள்ள வேண்டியது.

இன்னும் விடலைகள் ஆண்கள் செய்தால் மன்மதன், பெண்கள் செய்தால் - மேட்டர் என்ற அளவுகோலுடன்தான் திரிகிறார்கள். ஆணுக்கு வந்தா ரத்தம், பொண்ணுக்கு வந்தா தக்காளிச் சட்னி. ஆண் செய்தால் என்ஞாய்மென்ட், பெண் செய்தால் கற்பு போச்சு. இந்தக் கான்செப்ட்டை ஒத்துக் கொண்டவர்கள் கொஞ்சமும் உறுத்தலின்றி எல்லாப்படங்களையும், பாடல்களையும் மனசாட்சியைக் கழட்டி வைத்து விட்டு ரசிக்கலாம். ரசிகன் என்று சிலிர்த்து கொள்ளலாம். ஆணாதிக்க அரிப்பையும் சொரிந்து கொள்ளலாம். பொறுக்கித்தனத்தை ஏற்றிப் போற்றலாம்.

இவர்களின் படங்கள், பாடல்கள் மட்டுமல்ல இன்னும் பல பேர்கள் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லாப் பாடல்களும் காதலைச் சொல்வதில்லை. வெறும் காமத்தைத்தான் சொல்கின்றன. பெண்ணின் அழகைப்புகழ்கின்றன (அழகே அழகே அழகின் அழகே நீயடி, அழகோ அழகு உன் கண்ணழகு). உடலை வர்ணிக்கின்றன (இடுப்பிருக்கானா இல்லையானா இலியானா, விட்டம் மட்டம் படித்தேன் உன் நெஞ்சின் மேலே). உடலை வர்ணிப்பதும், அழகைப் புகழ்வதும் எப்படியப்பா காதலாகும் ? மெலடிகளில் கொஞ்சம் கவித்துவமாக எழுதியைதே குத்துப் பாட்டில் கொச்சையான வரிகளைப் போட்டால் மாறிவிடுகிறது. குத்து, போடு, போட்டுத்தாக்கு, வெச்சிக்க என்று காது கூசுமளவிற்கு அடித்து விளையாடலாம்.

என்ன கருமாந்திரமோ இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டு எழுத வேண்டுமா என்று தோன்றுகிறது. இரண்டரை மணி நேரம் ஒரு வாரத்துடன் மறக்கப்படும் இந்தத் திரைப்படக் குப்பைகளைப் பற்றியும் பாடல்களையும்தானே பற்றி பேசிக்கொண்டும், நினைத்துக் கொண்டும், எழுதுக் கொண்டுமல்லவா நாம் எல்லோரும் வாழ வேண்டியிருக்கிறது.  இணையம், அச்சு ஊடகம், தொலைக்காட்சிகள் வரை எல்லோரும் இதற்குத்தானே இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால்தானே நானும் புலம்ப வேண்டியிருக்கிறது.

எனக்கு
ஜக்கி வாசுதேவ் சொன்னது ஒன்று நினைவுக்கு வருகிறது.  நாம் அயோக்கியர்கள், திருடர்கள், கொலைகாரர்கள், மோசடிப் பேர்வழிகள் ஆகியோரை வீட்டுக்குள் விடுவதற்கு விரும்ப மாட்டோம். ஆனால் அவர்கள் அனைவரும் தொலைக்காட்சியின் வழியாக நமது வீட்டுக்குள் வந்தே விட்டார்கள்.

திரைப்படங்களையும், பாடல்களையும் நினைத்தால் எனக்கு அவர் சொன்னது சரியென்று தோன்றுகிறது.இந்த மேதாவிகளுக்கு நான் சூடு சுரணை ரசனை உள்ளவர்கள் சார்பில் சொல்வது இதுதான், தயவு செய்து பாடலை எழுதாதீர்கள், எழுதினாலும் அதைப் பாடல் என்று சொல்லாதீர்கள், சொன்னாலும் அதை சொந்தக்குரலில் பாடி எங்களைக் கொல்லாதீர்கள், தனியாக நாலு பேரிடம் பாடிக்காட்டி என்ன கிடைக்கிறதோ வாங்கிக் கொள்ளுங்கள். நிறுத்துங்கடா டேய்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

ஃபேஸ்புக்கில் பகிரப்படும் போலியான புகைப்படங்கள்


ஃபேஸ்புக்கில் தமிழ் உணர்வுக் குழுக்களும், இஸ்லாமியக் குழுக்களும் அறிந்தோ அறியாமலோ சில புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றன. அவை போலியானவை என்பதைச் சொல்லவே இதை எழுதுகிறேன். அது ஒரிரு வருடங்களுக்கு முன்பே தெரிந்ததுதான் என்றாலும் அது இன்னும் புதிதான புகைப்படம் போல பல நூறு பேர்களால் பகிரப்படுகிறது

ஒரிரு புகைப்படம் ஈழ ஆதரவு குழுக்கள் மூலம் தமிழர்களிடையே பரப்பப் படுகிறது இதில் பல பிணங்கள் எரிந்து கரிக்கட்டையாகக் கிடக்கின்றன. இது ஈழப்போரில் நடந்த இனஅழிப்புப் போரின் தடயமல்ல. காங்கோவில் நடைபெற்ற ஒரு எரிவாயு வாகன விபத்தில் இறந்தவர்களுடையது இந்தப் புகைப்படத்தில் நின்று கொண்டிருப்பவர்களை உற்று நோக்கினால் அவர்கள் ஆப்ரிக்கர்கள் என்று புரியும்.

வெளிநாட்டுக் கிறித்தவ அமைப்புகள் சில முஸ்லிம் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட கிறித்தவர்கள் என்றும் தகவலைப் பரப்பி வந்திருக்கின்றனர்.



இன்னொரு புகைப்படம் இறந்து கிடக்கும் ஒரு பெண்ணின் மார்பகத்திலிருந்து பாலருந்தும் குழந்தை. இதுவும் ஈழத்திலிருந்து எடுக்கப்பட்டதில்லை என்பது அந்தப் பெண்ணின் மங்கோலிய முகமே காட்டி விடுகிறது. இது நேபாளத்தைச் சேர்ந்த ஒரு திரைப்படத்தின் புகைப்படம்.

இந்தப் புகைப்படங்களைப் பகிர்பவர்கள் புகைப்படத்தின் மீதோ அல்லது அதற்கு மேலே ஏதாவது உணர்ச்சியூட்டும் கவிதைகளையோ அல்லது கருத்துக்களையோ எழுதி பகிர பார்ப்பவரும் உணர்ச்சி வயப்பட்டு உண்மையினை அறியாமலேயே பரப்பி விடுகின்றனர். இது போன்ற போலிகளை நம்பாதீர்கள்.

இந்தப் புகைப்படம்  பர்மா (அ) மியான்மர் புத்த பிக்குகளால் கொல்லப்பட்ட முஸ்லிம்கள் பிணங்கள் என்று பகிரப்படுகிறது. ஆனால் இது உண்மையில் 2010 இல் சைனாவில் நடந்த புவி அதிர்ச்சியின் மாண்டவர்களில் உடல்களை திபெத்திய புத்தத் துறவிகள் அடக்கம் செய்யும் போது எடுக்கப்பட்டது. இது போன்று முழுக்கை சட்டை அணிந்திருப்பவர்கள் திபெத்தியர்களே. பர்மியத் துறவிகள் இலங்கைத் துறவிகளைப் போல துணியை உடல் முழுக்கச் சுற்றி அணிந்திருப்பார்கள். .மேலும் பர்மிய முஸ்லிம்கள் வெள்ளை நிறத்தவர்களும் அல்ல.


இந்தப் புகைப்படம், 2006 இல் ஈழத்தில் சிங்கள ராணுவம் நடத்திய படுகொலைகளில் ஒன்று. இது தமிழ்நெட்டில் வெளியானது. இது பர்மிய முஸ்லிம்கள் படுகொலை என்று பரப்பப்படுகிறது. அந்தப் புகைப்படத்தின் மேல் வலது மூலையில் பாருங்கள். Like My Page  "Love Islam" - என்று தனது குழுவை இஸ்லாமியரிடம் ஃபேஸ்புக்கில்  பரப்புவதற்கு இஸ்லாமிய உணர்வை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர். இது ஈழத்து பிணத்தை விற்கும் நக்கீரனுக்கு ஒப்பானது.




இது போன்ற தவறான தகவல்களைப் பரப்புகிறவர்களின் நோக்கம் இறந்தவர்களையும் போராடுகிறவர்களையும் கேவலப்படுத்துவதாகும். தற்போது போராடி வரும் மாணவர்கள் கையில் வைத்திருந்த பதாகைகளில் சில படங்களை வைத்து வட இந்திய ஊடகங்களும், இலஙகை அரசின் ஊடகங்களும் மாணவர் போராட்டத்தின் நேர்மையையே கேள்விக் குறியாக்கி விட்டன. மாணவர்கள் போராட்டத்தின் போது வைத்திருந்த பதாகைகளில் இறந்த மக்களின் புகைப்படங்களை அச்சடிக்க்கப்பட்டிருந்தன. அதில் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட சிங்கள மக்களின் உடல்களும் இடம் பெற்றிருந்திருக்கின்றன. புலிகளால் கொல்லப்பட்ட சிங்கள மக்களை, புலி ஆதர்வாளர்கள் தவ்றாக சித்தரிக்கின்றனர் என்று கிழித்து விட்டார்கள்.இது மாணவர்களின் போராட்டத்தை எந்தளவுக்கு கேள்விக்குட்படுத்தும் என்பது புரிகிறதா ? உண்மையிலேயே இந்தப் போலிகளது நோக்கம் படுகொலைகளை விற்று உணர்ச்சியைத் தூண்டி வெறுப்பை வளர்ப்பதன்றி வேறில்லை.
 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment